Sunday, October 17, 2010

இது ஒரு சிங்கக்குட்டியின் கதை


இது ஒரு சிங்கக்குட்டியின் கதை


இது ஒரு சிங்கக்குட்டியின் கதை தனது தாயின் அரவணைப்பில் மிகவும் செல்லமாக
இருந்த சிங்கக்குட்டி, தன் தாய் தூக்கிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு வண்ணாத்திப்பூச்சியை காண்கிறது.

இறகுகளை விரித்து படபடத்த அதன் அழகால் கவரப்பட்ட சிங்கக்குட்டி அந்த வண்ணாத்திப்பூச்சியை  பிடிக்க முயல்கிறது.

சிங்கக்குட்டியின் கைக்கு அகப்படாத  வண்ணாத்திப்பூச்சி பறக்க துவங்குகிறது.
சிங்கக்குட்டியும் அதைத் துரத்தி துரத்தி அதன் பின்னால் ஓடுகிறது.

அதனால் வண்ணாத்துப்பூச்சியை பிடிக்க முடியவில்லை .இந்த முயற்ச்சியின் காரணமாக அது தனது தாயை விட்டும் அதிக தூரம் வந்து  விடுகிறது .

இப்பொழுது அந்த சிங்கம் காணமல் போய்விட்டது.
அடர்ந்த காட்டில் ஓடியே தனித்துவிட்ட சிங்கக்குட்டி அச்சத்தினால் நடுங்குகிறது.
மிகவும் பரிதாபமாக கத்தி கத்தி தனது அருமைத் தாயை தேடி அங்கும் இங்கும் ஓடித்திரிந்து களைத்தது .

தாயிடம்  இருந்து எந்த பதிலும் இல்லை.
அலைந்து களைப்புற்ற  சிங்கக்குட்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 

தனித்த நிலையில் அழுது கொண்டிருந்த சிங்கக்குட்டியை ஒரு தாய் ஆடு கண்டது .
அது அந்த சிங்கக்குட்டியுடன் சிநேகம் கொண்டது .
அதனை தனது குட்டியாக ஏற்றும் கொண்டது. 
தனது வளர்ப்புக்குட்டியின் மீது தாய் ஆடு மிகுந்த பாசம் கொண்டது.
தனது சக ஆட்டு மந்தைகளுடன் சிங்கத்தை புட்கள் மேயவும் பழக்கியது.