பராத் இரவும் அதில் உள்ள அஹ்லுல்பைத் அரசியலும்.............????
வருடம் தோறும் சஹ்பான் பிறை பதின் ஐந்தில் பராத் இரவு ஒரு சிறு சல சலப்பை முஸ்லிம்கள் மத்தியில் சலசலக்க வைக்கும்.
பராத் இரவு சம்பந்தமாக பல கதைகள்.
அன்றைய இரவில் மனித சமூகத்தில் ஒரு வருடத்தில் நடை பெற இருக்கின்ற அனைத்து விடயங்களையும் அல்லாஹ் பதிவதாகவும், மூன்று நோன்புகளை நாம் தொடராக நோற்றிவிட்டு அன்றிரவில் மூன்று யாசீன் சூராக்களை ஓதி சில விடயங்களை அல்லாஹ்விடம் கேட்டால் அவைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பதாகவும் ஒரு நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது.
அதன் படி முதலாவது யாசீன் சூராவை ஓதிவிட்டு நமது நீண்ட ஆயுளுக்கும், இரண்டாவது யாசீனை ஓதி விட்டு உணவு விஷ்தீரனத்துக்கும், மூன்றாவது யாசீனை ஓதிவிட்டு நாம் அந்த வருடத்தில் செய்யப் போகின்ற பிழைகளையும், அத்துடன் கூடவே மரணித்து மண்ணறைகளில் இருக்கும் நமது உறவினர்களின் பிழைகளையும் மன்னித்து நமக்கு நல்லருளை அருளுமாரும் பிரார்த்திக்க நமக்கு நமது உலமாக்கள் சொல்லித் தந்து இருக்கிறார்கள்.
நாமும் மிகவும் பக்தி சிரத்தையுடன் அதனை செய்துக் கொண்டு வருகிறோம்.
நாமும் மிகவும் பக்தி சிரத்தையுடன் அதனை செய்துக் கொண்டு வருகிறோம்.
பராத் தினத்தில் நோன்பு நோற்று நாம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் எதுவித உயிர்ப்பும் இல்லை என்பதை நாம் அல்லாஹ்விடம் முன் வைக்கும் வேண்டுதல்களே நமக்கு பறை சாட்டுவதை மிகக் கவனமாக கவனித்தால் புரிந்து போகும்.
நாம் நீண்ட ஆயுளைக் கேட்கிறோம்.
அந்த ஆயுள் முழுதும் உண்பதற்கு உணவைக் கேட்கிறோம்.
உணவு உண்ட கொழுப்பில் நாம் செய்யும் பாவங்களையும் மன்னிக்குமாறு கேட்கிறோம்.
நாம் கேட்கும் இத்தகைய பிரார்த்தனையில் பொதிந்திருக்கும் ஆன்மீக இரகசியங்கள் என்ன?
எதுவுமே இல்லை.
அல்லாஹ்வை அறியும் ஞான இரகசியங்கள் எதாவது இருக்கிறதா?
அதுவும் இல்லை.
சரி, எதாவது சமூக சீர் திருத்தங்கள்?
ஒன்றும் இல்லை.
இத்தகைய இல்லாமைகளைக் கவனித்த நமது சீர்திருத்த தௌஹீத் தலைவர்களும், அவர்களுடன் ஒன்றிணைந்த ஜமாத்தே இஸ்லாமி தலைவர்களும் இந்த பராத் நோன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தார்கள்.
இந்த முற்போக்கு தலைவர்களுக்கு எதிராக நோன்பு நோற்று பராத் இரவில் பிரார்த்தனை செய்யும் அடுத்த கூட்டமும் கிளர்ந்து எழுந்தது.
ஒவ்வொரு வருடமும் இந்த இரண்டு கூட்டத்தார்களும் வரிந்துக் கட்டிக் கொண்டு தமது பக்க நியாயங்களை தத்தமது ஆதரவாளர்களுக்கு சொல்ல, வருடா வருடம் இந்தத் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு அவர்களின் மேல் சுமத்தப் பட்டு விட்டது.
முஸ்லிம் மக்களின் கவனத்தை பராத் இரவில் இருந்து திசை மாற்றிய கூட்டத்தாரின் இலக்கு இதன் காரணமாக செவ்வனே நிறை வேற்றப் பட்டாகி விட்டது.
முஸ்லிம்களின் கவனத்தை பராத் இரவில் இருந்து திசை திருப்பும் அளவுக்கு அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது.