Tuesday, August 23, 2011

ஒரு குழந்தையின் பார்வையில் மறுமையில் நபி (ஸல்) அவர்களது பெற்றோரின் நிலை....??


ஒரு குழந்தையின் பார்வையில் மறுமையில் நபி (ஸல்) அவர்களது பெற்றோரின் நிலை....??

இந்த ரமளானில், சில நாள்களாக எம்முடைய வீட்டில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் சுவனவாசிகள் என்கிற கருத்தில் அடிக்கடி உரையாடல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

நம்முடைய சில நண்பர்கள் தவ்ஹீத் ஜமாஅத் கருத்துக்களினால் ஆளுமை கொள்ளப் பட்டு இருந்தார்கள்.

அவர்கள் ஸஹிஹ் முஸ்லிமில் இருக்கின்ற நபி (ஸல்) அவர்களது பெற்றோரின் இறை மறுப்பு நிலை சம்பந்தமான சில ஹதீஸ்களை எதுவித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டிருந்ததனால், மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களது பெற்றோர்களின் நிலை சம்பந்தமாக நேர் மறை கருத்தியலில் இருந்தார்கள்.

அத்தகைய அனைத்து ஹதீஸ்களும் அல் குர்ஆனுக்கு முற்றிலும் முரணானவை என்பது நமது வாதம்.

இந்த நிலையில் நமது நண்பர் ஒருவர் நேற்று முன்தினம் எங்களது வீட்டுக்கு அவரது குடும்பத்தவர்கள் சகிதம் வந்தார்.

வழமைப் போல நமது பேச்சு அஹ்ளுல்பைத்களின் பக்கம் திரும்பியது.

அந்த உரையாடல் கொஞ்ச நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்களின்
மறுமை நிலை சம்பந்தமாக திசை மாறியது.

நண்பர் அவரது நம்பிக்கையின் நிலையை வலியுரித்தினார்.

நாம் நமது தரப்பு ஆதாரங்களை எடுத்து வைத்தோம்.

நாம் இருவரும் ஒருமித்த ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.

ஏனெனில், நாம் நெறி பிறழ்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடாவடித்தனத்தை சொல்ல, நண்பரோ அந்த ஆட்சியாளர்களின் தவறுகளுக்கான சமாதானங்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.

திடீரென நண்பரின் எட்டு வயது மகள் எங்களது உரையாடலுக்கு குறுக்கே வந்தாள்.

அவள் அவளுக்கே உரிய குறும்புடன் "எக்ஸ் கியுஸ் மீ.......நான் கொஞ்சம் பேசவா?" என்றாள்.

Saturday, August 20, 2011

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் மூமின்கள் என்பதற்கான அல் குரான் ஆதாரம்:

அன்னை ஆமினா (அலை) அவர்களின் அடக்கஸ்த்தளம்
(ஒரு முறை சலவாத் சொல்வோம்!) 

"அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வஆலி முஹம்மத்."

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் மூமின்கள் என்பதற்கான அல் குரான் ஆதாரம்: 

நபி  (ஸல்) அவர்களது அருமைப் பெற்றோர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத மூமின்கள் என்பதற்கு அல் குரானில் ஆதாரம் இருக்கிறது.

இந்த விடயம் பற்றி உலமாக்களுக்கு நன்கு தெரியும் .

எனினும், அதனை அவர்கள் வெளியே சொல்வதில்லை.

அவர்களுடைய மாணவர்களுக்கும் படித்துக் கொடுப்பதில்லை.அதனை ஆராய  விரும்பும்  மாணவர்களை அப்படி ஆய்வு செய்வது கூடாது என்று தடுத்தும் விடுகிறார்கள்.

Sunday, August 7, 2011

நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா?



நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் நரகவாதிகளா?




ஆச்சரியம்!

ஆச்சரியங்களையே ஆச்சரியப் படுத்துகின்ற ஒருஆச்சரியம்?

மனித குலத்தின் மோட்சத்துக்கு வழி சொல்லி அவர்களின் மீட்சிக்கு காரணமாக இருந்த மகானை பெற்றெடுத்த புண்ணியவான்களுக்கு மீட்சி இல்லையாம்?

நபி (ஸல்) அவர்களது பெற்றோர்கள் நரகத்தில் தீயினால் பொசுக்கப் படுகிறார்களாம்?

சூரியனுக்கே சாணி பூச முயற்சிக்கும் சாணக்கியம் புரிகிறதா?

இஸ்லாத்தின் எதிரிகளின் நாடுகளில் எல்லாம், அவர்களது வீடுகளில் எல்லாம், அவர்கள் கூடும் கூட்டங்களில் எல்லாம், ஏன்? தராவிஹ் தொழுகையின் பின்னர் எங்களது ஊர் மஸ்ஜிதுகளில் எல்லாம் இதே பேச்சு.

பாடசாலைகளில், பல்கலைக் கழகங்களில், கிறிஸ்தவ  தேவாலயங்களில், யூத மடாலயங்களில், கோயில்களில், கஹ்பதுல்லாஹ்வில், நபியின் பள்ளி வாசலில், ஏன்? உங்களது ஊர் எல்லையில் இருக்கும் நான்கு பேர் மட்டுமே தொழுகின்ற தர்காவிலும் இதே பேச்சுதான்.

நபியின் பெற்றோர்கள் நரகத்திலாமே?

புத்தகங்களில், இணையங்களில், நாங்கள் போகும் ஆட்டோ ரிக்ஷாவின் செலுத்துனர் வாய்களில் எல்லாம் மெல்லப் பட்டுக் கொண்டே இருக்கின்ற சுவை குன்றாத ஒரு அவல்.

நபிகளாரின் பெற்றோர்கள் நரகத்திலாமே?

படித்த ஆலிம் முதல் படிக்காத முஅத்தின் வரை தரம் தராதரம் எதுவும் இல்லாமல் பயமில்லாமல் பத்வா கொடுக்கும் ஒரே விடயம்.

நபிகளாரின் பெற்றோர்கள் நரகவாதிகள்.

இஸ்லாத்தின் எதிரிகளின் ஊடக வலிமையின் வீரியத்துக்கு போடுங்கள் ஒரு சபாஷ்.

அதிர்ச்சியோடு  நாம்  கேட்கிறோம்?

நபியின் பெற்றோர்களா?அதெப்படி சாத்தியம்?

திமிருடன் பதில் சொல்கிறார்கள்.

அவர்கள் இணை வைப்பாளர்கள்.

நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும், அவரை சிறு வயது முதல் பாது காத்து  வளர்த்த  அவரது  பெரிய தந்தை ஹசரத் அபூதாலிப் அவர்களும் பெரும் இணைவைப்பாளர்கள். அவர்களது இணை வைப்பின் காரணமாக அவர்கள் நரக நெருப்பில் வேதனை செய்யப் படுகிறார்கள்.

இதே விதமான கருத்துக்களை நமது சில முஸ்லிம் அறிஞர்களும் பகிரங்கமாக மிகவும் துணிச்சலுடன் முஸ்லிம்கள் மத்தியில் சொல்வது வேதனையான நிஜமாகும்.

இத்தகைய இஸ்லாமிய அறிஞர்களின் இதுபோன்ற செயல் முறைகள் எமது சமூகத்தின் அதால பாதாள வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் செயல் முறையாகும் என்கிற கூற்று ஒரு மிகையான கூற்றல்ல. 

இஸ்லாத்தின் எதிரிகளினதும்,  இத்தகையஎதிரிகளின்   கருத்துக்களுக்கு  பலியான நமது உலமாக்களும் தம்முடைய வாதத்துக்கு ஆதாரமாக சில இஸ்லாமிய அறிஞர்களின் ஹதீத்களின்  பதிவுகளையும் கோடிட்டு காட்டி இருக்கிறார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளும் ,இஸ்லாத்துக்கு எதிரான இத்தகைய கருத்துக்களில் தம்மை அறியாமல் துணை போகும் நமது அறிஞர்களும் தமது கருத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீத் கருத்துக்களின் தொகுப்பாசிரியர்களான இமாம்கள் முஸ்லிம் சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் எனபது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இதன் காரணமாக இஸ்லாத்தின் எதிரிகளினதும் எமது அறிஞர்களினதும்  இத்தகைய கருத்துக்கள் சரியானவை என்று நாமும், ஏனையவர்களும் குழம்பிப் போய் விடுகிறோம்.

எம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய செய்தின் பின்னணியில் தொக்கி இருக்கும் இந்த செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்காது.

ஏனெனில் நிஜம் அதுவல்ல.