அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, December 29, 2012

இலங்கை முஸ்லிம்களின் தன்னிருப்புக்கு அச்சுறுத்தலாக முஸ்லிம் தலைமை தீர்மானித்த தீர்மானங்கள்..........




இந்த இணைப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் பிரிவினருக்கு ........ஹலால் அனுமதிக்கு எதிராக தமது அமைப்பு செயல் படுவதற்கான காரணத்தை சொல்லும் பௌத்த பிக்கு............இதனை பார்த்து விட்டு நமது பதிவைப் பாருங்கள்...........நாம் சொல்லும் விடயம் என்னதென்று புரிந்துப் போகும்.

ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழ்  அங்கீகாரப் பகுதியினரின் செயல் விளைவுகள்   சொல்லும் முன்னறிவிப்பு அபாயகரமானது.

எப்படி என்கிறீர்களா?

முதலில் இந்தக் கதையைக் கவனியுங்கள்.

நகரத்துப்  பணக்காரன் ஒருவன் கிராமத்தில் தனது நண்பனைக் காண வந்தான்.

கிராமத்தில், அவனது நண்பனுடன் ஒரு ஆடு மூன்று கால்களுடன் தத்தி....தத்தி வந்துக் கொண்டிருந்தது.

நண்பன் டி .வி. ப்ரிட்ஜ்,கம்பியூட்டர்  எதுவுமின்றி ஒரு பரப்பு நிலத்தில் சில தென்னைகளுடன் திருப்தி கொண்டிருந்தான்.

இவை எதுவும் நகரத்தானைக் கவரவில்லை.

அவனை சங்கடப் படுத்தியது கிராமத்தானுடன் இருந்த காலிழந்த ஆடு.

Thursday, December 27, 2012

முஸ்லிம் சமூகம் மீதான நேட்டோ உலகின் மனோவியல் யுத்த நகர்வுகள்................கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரமா...?????????


(ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூறாம் வருடம் என்னுடைய நண்பன் ஸைபுல் இஸ்லாம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவளைத் திருமணம் செய்யப் போவதாகவும் என்னிடம் சொன்னான்.)

தொன்னூறுகளில் ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைனை அராபியரின் கதாநாயகனாக வடிவமைத்து குவைத் நாட்டை அவரைக் கொண்டு ஆக்கிரமிக்கச் செய்து அதன் மூலம் ஏனைய அராபிய நாடுகளை அச்சுறுத்தும்  நாடகம் நேட்டோ குழுவினரால் வடிவமைக்கப் படுகிறது.

நெறியாளர்களின் இலக்கை கணித்து அளவிடும் அறிவு அந்த அராபிய சிங்கத்துக்கு ??? இருக்கவில்லை.

விளைவு..........

Sunday, December 23, 2012

பார்த்துக் கேட்டதில் பிடித்தது..............

பார்த்துக் கேட்டதில் பிடித்தது..............


அவிசுவாசிகளுக்கான COCA COLA வின் செய்தி.....................................




நேற்றிரவு நமது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

அவரது பருவ வயது மகள் அஹ்ளுல்பைத்களுடன் நெருக்கமான பற்று கொண்டவர்.

என்னைக் கண்டதும் அவர் "அங்கிள்.......இவ்வருட கோகா கோலா கிரிஸ்ட்மஸ் விளம்பரத்தைக் கவனித்தீர்களா?" என்றுக் கேட்டார்.

நான் ஒரு நிமிடம் யோசித்து அந்த விளம்பரத்தை நினைவுக்கு கொண்டுவர முயன்றேன்.

நினைவுக்கு வந்தது.

அதில் புதிதான வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

"ஆம்....பார்த்தேன்...." என்றேன்.

"அதில் இருக்கும் செய்திகளைக் கவனித்தீர்களா?" என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார்.

"இல்லை.......அதில் என்ன செய்தி இருக்கிறது?" இது நான்.

Thursday, December 20, 2012

மருமகனின் பேத்தியைத் திருமணம் செய்த மாமனார்.....?????இஸ்லாமிய நாகரீகத்துக்குள் (அ)நாகரீகம் புகுத்திய விஷமிகள் .....??? -


திருப்பதிக்கு  அல்வா கொடுத்து ........கடலுக்கு உப்பு  காட்டிய .....காட்டிக் கொண்டிருக்கும் நமது அறிஞர்கள்...?

குழப்பமாக இருக்கிறதா?

சில தினங்களாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சமூக ஒற்றுமையைக் கருத்திட் கொண்டு பரவலான பிரச்சாரங்கள்.

அத்தகைய பிரச்சாரங்களின் சாராம்சம் இப்படி ஒலித்துக்கொண்டிருந்த கதை நமக்கு எட்டியது.

"அஹ்ளுல்பைத்களை நேசிப்பதாக கூறும் மக்களை நம்பாதீர்கள்.அவர்கள் இஸ்லாத்தில் பிரிவினையை உண்டு பண்ணும் நோக்கத்தில் செயல் படுகின்றார்கள்.

"அவர்கள் இஸ்லாத்தை விட்டும் பிரிந்துப் போன வழிக்கெட்ட பிரிவினர்கள்.

"அவர்கள் இஸ்லாத்தை ஆராய்வது இஸ்லாத்தில் இருக்கும் பிழைகளை தேடி அவற்றைப் பகிரங்கப் படுத்துவதற்கேயன்றி வேறில்லை.

"சஹாபாக்கள்தான் நபிகளாருக்குப் பிறகு நமக்கு இஸ்லாத்தைக் கற்றுத் தந்தவர்கள்.சஹாபாக்கள் எதனை செய்தார்களோ அவை நபிகளாரின் சுன்னாக்களாகும்.

"சஹாபாக்களைப் பின்பற்றித்தான் நாம் நமது கடமைகளை செய்ய வேண்டும்..அஹ்ளுல்பைத்களை நேசிப்பதாக கூறும் மக்கள் சொல்லுவது போல அஹ்ளுல்பைத்கள் எனப் படுவோர் நமது சஹாபாக்களை விடவும் உயர்ந்தவர்கள் அல்ல.

அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான சஹாபாக்களின் செயல்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு முரணானதல்ல.

'இஜ்திகாத்' செய்து சஹாபாக்கள் எடுத்த முடிவுகளினால் ஏதாவது தீமை இந்த சமூகத்துக்கு ஏற்பட்டிருந்தாலும் அதற்குக் காரணமான சஹாபாக்களுக்கு  அதற்கு ஒரு நன்மை கிடைக்கும்.ஆகவே,சஹாபாக்களின் செயல் விளைவுகள் நன்மையோ தீமையோ அதனைப் பற்றி நாம் ஆய்வுகள் செய்யக் கூடாது..........."

இவ்வாறு.....அல்லது இதனை விடவும் கொஞ்சம் அபத்தமாக இலங்கை வானொலி சத்தமிட்டதாம்.

பிரச்சாரம் செய்த பிரசங்கிகள் அனைவரும் இலங்கையில் மிகவும் பிரபலமான இஸ்லாமிய பிரசங்க பீரங்கிகள்.

பாமர முஸ்லிம்கள் அஹ்ளுல்பைத்களின் மீது வைக்கின்ற நேசத்தின் பின் விளைவுகளின் வெளிப்பாடு   அஹ்ளுல்பைத்களின் மீது கொடுமை புரிந்த எதிரிகள் மீதான அவர்களது கோபத்தை வெளிக் கொணரும் அபாயத்தை இந்த பிரச்சாகரர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.

அத்தகைய தவறான புரிந்துணர்வுடன் இவர்கள் சமூக ஒற்றுமை சம்பந்தமாக பேசியதனால் அந்தப் பேச்சுகளின் ஒலி  விளைவுகள் சமூகத்தைப் பிளவுப் படுத்தும் பயங்கரத்தை உள் வாங்கி ஒலித்தன.

சமூக ஒற்றுமையின் ஒழிப்புக்காக இந்நிமிடமும் இணையங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சமூக ஒற்றுமையைப் பிரதி பலிக்கும் நோக்கில் அவர்களது பிரசங்கத்தில் வழக்கம் போல  அபூர்வமான சில கதைகளை 'ஹதீஸ்கள்'என்ற பெயரில்  கட்டவிழ்த்தும்  விட்டார்கள்.

வாழ்த்துக்கள்.

அதில் ஒன்று இமாம் அலி அவர்களின் நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தை அன்னை உம்மு குல்தூம் -ஸலாமுன் அலைஹா- அவர்களை ஹசரத் உமர் (ரலி) யவர்கள்  திருமணம் செய்தார்களாம்.( என்று  சொல்லிவிட்டு....)



அஹ்ளுல்பைத்களின் எதிரியாக ஹசரத் உமர் (ரலி) யவர்கள் இருந்திருந்தால் இமாம் அலி தனது நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தையை ஹசரத் உமர் (ரலி) யவர்களுக்கு திருமணம் செய்விப்பார்களா?(என்று  திருப்பிக் கேட்டார்கள்....)

நாம் அதிர்ந்துப் போனோம்.

இருக்காதா பின்னே?

Thursday, December 6, 2012

'புனைவு நிஜமாகும் வரை'.




ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு வீட்டை அமைத்தார். சிலரோடு 
செல்லப் பிராணிகளையும் அவ்வீட்டில் குடியிருக்க வைத்து ஏதோ 
ஒரு நோக்கத்திற்காக தான் மட்டும் தனியாக தூரத்திலிருந்து கொண்டு 
அவ்வீட்டைக் கண்காணிக்கலானார். அவ்வப்போது அறிவுரை மற்றும் 
அறவுரை தாங்கிய கடிதங்களைத் தூதுவர் மூலம் அனுப்பி வைத்தார். 
அவற்றில் சில‌ ஆங்காங்கு எழுதி வைக்கப் பட்டன.

Wednesday, November 28, 2012

புதியதொரு விதி செய்வோம்....?










அல்லாஹ் மனித குலத்துக்கு அவனை அறிமுகப் படுத்துவதற்காக இவ்வுலகிற்கு அனுப்பிய அனைத்து தீர்க்கதரிசிகளும்,தூதர்களும் அநீதத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள்.

இறைத் தூதர்கள் அனைவரும் நீதிக்காக,நியாயத்திற்காக,நேர்மைக்காக போராடியவர்கள்.

அவர்களின் செயல்களில் பிறந்த விளைவுகளில் தனி மனித சுதந்திரமும்,மனித உரிமையும் கௌரவமாக மதித்துப் பேணப் பட்டன.

அவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும்,திருந்த மறுக்கும் தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இறுதித் தூதர் முஹம்மது சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்குப் பின்னர் இறைத் தூதர்கள் மனித குலத்துக்கு நேர் வழிக்காட்ட வரப்போவதில்லை.

நபிகளார் சுமந்த அந்த மா பெரும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்புவிக்கப் பட்டு விட்டது.

அதனைத்தான் நாம் நபிகளாரின் ஸுன்னா என்று கூறுகிறோம்.

Tuesday, November 27, 2012

புரிந்தும் புரியாமலும்..............??



எம்மை எப்பொழுதும் உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் நண்பர் அன்புராஜுக்கு நன்றி.........

நண்பர் அன்புராஜின் ஒரு பின்னூட்டம் இன்று இப்படி ஒலித்தது.......

"--------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா? 

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான்.
It is always with Business man- if the customer had asked for Green Ginger,which was out of stock, the Business man would not say that Green Ginger is not available, But would answer that Dry Ginger is available.similarly you are talking. I ask if Koran permits sex with war captives,your answer should be yes/No/ Yes it is out of date/ .Allah did not reveal that verse. Mr.Mohammed,in keeping with Arabiabian Local custom ie Karimath, he liked to have sex with many women.So he falsely inserted that verse in the Arabian religious Book- Koran.Instead you are saying --------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா? 

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான். 

இதற்கு அஹ்லுல்பைத் தமிழ் தளத்தின் பதில் என்ன?

Monday, October 1, 2012

அமைதியின் இருப்பிடம்...........



சென்றவாரத்தில் ஒரு நாள் ஜன சந்தடி மிக்க கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவிலே நான் நடந்துப் போய்க்கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசையைப் பார்த்தால் சுமார் மூன்று வயது நிரம்பிய குழந்தையொன்று தனித்து தவறிப் போன தனது தாயை அல்லது தந்தையைத் தேடி அழுதுக் கொண்டிருப்பது தெரிந்தது.

கணப் பொழுதில் அந்தக் குழந்தையைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம் கூடிவிட்டது.

குழந்தையின் முகத்தில் கலவரம் கலந்தப் பயம் தெரிந்தது.

தன்னைச் சுற்றி திடீரென கூட்டம் கூடியதைக் கண்டவுடன் குழந்தையின் அழுகை சத்தம் இன்னும் அதிகரித்தது.

Saturday, September 1, 2012

முடிவில் தொடங்கிய ஆரம்பம்..........சரியா?..........தவறா?



மௌலவி பாஸ்லான்,
இலக்கம் :34,
பாகீர் மாகார் மாவத்த,
பேருவலை.

அதி கௌரவத்துக்குரிய மௌலவி பஸ்லான் அவர்களுக்கு...,

 2012 ஆம் வருட மே மாதம் 27 ஆம் திகதி நாம் எழுதி வெளியிட்டு வைத்த "அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் -ஆமினா -நரகவாதிகளா? " நூலில் நிறைய பிழைகள் இருப்பதாக 2012 ஆகஸ்ட் நோன்பு மாத நடுப்பகுதி நள்ளிரவு நீங்கள் எங்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கூறினீர்கள்.

அன்றிரவே நாம் உங்களிடம் அந்தத் தவறுகளை நமக்கு எழுதி அனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டியிருந்தோம்.

நீங்களும் உடனே எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டீர்கள்.

Wednesday, August 22, 2012

மூமின்களால் தூக்கி எறியப்பட்ட - பனூ உமையாக்களின் -இலங்கை- வதிவிடப் பிரதிநிதி..........அடையாளம் காணுங்கள்........

                                 மூமின்களின் ஜென்ம விரோதி அபூ சுபியான்.........

நமது எழுத்தாள நண்பர் ஒருவர் ஒருமுறை நம்மிடம் இப்படி கேட்டார்.

"கெட்டவனுக்கும் கேவலமானவனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"

"என்ன?" என்று நாம் திருப்பிக் கேட்டோம்.

"ஒருவன் குடித்துவிட்டு வந்து அவனது மனைவி மக்களுக்கு தொல்லைக் கொடுக்கிறான்." என்ற அவர் தொடர்ந்து "அவனால் அண்டை அயலவர்களுக்கு எதுவித தொல்லையும் இல்லை.அப்படி இருக்கின்றவன் கெட்டவன்"

நாம் கேட்டோம் "அப்படியென்றால் கேவலமானவன் என்றால்................"

"ஒருவன் குடித்து விட்டு வந்து தனது வீட்டாருக்கு எதுவித தொல்லையும் கொடுக்காமல் தனது அண்டை அயலாருக்கு தொல்லைக் கொடுக்கிறானே அப்படிப் பட்டவன் கேவலமானவன்" என்றவர் தொடர்ந்து "கெட்டவனால் மற்றவர்களுக்குத் தொல்லை இல்லை.கேவலமானவனால் எல்லோருக்கும் தொல்லை" என்றார்.

கெட்டவன்..........கேவலமானவன் சம்பந்தமாக குடிகாரனை முன்னிறுத்தி அவர் சொன்ன உதாரணத்தை விஞ்சும் விதமாக வித்தியாசமான அனுபவமொன்றை அண்மையில்  சந்தித்தேன்.

அதனை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

கெட்டவனுக்கும் கேவலமானவனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் உங்களுக்கும் புரிந்துப் போகும்.

இவ்வருட நோன்பு மாதத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடு நிசி பன்னிரெண்டு மணி.........

வீடு மெலிதான இரவு விளக்கு ஒளியில் அமைதியில் நிசப்தித்து இருக்க...............

வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் சஹர் நேர விழிப்பைக் கருத்தில் கொண்டு தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்க.............

அமைதியைக் கிழித்துக் கொண்டு என்னுடைய கையடக்க செல் போன் அலறி  எனது மனைவியை பதறிக் கொண்டு விழிக்க வைத்திருக்கிறது.

தட்டுத் தடுமாறி அவர் செல் போனை எடுத்து "ஹலோ" சொல்ல.............

Sunday, July 29, 2012

அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...????






இஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு சென்ற பெருமை நண்பர்    அன்புராஜுக்கே சேரும்.


நண்பர் அன்புராஜின் பின்னூட்டமொன்று முஸ்லிம்களைப் பார்த்து இப்படி சவால் விட்டது.


குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். 
உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது ...............



நாம் வழமைப் போல நாம் தினமும் சந்திக்கின்ற சில உலமாக்களிடம் இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாகவும், அடிமைப் பெண்கள் சம்பந்தமாக அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்கள் சம்பந்தமாகவும் கேள்விக் கணைகளை தொடுத்தோம்.

Saturday, July 28, 2012

அன்புராஜுக்கு பதில் சொல்லிவிட்ட இமாம் அலி........


....

மறுமை நாளின் அவசியம் சம்பந்தமாக அல் குர்ஆன் ஆதாரங்களையும், மனித செயல் விளைவுகளின் எதிர் விளைவுகளையும் முன்நிறுத்தி நாம் சொன்ன பதிலில் நமது நண்பர் அன்புராஜ் திருப்திக் கொள்ளவில்லை என்பதை அவரது பின்னூட்டம் நமக்கு தெளிவு படுத்தியது.

அவர் சொல்லுவது சரி.

அல் குர்ஆன் ஆதாரங்கள் அவருக்கு அவசியம் இல்லை.

அது அல் குர்ஆனை இறைவனின் திரு வேதம் என்று நம்புபவர்களின் பிரச்சினை.

ஒரு இந்து சகோதரருக்கு அல்லது பௌத்த சகோதரருக்கு அல் குர்ஆனின்  ஆதாரங்கள் அவசியம் இல்லை.

இந் நிலையில் அதென்ன மறுமை நாள் என்றொரு நாளின் அவசியம் சம்பந்தமாக நாம் நம்பிக்கை வைக்க மறுக்கும் அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்களை எடுத்து சொல்லி நழுவுகிறீர்கள் .......என்ற தோரணையில் அல்லது அது போன்றதொரு கருத்தை அவரது பின்னூட்டம் முன்வைத்தது.

தர்க்கவியலாக மறுமையின் அவசியத்தை அல்லது அந்த நம்பிக்கையின் அழகான செயல் விளைவுகளை நமது பதிலில் அவர் எதிர்பார்த்திருக்கிறார்.

அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்ற சிந்தனையில் இமாம் அலியின் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது.

அந்தக் கதை இதுதான்.

இமாம் அலியுடைய காலத்தில் பிரபலமான ஒரு நாத்திகன் வாழ்ந்திருக்கிறான்.

அவன் இறைவனை நம்பவில்லை.

இறைவனை விசுவாசிக்கும் மக்களைக் கண்டால் அவனது வாதத் திறமையால் அவன் அவர்களின் இறை விசுவாசத்தைக் கேள்விக் குறியாககி விடுவான்.

இறைவனை விசுவாசிக்கும் பாமரர்கள் அவனைக் கண்டால் 'நமக்கெதற்கு வீண் வம்பு' என்று ஒளிந்து விடுவார்கள்.


அந்த நாத்திகனுடன் இறைவனின் உள்ளமை குறித்து விவாதம் செய்ய ஒருவரும் முன் வரவில்லை.


ஒரு நாள், அவன் தற்செயலாக இமாம் அலியை பாதையில் சந்தித்தான்.


இமாம் அலியுடைய இறை விசுவாசத்தின் உறுதியைப் பற்றி அவன் அறிந்திருந்தான்.


அவன் இமாம் அலியை வம்புக்கிழுக்கும் நோக்குடன் மனிதன் மரணித்து மண்ணுடன் மண்ணாக உக்கிப் போனதன் பின்னர் மீண்டும் உயிர்க் கொடுத்து நியாயத் தீர்ப்பு நாளில் எழுப்பப் படுவதைப் பற்றியும், அதன் பின்னர் அவனது செயல்களை விசாரித்து அந்த மனிதனை நரகத்துக்கு அல்லது சுவர்க்கத்துக்கு அனுப்பப் படுவது எவ் விதத்திலும் சாத்தியம் இல்லை என்று நமது அலி ஷீனா வைப் போல அல்லது அலி ஷீனாவை நம்பும் நமது நண்பர் அன்புராஜைப் போல நியாயங்கள் சொல்லத் தொடங்கினான்.


இமாம் அலி அமைதியாக அவன் சொல்லும் நியாயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


அந்த நாத்திகன் அவன் பக்க நியாயங்களை சொல்லி முடித்ததன் பின்னர் இமாம் அலி அவனுக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.


அவர் அந்த நாத்திகனிடம்..."நண்பரே! நீங்கள் சொல்லுவதே உண்மை என்று ஒரு வாதத்துக்கு நினைத்துக் கொள்வோம்.


"அதன் படி நாம் இருவரும் மரணித்ததன் பின்னர் உக்கி மண்ணுடன் மண்ணாக கலந்து போனதன் பின்னர் நாம் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படாது போனால் இறைவனை விசுவாசித்து அவன் சொல்லிய பிரகாரம் வாழ்ந்து  மரணித்துப் போன எனக்கு ஒரு நட்டமும் இல்லை.அதே போல இறைவனை விசுவாசிக்காது மனம் போன போக்கில் வாழ்ந்து மரணித்துப் போன உங்களுக்கும் ஒரு நட்டமும் இல்லை.


"ஆனால்,தப்பித் தவறி நாம் நம்புவது போல மறுமை நாள் என்றொரு நாள் இருந்து நாம் இருவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு  நமது செயல்களுக்கு நியாயம் சொல்லவேண்டிய சூழல் உருவாகினால் நான் தப்பி விடுவேன்.நீங்கள் இறைவனிடம் மாட்டிக் கொள்வீர்கள்.


"நம் இருவரின் நம்பிக்கைகளிலும் எது சிறந்தது என்று இப்பொழுதாவது புரிந்ததா?" என்றார்.


நாத்திகன் மௌனித்துப் போனான்.

மறுமை நாளின் அவசியம்........

மறுமை நாளின் அவசியம்



மனம் பேதலித்த அலி ஷீனாவின் நொண்டிச் சாட்டுக்கான பதில் பதிவு.....!

யாரோ சொன்னதாக யாரோ சொன்னார்கள்...........


"தப்பு என்பது தவறுதலாக செய்வது.........தவறு என்பது தெரிந்து செய்வது........"


அலி ஷீனாவின் கருத்துகளால் கவரப் பட்டு தனக்குத் தாமே தாம் செய்யும் தவறுகளுக்கு தவறான நியாயம் கற்பித்துக் கொண்டிருப்பவர்களிடம் நமது கேள்வி......


"நாம் தப்பு செய்கிறோமா?.....தவறு செய்கிறோமா?"

நாத்திகனாக இருந்து ஆத்திகனான ஒரு கவிஞனின் அறிவுப் புலம்பல் இறைவனின் மகிமையை, அவனது எல்லையில்லா ஆற்றலைப் புரிந்த நிலையில் யாத்த ஒரு கவி வரி மிக அற்புதமாக இப்படி இந் நிமிடமும் ஒலித்துக்  கொண்டிருக்கிறது..........






"பூஜ்ஜியத்துக்குள்ளே -ஒரு 
இராச்சியத்தை ஆண்டுகொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன்........
அவனைப் புரிந்துக் கொண்டால் 
அவன்தான் இறைவன்...."

இறைவனின் உள்ளமையிலும் இருப்பிலும் நமக்கு எதுவித சந்தேகமும் இல்லை.

நண்பர் அன்புராஜின் நிலையும் நமது நிலையும் இறைவனின் இருப்பிலும் உள்ளமையிலும் ஒன்றுதான்.

எனினும்,  அலி  ஷீனாவின் மனம் பேதலித்த உளறலினால் மறுமை நாள் என்றொரு நாள் இருப்பது சாத்தியமா என்று புள்ளியாக அன்புராஜின் உள்ளத்தில்  ஒரு தடுமாற்றம்.


இனி,மறுமை நாள் என்றொரு நாள் சாத்தியம் என்ற நமது விடயத்துக்கு வருவோம்.

Wednesday, June 20, 2012

சூரிய மண்டல கைதிகள்.........தூக்கம் கெடுக்கும் நிஜங்கள்..........???!!!!



வழக்கம் போல நண்பர் அன்புராஜின் ஒரு பின்னூட்டத்தின் கேள்வி அஹ்லுல்பைத் தளத்தின் இன்னொரு பதிவுக்கு களம் அமைத்தது.

நன்றி அன்புராஜ்.

அவரது கேள்வி இப்படி பதிந்தது.

It has become urgent to prove that the parents of Mr.Mohammed are pious.

I wonder why that question has assumed so much importance.

May be it is a internal matter of Islamic society.

Noble and otherwise parents begets good /evil sons and daughter.

History is full of evidance for th

"....................கௌரவமான உயரிய குடும்பத்து பெற்றோருக்கு இழி குணமுள்ள பிள்ளைகள் கிடைக்கிறார்கள்.அதே போல, தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி வைக்கப் படும் பெற்றோருக்கு உயரிய நன் நடத்தையுள்ள குழந்தைகள் கிடைக்கும் பாக்கியம் கிடைக்கிறது.வரலாறு இதற்கு சான்று பகர்கிறது.வரலாற்று நிஜங்கள் இப்படி இருக்க முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பெற்றோர் உத்தமர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே......" என்கின்ற  கருத்தை உள் வாங்கிய நிலையில் அவரது பின்னூட்டம் அமைந்து இருந்தது.

நண்பர் அன்புராஜின் பதட்டமான கேள்வி ஒரு முஸ்லிம் இணைவைப்பாளராக ஒரு போதும் மாற மாட்டார் என்பது போலவும் இணைவைப்பாளர் ஒருவரின் குழந்தை அல்லது ஒரு இணை வைப்பாளர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை  என்ற கருத்தை சொல்லாமல் சொல்லுவது போலவும் நாம் சொல்லும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது அருமைப் பெற்றோர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத முஸ்லிம்கள் என்ற கருத்து மயக்கமான இன்னுமொரு கருத்தை உள் வாங்கி
இருப்பது போல நமக்கு ஒரு பிரமையை ஏற்படுத்தியது.


உண்மைதான்.

நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாமல்  இறை நிராகரிப்பாளராகவே இறுதி வரை இருந்து அப்பொழுது ஏற்பட்ட பயங்கரமான நீர்ப் பிரளயத்தில் மூழ்கி ஜல சமாதி கொண்டதாக அல் குர்ஆன் சாட்சி பகர்கிறது.

நபி லூத் (அலை) அவர்களின் மனைவியும் இறை நிராகரிப்பாளராகவே  இறுதிவரை இருந்ததாகவும் அல் குர்ஆன் சாட்சி சொல்கிறது.

அது மட்டுமன்றி, நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பெரிய தந்தை அபூ லஹப் இறைவனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அது சொல்கிறது.

ஆதலால் குடும்ப பாராம்பரியம் ஒரு மனிதனை அவன் சார்ந்த நம்பிக்கை அல்லது கொள்கை அல்லது மதத்தின் பால் ஈர்க்கப் போவதில்லை என்பது தெளிவு.

ஆகவே நண்பர் அன்புராஜின் கேள்வி நியாயமானது.ஆழமானது.

அவரது அபாரமான கேள்விக்கு நமது பாராட்டுக்கள்.

அர்த்தமுள்ள  இந்தக் கேள்விக்கு அஹ்லுல்பைத் தளத்தின் பதில் என்ன?

Tuesday, June 12, 2012

அனுராதபுர சியாரம்......தம்புள்ளை மஸ்ஜித் ...... தெஹிவளை மஸ்ஜித்.......நிபந்தனையற்ற நமது சரணாகதிக்கு என்ன காரணம் ......?







( 25 /9 / 2011 ஆம் திகதிய நமது பதிவொன்று ஆச்சரியமாக இலங்கையின் நிகழ் கால அரசியல் நிலவரத்துடன் உடன் படுவதால் அதனை மீளப் பதிவு செய்கிறோம்.)


காலையில் மனைவி சொன்னாள் "தெருக் கோடியில் இருந்த மாடி வீட்டு மனிதனை இரவில் இனந்தெரியாத யாரோ வந்து கண்ணைக் கட்டி அழைத்து சென்றார்களாம்...."

'ஓஹ் ..அந்த கம்யூனிசவாதியா?....' நான் நினைத்தேன். 'இறைவனே இல்லை என்று சொன்ன அவனுக்கு அது வேண்டும்!'

அந்தக் கடத்தல் என்னைப் பாதிக்காததால் நான் மெளனமாக இருந்தேன்.

ஒரு வாரத்தில் காலையில் மனைவி மீண்டும் சொன்னாள்."இம்முறை மூன்று வீடுகள் தங்கியிருந்த எதிர்க் கட்சி அரசியல் வாதியை இரவில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றார்களாம் ..."

'ஓஹ்..அந்த எதிர்க் கட்சி அரசியல்வாதியா.......' நான் நினைத்தேன்.'தேவை இல்லாமல் ஆளும் கட்சியை எதிர்க்கும் அவனுக்கும் அது வேண்டும்.'

அந்தக் கடத்தலும் என்னைப் பாதிக்காத காரணத்தால் நான் மௌனித்து ஒதுங்கிப் போனேன்.

சில நாள்களுக்கு பின்னர் ஒரு நாள் காலையில்   மனைவி சொன்னாள்"எங்களது எதிர் வீட்டில் குடியிருக்கும் எப்பொழுதும் பொதுநலத்தையே பேசுகின்ற மனிதரை நேற்றிரவு வந்த சிலர் கடத்திப் போனார்களாம்..."

"ஓஹ்... அந்தப் பொதுநலவாதியையா' நான் நினைத்தேன்.'அவருக்கு அது வேண்டும்.எப்பொழுதும் தேவை   இல்லாமல் மற்றவர்களின் விடயத்தில் தலையிட்டுக் கொண்டே இருந்ததற்கு இது வேண்டும்'

மற்றவர்களின் விடயத்தில் தலையிடாத நான் பேசாமல் இருந்தேன்.

சூழ் நிலைகள் இவ்வாறு மோசமாக இருந்தாலும் எங்கள் வீட்டில் நாம் நிம்மதியுடன் இருந்தோம்.

ஒரு நாள் நடு நிசி.

என் வீட்டு கதவு தட்டப் பட்டது.

கதவைத் திறந்தால்..........

Thursday, June 7, 2012

சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....??????.

அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா - சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....??????.


அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே...!அல்ஹம்து லில்லாஹ்.

நண்பர் அன்புராஜை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் நேரம் இது.

நண்பர் அரபுத் தமிழன் அலட்சியமாக கீறி அனுப்பிய ஒரு பின்னூட்டத்தின் இன்னொரு  வெற்றிப் பதிவு இது.

நண்பர் அன்புராஜ் சுட்டிக் காட்டிய இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை தாங்கி நின்ற இணையப் பதிவுகளின் கோரத் தாண்டவத்தைக் கண்டு அஹ்லுல்பைத் ஆதரவாள நண்பர்களான முனவ்வர், ஹசன், மௌலவி ஜிப்ரி , ரிஸ்வான் ஆகியோரது பதை பதைத்த பறி தவிப்புகளின் வெளிப் பாடு  நமது ஏனைய நண்பர்களைத் தொற்றிக் கொள்ள மெது மெதுவாக ரூமி, இம்ராஸ்,ரியாஸ், Faique, நவுசர், ரிஸ்வி, மஹ்தி,ஹைதர் அலி, ஹுசைன் பாரூக் , தினேஷ் , டைடஸ் ஆகியோரை ஒரு நேர் கோட்டில் கொண்டு வந்து நிறுத்தியது.

பல்வேறு தளங்களில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த இந்த நண்பர்களின் அதிசயமான ஒன்றிணைப்பில் ஆச்சரியப் பட்டு மகிழ்வு கொண்ட மௌலவி யஹ்யாவும், மௌலவி மபாஹிமும், இவர்களுடன் இணைந்துக் கொள்ள விடயம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

"அண்ணல்  நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா நரகவாதிகளா?" நூல்  மெலிதாக நூலுருப் பெறத் துவங்கியது.

Tuesday, May 29, 2012


பாலஸ்தீனம் ஒரு போராட்டம்




இதற்க்கு பின்னும் மௌனமா ? 


வாய்களை பொத்திக் கொள்வது அறமும் அல்ல 


கைகளை கட்டி கொள்வது வீரமும் அல்ல 


கலிமா மொழிந்தவனே உன் ஈமானை நிருபிக்க ஒரு சந்தர்ப்பம் 


போராடு !!!இல்லையேல்


இந்த மக்களுகாக உன் பிரார்த்தனையில் கண்ணீராவது விடு !!!

Monday, April 30, 2012

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம்........ஆண்டிகள் அவித்த பாயாசம்....!!!!!



ஒரு ஊரிலே ஏழு ஆண்டிகள் பிச்சை எடுத்து தமது வாழ்க்கையை ஓட்டிக்  கொண்டிருந்தார்கள்.

அந்த ஏழு ஆண்டிகளும் இரவிலே ஒற்றுமையாக ஊர் சத்திரத்தில் ஒன்றாக இரவைக் களிப்பார்கள்.

படுக்கைக்கு போகு முன் தமது தொழிலை விருத்தி செய்யும் முறை பற்றி விலாவாரியாக விவாதிப்பார்கள்.

பின்னர், நிம்மதியாக தூங்குவார்கள்.

காலையில் தமது திட்டங்களை எல்லாம் மறந்து எழுந்து தொழிலுக்கு செல்வது போல பிச்சை எடுக்க அனைவரும் வெளியே பிரிந்து செல்வார்கள்.

இரவாகியவுடன் தாம் அன்று சம்பாதித்த பிச்சையுடன் சத்திரத்துக்கு திரும்புவார்கள்.

மீண்டும் விவாதிப்பார்கள் 

நிம்மதியாக படுத்து உறங்குவார்கள்.

அடுத்த நாள் தாம்  தீர்மானித்த திட்டங்களை அம்போ என்று மறந்து எழுந்து பிச்சை எடுக்கும் தொழிலுக்கு போவார்கள்.

இப்படியே நாள்கள் ஓடின.

ஒரு நாள் இரவு அந்த ஆண்டிகளில் ஒருவன் பாயாசம் சமைப்போம் என்று புதியதொரு திட்டத்தை முன் வைத்தான்.

Wednesday, April 25, 2012

செவிடன் காதில் ஊதிய சங்கு போல...........குருடர்களுக்கு வழிக் காட்டும் குருடர்கள்............



ஒரு கிராமத்தில் சில அப்பாவி மக்கள் ஒரு இளம் தலைவரை கண் மூடித்தனமாக நம்பி பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அந்த இளம் தலைவர் அந்த ஊர் மக்களை இன்னுமொரு ஊருக்கு வழி நடாத்தி அழைத்துச் சென்றார்.

தலைவர் முன்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.

அப்பாவி ஊர் மக்கள் இளம் தலைவரை பின் துயர்ந்தார்கள்.

அவர்களது நிம்மதியான பயணத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

திடீரென அவர்களது பயண வழியில் ஒரு அடர்ந்த ஒரு காடு குறுக்கிட்டது.

அடர்ந்த அந்தக் காட்டைக் கடந்து அடுத்த ஊருக்கு போகவேண்டிய நிலையில் அந்த இளம் தலைவரும் அவரைப் பின் பற்றும் அப்பாவி ஜனங்களும் இருந்தார்கள்.

திடீரென, அந்தக் காட்டினுள்ளிருந்து ஒரு விறகு வெட்டி அந்தக் கூட்டத்தாரின் முன்னால் வந்தான்.

காட்டினுள் நுழைய முயலும் கூட்டத்தாரைக் கண்டதும் அவன் கலவரமுற்றான்.

Saturday, March 24, 2012

விலங்கிடப்பட்ட விடுதலை?



சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய தந்தை ஒரு கரி வேப்பிலை கன்றொன்றை எங்களுடைய வீட்டின் முன்றலில் நிழலை எதிர்பார்த்து நாட்டி வைத்தார்.

என்னுடைய அத்தை அந்த கன்றை பாதுகாக்கும் நோக்கில் பழைய டயர் ஒன்றை எடுத்து அதனை அந்த கன்றை சுற்றிலும் வேலியாக வைத்தார்.

காலம் நகர்ந்தது.

கரி வேப்பிலைக் கன்று டயரின் பாதுகாப்பில் பத்திரமாக வளர்ந்தது.

கொஞ்ச நாள்கள் செல்ல......செல்ல....கன்று சிறு செடியாக சிலிர்த்து நிமிர்ந்து சலசலத்தது.

அத்தை பாதுகாப்புக்கு போட்ட அந்த பழைய டயர் அந்த சிறு செடியை சுற்றி நிலத்தில் செடிக்கு வளையம் அணிவித்தது போல அழகாக இருந்தது.

இப்பொழுது எங்களால் அந்த டயரை தூக்கி வெளியே எடுத்து அந்த மரத்தையும், செடியையும் பிரித்து விட முடியுமான நிலை இருந்தது.

ஆனால் அப்படி செய்ய யாருக்கும் தோன்றவில்லை.

மெதுவாக நகர்ந்த  நாள்கள் வருடங்களாக வேகமாக ஓடி மறைந்தன.

சென்ற விடுமுறையில் நான் வீடு சென்ற பொழுது பதினேழு வருட நினைவுகளை பசுமையாக சுமந்தபடி அந்த கரி வேப்பிலை செடி, கம்பீரமாக   கரி வேப்பிலை மரமாக நிமிர்ந்து நின்றது.

சட்டென்று ஏதோ நினைவுக்கு வர நான் மரத்தின் அடியைப் பார்த்தேன்.

என்னுடைய அத்தை அந்த மரத்தின் பாதுகாப்புக்கு வைத்த அந்த பழைய டயர்  கொஞ்சம் சிதைந்துப் போய் நிறம் மங்கி அப்படியே இருந்தது.

அந்த டயரின் பாதுகாப்பு இப்பொழுது அந்த மரத்துக்கு அவசியப் படவில்லை.

டயரின் இருப்புக்கு மரமும் அவசியப் படவில்லை.

இம்முறை நாம் நினைத்தால் கூட எங்களால் அந்த பழைய டயரை மரத்தை விட்டும் அப்புறப் படுத்த முடியாத நிலையில் அவற்றின் பிணைப்பின்   நிலை இருந்தது.

ஏனெனில், நன்கு வளர்ந்து கிளை விட்டு வியாபித்திருந்த மரம் டயரின் சுற்றளவை   விடவும் பெரியதாக இருந்தது.

அப்படி யாராகிலும் விரும்பினால், டயரை இரண்டாக வெட்டித்தான் மரத்தையும் டயரையும் பிரிக்க வேண்டிய நிலையில் அவை இரண்டும் இணைந்திருந்தன.

மரத்தின் அடியில்  இருந்த   டயரையும், மரத்தையும் போலத்தான் இன்று நம்மில் அநேகர் இருக்கின்றனர்.

எங்களுடைய சிறு வயதில் எங்களுடைய பெற்றோர் அவர்கள் அறிந்த அறிவுக்கு தக்க அவர்கள் நம்பிய இறைவனை நமக்கு அறிமுகப் படுத்திவிட்டு போய் விட்டார்கள்.

கரி வேப்பிலை கன்றை சுற்றி பாதுகாப்புக்கு அத்தை அமைத்த டயர் வேலி போன்று அந்த நம்பிக்கைகள் அப்பொழுது நமக்கு அவசியப்பட்டன.

இப்பொழுது நாம் பெரு விருட்சமாக அந்த கரிவேப்பிலை மரத்தைப் போல வளர்ந்து விட்டோம்.

சிறு வயதில் நாம் அறிந்த இறைவனைப் பற்றிய கதைகளை விடவும் இறைவனைப் பற்றிய இரகசியங்கள் எத்தனையோ இருக்கின்றன என்பதையும் நாம் புரிந்துக் கொண்டோம்.

அவற்றின் உண்மைகளை நாம் அறிந்தாலும் சிறு வயதில் நாம் அறிந்த பழைய நம்பிக்கைகளை விட்டு விட நாம் தயாராக இல்லை.

விளைவு?

மரத்தில் சிறை கொண்ட டயரைப் போல அல்லது டயரில் சிறை பட்ட மரத்தைப் போல நாம் விலங்கிடப் பட்டிருக்கிறோம்.

எங்கள் மோட்சத்தின் விடுதலை எங்களிடமே சிறைப் பட்டிருப்பதை நாம் புரிந்துக் கொள்ள தவறிப் போனோம். 

Sunday, March 18, 2012

இறைவனைத் தேடும் அன்புராஜ்.........இஸ்லாத்தைக் குழப்பும் அஷ் சேய்க் அகார் (நளீமி)BA ......இருவரில் இறுதி வெற்றி யாருக்கு ???!!!



டாக்டர் அன்பு ராஜ் அஹ்லுல்பைத் தளத்துக்கு நன்கு பரிச்சயமானவர்.

மௌலவி அகார் (நளீமி)BA  நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் , பிரச்சாரப் பீரங்கி தற்கால இஸ்லாமிய அறிஞர்களில் இலங்கையை பிரபலமாக பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு இஸ்லாமிய அறிஞர்.

மௌலவி அகார் (நளீமி)BA  நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர்
லண்டனுக்கும், சுவிசுக்கும் .....பணம் படைத்தவர்கள் நிறைந்திருக்கும் இடங்களுக்கு கால்சீட் வைத்து இஸ்லாமிய பிரசாரத்துக்குப் பறந்து ...பறந்துக் கொண்டிருக்கும் ஒரு நவீன பிரச்சார நாயகன்.

அல்லாஹ்வின் ஆட்சியை உலகில் நிலை நிறுத்தப் போவதற்காக , ஸ்திரப் படுத்துவதற்காக இஸ்லாத்தின் வெள்ளைகார எதிரிகளின் மண்ணிலேயே அவர்களின் அனுமதியுடன் அல்லது அவர்களின் பூரண ஆதரவுடன் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் விரிவு பட்ட ஒரு விரிவுரையாளர்.

என்றாலும், கருப்பர்கள்  நிறைந்த வரண்டு போன சூடானுக்கோ, பசியினால் மெலிந்து போன சோமாலியாவிற்கோ அவர் அல்லது அவர் போன்றோர்  இஸ்லாமிய பிரச்சாரத்துக்குப் போனதாக அறியக் கிடைக்கவில்லை.

அன்பு ராஜ் VS அகார் .........

இல்லை...இல்லை....அது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை.

ஒருவர் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றிய உண்மைகளையும் மரணத்தின் பின்னால் இருக்கின்ற நித்திய வாழ்வின் இரகசியங்களையும் தேடுபவர்.

மற்றவர் இஸ்லாத்தில் மிகவும் ஆளுமையான புலமைப் பெற்று இஸ்லாத்தை நன்கு கற்றறிந்து இஸ்லாத்தை அறியாத மக்களுக்கு அதன் உண்மையான சத்தியங்களை மிகவும் சூசகமாக  மறைப்பவர்.

நாம் இவ்வாறு துணிச்சலுடன் கூற அல்லது முடிவுக்கு வர என்ன காரணம் தெரியுமா?

Monday, March 12, 2012

ஆன்மீகக் குருடர்கள்




தன் புலன் சொல்லும் அறிவினால் அளவிட முடியாத விடயங்களுக்கு மனிதன் எப்பொழுதும் எதிரியாகவே இருப்பான் என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.

தேர்த் திரு விழா ஒன்றிற்கு தனது இளம் மகனை ஒரு தந்தை அழைத்து சென்றார்.

தூரத்தில் தேர் வருவது தெரிந்தது.

நெருக்கியடித்த கூட்டத்தில் தந்தையும் மகனும் திக்கு முக்காடினார்கள்.

உடனே தந்தை தனது மகனை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு தேர் வரும் திசையை நோக்கி முன்னேறத் தொடங்கினார்.

கொஞ்ச நேரத்தில் மகன் "சாமி தெரியுது........சாமி தெரியுது.." என்று பரவசத்துடன் கூச்சலிடத் தொடங்கினான்.

தந்தை அண்ணாந்துப் பார்த்தார்.

Monday, February 27, 2012

ஆற்றாமையுடன் ஒரு பணிவான வேண்டுகோள்...!!!!! உதவுவீர்களா...??????






முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஏதோ ஒரு பெயரில் ஆக்கிரமித்து கபளீகரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படையினர்.

அமெரிக்க தலைமைத்துவ நேட்டோ படையினரின் அக்கிரமங்கள் எம்மை அணுகாத காரணத்தினால் அந்த ஆக்கிரமிப்பின் வலிகளை நாம் உணரவில்லை.

Friday, February 24, 2012

உன் வாழ்க்கை உன் கையில்...........?புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்!!!!



எமது நண்பர் டாக்டர் அன்புராஜ் சுவனத்து ஹூருல் ஈன்களைப்பற்றி தனது பின்னூட்டம் ஒன்றில் சில சந்தேகங்களைக் கேட்டிருந்தார்.

அவர் தனது பின்னூட்டத்தில்......... "சுவனம் செல்லும் பாக்கியம் கிட்டும் ஒரு ஆண் மகனுக்கு சுவனத்தில் எழுபத்து இரண்டு ஹூருல் ஈன்கள் மனைவிமார்களாக கிடைப்பார்கள் என்று அலிஸீனா என்பவரின் இணையத் தளத்தில் கண்டேன்.அப்படி என்றால் சுவனம் செல்லும் பாக்கியம் பெற்ற பெண்களுக்கு சுவனத்தில் யார் கிடைப்பார்கள்........?"

இதுதான் அவர் கேட்ட  கேள்வி.

கேள்வி நமக்கு புதிது.

நமக்கு மட்டுமல்ல எமது இந்த ஆய்வில் நாம் சந்தித்த முஸ்லிம்கள் அனைவருக்கும் இந்தக் கேள்வி புதிது.

ஏனெனில், நம்மை படைத்த இறைவனை விசுவாசித்து ,மரணத்தின் பின்னால் உள்ள வாழ்க்கையை அதாவது மறுமையை விசுவாசித்து , மறுமை வாழ்க்கையை விபரித்த நபிமார்களை விசுவாசித்து ,அந்த நபிமார்களுக்கு தூது கொண்டு வந்த வானவர்களை விசுவாசித்து இருக்கின்ற மக்கள் அனைவருக்கும் சுவனத்தைப் பற்றியோ , அதில் இருக்கின்ற   ஹூருல் ஈன்களைப் பற்றியோ எதுவித கனவுகளோ அல்லது குழப்பங்களோ இருக்க வில்லை.

அவர்கள் அனைவரின் மனத்திலும் தாங்கள் அனைவரும் மரணத்தின் பின்னால் இறைவனின் சந்நிதியில் ,அவனது ஆதரவில் தங்கி ...தப்பி பிழைத்து இருப்போம் என்கிற ஆறுதல் இருந்தது.

ஆனால், இறைவனின் ஆதரவில் நம்பிக்கை வைக்க தவறிய உலகத்துக்கும் உலகத்து மக்களுக்கும் ஹூருல் ஈன்களைப்   பற்றிய இந்தக் கேள்வி புதிதல்ல என்பதை நாம் நமது ஆய்வில் அறிந்துக் கொண்டோம்.

ஆச்சரியமாக அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் மறுமை வாழ்க்கையை விசுவாசித்து இருந்தார்கள்.

மறு பிறப்பு என்று சிலர் மரணத்தின் பின்னால் உள்ள வாழ்க்கையை நம்பிக் கொண்டிருந்தார்கள்.

அனைத்து ஆசா பாசங்களையும்   துறந்து நிர்வான் நிலையை அடைந்துக் கொள்வதில் விமோசனம் இருக்கிறது என்று இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

தான் செய்யும் செய்வினைக்கு தக்க பல பிறவிகள் எடுத்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் இறைவனுடன் சங்கமமாகி விடுவதாக சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

நல்லறங்கள் செய்வதன் காரணமாக இறைவனை தன்னுள்ளேயே கண்டு தனது செய்கைகளை இறைவனின் செயல்களாக கருதி இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுவதாக இன்னும் சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது விசுவாசத்தில் ஒரு குழப்பம்.

அதன் காரணமாக அவர்கள் முஸ்லிம்களின் மறுமை விசுவாசத்தில் குறை கண்டு தங்களது விசுவாசத்தை சரி காணும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.


எது எப்படி போனாலும் இவ்வாறான அனைத்து நம்பிக்கைகளிலும் மரணத்தின் பின்னால் ஏதோ இருக்கிறது என்று மனித மனம் நம்பிக் கொண்டிருந்தது பேராச்சரியம்.

அத்தகைய நம்பிக்கையில் வாழ்கின்ற அனைவரும் மரணத்தின் பின்னர் இருக்கின்ற வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற நப்பாசையில் தீமை செய்யப் பயந்து தங்களால் முடிந்த வரை நன்மைகளையே செய்து கொண்டிருந்தனர்.

மக்களின் மறுமை வாழ்வு சம்பந்தமான  அந்த நம்பிக்கையின் செயல் விளைவு உலகத்துக்கு நன்மையாகவே இருப்பதும் புரிந்தது. 

இனி, இணையத்தில் இறைவன் வாக்களித்த மறுமை வாழ்வில் மனிதனுக்கு வழங்கும் சொகுசான , நிம்மதியான வாழ்க்கை சம்பந்தமாக பெரும் வாதப் பிரதி வாதமே நடந்துக் கொண்டிருப்பதை நண்பரின் கேள்விக்கு விடை தேடும் பொழுது புரிந்தது.

எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படித்துக் கொள்ளவும்,எங்கள் பெண்களின் மன நிலையைப் பற்றி புரிந்துக் கொள்ளவும், எமது அறிஞர் நண்பர்களை சுவனத்து ஹூருல் ஈன் களைப் பற்றி சில நிமிடங்கள் சிந்திக்கவும் வைத்த நண்பர் அன்புராஜுக்கு நன்றிகள்.

நமது நண்பர் அன்புராஜ் இணையத்தில் நடந்துக் கொண்டிருக்கும் சுவையான வாதப் பிரதிவாதங்களை (நிச்சயமாக) பார்த்திருப்பார் என்று நம்புகிறோம்.

ஹூருல் ஈன் களைப் பற்றி நமது நண்பர்   நம்மிடம் கேள்வி கேட்டதும் நாம் வழமைப் போல அந்தக் கேள்வியை நமது அறிஞர்களிடம் ஒப்புவித்தோம்.

நமது அறிஞர்களுக்கு உடனே பதில் சொல்லத் தெரிய வில்லை.

ஏனெனில், மக்களில் சிலரைக் குழப்பி தடுமாற வைத்திருக்கும் அழகிய சுவனத்து மங்கையர்கள் பற்றிய கதைகள் அந்த  அறிஞர்கள் மனத்தில் நிறைந்து இருக்கவில்லை. அதனால் அந்தக் காரிகைகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக அலட்டிக் கொண்டிருக்கவில்லை.

அதே போல , அந்த அறிஞர்கள் சுவனத்துக்கு ஆசை வைத்து நரகத்துக்கு பயந்து இருக்கவும் இல்லை.

அவர்களின் நோக்கமெல்லாம் படைத்த இறைவனின் திருப்தியை எப்படி அடைந்துக் கொள்வது என்பதில்தான் தங்கி இருந்தது என்கின்ற உண்மை  எமது கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்களில் புரிந்துப் போனது.

அவர்களைப் பொறுத்தவரை ஏக வல்ல இறைவனின் திருப்திதான் முதன்மையில் இருந்தது.

வல்ல இறைவனின் திருப்தி எதனை செய்தால் கிட்டும் என்ற ஆராய்ச்சியிலும்,அதன் வழி பிறந்த செய்கைகளிலும் அவர்கள் முழுமூச்சாக ஈடுபாடு கொண்டிருப்பதும் புரிந்தது.  

அதனால், அவர்களின் கண்ணோட்டத்தில் சுவனத்தின் சுகங்களும், நரகத்தின் அவலங்களும் இரண்டாம் பட்சத்தில் இருந்தன.

எனவே அவர்களுக்கு இந்தக் கேள்விக்கு பொருத்தமான பதில் சொல்லவும்,  இது சம்பந்தமாக ஆய்வு செய்யவும் எம்மைப் போலவே நேரம் அவசியப் பட்டது.

இரவில் எனது மனைவியுடன் இருக்கையில் நான் கேட்டேன்"சுவனத்துக்கு செல்லும்  ஆண்களுக்கு சுவனத்தின் ஹூருல் ஈன்களில் எழுபத்து இரண்டு பேர்களை மனைவிமார்களாக அல்லாஹ் கொடுப்பானாம்...நீங்கள் என்றாவது சுவனத்தில் பெண்களுக்கு அல்லாஹ் யாரை மணாளனாக கொடுப்பான் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?"

Thursday, February 9, 2012

இலங்கையில் இருக்கும் அஹ்ளுல்பைத்களின் நிஜமான எதிரிகள்............???தொடரும் நாடகங்களின் வெற்றிகரமான இயக்குநர்களை இனம் காண்போம்!


ஆசுரா, தாசுரா, அராபியீன், கதீர், சஹ்பான் மாத பிறை பதின் மூன்று அல்லது     பதின் நான்கு - மிட் சஹ்பான், சஹாரா டே, ஹஜ் செமினார், இமாம் கொமைனியின் கொண்டாட்டங்கள், குத்ஸ் தினம் ஆகிய வார்த்தைப் பிரயோகங்கள் இலங்கையின் பாமர முஸ்லிமுக்கு புதிதானவை.

ஆனால், இந்த தினங்களின் அனைத்து நினைவு தினங்களும் இலங்கையின் அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்களுக்கு நன்கு பரிச்சயமானது.

இந்த தினங்களை இலங்கையில் இருக்கும் ஈரானிய கலாசாரப் பிரிவு பல இலட்சங்களை செலவு செய்து  நினைவு மறக்காமல் கொண்டாடுவது விசேஷம்.

அதற்கான அனைத்து செலவுகளையும் ஈரானின் இஸ்லாமிய குடியரசு பொறுப்பேற்கும். 

ஆதலினால், அஹ்லுல் பைத்களின் ஆதரவாளர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த தினங்களில் ஈரானின் கலாசாரப் பிரிவில் ஒன்று கூடுவார்கள்.

அங்கே நடை பெறுகின்ற சிறப்புப் பேச்சுக்களில் பங்கேற்பார்கள்.

அஹ்ளுல்பைத்களின் முக்கியத்துவத்தை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்ப்பது என்று வாதிடுவார்கள்.

எதுவித சங்கோஜமும் இல்லாமல் அந்த வைபவங்களில் பரிமாறப் படும் உணவு வகைகளை சுவைப்பார்கள்.ஏனெனில், அந்த செலவினங்களுக்கு அஹ்ளுல்பைத்களின் கொள்கையில் இருக்கின்ற ஒரு நாடு பொறுப்பாக இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்.

இந்த நிலையில் இவ்வருட நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜனன விழா இலங்கையில் இருக்கின்ற அஹ்லுல் பைத் ஆதரவாளர்களினால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்டது.

இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களில் வஹ்ஹாபிகளைத் தவிர ஏனையவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் ஜனன விழாவை தங்களின் சக்திக்கு ஏற்ப கொண்டாடத் தொடங்கினார்கள்.

அஹ்ளுல்பைதகளின் ஆதரவாளர்கள் ஈரான் கலாசார நிலையம் ஏற்பாடு செய்யும் மீலாத் விழாவை எதிர் பார்த்து எதுவும் செய்யாமல் "ங்கே" என்று காத்திருந்தார்கள்.

நாள்கள் ஓடின.

Tuesday, February 7, 2012

அன்னை கதீஜா (அலை) அவர்களின் திருமண வயது...........குழப்பத்துக்கு ஒரு தீர்வு....?????!!!!!!





எமக்குக் கிடைத்த தகவல்களின்  படியும் அநேக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப் படியும் அன்னை கதீஜா (அலை) அவர்களை நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரியும் பொழுது அன்னை கதீஜா (அலை) அவர்களின் வயது நாற்பது.

நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் இருபத்து ஐந்து வயது இளைஞராக இருந்து இருக்கிறார்கள்.

அன்னை கதீஜா (அலை) நாற்பது வயது நிறைந்த மூதாட்டியாக இருந்து இருக்கிறார்கள்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் ஒரு முறை இந்தியாவைச் சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர் தனது பகிரங்க பிரசங்கம் ஒன்றில் இந்த வயது வித்தியாசத்தை இப்படி நியாயப் படுத்துவதைக் கேட்டு நானும் அப்படியே பலரிடம் காவிக் கொண்டு சொல்லியிருக்கிறேன்.

"தன்னை விட வயதில் மூத்த, நாற்பது வயதுப் பெண்ணை எங்கள் நபி நாயகம் சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரிந்ததில் ஒரு இரகசியம் பொதிந்து இருக்கிறது.அன்னை கதீஜா அவர்கள் வயதில் மூத்த தன்னை நபி சல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்கள் திருமணம் புரிந்துக் கொண்டதற்கு நன்றிக் கடனாக ஒரு தாயாரைப் போல அவரைக் கவனித்துக் கொண்டார்கள்.அதனால் தான் அவர்கள் தினமும் ஹிரா குகைக்கு நபிசல்லலல்லாஹு அலைஹி   வஆலிஹி   வசல்லம் அவர்களுக்கு தேவையான  உணவை ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போய் கொடுத்து  இருக்கிறார்கள்.ஒரு இளம் பெண்ணிடம் எங்களால் இவ்வாறான தியாகத்தை எதிர்பார்க்க முடியாது...."

இந்தக் கருத்தின் தரம் தாழ்ந்த பொருள் வடிவம்  இப்பொழுதுதான் எனக்கும் புரிகிறது.

Sunday, February 5, 2012

இஸ்லாமிய வரலாற்றை வேரறுத்த உமையாக்கள்..........?




நாம் எதிர்பார்த்த மாதிரியே நண்பர்களின்  தொடர் தொலைபேசி அழைப்புகள். 

பெரிய தந்தை சொல்வதில் பொதிந்திருக்கும் நிஜங்கள் யாவை?

ஒரு நண்பர் டாக்டர் அன்புராஜின் பதிவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்.

காரணம் கேட்டோம்.

டாக்டர்  அன்புராஜ் என்பவர் அஹ்லுல்பைத் தளத்தின் போக்கை திசை திருப்ப இந்துப் பெயரில் ஒளிந்துக் கொண்டிருக்கும் ஒரு அனாமேதயப் பேர்வழி என்றும் அவரது பின்னூட்டங்கள் அனைத்தும் அந்தந்தப் பதிவுகளுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் ஒலிப்பதாகவும் கூறி அவற்றுக்கு அவமே நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.(இத்தகைய குற்றச்சாட்டுக்கு நியாயமான பதிலை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் டாக்டர் அன்புராஜ் இருக்கிறார் என்பதை அன்புராஜ் அன்புடன் புரிந்துக் கொள்வார் என்று நம்புகிறோம்.)

இனி,

எனது பெரிய தந்தை அன்னை கதீஜா (அலை) அவர்களைப் பற்றி சொன்ன செய்திகள் எனக்குப் புதிதாக இருந்தன.

அத்தகைய செய்திகளுக்கு ஏதாவது ஆதாரம் அவரிடம் இருக்கிறதா என்று கேட்டேன்.

Wednesday, February 1, 2012

அஹ்லுல்பைத் அபிமானிகளின் ஆய்வுக்கு ஒரு பதிவு....?



சில தினங்களுக்கு முன்னர் கடுமையாக மழை பொழியும் நாள் ஒன்றில் என்னுடைய பெரிய தந்தை ஒருவரை வைத்தியசாலையில் சந்தித்தேன்.

வைத்திய சாலையில் சிகிச்சைக்காக நிறுத்தியிருந்த என்னுடைய சிறிய தந்தையை என்னைப் போலவே அவரும் நலம் விசாரிக்க வந்திருந்தார்.

என்னுடைய பெரிய தந்தை கொஞ்சம் வித்தியாசமானவர்.

வித்தியாசமான கருத்துக்களை சொல்பவர்.

அதனாலோ என்னவோ சில உலமாக்களுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது.

அந்த சில உலமாக்களின் அல் குர்ஆன் உச்சரிப்புக்களில் உள்ள குறைகளை எனது பெரிய தந்தை சட்டென்று அடையாளம் சொல்லுவார்.

பெரிய தந்தையின் அல் குர் ஆன் ஓதலில் அழகான இராகம் இருக்கும்.

வாயை அசைத்து அசைத்து தொண்டையினாலும்,  உதட்டின் ஓரத்தினாலும்,  நடு நாவினாலும் இராகம் இசைத்து , இசைத்து அவர் ஓதும் அழகே அலாதியானது.

அஹ்ளுல்பைத்களைப் பற்றிய எனது தேடலுக்கு காரணமான சிலரில் எனது பெரிய தந்தையும் ஒருவர்.

அவர் அவ்லியாக்களில் அதிக நேசம் கொண்டவர்.

எங்காவது  ஓரிடத்தில் யாராவது அவ்லியாவின் அடக்கஸ்த்தளம் இருப்பதை அறிந்துக் கொண்டால் இவர் நிச்சயம் அந்த இடத்தை தரிசிப்பார். 

அதே நேரம் அவ்லியாக்களிடம்  உதவி நாடி அவர்களிடம் பிரார்த்திக்கும்  செய்கைக்கு கடும் விரோதமானவர்.

அத்தகைய செயல்பாடுகளை இறைவனுக்கு இணை வைக்கும் ஷிர்க்கான     செய்கை என்று பெரிய தந்தை சொல்லுவார்.

அதனால், அவ்லியாக்களில் நேசம் கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதில் ஒரு தவறும் இல்லை என்று வாதிடும் ஹுப்புல் அவ்லியா உலமாக்களுக்கும் அவரைப் பிடிக்காது.

ஆச்சரியமாக தவ்ஹீத் ஜமாத்தினர் சொல்லும் அதேவிதமான ஏகத்துவ  கருத்துக்களை கொஞ்சமும் வித்தியாசப் படாமல் எனது பெரிய தந்தையும் சொல்லுவார்.

அதனால் அவர் தவ்ஹீத் ஜமாத்தினரின் ஆதரவாளரா என்றால்...ஊஹும் .....அதுதான் இல்லை.

தவ்ஹீத் ஜமாத்தினர் அஹ்ளுல்பைத்களுக்கு உரிய கௌரவத்தைக் கொடுப்பது இல்லை என்ற கருத்தில் எனது பெரிய தந்தை இருந்ததால் அவர் தவ்ஹீத் ஜமாத்துக்கும் எதிரானவர்.

அதே போல தப்லீக் ஜமாத்தினரின் மறுமையை மட்டும் கருத்தில் கொண்டு இம்மையை அலட்சியப் படுத்தும் ஆன்மீகத்துக்கும் இவர் எதிரானவர்.

அவரிடம் ஒரு நாள் நான் கேட்டேன்."பெரியப்பா........நீங்கள் யார்?"

Wednesday, January 25, 2012

பாவம் டீச்சர்....?


நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றிய சிறப்புப் பேச்சொன்றுக்கு பாடசாலை கனிஷ்டப் பிரிவில் கல்வி கற்கும் நமது நண்பர் ஒருவரின் மகன் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.

நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி பேச்சொன்றை எழுதித் தருமாறு அவர் நமது நண்பரை கேட்டிருக்கிறார்.

நமது நண்பர் அவரது மகனிடம் அவருக்கு சுயமாகவே நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி தெரிந்திருக்கும் விடயங்களை எழுதிக் கொண்டு வருமாறு வேண்டியிருக்கிறார்.

அந்தச் சிறுவரும் நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி அவர் அறிந்த விடயங்களை   அவருக்கு தெரிந்த விதத்தில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.

அவ்வாறு கொண்டு வந்த பேச்சை சின்ன சின்ன திருத்தங்களை செய்து அந்த பேச்சையே செப்பனிடுவதன் மூலம் சிறுவருக்கு அந்தப் பேச்சை மனனம் செய்யும் சிரமம் இருக்காது எனபது நண்பரின் கணிப்பு.

அதன்படி நமது நண்பரும் சிறுவர் கொண்டு வந்த பேச்சை திருத்திக் கொடுத்திருக்கிறார்.

சிறுவர் அவரது உரையினை தயாரிக்கும் பொழுது நபி சல்லல்லாஹு அலைஹி   வஆலிஹி வசல்லம் அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்றும் தாயாரின் பெயர் ஆமினா என்றும் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.

தவறு இல்லையே?

Thursday, January 12, 2012

பூட்டப் படாமல் பூட்டிய மனங்கள்...????



பாணத்துறைக்கு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நண்பர் ஒருவரைக் காண நண்பர்கள் சிலர் சென்றிருந்தோம்.

விபத்துக்குள்ளான நண்பர் படுத்த படுக்கையில் இருப்பார் என்ற பதட்டமான எதிர்பார்ப்பு , மீண்டும் மோட்டார் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்த நண்பரைக் கண்டவுடன் அதிர்ச்சியைக் கொண்டு வந்தது.

இது எப்படி சாத்தியம் என்ற ஆய்வில், விபத்து நடந்து இரண்டு வாரங்களின் பிறகுதான் நமக்கு செய்தி கிட்டியது என்று புரிந்துப் போனது.

நல்ல நிலையில் அவரைக் கண்ட மகிழ்ச்சியில் சூழ் நிலையில் எவ்வித இறுக்கமும் இன்றி நாம் எல்லோரும் மிக உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

நண்பர் சலபி கருத்துக்களால் கவரப் பட்ட தீவிர சலபி.

இன்னும் கொஞ்சம் இலகு வார்த்தையில் சொன்னால், அஹ்லுல் பைத்களின் மீது தீவிர நேசம் கொண்டுள்ள சலபி.(சலபிகள் அஹ்ளுல்பைத்கள் மீது நேசம் கொள்வதில்லை என்று யார் சொன்னது?)

சலபிகளின் நுனிப்புல் மேயும் கருத்தியலின்படி நாம் 'பிதுஅத்'காரர்கள்.

எங்களுடன் ஒன்றாக அமர்ந்திருப்பது கூட தவறு என்ற கருத்தியலில் அவரது நண்பர்கள் இருக்கிறார்களாம்.

ஆனால், எங்களது நண்பரால் அது முடியாது.

Tuesday, January 10, 2012

டாக்டர் அன்புராஜின் ஆய்வுக்கு ஒரு சிறு கதை...?


இணையத்திற்கு சில நாட்களாக வர முடிய வில்லை.

இன்று திறக்கும் பொழுது டாக்டர் அன்புராஜின் தொடர் பின்னூட்டங்கள்.

அவரது பின்னூட்டங்களுக்கு சுருக்கமாக பதில் சொல்லும் விதத்தில் எமது இன்றைய பதிவை பதிவேற்றுகிறோம்.

டாக்டர் அன்புராஜ் எம்மை மன்னித்துக் கொள்ள வேண்டும்.

டாக்டர் அன்புராஜின் பின்னூட்டங்களின் கருத்துக்கள் அபூ சுபியானின் குடும்பத்தினர் சொல்லித் தந்த இஸ்லாத்தில் இருந்த அறிஞர்கள் சொன்ன இஸ்லாமிய கருத்துக்களுக்கு கொஞ்சமும் வித்தியாசப் படாமல் இருப்பதை தயவு செய்து டாக்டர் அன்புராஜ் புரிந்துக் கொள்ள வேண்டும்.

துரதிர்ஷ்ட வசமாக அபூசுபியானின் குடும்பத்தினரின் இஸ்லாம்தான் இன்று அநேகமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் பின்பற்றப் படுகின்றது.

அந்த இஸ்லாத்தில் நீதி இல்லை.

நியாயம் இல்லை.

உண்மை இல்லை.

இனி மனிதத்துவம் எங்கே இருக்கப் போகிறது.

அபூசுபியானின் குடும்பத்தினரின் இஸ்லாத்தில் இருந்து அஹ்ளுல்பைத்களின் - நபி குடும்பத்தினர் சொல்லித் தந்த இஸ்லாத்தின் பக்கம்தான் நாம் எங்களது சகோதரர்களை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்   கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சொன்ன அனைத்து அராஜகங்களும் நபி பெயரால் , அல்லாஹ்வின் பெயரால், இஸ்லாத்தின் பெயரால் அபூசுபியானின் குடும்பத்தினர் அறிமுகப் படுத்திய இஸ்லாமாகும்.

இனி, சிறிய சிறிய சிறு கதைகள் மூலம் இஸ்லாமிய வரலாற்றை உங்களுக்கு சொல்ல முயல்கிறோம்.



முதல் சிறு கதை :

நபி (ஸல்) அவர்களின் மறைவு நாள்.

உருவிய வாளுடன் ஹசரத் உமர் (ரலி).

வெற்றிக் களிப்பில் ஷைத்தான்.




Monday, January 2, 2012

அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் பிரதானமான நம்பிக்கைகள்........????


அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் பிரதானமான நம்பிக்கைகள்........????

1.ஏகத்துவம்

அல்லாஹ்ஒருவன்அவன் தனித்தவன்எவ்வித தேவையுமற்றவன்
அனைத்துப் படைப்பினங்களையும் படைத்தவனும் அவனே. அவைகளை பரிபாலிப்பவனும் அவனே. வணக்கவழிவாடுபிரார்த்தனைஅழைத்தல் மற்றும் 
கேட்டல் ஆகிய அனைத்திற்கும் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரமே. 
அவனையன்றி பிறரிடம் துஆ கேட்பதும்பிரார்த்திப்பதும் அதேபோன்று 
அவர்களை தனது தேவைகளை நிறைவேற்றும் தனியாற்றல் 
கொண்டவர்களாக கருதுவதும் ஷிர்க் எனும் மன்னிக்கப்படமுடியாத 
பெரும்பாவமாகும்.
2.நீதி
இவ்வுலகம் நீதியாலேயே அமைக்கப்பட்டுள்ளது. இறைவனின் 
செயற்கள் அனைத்தும் நீதியானவையே. அவன் எவருக்கும் 
நீதிக்குப்புறம்பாக அநீதியை நாடுவதில்லை. எனவே நன்மைதீமை 
இவ்விரண்டையும் மனிதனே தெரிவுசெய்கிறான்.
إنّ اللهَ لا يَظْلِمُ مِثْقالَ ذَرّةٍ
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) அணுவளவுங்கூட அநியாயம் 
செய்யமாட்டான்.
(4:40)
إنّ اللهَ لا يَظْلِمُ النّاسَ شَيْئاًوَلَـكِنَّ النَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் 
செய்வதில்லை. எனினும் மனிதர்கள்தான் தமக்குத்தாமே அநியாயம் செய்துகொள்கின்றனர் (10:44)

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad