நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றிய சிறப்புப் பேச்சொன்றுக்கு பாடசாலை கனிஷ்டப் பிரிவில் கல்வி கற்கும் நமது நண்பர் ஒருவரின் மகன் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி பேச்சொன்றை எழுதித் தருமாறு அவர் நமது நண்பரை கேட்டிருக்கிறார்.
நமது நண்பர் அவரது மகனிடம் அவருக்கு சுயமாகவே நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி தெரிந்திருக்கும் விடயங்களை எழுதிக் கொண்டு வருமாறு வேண்டியிருக்கிறார்.
அந்தச் சிறுவரும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைப் பற்றி அவர் அறிந்த விடயங்களை அவருக்கு தெரிந்த விதத்தில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.
அவ்வாறு கொண்டு வந்த பேச்சை சின்ன சின்ன திருத்தங்களை செய்து அந்த பேச்சையே செப்பனிடுவதன் மூலம் சிறுவருக்கு அந்தப் பேச்சை மனனம் செய்யும் சிரமம் இருக்காது எனபது நண்பரின் கணிப்பு.
அதன்படி நமது நண்பரும் சிறுவர் கொண்டு வந்த பேச்சை திருத்திக் கொடுத்திருக்கிறார்.
சிறுவர் அவரது உரையினை தயாரிக்கும் பொழுது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்றும் தாயாரின் பெயர் ஆமினா என்றும் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.
தவறு இல்லையே?