ஒரு ஊரிலே ஏழு ஆண்டிகள் பிச்சை எடுத்து தமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஏழு ஆண்டிகளும் இரவிலே ஒற்றுமையாக ஊர் சத்திரத்தில் ஒன்றாக இரவைக் களிப்பார்கள்.
படுக்கைக்கு போகு முன் தமது தொழிலை விருத்தி செய்யும் முறை பற்றி விலாவாரியாக விவாதிப்பார்கள்.
பின்னர், நிம்மதியாக தூங்குவார்கள்.
காலையில் தமது திட்டங்களை எல்லாம் மறந்து எழுந்து தொழிலுக்கு செல்வது போல பிச்சை எடுக்க அனைவரும் வெளியே பிரிந்து செல்வார்கள்.
இரவாகியவுடன் தாம் அன்று சம்பாதித்த பிச்சையுடன் சத்திரத்துக்கு திரும்புவார்கள்.
மீண்டும் விவாதிப்பார்கள்
நிம்மதியாக படுத்து உறங்குவார்கள்.
அடுத்த நாள் தாம் தீர்மானித்த திட்டங்களை அம்போ என்று மறந்து எழுந்து பிச்சை எடுக்கும் தொழிலுக்கு போவார்கள்.
இப்படியே நாள்கள் ஓடின.
ஒரு நாள் இரவு அந்த ஆண்டிகளில் ஒருவன் பாயாசம் சமைப்போம் என்று புதியதொரு திட்டத்தை முன் வைத்தான்.