வழக்கம் போல நண்பர் அன்புராஜின் ஒரு பின்னூட்டத்தின் கேள்வி அஹ்லுல்பைத் தளத்தின் இன்னொரு பதிவுக்கு களம் அமைத்தது.
நன்றி அன்புராஜ்.
அவரது கேள்வி இப்படி பதிந்தது.
It has become urgent to prove that the parents of Mr.Mohammed are pious.
I wonder why that question has assumed so much importance.
May be it is a internal matter of Islamic society.
Noble and otherwise parents begets good /evil sons and daughter.
History is full of evidance for th
"....................கௌரவமான உயரிய குடும்பத்து பெற்றோருக்கு இழி குணமுள்ள பிள்ளைகள் கிடைக்கிறார்கள்.அதே போல, தாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி வைக்கப் படும் பெற்றோருக்கு உயரிய நன் நடத்தையுள்ள குழந்தைகள் கிடைக்கும் பாக்கியம் கிடைக்கிறது.வரலாறு இதற்கு சான்று பகர்கிறது.வரலாற்று நிஜங்கள் இப்படி இருக்க முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பெற்றோர் உத்தமர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே......" என்கின்ற கருத்தை உள் வாங்கிய நிலையில் அவரது பின்னூட்டம் அமைந்து இருந்தது.
நண்பர் அன்புராஜின் பதட்டமான கேள்வி ஒரு முஸ்லிம் இணைவைப்பாளராக ஒரு போதும் மாற மாட்டார் என்பது போலவும் இணைவைப்பாளர் ஒருவரின் குழந்தை அல்லது ஒரு இணை வைப்பாளர் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்ற கருத்தை சொல்லாமல் சொல்லுவது போலவும் நாம் சொல்லும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது அருமைப் பெற்றோர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத முஸ்லிம்கள் என்ற கருத்து மயக்கமான இன்னுமொரு கருத்தை உள் வாங்கி
இருப்பது போல நமக்கு ஒரு பிரமையை ஏற்படுத்தியது.
உண்மைதான்.
நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாமல் இறை நிராகரிப்பாளராகவே இறுதி வரை இருந்து அப்பொழுது ஏற்பட்ட பயங்கரமான நீர்ப் பிரளயத்தில் மூழ்கி ஜல சமாதி கொண்டதாக அல் குர்ஆன் சாட்சி பகர்கிறது.
நபி லூத் (அலை) அவர்களின் மனைவியும் இறை நிராகரிப்பாளராகவே இறுதிவரை இருந்ததாகவும் அல் குர்ஆன் சாட்சி சொல்கிறது.
அது மட்டுமன்றி, நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களது பெரிய தந்தை அபூ லஹப் இறைவனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அது சொல்கிறது.
ஆதலால் குடும்ப பாராம்பரியம் ஒரு மனிதனை அவன் சார்ந்த நம்பிக்கை அல்லது கொள்கை அல்லது மதத்தின் பால் ஈர்க்கப் போவதில்லை என்பது தெளிவு.
ஆதலால் குடும்ப பாராம்பரியம் ஒரு மனிதனை அவன் சார்ந்த நம்பிக்கை அல்லது கொள்கை அல்லது மதத்தின் பால் ஈர்க்கப் போவதில்லை என்பது தெளிவு.
ஆகவே நண்பர் அன்புராஜின் கேள்வி நியாயமானது.ஆழமானது.
அவரது அபாரமான கேள்விக்கு நமது பாராட்டுக்கள்.
அவரது அபாரமான கேள்விக்கு நமது பாராட்டுக்கள்.
அர்த்தமுள்ள இந்தக் கேள்விக்கு அஹ்லுல்பைத் தளத்தின் பதில் என்ன?