Saturday, September 1, 2012

முடிவில் தொடங்கிய ஆரம்பம்..........சரியா?..........தவறா?



மௌலவி பாஸ்லான்,
இலக்கம் :34,
பாகீர் மாகார் மாவத்த,
பேருவலை.

அதி கௌரவத்துக்குரிய மௌலவி பஸ்லான் அவர்களுக்கு...,

 2012 ஆம் வருட மே மாதம் 27 ஆம் திகதி நாம் எழுதி வெளியிட்டு வைத்த "அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் -ஆமினா -நரகவாதிகளா? " நூலில் நிறைய பிழைகள் இருப்பதாக 2012 ஆகஸ்ட் நோன்பு மாத நடுப்பகுதி நள்ளிரவு நீங்கள் எங்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கூறினீர்கள்.

அன்றிரவே நாம் உங்களிடம் அந்தத் தவறுகளை நமக்கு எழுதி அனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டியிருந்தோம்.

நீங்களும் உடனே எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டீர்கள்.