அஹ்லுல்பைத் Headline Animator

Monday, October 1, 2012

அமைதியின் இருப்பிடம்...........



சென்றவாரத்தில் ஒரு நாள் ஜன சந்தடி மிக்க கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவிலே நான் நடந்துப் போய்க்கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசையைப் பார்த்தால் சுமார் மூன்று வயது நிரம்பிய குழந்தையொன்று தனித்து தவறிப் போன தனது தாயை அல்லது தந்தையைத் தேடி அழுதுக் கொண்டிருப்பது தெரிந்தது.

கணப் பொழுதில் அந்தக் குழந்தையைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம் கூடிவிட்டது.

குழந்தையின் முகத்தில் கலவரம் கலந்தப் பயம் தெரிந்தது.

தன்னைச் சுற்றி திடீரென கூட்டம் கூடியதைக் கண்டவுடன் குழந்தையின் அழுகை சத்தம் இன்னும் அதிகரித்தது.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad