Saturday, June 8, 2013

மரணத்தின் இறுதி கணங்களில் கேர்ணர் முஹம்மர் அல் கடாபி கூறியவை.....




நன்றி : கைபர் தளம்.

by: Abu Sayyaf        அந்த துடிப்பான லிபிய இளைஞன் கத்தினான். “யூ சிட்”. இது நான் ஆத்திரத்தில்அரபியில் கத்தும் “ஹராமி”யின் இன்னொரு ஆங்கில வடிவமாக இருக்கலாம். மீண்டும் அவன் கத்தினான் “பக் யூ. ஆனால் நான் அரபியில் ஒரு போதும் இப்படிய கத்தியது கிடையாது. ஒருவன் எனது அலைபாயும் முடியை பிடித்து வேகமாக இழுத்தான். அவன் கரத்தில் SEIKO கடிகாரம் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு லிபிய குடிமகனும் நல்ல ரக சீக்கோ கைகடிகாரம் கட்ட வேண்டும் என நான் எடுத்த தீர்மானத்திலேயே இன்று இவர்கள் கைகளில் கூட அது ஆடி நிற்கிறது.
 

Tuesday, June 4, 2013

(அமீர் முஆவியாவின் -அமெரிக்க) சுன்னத்வல் ஜமாத்தினரிற்கும் -ஷியாக்களிற்கும் நடக்கும் யுத்தம்! - யூசுப் அல்-கர்ளாவி (சிறப்பு பதிவு)




'இது ஹிஸ்புல்லாக்களிற்கும் சிரிய முஜாஹித்களிற்கும் நடக்கும் யுத்தம் மட்டுமல்ல! '

நன்றி: கைபர் தளம் 

லக முஸ்லிம்களிடையே புகழ் பெற்றவரும், இஹ்வான்களின் ஆகர்ஷ புருஷருமான கலாநிதி யுசுப் அல்-கர்ளாவி உலக முஸ்லிம்களை நோக்கி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். பல விடயங்களில் சர்ச்சைக்குரியவரும், நவீனத்துவ இஸ்லாத்தின் (?) முன்னோடியுமான இவர் புரிந்து கொள்ள முடியாத ஒரு நபர். லிபியாவில் கடாபியை கொல்வதற்கு துணை நின்றவர். அதே வேளை காஸாவின் முஸ்லிம்களிற்காக கண்ணீர் விட்டவர். சரி விடயத்திற்கு வருவோம். அவர் முஸ்லிம்களை நோக்கி கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஊர்வலத்தில் விட்ட வேண்டுகோள் இதுதான்...


“ஓ முஸ்லிம்களே. உங்களிற்கு எதிராக (அமெரிக்க, சவூதி ) யகூதி நஸராக்கள் ஒன்று பட்டு விட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் (உண்மையான)முஸ்லிம்களை அழிப்பது. அதனை நாம் கடந்த பல தசாப்தங்களாக கண்கூடாக கண்டு வருகிறோம். ஆனால் அதனை தடுத்து நிறுத்த செயற்திறன் அற்றவர்களாக எம்முள் பிளவுண்டு கிடக்கிறோம்”.