அஹ்லுல்பைத் Headline Animator

Monday, July 14, 2014

ISIS கடவுளின் காவலர்களான ISIS போராளிகள்

உலக முஸ்லிம் இளைஞர்கள் அநேகரின் கிலாபா கனவு இயக்கமாக புதிய அவதாரம் எடுத்து இருக்கும் ISIS இயக்கத்தின் ISIS என்ற சுருக்கப் பெயரில் பண்டைய எகிப்தின் பிரவ்னிய சாத்தானிய கடவுள் நம்பிக்கையில் ஒரு பெண் கடவுள் அழைக்கப் படும் இந்த செய்தி சில சமயம் உங்களுக்கு புதிய செய்தியாக இருக்கலாம்.

ISIS ஹோருசின் அன்னையாவார்.

ஹோருஸ் யார் என்று குழப்பமாக இருக்கிறதா?

ISIS பெண் கடவுளின் இராச்சியத்தில் இராசாயன ஆயுதங்கள்?

ISIS பெண் கடவுளின் குழந்தைகளின் கைகளில் ISIS இராச்சியத்தைக் காக்க இராசாயன ஆயுதங்கள் வழங்கப் பட்டுவிட்டன என்பதுதான் இப்போதைய லேட்டஸ்ட் செய்தி.

இதனை மக்கள் மயப்படுத்தும் இலுமினாட்டி ஊடகத்தின் கானோளியினை உங்களது ஆய்வுக்காக பதிவேற்றுகிறோம்.

லுமினாட்டிகளின் தந்திரத்துக்கு பலியாகி குவைத்தை ஆக்கிரமித்தார் நமது அரபு சிங்கம் சதாம் ஹுசைன்.

சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்தும் சாணக்கியத்தில் சில தருணங்களில் எதிர் அணி நகர்த்த வேண்டிய காயை நகர்த்தினாலும் வெற்றி அல்லது நகர்த்தாது தவிர்ந்தாலும் வெற்றி என்கிற தருணங்கள் கனிவதுண்டு.

அவ்வாறானதொரு பொண்ணான தருணத்தை சதாம் நாநாவின் குவைத் ஆக்கிரமிப்பில் சுதந்திர சிற்பிகள் செதுக்கிக் கொண்டார்கள்.

Tuesday, June 17, 2014

அளுத்கம, பேருவளை நகர்களின் வியாபார ஸ்தலங்களுக்கு புத்தன் சரணை.......





அளுத்கம முஸ்லிம் நகரின் மீது மேற்கொள்ளப் பட்ட மனித குற்றங்களுக்கு காரணமான ஞானசார தேரரின் நச்சு உரையின் முக்கிய கட்டங்களில் சிலதை தமிழ் மொழிப் படுத்தித் தருகிறோம்.

Saturday, May 17, 2014

அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன?


அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......

இந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்பி அதற்குரிய நமது பதிலைக் கேட்டிருந்தார்.

“குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா?

“மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்” சூரா23:5-6

Monday, March 10, 2014

நம்மை நாமே தொலைத்த தருணங்களில் ஒன்று.










“சிஆ பிரிவினர் ‘காபிர்’கள். அவர்கள் அனைவரும் கொல்லப் படவேண்டியவர்கள். சிஆக்களை கொலை செய்வது பாவமான செயல் அல்ல.அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் விருப்பமான செயலாகும்.”.......இவ்வாறான கருத்தியலில் வளர்த்தெடுக்கப் பட்ட சுன்னிப் பிரிவு முஸ்லிம் இளைஞன் ஒருவன் சிஆ பிரிவு முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யத் துணிவான்.

இந்தக் கருத்தை தமிழ் மொழி பேசும் முஸ்லிம் அறிஞர்களும் நம்பிக் கொண்டிருப்பதும், இதே போன்ற கருத்தியலில் தமது சிஷ்யர்களை வளர்த்தெடுப்பதும் அவதானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

இதே போன்றுதான் சிஆ பிரிவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் “சுன்னி முஸ்லிம்கள் அனைவரும் நபிக் குடும்பத்துக்கு எதிரானவர்கள்.ஆகவே, நபிக் குடும்பத்துக்கு எதிரானவர்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இவ்வாறு எதிராக இருக்கும் எதிரிகளை கொலை செய்வது பாபமான காரியம் இல்லை.அவர்கள் அனைவரும் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள்.” என்ற கருத்தியலில் அவர்களின் இளைஞர்கள் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நச்சுக் கருத்தியலின் பிறந்தகம் எது என்று நம்மால் சரிவரக் கூற முடியாதுள்ளது.

ஆனால்,இந்தக் கருத்தியலின் பயங்கரமான செயல் விளைவுகளை இன்று சிரியாவில் காண முடிகிறது.

தம்மை நபிக் குடும்பத்தவர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் சிரியா படையினரின் ஆதரவுக்கு களம் இறங்கி பகிரங்கமாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ ஆதரவு சிரியா விடுதலை முஜாஹிதீன்களுடன் பயங்கரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை சிரியா போராட்டக் களம் மிக முக்கியமானது.ஏனெனில், சிரியாவில் அவர்கள் தோல்வி கண்டால் அவர்களின் எதிரிகளின் அடுத்த இலக்கு ஈரானாகும். சிஆக்களின் செல்வாக்கு மிக்க ஈரானைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவர்கள் முதலில் சிரியாவில் தமதிருப்பை உறுதியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

உலகத்தின் அனைத்து அதிகாரங்களையும் தமது கைகளில் கொண்டு வருவதற்காக மிக சூட்சுமமான திட்டங்களை முன்னெடுக்கும் இலுமினாட்டி இரகசிய அமைப்பு முஸ்லிம்களின் இந்தப் பிரிவினையை தமக்கு ஏற்ற விதத்தில் பயன் படுத்தி இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது.

அதெப்படி?

இலுமினாட்டி அமைப்பினர் சாத்தானின் அதிகாரப் பிரிவினராகும்.அவர்கள் இறைவனின் வேதங்களுக்கு எதிரானவர்கள். மக்களின் மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவர்கள்.ஒழுக்கமான அனைத்து கலாச்சாரங்களுக்கும் எதிரானவர்கள். மனித நேயத்துக்கு எதிரானவர்கள்.

இவர்களின் முதல் எதிரிகள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.

அந்த முஸ்லிம் சுன்னி பிரிவினராக இருந்தாலும் சரி.....அல்லது சிஆ பிரிவு முஸ்லிமாக இருந்தாலும் சரி.

இந்நிலையில், நபிக் குடும்பத்தவர்களின் ஆதரவாளர்கள் என்று களம் இறங்கி இருக்கும் ஹிஸ்புல்லாக்களை சுன்னி முஸ்லிம்கள் கொலை செய்தாலும், நபிக் குடும்பத்தினரின் எதிரிகளாக ஹிஸ்புல்லாக்கள் கருதும் சுன்னி முஸ்லிம்களை ஹிஸ்புல்லாக்கள் கொலை செய்தாலும் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கே என்ற நிஜத்தை இவ்விரு பிரிவினரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இலுமினாட்டிகளுக்கு அது தெரியும்.

அதனை அவர்கள் பணத்துக்கும், பதவிக்கும் சோரம் போன இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்டு கச்சிதமாக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

நுணுக்கமான அந்த இரகசியத்தை அறிந்த இஸ்லாமிய அறிஞர்களும் மௌனித்துப் போய் அதனை தெளிவு படுத்தாத காரணத்தால் சாதாரண முஸ்லிம்களும் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நமது பல்கலைக்கழக மாணவர்களின் ஆழமான ஆய்வினை வேண்டி நிற்கும் தூக்கம் தொலைக்கும் நிஜமான இந்த செய்தியின் நிஜத்துக்கு நம்மிடம் ஒரு சாட்சி இருக்கிறது.

சிரியாவில் நேற்று முன் தினம் யப்ருத் என்ற இடத்தில் பயங்கரமாக மோதிக் கொண்ட ஹிஸ்புல்லாக்களினதும் சிரியா விடுதலை முஜாஹிதீன்களினதும் சமரினைக் காட்டும் இக்காணொளி நமது இப்பதிவுக்கு போதுமான சான்றாகும்.

தமிழ் பேசும் முஸ்லிம்களால் மட்டுமே முஸ்லிம் உலகில் இருக்கும் இந்த அபாக்கியமான ........துரதிர்ஷ்ட நிலையினை போக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

அதற்கு பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர்களது ஆதரவும், மனித நேயம் விரும்பும் ஏனைய மதத்தின் புத்திசாலி மாணவர்களினதும் ஆதரவு நமக்குத் தேவை.

ஏனெனில், தமிழ் பேசும் மக்களை மடையர்கள் என்று கருதும் அறிஞர்கள் அனைவரும் வடி கட்டிய மடையர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க உங்களது உதவி நமக்குத் தேவை.

அவ்வளவுதான்.

மனித நேயம் தொலைந்துப் போகும் இன்னொரு தருணம்.....






மனித நேயம் தொலைந்துப் போகும் இன்னொரு தருணம்.....

இலுமினாட்டி இரகசிய அமைப்பினர் வேதங்களுக்கும் அவை சொல்லும் போதனைகளுக்கும் எதிரானவர்கள்.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad