Friday, February 18, 2011

வெள்ளிக் கிழமை அன்று நபி (ஸல்) மீது ஸலவாத்து சொல்லுவதின் சிறப்பு


உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும்.  அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.  
அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது.  அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும்.  அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும்.  
எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்.  உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்?  நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, 
”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ்,   நூல் : அபூதாவூத் 883

No comments:

Post a Comment