
முதலாம் கலீபாவின் இரண்டு வருடமும் மூன்று மாதங்களும் மட்டுமே நீடித்த மிகக் குறுகிய இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாமிய வரலாற்றில் ஜீரணிக்க முடியாத பல கசப்பான நிகழ்ச்சிகள் அவசர அவசரமாக நடைபெற்று முடிந்துள்ளன.
அவற்றில் சகாத் கொடுக்க மறுத்தவர்களுடனான போராட்டம், இஸ்லாத்தை விட்டும் வேறு மதங்களுக்கு மாறிவிட்டவர்களுடனான போராட்டம், பொய் நபிமார்களுடனான போராட்டம் என்பன முக்கியமான பிரச்சினைகளாக எமக்கு சொல்லித் தரப் பட்டன.
ஆனால், முதலாம் கலீபா சந்தித்த இதே பிரச்சினைகளை நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்கிற உண்மை மிகவும் சூசகமாக எங்கள் கவனத்தை விட்டும் மறைக்கப் பட்டன.
அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு முரணாகவே முதலாம் கலீபா நடந்துக் கொண்டார் என்கிற விடயம் வெளியே தெரிந்து போகும் அபாயம் இந்த விடயங்களை பகிரங்கமாக தெரியப் படுத்துவதில் தொக்கியிருந்தது.
அந்த முரண்பாடுகளை இன்னொருமுறை விரிவாகக் கவனிப்போம்.
எமது இன்றைய ஆய்வில் யமாமா கொலைக் களத்தில் முஸைலமா என்ற பொய் நபியுடன் நடந்த யுத்தத்தில் 'மங்காத்தா' பாணியில் நடந்த சில சந்தேகமான விடயங்களை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
மிகக் குறுகிய காலத்தில் அல்லது சில மாதங்களில் தோற்றம் பெற்ற முசைலமாவின் ஆதரவாளர்கள் ஆச்சரியமாக பல லட்சங்களைக் கடந்து பெருகி இருக்கிறார்கள்.
இஸ்லாமிய தளபதி காலித் இப்னு வலீதை எதிர்கொண்ட அவனது படையினரின் தொகை சுமார் நாற்பதாயிரம்.
சட்டென்று தோற்றம் பெற்ற பொய் நபி முஸைலமாவை எதிர் கொண்ட முஸ்லிம் படையணியினரில் அல் குர் ஆனை மணனம் செய்த ஏழு நூறுக்கும் அதிகமான ஹாபிஸ்கள் பங்கேற்க நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.
முதலாம் கலீபாவும், அப்போதைய புதிய இஸ்லாமிய ஆட்சியின் நிர்வாகிகளும் புனித அல் குர் ஆனை மணனம் செய்த இந்த ஹாபிஸ்களைப் பாதுகாக்கவேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் நிலையில் இவர்களை முசைலமாவை எதிர் கொள்ள அனுப்பிய செய்கையில் சில சமயம் அவர்களே அறிந்திருக்காத பெரிய மர்மம் ஒளிந்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
முதன் முதலில் முசைலமாவை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட இஸ்லாமிய படையணியினரின் தளபதியாக இக்ரிமா இப்னு அபூ ஜஹால் நியமிக்கப் படுகிறார்.
இந்த தளபதி நியமனமே சந்தேகத்துக்குரியது.
ஏனெனில், இக்ரிமாவின் தந்தை அபூ ஜஹால் இஸ்லாத்தின் பரம எதிரி.
சுமார் பத்து வருடத்துக்கு முன்னர் நடைபெற்ற பதர் யுத்த களத்தில் வைத்து இக்ரிமாவின் கண்ணெதிரிலேயே அவரது தந்தை கொலை செய்யப் படுகிறார்.
இக்ரிமா உடனே தனது தந்தையை கொன்ற இளம் இஸ்லாமிய வீரரின் கழுத்தை நோக்கி அவரது வாளை வீச அது தவறி அந்த இளம் வீரரின் கையை தோல் பட்டையுடன் துண்டித்ததும், துண்டாடி தொங்கிய அந்தக் கையுடன் போர் செய்ய முடியாத அந்த இளம் வீரர் துண்டாடி தொங்கிக் கொண்டிருந்த தனது கையை அவரது காலால் மிதித்து பிய்த்து எறிந்தக் கதையும் பிரசித்தமான பத்ரில் அனைவர் வாயிலும் பிரசித்தமாக பேசப் பட்ட கதை.
மக்கா வெற்றியின் பின்னர் கஹ்பதுல்லாஹ்வில் தஞ்சம் புகுந்தாலும் கொலை செய்யப் படவேண்டும் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மரண தண்டனை விதித்தவர்களில் இந்த இக்ரிமாவும் ஒருவர்.
இது தவிர, எதிரிகளின் இரத்த நாளங்களை சில்லிட வைத்து பழிவாங்கும் பாதாள உலகின் செய்கைகளை அல்லது மாபியாவின் பழி வாங்கும் கொடூரங்களை நாம் அறிவதற்கு முன்னரேயே அன்றைய அராபியாவில் அது அந்த அராபியரின் இரத்தத்துடன் ஒன்றிய வாழ்வியல் கலாச்சாரமாக இருந்திருக்கிறது.
இத்தகைய கலாச்சாரத்தின் ஆளுமையின் காரணமாகவே நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மக்காவை வெற்றி கொள்ளும் வரை பனு உமையாக்களும், அவர்களது குறைஷி ஆதரவாளர்களும் இஸ்லாத்தைப் பூண்டோடு அழித்தொழிக்க பகீரதப் பிரயத்தனம் செய்துக் கொண்டிருந்த கதைகளை வரலாறு மறக்காமல் இன்றும் சொல்கிறது..
இந்த நிலையில், மக்கா வெற்றிக்குப் பின்னர் மரண தண்டனையில் இருந்து தப்புவதற்காக இஸ்லாத்துக்கு வந்த இக்ரிமாவின் உள்ளம் எந்தளவு இஸ்லாத்தின்பால் இசைந்திருக்கும் என்பதை யாராலுமே சொல்ல முடியாது.
இருந்தாலும், முதலாம் கலீபாவின் அவசரமான நியமனத்தின் பின்னர் அவசர அவசரமாக படு பயங்கரமான முசைலமாவை எதிர் கொள்ள சென்ற போர் வீரர்களுக்கு இந்த இக்ரிமா படைத் தளபதியாக நியமிக்கப் படுகிறார்.
இவரின் தலைமையில் அப்பாவி முஸ்லிம் வீரர்கள் பலியிட அழைத்து செல்லப் படும் பலிக் கடாக்கள் போல கொலைக் களத்துக்கு பலிக் கடாக்களாக அழைத்து செல்லப் படுகிறார்கள்.
சொல்லி வைத்தமாதிரி முசைலமாவை எதிர் கொண்ட இந்தப் படையணி படு தோல்வியை சந்திக்கிறது.
அழைத்து செல்லப் பட்ட முக்கியமான முஸ்லிம் வீரர்கள் அனைவரும் கொலை செய்யப் படுகிறார்கள்.
இக்ரிமாவுடன் இருந்த சில வீரர்கள் தப்பி விடுகிறார்கள்.
பலிக் கடாக்களை அழைத்துச் சென்ற தளபதி இக்ரிமா போர்க் களத்தில் காணாமல் போய் விடுகிறார்.
முதலாம் கலீபாவின் கட்டளையை இக்ரிமா மீறியதனாலேயே முஸ்லிம் வீரர்கள் படு கொலை செய்யப் பட்டதாகவும், இந்தத் தோல்வியினால் ஏற்பட்ட
வெட்கத்தின் காரணமாக அவர் சில காலம் ஒளிந்திருந்து பின்னாளில் முதலாம் கலீபாவைக் காண வந்ததாக இஸ்லாமிய வரலாறு சொல்லித் தரப் படுகிறது.
முசைலமாவின் படையினரின் கைகளினால் பரிதாபமாக தோற்றுப்போய் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்ட முஸ்லிம் வீரர்களின் பரிதாபமான இழப்புக்கு சொல்லப் படுகின்ற இந்தக் கதையை நம்ப முடியாதுள்ளது.
விடை இல்லாத இந்தக் கேள்வி இன்றுவரை எஞ்சி நிற்கிறது.
படையின் தளபதி இக்ரிமா எவ்வாறு காணாமல் போவார்?
இக்ரிமாவின் படையினரின் தோல்வியின் பின்னர், சுரஹ்பில் பின் ஹஸ்னா வின் தலைமையில் இன்னுமொரு படையணி முசைலமாவை எதிர்கொள்ள அனுப்பி வைக்கப் படுகிறது.
சுரஹ்பில் பின் ஹஸ்னாவும் பலிக் கடாக்களாக தயார் செய்யப் பட்ட முஸ்லிம் வீரர்களை அழைத்துச் செல்கிறார்.
ஆச்சரியம்.
சொல்லி வைத்தமாதிரி இக்ரிமாவைப் போல இதிலும் தளபதி தனது சில வீரர்களுடன் தப்பி விடுகிறார்.
ஏனைய முஸ்லிம் வீரர்கள் கொலை செய்யப் படுகிறார்கள்.
இதன் பின்னர்தான் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) காலித் இப்னு வலீதின் தலைமையில் மூன்றாவது படையினரைத் தயார் செய்து முசைலமாவை எதிர்கொள்ள அனுப்புகிறார்கள்.
இம்முறை முசைலமாவினால் வித்தியாசமான் ஒரு வியூகம் அமைக்கப் படுகிறது.
அவன் தனது நாட்பதினாயிரம் படையினரை அக்ரபா என்ற இடத்தில் தயாராக நிறுத்துகிறான்.
காலித் இப்னு வலீதின் தலைமையில் வந்த படையினர் எதுவித தயார் நிலையும் இன்றி அக்ரபாவை அடைகிறார்கள்.
முசைலமாவின் படையினரில் இருந்து நஹார் என்பவன் முன் வந்து தன்னை எதிர்க்கும் துணிவு முஸ்லிம்களுக்கு இருக்கிறதா என்று சவால் விடுகிறான்..
அவனது சவாலை ஸைத் இப்னு கத்தாப் (ரலி) ஏற்கிறார்.
சாதாரணமாக இஸ்லாமிய யுத்தங்கள் அனைத்திலும், எதிரிகள் இவ்வாறு சவால் விட்டால் முஸ்லிம் படையின் தளபதி ஒரு வீரரை தெரிவு செய்து முன்னால் அனுப்புவார்.
அல்லது அவர் அந்த சவாலை எதிர் கொள்வார்.
ஆனால், இங்கே தளபதி காலித் இப்னு வலீத் அப்படி செய்ததாக செய்தி இல்லை.
அதிசயமாக அவரைக் காணவில்லை.
உமர் (ரலி) அவர்களின் தம்பி ஸைத் (ரலி) தானாக நஹாரை எதிர்வு கொள்கிறார்.
தனி நபர் சண்டையில் ஸைத் (ரலி) எதிரி நஹாரைக் கொலை செய்துவிட சண்டை துவங்குகிறது.
மிகக் கடுமையான சண்டை.
முஸ்லிம்கள் சுற்றி வளைக்கப் பட்டு இலாவமாக கொல்லப் படுகிறார்கள்.
தயார் நிலையில் இருந்த முசைலமாவின் படையினரை எதிர்க்க முடியாமல் எது வித தயார் நிலையிலும் இல்லாத முஸ்லிம்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
பின்வாங்கும் முஸ்லிம்களை முசைலமாவின் படையினர் துரத்தி துரத்தி கொலை செய்கிறார்கள்.
முசைலமாவின் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத முஸ்லிம்கள் சிதறி ஓடத் துவங்குகிறார்கள்.
எங்கும் இரத்தமயம்.
காணும் இடம் தோறும் முஸ்லிம்களின் சடலங்கள்.
அல்லாஹ்வின் வாள் என்ற சிறப்புப் பெயருக்கு சொந்தமான தளபதி காலித் இப்னு வலீதைக் காணவில்லை.
எங்கு போனார், என்ன செய்தார் என்ற தடயங்களும் இல்லை.
திடீரென முசைலமாவின் படையினர் காலித் இப்னு வலீதின் கூடாரத்தை சுற்றி வளைக்கிறார்கள்.
சில வீரர்கள் முஸ்லிம்களின் இரத்தம் சொட்டு சொட்டு சொட்டென்று சொட்டுகிற வாட்களுடன் உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே தளபதி காலித் இப்னு வலீத் இல்லை.
ஆனால், அவரது மனைவி உம்மு தமீம் மட்டும் இருந்திருக்கிறார்.
உம்மு தமீமுக்கு காவலாக அவரது கூடாரத்தில் முசைலமாவின் போர் வீரரான முஜாஆ இருந்திருக்கிறார்.
முசைலமாவின் போர் வீரர் முஜாஆ எப்படி இந்தக் கூடாரத்துக்கு வந்தார்? முஸ்லிம் படை வீரர்களின் பாதுகாப்பில் உம்மு தமீம் ஏன் இருக்கவில்லை? என்கிற அதிர்ச்சியான கேள்விகளுக்கு ஆச்சரியமான கதையொன்று பதிலாக இஸ்லாமிய வரலாற்றில் சொல்லப் படுகிறது.
சிறு பிள்ளைத்தனமான அந்தக் கதை இப்படி ஒலிக்கிறது.
முஜாஆ என்பவர் காலித் இப்னு வலீதினால் சிறை பிடிக்கப் பட்ட முசைலமாவின் போர்க் கைதியாம்.
(ஒரேயொரு ஊரிலே ஒரு கிழவி வடை சுட்டுக் கொண்டு இருந்தாளாம்)
காலித் இப்னு வலீத் அவரது கூடாரத்தை விட்டும் வெளியே செல்லும் பொழுது முஜாஆவை அங்கே காவலுக்கு வைத்து விட்டுப் போனாராம்.
(அந்தக் கிழவி வடை விற்கப் போகும் பொழுது ,காக்கா ஒன்று ஒரு வடையைக் கொத்திக் கொண்டு பறந்ததாம்.)
காலித் இப்னு வலீதின் நன் நடத்தையின் காரணமாகவும், அவர் தன்னை நல்ல விதமாக நடத்தியதன் காரணமாகவும் முஜாஆ மிகவும் சாதுர்யமாக முசைலமாவின் படையினரிடம் இருந்து காலித் இப்னு வலீதின் மனைவியைக் காப்பாற்றினாராம்.
(அந்த வடையைத் தின்ன ஆசைப் பட்ட நரியொன்று அந்தக் காக்காவின் பின்னால் போனதாம்....)
முஸ்லிம்களின் தளபதிக்கு அவரது வீரர்களை விடவும் எதிரி வீரன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்திருக்கிறான்.
(காக்கா....காக்கா...)
அதுவும் தனது மனைவியையும், அவர் இருக்கும் கூடாரத்தையும் பாதுகாக்கும் விடயத்தில் அவரது படையினரை விட அவரது எதிரியின் கைதி நம்பிக்கைக்கு உரியவன்.....
(காக்கா....காக்கா...)
கூடாரத்தினுள் முசைலமாவின் போர் வீரர்கள் நுழைந்ததன் பின்னர் முஜா ஆவுடன் அவர்கள் ஏதோ கதைத்து இருக்கிறார்கள்.
(காக்கா...காக்கா..ஒரு பாட்டு பாடு என்று நரி சொன்னதாம்...)
முஜாஆ அந்தப் போர் வீரர்களிடம் இப்படி சொன்னாராம்...?
"சுதந்திரமான இந்தப் பெண்ணை கொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை..."
(காக்கா.......காக்கா.......காக்கா..............)
அவரின் பேச்சைக் கேட்டு உரோசப் பட்ட அந்த வீரர்கள் அதன் பின்னர் காலித் இப்னு வலீதின் மனைவியையும் அவரால் கைது செய்யப் பட்ட கைதியையும் அப்படியே 'அம்போ'வென்று விட்டு விட்டு வெளியே வந்து காலித் இப்னு வலீதின் கூடாரத்தை பிணைத்திருந்த கயிற்றை மட்டும் வெட்டி வீசி எறிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டி விட்டு போய் விட்டார்களாம்.
(காகம்...காக்கா காக்கா காக்கா என்று காக்கா பாட்டு பாடியதாம்.......)
(வடை நிலத்தில் விழுந்ததாம்.......)
(நரி வடையை எடுத்துக் கொண்டு ஓடியதாம்....)
ஆச்சரியமாக இல்லை?
முழு முஸ்லிம் உம்மாவினதும் காதில் பூ சுற்றும் இந்தக் கதையை நாம் நம்புவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.
ஒரு புறம் முஸ்லிம் ஹாபிஸ்கள் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப் படுகிறார்கள்.
மறு புறம் எதிரி தளபதியின் மனைவியை சிறை பிடிக்கும் அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்களாக அவரது கூடாரத்தின் கயிற்றை மாத்திரம் வெட்டி வீசி விட்டு முசைலமாவின் போர் வீரர்கள் போகிறார்கள்.
போகும் வழியில் முஸ்லிம்களையும் வெட்டிக் கொலை செய்தவர்களாகவே போகிறார்கள்.
முஸ்லிம்களின் தளபதி சைபுல்லாஹ்வைக் காணவில்லை?
தப்பிப் பிழைத்த முஸ்லிம் படை வீரர்கள் இந்தக் காட்சியைக் காண்கிறார்கள்.
என்ன நடந்தது என்று அவர்கள் ஊகித்து இருப்பார்கள் போலும்.
நடந்த நாடகங்களின் அந்தரங்கங்கள் அவர்களுக்குப் புரிந்துப் போயிருக்க வேண்டும்.
அங்கும் இங்கும் என்று சிதறிக் கிடந்த முஸ்லிம் வீரர்களை தாபித் இப்னு கைஸ் (ரலி௦) கூவி அழைத்து ஒன்று திரட்டுகிறார்.
சிதறி ஓடும் முஸ்லிம் படையினரை ஒன்று திரட்டும் சமயம் அவரது அழைப்பை அலட்சியம் செய்து முஸ்லிம் படையினரை பலவீனப் படுத்தி விட்டு ஓடுகின்ற சிலரை நோக்கி இவ்வாறு சத்தமிட்டார்.
"என்னருமைத் தோழர்களே!.இன்று நீங்கள் மோசமானதொரு பழக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.யா! அல்லாஹ்... இந்த முஸ்லிம்களின் செயலை விட்டும் நான் ஒதுங்கிக் கொண்டேன்."
அதன் பின்னர் அவர் தன்னை சூழ இருந்த தோழர்களைப் ஓரணியில் ஒன்று திரட்டுகிறார்.
ஏனெனில், வேவ் வேறாக பிரிந்திருந்து யுத்தம் செய்வது முஸ்லிம் படையினருக்கு பாதகமாகவும் முஸைலமாவின் படையினருக்கு சாதகமாவும் இருந்தது.
முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று படுத்தியதன் பின்னர் அவர்களை நோக்கிய தாபித் இப்னு கைஸ் (ரலி) "இங்கே பாருங்கள் தோழர்களே...இப்படித்தான் எதிரிகளைத் தாக்கவேண்டும் " என்று கூறியவராக முசைலமாவின் படையினருடன் உத்வேகமாக போரிடத் துவங்கினார்.
என்றாலும், அவரால் நீண்ட நேரம் யுத்தம் செய்ய முடியவில்லை.
அவரை சுற்றி வளைத்த முசைலமாவின் படையினர் மிக இலகுவாக அவரைக் கொலை செய்து விட்டனர்.
யார் இந்த தாபித் இப்னு கைஸ் (ரலி)?
இக்ரிமா முதலாவது முஸ்லிம் படையினரை முசைலமாவின் படையினரிடம் பலிக் கொடுத்து ஓடியதன் பின்னர் முதலாம் கலீபா மதீனாவில் இருந்த அன்சாரிகளில் சிலரை தாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் காலித் இப்னு வலீதுடன் இணைந்து முசைலமாவை எதிர்க்க அனுப்பி வைக்கிறார்கள்.
அந்த யுத்தத்தில் அல்லது கொலைக் களத்தில் பலியாவதற்கு முன்னர் தாபித் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிட்ட அவரது தோழர்களின் மோசமான பழக்கம் என்ன? அவர் அந்த தோழர்களின் செயலை விட்டும் ஒதுங்கிக் கொண்டதாக சொன்ன செயல் எது?
அப்போதைய முஸ்லிம் தளபதியின் மோசமான பழக்கத்தை விட்டும் அவரது செயலை விட்டும்தான் அவர் ஒதுங்கிக் கொண்டதாக அல்லாஹ்விடம் முறையிட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், இவரும் அன்சாரிகளை தலைமைத் தாங்கி அழைத்து சென்ற ஒரு தலைவராக இருக்கிறார்.
தாபித் இப்னு கைஸ் (ரலி) யுடைய சஹாதத்திற்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையை முன்னின்று நடாத்தியவர் ஸைத் இப்னு கத்தாப் (ரலி) யாகும்.
இக்ரிமாவின் தலைமையில் அழைத்து செல்லப் பட்ட முதலாவது முஸ்லிம் படையினர் காட்டிக் கொடுக்கப் பட்டு பலிக் கொடுத்ததன் பின்னர் முதலாம் கலீபா மதீனாவில் இருந்த முஹாஜிரீன்களின் சிலரை ஸைத் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் தலைமையில் காலித் இப்னு வலீதின் படையினருடன் அனுப்பி வைக்கிறார்கள்.
ஸைத் இப்னு கத்தாப் (ரலி) குற்றுயிராக மீதம் இருந்த முஸ்லிம் படையினரை நோக்கி "இந்தக் கூடாரங்கள் காலியான பின்னர் நீங்கள் எங்குதான் போக முடியும்?" என்று சொல்லி விட்டு தொடர்ந்தார்கள். "அல்லாஹ்வின் மீது சத்தியமாக!எதிரியை துரத்தியடித்து வெற்றிவாகை சூடும் வரையிலும் அல்லது அல்லாஹ்விடம் என்னை ஒப்படைக்கும் வரையிலும் இதற்கு மேல் நான் ஒரு வார்த்தையும் பேச மாட்டேன்.அதன் காரணமாக நான் அவனிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும்"
அல்லாஹ்விடம் மன்னிப்பை வேண்டி நிற்க அந்த கொலைக் களத்தில் அவர் என்ன தவறுதான் செய்தார்?
முஹாஜிர்களை அந்தக் கொலைக் களத்தை நோக்கி தவறாக கொண்டு வர இஸ்லாத்தின் எதிரிகள் தன்னை உபயோகித்துக் கொண்டதை அவர் உணர்ந்துக் கொண்டார்.
சொன்ன மாதிரியே அந்த மகானும் முசைலமாவின் படையினரால் சஹீதாக்கப் படுகிறார்.
சிதைந்துப் போன முஸ்லிம் படையினரின் தலைமைப் பொறுப்பை இப்பொழுது அபூ ஹுதைபா (ரலி) ஏற்கிறார்.
அவரும் சஹீதாக்கப் படுகிறார்.
அவருக்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையை பராஆ இப்னு மாலிக் (ரலி) ஏற்கிறார்.
இவர் நபி அவர்களின் உதவியாளர் அனஸ் (ரலி) அவர்களின் சகோதரராவார்.
இவரிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது.
யுத்தத்துக்கு தயாராகி விட்டால் இவரது உடம்பு ஆரூடம் சொல்பவர்கள் சாமி வந்தால் ஆடுவார்களே அது போல குலுங்கத் துவங்கிவிடும்.
பிறர் இவரைப் பிடித்து நிறுத்தும் அளவுக்கு அந்த உத்வேகத்தால் இவர் குலுங்கத் துவங்குவார்.
ஆக்ரோசமாக குலுங்கும் உடலுடன் அவர் தனது வீரர்களைப் பார்த்து "என்னருமை முஸ்லிம்களே! நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்!இங்கே பாருங்கள்!உங்கள் சகோதரன் பராஆ இப்னு மாலிக் நின்றுக் கொண்டிருக்கிறேன்.என்னுடன் விரைந்து வாருங்கள்!" என்று முஸ்லிம் வீரர்களை கூவி அழைத்தார்.
தளர்ந்திருந்த முஸ்லிம்கள் அவரை சூழ ஒன்று திரண்டார்கள்.
இப்பொழுது முஸ்லிம் படையணி பராஆ இப்னு மாலிக்கின் (ரலி) தலைமையில் முசைலமாவின் படையினரை எதிர்க்க துவங்கியது.
என்ன ஆச்சரியம்?
போரின் திசை மாறியது.
முஸ்லிம் வீரர்கள் உற்சாகமானார்கள்.
பயங்கரமாக போரிட்டார்கள்.
பராஆ இப்னு மாலிக் (ரலி) தலைமையில் புது வேகத்துடன் ஆக்ரோசமாக எழுந்து நின்ற முஸ்லிம் படையை எதிர் கொள்ள முடியாமல் முசைலமாவின் படையினர் ஓடத் துவங்கினார்கள்.
முஸ்லிம்கள் அவர்களை ஓட ஓட விரட்டினார்கள்.
முசைலமாவின் படையினர் ஆயிரக் கணக்கில் வெட்டி சாய்க்கப் பட்டார்கள்.
முஸ்லிம் படையின் அதன் தளபதிகளின் நயவஞ்சகத்தனமான செய்கையின் காரணமாக ஆரம்பத்தில் சுமார் ஆயிரத்து முன்னூறு முஸ்லிம் வீரர்கள் சஹீதானார்கள்.
அவர்களில் சுமார் எழுநூறு ஹாபிஸ்களும் அடங்குவார்கள்.
ஆனால், பராஆ இப்னு மாலிக்கின் (ரலி) தலைமையில் சீறிஎழுந்த முஸ்லிம் படையினரின் கைகளினால் முசைலமாவின் படையினரில் சுமார் இருபத்து இரண்டாயிரம் பேர்கள் வரை கொல்லப் பட்டார்கள்.
பயங்கரமான இத்தகைய எதிர் தாக்குதலை முசைலமாவோ அல்லது அவனது படையினரோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
உயிருக்குப் பயந்த முஸைலமா ஓடத் துவங்கினான்.
அவனுடன் அவனது படையினரும் ஓடத் துவங்கினார்கள்.
வேக வேகமாக பயந்தோடிய அவர்கள் ஹதீக்கா என்ற இடம் வரும் வரை தமது ஓட்டத்தை நிறுத்தவில்லை.
ஹதீக்கா என்ற அந்த இடத்தில் நிறைய கோட்டைகள் இருந்தன.
முசைலமா தனது படையினருடன் அங்கிருந்த ஒரு கோட்டையினுள் ஓடி ஒளிந்து அந்தக் கோட்டைக் கதவை மூடிக் கொண்டான்.
அவர்களை ஓட ஓட விரட்டி வந்த முஸ்லிம் படையினர் மூடிய கோட்டை வாசலைக் கண்டு திகைத்து நின்றார்கள்.
ஆக்ரோசமாக குலுங்கிக் கொண்டிருந்த பராஆ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அந்த கோட்டைக் கதவைக் கண்டு திகைக்கவில்லை.
அவர் கொஞ்சமும் குறையாத அதே ஆக்ரோசத்துடன் தனது வீரர்களைப் பார்த்து "தாழிடப் பட்ட இந்தக் கோட்டையினுள் என்னை தூக்கி எறியுங்கள்."என்று கட்டளையிட்டார்.
அவர்களுக்கு தலைமைத் தாங்கிய தளபதியை இவ்வாறான அக்னிப் பரீட்சையில் ஈடுபடுத்த அவர்கள் தயங்கினார்கள்.
அவர் ஆக்ரோஷமாக மீன்டும் கட்டளையிட்டார்.
அதன்படி பராஆ இப்னு மாலிக் (ரலி) யை முஸ்லிம் வீரர்கள் ஒன்றாக தூக்கி கோட்டையினுள் வீசி எறிந்தார்கள்.
கோட்டையினுள் வீசி எறியப் பட்ட பராஆ இப்னு மாலிக் (ரலி) யின் குலுங்குகின்ற ஆக்ரோஷமான தோற்றத்தைக் கண்டு கிளி பிடித்த முசைலமாவின் படையினர் ஓடி ஒளியத் துவங்கினார்கள்.
பராஆ இப்னு மாலிக் (ரலி) கோட்டைக் கதவைத் திறந்து விட்டார்.
முஸ்லிம் படையினர் உத்வேகத்துடன் கோட்டையினுள் நுழைந்தார்கள்.
உள்ளே நுழைந்த முஸ்லிம்கள் எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார்கள்.
இந்த சமரிலே பராஆ இப்னு மாலிக் (ரலி) கொல்லப் படுகிறார்.
பயங்கரமான யுத்தம் கோட்டைக்கு வெளியே நடை பெற்ற பொழுது கொல்லப் படாத பராஆ இப்னு மாலிக் (ரலி) எதிரிகள் தோற்று ஓடும் பொழுது கொல்லப் பட்டது ஆச்சரியமான செய்தியாகும்.
(இதைப் பற்றியெல்லாம் மிச்சம் யோசிக்கக் கூடாது....இவை எல்லாம் சஹாபாக்கள் சம்பந்தப் பட்ட சமாச்சாரம்...)
என்றாலும், அப்பொழுது முசைலமாவின் வீரர்கள் சரணாகதி அடையும் நிலையில் தளர்ந்துப் போய் இருந்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
பராஆ இப்னு மாலிக் (ரலி) யுடைய மரணத்தின் பின்னர் அல்லது கொலைக்குப் பின்னர் காணாமல் போயிருந்த முஸ்லிம்களின் தளபதி காலித் இப்னு வலீத் காட்சிக்கு வருகிறார்.
இப்பொழுது முஸ்லிம்களின் தளபதியாக அவர் கட்டளைகள் பிறப்பிக்கத் தொடங்குகிறார்.
அவர் ஒன்றாக ஓரணியில்உறுதியாக ஒன்று திரண்டிருந்த முஸ்லிம் வீரர்களை அவர்களுடைய கோத்திரங்களை இனம் பிரித்து அறியும் வகையில் வேவ் வேறாக பிரிக்கிறார்.
பின்னர், அந்தந்த கோத்திரங்களின் கொடியின் கீழே அவர்களை அணிவகுத்து யுத்தம் புரிய கட்டளையிடுகிறார்.
இது ஏன் என்ற கேள்விக்கு, பல்வீனமானவர்களையும் பலமானவர்களையும் இனம் பிரித்து அறிய இவ்வாறு அவர் செய்ததாக கதையளந்து இருக்கிறார்கள்.
நாம் நம்ப வில்லை.
நம்புகிறவர்களைப் பற்றி ஆட்சேபனையும் இல்லை.
எது எப்படி இருந்தாலும் ,தோற்று ஓடிக் கொண்டிருக்கும் முசைலமாவின் படையினரை சுற்றி வளைத்து தோற்கடித்து முசைலமாவையும் மிக இலகுவாக கைது செய்திருக்க முடியும்.
முசைலமாவின் கைது விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடையாக இருந்திருக்கும்.
போரின் சூழலும் அதற்கு ஏதுவாகவே இருந்தது.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
இக்கட்டத்தில் ,காலித் இப்னு வாலீதுடன் ஒன்றாக இருந்த வஸிஹ் தோற்றுப் போகும் முசைலமாவின் போரின் நாயகனாக மாறுகிறார்.
யார் இந்த வஸிஹ்?
வஸிஹ் உஹத் யுத்தகளத்தில் நபி அவர்களின் சிறிய தந்தையை தூர இருந்து ஈட்டியினால் குறி தவறாமல் வீசிக் கொண்டவர்.
நமது காலத்து யுத்த பாசையில் சொல்வதென்றால் எதிரி படை வீரர்களை கிலி கொள்ள வைக்கின்ற தூர இருந்து போட்டுத் தள்ளும் 'ஸ்னைப்பர்.'
இந்த யுத்தத்திலும் அவருக்கு வழங்கப் பட்ட கடமையை எதுவித குறைவும் வைக்காமலே அந்த ஸ்னைப்பர் செவ்வனே செய்து முடிக்கிறார்.
யமாமாவில் இருந்த ஸ்னைப்பர் வஸிஹ் தூர இருந்து குறி தவறாமல் ஈட்டியை எறிந்து முசைலமாவைக் கொன்று விடுகிறார்.
முசைலமாவின் மரணம் அவனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருகிறது.
அதே போல, முடிவில்லாத பல கேள்விகளின் ஆரம்பமாகவும் இருக்கிறது.
இந்த யமாமாவின் கொலைக்களக் கதையை கொஞ்சம் வித்தியாசமாக இப்படிப் பார்ப்போம்.
பாமரகளின் கேள்வியும் நியாயமானதுதான்.
வசிஹின் சினிமா பாணி கிளைமாக்ஸ் (முசைலமாவின் கொலை) செய்கை ஹாபிஸ்மார்களை கொலை செய்ததன் பிறகுதான் முஸைலமா கொலை செய்யப் படவேண்டும் என்று ஹாபிஸ் மார்களைக் கொல்ல திட்டம் தீட்டியவர்கள் திட்டம் தீட்டி இருப்பார்கள் போலும் என்ற சந்தேகமான கேள்வியில் ஒரு தவறும் இல்லாதது போல இருக்கிறது.
தளபதி காலித் இப்னு வலீத் தனது மனைவியைக் காப்பாற்றிய நன்றிக் கடனுக்காவது முசைலமாவைக் காப்பாற்றி இருக்க வேண்டுமே என்கிற கேள்விக்கும் இன்று வரை பதில் இல்லை.
அதை விடுங்கள்.
முசைலமாவின் படையினர் எதற்காக காலித் இப்னு வலீதின் மனைவியை விட்டு வைத்தார்கள் என்கிற கேள்விக்கும் சரியான பதில் இன்றுவரை இல்லை.
முஸ்லிம் வீரர்கள் மத்தியில் இருந்த தனது மனைவியின் கூடாரத்துக்கு முஸ்லிம்களின் தளபதி ஒரு எதிரியின் கைதியை எதற்காக பாதுகாவலுக்கு வைத்தார் என்பதும் இன்று வரை விடை இல்லாத கேள்வியாகவே எஞ்சி இருக்கிறது.
முஸ்லிம்களின் தளபதியாக இருந்த காலித் இப்னு வலீத் சில சமயம் முசைலமாவின் ஆளாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை விடை இல்லாத இந்தக் கேள்விகள் மனத்தில் எழுப்புவதைவிட்டும் ஏனோ தடுக்க முடியவில்லை.
அது மட்டுமன்றி, ஏனைய அனைத்து பொய் நபிமார்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தால் அப்போதைய இஸ்லாமிய அரசினால் பொது மன்னிப்பு வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்டிருப்பதாக இஸ்லாமிய வரலாற்றிலே காண்கிறோம்.
அப்படியிருக்க பொய் நபிமார்களுக்கு எதிரான யுத்தங்களும், தேவை இல்லாத முஸ்லிம்களின் உயிர் இழப்புக்களும் ஏன் என்ற கேள்வியும் நெஞ்சில் எழுவதைத் தடுக்க முடிய வில்லை.?
ஏனைய பொய் நபிமார்கள் கொல்லப் படாமல் முஸைலமா மட்டும் கொல்லப் பட்டதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டும் என்ற பாமரர்களின் அப்பாவித்தனமான கேள்வியும் நியாயமானதுதான்..
சில சமயம் யமாமா கொலைக் களத்தில் கொல்லப் பட்ட எழுநூறு ஹாபிஸ்களின் கொலைக்காண காரணம் வெளியே கசிந்து விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையாகவும் முசைலமாவின் படு கொலையை கருத முடியும் என்று சொல்வதிலும் எதுவித தவறும் தெரியவில்லை..
ஏனெனில், யமாமா கொலைக் களத்தில் மட்டும் எங்களது வீரத் தளபதிகளின் செய்கையில் புரிந்துக் கொள்ள முடியாத ஏதோ மர்மம் இருப்பதாக ஒரு நெருடல் இருந்துக் கொண்டே இருக்கிறது.
அதென்ன நெருடல்?
அக்கால யுத்த மரபின் படி தளபதி யுத்தகளத்தில் முன்னணியில் அல்லவா இருந்திருப்பார்?
ஆனால், அந்த யுத்தத்தின் பின்னர் உயிருடன் இருந்த எங்களது தளபதிகள் அப்படி இருக்கவில்லையே?
அவர்கள் எல்லோரும் யுத்த சமயத்தில் திடீரென காணாமல் போய் விடுகிறார்களே?
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை, ஒரு படையினரின் கொடி நிலத்தில் விழுந்து விட்டால் அந்தப் படை தோற்று விட்டதாக முடிவு செய்யப் பட்ட நிலை யுத்த மரபாக அனுஷ்டிக்கப் பட்டு வந்திருப்பதை நாம் அறிவோம்.
அதனால், கொடியை தாங்கி நிற்பவரை கொலை செய்து அந்தக் கொடியை நிலத்தில் விழ வைக்க வேண்டும் என்ற செய்கையை இலக்காகக் கொண்டே அனைத்து யுத்தங்களும் நடைபெற்றன.
அதனால், அப்போதைய யுத்த வீரர்கள் கொடியை நிலத்தில் விழ அனுமதிக்க மாட்டார்கள்.
தளபதியை விட்டும் விலகி ஓடவும் மாட்டார்கள்.
அக்கால யுத்த மரபில் ஒரு படையினரின் தளபதியும், அவர்களது கொடியும் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் முக்கிய சாட்சிகள்.
அதிசயமாக இங்கே கொடியும் இல்லை, தளபதியும் இல்லை.
ஆனால், முஸ்லிம் வீரர்கள் கொடூரமாக கொல்லப் பட்டது மட்டும் உண்மை.
அதன் காரணமாக அந்த இடத்தை மக்கள் - ஹதீக்கத்துள் மவ்த்- மரணப் பூங்கா என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கட்டளைப் பிரகாரம் மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்த இக்ரிமா மக்காவில் வைத்து தண்டனை அளிக்கப் பட்டு கொல்லப் பட்டிருந்தால், சிலவேளை முஸ்லிம்களுக்கு இத்தகைய இழப்புகளுக்கு இடம் இருந்திருக்காது.
இஸ்லாமிய வரலாறு, சஹாபாக்களின் சாணக்கியம் என்ற பெயரில் எங்களது காதுகளிலும் பூ சுற்றியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
உஹத் யுத்தகளத்தில் நபி அவர்களின் கட்டளைக்கு மாறு செய்தமையால் முஸ்லிம்கள் பேரிழப்புக்கு ஆளானார்கள்.
மக்கா வெற்றியின் பின்னர் இக்ரிமாவைக் கொலை செய்ய சொன்ன நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கட்டளையை முஸ்லிம்கள் அலட்சியப் படுத்தியதால் இங்கேயும் அதே கதை இன்னொரு முறை அரங்கேறுகிறது.
உஹதில் முஸ்லிம்களை பின் புறமாக வந்து தாக்கிய எதிரிகளின் படையினரை தலைமைத் தாங்கி வழி நடாத்திய நண்பர்கள் இருவர்.
ஒருவர் இக்ரிமா இப்னு அபூஜஹல்.
மற்றவர் காலித் இப்னு வலீத்.
மங்காத்தா....மங்காத்தா .......மங்காத்தா......!
'மங்காத்தா' மர்மம் புரிந்ததா?
முதலாம் கலீபாவும், அப்போதைய புதிய இஸ்லாமிய ஆட்சியின் நிர்வாகிகளும் புனித அல் குர் ஆனை மணனம் செய்த இந்த ஹாபிஸ்களைப் பாதுகாக்கவேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் நிலையில் இவர்களை முசைலமாவை எதிர் கொள்ள அனுப்பிய செய்கையில் சில சமயம் அவர்களே அறிந்திருக்காத பெரிய மர்மம் ஒளிந்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
முதன் முதலில் முசைலமாவை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட இஸ்லாமிய படையணியினரின் தளபதியாக இக்ரிமா இப்னு அபூ ஜஹால் நியமிக்கப் படுகிறார்.
இந்த தளபதி நியமனமே சந்தேகத்துக்குரியது.
ஏனெனில், இக்ரிமாவின் தந்தை அபூ ஜஹால் இஸ்லாத்தின் பரம எதிரி.
சுமார் பத்து வருடத்துக்கு முன்னர் நடைபெற்ற பதர் யுத்த களத்தில் வைத்து இக்ரிமாவின் கண்ணெதிரிலேயே அவரது தந்தை கொலை செய்யப் படுகிறார்.
இக்ரிமா உடனே தனது தந்தையை கொன்ற இளம் இஸ்லாமிய வீரரின் கழுத்தை நோக்கி அவரது வாளை வீச அது தவறி அந்த இளம் வீரரின் கையை தோல் பட்டையுடன் துண்டித்ததும், துண்டாடி தொங்கிய அந்தக் கையுடன் போர் செய்ய முடியாத அந்த இளம் வீரர் துண்டாடி தொங்கிக் கொண்டிருந்த தனது கையை அவரது காலால் மிதித்து பிய்த்து எறிந்தக் கதையும் பிரசித்தமான பத்ரில் அனைவர் வாயிலும் பிரசித்தமாக பேசப் பட்ட கதை.
மக்கா வெற்றியின் பின்னர் கஹ்பதுல்லாஹ்வில் தஞ்சம் புகுந்தாலும் கொலை செய்யப் படவேண்டும் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மரண தண்டனை விதித்தவர்களில் இந்த இக்ரிமாவும் ஒருவர்.
இது தவிர, எதிரிகளின் இரத்த நாளங்களை சில்லிட வைத்து பழிவாங்கும் பாதாள உலகின் செய்கைகளை அல்லது மாபியாவின் பழி வாங்கும் கொடூரங்களை நாம் அறிவதற்கு முன்னரேயே அன்றைய அராபியாவில் அது அந்த அராபியரின் இரத்தத்துடன் ஒன்றிய வாழ்வியல் கலாச்சாரமாக இருந்திருக்கிறது.
இத்தகைய கலாச்சாரத்தின் ஆளுமையின் காரணமாகவே நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மக்காவை வெற்றி கொள்ளும் வரை பனு உமையாக்களும், அவர்களது குறைஷி ஆதரவாளர்களும் இஸ்லாத்தைப் பூண்டோடு அழித்தொழிக்க பகீரதப் பிரயத்தனம் செய்துக் கொண்டிருந்த கதைகளை வரலாறு மறக்காமல் இன்றும் சொல்கிறது..
இந்த நிலையில், மக்கா வெற்றிக்குப் பின்னர் மரண தண்டனையில் இருந்து தப்புவதற்காக இஸ்லாத்துக்கு வந்த இக்ரிமாவின் உள்ளம் எந்தளவு இஸ்லாத்தின்பால் இசைந்திருக்கும் என்பதை யாராலுமே சொல்ல முடியாது.
இருந்தாலும், முதலாம் கலீபாவின் அவசரமான நியமனத்தின் பின்னர் அவசர அவசரமாக படு பயங்கரமான முசைலமாவை எதிர் கொள்ள சென்ற போர் வீரர்களுக்கு இந்த இக்ரிமா படைத் தளபதியாக நியமிக்கப் படுகிறார்.
இவரின் தலைமையில் அப்பாவி முஸ்லிம் வீரர்கள் பலியிட அழைத்து செல்லப் படும் பலிக் கடாக்கள் போல கொலைக் களத்துக்கு பலிக் கடாக்களாக அழைத்து செல்லப் படுகிறார்கள்.
சொல்லி வைத்தமாதிரி முசைலமாவை எதிர் கொண்ட இந்தப் படையணி படு தோல்வியை சந்திக்கிறது.
அழைத்து செல்லப் பட்ட முக்கியமான முஸ்லிம் வீரர்கள் அனைவரும் கொலை செய்யப் படுகிறார்கள்.
இக்ரிமாவுடன் இருந்த சில வீரர்கள் தப்பி விடுகிறார்கள்.
பலிக் கடாக்களை அழைத்துச் சென்ற தளபதி இக்ரிமா போர்க் களத்தில் காணாமல் போய் விடுகிறார்.
முதலாம் கலீபாவின் கட்டளையை இக்ரிமா மீறியதனாலேயே முஸ்லிம் வீரர்கள் படு கொலை செய்யப் பட்டதாகவும், இந்தத் தோல்வியினால் ஏற்பட்ட
வெட்கத்தின் காரணமாக அவர் சில காலம் ஒளிந்திருந்து பின்னாளில் முதலாம் கலீபாவைக் காண வந்ததாக இஸ்லாமிய வரலாறு சொல்லித் தரப் படுகிறது.
முசைலமாவின் படையினரின் கைகளினால் பரிதாபமாக தோற்றுப்போய் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்ட முஸ்லிம் வீரர்களின் பரிதாபமான இழப்புக்கு சொல்லப் படுகின்ற இந்தக் கதையை நம்ப முடியாதுள்ளது.
விடை இல்லாத இந்தக் கேள்வி இன்றுவரை எஞ்சி நிற்கிறது.
படையின் தளபதி இக்ரிமா எவ்வாறு காணாமல் போவார்?
இக்ரிமாவின் படையினரின் தோல்வியின் பின்னர், சுரஹ்பில் பின் ஹஸ்னா வின் தலைமையில் இன்னுமொரு படையணி முசைலமாவை எதிர்கொள்ள அனுப்பி வைக்கப் படுகிறது.
சுரஹ்பில் பின் ஹஸ்னாவும் பலிக் கடாக்களாக தயார் செய்யப் பட்ட முஸ்லிம் வீரர்களை அழைத்துச் செல்கிறார்.
ஆச்சரியம்.
சொல்லி வைத்தமாதிரி இக்ரிமாவைப் போல இதிலும் தளபதி தனது சில வீரர்களுடன் தப்பி விடுகிறார்.
ஏனைய முஸ்லிம் வீரர்கள் கொலை செய்யப் படுகிறார்கள்.
இதன் பின்னர்தான் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) காலித் இப்னு வலீதின் தலைமையில் மூன்றாவது படையினரைத் தயார் செய்து முசைலமாவை எதிர்கொள்ள அனுப்புகிறார்கள்.
இம்முறை முசைலமாவினால் வித்தியாசமான் ஒரு வியூகம் அமைக்கப் படுகிறது.
அவன் தனது நாட்பதினாயிரம் படையினரை அக்ரபா என்ற இடத்தில் தயாராக நிறுத்துகிறான்.
காலித் இப்னு வலீதின் தலைமையில் வந்த படையினர் எதுவித தயார் நிலையும் இன்றி அக்ரபாவை அடைகிறார்கள்.
அக்ரபாவில் வைத்து இரண்டு படையினரும் எதிரெதிரே சந்தித்துக் கொள்கிறார்கள்.
அவனது சவாலை ஸைத் இப்னு கத்தாப் (ரலி) ஏற்கிறார்.
சாதாரணமாக இஸ்லாமிய யுத்தங்கள் அனைத்திலும், எதிரிகள் இவ்வாறு சவால் விட்டால் முஸ்லிம் படையின் தளபதி ஒரு வீரரை தெரிவு செய்து முன்னால் அனுப்புவார்.
அல்லது அவர் அந்த சவாலை எதிர் கொள்வார்.
ஆனால், இங்கே தளபதி காலித் இப்னு வலீத் அப்படி செய்ததாக செய்தி இல்லை.
அதிசயமாக அவரைக் காணவில்லை.
உமர் (ரலி) அவர்களின் தம்பி ஸைத் (ரலி) தானாக நஹாரை எதிர்வு கொள்கிறார்.
தனி நபர் சண்டையில் ஸைத் (ரலி) எதிரி நஹாரைக் கொலை செய்துவிட சண்டை துவங்குகிறது.
மிகக் கடுமையான சண்டை.
முஸ்லிம்கள் சுற்றி வளைக்கப் பட்டு இலாவமாக கொல்லப் படுகிறார்கள்.
தயார் நிலையில் இருந்த முசைலமாவின் படையினரை எதிர்க்க முடியாமல் எது வித தயார் நிலையிலும் இல்லாத முஸ்லிம்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
பின்வாங்கும் முஸ்லிம்களை முசைலமாவின் படையினர் துரத்தி துரத்தி கொலை செய்கிறார்கள்.
முசைலமாவின் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத முஸ்லிம்கள் சிதறி ஓடத் துவங்குகிறார்கள்.
எங்கும் இரத்தமயம்.
காணும் இடம் தோறும் முஸ்லிம்களின் சடலங்கள்.
எங்கு போனார், என்ன செய்தார் என்ற தடயங்களும் இல்லை.
திடீரென முசைலமாவின் படையினர் காலித் இப்னு வலீதின் கூடாரத்தை சுற்றி வளைக்கிறார்கள்.
சில வீரர்கள் முஸ்லிம்களின் இரத்தம் சொட்டு சொட்டு சொட்டென்று சொட்டுகிற வாட்களுடன் உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே தளபதி காலித் இப்னு வலீத் இல்லை.
ஆனால், அவரது மனைவி உம்மு தமீம் மட்டும் இருந்திருக்கிறார்.
உம்மு தமீமுக்கு காவலாக அவரது கூடாரத்தில் முசைலமாவின் போர் வீரரான முஜாஆ இருந்திருக்கிறார்.
முசைலமாவின் போர் வீரர் முஜாஆ எப்படி இந்தக் கூடாரத்துக்கு வந்தார்? முஸ்லிம் படை வீரர்களின் பாதுகாப்பில் உம்மு தமீம் ஏன் இருக்கவில்லை? என்கிற அதிர்ச்சியான கேள்விகளுக்கு ஆச்சரியமான கதையொன்று பதிலாக இஸ்லாமிய வரலாற்றில் சொல்லப் படுகிறது.
சிறு பிள்ளைத்தனமான அந்தக் கதை இப்படி ஒலிக்கிறது.
முஜாஆ என்பவர் காலித் இப்னு வலீதினால் சிறை பிடிக்கப் பட்ட முசைலமாவின் போர்க் கைதியாம்.
(ஒரேயொரு ஊரிலே ஒரு கிழவி வடை சுட்டுக் கொண்டு இருந்தாளாம்)
காலித் இப்னு வலீத் அவரது கூடாரத்தை விட்டும் வெளியே செல்லும் பொழுது முஜாஆவை அங்கே காவலுக்கு வைத்து விட்டுப் போனாராம்.
(அந்தக் கிழவி வடை விற்கப் போகும் பொழுது ,காக்கா ஒன்று ஒரு வடையைக் கொத்திக் கொண்டு பறந்ததாம்.)
காலித் இப்னு வலீதின் நன் நடத்தையின் காரணமாகவும், அவர் தன்னை நல்ல விதமாக நடத்தியதன் காரணமாகவும் முஜாஆ மிகவும் சாதுர்யமாக முசைலமாவின் படையினரிடம் இருந்து காலித் இப்னு வலீதின் மனைவியைக் காப்பாற்றினாராம்.
(அந்த வடையைத் தின்ன ஆசைப் பட்ட நரியொன்று அந்தக் காக்காவின் பின்னால் போனதாம்....)
முஸ்லிம்களின் தளபதிக்கு அவரது வீரர்களை விடவும் எதிரி வீரன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்திருக்கிறான்.
(காக்கா....காக்கா...)
அதுவும் தனது மனைவியையும், அவர் இருக்கும் கூடாரத்தையும் பாதுகாக்கும் விடயத்தில் அவரது படையினரை விட அவரது எதிரியின் கைதி நம்பிக்கைக்கு உரியவன்.....
(காக்கா....காக்கா...)
கூடாரத்தினுள் முசைலமாவின் போர் வீரர்கள் நுழைந்ததன் பின்னர் முஜா ஆவுடன் அவர்கள் ஏதோ கதைத்து இருக்கிறார்கள்.
(காக்கா...காக்கா..ஒரு பாட்டு பாடு என்று நரி சொன்னதாம்...)
முஜாஆ அந்தப் போர் வீரர்களிடம் இப்படி சொன்னாராம்...?
"சுதந்திரமான இந்தப் பெண்ணை கொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை..."
(காக்கா.......காக்கா.......காக்கா..............)
அவரின் பேச்சைக் கேட்டு உரோசப் பட்ட அந்த வீரர்கள் அதன் பின்னர் காலித் இப்னு வலீதின் மனைவியையும் அவரால் கைது செய்யப் பட்ட கைதியையும் அப்படியே 'அம்போ'வென்று விட்டு விட்டு வெளியே வந்து காலித் இப்னு வலீதின் கூடாரத்தை பிணைத்திருந்த கயிற்றை மட்டும் வெட்டி வீசி எறிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டி விட்டு போய் விட்டார்களாம்.
(காகம்...காக்கா காக்கா காக்கா என்று காக்கா பாட்டு பாடியதாம்.......)
(வடை நிலத்தில் விழுந்ததாம்.......)
(நரி வடையை எடுத்துக் கொண்டு ஓடியதாம்....)
ஆச்சரியமாக இல்லை?
முழு முஸ்லிம் உம்மாவினதும் காதில் பூ சுற்றும் இந்தக் கதையை நாம் நம்புவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.
ஒரு புறம் முஸ்லிம் ஹாபிஸ்கள் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப் படுகிறார்கள்.
மறு புறம் எதிரி தளபதியின் மனைவியை சிறை பிடிக்கும் அருமையான சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்களாக அவரது கூடாரத்தின் கயிற்றை மாத்திரம் வெட்டி வீசி விட்டு முசைலமாவின் போர் வீரர்கள் போகிறார்கள்.
போகும் வழியில் முஸ்லிம்களையும் வெட்டிக் கொலை செய்தவர்களாகவே போகிறார்கள்.
முஸ்லிம்களின் தளபதி சைபுல்லாஹ்வைக் காணவில்லை?
தப்பிப் பிழைத்த முஸ்லிம் படை வீரர்கள் இந்தக் காட்சியைக் காண்கிறார்கள்.
என்ன நடந்தது என்று அவர்கள் ஊகித்து இருப்பார்கள் போலும்.
நடந்த நாடகங்களின் அந்தரங்கங்கள் அவர்களுக்குப் புரிந்துப் போயிருக்க வேண்டும்.
சிதறி ஓடும் முஸ்லிம் படையினரை ஒன்று திரட்டும் சமயம் அவரது அழைப்பை அலட்சியம் செய்து முஸ்லிம் படையினரை பலவீனப் படுத்தி விட்டு ஓடுகின்ற சிலரை நோக்கி இவ்வாறு சத்தமிட்டார்.
"என்னருமைத் தோழர்களே!.இன்று நீங்கள் மோசமானதொரு பழக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.யா! அல்லாஹ்... இந்த முஸ்லிம்களின் செயலை விட்டும் நான் ஒதுங்கிக் கொண்டேன்."
அதன் பின்னர் அவர் தன்னை சூழ இருந்த தோழர்களைப் ஓரணியில் ஒன்று திரட்டுகிறார்.
ஏனெனில், வேவ் வேறாக பிரிந்திருந்து யுத்தம் செய்வது முஸ்லிம் படையினருக்கு பாதகமாகவும் முஸைலமாவின் படையினருக்கு சாதகமாவும் இருந்தது.
முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று படுத்தியதன் பின்னர் அவர்களை நோக்கிய தாபித் இப்னு கைஸ் (ரலி) "இங்கே பாருங்கள் தோழர்களே...இப்படித்தான் எதிரிகளைத் தாக்கவேண்டும் " என்று கூறியவராக முசைலமாவின் படையினருடன் உத்வேகமாக போரிடத் துவங்கினார்.
என்றாலும், அவரால் நீண்ட நேரம் யுத்தம் செய்ய முடியவில்லை.
அவரை சுற்றி வளைத்த முசைலமாவின் படையினர் மிக இலகுவாக அவரைக் கொலை செய்து விட்டனர்.
யார் இந்த தாபித் இப்னு கைஸ் (ரலி)?
இக்ரிமா முதலாவது முஸ்லிம் படையினரை முசைலமாவின் படையினரிடம் பலிக் கொடுத்து ஓடியதன் பின்னர் முதலாம் கலீபா மதீனாவில் இருந்த அன்சாரிகளில் சிலரை தாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் காலித் இப்னு வலீதுடன் இணைந்து முசைலமாவை எதிர்க்க அனுப்பி வைக்கிறார்கள்.
அந்த யுத்தத்தில் அல்லது கொலைக் களத்தில் பலியாவதற்கு முன்னர் தாபித் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிட்ட அவரது தோழர்களின் மோசமான பழக்கம் என்ன? அவர் அந்த தோழர்களின் செயலை விட்டும் ஒதுங்கிக் கொண்டதாக சொன்ன செயல் எது?
அப்போதைய முஸ்லிம் தளபதியின் மோசமான பழக்கத்தை விட்டும் அவரது செயலை விட்டும்தான் அவர் ஒதுங்கிக் கொண்டதாக அல்லாஹ்விடம் முறையிட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், இவரும் அன்சாரிகளை தலைமைத் தாங்கி அழைத்து சென்ற ஒரு தலைவராக இருக்கிறார்.
தாபித் இப்னு கைஸ் (ரலி) யுடைய சஹாதத்திற்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையை முன்னின்று நடாத்தியவர் ஸைத் இப்னு கத்தாப் (ரலி) யாகும்.
இக்ரிமாவின் தலைமையில் அழைத்து செல்லப் பட்ட முதலாவது முஸ்லிம் படையினர் காட்டிக் கொடுக்கப் பட்டு பலிக் கொடுத்ததன் பின்னர் முதலாம் கலீபா மதீனாவில் இருந்த முஹாஜிரீன்களின் சிலரை ஸைத் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் தலைமையில் காலித் இப்னு வலீதின் படையினருடன் அனுப்பி வைக்கிறார்கள்.
ஸைத் இப்னு கத்தாப் (ரலி) குற்றுயிராக மீதம் இருந்த முஸ்லிம் படையினரை நோக்கி "இந்தக் கூடாரங்கள் காலியான பின்னர் நீங்கள் எங்குதான் போக முடியும்?" என்று சொல்லி விட்டு தொடர்ந்தார்கள். "அல்லாஹ்வின் மீது சத்தியமாக!எதிரியை துரத்தியடித்து வெற்றிவாகை சூடும் வரையிலும் அல்லது அல்லாஹ்விடம் என்னை ஒப்படைக்கும் வரையிலும் இதற்கு மேல் நான் ஒரு வார்த்தையும் பேச மாட்டேன்.அதன் காரணமாக நான் அவனிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும்"
அல்லாஹ்விடம் மன்னிப்பை வேண்டி நிற்க அந்த கொலைக் களத்தில் அவர் என்ன தவறுதான் செய்தார்?
முஹாஜிர்களை அந்தக் கொலைக் களத்தை நோக்கி தவறாக கொண்டு வர இஸ்லாத்தின் எதிரிகள் தன்னை உபயோகித்துக் கொண்டதை அவர் உணர்ந்துக் கொண்டார்.
சொன்ன மாதிரியே அந்த மகானும் முசைலமாவின் படையினரால் சஹீதாக்கப் படுகிறார்.
சிதைந்துப் போன முஸ்லிம் படையினரின் தலைமைப் பொறுப்பை இப்பொழுது அபூ ஹுதைபா (ரலி) ஏற்கிறார்.
அவரும் சஹீதாக்கப் படுகிறார்.
அவருக்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையை பராஆ இப்னு மாலிக் (ரலி) ஏற்கிறார்.
இவர் நபி அவர்களின் உதவியாளர் அனஸ் (ரலி) அவர்களின் சகோதரராவார்.
இவரிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது.
யுத்தத்துக்கு தயாராகி விட்டால் இவரது உடம்பு ஆரூடம் சொல்பவர்கள் சாமி வந்தால் ஆடுவார்களே அது போல குலுங்கத் துவங்கிவிடும்.
பிறர் இவரைப் பிடித்து நிறுத்தும் அளவுக்கு அந்த உத்வேகத்தால் இவர் குலுங்கத் துவங்குவார்.
ஆக்ரோசமாக குலுங்கும் உடலுடன் அவர் தனது வீரர்களைப் பார்த்து "என்னருமை முஸ்லிம்களே! நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்!இங்கே பாருங்கள்!உங்கள் சகோதரன் பராஆ இப்னு மாலிக் நின்றுக் கொண்டிருக்கிறேன்.என்னுடன் விரைந்து வாருங்கள்!" என்று முஸ்லிம் வீரர்களை கூவி அழைத்தார்.
தளர்ந்திருந்த முஸ்லிம்கள் அவரை சூழ ஒன்று திரண்டார்கள்.
இப்பொழுது முஸ்லிம் படையணி பராஆ இப்னு மாலிக்கின் (ரலி) தலைமையில் முசைலமாவின் படையினரை எதிர்க்க துவங்கியது.
என்ன ஆச்சரியம்?
போரின் திசை மாறியது.
முஸ்லிம் வீரர்கள் உற்சாகமானார்கள்.
பயங்கரமாக போரிட்டார்கள்.
பராஆ இப்னு மாலிக் (ரலி) தலைமையில் புது வேகத்துடன் ஆக்ரோசமாக எழுந்து நின்ற முஸ்லிம் படையை எதிர் கொள்ள முடியாமல் முசைலமாவின் படையினர் ஓடத் துவங்கினார்கள்.
முசைலமாவின் படையினர் ஆயிரக் கணக்கில் வெட்டி சாய்க்கப் பட்டார்கள்.
முஸ்லிம் படையின் அதன் தளபதிகளின் நயவஞ்சகத்தனமான செய்கையின் காரணமாக ஆரம்பத்தில் சுமார் ஆயிரத்து முன்னூறு முஸ்லிம் வீரர்கள் சஹீதானார்கள்.
அவர்களில் சுமார் எழுநூறு ஹாபிஸ்களும் அடங்குவார்கள்.
ஆனால், பராஆ இப்னு மாலிக்கின் (ரலி) தலைமையில் சீறிஎழுந்த முஸ்லிம் படையினரின் கைகளினால் முசைலமாவின் படையினரில் சுமார் இருபத்து இரண்டாயிரம் பேர்கள் வரை கொல்லப் பட்டார்கள்.
பயங்கரமான இத்தகைய எதிர் தாக்குதலை முசைலமாவோ அல்லது அவனது படையினரோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
உயிருக்குப் பயந்த முஸைலமா ஓடத் துவங்கினான்.
அவனுடன் அவனது படையினரும் ஓடத் துவங்கினார்கள்.
வேக வேகமாக பயந்தோடிய அவர்கள் ஹதீக்கா என்ற இடம் வரும் வரை தமது ஓட்டத்தை நிறுத்தவில்லை.
ஹதீக்கா என்ற அந்த இடத்தில் நிறைய கோட்டைகள் இருந்தன.
முசைலமா தனது படையினருடன் அங்கிருந்த ஒரு கோட்டையினுள் ஓடி ஒளிந்து அந்தக் கோட்டைக் கதவை மூடிக் கொண்டான்.
அவர்களை ஓட ஓட விரட்டி வந்த முஸ்லிம் படையினர் மூடிய கோட்டை வாசலைக் கண்டு திகைத்து நின்றார்கள்.
ஆக்ரோசமாக குலுங்கிக் கொண்டிருந்த பராஆ இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அந்த கோட்டைக் கதவைக் கண்டு திகைக்கவில்லை.
அவர் கொஞ்சமும் குறையாத அதே ஆக்ரோசத்துடன் தனது வீரர்களைப் பார்த்து "தாழிடப் பட்ட இந்தக் கோட்டையினுள் என்னை தூக்கி எறியுங்கள்."என்று கட்டளையிட்டார்.
அவர்களுக்கு தலைமைத் தாங்கிய தளபதியை இவ்வாறான அக்னிப் பரீட்சையில் ஈடுபடுத்த அவர்கள் தயங்கினார்கள்.
அவர் ஆக்ரோஷமாக மீன்டும் கட்டளையிட்டார்.
அதன்படி பராஆ இப்னு மாலிக் (ரலி) யை முஸ்லிம் வீரர்கள் ஒன்றாக தூக்கி கோட்டையினுள் வீசி எறிந்தார்கள்.
கோட்டையினுள் வீசி எறியப் பட்ட பராஆ இப்னு மாலிக் (ரலி) யின் குலுங்குகின்ற ஆக்ரோஷமான தோற்றத்தைக் கண்டு கிளி பிடித்த முசைலமாவின் படையினர் ஓடி ஒளியத் துவங்கினார்கள்.
பராஆ இப்னு மாலிக் (ரலி) கோட்டைக் கதவைத் திறந்து விட்டார்.
முஸ்லிம் படையினர் உத்வேகத்துடன் கோட்டையினுள் நுழைந்தார்கள்.
உள்ளே நுழைந்த முஸ்லிம்கள் எதிரிகளைத் தாக்க ஆரம்பித்தார்கள்.
இந்த சமரிலே பராஆ இப்னு மாலிக் (ரலி) கொல்லப் படுகிறார்.
பயங்கரமான யுத்தம் கோட்டைக்கு வெளியே நடை பெற்ற பொழுது கொல்லப் படாத பராஆ இப்னு மாலிக் (ரலி) எதிரிகள் தோற்று ஓடும் பொழுது கொல்லப் பட்டது ஆச்சரியமான செய்தியாகும்.
(இதைப் பற்றியெல்லாம் மிச்சம் யோசிக்கக் கூடாது....இவை எல்லாம் சஹாபாக்கள் சம்பந்தப் பட்ட சமாச்சாரம்...)
என்றாலும், அப்பொழுது முசைலமாவின் வீரர்கள் சரணாகதி அடையும் நிலையில் தளர்ந்துப் போய் இருந்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
பராஆ இப்னு மாலிக் (ரலி) யுடைய மரணத்தின் பின்னர் அல்லது கொலைக்குப் பின்னர் காணாமல் போயிருந்த முஸ்லிம்களின் தளபதி காலித் இப்னு வலீத் காட்சிக்கு வருகிறார்.
இப்பொழுது முஸ்லிம்களின் தளபதியாக அவர் கட்டளைகள் பிறப்பிக்கத் தொடங்குகிறார்.
அவர் ஒன்றாக ஓரணியில்உறுதியாக ஒன்று திரண்டிருந்த முஸ்லிம் வீரர்களை அவர்களுடைய கோத்திரங்களை இனம் பிரித்து அறியும் வகையில் வேவ் வேறாக பிரிக்கிறார்.
பின்னர், அந்தந்த கோத்திரங்களின் கொடியின் கீழே அவர்களை அணிவகுத்து யுத்தம் புரிய கட்டளையிடுகிறார்.
இது ஏன் என்ற கேள்விக்கு, பல்வீனமானவர்களையும் பலமானவர்களையும் இனம் பிரித்து அறிய இவ்வாறு அவர் செய்ததாக கதையளந்து இருக்கிறார்கள்.
நாம் நம்ப வில்லை.
நம்புகிறவர்களைப் பற்றி ஆட்சேபனையும் இல்லை.
எது எப்படி இருந்தாலும் ,தோற்று ஓடிக் கொண்டிருக்கும் முசைலமாவின் படையினரை சுற்றி வளைத்து தோற்கடித்து முசைலமாவையும் மிக இலகுவாக கைது செய்திருக்க முடியும்.
முசைலமாவின் கைது விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடையாக இருந்திருக்கும்.
போரின் சூழலும் அதற்கு ஏதுவாகவே இருந்தது.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
இக்கட்டத்தில் ,காலித் இப்னு வாலீதுடன் ஒன்றாக இருந்த வஸிஹ் தோற்றுப் போகும் முசைலமாவின் போரின் நாயகனாக மாறுகிறார்.
யார் இந்த வஸிஹ்?
வஸிஹ் உஹத் யுத்தகளத்தில் நபி அவர்களின் சிறிய தந்தையை தூர இருந்து ஈட்டியினால் குறி தவறாமல் வீசிக் கொண்டவர்.
நமது காலத்து யுத்த பாசையில் சொல்வதென்றால் எதிரி படை வீரர்களை கிலி கொள்ள வைக்கின்ற தூர இருந்து போட்டுத் தள்ளும் 'ஸ்னைப்பர்.'
யமாமாவில் இருந்த ஸ்னைப்பர் வஸிஹ் தூர இருந்து குறி தவறாமல் ஈட்டியை எறிந்து முசைலமாவைக் கொன்று விடுகிறார்.
முசைலமாவின் மரணம் அவனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருகிறது.
அதே போல, முடிவில்லாத பல கேள்விகளின் ஆரம்பமாகவும் இருக்கிறது.
இந்த யமாமாவின் கொலைக்களக் கதையை கொஞ்சம் வித்தியாசமாக இப்படிப் பார்ப்போம்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மக்காவில் சுமார் பதின் மூன்று வருடங்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தில் மிகக் கடுமையாக பாடு பட்ட விடயம் நாம் அறிந்ததே.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் ௦ அவர்களின் பதின் மூன்று வருட உழைப்பில் சுமார் நூற்றி ஐம்பது பேர்கள் வரையே இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள் என்கிற விடயமும் நாம் அறிந்ததே.
பதர் யுத்த களத்தில் முஸ்லிம் படையில் இருந்த முன்னூற்றி பதின் மூன்று யுத்த வீரர்கள் இதற்கு போதுமான சாட்சியாகும்.
முதலாம் கலீபாவின் காலத்தில் பிரமாண்டமாக தோற்றம் பெற்றதாக வரலாற்றில் இப்பொழுதும் சொல்லப் படுகின்ற முஸைலமா என்கிற பொய் நபியின் பிரச்சாரம் ஆச்சரியமாக நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் ௦அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே ஆரம்பமாகி இருக்கிறது.
ஆனால், நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அந்தப் பொய்யனுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்யவில்லை.
அறிவுரைகள் மூலமும், படிப்பினைகள் மூலமும் அவனுடைய பொய் வாதத்தை முறியடிக்க நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்
ஆனால், நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அந்தப் பொய்யனுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்யவில்லை.
அறிவுரைகள் மூலமும், படிப்பினைகள் மூலமும் அவனுடைய பொய் வாதத்தை முறியடிக்க நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்
அவர்கள் முயற்சிகள் செய்திருக்கிறார்கள்.
இதன் மூலம் முதலாம் கலீபா தலையைப் பிய்த்துக் கொண்டு அலறியடித்து முன்னெடுத்த பொய் நபிமார்களுக்கு எதிரான யுத்தப் பிரகடனம் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு நேர் முரணானது.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு மரணாக முதலாம் கலீபா மேற்கொண்ட இந்த செய்கையின் மூலமாக நிறைய சஹாபாக்கள் சஹீதானார்கள்.
யமாமா கொலைக் களத்தில் நிறைய ஹாபிஸ்மார்கள் பரிதாபமாக கொலை செய்யப் பட்டார்கள்.
முதலாம் கலீபா தனது ஆட்சியில் பிரகடனப் படுத்திய அனைத்து யுத்தப் பிரகடனங்களும் இந்த அல் குர்ஆன் வசனங்களுக்கு முரணானவைகளாகும் .
இந்த அல் குர்ஆன் ஆயத்துக்கள் அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் மறுக்கும் காபிர்கள் சம்பந்தமாகவும், அவர்களது இறையியல் நம்பிக்கை சம்பந்தமாகவும் இஸ்லாத்தினது தெளிவான நிலைப் பாட்டை விளக்குகின்றன.
இந்த நிலையில் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு பொய் நபியின் தோற்றம் ஒருபோதும் இஸ்லாத்தைப் பாதிக்கப் போவதில்லை.
யாராகிலும் ஒருவர் இஸ்லாத்தை மறுத்து வேறொரு மார்க்கத்தை தனது மார்க்கமாக தெரிவு செய்துக் கொண்டால் இஸ்லாத்துக்கு அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.
இந்தக் கருத்தியலின் அடிப்படையில் பொய் நபிக்கு எதிராக சரியான இஸ்லாமிய பிரச்சாரத்தைத்தான் முஸ்லிம்கள் முன் எடுக்க கடமைப் பட்டுள்ளார்களே தவிர, புனித அல் குர்ஆனை மணனம் செய்த ஹாபிஸ் மார்களைக் கொண்டு யுத்தம் செய்து இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது வலுக் கட்டாயமாக இஸ்லாத்தை திணிப்பதற்கு எதுவித அதிகாரமும் யாருக்கும் இல்லை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய வரலாற்றில் அதுதான் நடை பெற்றது.
போரின் இறுதியில் திடீரென தோன்றிய வஸிஹ் யுத்த ஆரம்பத்திலேயே முசைலமாவைக் தனது ஈட்டி வீசும் திறமையை உபயோகித்து கொலை செய்திருந்தால் முஸ்லிம்களுக்கு அல் குர்ஆனை மணனம் செய்த ஹாபிஸ்மார்களை இழக்கவேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டிருக்காதுதானே என்கிற பாமர முஸ்லிம்களின் அப்பாவித்தனமான கேள்விகளுக்கு இன்றுவரை எதுவித பதிலும் இல்லை.
இதன் மூலம் முதலாம் கலீபா தலையைப் பிய்த்துக் கொண்டு அலறியடித்து முன்னெடுத்த பொய் நபிமார்களுக்கு எதிரான யுத்தப் பிரகடனம் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு நேர் முரணானது.
நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவுக்கு மரணாக முதலாம் கலீபா மேற்கொண்ட இந்த செய்கையின் மூலமாக நிறைய சஹாபாக்கள் சஹீதானார்கள்.
யமாமா கொலைக் களத்தில் நிறைய ஹாபிஸ்மார்கள் பரிதாபமாக கொலை செய்யப் பட்டார்கள்.
இஸ்லாமியப் பிரச்சாரத்தில் பிறர் உரிமையைத் தாக்கும் மனப் பான்மைக்கு கிஞ்சித்தும் இடம் இல்லை.
அதே போல ஆக்கிரமிப்புக்கும், பலாத்காரத்துக்கும், பலவந்தமாக மத நம்பிக்கையை பிறர் மீது திணிப்பதற்கும் இஸ்லாத்தில் அணுவளவும் இடம் இல்லை.
புனித அல் குர்ஆனும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவும் இதனையே நமக்கு போதிக்கின்றன.
புனித அல் குர்ஆனும் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சுன்னாவும் இதனையே நமக்கு போதிக்கின்றன.
"மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை.வழிக் கேட்டிலிருந்து
நேர் வழி முற்றிலும் தெளிவாகி விட்டது.ஆகையால், எவர் சைத்தானை நிராகரித்து அல்லாஹ்வின்மீது
நம்பிக்கை கொள்கிறாரோ , அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை
நிச்சயமாக பற்றிக் கொண்டார்.மேலும், அல்லாஹ் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கிறான்."
(அல் குர்ஆன் : 2 : 256 )
"மேலும், உம இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவருமே
நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.எனவே, மனிதர்கள் யாவரும் நம்பிக்கை
கொண்டோராக ஆகி விட வேண்டும் என்று அவர்களை நீர் கட்டாயப் படுத்துகிறீரா?"
(அல் குர்ஆன் : 10 : 99 )
"( நபியே! ) சொல்லுவீராக ! "காபிர்களே! "
"உங்களுக்கு உங்களுடைய மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்"
(அல் குர்ஆன்: 109 : 1 வது ஆயத்தும் 6 வது ஆயத்தும் )
முதலாம் கலீபா தனது ஆட்சியில் பிரகடனப் படுத்திய அனைத்து யுத்தப் பிரகடனங்களும் இந்த அல் குர்ஆன் வசனங்களுக்கு முரணானவைகளாகும் .
இந்த அல் குர்ஆன் ஆயத்துக்கள் அல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் மறுக்கும் காபிர்கள் சம்பந்தமாகவும், அவர்களது இறையியல் நம்பிக்கை சம்பந்தமாகவும் இஸ்லாத்தினது தெளிவான நிலைப் பாட்டை விளக்குகின்றன.
புனித அல் குர் ஆனின் இந்த வசனங்களின் மூலம் மனிதனின் தெரிவு செய்யும் உரிமையை இஸ்லாம் கௌரவப் படுத்தும் அழகை கவனியுங்கள்.
படைத்த இறைவனை ஏற்றுக் கொள்வதும் அல்லது ஏற்றுக் கொல்லாமல் அவனை நிராகரிப்பதற்கும் மனிதனுக்கு பூரண சுதந்திரம் இஸ்லாத்தில் இருக்கிறது என்பதை இந்த ஆயத்துக்கள் எடுத்துரைக்கின்றன.
மனிதன் அல்லாஹ்வை ஏற்றால் என்ன? அல்லது ஏற்காவிட்டால் தான் என்ன?
ஏனெனில், மனிதனது சுதந்திரமான இந்த தெரிவில் இலாபம் அடைவதும் அல்லது நட்டம் அடைவதும் மனிதனே தவிர , அவனைப் படைத்த இறைவனல்ல.
அல் குர்ஆனின் போதனையும் அதற்கு விளக்கமாக அமைந்த நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்
அவர்களின் வாழ்க்கை வழிமுறையும் நமக்கு அதனையே போதிக்கின்றன.
இந்த நிலையில் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு பொய் நபியின் தோற்றம் ஒருபோதும் இஸ்லாத்தைப் பாதிக்கப் போவதில்லை.
யாராகிலும் ஒருவர் இஸ்லாத்தை மறுத்து வேறொரு மார்க்கத்தை தனது மார்க்கமாக தெரிவு செய்துக் கொண்டால் இஸ்லாத்துக்கு அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.
இந்தக் கருத்தியலின் அடிப்படையில் பொய் நபிக்கு எதிராக சரியான இஸ்லாமிய பிரச்சாரத்தைத்தான் முஸ்லிம்கள் முன் எடுக்க கடமைப் பட்டுள்ளார்களே தவிர, புனித அல் குர்ஆனை மணனம் செய்த ஹாபிஸ் மார்களைக் கொண்டு யுத்தம் செய்து இஸ்லாத்தை ஏற்காத மக்கள் மீது வலுக் கட்டாயமாக இஸ்லாத்தை திணிப்பதற்கு எதுவித அதிகாரமும் யாருக்கும் இல்லை.
இது தவிர, உலகத்தில் நடைபெற்று முடிந்த எந்தவொரு யுத்த களத்திலும் மத போதகர்கள் அல்லது மத குருமார்கள் அல்லது அந்த மதத்தை பாதுகாப்பவர்களை போர் வீரர்களாக முன்னிலைப் படுத்தி இருப்பதைக் காண முடிய வில்லை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய வரலாற்றில் அதுதான் நடை பெற்றது.
போரின் இறுதியில் திடீரென தோன்றிய வஸிஹ் யுத்த ஆரம்பத்திலேயே முசைலமாவைக் தனது ஈட்டி வீசும் திறமையை உபயோகித்து கொலை செய்திருந்தால் முஸ்லிம்களுக்கு அல் குர்ஆனை மணனம் செய்த ஹாபிஸ்மார்களை இழக்கவேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டிருக்காதுதானே என்கிற பாமர முஸ்லிம்களின் அப்பாவித்தனமான கேள்விகளுக்கு இன்றுவரை எதுவித பதிலும் இல்லை.
பாமரகளின் கேள்வியும் நியாயமானதுதான்.
வசிஹின் சினிமா பாணி கிளைமாக்ஸ் (முசைலமாவின் கொலை) செய்கை ஹாபிஸ்மார்களை கொலை செய்ததன் பிறகுதான் முஸைலமா கொலை செய்யப் படவேண்டும் என்று ஹாபிஸ் மார்களைக் கொல்ல திட்டம் தீட்டியவர்கள் திட்டம் தீட்டி இருப்பார்கள் போலும் என்ற சந்தேகமான கேள்வியில் ஒரு தவறும் இல்லாதது போல இருக்கிறது.
தளபதி காலித் இப்னு வலீத் தனது மனைவியைக் காப்பாற்றிய நன்றிக் கடனுக்காவது முசைலமாவைக் காப்பாற்றி இருக்க வேண்டுமே என்கிற கேள்விக்கும் இன்று வரை பதில் இல்லை.
அதை விடுங்கள்.
முசைலமாவின் படையினர் எதற்காக காலித் இப்னு வலீதின் மனைவியை விட்டு வைத்தார்கள் என்கிற கேள்விக்கும் சரியான பதில் இன்றுவரை இல்லை.
முஸ்லிம் வீரர்கள் மத்தியில் இருந்த தனது மனைவியின் கூடாரத்துக்கு முஸ்லிம்களின் தளபதி ஒரு எதிரியின் கைதியை எதற்காக பாதுகாவலுக்கு வைத்தார் என்பதும் இன்று வரை விடை இல்லாத கேள்வியாகவே எஞ்சி இருக்கிறது.
முஸ்லிம்களின் தளபதியாக இருந்த காலித் இப்னு வலீத் சில சமயம் முசைலமாவின் ஆளாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை விடை இல்லாத இந்தக் கேள்விகள் மனத்தில் எழுப்புவதைவிட்டும் ஏனோ தடுக்க முடியவில்லை.
அது மட்டுமன்றி, ஏனைய அனைத்து பொய் நபிமார்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தால் அப்போதைய இஸ்லாமிய அரசினால் பொது மன்னிப்பு வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்டிருப்பதாக இஸ்லாமிய வரலாற்றிலே காண்கிறோம்.
அப்படியிருக்க பொய் நபிமார்களுக்கு எதிரான யுத்தங்களும், தேவை இல்லாத முஸ்லிம்களின் உயிர் இழப்புக்களும் ஏன் என்ற கேள்வியும் நெஞ்சில் எழுவதைத் தடுக்க முடிய வில்லை.?
ஏனைய பொய் நபிமார்கள் கொல்லப் படாமல் முஸைலமா மட்டும் கொல்லப் பட்டதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டும் என்ற பாமரர்களின் அப்பாவித்தனமான கேள்வியும் நியாயமானதுதான்..
சில சமயம் யமாமா கொலைக் களத்தில் கொல்லப் பட்ட எழுநூறு ஹாபிஸ்களின் கொலைக்காண காரணம் வெளியே கசிந்து விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையாகவும் முசைலமாவின் படு கொலையை கருத முடியும் என்று சொல்வதிலும் எதுவித தவறும் தெரியவில்லை..
ஏனெனில், யமாமா கொலைக் களத்தில் மட்டும் எங்களது வீரத் தளபதிகளின் செய்கையில் புரிந்துக் கொள்ள முடியாத ஏதோ மர்மம் இருப்பதாக ஒரு நெருடல் இருந்துக் கொண்டே இருக்கிறது.
அதென்ன நெருடல்?
அக்கால யுத்த மரபின் படி தளபதி யுத்தகளத்தில் முன்னணியில் அல்லவா இருந்திருப்பார்?
ஆனால், அந்த யுத்தத்தின் பின்னர் உயிருடன் இருந்த எங்களது தளபதிகள் அப்படி இருக்கவில்லையே?
அவர்கள் எல்லோரும் யுத்த சமயத்தில் திடீரென காணாமல் போய் விடுகிறார்களே?
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை, ஒரு படையினரின் கொடி நிலத்தில் விழுந்து விட்டால் அந்தப் படை தோற்று விட்டதாக முடிவு செய்யப் பட்ட நிலை யுத்த மரபாக அனுஷ்டிக்கப் பட்டு வந்திருப்பதை நாம் அறிவோம்.
அதனால், கொடியை தாங்கி நிற்பவரை கொலை செய்து அந்தக் கொடியை நிலத்தில் விழ வைக்க வேண்டும் என்ற செய்கையை இலக்காகக் கொண்டே அனைத்து யுத்தங்களும் நடைபெற்றன.
அதனால், அப்போதைய யுத்த வீரர்கள் கொடியை நிலத்தில் விழ அனுமதிக்க மாட்டார்கள்.
தளபதியை விட்டும் விலகி ஓடவும் மாட்டார்கள்.
அக்கால யுத்த மரபில் ஒரு படையினரின் தளபதியும், அவர்களது கொடியும் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் முக்கிய சாட்சிகள்.
அதிசயமாக இங்கே கொடியும் இல்லை, தளபதியும் இல்லை.
ஆனால், முஸ்லிம் வீரர்கள் கொடூரமாக கொல்லப் பட்டது மட்டும் உண்மை.
அதன் காரணமாக அந்த இடத்தை மக்கள் - ஹதீக்கத்துள் மவ்த்- மரணப் பூங்கா என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
இஸ்லாமிய வரலாறு, சஹாபாக்களின் சாணக்கியம் என்ற பெயரில் எங்களது காதுகளிலும் பூ சுற்றியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
மக்கா வெற்றியின் பின்னர் இக்ரிமாவைக் கொலை செய்ய சொன்ன நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கட்டளையை முஸ்லிம்கள் அலட்சியப் படுத்தியதால் இங்கேயும் அதே கதை இன்னொரு முறை அரங்கேறுகிறது.
உஹதில் முஸ்லிம்களை பின் புறமாக வந்து தாக்கிய எதிரிகளின் படையினரை தலைமைத் தாங்கி வழி நடாத்திய நண்பர்கள் இருவர்.
ஒருவர் இக்ரிமா இப்னு அபூஜஹல்.
மற்றவர் காலித் இப்னு வலீத்.
மங்காத்தா....மங்காத்தா .......மங்காத்தா......!
'மங்காத்தா' மர்மம் புரிந்ததா?
No comments:
Post a Comment