அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, November 28, 2012

புதியதொரு விதி செய்வோம்....?










அல்லாஹ் மனித குலத்துக்கு அவனை அறிமுகப் படுத்துவதற்காக இவ்வுலகிற்கு அனுப்பிய அனைத்து தீர்க்கதரிசிகளும்,தூதர்களும் அநீதத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள்.

இறைத் தூதர்கள் அனைவரும் நீதிக்காக,நியாயத்திற்காக,நேர்மைக்காக போராடியவர்கள்.

அவர்களின் செயல்களில் பிறந்த விளைவுகளில் தனி மனித சுதந்திரமும்,மனித உரிமையும் கௌரவமாக மதித்துப் பேணப் பட்டன.

அவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும்,திருந்த மறுக்கும் தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இறுதித் தூதர் முஹம்மது சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்குப் பின்னர் இறைத் தூதர்கள் மனித குலத்துக்கு நேர் வழிக்காட்ட வரப்போவதில்லை.

நபிகளார் சுமந்த அந்த மா பெரும் பொறுப்பு முஸ்லிம்களிடம் ஒப்புவிக்கப் பட்டு விட்டது.

அதனைத்தான் நாம் நபிகளாரின் ஸுன்னா என்று கூறுகிறோம்.

Tuesday, November 27, 2012

புரிந்தும் புரியாமலும்..............??



எம்மை எப்பொழுதும் உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் நண்பர் அன்புராஜுக்கு நன்றி.........

நண்பர் அன்புராஜின் ஒரு பின்னூட்டம் இன்று இப்படி ஒலித்தது.......

"--------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா? 

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான்.
It is always with Business man- if the customer had asked for Green Ginger,which was out of stock, the Business man would not say that Green Ginger is not available, But would answer that Dry Ginger is available.similarly you are talking. I ask if Koran permits sex with war captives,your answer should be yes/No/ Yes it is out of date/ .Allah did not reveal that verse. Mr.Mohammed,in keeping with Arabiabian Local custom ie Karimath, he liked to have sex with many women.So he falsely inserted that verse in the Arabian religious Book- Koran.Instead you are saying --------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா? 

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான். 

இதற்கு அஹ்லுல்பைத் தமிழ் தளத்தின் பதில் என்ன?

Monday, October 1, 2012

அமைதியின் இருப்பிடம்...........



சென்றவாரத்தில் ஒரு நாள் ஜன சந்தடி மிக்க கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவிலே நான் நடந்துப் போய்க்கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசையைப் பார்த்தால் சுமார் மூன்று வயது நிரம்பிய குழந்தையொன்று தனித்து தவறிப் போன தனது தாயை அல்லது தந்தையைத் தேடி அழுதுக் கொண்டிருப்பது தெரிந்தது.

கணப் பொழுதில் அந்தக் குழந்தையைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம் கூடிவிட்டது.

குழந்தையின் முகத்தில் கலவரம் கலந்தப் பயம் தெரிந்தது.

தன்னைச் சுற்றி திடீரென கூட்டம் கூடியதைக் கண்டவுடன் குழந்தையின் அழுகை சத்தம் இன்னும் அதிகரித்தது.

Saturday, September 1, 2012

முடிவில் தொடங்கிய ஆரம்பம்..........சரியா?..........தவறா?



மௌலவி பாஸ்லான்,
இலக்கம் :34,
பாகீர் மாகார் மாவத்த,
பேருவலை.

அதி கௌரவத்துக்குரிய மௌலவி பஸ்லான் அவர்களுக்கு...,

 2012 ஆம் வருட மே மாதம் 27 ஆம் திகதி நாம் எழுதி வெளியிட்டு வைத்த "அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் -ஆமினா -நரகவாதிகளா? " நூலில் நிறைய பிழைகள் இருப்பதாக 2012 ஆகஸ்ட் நோன்பு மாத நடுப்பகுதி நள்ளிரவு நீங்கள் எங்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கூறினீர்கள்.

அன்றிரவே நாம் உங்களிடம் அந்தத் தவறுகளை நமக்கு எழுதி அனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டியிருந்தோம்.

நீங்களும் உடனே எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டீர்கள்.

Wednesday, August 22, 2012

மூமின்களால் தூக்கி எறியப்பட்ட - பனூ உமையாக்களின் -இலங்கை- வதிவிடப் பிரதிநிதி..........அடையாளம் காணுங்கள்........

                                 மூமின்களின் ஜென்ம விரோதி அபூ சுபியான்.........

நமது எழுத்தாள நண்பர் ஒருவர் ஒருமுறை நம்மிடம் இப்படி கேட்டார்.

"கெட்டவனுக்கும் கேவலமானவனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"

"என்ன?" என்று நாம் திருப்பிக் கேட்டோம்.

"ஒருவன் குடித்துவிட்டு வந்து அவனது மனைவி மக்களுக்கு தொல்லைக் கொடுக்கிறான்." என்ற அவர் தொடர்ந்து "அவனால் அண்டை அயலவர்களுக்கு எதுவித தொல்லையும் இல்லை.அப்படி இருக்கின்றவன் கெட்டவன்"

நாம் கேட்டோம் "அப்படியென்றால் கேவலமானவன் என்றால்................"

"ஒருவன் குடித்து விட்டு வந்து தனது வீட்டாருக்கு எதுவித தொல்லையும் கொடுக்காமல் தனது அண்டை அயலாருக்கு தொல்லைக் கொடுக்கிறானே அப்படிப் பட்டவன் கேவலமானவன்" என்றவர் தொடர்ந்து "கெட்டவனால் மற்றவர்களுக்குத் தொல்லை இல்லை.கேவலமானவனால் எல்லோருக்கும் தொல்லை" என்றார்.

கெட்டவன்..........கேவலமானவன் சம்பந்தமாக குடிகாரனை முன்னிறுத்தி அவர் சொன்ன உதாரணத்தை விஞ்சும் விதமாக வித்தியாசமான அனுபவமொன்றை அண்மையில்  சந்தித்தேன்.

அதனை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

கெட்டவனுக்கும் கேவலமானவனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் உங்களுக்கும் புரிந்துப் போகும்.

இவ்வருட நோன்பு மாதத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடு நிசி பன்னிரெண்டு மணி.........

வீடு மெலிதான இரவு விளக்கு ஒளியில் அமைதியில் நிசப்தித்து இருக்க...............

வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் சஹர் நேர விழிப்பைக் கருத்தில் கொண்டு தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்க.............

அமைதியைக் கிழித்துக் கொண்டு என்னுடைய கையடக்க செல் போன் அலறி  எனது மனைவியை பதறிக் கொண்டு விழிக்க வைத்திருக்கிறது.

தட்டுத் தடுமாறி அவர் செல் போனை எடுத்து "ஹலோ" சொல்ல.............

Sunday, July 29, 2012

அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...????






இஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு சென்ற பெருமை நண்பர்    அன்புராஜுக்கே சேரும்.


நண்பர் அன்புராஜின் பின்னூட்டமொன்று முஸ்லிம்களைப் பார்த்து இப்படி சவால் விட்டது.


குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். 
உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது ...............



நாம் வழமைப் போல நாம் தினமும் சந்திக்கின்ற சில உலமாக்களிடம் இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாகவும், அடிமைப் பெண்கள் சம்பந்தமாக அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்கள் சம்பந்தமாகவும் கேள்விக் கணைகளை தொடுத்தோம்.

Saturday, July 28, 2012

அன்புராஜுக்கு பதில் சொல்லிவிட்ட இமாம் அலி........


....

மறுமை நாளின் அவசியம் சம்பந்தமாக அல் குர்ஆன் ஆதாரங்களையும், மனித செயல் விளைவுகளின் எதிர் விளைவுகளையும் முன்நிறுத்தி நாம் சொன்ன பதிலில் நமது நண்பர் அன்புராஜ் திருப்திக் கொள்ளவில்லை என்பதை அவரது பின்னூட்டம் நமக்கு தெளிவு படுத்தியது.

அவர் சொல்லுவது சரி.

அல் குர்ஆன் ஆதாரங்கள் அவருக்கு அவசியம் இல்லை.

அது அல் குர்ஆனை இறைவனின் திரு வேதம் என்று நம்புபவர்களின் பிரச்சினை.

ஒரு இந்து சகோதரருக்கு அல்லது பௌத்த சகோதரருக்கு அல் குர்ஆனின்  ஆதாரங்கள் அவசியம் இல்லை.

இந் நிலையில் அதென்ன மறுமை நாள் என்றொரு நாளின் அவசியம் சம்பந்தமாக நாம் நம்பிக்கை வைக்க மறுக்கும் அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்களை எடுத்து சொல்லி நழுவுகிறீர்கள் .......என்ற தோரணையில் அல்லது அது போன்றதொரு கருத்தை அவரது பின்னூட்டம் முன்வைத்தது.

தர்க்கவியலாக மறுமையின் அவசியத்தை அல்லது அந்த நம்பிக்கையின் அழகான செயல் விளைவுகளை நமது பதிலில் அவர் எதிர்பார்த்திருக்கிறார்.

அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்ற சிந்தனையில் இமாம் அலியின் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது.

அந்தக் கதை இதுதான்.

இமாம் அலியுடைய காலத்தில் பிரபலமான ஒரு நாத்திகன் வாழ்ந்திருக்கிறான்.

அவன் இறைவனை நம்பவில்லை.

இறைவனை விசுவாசிக்கும் மக்களைக் கண்டால் அவனது வாதத் திறமையால் அவன் அவர்களின் இறை விசுவாசத்தைக் கேள்விக் குறியாககி விடுவான்.

இறைவனை விசுவாசிக்கும் பாமரர்கள் அவனைக் கண்டால் 'நமக்கெதற்கு வீண் வம்பு' என்று ஒளிந்து விடுவார்கள்.


அந்த நாத்திகனுடன் இறைவனின் உள்ளமை குறித்து விவாதம் செய்ய ஒருவரும் முன் வரவில்லை.


ஒரு நாள், அவன் தற்செயலாக இமாம் அலியை பாதையில் சந்தித்தான்.


இமாம் அலியுடைய இறை விசுவாசத்தின் உறுதியைப் பற்றி அவன் அறிந்திருந்தான்.


அவன் இமாம் அலியை வம்புக்கிழுக்கும் நோக்குடன் மனிதன் மரணித்து மண்ணுடன் மண்ணாக உக்கிப் போனதன் பின்னர் மீண்டும் உயிர்க் கொடுத்து நியாயத் தீர்ப்பு நாளில் எழுப்பப் படுவதைப் பற்றியும், அதன் பின்னர் அவனது செயல்களை விசாரித்து அந்த மனிதனை நரகத்துக்கு அல்லது சுவர்க்கத்துக்கு அனுப்பப் படுவது எவ் விதத்திலும் சாத்தியம் இல்லை என்று நமது அலி ஷீனா வைப் போல அல்லது அலி ஷீனாவை நம்பும் நமது நண்பர் அன்புராஜைப் போல நியாயங்கள் சொல்லத் தொடங்கினான்.


இமாம் அலி அமைதியாக அவன் சொல்லும் நியாயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.


அந்த நாத்திகன் அவன் பக்க நியாயங்களை சொல்லி முடித்ததன் பின்னர் இமாம் அலி அவனுக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.


அவர் அந்த நாத்திகனிடம்..."நண்பரே! நீங்கள் சொல்லுவதே உண்மை என்று ஒரு வாதத்துக்கு நினைத்துக் கொள்வோம்.


"அதன் படி நாம் இருவரும் மரணித்ததன் பின்னர் உக்கி மண்ணுடன் மண்ணாக கலந்து போனதன் பின்னர் நாம் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படாது போனால் இறைவனை விசுவாசித்து அவன் சொல்லிய பிரகாரம் வாழ்ந்து  மரணித்துப் போன எனக்கு ஒரு நட்டமும் இல்லை.அதே போல இறைவனை விசுவாசிக்காது மனம் போன போக்கில் வாழ்ந்து மரணித்துப் போன உங்களுக்கும் ஒரு நட்டமும் இல்லை.


"ஆனால்,தப்பித் தவறி நாம் நம்புவது போல மறுமை நாள் என்றொரு நாள் இருந்து நாம் இருவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டு  நமது செயல்களுக்கு நியாயம் சொல்லவேண்டிய சூழல் உருவாகினால் நான் தப்பி விடுவேன்.நீங்கள் இறைவனிடம் மாட்டிக் கொள்வீர்கள்.


"நம் இருவரின் நம்பிக்கைகளிலும் எது சிறந்தது என்று இப்பொழுதாவது புரிந்ததா?" என்றார்.


நாத்திகன் மௌனித்துப் போனான்.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad