அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, December 6, 2012

'புனைவு நிஜமாகும் வரை'.




ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு வீட்டை அமைத்தார். சிலரோடு 
செல்லப் பிராணிகளையும் அவ்வீட்டில் குடியிருக்க வைத்து ஏதோ 
ஒரு நோக்கத்திற்காக தான் மட்டும் தனியாக தூரத்திலிருந்து கொண்டு 
அவ்வீட்டைக் கண்காணிக்கலானார். அவ்வப்போது அறிவுரை மற்றும் 
அறவுரை தாங்கிய கடிதங்களைத் தூதுவர் மூலம் அனுப்பி வைத்தார். 
அவற்றில் சில‌ ஆங்காங்கு எழுதி வைக்கப் பட்டன.


" தர்மம் தலை காக்கும் "

" நீ வாழ பிறரைக் கெடுக்காதே "


"பிறர்கின்னா முற்பகல் செய்யின் ; தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்"

"மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் 

கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின, 
(தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் 

செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) 
அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.(அல்குர்ஆன் 30:41)"


* * * * *


எல்லோரும் ஒரு நாள் நகரத்திற்குத் திரும்ப வேண்டும், அங்கே கோர்ட்,கேஸ்,தண்டனை,பரிசளிப்பு உண்டு என்றாலும் தற்காலிகமாக
இங்கே வசிப்பதற்கான விதிகளும் எச்சரிக்கைகளும் விதிக்கப் பட்ட 
நோக்கம் பிரச்னைகளில்லாத சுமுகமான வாழ்விற்காகவும்தான்.


வீட்டினரோ வீட்டு மிருகங்களோ காட்டிற்குள் செல்ல முடியாதவாறு 
ஒரு வேலியிடப்பட்டது. அவ்வேலி எல்லோருக்கும் பொருந்தாது. 
எனவே அவரவருக்குப் பொருந்தும் படியான வேலிகளை ஒன்றன் பின்
ஒன்றாக அமைக்கப் பட்டது.

அதே சமயம் காட்டிலிருந்து ஆபத்தான எதுவும் வந்து விடக்கூடாதென்று 
கடைசி வேலி மிகக் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்க‌
கரண்ட் ஷாக் வைத்து அமைக்கப் பட்டது.





வேலிகளின் மறு பெயர் பிரச்னைகள். அவற்றிற்கு சுகக்குறைவு,தடை,தவிப்பு,எரிச்சல்,பசி,பட்டினி,பஞ்சம்,கஷ்டம்,
துன்பம்,சோகம்,வலி,வேதனை எனப் பெயரிடப்பட்டாலும் 
கடைசி வேலியின் பெயர் 'ஆபத்து'.

"மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டு பெரிய 

வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே 
(இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் 

செய்வோம். (அல்குர்ஆன் 32:21)"


* * * * *


எல்லா வலிகளுக்கும் ஒரு காரணம் உண்டு. வலிக்கான காரணத்தைக் 
கண்டறியாமல் வலிகள் மரத்துப் போகும் அளவுக்கு தோல் தடித்து 
மனம் தொலைத்து 'வேலி தாண்டிய வெள்ளாடு' போல் போய்க் 
கொண்டே இருந்தவர்களின் முடிவு மோசமாகவே இருந்தது.

'பட்டு'த் திருந்தியவர்களும் படும் முன்னே 

'திரும்பி'யவர்களும் பிழைத்துக் கொண்டார்கள்.



காலச்சக்கரம் வடிவமைத்து வைத்தாற் போலவே சுழன்றது. 
இந்நிலையில் வீட்டிலிருந்தோர் பலவாறாகப் பிரிந்தனர். 
தமக்குள் எல்லைகள் வகுத்துக் கொண்டனர்.


1)
அறவுரைகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தோர்

2)
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் 
கிடையாது என்று தன்னிச்சையாக இஷ்டப்படி வாழ்ந்தோர்

3)
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம்
கிடையாது என்றாலும் மனசாட்சியின் படி வாழ்ந்தோர்

4)
அறவுரைகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தோரை எள்ளி 
நகையாடி அவர்களுக்கு அடிக்கடி ஊறு விளைவித்து 
வாழ்ந்தோர்

5)
அறவுரைகளை மதித்தாலும் எச்சரிக்கைகளை 
அலட்சியப்படுத்தி மனோ இச்சையின் வழிப்பட்டு
வாழ்ந்தோர்

6)
யாரால் அனுப்பப் பட்டோம் எதற்காக அனுப்பப் பட்டோம்
என்பது தெரியாமல் கதைகளையும் கற்பனைகளையும் 
'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்று 

அப்பாவித்தனமாகவும் அடாவடித் தனமாகவும் வாழ்ந்தோர்.


இவர்களுக்குள் 

அடிக்கடி தகறாறு நிகழ்ந்து கொண்டிருந்த‌து,

'புனைவு நிஜமாகும் வரை'.



http://ibnuzubairtamil.blogspot.com/2010/05/blog-post_18.htm


நன்றி! அரபுத் தமிழன்....!


No comments:

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad