சஹாபாக்கள் என்று நாம் பெரு மதிப்பு வைத்திருக்கும் பெரியார்களின் மத்தியில் ஒளிந்து தமது தவறுகளை மறைத்துக் கொண்டிருக்கும் நய வஞ்சகர்களின் சுயரூபத்தை நாம் வெளிப்படுத்தியதினால் நம்முடன் முரண் பட்ட இணைய நண்பர் 'அரபுத் தமிழன்' தனது தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் துண்டித்துக் கொண்டார்.
இறைவனை அவனது தூய வடிவில் நாம் விசுவாசித்ததை - நாம் விசுவாசிக்கும் இறைவன் அராபிய இறைவன் என்றுக் குழம்பிப் போன நமது இணைய நண்பர் அன்புராஜும் தனது மதிப்புக்குரிய தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் முறித்துக் கொண்டார்.