Tuesday, July 25, 2017
‘உம்மிகளின் நபி’- ஒன்று
‘உம்மி நபி என்பதன் அர்த்தம் எழுத வாசிக்கத் தெரியாத நபி என்று வரும். அல் குர்ஆனில் அல்லாஹ் எழுத வாசிக்கத் தெரியாத சமூகத்திலிருந்து வேதங்களைக் கற்றுக் கொடுக்க அவர்களில் இருந்தே ஒரு நபியை அனுப்பியிருக்கிறேன் என்று கூறுகிறான். அதனால், எழுத வாசிக்கத் தெரியாத சமூகத்தை சேர்ந்த அந்த நபியும் எழுத வாசிக்கத் தெரியாதவர்.’
எண்பத்து மூன்று நினைவுகள்.........
எண்பத்து மூன்று நினைவுகள்..........
என்னுடைய வயதையொத்த நண்பர்கள் எண்பத்து மூன்றாம் வருட கருப்பு ஜூலையை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த ஜூலை மாதத்தில் இலங்கை பூராவும் கலவரம் வெடித்திருந்தது. தமிழ் இந்து மக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது உடைமைகள் கொள்ளையிடப்பட்டன. தீக்கு இரையாக்கப்பட்டன. அனைத்தயும் இராணுவம் தலைமையேற்று செய்தது. கலகக்காரர்களுக்கு பாதுகாப்பும் அளித்தது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களிலும் இலங்கையில் பட்டாசு வேடிக்கைதான். தமிழ் இந்துக்களின் சொத்துக்களை அழிப்பதிலும், பலவீனமான நிலையில் இருந்த அப்பாவிகளை ஈவிரக்கமின்றி கொன்றொழிப்பதிலும், வசீகரமான பெண்களை குறிவைத்து வல்லுறவில் ஈடுபடுவதிலும் அந்தப் பெருநாட்கள் கழிந்தன. நாடே சீரழிந்துப் போனது. அரசு ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தது. எனினும், வலிமையானவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று நிலைமை மாறியிருந்தது. சிறுபான்மையின மக்கள் தங்களது பாதுகாப்பை அவர்களாகவே உறுதி செய்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.
Tuesday, July 18, 2017
பாமரனை கவிழ்க்க உதவும் ஒரு கலை.........இல்முல் றிஜால்
ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களின் தனிப்பட்ட குணவியல்பு விபரங்களை ஒன்று திரட்டுகின்ற செய்திகளின் 'கலை அறிவின்' அறபுப் பெயர்தான் ‘இல்முல் றிஜால்’.