Tuesday, July 25, 2017

‘உம்மிய்யீன்களின் நபி’ – மூன்று:



நபிகளாருக்கு எழுதவும் வாசிக்கவும் தெரியாது என்று சிலர் வாதிடுகிறார்கள். அதற்கு சோடிக்கப்பட்ட சில காரணங்களையும் கூறுகிறார்கள். ‘நபிகளாருக்கு எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருந்தால் நபியவர்களுக்கு எழுத்தறிவித்த அந்த ஆசான் நபிகளாரை விடவும் அந்தஸ்த்திலும் , மகத்துவத்திலும் உயர்ந்து விடுவார். 

உம்மிகளின் நபி – இரண்டு




அல்லாஹுத்தஆலா மனிதர்களது சக்திக்கு மீறிய செயலை செய்யுமாறு மனிதர்களை கட்டாயப்படுத்துவதில்லை. வற்புறுத்துவதில்லை. அப்படி எதிர்பார்ப்பதுமில்லை. அப்படியான செய்கை அவனது மகத்துவத்துக்கு உகந்ததில்லை. 

‘உம்மிகளின் நபி’- ஒன்று


‘உம்மி நபி என்பதன் அர்த்தம் எழுத வாசிக்கத் தெரியாத நபி என்று வரும். அல் குர்ஆனில் அல்லாஹ் எழுத வாசிக்கத் தெரியாத சமூகத்திலிருந்து வேதங்களைக் கற்றுக் கொடுக்க அவர்களில் இருந்தே ஒரு நபியை அனுப்பியிருக்கிறேன் என்று கூறுகிறான். அதனால், எழுத வாசிக்கத் தெரியாத சமூகத்தை சேர்ந்த அந்த நபியும் எழுத வாசிக்கத் தெரியாதவர்.’

எண்பத்து மூன்று நினைவுகள்.........

எண்பத்து மூன்று நினைவுகள்..........
என்னுடைய வயதையொத்த நண்பர்கள் எண்பத்து மூன்றாம் வருட கருப்பு ஜூலையை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த ஜூலை மாதத்தில் இலங்கை பூராவும் கலவரம் வெடித்திருந்தது. தமிழ் இந்து மக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது உடைமைகள் கொள்ளையிடப்பட்டன. தீக்கு இரையாக்கப்பட்டன. அனைத்தயும் இராணுவம் தலைமையேற்று செய்தது. கலகக்காரர்களுக்கு பாதுகாப்பும் அளித்தது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாள்களிலும் இலங்கையில் பட்டாசு வேடிக்கைதான். தமிழ் இந்துக்களின் சொத்துக்களை அழிப்பதிலும், பலவீனமான நிலையில் இருந்த அப்பாவிகளை ஈவிரக்கமின்றி கொன்றொழிப்பதிலும், வசீகரமான பெண்களை குறிவைத்து வல்லுறவில் ஈடுபடுவதிலும் அந்தப் பெருநாட்கள் கழிந்தன. நாடே சீரழிந்துப் போனது. அரசு ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தது. எனினும், வலிமையானவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று நிலைமை மாறியிருந்தது. சிறுபான்மையின மக்கள் தங்களது பாதுகாப்பை அவர்களாகவே உறுதி செய்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

யுத்தக் கைதிகளை கொலை செய்வதா?

யுத்தக் கைதிகளை கொலை செய்வதா? அடிமைகளாக சந்தையில் விற்பதா?- அல் குர்ஆனின் போதனையும் நபிகளாரின் ஸுன்னாவும் என்னதான் சொல்கின்றன?

அல் பத்ர் - சில விளக்கங்கள்!


ஹேய்.....பயாஸ்....ஒன்றை எழுதும் முன்னர் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லனும்னு பயந்துக் கொள்ளுங்கள்?- இது ஒரு அன்பரின் அறிவுரை.

அஹ்ளுல்பைத்தினர் யார்?


நபிகளாரின் உறவினர்கள் அனைவரும் அஹ்ளுல்பைத்தினர் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்த ஹதீஸ் ஆஹாதான ஹதீஸாகும். இந்த ஹதீஸை அவர் மாத்திரமே அறிவித்திருக்கிறார். இதனைச் சொல்லி சொல்லி அஹ்ளுல்பைத்தினரின் எதிரிகள்

'முட்டையில் மயிர் பிடுங்கும் சப்பரை அறிஞர்கள்.......'


அருளப்பட்ட ஆயத் ஒன்றுக்கு பல சம்பவங்கள் விளக்கவுரைகளாக அமைவதில்லை. அருளப்பட்ட ஆயத்துக்குரிய ஒரே சம்பவம் பல வழிகளில் ஒரேவிதமாக அறிவிக்கப்பட்டிருக்கும். அதனை முதவாத்திரான ஹதீஸ் பிரிவில் இஸ்லாமிய

Tuesday, July 18, 2017

பாமரனை கவிழ்க்க உதவும் ஒரு கலை.........இல்முல் றிஜால்


ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களின் தனிப்பட்ட குணவியல்பு விபரங்களை ஒன்று திரட்டுகின்ற செய்திகளின் 'கலை அறிவின்' அறபுப் பெயர்தான் ‘இல்முல் றிஜால்’.