அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, November 12, 2011

ஆப்ரகா மன்னனின் பிரமாண்டமான யானைப் படையினர் மக்காவை அழிக்க வந்த மாதம் எது?........துல் ஹஜ்............?முஹர்ரம்........??


ஆப்ரகா மன்னனின் பிரமாண்டமான யானைப் படையினர் மக்காவை  அழிக்க வந்த மாதம் எது?........துல் ஹஜ்............?முஹர்ரம்........?? 


துல் ஹஜ் மாதம் முஸ்லிம்களுக்கு கொண்டாட்டமான மாதம்தான்.


இந்த மாதத்தில் நாம் எங்களது மார்க்கத்தின் நிஜமான ஸ்தாபகர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களின் தியாகத்தையும் நினைவு கூர்கிறோம்.


இந்த துல் ஹஜ் மாதத்தில்தான் அப்ரகா மன்னனின் மக்காவை ஆக்கிரமிக்கும் யானைப்  படையின் படையெடுப்பும் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.


ஏனெனில், யானைப் படையெடுப்பு முடிந்து சரியாக ஐம்பத்து இரண்டு நாள்களின் பின்னால் நபி (ஸல்) அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.


இந்தப் பதிவை நம்ப முடியாதிருக்கிறது.

துல்ஹஜ் பிறை பதினெட்டில் ஒரு பெரு நாள்.......... இதென்ன புதுக் கதை...????

துல்ஹஜ் பிறை பதினெட்டில் ஒரு பெரு நாள்.......... இதென்ன புதுக் கதை...????




துல் ஹஜ் மாதம் முஸ்லிம்களுக்கு கொண்டாட்டமான மாதம்தான்.


இந்த மாதத்தில் நாம் எங்களது மார்க்கத்தின் நிஜமான நாயகன் நபி இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களின் தியாகத்தையும் நினைவு கூர்கிறோம்.


இதே மாதத்தில் ஒரு நாளில்தான்  ஆபிரகா மன்னனின் பிரமாண்டமான யானைப் படையினரை அபாபீல் என்கிற சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் அழித்து ஒழித்தான்.


அதே போல, இஸ்லாமிய தலைமைத்துவ   நியமன நன் நாள் பற்றிய இந்த சம்பவம் கூட ஹிஜ்ரி பத்தாம் வருடம் துல் ஹஜ் மாதம் பிறை பதினெட்டில் தான் நடைபெற்றிருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜான ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் வைத்து 'கதீர் கும்'  என்ற இடத்தில் அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளர்கள் இன்றும் கொண்டாடி வரும் இந்த பெரு நாளுக்கான சம்பவம் நடை பெற்றதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன.

இப்பொழுது சவூதியில் இருக்கின்ற அல் ஜுஹ்பா நகரத்தை அண்டியிருக்கும் ஓர் இடம்தான் 'கதீர் கும்'மாகும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஹஜ்ஜுக்கு வருகை தந்த மக்கள் எல்லோரும் தத்தமது ஊர்களுக்கு பிரிந்து போகும் இறுதி எல்லை இதுதான்.

ஹஜ்ஜதுல் விதாவை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில் கதீர் கும்' என்கிற நீர் சுனையின் அருகே வைத்து திடீரென அல்லாஹ்வின்  புறத்தில் இருந்து "வஹி" அருளப்படுகிறது.

""தூதரே! உம் இறைவனிடம் இருந்து உம் மீது இறக்கப் பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்;(இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி ( ன்  தீங்கில் ) லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்." ( அல் குரான் 5   :   67   )

இஸ்லாமிய கடமைகள் யாவும் முற்று முழுதாக கடமை ஆக்கப் பட்டு விட்ட நிலையில் இதென்ன சொல்லப் படாத இன்னுமொரு முக்கிய விடயம் என்று சஹாபாக்கள் குழம்பிப் போனார்கள்.

Sunday, November 6, 2011

நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த இஸ்லாம் ...........அபூ சுபியான் குடும்பம் திருத்தித் தந்த இஸ்லாம்..............நீங்கள் எந்த இஸ்லாத்தில்....?????

நபி  (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த இஸ்லாம் ...........அபூ சுபியான் குடும்பம் திருத்தித் தந்த இஸ்லாம்..............நீங்கள் எந்த இஸ்லாத்தில்....?????


அஹ்ளுல்பைத்களில் தனது உயிரினும் மேலாக நேசம் வைத்து இருக்கும் நண்பர் ரூமியின் பார்வையில் பாலஸ்தீனம் இன்றைக்கு இந்நிமிடம் நடந்துக் கொண்டிருக்கும் நிகழ் கால கர்பலாவாகும்.

என்னிடம் அவர் கேட்டார்- 

"மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்........."

நான் மௌனித்து இருந்தேன்.

நீங்கள்....?

Wednesday, November 2, 2011

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டிகள்....?????????

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டிகள்....??????????


எம்முடைய இணைய முகவரிக்கு அடுத்தடுத்து நான்கு பின்னூட்டங்கள்.

இரண்டு  இந்து மத சகோதர்களின் பெயரில் ஒளிந்திருந்த உமையாக்களின் ஆதரவாளர்களின் பின்னூட்டங்களாக அவை தம்மை பரிதாபகரமாக இனம் காட்டிக் கொண்டன.

எப்படி என்று திகைக்கிறீர்களா?

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad