(5) தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.......!!உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்.....????
அத்தியாயம் ஐந்து
நபிக்
குடும்பத்துக்கு எதிராக கர்பலாவில் இருந்து பகிரங்கமாக துவக்கப் பட்ட இத்தகைய
கொடூரமான செயல்களின் செயல் விளைவுகள் உலக முஸ்லிம்களை நபிக் குடும்பத்துக்கு தமது
பூரணமான ஆதரவை வழங்கும் நிலைக்கு ஆளாக்கியது.
இவ்வாறான ஆதரவின்
முழுமையான பங்கினை உலகின் பல பாகங்களுக்கும் அகதிகளாக சென்றிருந்த
அப்பாஸியகுடும்பத்தினர் மிகவும் சூட்சுமமாக
தமக்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டனர்.
ஏனெனில்,நபிக் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களாக
இருந்த அப்பாஸிய சந்ததியினரின் தலைமையை மக்கள் எவ்வித எதிர்ப்புமின்றி
அங்கீகரித்தனர்.
அவர்களும்
நயவஞ்சகத் தனமாக அபூதாலிபின் குடும்பத்துக்கே ஆட்சி அதிகாரம் செல்ல
வேண்டும்....அதற்காகத்தான் நாம் போராடுகிறோம்
என்று வாதாடி மக்களின் பூரண ஆதரவை பெற்று எழுச்சி கண்டு வந்தனர்.
இறுதியில்
அப்பாசியர்களின் சூட்சுமமான சதியின் மூலம் பனு உமையாக்கள் ஆட்சியில் இருந்து
தூக்கியெறியப் படுகிறார்கள்.
அபூதாலிபின்
மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவோம் என்று சொல்லி புரட்சியில் வெற்றி பெற்ற
அப்பாசியர்கள் நபிக் குடும்பத்தை அலட்சியப் படுத்தி விட்டு ஆட்சியை பலவந்தமாக
அபகரித்துக் கொள்கிறார்கள்.