நபி (ஸல்) அவர்களின் பெற்றோரை நரகத்துக்கு அனுப்பிக் கொண்டு இருக்கும் அறிவியல் உலமாக்கள் தங்களது வாதத்துக்கு ஆதாரமாக முஸ்லிம் ஹதீத் கிரந்தத்தில் உள்ள இரண்டு ஹதீத்களை சுன்னத் வல் ஜமாத்தினர் முன் சமர்பிக்கிறார்கள்.
அப்படியென்றால் இந்த ஹதீதுக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த ஹதீதை கவனியுங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
"மறுமை நாளில் ஆதமின் மக்கள் அனைவருக்கும் தலைவன் நானே.
முதன் முதலில் மண்ணறை பிளந்து எழுபவனும் நானே.
முதன் முதலில் பரிந்துரை செய்பவனும் நானே.
முதன் முதலில் பரிந்துரை ஏற்கப் படுபவனும் நானே."
ஹசரத் அபூ ஹுரைரா (ரலி) இந்த ஹதீதை அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்; முஸ்லிம் ஹதீத் கிரந்தம் பாகம் நான்கில் 4574 வது ஹதீத்)
மறுமை நாளில் மக்கள் அனைவரின் தலைவரும், முதன்மையாக ஏற்கப் படும் பரிந்துரை செய்பவரில் முதன்மையானவருமான ஒரு தலைவரின் பெற்றோர் அன்றைய தினம் நரகத்துக்கு இழுத்துச் சென்று எறியப் படுகிறார்களாம்.
மறுமையில் சுவனவாசிகளின் தலைவரின் தாயும், தந்தையும் நரகத்தில்......?
நம்பி ஏற்றுக் கொள்ள முயுமா?
சாதாரண பாமரன் கூட விளங்கிக் கொள்ளும் முறையில் அமைந்த இந்த ஹதீத் உங்களுக்கு தெளிவைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை மட்டுமல்ல, நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும், அவரை போசித்து பரிபாலித்த அவரது பெரிய தந்தை அபு தாலிப் அவர்களும் , இன்னும் யார் யாரெல்லாம் நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அருளுக்கும் ஆகரிணிக்கப் படுகிறார்களோ அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையில் சுவனம் செல்வார்கள் எனபது இந்த ஹதீதில் இருந்து உங்களுக்கு விளங்கியிருக்கும்.