அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, April 25, 2012

செவிடன் காதில் ஊதிய சங்கு போல...........குருடர்களுக்கு வழிக் காட்டும் குருடர்கள்............



ஒரு கிராமத்தில் சில அப்பாவி மக்கள் ஒரு இளம் தலைவரை கண் மூடித்தனமாக நம்பி பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அந்த இளம் தலைவர் அந்த ஊர் மக்களை இன்னுமொரு ஊருக்கு வழி நடாத்தி அழைத்துச் சென்றார்.

தலைவர் முன்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.

அப்பாவி ஊர் மக்கள் இளம் தலைவரை பின் துயர்ந்தார்கள்.

அவர்களது நிம்மதியான பயணத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

திடீரென அவர்களது பயண வழியில் ஒரு அடர்ந்த ஒரு காடு குறுக்கிட்டது.

அடர்ந்த அந்தக் காட்டைக் கடந்து அடுத்த ஊருக்கு போகவேண்டிய நிலையில் அந்த இளம் தலைவரும் அவரைப் பின் பற்றும் அப்பாவி ஜனங்களும் இருந்தார்கள்.

திடீரென, அந்தக் காட்டினுள்ளிருந்து ஒரு விறகு வெட்டி அந்தக் கூட்டத்தாரின் முன்னால் வந்தான்.

காட்டினுள் நுழைய முயலும் கூட்டத்தாரைக் கண்டதும் அவன் கலவரமுற்றான்.



கூட்டத்தாரை வழி நடாத்தும் இளம் தலைவரின் முன்னால் வந்த விறகு வெட்டி அந்தத் தலைவர் அந்த அப்பாவி ஊர்மக்களை அழைத்து செல்லும் காட்டினுள் ஒரு பயங்கரமான ஆட் கொல்லி சிங்கம் ஒன்றிருப்பதை விளக்க முயன்றான்.



ஆட் கொல்லி சிங்கத்தின் கதையைக் கேட்டதும் இளம் தலைவரின் மனம் துணுக்குற்றது.

கொஞ்சம் பயமும் வந்தது.

தன்னையும் தன்னுடன் முரண்படும் விறகு வெட்டியையும் கவனிக்கும் ஊராரைக் கண்டவுடன் -விறகு வெட்டியின் பேச்சில் இருக்கும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டால்- அவர் தனது தலைமைத்துவத்தை விறகு வெட்டியிடம் ஒப்புவிக்க வேண்டி வருமோ என்ற கலக்கமும் வந்தது.

விறகு வெட்டியின் பேச்சைக் கேட்பதை ஊரார் கவனித்தால் அவர்கள் நிச்சயம் அந்த விறகு வெட்டியை தமது வழிக் காட்டியாக ஏற்றுக் கொள்வார்கள்.

இளம் தலைவரின் தலைமைத்துவம் பறிபோவது நிச்சயம்.

என்ன செய்வது?

திடீரென மனத்தில் 'பளிச்'சென ஒரு உதயம்.

'ஆட் கொல்லி சிங்கத்தைப் பற்றி நம்மை எச்சரிப்பது சாதாரண விறகு வெட்டியல்லவா?......அவன் சொல்லுவது உண்மையாக இருந்தாலும் என் பின்னால் என்னைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு அந்த ஆட் கொல்லி சிங்கத்தைப் பற்றிய அறிவு இல்லையா....ஆகவே , ஆட் கொல்லி சிங்கம் பற்றிய கதையெல்லாம் விறகு வெட்டியின் அதீத கற்பனையாகும்.நான் போகும் வழியே சரி அதனால்தான் இந்த ஊரார் எதுவித மறுப்புமின்றி என்னை தலைவனாக ஏற்றுக் கொண்டு என் பின்னால் வருகிறார்கள்' - என்று நினைத்து தனது செயலில் இயாயம் கண்ட அந்த இளம் தலைவர் அந்த விறகு வெட்டியின் பேச்சை அலட்சியப் படுத்தி தன்  வழியே முன்னை விட கம்பீரமாக நடை போட்டு அந்த ஊராரை அழைத்துக் கொண்டு ஆட் கொல்லி சிங்கம் பதுங்கியிருந்த வானாந்திரத்தினுள் நுழைய முயன்றார்.

தனது பேச்சைக் காது கொடுத்துக் கேட்காத இளம் தலைவரின் செய்கை அந்த விறகு வெட்டியை வேதனைப் படுத்தியது.

உடனே அவன் அந்தத் தலைவரைப் பின்பற்றும் அப்பாவி ஊர் மக்களிடம் வந்து அவர்கள் செல்லும் வழியில் அவர்களை எதிர் கொள்ள இருக்கும் பயங்கரத்தை விளக்க முயன்றான்.

விறகு வெட்டி சொல்லும் பயங்கரக் கதையை ஊரார் கேட்டு நகைத்தனர்.

'நமது  இளம் தலைவருக்குத் தெரியாத தலைமைத்துவ   இரகசியங்களா?......இந்த விறகு வெட்டி நமது தலைவரைப் போல படித்தவனா?......இல்லையே .........ஆகவே, நமது தலைவர் நம்மை அழைத்து செல்லும் வழி சரியான வழி' என்று நினைத்த அப்பாவி ஊர் மக்கள் விறகு வெட்டியை அலட்சியப் படுத்தி அந்த இளம் தலைவரைப் பின் பற்றி ஆட் கொல்லி சிங்கம் பதுங்கி இருக்கும் காட்டினுள் உற்சாகமாக நுழைந்தனர்.



(அந்த அப்பாவி மக்களை நீங்கள் Mr . Peace போன்றவர்கள்  என்றும் அந்த இளம் தலைவரை நீங்கள் அகார் என்றும் நினைத்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல)

எங்களது சமூகத்தின் நிலையும் இது போலத்தான் இருக்கிறது.

அல் குர் ஆனுக்குரிய அப்பழுக்கற்ற விளக்கத்தை நபிக் குடும்பத்தினர் சொல்லித் தந்திருக்க நமது தலைவர்களோ அவர்களின் போதனைகளை அலட்சியப் படுத்தி விட்டு அரசியல் தலைவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்த உலகாயுத மார்க்க அறிஞர்களின் விளக்கத்தை புனித அல் குர் ஆனுக்குரிய விளக்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.


அல் குர்ஆன் வேத வசனங்களின் அடிப்படையில் அமைந்த மத அதிகாரம் நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களது கண்ணியமிக்க குடும்பத்தின் இமாம்கள் வசம் இருக்க அல் குர்ஆனின் சரியான உள் அர்த்தங்களை விளங்காது இஸ்லாமிய மத அதிகாரங்களை அக்கிரமமாக தன் கையில் எடுத்திருக்கும் இன்னொரு அறிஞரின் கருத்துக்களைக் காவி நமது தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


எமது நண்பர் ஒருவர் சொன்ன கதை இது.

ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்கு மனித உறுப்புகளைப் பற்றி பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.



"மனிதர்களுக்கு இரண்டு கால்கள்" ஆசிரியர் சொன்னார்.

மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

"மனிதர்களுக்கு இரண்டு கைகள்" ஆசிரியர் சொன்னார்.

சட்டென்று ஒரு மாணவன் இடை மரித்தான்."எனது தந்தைக்கு மூன்று கைகள்...."

ஆசிரியர் திகைத்தார்.

"அதெப்படி...?" ஆசிரியர் கேட்டார்.

"வலது கை..." வலது கையைக் காட்டி மாணவன் சொன்னான்."இடது கை"என்று அந்த மாணவன் இடது கையையும் காட்டினான்.

ஆசிரியர் அவசரமாக கேட்டார்"எங்கே மூன்றாவது கை...?"

மாணவன் நிதானமாக சொன்னான்"வழுக்கை..........???"

கைஎன்றால் என்னதென்று ஆசிரியர் சொல்ல , அந்த மாணவனோ கை என்பதற்கு வேறு விதத்தில் அர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்தான்.

இதனைப் போலத்தான் நமது கால அறிஞர்கள் அல் குர் ஆனுக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய அறிஞர்களை விளித்து அல் குர்ஆன் இவ்வாறு உரையாற்றுகிறது.

"நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்துக்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன;ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கு கண்கள் உண்டு;ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்க்க மாட்டார்கள்;அவர்களுக்கு காதுகள் உண்டு;ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனைப் பற்றிய நட்போதனையைக்) கேட்க மாட்டார்கள்;-இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள்; இல்லை அவற்றை விடவும் வழிக் கேடர்கள்;இவர்கள்தாம் நம் வசனங்களை அலட்சியம் செய்தவர்களாவார்கள்"
(அல் குர் ஆன்: 7 : 179 )

2 comments:

Dr.Anburaj said...

ஜவடி மேலும் தொடர்கிறார்.

“இங்கே முஸ்லிம்களின் அன்னைகளில் ஒருவரான சபியா தன் தந்தையையும், கணவனையும் கொன்ற தூதரை வெறுத்த அந்த சமயத்தைப் பற்றி கூறுகிறார். தூதர், “உன் தந்தை அரபியர்களை என் மீது ஏவி ஒரு கொடூரமான குற்றத்தை செய்து விட்டார்” என்று கூறி சபியாவின் தூதருக்கு எதிரான கசப்புணர்வை நீக்கும் அளவுக்கு மன்னிப்பு கேட்டார். (Al-Bayhaqi, Dala’il an-Nubuwwah, vol. 4, p. 230, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.166 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது )

இதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? முகமது அவளின் தந்தையையும் கணவனையும் கொன்று விட்டு அதை நியாயப்படுத்துகிறான். ஆனால் முகமது மன்னிப்புக் கேட்டான் (அவன் அப்படிச் செய்யவில்லை.) என்றும் அவள் மன்னித்து விட்டாள் என்றும் ஜவடி சொல்கிறார். இந்த ஜவடி எதைப் புகைக்கிறார் என்று தெரியவில்லை (இல்லையில்லை, அவரின் மூளை இஸ்லாமால் பீடிக்கப்பட்டுள்ளது). அவருடைய வாதங்களில் ஏதேனும் பொருள் இருக்கிறதா. நீங்கள் ஒரு பெண்ணின் தந்தையையும், கணவனையும், உறவினர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டு ஏன் அப்படி செய்யவேண்டியதாயிற்று என்று விளக்கம் கொடுத்தால் அவள் உங்களை மன்னித்து விடுவாளா? முஸ்லிம்களுக்கு இது போன்ற எண்ணங்கள் இருப்பதால் தான் அவர்களால் எந்த கேனத்தனத்தையும் நம்ப முடிகிறது. சிறிது மூளையை பயன்படுத்தும் முஸ்லிம் கூட இஸ்லாமை கைகழுவி விடுவான்.

தூதரின் சாவிற்கு பிறகும் கூட அவரின் சோதனைகள் குறையவில்லை. ஒரு முறை, அவரின் அடிமைப்படுத்தப்பட்டபெண் நம்பிக்கையாளர்களின் [முஸ்லிம்களின்] தலைவரான உமரிடம் சென்று “நம்பிக்கையாளர்களின் தலைவரே, சபியா சப்பாத்தை [Sabbath = யூதர்களின் ஒய்வு நாள்] அனுசரிக்கிறார், யூதர்களிடம் தொடர்பு வைத்திருக்கிறார்” என்று கூறினார். உமர் சபியாவை அதைப் பற்றிக் கேட்டார். அவர் “அல்லா சப்பாத்திற்கு பதிலாக வெள்ளிக்கிழமையை அறிவித்ததற்கு பிறகு நான் சப்பாத்தை விரும்பவில்லை. எனக்கு உறவுள்ள யூதர்களுடன் மட்டுமே தொடர்பு வைத்துள்ளேன்” என்று கூறினார். பிறகு சபியா தன்னுடைய அடிமைப்படுத்தப்பட்டபெண்ணிடம் உமரிடம் பொய் கூறும் அளவுக்கு உன்னை பிடித்தது எது என்று கேட்டார். அந்த பெண்ணும் “ஷைத்தான்” என்று கூறினார். சபியா, “போ, உனக்கு சுதந்திரம் கொடுக்கிறேன்” என்றார்.உண்மையிலேயே இஸ்லாமிய மனதைப் பார்த்தால் எனக்கு மலைப்பாக இருக்கிறது. யாரோ உங்கள் வீட்டைத் அதிரடித் தாக்குதல் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களையும் உங்கள் மகன்களையும் கொன்றுவிட்டு உங்கள் மகள்களையும் மனைவியையும் அடிமைப்படுத்தி உங்கள் மகளை வல்லுறவு கொண்டு அவளை தன் மனைவி என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படிச்செய்வதன் மூலம் அவளின் துயரம் குறைக்கப்படுமா? அல்லது அவளின் மாண்பு தான் காக்கப்படுமா?



இதுபோன்ற விகாரமான சிந்தனை எப்படி வந்தது. முஸ்லிம்களை பொறுத்த மட்டில், நிக்கா என்ற ஒப்பந்தத்தினால் தான் ஒரு பெண்ணுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினுடைய மானம் காப்பாற்றப்படும். பெண்ணானவள் ஒரு ‘ஔரத்’, அதாவது மூடிமறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பு. அவளுக்கு நிக்கா நடந்தால் மட்டுமே அவள் மூடப்பட்டு அவளின் மானம் காப்பாற்றப்படும். நிக்காவின் பிறகு அவளை வல்லுறவு கூட கொள்ளலாம். இஸ்லாமிய சட்டத்தின் படி அது வல்லுறவு அல்ல.



தூதர் சபியாவுடனான நிக்காவின் மூலம் யூதர்கள் கொண்டிருந்த தூதருக்கும் இஸ்லாமுக்கும் எதிரான பகைமையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார். ஆனால் அந்தோ பரிதாபம், அவர்கள் தூதருக்கும் இஸ்லாமுக்கும் எதிரான தங்களின் வெறுப்பைக் கைவிடவே இல்லை. ஏனென்றால் கெட்ட எண்ணத்துடனும் பிடிவாதமாகவும் இருப்பது அவர்களின் இயல்பு. ( See Muhammad M. as-Sawwaf, Zawjat ar-Rasul at-Tahirat wa Hikmat T’adudihinn, pp. 76-79, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.168 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இது போன்ற வாதங்களைக் கேட்க எனக்கு வாந்தி தான் வருகிறது. முகமது ஒரு யூதப் பெண்ணை பலாத்காரஉறவு கொண்டு அவரை தன் மனைவி என்று அழைத்துக் கொண்டதற்காக யூதர்கள் அவனை நேசிக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்? அந்த பெண்ணின் முழு குடும்பமும் இனக்குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் மறந்து விடவேண்டுமா? இந்தளவுக்கு கல்நெஞ்சக்காரர்களாக எப்படி இருப்பது? முஸ்லிம்கள் நம்மை படுகொலைகள் செய்வதில் எந்த தவறையும் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் குரானில் இருந்து சில நிக்கா வாசகங்களை படித்துவிட்டு நமது பெண்களை வல்லுறவு கொள்வதற்கு நாம் அவர்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Dr.Anburaj said...

தூதர் சபியாவை மரியாதையுடனும், பரிவுடனும் மற்றும் அன்புடனும் நடத்துவது வழக்கம். “அல்லாவின் தூதர் தன் மனைவிகளுடன் ஹஜ் சென்றார். வழியில் இருப்பதிலேயே நோஞ்சானாக இருந்த எனது ஒட்டகம் மண்டியிட்டு விட்டது. ஆகையால் நான் அழுதேன். தூதர் என்னிடம் வந்து என் கண்ணீரைத் தன் கைகளினாலும் ஆடையினாலும் துடைத்தார். அவர் என்னை அழவேண்டாம் என்று ஆறுதல் கூறக்கூற நான் மேலும் மேலும் அழுதேன்” என்று சபியா கூறினார். (Ahmad, vol.6, p. 337, Cited in Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.176 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

இந்த கதை கல் நெஞ்சத்தையும் கரையச்செய்யும். உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் உங்களால் அழாமல் இருக்க முடியாது. அந்த இளம் பெண்ணின் நிலையில் உங்களை எண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் கைப்பற்றப்பட்டு உங்கள் உறவினர்களைக் கொன்ற அதே எதிரிகளின் மத்தியில் வாழும் ஒரு பெண். உங்களுக்கு பேச்சுத் துணையாகவோ ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவோ யாரும் இல்லை. உங்களைச் சுற்றி உள்ள எல்லோராலும் வெறுக்கப் படுகிறீர்கள். உங்களை விரும்பும் ஒரே ஒரு மனிதனும் உங்கள் தந்தையையும் கணவனையும் கொன்றவன்.



அவளுடைய ஒட்டகம் நோய்வாய்ப்பட்டபோது அவளால் தன் அழுகையை அடக்கமுடியவில்லை. அந்தளவு வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனது ஒட்டகத்திற்காகத்தான் தேற்றமுடியாத அளவுக்கு அழுகிறாள் என்று நினைப்பது முட்டாள்தனம். அவள் தன் தனிமையை எண்ணிக் கதறுகிறாள். பதினேழு பதினெட்டு வயது என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய வயதில்லை. எனக்கு பதினாறு வயதில் என் நாட்டை விட்டு வந்தேன். எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்தார்கள். நான் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களிடையில் வாழ்ந்து வந்தேன். அப்படி இருந்த போதிலும், என் குடும்பத்தைப் பற்றிய ஏக்கம் என்னை வாட்டியது. சில இரவுகள் நான் நிலவைப் பார்த்துக் கொண்டு எனது அம்மாவும் என்னைப் போன்று நிலவைப் பார்த்துக் கொண்டு இருப்பார் என்று எண்ணி ஓசையில்லாமல் அழுவேன். சபியாவின் இதயத்தில் இருந்த வலியை யாரறிவார்கள்? அந்த இளம்பெண் தனது ஜன்னலின் முன் நின்று கொண்டு, அவளது அறையின் இருளில், ஒவ்வொரு இரவும், நட்சத்திரங்களைப் பார்த்து, அதில் எது தனது கணவன், எது தனது தந்தை, எவைகள் தனது சகோதரர்கள், எது தனது பெரியப்பா என்று யோசித்துக் கொண்டிருந்திருப்பாள். நான் என் வயது நண்பர்களுடன் வாழ்ந்தேன். இளவயது பையன்கள் எதைச் செய்வார்களோ அதையே செய்து மகிழ்ச்சியாக காலத்தைக் கடத்தினோம். சபியா தன்னந்தனியாக இருந்தாள். முகமது சாகக்கிடக்கும்போது சபியா அவனிடத்தில் தான் சாக வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினாள். ஒருவேளை அதை உண்மையாகத்தான் சொல்லியிருப்பாள். அவள் பல கோடி முறை தனக்கு இறப்பு வரக்கூடாதா என்று ஏங்கி இருப்பாள்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad