அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, September 10, 2013

(03) தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்.............??? உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்!!!. -03


அத்தியாயம் மூன்று



சில வரலாற்றாசிரியர்கள் தமது வரலாற்று நூல்களிலே இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி எழுபது மனைவியரைத் திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் தமது வரலாற்றுக் குறிப்பில் அவர் தொண்ணூறு மனைவியரைத் திருமணம் செய்து அவர்களை விவாக விடுதலை செய்தார் என்று குறிப்பிடுகின்றனர்.

இன்னம் சிலர் தமது பதிவுகளில் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது மனைவியர் தொகையை முன்னூறு என்றும் குறிப்பிடுகின்றனர்.

இக்கதைகளின் பிரகாரம் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி பெண்களைத் திருமணம் செய்வார் பின்னர் விவாகரத்து செய்வார்.....திருமணம் செய்வார் மீண்டும் விவாகரத்து செய்வார்.திரும்பவும் திருமணம் செய்வார் மீண்டும் விவாகரத்து செய்வார் என்கின்ற தொனி ஒலிக்கிறது.



இன்னுமொரு குறிப்பில் இமாமவர்கள் மரணித்த தினத்தில் அவரது அனைத்து மனைவியரும் மதீனாவில் அவரது மரண வீட்டில் ஒன்று கூடினார்கள் எனவும் அவர்களில் எழுபது மனைவியர் ஒப்பாரி வைத்து அழுது புலம்பினர் எனவும் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்" என்று அவர்களிடம் வினவப் பட்டபொழுது அவர்கள் "எங்களது கணவர் மரணித்து விட்டார்.ஆகவே நாம் ஒப்பாரி வைக்கிறோம்"என்று பதிலளித்தார்கள் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இவ்வாறான குறிப்புகள் அனைத்தும் நமது ஆழமான ஆய்வை வேண்டி நிற்கும் நிஜத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி ஹிஜ்ரி மூன்றாம் வருடம் ரமழான் மாதம் பிறை பதினைந்தில் மதீனாவில் நபிக் குடும்பத்தில் பிறக்கிறார்.

அவரது மரணம் சபர் மாதம் ஹிஜ்ரி ஐம்பதில் நிகழ்கிறது.

நமக்கு மகத்தான படிப்பினைகளை கொண்டிருக்கும் அவரது வாழ்வு மிகவும் ஆழமான ஆய்வுக்கு வழிகோலி நிற்கும் நிலை அற்புதமானது.

நம்முடைய இன்றைய வாழ்வியலுக்கு அவசியமான நிறைய உதாரணங்களை அவரது வாழ்க்கை சரித்திரம் முன்மாதிரியாக கொண்டிருக்கிறது.

எனினும்,துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்களல்லாத மக்கள் மத்தியிலும் அவர் சம்பந்தமான கருத்துக்கள் எதிர்மறையாகவே முன்வைக்கப் படுகின்றன.

இன்றைய முஸ்லிம் உலகத்தில் அவரது செயல் திறன் மிக்க அறிவு, சத்தியம் ஜொலிக்கும் தியாகம்,நேர்மை நிறைந்த வீரம்,ஆளுமை பொதிந்த பொறுமை,தூரதிருஷ்டி கொண்ட ஞானம் எதுவுமே தகுந்த தரத்தில் வைத்து கணிக்கப் படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தி.

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது வாழ்வில் சில பெண்கள் இருந்திருப்பது உண்மை.

ஆனால்,அவர்களில் சரியான மனைவியர் யார் என்பதில் குழப்பமே எஞ்சி நிற்கின்றது.

இமாமின் வரலாற்று பதிவுகளில் அவரது மனைவியர் என்ற வரிசையில் சிலர் குறிப்பிடப் படுகின்றனர்.அவர்களில் உம்மு குல்தும் பின் அல் பாதி,கவ்லா பின்த் மன்தூர்,உம்மு பஷீர் பின்த் அபீ மசூத்,ஜூதா பின்த் அல் ஆசாத் ,உம்மு இஷாக் பின்த் தல்ஹா,ஸைனப் பின்த் ஸாபி,பக்லியா,தம்யா ,சபிய்யா ஆகியோர் இமாமின் மனைவியர்களாக பிரபலமாக அறியப் படுகின்றனர்.

இமாமின் மனைவியர் என்று அறிமுகப் படுத்தப் பட்ட இவர்களில் சிலர் இமாமின் வீட்டு பனிப் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இமாமின் வாழ்க்கையை கொஞ்சம் ஆழமாக ஆராயும் பொழுது அவர் நிறைய மனைவியரைக் கொண்டிருந்தார் என்கின்ற பிரமையைத் தோற்று விக்கும் வகையில் அவரது வரலாறு தொகுக்கப் பட்டிருக்கிற விடயம் மெது மெதுவாக புரியத் துவங்குகிறது.

ஒரு தனி நபரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் செய்திகள் நமது செவிகளுக்கு எட்டும் பொழுது அவற்றின் நம்பகத் தன்மையை ஆராய்ந்து முடிவெடுத்து விடயங்களை நம்புமாறு இஸ்லாம் மனிதர்களை வேண்டி நிற்கிறது.

இவ்வகையில் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் கதைகளின் ஆய்வு ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் பொறுப்பாக சுமத்தப் பட்டிருப்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

இவ்வாறான ஆய்வின் பின் விளைவு அந்த மகானின் நற்பெயரை மீள உயிர்ப்பிக்கும் செயல் விளைவாக பரிணாமம் பெறுகிறது.

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு எதிரான கருத்துக்களை முதலாவது சொல்லத் துவங்கிய நபர் அபுல் ஹசன் அல் மதாஇனி என்ற வரலாற்று நூலாசிரியராகும்.

இவர் யார் என்ற ஆய்வில் கிடைக்கும் விடை அதிகமான புதிர்களுக்கு விடையாக அமைந்து விடுகிறது.

இஸ்லாமிய அரசியல் ரீதியில் இவர் பனுஉமையாக்களின் தீவிர ஆதரவாளர்.

பனு உமையாக்களின் அரசியல் ஆதரவாளர்கள் எப்பொழுதும் அஹ்ளுல்பைத்களைத் தமது பரம வைரிகளாகவே கருதி வந்துள்ளனர்.

இந்நிலை அன்றிலிருந்து இந்நிமிடம் வரை தொடர்கின்றது.

அபுல் ஹசன் அல் மதாஇனி நிறைய ஹதீஸ்களை அநாயசமாக புனைந்து சொல்லும் திறனுள்ளவர்.

ஆதலினால் பனு உமையாக்களின் அரசியலுக்கு எதிரான இஸ்லாமிய அறிஞர்கள் அஹ்லுஸ் ஸுன்னத்வல்ஜமாஅத் ஷியா என்ற வேறுபாடுகளின்றி இவரது அறிவிப்புக்களை ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள்.

ஹதீஸ் அறிவிப்பாளர்கள் சம்பந்தமாக எழுதப்பட்டிருக்கும் "மீஸானுல் அக்திதாலில்" இவர் நம்பகமான அறிவிப்பாளர் இல்லை என்றும் இவரது அறிவிப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ஆகவே,அபுல் ஹசன் அல் மதாஇனியின் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி சம்பந்தமான அனைத்து அறிவிப்புக்களும் ஆதாரபூர்வமற்றவை என்பது புரிகிறதல்லவா?

இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லத் துவங்கிய இரண்டாவது அறிவிப்பாளர் 'சபலஞ்சி.'

அவரது நூலான 'நூருல் அப்பாரா'வில் அவர் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி தொண்ணூறு பெண்களைத் திருமணம் செய்து விவாகரத்து செய்ததாக குறிப்பிடுகிறார்.

எழுபது மனைவியர் என்ற கணக்கின் அளவு இப்பொழுது தொன்னூராக மாறி நிற்பதைக் கவனியுங்கள்.

இந்த இருவரை அடுத்து வருகின்ற வரலாற்றாசிரியராக அபுதாலிப் அல்  மக்கி தனது "குவ்வதுள் குலூப்" என்ற நூலில் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி முன்னூறு பெண்களைத் திருமணம் செய்து விவாகரத்து செய்ததாக குறிப்பிடுகிறார்.

நம்ப முடிகிறதா?

அவரது நூலில் இருக்கும் இன்னுமொரு அறிவிப்பு இன்னும் அபத்தமானது.

அதில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"இமாம் அலி வீதியில் செல்லும் மக்களை தடுத்து நிறுத்தி 'என்னுடைய மகன் ஹசனுக்கு உங்களது பெண்களைத் திருமணம் செய்துக் கொடுக்க வேண்டாம் என்று உங்களிடம் நான் கெஞ்சிக் கேட்கிறேன். அவர் எனக்கு நிலையான சங்கடத்தை அவரது செயல்களினால் எனக்கு உருவாக்கி இருக்கிறார். அதனால் என்னால் மக்களை பார்க்கவே தயக்கமாக இருக்கிறது.' என்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்பாராம்.

இமாம் அலி தினமும் இவ்வாறு தெருவில் போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரியும் பொழுது 'அமதான்'கோத்திரத்தை சேர்ந்த ஒரு மனிதர் எதிர்ப்பட்டு இமாம் அலியிடம் 'இமாம் அவர்களே.....நீங்கள் கவலைப்ப்பட வேண்டாம்.நாம் எங்களது கோத்திரத்துப் பெண்களை உங்கள் மகனுக்கு திருமணம் செய்விக்கிறோம்.அவர் விரும்பும் பொழுது அவர்களை விவாக விடுதலை செய்ய முடியும் அப்படி அவர் செய்தவுடன் நாம் எங்களது இன்னுமொரு பெண்ணை அவருக்கு மணமுடித்து வைக்கிறோம்.அவர் அவரையும் விவாக விடுதலை செய்தால் நாம் இன்னுமொரு பெண்ணை அவருக்கு வழங்குகிறோம்'என்று ஆறுதல் சொன்னாராம்.

அதனைக் கேட்ட இமாம் அலி மகிழ்வுடன் குதூகலித்தபடி இப்படி சொன்னாராம்'மறுமையில் நான் சுவனத்து வாசலிலே இருந்து 'அமதான் கோத்திரத்து அனைவரையும் சுவனத்தில் புகச் செய்வேன்'

எவ்வளவு அபத்தமான அறிவிப்பு?

அபுதாலிப் அல் மக்கியின் 'குவ்வதுல்குலூபில்' இருக்கின்ற இன்னுமொரு அநாகரிகமான அபத்தமான ஹதீஸ் இப்படி ஒலிக்கிறது.

"இமாம் ஹசன் ஒரு சபையில் இருக்கின்ற பொழுது அதே சபையில் நான்கு பெண்களைத் திருமணம் செய்து அதே அமர்வில் இன்னும் நான்கு மனைவியரை விவாக விடுதலையும் செய்து விடுவார்."

இது இமாமை நேசிக்கும் மக்களின் நெஞ்சை ரணமாக்கும் கூற்றல்லவா?

இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த நிலையில் அபூதாலிப் அல் மக்கியின் அறிவிப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று தடுத்திருக்கும் செய்தி  ரணமான நெஞ்சுக்கு இதமாக அமைந்துப் போகிறது.

உலகாயுத ஆசைக்கு விலை போன அந்த அறிஞர் தனது அறிவை அப்பாஸிய கலீபாக்களுக்கு விற்று விட்டார்.

அபுதாலிப் அல் மக்கியின் அந்திமக் காலத்தில் அவர் பக்தாத்தில் இருந்தார். அக்காலை அவரது நினைவு தடுமாறி விடுகிறது.

தெருக்களில் சுற்றித் திரியும் அவர் மக்களை நோக்கி அல்லாஹ் சம்பந்தமாக "நீங்கள் பயப்படுவது என்றால் இவனுக்கு பயப்படுங்கள் "என்று சொல்லி வானை சுட்டுக் காட்டுவாராம்.பின்னர் தொடர்ந்து இப்படி சொல்வாராம்."உலகத்தில் நீங்கள் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு அவனே மூலக் காரணம்"

அஹ்ளுல்பைத்களுக்கு எதிராக இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் செய்கை பனு உமையாக்களின் காலத்தில் தொடங்கப் பட்டாலும் அதனை நெறிப் படுத்தி மக்கள் மயப் படுத்திய செய்கை அப்பாஸிய கலீபா அல் மன்சூரின் காலத்தில் தொடங்கப் பட்டது என்ற செய்தி உங்கள் புருவங்களை சுருங்கச் செய்யும்.

இன்ஷா அல்லாஹ் -அடுத்த பதிவில் அந்த உண்மைகளைக்  கவனிப்போம்.

4 comments:

Unknown said...

உங்களுடைய பெயர் பயாஸ் என்றும், இஸ்லாத்தை ஓரளவு அறிந்த நீங்கள், ஈரானில் இருந்து கிடைக்கும் காசுக்காக ஷியாவாக மாறி, கோடரிக் kaampu போல ஆகி, இலங்கை முஸ்லிம்களுக்கு குழி பறித்து, சஹாபாக்களை காபிர் என்று சொல்லும் வழிகெட்ட ஷியா கொள்கையை இலங்கையில் ஊடுருவ வைப்பதாக அறிகின்றேன்.

மரணத்தின் பின் சுவர்க்கத்தை தரப்போவது கொமைநியோ, அஹமதியோ, காமேனயியோ அல்ல, அல்லாஹ்தான் என்பதனை உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.


இந்த எச்சரிக்கைக்கு நீங்கள் மறுமையில் சாட்சியாக இருங்கள்.

அஹ்லுல்பைத் said...

அன்புள்ளம் நிறைந்த சகோதரர் நிசாம்கான் என்னை மறுமையில் சாட்சியாளராக அழைத்தமைக்கு கோடி நன்றிகள்.

வார்த்தையின் வீரியம் புரியாமல் அவர் அப்படி கூறியிருப்பதாக நினைக்கிறேன்.

மரணமும் மறுமை வாழ்வும் இறைவனின் நீதிமன்றமும் விளையாட்டு விடயங்கள் அல்ல என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

// ஈரானில் இருந்து கிடைக்கும் காசுக்காக ஷியாவாக மாறி, கோடரிக் kaampu போல ஆகி, இலங்கை முஸ்லிம்களுக்கு குழி பறித்து, சஹாபாக்களை காபிர் என்று சொல்லும் வழிகெட்ட ஷியா கொள்கையை இலங்கையில் ஊடுருவ வைப்பதாக அறிகின்றேன்.//

மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த தவறான கூற்றுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன்.

ஈரானிடம் இருந்தோ அல்லது வேறு யாரிடம் இருந்தும் நாம் சல்லிக் காசு பெறவில்லை.எங்களது நாயகன் அல்லாஹ் நமக்கு உதவி செய்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வை விடவும் நமக்கு உதவக் கூடிய வேறு யாராவது இருக்கிறார்களா?

இல்லையே......அப்படி நீங்கள் யாரையாவது நினைத்தால் அவ்வாறு நினைக்கப் பட்ட வரும் அல்லாஹ்வின் தயவில்தான் இருக்கிறார் என்ற நிஜத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

அந்த அல்லாஹ் நம்முடன் இருக்கும் பொழுது நாம் எதற்குத்தான் அஞ்சுவது?அல்ஹம்துலில்லாஹ்.

இலங்கை முஸ்லிம்களுக்கு,அல்லது சாதாரண பொது மக்களுக்கு நாம் எவ்வகையான சதியும் செய்யவில்லை.அப்படி செய்வதற்கு நமக்கு தேவை ஒன்றும் இல்லை.

சஹாபாக்களை நாம் காபிர் என்றும் சொல்லவில்லை. அவர்களின் உண்மை நிலையை அல்லாஹ்தான் நன்கறிவான்.

வழிகெட்ட ஷியாக் கொள்கைக்கு நாம் எதிரானவர்கள்.அப்படியிருக்க அந்த வழிகெட்ட ஷியாக் கொள்கையை நாம் பிரதிநிதிப் படுத்த எந்தத் தேவையும் நமக்கு இல்லை.

அத்துடன் தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் சம்பந்தமாக நீங்கள் தரம் தாழ்த்தி கணிப்பிட்டு இருக்கிறீர்கள்.

யாராவது ,ஏதாவது சொன்ன காரணத்துக்காக அவர்கள் எதையும் நம்பி விடப் போவதில்லை.

அவர்களிடம் ஏதாவது சொல்லப் பட்டால் அதனை தீர விசாரித்து அந்த விடயத்தில் உண்மை இருந்தால் மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

நிசாம்கான் சொன்னதற்காக அல்லது பயாஸ் சொன்னதற்காக அல்லது அஹ்லுல்பைத் தளம் சொன்னதற்காக அவர்கள் நம்பிவிடப் போவதில்லை.

உங்களது தவறான அந்த நிலைமையை திருத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் நம்மீது சுமத்தியிருக்கும் பொய்யான இத்தகைய அவதூறுகளுக்கு இஸ்லாமிய நீதிமன்றில் உங்களுக்கு தண்டனை இருக்கும் உண்மையை மறந்து உங்களுடன் என்னை மறுமையில் அல்லாஹ்வின் நீதிமன்றில் சாட்சிக்கு அழைத்து இருக்கிறீர்கள்.

இன்ஷா அல்லாஹ் என்னைப் பற்றி நீங்கள் இவ்வாறு கூறியதற்கு சாட்சியாக நான் இருக்கிறேன்.அத்துடன், வல்ல அல்லாஹ்வின் தர்பாரில் உங்களது இந்தக் கூற்றுக்கு சாட்சிகளை சமர்பிக்க உங்களை நீங்கள் தயார் செய்துக் கொள்ளுங்கள்.

யாரிடமிருந்தாவது நாம் பணம் பெற்றுக் கொண்டு நாம் அறிந்த உண்மைகளை மக்கள் மயப் படுத்துவதாக அல்லது மறைப்பதாக சாட்சிகள் இருந்தால் அல்லது கிடைத்தால் முதலில் அதனை அஹ்லுல்பைத் வாசகர்களுக்கு அனுப்பி வையுங்கள். அதனை நிச்சயமாக நாம் பதிவேற்றுவோம்.

//மரணத்தின் பின் சுவர்க்கத்தை தரப்போவது கொமைநியோ, அஹமதியோ, காமேனயியோ அல்ல, அல்லாஹ்தான் என்பதனை உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.//

நீங்கள் குறிப்பிட்ட இந்தக் கூற்று 100% உண்மையானது என்று நானும் சாட்சிக் கூறுகிறேன். அதற்கு எதிரான மாற்றுக் கருத்து எதுவும் எம்மிடம் இல்லை.

மறுமை வாழ்வின் சுவனத்தின் தலைவர்களான 'அஹ்லுல்பைத் இமாம்களின்' தலைமையை இம்மையில் நாம் ஏற்றிருக்கிறோம்.

அதனால், அந்த நேசத்தினால் அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு மறுப்பு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வேறொன்றும் வித்தியாசமாக நம்மிடம் இல்லை.

மறுமையில் நம்மிருவரின் வெற்றிக்கும் அல்லாஹ்விடம் இருகரமேந்தி, புனிதமான அஹ்ளுல்பைதகளை இம்மையில் நாம் நேசித்துக் கொண்டிருந்தோம்.......இம்மையில் புனிதமான அஹ்ளுல்பைத்களை நேசித்துக் கொண்டிருக்கிறோம்.............இன்ஷா அல்லாஹ் - மரணம் வரும்வரையும் மரணத்தின் பின்னரும் தூய அஹ்ளுல்பைத்களை நேசித்துக் கொண்டிருப்போம் என்ற நமது செய்கைக்கு சாட்சியாக நீங்கள் மறுமையில் இருங்கள் என்று தயவுடன் வேண்டி விடை பெறுகிறோம்.

Unknown said...

சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 சஹாபக்களையும், அவர்கள் சுவர்க்க வாசிகள் என்று ஏற்றுக் கொள்கின்றீர்களா?

ஷியாக்கள் வழிகேடர்கள் என்றும், அவர்களிடம் இருப்பது குர் ஆன் அல்ல என்றும் ஏற்றுக் கொள்கின்றீர்களா?


உமர், உஸ்மான், அபூபக்கர், ஆயிஷா, (ரலி) ஆகியோர் முஸ்லிம்களில் மென்மையானவர்கள் என்றும், சுவர்க்கவாதிகள் என்றும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அஹ்லுல்பைத் said...

Mr.Nizam Khan .......முதலில் ஈமான் தொலைத்த கருத்துக்களை சொல்வதில் நின்றும் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

உலகத்தில் ஷியாக்களிடம் ஒரு குர்ஆன் இருப்பதாகவும் சுன்னிகளிடம் இன்னுமொரு குர் ஆன் இருப்பதாகவும் நினைப்பது,சொல்வது,அவ்வாறான தவறான கருத்தைப் பரப்புவது இறை நிராகரிப்பை வேண்டி நிற்கும் ஈமான் இல்லாத செயலாகும்.

உங்களிடம் நாம் 2013 ஜனவரி ஆறாம் திகதி நீங்கள் எம்மீது சுமத்தும் அபாண்டப் பழிக்கு ஆதாரம் கேட்டிருந்தோம்.

நமது பதிவின் தலைப்பு இப்படி இருந்தது.

//ஷியாக்களின் அல் குர்ஆன் ------சுன்னிகளின் அல் குர்ஆன்...........என்று சொல்லும் சகோதரர் இம்தியாஸ் சலபியின் அன்பான கவனத்திற்கு............//

பதிவினை இவ்வாறு ஆரம்பித்திருந்தோம்...........

//நமது பதிவொன்றுக்கு பின்னூட்டம் எழுதிய நமது இஸ்லாமிய சகோதரர் நிசாம்கான் இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஷியாவும் சுன்னியும் ஒன்றல்ல. ஷீயா என்பது இஸ்லாத்தை அழிப்பதற்காக யூதர்களால் உருவாக்கப் பட்ட ஒரு மதமாகும். ஷீயா வேத நூல, அல்லா அருளிய அல் குர் ஆன் அல்ல. மாறாக யூதர்கள் தயாரித்துக் கொடுத்த ஒரு நூலாகும், அந்த நூலிலே குர் ஆணுடைய பல ஆயாத்துகள் இணைக்கப் பட்டுள்ளன. அதிலே யூதர்கள் தயாரித்துக் கொடுத்த வசனங்கள் நிறையவே உள்ளன. ஷீயாக்கள் பற்றி அறிந்து கொள்ள, http://www.facebook.com/groups/356484054391251/ இற்கு இணையவும். இந்தத் தளத்தின் மின்னஞ்சல் முகவரி ஏன் பகிரங்கமாக இல்லை? தயவு செய்து மின்னஞ்சல் முகவரியை போடவும்.

முஸ்லிமான நீங்கள் ஈரான் எம்பஸி தரும் காசுக்காக இஸ்லாத்தை விற்க வேண்டாம். பணத்துக்காக ஷீயாவாக மாறிய உங்களுக்கு, ஈரான் பணத்தில் சுவர்க்கத்தை வாங்க முடியாது.//

பதிவின் இறுதியில் இப்படி முடித்தோம்........

//கூடவே......."பணத்துக்காக ஷீயாவாக மாறிய உங்களுக்கு, ஈரான் பணத்தில் சுவர்க்கத்தை வாங்க முடியாது..........." என்று நம்மிடம் சொல்பவர்களிடம் நாம் இப்படி திருப்பிக் கேட்கிறோம்?????

உங்களால் முடிந்தால் ஈரானிடம் அல்லது இலங்கையில்...இந்தியாவில்.......உலகத்தில் யாராவது ஒருவரிடம் நமது அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துக்கு பிரதியீடாக ......அல்லது நமது வேலைக்கு கூலியாக ஒரு ரூபாவையேனும் பெற்றுக் கொண்டதாக நிரூபியுங்கள்.........

இன்ஷா அல்லாஹ் நாம் நமது அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்தை மூடி விடுகிறோம்.//

Mr.Nizam Khan .......முதலில் ஒன்பது மாதத்துக்கு முன்னர் ஆடிய ஆட்டத்தை முடித்து விட்டு புதிய ஆட்டத்துக்கு வாருங்கள்.

அதனை விட்டு விட்டு பொரித்த மரவள்ளி கிழங்கை சுவைத்து சப்புக் கொட்டி அரைத்த மாவையே அரைத்து உங்களது நேரத்தையும் எங்களது நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.

மிக முக்கியமான இன்னுமொரு செய்தி யாதெனில் திருவாளர் நிசாம்கான் அவர்களும் பயாஸ் ஆகிய நானும் நாளை மறுமையில் அல்லாஹ்வின் நீதிமன்றில் ஆஜாராக வேண்டுமென்று தாங்கள் விரும்பியிருப்பதால் நாம் இருவரும் அதற்குத் தயாராகுவோம்.

அஹ்லுல்பைத் தளத்தைக் கேலிக்குறியதாக மாற்ற நினைக்கும் உங்களை இம்மையிலோ அல்லது மறுமையிலோ மன்னிக்க நான் தயாராக இல்லை.

மறுமையிலே அஹ்லுல்பைத் ஆதரவாளனாக நானும் அஹ்ளுல்பைத்களின் எதிரியாக உங்களையும் சந்திக்க விரும்புகிறேன்.

அப்பொழுது நமது கணக்கை தீர்த்துக் கொள்வோம்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad