அஹ்லுல்பைத் Headline Animator

Monday, March 10, 2014

மனித நேயம் தொலைந்துப் போகும் இன்னொரு தருணம்.....






மனித நேயம் தொலைந்துப் போகும் இன்னொரு தருணம்.....

இலுமினாட்டி இரகசிய அமைப்பினர் வேதங்களுக்கும் அவை சொல்லும் போதனைகளுக்கும் எதிரானவர்கள்.

இறைவன் அருளிய வேதங்கள் என்று மனித குலம் விசுவாசிக்கும் இறைவனின் வேதங்களுக்கிடையில் வேற்றுமையை உருவாக்கி அவர்களை ஒருவருக்கொருவர் மோத வைப்பதில் அவர்கள் கில்லாடிகள்.

அவர்கள் தங்களது ஆளுமையில் இருக்கும் மத்திய கிழக்கு ஆதரவு ஸ்லீப்பர் செல்ஸ் முஸ்லிம் போராளிகளை இஸ்லாமிய ஆபிரிக்கா என்ற கானல் நீர் ஆபிரிக்க கனவு கிலாபாவை காட்டி ஆபிரிக்காவில் இறக்கி அடிப்படைவாத அப்பாவி முஸ்லிம்களையும் பின்னர் அப்பாவி கிறிஸ்தவர்களையும் கொலை செய்யத் தூண்டினார்கள்.

அப்படியே நடந்தது.

முஸ்லிம் கிறிஸ்தவ அப்பாவிகள் தமது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பிடம் தேடி ஓடினார்கள்.

போராளிகள் மிதப்புடன் நின்றார்கள்.

இந்நிலையில், அந்த இலுமினாட்டி அமைப்பினர் முஸ்லிம் முஜாஹிதீன்களின் ஆக்கிரமிப்பில் இருந்து கிறிஸ்தவ மக்களைக் காப்பாற்ற அவர்களில் இருந்து கிறிஸ்தவ ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களைத் தெரிவு செய்து அவர்களை கிறிஸ்தவப் போராளிகளாக உருவாக்கி அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்றொழிக்கும் இன்னுமொரு நாடகத்தை மத்திய ஆபிரிக்கக் குடியரசில் நடாத்தத் துவங்கினார்கள்.

ஆட்டம் சூடு பிடித்தது.

ஒரு மதத்தவரை இன்னுமொரு மதத்தவர் வேட்டையாடும் நரபலி ஆட்டம் மதத்தை விசுவாசிப்பவர்களின் பாதுகாப்பு என்ற அழகான பெயரில் நடைபெறத் துவங்கி இருக்கிறது.

அப்பாவி பொது மக்களையும், ஏனைய மத நம்பிக்கையில் வாழும் மக்களையும் கொலை செய்வதற்கு இறைவனின் வேதங்கள் எதிரானவை.

இஸ்லாம் மட்டுமல்ல, அனைத்து மதங்களும் இந்து,கிறிஸ்தவ,பௌத்த மதங்கள் அனைத்தும் இத்தகைய ஆக்கிரமிப்பு அக்கிரமத்துக்கு எதிரானவையாகும்.

இந்த உண்மையை ஸ்லீப்பர் செல்ஸ் போராளிகள் உணர மாட்டார்கள்.

இத்தகைய ஸ்லீப்பர் செல்ஸ் போராளிகள் அனைத்து மதங்களிலும் வெவ்வேறு பெயர்களில் உலா வருகிறார்கள்.

நீங்கள் காணப் போகும் கானொளியில் மத்திய ஆபிரிக்க குடியரசினை சேர்ந்த அப்பாவி முஸ்லிம் பொது மக்களை பாதுகாப்பான இடமொன்றுக்கு அந்நாட்டு இராணுவம் கொண்டு செல்ல முனைகிறது.

ஆனால், கூப்பிடு தொலை தூரத்தில் அப்பாவி கிறிஸ்தவ மக்களைக் காப்பாற்ற கங்கணம் கட்டி களமிறங்கியிருக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் கிறிஸ்தவ போராளிகள் அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்யவும் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

தூக்கம் தொலைக்கும் நிஜமான இந்த நிஜத்தை சொல்லும் இக் கானொளியினை புத்திஜீவிகளின் ஆய்வுக்கு சமர்பிக்கிறோம்.

தமிழ் பேசும் கிறிஸ்தவ,இந்து,முஸ்லிம்களால் மட்டுமே உலகில் நடைமுறையில் இருக்கும் இந்த அபாக்கியமான ........துரதிர்ஷ்ட நிலையினை போக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

ஏனெனில், தமிழ் பேசும் மக்கள் கல்வி அறிவில் மற்றவர்களை விடவும் ஓரடி முன்னேறியவர்கள்.

ஆகவே,தமிழ் பேசும் மக்களை மடையர்கள் என்று கருதும் மார்க்க அறிஞர்கள் அனைவரும் வடி கட்டிய மடையர்கள் என்பதை அவர்களுக்கு புரியவைக்க உங்களது கூட்டணியின் கூட்டு அவசியம் என்று உணர்கிறோம்.

2 comments:

Kalmunai Khaleel Rahman said...

மிக அருமையான ஆக்கம். உங்களது ஆக்கங்கள் எங்கே? ஏன் நீங்கள் தொடராமல் இருக்கின்றீர்கள்? ஏன ஏங்கிக் கொண்டிருந்தவேளை இதோ நான் எங்கும் போகவில்லை என்பதை உணர்ததியிருக்கின்றீர்கள்.
தயவுசெய்து இடைவிடாமல் உங்கள் பணியை தொடருங்கள்
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்களும் துஆக்களும்

Dr.Anburaj said...

ஆகவே,தமிழ் பேசும் மக்களை மடையர்கள் என்று கருதும் மார்க்க அறிஞர்கள் அனைவரும் வடி கட்டிய மடையர்கள் என்பதை அவர்களுக்கு புரியவைக்க உங்களது கூட்டணியின் கூட்டு அவசியம் என்று உணர்கிறோம்.

தமிழ் பேசும் காபீர்களின் கூட்டு எதற்கு ? உறவாடி போட்டுத்தள்ளவா ?

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad