அஹ்லுல்பைத் Headline Animator

Monday, July 4, 2011

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்!... 'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்??????????


அன்னை ஆயிஷா  (ரலி) அவர்களின் பெயரைக் கெடுத்த 'ஜமல்' யுத்தம்!...
'ஜமல்' யுத்தத்தின் மறைக்கப் பட்ட இன்னொரு பக்கம்??????????


நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள் 'சஹாபாக்கள்' என எம்மால் மரியாதையுடன்  நினைவு கூறப் படுகிறார்கள்.

அந்த சஹாபாக்களில் நபி (ஸல்) அவர்களின் தூதை உள்ளத்தில் உண்மையாக ஏற்றுக் கொள்ளாமல், நயவஞ்சகத் தனத்தை நெஞ்சில் நிறைத்து  இருந்த முனாபிகான சஹாபாக்கள் நிறையவே இருந்து இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுடன் இந்த முனாபிகான சஹாபாக்கள் முஸ்லிம் சமூகத்தில் தமது ஆளுமையை, திரை மறைவில் தீட்டும் சதிகளின் மூலமும், அந்தச் சதிகளை 'வாளின்' துணை கொண்டும்    நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

முஸ்லிம் உம்மாவின் ஆட்சியாளர்களாக இந்த நயவஞ்சக சஹாபாக்கள் அரசேறிய காரணத்தினால், இவர்கள் இஸ்லாமிய வரலாறை தமக்கு தோதாக மாற்றி எழுதிக் கொண்டார்கள்.

இந்த ஊடகவியலின் வலிமையால் நாம் இன்று வரை பொய்களினால் பின்னப் பட்ட ஒரு மாயையில் எம்மையே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.


நயவஞ்சக சஹாபாக்கள் தம்முடைய செய்கைகளில் நாம் குறை கண்டு, அவர்களை இனம் கண்டு விடுவோம் என்கிற அச்சத்தில், "சஹாபாக்கள் மாசு மருவற்றவர்கள். அவர்களின் செய்கைகளை நாம் ஆராயக் கூடாது.அவர்களை நாம் விமர்சிக்கக் கூடாது" என்கிற சஹாபாக்களை மாத்திரம் தனித்துவமாகக் கொண்ட ஒரு வகையான 'மாயப்' பிரச்சாரத்தை முஸ்லிம் 'உம்மாவில்' தொடக்கி வைத்தார்கள்.

அன்று முதல் இந்த நிமிடம் வரை அவர்களின் ஆதரவாளர்களான 'உலமாக்களைக்' கொண்டு அத்தகையப் பிரச்சாரங்கள்   எங்கள் மத்தியில் அவர்களின் அடிவருடிகளினால் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்யப் பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இதன் காரணமாக உண்மையான சஹாபாக்களின் தியாகங்கள் முஸ்லிம் சமூகத்தில் மிக இலாவமாக   மூடி மறக்கடிக்கப் பட்டு விட்டன.

இந்த உலகத்தை துறந்து செம்மையாக வாழ்ந்த அவர்களின் முன் மாதிரியான எளிமையான வாழ்க்கை வரலாறுகளை கொச்சைப் படுத்தும் வகையில், இந்த உலகத்தில் மோகம் கொண்ட சஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகள் எமக்கு முன் மாதிரியாக சொல்லப் பட்டு வந்துள்ளன.


இமாம் அலியுடைய நேரிய தலைமைத்துவத்தை, அவரது சீரிய வாழ்க்கை நெறியினை  மக்கள் மத்தியில் மறக்கடிக்கப் படுவதன் மூலம் நாம் ஒரு முன்மாதிரியான தலைவரை எங்களது சமூகத்துக்கு இனம் காட்டப் படுவதை விட்டும் தடுக்கப் பட்டு விட்டோம்.

அன்னை கதீஜா அலைஹா சலாம் அவர்களது துணிகரமான பெண்ணியலின் ஆளுமையையும், அவரது பிரமாண்டமான அதே சமயம் மிகவும் வெற்றிகரமான வாழ்வியலையும் எங்களது பெண்களுக்கு முன் உதாரணமாக இனம் காட்டப் படுவதின் நின்றும் தடுக்கப் பட்டதன் விளைவாக பெண்ணியலின் அடக்கு முறைக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி சோரம் போய் விட்டோம்.


அன்னை பாத்திமா அலைஹா சலாம்   என்கிற,தகப்பனார் மீது அதீத அன்பு கொண்ட , கணவனுக்கு முற்றிலும் அடிபணிந்த மிக எளிமையான ஒரு பெண்ணை இஸ்லாமிய வரலாற்றில்  ஆங்காங்கே காண்கிறோம்.

அவரது மெல்லினத்தை மீறிய, அடக்கு முறைக்கு எதிராக எழுந்து நின்ற  துணிகரமான இன்னொரு பிரமாண்ட
பாத்திமாவை உமையாக்களின் இஸ்லாமிய வரலாறு எமக்கு மறைத்து விட்டது.


பெண்ணினத்தின் அரசியல் அடக்கு முறைக்கு எதிராக எழுச்சி மிக்க அரசியல் வடிவெடுத்த அவரது நிஜங்கள் மறைக்கப் பட்டு அலட்சியப் படுத்தப் பட்டன.

இதன்   காரணத்தால் நாம் இஸ்லாமிய பெண் அரசியலுக்கு அச்சொட்டான முன் உதாரணமான ஒரு மாதரசியின் பெண் உரிமை வரலாறுகளை நினைவு படுத்தப் படுவதின் நின்றும் மறக்கடிக்கப் பட்டு விட்டோம்.

மக்களின் அடக்கு முறைக்கும் அநீதமான அரசியல் ஆட்சி முறைக்கும் எதிராக எழுந்து நின்ற இமாம் ஹுசைனுடைய தன்னலம் இல்லாத தியாகத்தை நாம் விமர்சனத்துக்கு உட்படுத்தி அவரது செயல்களில் தவறு காண நிர்ப்பந்திக்கப் பட்டோம்.


இதன் காரணமாக அடக்கு முறைக்கு எதிரான ஒரு தலைவரின் குணவியல்புக்கு  அடையாளமான ஒரு தலைவரை எங்களது சமூகத்துக்கு முன் மாதிரியாக காட்டுவதின் நின்றும் தவிர்ந்துக் கொள்ள நிறப் பந்திக்கப் பட்டோம்.

இத்தகைய அரசியல் வடிவங்களுக்கு நிஜத்தில் திட்டம் தீட்டியவர்கள் யார்?

அவர்களை நாம் அடையாளம் காண முற்படுகையில் பல நயவஞ்சக சஹாபாக்கள் எங்களது ஏமாளித்தனத்தைப்  பார்த்து எங்கள் முன்னால் கேலியாக எம்மைப் பார்த்து நகைக்கிறார்கள்.


இந்த நயவஞ்சக சஹாபாக்களின் திட்டமிட்ட சதியினால் பாதிக்கப் பட்டவர்கள் அஹ்ளுல்பைத்களாகும்.

அஹ்ளுல்பைத்களுக்கும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையில் இருந்த உறவு முறைகளை முரண் பட்டதொன்றாக காட்டுவதில் அவர்கள் பெரிதும் வெற்றியடைந்து இருக்கிறார்கள்.

அவர்களது இத்தகைய தரக் குறைவான செய்கையினால் , அன்னை ஆயிஷா (ரலி)  அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கப் பட்டு இருக்கிறது.

இஸ்லாமிய வரலாற்றில் அன்னை ஆயிஷா (ரலி ) அவர்களை
உலகளாவிய முஸ்லிம் உம்மா   அவரை இரண்டு முகம் கொண்டு கவனிக்கிறது.

உமைய்யா, அப்பாசியா மன்னராட்சிகளுக்கு சிரம் பணிந்த அக்கால அறிஞர்களும்,மேற்குலகின் மறைமுக சக்திகளுக்கு சோரம் போன இன்றைய
நமது காலஅறிஞர்களும் ஒரு பக்கம் எடுத்து ஒரு கருத்தியலில் அவரது நல்ல பெயரை இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த அறிஞர்கள் அன்னையாரை போற்றிப் புகழ்ந்து அன்னையாரின் வாழ்க்கை வரலாறுகளை தங்களது செயல்களுக்கு ஆதாரமாக அங்கீகரித்து புரட்சிகரமான பத்வாக்களை வெளியிட்டு எங்களை பிரித்து குழப்புகிறார்கள். 

அத்தகைய அறிஞர்களின் புனித அல்குரானுக்கு முரணான அனைத்து பத்வாக்களுக்கும் ஆதாரமாக  
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீத் அறிவிப்புகளே மேற்கோள் காட்டப் படுவது இதற்கு போதுமான அத்தாட்சியாகும்.

இந்த வழி தவறிய கூட்டத்துக்கு அவர் முன் மாதிரியான 'கதாநாயகி.'


அதே சமயம் முஸ்லிம் உம்மாவில் இன்னுமொரு பிரிவினரோ இதற்கு நேர் மாற்றமான நிலையில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கிடைத்த வரலாற்று ஆதாரங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிரானவை.

அது மட்டுமன்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் தீவிர ஆதரவாளர்களின் வரலாற்று பதிப்புகளிலும் அன்னாருக்கு எதிரான செய்திகளின் வீரியம் தான் அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக இந்தக் கூட்டத்தினருக்கு அன்னயவர்களின் வாழ்வியல் ஒரு வில்லியின்  தோரணையில் சித்தரிக்கப் படுகிறது.

அன்னயவர்களைப் பற்றிய தவறான கருத்துக்களுக்கு அடிப்படையாக பனு உமைய்யாக்களின் நச்சு அரசியல் இருந்தாலும் அது மிகவும் சூட்சுமமாக மறக்கடிக்கப் பட்டு அன்னையாரின் பெயரில்  அவர்  செய்யாத  தவறுகளே இமாலயமலைப் படுத்தி சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.

விளைவு?

அக்கால பனு உமைய்யா நச்சு அரசியலில் பாதிக்கப் பட்ட மிகப் பிரபலமான பல முக்கிய சஹாபாக்களில்,  அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் திட்டமிடப் பட்ட முறையில் உள்வாங்கப் படுகிறார்கள்.


இதன் காரணமாக இஸ்லாமிய வரலாற்றில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பற்றி நினைவு கூறப் படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் பொழுதும்,  அவர்கள் நேரிடையாக இமாம் அலியுடன் முரண் பட்ட ஒருவர் என்கிற விதமாக சித்தரிக்கப் பட்டு இருப்பதைக் கவனிக்க முடியும்.

ஆனால், இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும்  ஒவ்வொன்றாக பிரித்து எடுத்து மிகவும் நுணுக்கமாக ஆராயும் ஒருவருக்கு , இந்த கருத்து மிகவும் தவறானது என்று மிக இலகுவாக புரிந்து போகும்.


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் 'ஜமல்' யுத்தத்துக்கு இமாம் அலியை எதிர்த்து தலைமை தாங்கி சென்றார்கள் என்று வரலாறு எமக்கு சொல்லிவைக்கப் பட்டது.

சுன்னத் வல் ஜம்மாத்தினர்கள் ஷியாக்கள் என்ற பாகு பாடு இன்றி முழு முஸ்லிம் உம்மாவின் அறிஞர்களும் ஒரே குரலில் இந்தக் கருத்தில் மிக ஆச்சரியமாக ஒன்று பட்டிருக்கிறார்கள்.


ஒரே இஸ்லாத்தில் வேற்றுமையான இரண்டு அரசியல் கருத்தியலில்  பிளவு பட்டு உலகில் மிகவும் பலமான நிலையில் இருக்கின்ற இந்த இரண்டு கூட்டத்தினர் அதிசயமாக  அன்னை ஆயிஷா (ரலி) பற்றிய இந்த விடயத்தில் மட்டும் ஒன்றிப் போவது உங்களுக்கு சந்தேகத்தை தோற்றுவிக்க வில்லையா?

அதிசயமான இந்த ஒற்றுமை இதன் பின்னணியில் ஏதோ மர்மம் புதைந்து இருப்பதை உணர்த்தவில்லையா?

ஆனால், அஹ்லுல் பைத்களின் பன்னிரண்டு இமாம்களும் ஷியாக்களின் முக்கிய முஜ்தகித்களும் இந்தக் கருத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்  உமையாக்களின் நச்சு அரசியலுக்கு பலியானவர்கள் என்ற கருத்திலேயே இருப்பது எங்களுக்கு கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு விட வைக்கிறது.

இனி , 'பசரா மறியல்' சம்பந்தமாக வரலாற்றில் பதிவாகி இருக்கும் இந்தக் கதையையும் கொஞ்சம் கவனிப்போம்.
உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் யெமன் தேசத்தின் கவர்னராக பனு உமய்யாக்களைச் சேர்ந்த 'யால' என்பவரை நியமித்து இருந்தார்கள்.

இமாம் அலி ஆட்சிப் பொறுப்பை எடுத்தவுடன் ஊழல் குற்றச்சாட்டு உள்ள பல கவர்னர்களை பதவி நீக்கம் செய்தார்கள்.

அப்படி பாதிக்கப் பட்டவர்களில் பனு உமையாக்களைச் சேர்ந்த இந்த 'யால' யும் ஒருவர்.

இந்த மகா புண்ணிய புருஷர் தான் பதவியில் இருந்து விலக்கப் பட்டதும், 
தனது ஆளுமையில் இருந்த முஸ்லிம் உம்மாவின் பைத்துல் மாலில் இருந்து பெருந் தொகையான கருவூலங்களை சுருட்டிக் கொண்டு மர்வானிடம் ஓடி வந்தார்.

கொள்ளையடித்த தனது செல்வத்தைப் பாதுகாக்க இந்த திருட்டு ஆசாமி உடனே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் மர்வானின் செல்வாக்கின் மூலமாக கூட்டு சேர்த்து வைக்கப் பட்டார்.

இந்த கொள்ளைக்காரன் தான் திருடிக் கொண்டு வந்திருந்த கொள்ளைப் பொருளில் இருந்து ஒரு சிறிய அளவுத் தொகையை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கொடுத்ததாக வரலாற்றில் உமையாக்கள் உடைய வரலாற்று நிபுணர்கள் பதிந்து வைத்து இருக்கிறார்கள்.

அதன் படி, அறுபதினாயிரம்  திர்ஹம்களும்,அறு நூறு ஒட்டகங்களும், அதில் மிகவும் பெறுமதி வாய்ந்த அதாவது சுமார் இரு நூறு தங்க நாணயங்கள் பெறுமதி வாய்ந்த ஒரு ஒட்டகத்தையும் இவன் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறாராம்.

'அல் அஸ்கர்' என்ற பெயருள்ள அந்த ஒட்டகம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவரது தனிப் பட்ட பயனத்துக்காக வழங்கப் பட்டிருக்கிறது.

'அல் அஸ்கர்' என்றால், படையணி என்றொரு பொருளும்   உண்டு.

சாதாரண ஒரு ஒட்டகத்துக்கு யாராவது ஒருவர் 'படையணி' என்கிற கருத்தில் பெயர் வைப்பார்களா?

அப்படி வைக்க என்ன தேவை இருக்கிறது?

இந்த ஒட்டகத்தில் அன்னையவர்கள் ஏறிச் சென்றதன் காரணமாகத்தான் அந்த யுத்தம் 'ஜமல்' யுத்தம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது.

ஹசரத் உதுமான் (ரலி) அவர்கள் சதிக் காரர்களினால் படு கொலை செய்யப் பட்டதன் பின்னர் அந்த செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.

அப்பொழுது மக்காவில் இருந்து புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு மதீனாவுக்கு திரும்பிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா  (ரலி) அவர்களுக்கு இடை வழியில் வைத்து இந்த விடயம் கேள்விப் படுகிறது.

இமாம் அலி முஸ்லிம் உம்மாவின் ஏகோபித்த தலைவர் என்கிற விடயமும் அவருக்கு கிடைக்கிறது.

வரும் வழியில் அவர் அவரது மைத்துனர்களான தல்ஹா (ரலி) அவர்களையும் ஸுபைர் (ரலி) அவர்களையும் அவர் சந்திக்கிறார்.

தல்ஹா (ரலி) , மற்றும் ஸுபைர் (ரலி) ஆகியோர் அப்போதிருந்த சஹாபாக்களில் மிகவும் முக்கியமானவர்கள்.

இந்த மூவரும் திரும்பவும் மக்காவுக்கு திரும்புகின்றனர்.

இவர்கள் அப்போதைய மக்காவின் கவர்னரான உமைர் அல் ஹத்ரமியுடைய வீட்டில் அவரது விருந்தினராக தங்குகின்றனர்.

உமைர் அல் ஹத்ரமியை மக்காவின் கவர்னராக ஹசரத் உதுமான் (ரலி) நியமித்து இருந்தார்.இவர் உமையாக் குடும்பக் கிளையினராவார்.

இந்த முக்கிய விருந்தாளிகளுடன் மர்வான் இப்னு அல் ஹகமும் ஏனைய உமையாக் கிளையினரும் ஒன்றாக தங்குகின்றனர்.

அன்று, மக்கா கவர்னரின் வீட்டில் முக்கியமான இந்த அங்கத்தவர்களின் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டு முஸ்லிம் உம்மாவின் நிலைமைப் பற்றி ஆராயப் படுகிறது.

கூட்டத்தில் பங்கு பற்றியவர்களில் தொண்ணூறு சத விகிதமானவர்கள் பனு உமையாக்கள்.

பனு உமையாக்களின் தலைமைத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கும் அப்போதைய கட்டத்தில் அவர்கள் நிச்சயமாக இழந்து போகின்ற அவர்களது தலைமையை எப்படி மீள தக்க வைத்துக் கொள்வது என்றுதான் யோசித்து இருப்பார்களே தவிர, முஸ்லிம் உம்மாவைப் பற்றி கொஞ்சமும் சிந்தித்து இருக்கப் போவது இல்லை.

 எனவே, அந்தக் கூட்டத்தில் கூட்டத்தில் அவர்கள் எதைப் பற்றி கவலைப் பட்டிருப்பார்கள் என்று உங்களால் ஊகித்துக் கொள்ள முடியும் என்று எண்ணுகிறோம்.

அந்த இரகசிய கூட்டத்தில் எடுத்த சில முடிவுகளை செயல் படுத்துவதற்காக அடுத்த நாள் அவர்கள் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் 'பசரா'வுக்கு புறப்படுகிறார்கள்.

அவர்களுடன் அன்னை ஆயிஷா (ரலி), தல்ஹா(ரலி) , ஸுபைர் (ரலி) ஆகியோரும் இருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தை மக்காவின் கவர்னர் உமைர் அல் ஹத்ரமியின் கவர்னர் அலுவலகத்தில் மர்வானின் தலைமையில் ஒழுங்கு படுத்தியவர்கள் பனு உமையாக்கள்.

பனு உமையாக்களின் முக்கிய பொறுப்பில் அப்பொழுது இருந்தவர் மர்வான் இப்னு ஹகம்.அடுத்தது சிரியாவின் கவர்னர் முஆவியா.

ஆக, பசரா நோக்கி பயணித்த இந்தக் கூட்டத்தினரின் நிஜமான தலைவர் மர்வான் இப்னு ஹகம் என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும்.

அன்னை ஆயிஷா (ரலி) இவர்களுடன் ஒன்றாக சென்றார் என்பதைத் தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை என்பது இப்பொழுது புரிந்து இருக்கும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வலது புறம் தல்ஹா (ரலி) அவர்களும் இடது புறம் ஸுபைர் (ரலி) அவர்களும் அன்னைக்கு பாதுகாப்பாக சென்றார்கள்.

சுமார் ஆயிரம் பேர் இந்தப் பயணத்தில் இவர்களுடன் இருந்தார்கள்.

அந்த ஆயிரம் பேரும் தமது உடை வாளை தம்முடன் எடுத்துச் சென்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.ஏனெனில், உடை வாள் என்பது அராபிகளின் கலாச்சாரத்தின் அடையாளம் . அவர்களின் வீரத்தின் சின்னம்.

ஒவ்வொரு அரபியும் எப்பொழுதும் அவனுடன் அவனது உடை வாளை வைத்துக் கொண்டுதான் இருப்பான்.

ஆகவே , வாட்களுடன் அவர்கள் சென்றார்கள் என்பதற்காக அல்லது அந்தக் கூட்டத்தினர் தமது உடை வாளுடன் ஒன்றாக கூட்டமாக சென்றார்கள் என்பதற்காக அவர்களை போர் வீரர்கள் என்றோ அல்லது படையணியினர் என்றோ அழைக்க முடியாது.

இது தவிர அவர்கள் அனைவரும் மக்காவில் புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு செல்லும் ஹஜ் யாத்திரிகள்  என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

இப்பொழுது நாம் மீண்டும் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது 'அல் அஸ்கர்' என்கிற ஒட்டகத்துக்கு வருவோம்.

அன்னையார் ஏறிச்சென்ற ஒட்டகத்தின் பெயர் 'படையணி' என்கிற கருத்தை தருகிறது.

இந்த நிலையில் அன்னயவர்களின் வருகையை தூர இடத்தில் இருக்கும் ஒருவர் இன்னொருவரிடம் கூறும் பொழுது "உம்முஹாதுல் மூமினீன் "
தனது 'படையணியுடன்' பசராவுக்கு வருகிறார் என்றுதான் கூறுவார்களே தவிர ஹஜ் யாத்திரிகர்களுடன் வருகிறார் என்று கூற மாட்டார்கள்.

பசராவிலும் யாராவது ஒருவர் அன்னையாரின் வருகைப் பற்றி இன்னுமொருவரிடம் வினவினால், அவர் 'படையணியில்' வந்தார்
என்றே குறிப்பிடுவார்.

ஒட்டகத்தின் பெயர்தான் படையணி என்கிற விடயம் ஒட்டகத்துக்கு பெயர் வைத்தவர்கள்தான் அறிவார்களே  தவிர அப்பாவி பசராவாசிகள் அதை அறிய மாட்டார்கள்.

இந்த ஒட்டகத்தின் பெயரில் திணிக்கப் பட்டிருக்கும்
அசிங்கமான அரசியல் இலாவகம் புரிகிறதா?

ஆனால், மர்வானின் தலைமையில் இருந்த பனு உமையாக்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை எத்தகைய காரணத்தை சொல்லி பசராவுக்கு அழைத்து சென்றார்கள் என்பதைப் பற்றி தெளிவான கூற்றுக்கள் எதுவும் கிடைக்க வில்லை.

இந்தக் கேள்விக்கான விடை பின்னால் கிடைத்தது.

அதற்கு அச்சாரமாக இந்த பனு உமையாக் கூட்டத்தினர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சுமத்திய அபாண்டமான அவதூறுகள் இன்னமும் பனு உமையாக்களின் அடிவருடிகளினால் உயிர்ப்பிக்கப் பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அவைகளை பின் வருமாறு குறிப்பிடலாம்.

 1 ) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பசரா நோக்கி சென்ற இந்தப் படையினரை தலைமைத் தாங்கி அழைத்துச் சென்றார்கள்.

 2 )    அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் யெமன் தேசத்தின் கவர்னர் யாலயிடம் இருந்து அறுபதுனாயிரம் திர்கம்களும், அரு நூறு ஒட்டகங்களும், இருநூறு தங்க நாணயங்கள் பெறுமதி வாய்ந்த 'அல் அஸ்கர்' என்ற ஒட்டகத்தையும் அன்பளிப்பாக பெற்றுக் கொண்டார்கள்.

3 ) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் சுமார் ஆயிரம் போர் வீரர்கள் ஆயுதம் தரித்து பசராவுக்கு தமக்கு ஆதரவு தேடி அணிவகுத்து சென்றனர்.

4 ) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வடதும் இடதுமாக தல்ஹா(ரலி) அவர்களும் ஸுபைர் (ரலி ) அவர்களும் அணி வகுத்து தலைமைதாங்கி சென்றனர்.      

இனி, இமாம் அலி அவர்களுக்கு மர்வான் இப்னு ஹகமின் தலைமையில் பசரா நோக்கி செல்லும் இந்தக் கூட்டத்தினரின் பயணம் பற்றிய செய்தி கிடைக்கிறது.

பசரா நோக்கி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மர்வான் இப்னு ஹகம் எதற்காக அழைத்து செல்கிறான் என்கிற அவனது உள் நோக்கம் இமாம் அலிக்கு புரிந்து போகிறது.

முஸ்லிம் உம்மாவின் நிஜமான இமாம் அல்லவா அவர்.

உடனே இமாம் அலி அவர்கள் மர்வானின் தலைமையில் பசராவுக்கு செல்லும் இந்தக் கூட்டத்தினரைப் பின் தொடர்கிறார்கள்.

இமாம் அலி தம்மை பின் துயரும் செய்தி இந்தக் கூட்டத்தினருக்கு எட்டுகிறது.

உடனே அவர்கள் தமது தமது பாதையை  மாற்றி குறுக்கு வழியாக பசரா நோக்கி பயணிக்கின்றனர்.

(இன்னமும் வரும்)

1 comment:

Dr.Anburaj said...

Mohammed who had hated Sanyasam/celibasy through out his life, imposed that on his nine living wifes -They are " Mothers of Muslim Jamat". Indian rules whose religion is Arabian, did practice heinous " Karimath" -abducted /raped and sold Hindu women in other Muslim countries.But Maharaja Chathrapathi shivaji on being presented with a Beautiful Muslim religion- whose religious Koran says Have sex with Captive women - told his men " Had my mother been as beautiful as this women, I would have been more handsome than now.After severe warning against such ill treatment of women , Shivaji Maharaj gave her safe custody and ordered hand over that Girl to her relativies, at once.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad