அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, November 2, 2011

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டிகள்....?????????

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டிகள்....??????????


எம்முடைய இணைய முகவரிக்கு அடுத்தடுத்து நான்கு பின்னூட்டங்கள்.

இரண்டு  இந்து மத சகோதர்களின் பெயரில் ஒளிந்திருந்த உமையாக்களின் ஆதரவாளர்களின் பின்னூட்டங்களாக அவை தம்மை பரிதாபகரமாக இனம் காட்டிக் கொண்டன.

எப்படி என்று திகைக்கிறீர்களா?

முஸ்லிம் பெயரில் அவர்களது நபி (ஸல்) அவர்களைப் பற்றிய  அசிங்கமான எண்ணங்களுக்கு வடிகாலிட  முடியாது.

அதன் காரணமாக ஒரு இந்துப் பெயரில் ஒளிந்துக் கொண்டு எதுவித தயக்கமும் இல்லாமல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி தாறு மாறாக விமர்சித்து விளாசித் தள்ளி தங்களை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பனு உமையாக்களைப் பற்றிவிலாவாரியாக விமர்சித்திருந்த எங்கள் பதிவுகளில் சில அவர்களை சின மூட்டி இருக்கின்றன.

இந்துக்கள் பனு உமையாக்களின் ஆதரவாளர்கள் இல்லையே?

பௌத்த விகாரைகளின் ஆன்மீகத்தையும், இஸ்லாமிய இயக்கங்களின் தொலைந்து போன ஆன்மீகத்தையும் பற்றிய பதிவில் நாம் சவூதி நிதியில் சோரம் போன எங்களது நாயகர்களை துகிலுரிதிருந்தோம்.

ஆசாமிகள் அரண்டு போனார்கள்.

நபி (ஸல்)௦ அவர்களை இழிவுபடுத்தி ஆங்கிலத்தில் பின்னூட்டம் எழுதி தம்மை இந்து பெயரில் தமக்கு பர்தா போட்டுக் கொண்டு அந்த பர்தாவிலேயே இடறி தடுக்கி விழுந்து விட்டார்கள்.

இந்துப் பெயரில் ஒளிந்துக் கொள்வது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களைத் தாராளமாக திட்டுவதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கி விடுமா?

அந்த பின்னூட்டங்களை எங்களது தளத்தில் பதிவிளிட முடியாமைக்கு   வருந்துகிறோம்.

ஆக்ரோசமான பின்னூட்டங்களை நாம் வரவேற்கிறோம்.

ஆனால், நபி (ஸல்) அவர்களை மிகவும் தரக் குறைவாக இழிவு படுத்துகின்ற கருத்துக்களை பின்னூட்டம் என்ற பெயரில் கூட பதிவிளிட  எமது தளத்தில் அணுவளவும் இடம் இல்லை என்பதை மெனக்கெட்டு பின்னூட்டம் இடும் வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.

எமக்கு பின்னூட்டம் வரைந்த இந்து சகோதர்களின் பெயரில் ஒளிந்திருந்த உமையாக்களின் அடிவருடிகள் அவர்களது பின்னூட்டங்களை எமது தளத்தில் பதிவிளிடும் துணிவு  நமக்கு  இல்லை என்று சவால் விட்டு அவர்களது  பின்னூட்டங்களை பதிவிலிடுமாறு எம்மை உசுப்பேற்றி "ங்கே" என்று இப்பொழுதும் விழி பிதுங்கி விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

எமது இன்றைய  பதிவில் நாம் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் நோக்கில் இருக்கின்ற அனைவருக்கும் ஒரு பேருண்மையை தெளிவு படுத்தப் போகிறோம்.- இன்ஷா அல்லாஹ்.


எமது இன்றைய பதிவை வாசிக்கின்ற அனைவரும், அவர்களில் நண்பர்களில் யாராகிலும் ஒருவர் நபி (ஸல்) அவர்களது கண்ணியத்தை சிதைக்கும்  விதமாக சிறிதளவேனும் பேசினால், நாம் சொல்லுகின்ற விடயத்தை அவருடன் ஒப்பிட்டு அவதானமாக பரிசீலித்துப் பாருங்கள்.

அல் குர்ஆன் சொல்லும் சத்தியத்தை அறிந்து ஆச்சரியமாகிப் போவீர்கள்.

இந்து சகோதரர்களின் பெயரில் ஒளிந்திருந்து பின்னூட்டம் அனுப்பிய உமையாக்களின் அடிவருடிகள் தங்களது சாகசத்தை நிச்சயமாக தங்களது நண்பர்களிடம் கூறி அஹ்லுல் பைத் தமிழ் தளத்தின் வாயை அடைத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு இருப்பார்கள்.

நாம் சொல்லும் இந்த விடயங்களை பின்னூட்டம் வரைந்த நபர்களது  நண்பர்களினால் இலகுவாக  பரிசீலிக்க முடியும்.

கிணறு வெட்ட பூதம் வந்த கதையை சிறு வயதில் நீங்கள் படித்திருக்கிறீர்கள்.

நேரில் பார்த்த அனுபவம் இருக்கிறதா?

இல்லை என்றால் பார்ப்பதற்கு தயாராகுங்கள்.

கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக அவர்களது கதை ஆகப் போகிற வேடிக்கையைப் பாருங்கள்.

நாம் சொல்லும் கருத்து பிழை என்று முடியுமானால் நீங்கள் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப் பட்ட ஆரம்ப காலத்தில் பெரும் மமதைப் பிடித்த ஒரு கோடீஸ்வரன் மக்கா குறைசிகளில் இருந்தான்.

அவனுக்குப் பத்து ஆண் குழந்தைகள்.

அவனைப் பொறுத்தவரை கௌரவத்துக்கும், செல்வத்துக்கும், ஆண் சந்ததிகளுக்கும் ஒரு  குறையும் இல்லை.

அதனால், அவனது குடும்பம் பெரும் கௌரவத்துக்கு உரியதாக மதிக்கப் பட்டது.

அந்தக் கோடீஸ்வரனின் பெயர் வலீதிப்னு முகைரா.

மக்களால் பெரிதும் மதிக்கப் பட்ட அவன் கர்வத்துடன் நபி (ஸல்) அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தான்.

நபித்துவத்தின் ஆரம்பத்தில் அருளப் பட்ட அல் குர்ஆனின்   ஆயத்துக்கள் பெரும் சவால்களை அந்த இறை நிராகரிப்பு குறைசியரிடையே முன் வைத்தது ஆச்சரியமான நிஜம்.

அந்த வகையில், பெரும் கௌரவத்துடன் கர்வமாக திரிந்துக் கொண்டிருந்த வலீதிப்னு முகைராவின் இழி பிறப்பு இரகசியத்தை அல் குர் ஆன் பகிரங்கப் படுத்தி  அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.

அதுவரை யாருமே அறியாத இரகசியமாக அது இருந்து வந்தது.

கௌரவமாக , கர்வமாக தலை நிமிர்ந்து இருந்த வலீதிப்னு முகைரா அவனுடைய தந்தைக்கு பிறக்காமல் வேறொருவனுக்குப் பிறந்தவன் என்ற அர்த்தத்தில் அல் குர் ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அதிர்ந்துப் போனான்.

தனது இடை வாளை உருவிய அவன் "எனது தந்தை பிரபல்யமானவர். நானோ குறைசிகளின் தலைவன்." என்று கர்ஜித்த அவன் தொடர்ந்து "முஹம்மத் பொய்யுரைக்க மாட்டார்." என்று கூறியவனாக அவனது தாயாரிடம் வெறியுடன் ஓடினான்.

உருவிய வாளுடன் வெறித்தனமாக ஓடி வரும் மகனைக் கண்டு அவனது தாய் பயந்து போனாள்.

அவன் அவனுடைய தந்தைக்குப் பிறந்தவன் இல்லை என்கிற உண்மையை   அவள் உடனே ஒத்துக் கொண்டாள்.

நபி (ஸல்) அவர்களை மமதையுடன் எதிர்த்து நின்ற வலீதிப்னு முகைராவின் ஆணவம் சிதைந்துப் போனது.

அல் கலம் என்ற சூராவில் பதியப் பட்டிருக்கிற அந்த அல் குர்ஆன் ஆயத்துக்கள் இன்றுவரை யாரெல்லாம் நபி (ஸல்) அவர்களது கண்ணியத்தை சீர் குலைக்கிரார்களோ அவர்களது குண வியல்புகளை அப்பட்டமாக துகிலுரித்துக் கொண்டிருக்கிறது.

அப்படி அல் கலம் தாங்கி நிற்கின்ற நிஜங்கள் தாம் என்ன?

அல் குர் ஆனில் இருக்கும் அந்த சூரா முதலில் நபி (ஸல்) அவர்களின் ஒழுக்க மாண்பை பற்றி எடுத்துச் சொல்லி அவரை கண்ணியப் படுத்தி எதிரிகளின் எதிர்ப்பை எதிர் கொள்ளும் தைரியத்தை அவருள் விதைத்தது. .

"மேலும், ( நபியே !) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்"

"எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்;அவர்களும்  பார்ப்பார்கள்."

"உங்களில் எவர் சோதனைக்குள்ளாக்கப்  பட்டவர்கள் என்பதை"

"உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்.(அது போன்றே) நேர் வழிபெற்றோரையும்  அவன் நன்கறிவான்."

(அல் குர்ஆன் : 68 : 4 - 7   )

அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர் குலைக்கும் நமது நாயகர்களின் நிஜமான குண இயல்புகளையும், அவர்களது பாரம்பரிய DNA க்களின் இரகசியத்தையும் பிட்டு வைக்கத் துவங்குகிறது.

"எனவே, பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழி படாதீர். (சண் மார்க்க போதனையை )நீர் தளர்த்தினால் தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்"

"அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்"

"(அத்தகையவன் ) குறை கூறித் திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்"

"(எப்பொழுதும்) நன்மையானவற்றை தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி"

"கடின சித்தமுடையவன்.அப்பால், இழி பிறப்பும் உள்ளவன்"

"பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவன் இருப்பதால் நம் வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப் பட்டால் "இவை முன்னோர்களின் கட்டுக் கதைகள்" என்று அவன் கூறுகின்றான்."

"விரைவிலேயே அவனது மூக்கின் மீது அடையாளமிடுவோம்"

(அல் குர்ஆன் : 68 : 8 - 16  )



எங்களது பின்னூட்ட நாயகர்களுக்கு இந்த ஆயத்துக்கள் பொருந்தும் அழகைக் கவனியுங்கள்.

இன்ஷா அல்லாஹ்- அதிர்ந்துப் போவீர்கள்.  


"எனவே, பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழி படாதீர். (சண் மார்க்க போதனையை )நீர் தளர்த்தினால் தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்"

நபி (ஸல௦ அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்க நினைக்கும் எங்களது பின்னூட்ட நாயகர்கள் பெரும் பொய்யர்களாக இருப்பார்கள்.நீங்கள் அவர்களுடன் எதாவது கொடுக்கல் வாங்கல் செய்திருந்தால் அதனை உணர்ந்திருப்பீர்கள்.

இல்லை என்றால், அவர்கள் கொடுக்கல், வாங்கல் செய்யும் நபர்களிடம் விசாரித்துப் பாருங்கள்.

ஆசாமி நிச்சயமாக ஜொல்லுவிடும்  'பொல்லு' பார்ட்டியாகத்தான் இருப்பார்.

"அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்"

ஒருவனை இழிவானவனாக அடையாளமிடும் அனைத்து மோசமான குண நல இயல்புகளும் நமது பின்னூட்ட நாயகர்களிடம் இருக்கும்.

இழி குணங்களுக்கு அடிப்படை உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள்.

அவர்களை உங்களது வீட்டுக்கு மட்டும் நம்பி அழைத்து போகாதீர்கள்.

ஏனெனில், அசிங்கமான எண்ணங்கள் நிறைந்த அவர்களால் உங்கள் வீட்டு பெண்களுக்கு பாது காப்பு இல்லை.


உங்கள் வியாபார நண்பர்களிடம் அவர்களை அறிமுகப் படுத்தாதீர்கள்.


நாளை உங்களது வியாபாரத்தை கொள்ளையிட்டுக் கொள்வார்கள்.

உங்கள் அலுவலகத்தில் அவர்களை உங்களது உதவியாளர்களாக நியமிக்காதீர்கள்.

நாளை உங்களது மேலதிகாரியிடம் உங்களைப் போட்டுக் கொடுத்து விட்டு உங்களது சீட்டில் அவர்கள் அமர்ந்துக் கொள்வார்கள். 

"(அத்தகையவன் ) குறை கூறித் திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்" 

அவர்களது நண்பர்களைப் பற்றியும்,தாம் அறியாத ஏனையவர்களைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டு , கோள் சொல்லிக் கொண்டு திரிபவர்களாக எங்களது பின்னூட்ட நாயகர்கள் இருப்பார்கள்.

நீங்கள் அவர்களது பேச்சைக் கொஞ்சம் அவதானமாக கவனியுங்கள்.

தமது நண்பர்களின் குறைகளையே அவர்கள் இல்லாத இடங்களில் அம்பலப் படுத்திக் கொண்டிருப்பார்கள்.

"(எப்பொழுதும்) நன்மையானவற்றை தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி"

அவர்களை நன்கு கவனியுங்கள்.மிக சாதாரணமான நயா பைசா பிச்சை கூட யாருக்கும் போட மாட்டார்கள். அனுதாபப் பட்டு பிச்சைப் போடப்போகின்ற உங்களையும் பிச்சை போட விடாதவர்களாகவே நமது பின்னூட்ட நாயகர்கள் இருப்பார்கள்.

பெரும்  பெரு   பாவங்களை மிக இரகசியமாக செய்துக் கொண்டு   இருக்கக் கூடியவர்களாகவே பாவிகளான எங்களது பின்னூட்ட நாயகர்கள் இருப்பார்கள். அவர்களது பாவத்தை அறிந்துக் கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது....ஸாரி.

ஏனெனில், மனிதனைக் கௌரவிக்கும் அல்லாஹ் அவனது குறைகளை மற்றவர்களின் கண்களை விட்டும் மறைத்து விடுவான்.

"கடின சித்தமுடையவன்.அப்பால், இழி பிறப்பும் உள்ளவன்"

இதைதான் நீங்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் எதிரி வலீதிப்னு முகைரா எவ்வித மறுப்பும் இன்றி விசுவாசித்த இந்த ஆயத் ஒரு போதும் பிழையாகிப் போகாது.

நமது பின்னூட்ட நாயகர்களின் தந்தை சத்தியமாக அவர்கள் தகப்பன் என்று இதுகாலும் நம்பிக் கொண்டு இருக்கும் ஏமாந்துப் போன அந்த அப்பாவியாக இருக்க முடியாது.

நமது பின்னூட்ட நாயகர்களின் தாய் யாருக்கோ சோரம் போய் இந்த நாயகர்களை பிரசவித்து இருக்கிறாள்.

நீங்களே அவர்களின் தந்தையைக் கொஞ்சம் நினைவில் கொண்டு இதனை சிந்தித்துப் பாருங்கள்.

வித்தியாசம் இருக்கிறது தானே?

தகப்பனைப் போல பிள்ளை இல்லையே?

அவர்கள் தமது DNA யை எடுத்து தனது தகப்பனின் DNA யுடன் பரிசோதித்துப் பார்த்தால் அதிர்ச்சியான இந்த உண்மையை உணர்ந்துக் கொள்வார்கள்.


"பெரும் செல்வமும், (பல) ஆன் மக்களும் உள்ளவனாக அவன் இருப்பதால் நம் வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப் பட்டால் "இவை முன்னோர்களின் கட்டுக் கதைகள்" என்று அவன் கூறுகின்றான்."

இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அல்லாஹ் காட்டிய ஒப்பற்ற கருணையின் அடையாளம் இது.

அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் தன்னிலை மறந்து வரம்பு மீறும் வரை அல்லாஹ் கடுமையாக சோதிப்பது இல்லை.

நமது பின்னூட்ட நாயகர்கள் நல்ல கௌரவத்துடனும்,  தாராளமான செல்வ   வளத்துடனும் தான் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேவை இல்லாத பின்னூட்டத்தை வரைந்து அவர்களே அதைக் கெடுத்துக் கொண்டார்கள்.

அந்தோ பரிதாபம்...??

"விரைவிலேயே அவனது மூக்கின் மீது அடையாளமிடுவோம்" 

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையைப் போல, அல்லது கிணறு வெட்ட பூதம் வெளி வந்த கதையாக 
நமது பின்னூட்ட நாயகர்களின் கௌரவமும், அந்தஸ்த்தும் இனிமேல்  சின்னா பின்னமாகி சிதைந்து சீரழிந்துப் போகப்போகிறது.           

இந்த அல் குர் ஆனின் கருத்துப் படி, நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்த நினைத்த அந்த பின்னூட்ட நாயகர்கள் சாதாரண மனிதர்களுக்கு அல்லாஹ் அருளும் கௌரவக் குறைச்சலான செய்கைகளை பகிரங்கப் படுத்தாமல் மறைக்கும் பாது காப்பு வலயத்தை விட்டும் வெளியே வந்து அவர்களது அனைத்து இழிவான செய்கைகளும் வெளியாகும் அபாயகரமான தளத்துக்கு தம்மை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டிருப்பதை வெளிப் படுத்துகிறது.

அதன் படி,

இனிமேல், அவர்களின் அனைத்து அசிகங்களும் மக்கள் மன்றத்தில் வெளியாகப் போகின்றன.

அவர்களின் மனைவி இன்னும் ஒருவருடன் தொடர்பு கொள்வாள்.......

அவர்களது காதலி அவர்களின் நண்பர்களின் ஒருவனை மணந்துக் கொள்வாள்......

அவர்களது கள்ளத் தொடர்புகள் அம்பலமாகும்..........

அவர்களது குடும்பத்தின் கௌரவங்களுக்கு   வேட்டு வைக்கும் காரியங்கள் நடக்கத் துவங்கும்...........

அவர்களது வியாபாரத்தில் சரிவுகள் ஏற்படத் துவங்கும்...............

அவர்களின் மேல் அக்கறை இல்லாத மேலதிகாரிகள் அவர்களின் அதிகாரிகளாக வரப் போகிறார்கள்............

இன்ஷா அல்லாஹ்-  

இனி, நமது பின்னூட்ட நாயகர்களின் அழிவுக்கான -COUNT DOWN START.

ஓஹ்...ஓஹ்.....ஒரு நிமிடம்.......

நமது பின்னூட்ட நாயகர்கள் தாம் செய்த தப்பை உணர்ந்து அல்லாஹ்விடம்   இருகரம் ஏந்தினால் அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான் என்ற செய்தி மட்டும் உலக அழிவு நாள் வரை இருக்கப் போகின்ற பாவப் பரிகாரம்.

எதனை தெரிவு செய்வதாக உத்தேசம்...............?????

அழிவுக்கான COUNT DOWN...???

விமோசனத்துக்கான  தௌபா...???

எம்மைப் பொறுத்தவரை எதுவென்றாலும் ஆட்சேபனை இல்லை.

1 comment:

Dr.Anburaj said...

.... they deserve to be killed.. Shocking letter.
what a cruel mentality.This mentality is the product of Arab culture/Mohamadan culture. Mohammed waged 45/76 war against Kafirs.Innocent peoples were stamped Kafirs and killed just for refusing to obey Mohammed ,Arab Tribe Leader.One Jamat blames other Jamat as Kafirs and rose in revolt against that.There would be no peace in the arab/Muslim world as long as the inamtes asssociate with Mohammed.Mohammed is a insufficient Leader.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad