அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, July 29, 2012

அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்.........ஒளிக்கப் பட்ட உண்மைகள்...????






இஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் சம்பந்தமாக, அவர்களின் உரிமைகள் சம்பந்தமாக மறைந்து இருக்கின்ற உண்மைகளின் பக்கம் நமது கவனத்தை கொண்டு சென்ற பெருமை நண்பர்    அன்புராஜுக்கே சேரும்.


நண்பர் அன்புராஜின் பின்னூட்டமொன்று முஸ்லிம்களைப் பார்த்து இப்படி சவால் விட்டது.


குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். 
உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது ...............



நாம் வழமைப் போல நாம் தினமும் சந்திக்கின்ற சில உலமாக்களிடம் இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாகவும், அடிமைப் பெண்கள் சம்பந்தமாக அல் குர்ஆன் சொல்லும் ஆயத்துக்கள் சம்பந்தமாகவும் கேள்விக் கணைகளை தொடுத்தோம்.





கேட்கும் கேள்விகளின் இருப்பிடம் அஹ்லுல்பைத் தமிழ் தளம் என்றவுடன் அநேகமான உலமாக்கள் கடுமையான மௌனத்தையே பதிலாக தந்தார்கள்.


நம்மை அறியாத சிலர் உடனே "இத்தகைய வசனங்கள் அடிமைகள் இருந்த காலத்தில் அருளப் பட்டவைகளாகும். இப்பொழுதுதான் அடிமைகள் இல்லையே....ஆகவே இது சம்பந்தமாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை" என்றார்கள் (டாக்டர் அன்புராஜ்..........ஹி....ஹி...ஹி....)


அதைக் கேட்ட நாம் "சரி........நாம் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை ஆனாலும், அல் குர் ஆன் அடிமைகளுடன் உறவு கொள்வதை அனுமதிக்கின்றதா?" என்று நமக்கு பதில் சொன்னவர்களிடம் திருப்பிக் கேட்டோம்.


"ஆம்......தனது மனைவியுடனும், தனது அடிமைப் பெண்ணுடனும் உறவு கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது"என்று சிலர் துணிந்து பெருமையுடன் கூறினர்.


(டாக்டர் அன்புராஜ்......நீங்கள் சொல்லும் விடயம் சரி போலத் தெரிகிறது ................ஹி......ஹி....ஹி.....)


இன்னொரு சந்தர்ப்பத்தில் நாம் சந்தித்த உலமாக்களில் ஒருவர் நம்மிடம் திருப்பி "அடிமைகள்தான் இப்பொழுது இல்லையே ......இதென்ன தேவை இல்லாத கேள்வி?" என்று கேட்டார்.


அவருக்கு நமது நண்பர்களில் ஒருவர்"எங்களது இந்து நண்பர் ஒருவர் நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.அவருக்குரிய பதிலைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்....சரி...உங்களது பதில் என்ன?" என்று கேட்டார்.


உடனே அந்த அறிஞர்"நீங்கள் உங்கள் இந்து நண்பரிடம் அவரது மதத்தில் இதனை விடவும் மோசமான அனுமதிகள் இருக்கும் விடயத்தை பதிலாக சொல்லுங்களே" என்றார்.


(நண்பர் அன்புராஜ்.........ஹி........ஹி......ஹி.....நம்மை மன்னித்துக் கொள்ளுங்கள்)


அடிமைகள் இல்லாத இக்காலத்தில் இது தேவை இல்லாத கேள்வி என்று நம்மை மட்டம் தட்டி விட்டதாக நிமிர்ந்த இன்னுமொரு உலமாவிடம் நமது நண்பர் ஒருவர்.."இப்பொழுதுதான் அடிமைகள் இல்லை....சரி...அடிமைகள் இருந்த காலத்தில் இஸ்லாமிய சட்டம் என்ன?" என்று திருப்பிக் கேட்டார்.


"உறவு கொள்ள முடியும்" அந்த உலமா தனது தாடியைத் தடவியபடி கொஞ்சம் காரமாக "கையில் பணமும் இடுப்பில் சக்தியும் இருந்தால் இது சாத்தியம்" என்றார்.


வில்லத்தனமான அந்தப் பதிலில்  பிரபலமான அந்த உலமா கணப் பொழுதில் நமது மதிப்பில் பரிதாபகரமாக  மதிப்பு இழந்துப்  போனார்.   




இன்னுமொரு இடத்தில் நாம் இவ்வாறான கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அடிமைகள் இப்பொழுது இல்லை என்று ஒரு மார்க்க அறிஞர் சொன்னதும், நமது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த நாம் அறியாத நண்பர் ஒருவர் நாம் கேள்விக் கேட்ட மார்க்க அறிஞரிடம்..."நீங்கள் எப்படி இவ்வாறு சொல்கிறீர்கள்........நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் எத்தனை பெண்கள் விபச்சாரத்தை கருத்தில் கொண்டு கடத்தப் பட்டு விபச்சாரத்துக்காக அடிமைகளைப் போல விற்கப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?.......இராக்கில் இருந்தும், மத்திய கிழக்கில் இருந்தும் ,லிபியாவில் இருந்தும் எத்தனை எத்தனை இளம் பெண்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விபச்சாரத்துக்காக கடத்திக் கொண்டு போகப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?........இவர்கள் அனைவரும் sex  slave என்று பெயரிடப் பட்டு விபச்சார அடிமைகளாக விற்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்று பொரிந்து தள்ளினார்.


நமது மார்க்க அறிஞர் கப் சிப் ஆகி கோபத்துடன் எங்களைப் பார்த்து பயங்கரமாக முறைக்கத்  தொடங்கினார்.


நாம் அப்பாவித் தனமாக வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தோம்.(எல்லாம் நண்பர் அன்புராஜின் கேள்விகள் செய்த வேலை.....)



நமக்கு ஏற்பட்ட இதேவிதமான அனுபவங்கள் நண்பர் அன்புராஜின் கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில் உங்களுக்கும் கிடைக்கும்.


முயன்றுதான் பாருங்களேன்.


புனித அல் குர்ஆனில் அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ள அந்த அடிமைப் பெண்ணின் எஜமானுக்கு அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது என்று பெருமையாக நம்மிடம் பதில் சொன்ன அனைத்து உலமாக்களிடமும் நாம் திருப்பி ஒரே ஒரு கேள்வியைக் கேட்டோம்.


"அந்த அடிமைப் பெண்ணுக்கும், அந்த எஜமானுக்கும் அவர்களின் உறவின் காரணமாக கிடைக்கும் குழந்தையின் நிலை என்ன?.........அந்தக் குழந்தை வளர்ந்த பின்னர் ஒரு அடிமையா?...அல்லது சுதந்திர புருஷரா?"


உற்சாகமாக அடிமைகளுடன் உறவு கொள்ளும் கற்பனையில் இருந்த அனைத்து உலமாக்களும் வாயடைத்துப் போனார்கள்.


(நண்பர் அன்புராஜ்.........அப்பாடா!!!)


நண்பர் அன்புராஜின் இத்தகைய உள்ளக் குமுறல்களை சுருக்கமாக இப்படியான கேள்விகளில் பிரித்து வகுக்கலாம்.


அல்லாஹ் அருளிய இறுதி  வேதத்தில் பெண்ணுக்குள்ள பெண்ணுரிமையின்  இலட்சணம் இதுதானா? 


டாக்டர் அன்புராஜ் சொல்லுவது போல ஒழுக்கவிழுமியத்தைப் போதிக்க வேண்டிய ஒரு மார்க்கத்தில் ஒழுக்கம் கெட்ட செயல்களின் சுதந்திரத்தை அல்லாஹ் அனுமதித்தாரா?




பெண்ணுரிமையைப் பாதுகாக்கவேண்டிய ஒரு மார்க்கத்தில் பலவீனமான முறையில் போர்க் கைதிகளான அப்பாவிப் பெண்களை பாலியல் வல்லுறவிலும் , விபச்சாரத்திலும் உபயோகித்துக் கொள்ள முஸ்லிம்களின் அல்லாஹ் அனுமதித்தாரா?

முஸ்லிம்களின் அல்லாஹ்வின் முன்னிலையில் சிறுவர் சிறுமியரும் அழகான பெண்களும் மனித உரிமைகளுக்கு கிஞ்சித்தும் அருகதை இல்லாதவர்கள் போலும்..........இந்த மார்க்கத்தை தழுவினால் எங்களின் குழந்தைகளின் எதிர்காலம் அவ்வளவுதான்?

மரணத்தின் பின்னர் விமோசனம் தருவதாக சொல்லப் படும் இஸ்லாத்தில் இந்த உலகத்திலேயே விமோசனம் இல்லையே?..........இனியெப்படி மறுமையில் விமோசனம்...?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அல்லது விடைகளை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று முதலில் புரியவில்லை.

என்றாலும், ஒரு உண்மையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தின் பிதாமகன் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள்.


"இப்ராஹீமுடைய  மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? - தன்னைத் தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர-; நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார்"
(அல் குர்ஆன் 2 : 130 )

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நம்ரூதிடமும் அவனது ஆட்சிக்கு உதவிய பிரபுக்களிடமும் அடிமைப் பட்டிருந்த அடிமைகளை விடுவிக்க போராடிய ஒரு மா மனிதர்.

ஏகத்துவமான ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டு , அந்த இறைவனை மக்களுக்கு அறிமுகப் படுத்தி மனிதன் மனிதனை அரசாலும் அடிமைத்தன ஆட்சி முறைக்கு அவர் எதிரானவர். 

நபி இப்ராஹீம் வழி வந்த நபி மூஸா (அலை) அவர்களும் பிரவ்னிய மன்னர்களிடம் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களின் விடுதலைக்காக போராடிய ஒரு மா மனிதர்.

ஏகத்துவமான ஏக இறைவனை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்திய தீர்க்க தரிசிகள் அனைவரும் அடிமைத்தனத்துக்கு எதிரானவர்கள்.

வரலாற்று   நிஜங்கள் அப்படி இருக்க....

நாம் சொல்லுகின்ற ஏக இறைவனின் இறுதி மார்க்கம் அடிமைத்தனத்துக்கு ஆச்சரியமாக அனுமதி அளிக்கிறதே?

ஏனைய தீர்க்கதரிசிகளைப் போல ஒரே விதமான ஏகத்துவ மார்க்கத்தைப் போதித்த ஏக இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி சல்லல்லாஹு அலை ஹி வா ஆலிஹி வசல்லம்  அவர்களுக்கு இறைவன் அருளிய மார்க்கத்தில் அடிமைத்தனத்துக்கு அனுமதியும் அடிமைகளின் உரிமை மீறல்களும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமாக இல்லை.

நிஜத்தில் எம்மை இத்தகைய செய்திகள் அதிர்ச்சிகுள்ளாக்கவில்லை என்பதே நிஜம்.


ஏனெனில்,நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எகிப்து மன்னன் ஒருவனால் அன்பளிப்பாக கொடுக்கப் பட்ட அடிமைப் பெண் அழகிதான் அன்னை ஹாஜரா (அலை) அவர்களாவார்கள். 

அந்த அடிமைப் பெண்ணை அடிமைத் தளத்திலிருந்து உரிமை விடுதலை செய்தது மட்டுமன்றி அவர்களையே திருமணம் செய்து தனது மனைவி என்கிற உயரிய அந்தஸ்த்தை அந்த அடிமைப் பெண்ணுக்குக் கொடுத்த புரட்சியை செய்த செயல் வீர்ரர்தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

அடிமைகளை மனிதர்கள் அகௌரவப் படுத்தினாலும் அல்லாஹ் அப்படி செய்யவில்லை.

அதன் காரணமாகத்தான் அடிமையாக இருந்த அந்தப் பெண்ணின் கருவிலே நபி இஸ்மாயில் (அலை) அவர்களைப் பிறக்கச் செய்து அந்த வழிமுறையிலேயே இறுதித் தூதரையும் இறுதி இமாமையும் அல்லாஹ் பிறக்கச் செய்தான்.

அது மட்டுமன்றி, புனித காஅபதுல்லாஹ்வில்  அடிமையாக இருந்து உரிமை விடுதலை செய்யப் பட்ட அன்னை ஹாஜரா (அலை) அவர்களை நல்லடக்கம் செய்யவும் அனுமதித்தான்.

ஆகவே, அடிமை ஆண்டான் என்ற வர்க்க வேறுபாடுகளை விட்டும் அல்லாஹ் தூரமானவன்.

அல்லாஹ்வின் பார்வையில் மனித சமூகத்தில் அடிமைக்கு ஓரிடமும் அடிமை அல்லாதவர்க்கு பிறிதொரு இடமும் என்ற அளவீடுகள் இல்லை.

அவன் பார்வையில் மனிதர்கள் அனைவரும் சமம்.

அப்படியென்றால் அல்லாஹ் மனிதர்களின் கணிப்பில் அதாவது -மேட்டுக் குடி அராபியரின் கணிப்பில் இழிவான நிலையில் இருக்கும்  அடிமைகளைப் பற்றி எதற்காக புனித அல் குர்ஆனில் குறிப்பிட வேண்டும்?

பேசாமல் அதனை அலட்சியப் படுத்தி இருக்க முடியுமே?

அல்லது அடிமை என்றொரு வர்க்கம் மனிதரிடையே இல்லை என்று கூறி அடிமைத்தனத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியுமே?

உண்மையில் ஏக நாயன் அல்லாஹ் அவனது வேதத்தில் அடிமைகளைப் பற்றி என்ன விதமான கருத்தியலை முன்வைக்கிறான்....?

இஸ்லாத்தைத் தவறாக விளங்கிய மக்கள்  என்று நாம் கருதும் மக்கள் கூறுவது போல............

--------குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். 

--------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா? 

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான். (இறைவனை விசுவாசிக்காத -நிராகரிப்போராகிய ) இவர்கள் உங்களை நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.ஆனால், அல்லாஹ்வோ தன கட்டளையைக் கொண்டு சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன வசனங்களை அவன் விளக்குகிறான்."
(அல் குர் ஆன் 2 : 221) 

அடிமைகளைப் பற்றியும் அவர்கள் அல்லாஹ்விடத்தில் எத்தகைய கண்ணியத்தில் கணிக்கப் படுகிறார்கள் எனபது பற்றியும் அழகாக விளக்குகிறது அல் குர் ஆனின் இந்த வசனம்.

இறை விசுவாசிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையே ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு இல்லை.

அவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் ஒரே சமனாக கணிக்கப் படுகிறார்கள்.

இறைவனை விசுவாசிப்பவர்கள் இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்கள்.அவர்களில் ஆண்டான் என்றோ அடிமை என்றோ வேறுபாடுகள் இல்லை.

அவர்கள் அனைவரும் சுவனத்துக்கு சொந்தக்காரர்கள்.

இறைவனை நிராகரிப்பவர்கள் அல்லது இறை நிராகரிப்புடன் அவனுக்கு இணை வைப்பவர்கள் இறைவனின் பார்வையில் மிருகத்தை விடவும் தாழ்ந்தவர்கள்.

அவர்கள் நரகத்துக்கு சொந்தக்காரர்கள்.

அவர்களைப்  பற்றி அல் குர் ஆனில் இப்படி ஒரு வசனம் இருக்கிறது.

"நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்துக்கேன்றே படைத்துள்ளோம்;அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆனால்,அவற்றைக் கொண்டு அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்;அவர்களுக்கு கண்கள் உண்டு;ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பார்க்க மாட்டார்கள்; அவர்களுக்கு காதுகள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் நட்போதனையைக் கேட்க மாட்டார்கள்;-இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள்.இல்லை !அவற்றை விடவும் வழிக்கேடர்கள்  ;இவர்கள்தாம் நம் வசனங்களை அலட்சியம் செய்தவர்களாவார்கள்"
(அல் குர் ஆன்: 7 : 179 )

அல் குர் ஆனின் இந்த நிலைப்பாட்டிலிருந்து ஒரு உண்மை நமக்கு புரிந்துப் போனது.

ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு அல்லாஹ்விடமோ அல்லது அவனது தூதரிடமோ அல்லது அல் குர்ஆனிலோ இல்லை.

அல்லாஹ்வை விசுவாசித்து அவனை தனது இறைவனாக ஏற்றுக் கொள்ளும் ஒருவன் அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்தவன்.

அத்தகைய இறை விசுவாசிகளிடையே சமத்துவம் இருக்க வேண்டும்.

அத்தகைய சமத்துவமிக்க விசுவாசிகள் ஒளியின் சொந்தக்காரர்களாகிறார்கள்.

அதன் காரணமாக அவர்கள் சுவனத்துக்கு செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.

அவர்கள் அல்லாத ஏனைய மக்கள் அனைவரும் இறைவனின் பார்வையில் கால்நடைகளை விடவும் தாழ்ந்தவர்கள்.

இறைவனை நிராகரித்த காரணத்தால் அவர்கள் அனைவரும் நெருப்பினால் படைக்கப் பட்ட சைத்தானின் -நெருப்பின்- சொந்தக்காரர்களாகிரார்கள்.

அதனால் சைத்தானுடன் இணைநது நெருப்பினால் படைக்கப் பட்ட நரகத்துக்கு செல்கிறார்கள்.

சைத்தானும் அவனது கூட்டத்தினரும் நரக நெருப்பின் சுவையை சுவைக்க நரகம் சொல்வது சரி!

ஆனால், சமத்துவமிக்க ஒளியின் விசுவாசிகள் என்று நாம் பெருமைப் படும் இறைவனை விசுவாசித்த விசுவாசிகளிடையே அடிமைகளைப் பற்றிய அல் குர்ஆன் வசனங்கள் அருளப் படக் காரணம் என்ன?

அல் குர் ஆனின் பார்வையில் மனிதர்கள் சுதந்திரமானவர்கள்.

இறைவன் அருளிய வேதத்தை ஏற்று அவனுக்கு கட்டுப் பட்டு நடக்கும் விடயத்தில் மாத்திரம் செயல் சுதந்திரம் வழங்கப்பட்டவர்கள். 


அவ்வாறான சுதந்திரத்தை கவனமாக பேணும் மக்களின் நடத்தையில் நல்லவைகளே இருக்கும்.


ஆனால், தனக்கு வழங்கப் பட்ட செயல் சுதந்திரத்தைக் கொண்டு யாராகிலும் இறைவனை மறுத்து இறைவனுக்கு எதிரான கொள்கைகளில் நம்பிக்கை வைத்தால் அவனது செயல்களில் நன்மையின் பெயரில் தீமைகள்தான் நிகழும்.


அத்தகைய தீமைகளைத் தேடி நாம் எங்கும் போகத் தேவை இல்லை.


நமது உமையா ஆட்சியாளர்களினதும் அப்பாஸிய ஆட்சியாளர்களினதும் காலத்தில் தொடக்கி வைக்கப் பட்ட அராபிய எதேச்சிகார ஆட்சிகளும் அதன் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உலகை கபளீகரம் செய்த இஸ்லாமிய மன்னராட்சிகளினதும் அடக்கு முறைகளின் தீமைகளை சொல்லலாம்.


மனிதனுக்கு வழங்கப் பட்ட செயல் சுதந்திரத்தில் இறைவனை உண்மையாக நேசிக்கும் மனிதன் அடிமைத்தனத்திட்கும், அநீதத்திட்கும்,அத்து மீறல்களுக்கும் எதிராகவே இருப்பான்.


அத்தகைய மனிதர்களின் ஆட்சியில் நீதி இருக்கும்.    

ஆனால், இறைவனை ஏற்றுக் கொண்டதாக சொல்லிக் கொண்டு அவனுக்கு எதிரான கொள்கைகளை தனது செயல் சுதந்திரத்தில் ஏற்றுக் கொண்ட மனிதனின் செயல் விளைவுகள் உலகத்துக்கு ஆபத்தானது.


இத்தகைய கருத்துக்களின் அடிப்படையில்தான் நாம் அல் குர்ஆனின் அடிமைகள் சம்பந்தமான வசனங்களை கவனிக்க வேண்டும்.

அல் குர்ஆனில் அடிமைகள் என்றொரு இனம் இல்லை என்று ஏன் இறை வசனம் அருளப் படவில்லை?

அத்தகைய வசனம் அருளப் படுவதற்கும், அவ்வாறான சட்டவாக்கம் நிர்ணயம் செய்யப் படுவதற்கும் அல் குர்ஆன் மிகவும் பொருத்தமான வேத நூல்.

என்றாலும், இறைவனின் வேத நூலில் அவ்வாறான ஒரு சட்டமோ, அல்லது வார்த்தைப் பிரயோகமோ இல்லை.

ஏன் தெரியுமா?

மனிதர்களிடையே ஆதிக்க மனப்பான்மை இயற்கையாகவே குடி கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

இந்தியாவில் சுதந்திரமாக வாழ்ந்துக் கொண்டிருந்த திராவிடர்களை...திராவிடத் தமிழர்களை  இந்தியாவின் வட புலத்தில் இருந்து தென்னாட்டுக்கு படிப் படியாக தள்ளிக் கொண்டு வந்த  செயலின் பின்னணியில்  ஆரியர்களின் ஆதிக்க மனப் பான்மை காரணமாக இருந்ததை வரலாற்றை நுணுக்கமாக கவனித்தால் புரிந்துப் போகும்.

சிறுபான்மை இனங்களை அடக்கியாள நினைக்கும் பெரும்பான்மை இனத்தவர்களின் மோசமான செயலின் பின்னணியிலும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருப்பதுதான் காரணம் என்பது நாம் அறிந்த உண்மை.

கற்பழிக்கப் பட்ட ஒரு பெண்ணின் பரிதாபமான நிலைமையின் பின்னணியிலும் அந்த செய்கையை செய்த காமுகனின் வக்கிரமான ஆதிக்க மனப் பான்மையே காரணமாக இருக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எங்கள் வீட்டு தெருக்கோடியில் இருக்கும் பணக்கார வியாபாரி ஏனையவர்களை விடவும் பெரிய வீடு கட்டி, விலை மதிப்பு இல்லாத காரில் பவணி வருவதன் கர்வத்தின் பின்னணியிலும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருக்கிறது.

வாகனம் செலுத்தும் பொழுது பின்னால் வரும் வாகனத்துக்கு இடம் கொடுக்காது பாதையை மறித்தவாறு செல்லும் வண்டி ஓட்டுனர்களின் சிறு பிள்ளைத்தனமான செயலின் பின்னணியிலும் இந்த ஆதிக்க மனப் பான்மை இருக்கிறது.

அதே போல மனித சமூகம் கண்டிருக்கும் முன்னேற்றத்தின் பின்னணியிலும் இந்த ஆதிக்க மனப்பான்மை இருந்து இருக்கிறது.

மனிதனை மனிதன் அடிமையாக கொள்ளும் கொடூரமும் இந்த ஆதிக்க மனப் பான்மையின் ஒரு வெளிப்பாடாகும்.

ஆகவே, மனித சமூகம் இருக்கும் காலமெல்லாம் நல்ல செயல்களும் மனித மனம் ஏற்காத கொடூரங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கப் போகின்றன.

மனித சமூகம் முன்னேற்றம் காணத் துவங்கிய காலம் தொட்டு அடிமைத்தனம் உருவானது.

இஸ்லாத்தின் வெளிப்பாடு தோன்றிய காலத்தில் அடிமைத்தன வியாபாரம் கொடி கட்டிப் பறந்த கதை நாம் அறிந்த கதையாகும். 


பனு உமையாக்கள் அடிமை வியாபாரத்தில் முன்னணியில் இருந்தார்கள்.

அந்த சமூகத்தில் அடிமைகள் நிறைந்து இருந்தார்கள். 

இத்தகைய அடிமைத்தனத்தை மனித சமூகத்தை விட்டும் எப்படி துடைத்தெறிவது?

அதனைத்தான் அல் குர் ஆன் சொல்லி செய்துக் காட்டியது.

ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் அடிமைகளாக இருந்தார்கள்.


அப்படியான நிலையில் அடிமை வியாபாரத்துக்கு இஸ்லாம் எப்படி துணை நிற்கப் போகிறது?

இது தவிர,யுத்தத்தில்  தோல்வி கண்டவர்களை அடிமைகளாக நடாத்துவது அக்கால சமூகத்தில் ஒரு சமூக சட்டமாக இருந்தது.

நபி சள்ளல்லாஹு அலை ஹி வஆலிஹி அவர்கள் செய்த இஸ்லாமிய யுத்தங்களிலும் தோல்வியடைந்தவர்களை கைதிகளாக பிடித்தார்கள்.

அக்கால சமூக சட்டப் பிரகாரம் அந்த யுத்தக் கைதிகள் அடிமைகளாக கருதப் பட்டார்கள்.

உடனே அடிமைகள் சம்பந்தமான வேத சட்டங்கள் மக்களுக்கு அருளப் பட்டன.

எதுவித உரிமையும் இல்லாமல் வெறும் பண்டங்களாக கருதப் பட்ட ஒரு இனத்துக்கு முதன் முதலில் சட்ட உரிமை இயற்றப் படுகிறது.

மனித வக்கிரங்களுக்கு முத்தாய்ப்பு வைக்கும் விதமாக ஏகனின் சட்டங்கள் அநீதம் இழைக்கப் பட்ட அந்த இனத்தின் சார்பாக அருளப்படுகின்றன.

அடிமைகள் சம்பந்தமாக அல் குர்ஆன் ஏன் பேசத் துவங்கியது என்று மெல்ல....மெல்ல....இப்பொழுது புரிந்தது.


"(நம்பிக்கையாளர்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின் , அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்;கடும்  போர் செய்து நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய ) கட்டுகளை பலப் படுத்தி விடுங்கள்;அதன் பிறகு யாதொரு ஈடு பெற்றோ அல்லது உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள்; போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களை கிழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறைக் கட்டளையாகும்); அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும் ,(போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை , சிலரைக் கொண்டு சோதிக்கிறான்."
(அல் குர்ஆன்:47 : 4 )     


மனித வாழ்வில் சங்கடங்களைத் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்கின்ற வாழ்வியல் இரகசியங்களை இந்த வசனம் தெளிவு படுத்தும் அழகைக் கவனியுங்கள். 

அதன் பிரகாரம் வெற்றி பெற்ற மனித ஆளுமைக்குள் வந்த  போர்க் கைதிகளுடன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டளையையும் இவ்வசனம் தெளிவு படுத்துகிறது.

அக்கால சமூக சட்டப் பிரகாரம் போரில் கைது செய்யப் படுபவர்கள் அடிமைகளாக மாறுகிறார்கள்.

இத்தகைய அடிமை ஆக்கிரமிப்பை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

அவ்வாறான அடிமைகளை நட்ட ஈடு பெற்றுக் கொண்டு உரிமை விடுதலை செய்து விடுமாறு இஸ்லாம் பணிக்கிறது.

அல்லது எதுவித நட்ட ஈடும்  பெற்றுக் கொள்ளாது உபகாரமாக அவர்களை விடுதலை செய்து விடுமாறும் அல் குர் ஆன் கட்டளையிடுகிறது.

நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி  அவர்களின் காலத்தில் சிறைக் கைதிகளான அடிமைகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக உரிமை விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் கல்வி அறிவில்லாத முஸ்லிம்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையில் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் கைதிப் பரிமாற்றம் செய்யும் நோக்கில் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களின் காலத்தில் போர்க் கைதிகளான அடிமைகள் அடிமைகளாக விற்கப் பட்டார்கள் என்றோ, அல்லது தொடர்ந்தும் அடிமைகளாகவே இருந்தார்கள் என்றோ எதுவித வரலாற்றுக் குறிப்பும் இல்லை.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஹசரத் பிலால் (ரலி) ஒரு அடிமை.


ஹசரத் அம்மார் பின் யாசர் (ரலி) அடிமைக் குடும்பத்தில் பிறந்த ஒரு அடிமை. 


சல்மான் பார்சி (ரலி) ஒரு அடிமை.


நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களின் அருமை மனைவி மாரியதுல் கிப்தி (ரலி) அவர்கள் நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களை மணப்பதற்கு முன்னர் ஒரு அடிமை.


இவர்கள் அனைவரும் அடிமைகளாக  இருந்து அதன் பின்னர் உரிமை விடுதலை செய்யப் பட்டவர்கள். 


இவர்கள் அடிமைகளாக இருந்த காரணத்தால் இவர்களை முஸ்லிம் சமூகத்தில் என்றுமே தரம் தாழ்த்தி கணிக்கப் படவில்லை என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் காட்டுகிறது.

இஸ்லாத்தின் பலவீனப் பட்ட ஆரம்ப கட்டத்தில் அடிமைகளின் நிலை இவ்வாறு இருக்க நாளடைவில் சக்திமிக்க பலமான நிலைக்கு இஸ்லாம் வளர்ந்ததன் பின்னர் அடிமைப் பெண்களுடன் சுதந்திரமாக உடல் உறவை வைத்துக் கொள்ள இஸ்லாம் அனுமதித்ததா?


ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், முதலில் அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்ற சட்டத்தை இஸ்லாம் வகுத்தது.


இந்த ஒழுக்கவியல் சட்டம் அக்கால அராபியாவில் பொதுவாக சிதைந்துப் போய் இருந்தது என்னவோ உண்மை.


என்றாலும், இவ்வாறான ஒழுக்கம் சிதைந்த போக்குக்கு எதிரான நிலையில் தமது மத பாரம்பரியங்களைப் பேணிக் கொண்டிருந்த சில யூதர்களிடையேயும்,  சில கிறிஸ்த்தவர்கள் மத்தியிலும், ஷாபியீன்களின் சில கோத்திர குழுக்களிடையும் தம்மை இப்ராஹீம் நபியின் குடும்பத்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த பனு ஹாசிம்களிடையேயும் திருமணம் முடிக்காமல் உடல் உறவு கொள்ளும் சம்பிரதாயம் இருக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.


இஸ்லாமிய அடிப்படியிலான திருமணம் என்றால் என்ன?


திருமணத்திட்கு முன்னர் ஆணும், பெண்ணும் திருமணம் புரிந்துக் கொள்ள விரும்ப வேண்டும்.


பெண்ணுக்குரிய 'மகரை' ஆண் அந்தப் பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்.  


இஸ்லாமிய திருமண சட்டத்தில் மகர் கொடுக்கப் படாத நிலையில் அந்தத் திருமணம் சட்டப் படி செல்லாது.


மகர் கொடுக்காமல் மனைவியுடன் வீடு கூடுவது ஹராம்.- பெரும் பாவம். 


இந்த நிலையில திருமணம் செய்யாமல் எக்காரணம் கொண்டும் ஒருவருக்கு ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள முடியாது.


இனி டாக்டர் அன்பு ராஜ் தன்னைக் குழப்பியதாக குறிப்பிடும் அல் குர்ஆன் வசனங்களைக் கவனியுங்கள். 


குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். 


other questions awaits for your reply.In the Koran Thabharak Joosvin -Al ma aridj Part 29 Chapter.70 - verse 30- clearly states that Wife as well slave girls are not forbidden for sex.Koran clearly permits sex with slave girls.Concubinity is the greatest insult to womenhood. It is a great shock to me that a God made Book advocates cohabitation and crulty and undignified treatment to womenhood.Alisina is proved in one point.Mohammed in tune with the above verse had Maria and other Kumus girls as concubines.It is usual with Muslims, if anything indecent is quoted, they would simply put aside that the source of the Hadis is unreliable.His marriage with sofia,zinab, and Aisha is ..... ? Aisha is 9 years old when he consummated marriage.U tube is full of explanations for that. All confirms that.Arab culture alone approved by God ? I hope to find answers to all questions that are raised in my letters in the course of time. But Why should you Quote from Hinduism which you do not believe and in your opinion anti God and Prophet ?




"ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது, தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர;(இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும் ) நிச்சயமாக அவர்கள் பலிக்கப் படமாட்டார்கள்"
(அல் குர் ஆன்: 23 : 6 ) 


"தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும், (உறவு கொள்வதை) த் தவிர; நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி ) நிந்திக்கப் படமாட்டார்கள்." 
(அல் குர் ஆன் : 70 : 30 )


அல் குர் ஆன் குறிப்பிடும் இந்த வசனங்களில் அடிமைப் பெண்களின் அடிமைத்தனத்துக்குப் பதிலாக அவர்களது உரிமை , அவர்களது விடுதலை விடுதலை சம்பந்தமான  விடயங்கள் கூறப்படுகின்றன.


எப்படி?


யாராவது ஒருவர் அவரது பராமரிப்பில் வந்த ஒரு அடிமைப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால், அவர் முதலில் அந்த அடிமைப் பெண்ணை அடிமைத் தனத்தில் இருந்து உரிமை விடுதலை செய்யவேண்டும்.


அதன் பின்னர் அவர் அவளை மணந்து தனது மனைவியாக அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், ஒருவருக்கு உறவு கொள்ள அனுமதிக்கப் பட்ட பெண் அவரது மனைவியாக இருக்க வேண்டும்.


அல்லது , அடிமைகளில் அடிமைத்துவ உரிமை விட்டு அவர் மகர் கொடுத்து தனது  மனைவியாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணுடன் அவருக்கு உறவு கொள்ள முடியும்.


இந்த ஒழுக்க முறை இல்லாமல் பெண்களுடன் பலவந்தமாக உறவு கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை.


நமது கோமாளி  காலித் பின் வலீத் போன்ற அக்கிரமக்காரர்கள் செய்த அக்கிரம செய்கைகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட செய்கைகள் அல்ல.


அவை அராபிய கோத்திர சட்டதிட்டங்களாக இருந்தன.



.............உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது .குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு. முஹம்ம‌துவின் ொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350
புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார் 
நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்…. அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்ம‌துவின் பதில் என்ன? நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.
இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்ம‌து நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்ம‌துவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்ம‌துவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது. 

மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை. இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும். இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது...................


இது நமது கோமாளி காலித் இப்னு வலீதின், உமையா , அப்பாசிய அக்கிரமக்காரக் கூட்டத்தாரின் அக்கிரமத்தை நியாயப் படுத்தி அனுமதிக்க இமாம் அலியின் மீது சுமத்தி இட்டுக் கட்டப் பட்ட ஒரு ஹதீஸ் அறிவிப்பாகும்.


இந்த ஹதீஸ் அறிவிப்பையும், கோமாளி காலித் இப்னு வலீதையும் அவரைப் போன்ற தளபதிகளின் அக்கிரமங்களை முன்மாதிரியாகக் கொண்டு நமது இம்சை அரசர்களுக்கு சொந்தக்காரர்களான உமையா அப்பாசிய கலீபாக்கள் உட்பட இஸ்லாமியப் பெயரில் அரசாண்ட, உலகை கொள்ளையிட்ட, அப்பாவிப் பெண்களை கற்பழித்த சாத்தானிய மன்னர்கள் செய்த அக்கிரம செய்கைகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட செய்கைகள் அல்ல.


அவ்வாறான அனைத்து செய்கைகளும் அல் குர் ஆனின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானவைகளாகும்.(நண்பர் அன்புராஜ்......இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்.) 


இஸ்லாத்தில் இவ்வாறான அனுமதிகள் இல்லை என்றாலும், ஒரு முஸ்லிம் அடிமைப் பெண் இத்தகைய இக்கட்டில் சிக்கினால் அவளது நிலை என்ன?


உதாரணமாக நமது கோமாளி காலித் இப்னு வலீதிடம் அநியாயமாக சிக்கிய மாலிக் பின் நுவைராவின் அழகு மனைவியைப் போல.............(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி...?)


..............உமையாக்களின் படையினரிடம் சிக்கிய அராபியர் அல்லாத அழகிய முஸ்லிம் , முஸ்லிம் அல்லாத பெண்களின் பரிதாப நிலையைப் போல.................(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி...?)

.............ஹர்ரா போரில் உமையாக்களிடம் சிக்கி தமது கற்பை இழந்த ஆயிரக் கணக்கான சஹாபா அராபிய பெண்களைப் போல..............(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி...?)

.............பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கிய பங்களாதேச அழகிய முஸ்லிம் , முஸ்லிம் அல்லாத இளம் பெண்களைப் போல..................(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி...?)

...............திடீரென, பாகிஸ்தான் தோற்றோட முஸ்லிம்கள் என்று நம்பி பாகிஸ்தானியருக்கு உதவிய பிகாரிகள், அப்பாவி பிகாரிப் பெண்கள்  பங்களாதேச படையினரிடம் சிக்கிய அவல நிலை போல............ .(அவர்களே அவர்களுக்கு நியாயப் படுத்திக் கொண்ட கனீமத்..என்கிற அனுமதி...?)

அல்லாஹ்வை விசுவாசித்து அதன் பின்னர், இவ்வாறான துர்பாக்கிய நிலையில் அடிமைகளாக அடிமைப் பட்டு இருக்கும் பெண்களுக்கு அல்லாஹ்வின் வேத வசனத்தில் என்ன சொல்லப் படுகிறது?


"...................................தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிறப் பந்திக்காதீர்கள்; அப்படி எவரேனும் அவர்களை நிர்ப்பந்தித்தால்,  அவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்"
(அல் குர் ஆன் : 24 : 33  ) 


ஒரு பெண்  கைது செய்யப் பட்டு அல்லது நமது காலத்திய செய்கையாக கடத்தப் பட்டு அடிமையாக நடாத்தப் பட்டு  பாலியல் வல்லுறவில் அல்லது விபச்சாரத்தில் அவளது எஜமானினால் நிர்ப் பந்திக்கப் பட்டால் இஸ்லாத்தின் சட்டவியல் அடிப்படையில் அவள் நிரபராதி.


நிர்க்கதியான அவளின் நிலைமையில் அவளை அவளது தவறுகளை அல்லாஹ் மன்னித்து விடுவதாக வாக்களித்திருக்கிறான்.


மனித மனத்தின் விலங்கியல் கொடூரத்தில் சிக்கிய பரிதாபகரமான ஒரு அடிமைக்கு இதனை விட உயர்தரமான உரிமைப் பத்திரம் வேறென்ன இருக்கப் போகிறது? 


இவ்வாறான தெளிவான விளக்கங்கள் இருந்தாலும் மூர்கத்தனமாக மனத்திலே ஒரு நெருடல்.


அதென்ன?



"ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது, தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர;(இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும் ) நிச்சயமாக அவர்கள் பலிக்கப் படமாட்டார்கள்"
(அல் குர் ஆன்: 23 : 6 ) 


"தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும், (உறவு கொள்வதை) த் தவிர; நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி ) நிந்திக்கப் படமாட்டார்கள்." 
(அல் குர் ஆன் : 70 : 30 ) 


ஒரு அடிமைப் பெண் உரிமை விடுதலை செய்யப் பட்டு ஒருவனின் மனைவியாக   மாறியதன் பின்னர் அவள் மனைவி என்ற வரையறையினுள் வந்து விடுகிறாள்.


இந் நிலையில் அவளுடன் உறவு கொள்வதில் அவன் தவறு காணப் பட போவதில்லை.எனினும் அல் குர்ஆனில் .........."தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும்.........."  என்று இன்னுமொரு குழுவினரைப் பற்றி அல் குர்ஆன் எதற்காக பேச வேண்டும்?


விடை இலகுவானது.


சுதந்திரமான பெண்ணுக்குத் தான் ஒருவனின் மனைவியாக உரிமை இருக்கிறது.


அந்தப் பெண்ணை ஒருவன் மணந்து தனது மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால் அவளுக்கு அவன் அவளுக்குரிய மகரைக் கொடுத்து அவளை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.


அதே போன்று அவனது ஆளுமையில் வந்திருக்கும் அடிமைப் பெண்களில் அவன் உரிமை  விடுதலை செய்து முறைப் படி சொந்தமாக்கி மணந்துக் கொண்டவர்களிடம் மாத்திரமே அவனுக்கு உறவு கொள்ளும் உரிமை இருக்கிறது.


 மற்றவர்களை ஏறெடுத்துப் பார்ப்பதற்குக் கூட அவனுக்கு அனுமதி இல்லை.


ஆனால், அவனுடைய ஆளுமையில் அந்த அப்பாவிப் பெண் சிக்கிக் கொண்டதன் காரணமாக அவளைப் பலவந்தமாக அவனால் அனுபவிக்க முடியும்.


அத்தகைய செய்கை பெரும் அநீதமாகும்.


இஸ்லாத்தில் இவ்வாறான அநீதிகளுக்கு கிஞ்சித்தும் இடம் இல்லை.


யாராவது அவ்வாறான அநீதத்தை செய்தால் அதற்கான தண்டனையை கட்டாயம் பெற்றுத் தீர வேண்டும்.


அப்படியென்றால்,அந்த அப்பாவிப் பெண்ணின் நிலை... ..


அல்லாஹ்விடம் அவளுக்கு மன்னிப்பு இருப்பதாக அல் குர் ஆன்  நன்மாராயம் சொல்கிறது.


 இனி,அடிமைகளின் உரிமை விடுதலை சம்பந்தமாக இஸ்லாம் நிர்ணயித்த சட்ட திட்டங்கள் சம்பந்தமாக கொஞ்சம் கவனிப்போம்..

ஒன்று: 
பாவங்களின் பரிகாரமாக அடிமைகளை உரிமை விடுதலை செய்வதை இஸ்லாம் தனது 
சட்டவாக்களில் முதன்மை இடத்தில் வைத்தது.

அதன் பிரகாரம் மக்கள் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக அடிமைகள் 
விலைக்கு வாங்கப் பட்டு உரிமை விடுதலை செய்யப் பட்டார்கள்.

இஸ்லாத்தின் இந்த சட்டம் நாளடைவில் அடிமைகள் என்றொரு இனம் 

மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் போவதற்குரிய காரணமாக அமைந்துப் போனது.



இரண்டு:
அபராதத் தொகைக்கு ஈடாக அடிமைகள் உரிமை விடுதலை செய்வதையும் இஸ்லாம் இஸ்லாமிய சட்டமாக அனுமதித்தது .


இஸ்லாம் அடிமைத்தனத்தை அனுமதிக்கும் ஒரு மதமாக இருந்தால் அந்தக் கட்டத்தில் அடிமை வியாபாரத்தையல்லவா ஊக்குவித்திருக்கும்.
மூன்று:
ஏதாவது குற்ற செயலுக்குரிய தண்டனைக்கு பிரதியீடாகவும் அடிமைகளை உரிமை விடுதலை செய்வதை இஸ்லாம் அனுமதித்தது.
நான்கு:
அபராதத் தொகைக்கு பிரதியீடாகவும் அடிமைகள் உரிமை விடுதலை செய்வதை இஸ்லாம் அனுமதித்தது. 

இஸ்லாத்தின் இத்தகைய சட்ட அனுமதிகள் நாளடைவில் அடிமைகள் என்றொரு இனம் அந்த சமூகத்தை விட்டும் இல்லாமல் ஒழிந்துப் போவதற்கு காரணமாக அமைந்துப் போனதுதான் யதார்த்தம்.


இதனை யாராலும் மறுக்க முடியாது.


இரவு கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களான உமையாக்கள் இஸ்லாத்தின் பெயரில் செய்த அநீயாயங்களுக்கு இஸ்லாம் பொறுப்பல்ல.

27 comments:

C.Sugumar said...

"ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது, தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர;(இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும் ) நிச்சயமாக அவர்கள் பலிக்கப் படமாட்டார்கள்"
(அல் குர் ஆன்: 23 : 6 )


"தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும், (உறவு கொள்வதை) த் தவிர; நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி ) நிந்திக்கப் படமாட்டார்கள்."
(அல் குர் ஆன் : 70 : 30 )


அல் குர் ஆன் குறிப்பிடும் இந்த வசனங்களில் அடிமைப் பெண்களின் அடிமைத்தனத்துக்குப் பதிலாக அவர்களது உரிமை , அவர்களது விடுதலை விடுதலை சம்பந்தமான விடயங்கள் கூறப்படுகின்றன.


எப்படி? what a blind false argument. Thank you for admitting that Koran permits fornication- forced sex with Slave women. Mohammed had 10 Kumus Girls(Alisina says ) war captives as concubines.He never married Maria.Had he married Maria, Maria would have provided a separate house like his other wifes.She would never kept in the house of his wife as a servant.The truth is one can marry a salve girl based on merrit.Koran permits sex with salve girls without marriage and does not ban marriage with Slave Girls based on preference.

Dr.Anburaj said...

உடனே அந்த அறிஞர்"நீங்கள் உங்கள் இந்து நண்பரிடம் அவரது மதத்தில் இதனை விடவும் மோசமான அனுமதிகள் இருக்கும் விடயத்தை பதிலாக சொல்லுங்களே" என்றார்.
(நண்பர் அன்புராஜ்.........ஹி........ஹி......
ஹி.....நம்மை மன்னித்துக் கொள்ளுங்கள்).
In India no Book holds supreme.Like science Books religious books should pass the test of time. A Hindu is always keeping his mind open for new things and to delete out of date things/things /concepts . You eulogise Koran to height of sky.But on reading it I find it so simpleton and has many evils which are unworthy of a religious Book/Universal Book.You are justifying it by your pompous psedo arguments.You cannot which wash and change its true nature. Koran/Islam is a Arabian political movement intended to Arabianise the world. One cannot expect a Islamist to openly admit the error of its political boss-Koran and Mr Mohammed. No DMK party men would critisise Mr.Karunanithi whatever may the error committed by him.similarly ADMK in respect of Ms.Jeyalalitha and congress men about Ms.Sonia. Gandhi.

Dr.Anburaj said...

"ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது, தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர;(இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும் ) நிச்சயமாக அவர்கள் பலிக்கப் படமாட்டார்கள்"
(அல் குர் ஆன்: 23 : 6 )


"தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும், (உறவு கொள்வதை) த் தவிர; நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி ) நிந்திக்கப் படமாட்டார்கள்."
(அல் குர் ஆன் : 70 : 30 )

This koranic verse has been corrupting the mind of pious Muslims also. Hence Abubakkar just ignored the cruelty meted out to Mr. Malik.
It is this verse which is in fact responsible/justification for the wicked acts done against Muslim women of opposite camp/women who are labelled as Kafirs/Idolators.
Whenever and wherever Muslims are strong they they would easily adopt Karimath based on Koran against Women.

The deep truth behind the above Koranic verse is " The strong man can ....... the wife and sisters of Week men ".The Koran allows free sex in respect of strong.

Dr.Anburaj said...

அல்லாஹ்வை விசுவாசித்து அதன் பின்னர், இவ்வாறான துர்பாக்கிய நிலையில் அடிமைகளாக அடிமைப் பட்டு இருக்கும் பெண்களுக்கு அல்லாஹ்வின் வேத வசனத்தில் என்ன சொல்லப் படுகிறது?


"...................................தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிறப் பந்திக்காதீர்கள்; அப்படி எவரேனும் அவர்களை நிர்ப்பந்தித்தால், அவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்"
(அல் குர் ஆன் : 24 : 33 )


ஒரு பெண் கைது செய்யப் பட்டு அல்லது நமது காலத்திய செய்கையாக கடத்தப் பட்டு அடிமையாக நடாத்தப் பட்டு பாலியல் வல்லுறவில் அல்லது விபச்சாரத்தில் அவளது எஜமானினால் நிர்ப் பந்திக்கப் பட்டால் இஸ்லாத்தின் சட்டவியல் அடிப்படையில் அவள் நிரபராதி.

Mohammed was the General of Islamic Army.He did not pay his army men.So he allowed to them to loot and rape the defeated, who were people who did not recognise Him as Prophet of Allah.The war of Badh is nothing But Highway robbery. The Merchants of Mecca were looted by Islamic army headed by General Mohammed.His share in the loot - valuable things and Women- 5%. 95% is divided among the participants of war.As a Arabian Scholar I request you to remind yourself the context in which the Soldiers had asked about coitus reservatus, which they had practiced while making sex with War captives to avoid conception-( if she conceived her market price would go down ).But Mohammed had said that coitus reservatus is not essential - Ali sina says.It is obvious Not only His ARmy men But also Mohammed has Kumus Girls/War captives as concubines- had sex with War captives and He is the Precedence for cruel treatment meted out to women throughtout History.Do not say alisina is a fool.He is a Ex.Muslim.

Dr.Anburaj said...

உடனே அந்த அறிஞர்"நீங்கள் உங்கள் இந்து நண்பரிடம் அவரது மதத்தில் இதனை விடவும் மோசமான அனுமதிகள் இருக்கும் விடயத்தை பதிலாக சொல்லுங்களே" என்றார்.
(நண்பர் அன்புராஜ்.........ஹி........ஹி......
ஹி.....நம்மை மன்னித்துக் கொள்ளுங்கள்).
In India no Book holds supreme.Like science Books religious books should pass the test of time. A Hindu is always keeping his mind open for new things and to delete out of date things/things /concepts . You eulogise Koran to height of sky.But on reading it I find it so simpleton and has many evils which are unworthy of a religious Book/Universal Book.If such a verse had existed in any religious Book,we would have thrown it in the gutter.ButYou are justifying/glossing over/white washing it by your pompous psedo arguments.You cannot white wash and change its true nature. Koran/Islam is a Arabian political movement intended to Arabianise the world. One cannot expect a Islamist to openly admit the error of its political boss-Koran and Mr Mohammed. No DMK party men would critisise Mr.Karunanithi whatever may the error committed by him.similarly ADMK in respect of Ms.Jeyalalitha and congress men about Ms.Sonia. Gandhi.

Dr.Anburaj said...

"ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது, தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர;(இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும் ) நிச்சயமாக அவர்கள் பலிக்கப் படமாட்டார்கள்"
(அல் குர் ஆன்: 23 : 6 )
Mohammed was always deadly cruel to persons who did not recognise him as the Messenger of Allah.This verse is to justify any cruelty done to men and women who did not recognise him as a Prophet-Non-Muslims.
.....தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிறப் பந்திக்காதீர்கள்; அப்படி எவரேனும் அவர்களை நிர்ப்பந்தித்தால், அவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்"
(அல் குர் ஆன் : 24 : 33 ) . Mohammed might have issued this statement to protect Women who were Muslims. Koran imposes deadly treatments to Non-mUslims and gradually imposes gently treatments to converts to Islam.
I learned that when some christian fathers called on Mr.Mohammmed to discuss about various religious things including his title to Prophethood.But Mr.Mohammed simply avoided the discussion with them by saying " Your religion is for you and my religion is for me ". No action of him was of any coincidence with that statement.Never say Islam is gentle sociable and democratic to Non-islamic religions.

Dr.Anburaj said...

நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களின் அருமை மனைவி மாரியதுல் கிப்தி (ரலி) அவர்கள் நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களை மணப்பதற்கு முன்னர் ஒரு அடிமை.When did Gen.Mohammed marry Miss.Maria, a christian slave Girl.Can you quote evidences and its sources for that Marriage ?.If Maria was her wife why was she kept as a servant in the house of his wife ? Zuvaria ? Had Mohammed had Kumus Girls/War captives as his concubines, keeping in tune with Arabian local customs ? Alsisina claims that he had more than 10 Kumus/Warcaptives/concubines apart from his legally married wifes. You do not refuse/refute it so far.Hence do you agree with Alisina ? Why there is profuse reference to" Virginity "in Koran in its description of Jannat ? If inmates of Jannat would be provided with copius supply of Virgin Girls what would the Women inmates of Jannat get ?

C.Sugumar said...

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் எல்லை மாகாணங்களான சிந்து, பலுசிஸ்தான் பகுதிகளிலிருந்து இந்துக்கள் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் தேடுவது அதிகரித்து வருகிறது. இந்த கவலைதரும் போக்கு மிக அண்மையில் அதிகரித்திருப்பதற்கு இந்திய அரசு ஆச்சரியம் தெரிவித்தாலும், விடுதலைபெற்ற நாள்முதலாய் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளையும் பற்றித் தெரிந்த வரலாற்று நோக்கர்களுக்கு இதில் எந்த ஆச்சரியமும் இருக்க வாய்ப்பில்லை.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் கயானி, தனது விடுதலை நாள் உரையில் பேசும்போது, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அச்சமின்றி அவர்களது மதநம்பிக்கைகளைப் பின்பற்றலாம், வாழலாம், பணிபுரியலாம் என்று குறிப்பிட்டாலும்கூட, அத்தகைய சூழல் பாகிஸ்தானில் அருகிக்கொண்டே வருகின்றது என்பதன் அடையாளம்தான் இவ்வாறு இந்தியாவில் அடைக்கலம் தேடுவோர் எண்ணிக்கை நாளும் கிழமையும் அதிகரிக்கக் காரணம்.

புனித யாத்திரைக்குச் செல்வதாகக் கூறி பாகிஸ்தானிலிருந்து வந்த 250 இந்துக்கள், தாங்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும், அங்கே தண்டனை கிடைக்கும் என்றும் சொல்லி, அடைக்கலம் கேட்கின்றனர். இவர்கள் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டபோது இவர்களிடம் எழுதி வாங்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளில் ஒன்று மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பி வருவோம் என்பது. அடுத்த நிபந்தனை, பாகிஸ்தான் குறித்து அவதூறாக எதுவும் பேச மாட்டோம் என்பது.

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்களுக்கு சொல்லொணாத் துயரங்கள் நிகழ்த்தப்படுவதாகவும், இளம்பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு கட்டாயத் திருமணம் செய்யப்படுவதாகவும், இது குறித்த எந்தப் புகார்களையும் பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்வதே இல்லை என்பதால், மதவாதிகளின் தாக்குதல் பல வகையிலும் அதிகரித்து வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து இஸ்லாமியரும் மதவாதிகள் அல்லர். இந்துக்களின் கோயில் உடைமைகள், அவர்களது வீடுகள், சொத்துகள் ஆகியவற்றால் பொறாமைகொண்ட மதவாதிகள்தான் இத்தகைய அத்துமீறல்களை, அநியாயங்களை சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்த நிகழ்வுகள் பாகிஸ்தானில் மட்டும்தான் நடைபெறுவதாகக் கருதத் தேவையில்லை. வங்கதேசத்திலும் மெüனமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு. உருதுவை அரசு மொழியாகக் கொண்டுள்ளது. ஆனால், அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் உருதுவை ஏற்க மறுத்து, வங்கமொழிதான் அரசு மொழியாக இருக்க வேண்டும், உருதுமொழியை ஏற்க மாட்டோம் என்று புரட்சி செய்தது. ஒரே மதத்தினர் தாய்மொழியான வங்க மொழியில் பிரிந்து நின்றதால்தான் வங்கதேசம் உதயமானது. ஆனால், வங்கதேசம் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பின்னர், அங்கே இந்துக்கள் எண்ணிக்கை 30%லிருந்து, தற்போது 9.2% ஆக குறைந்துவிட்டது.

C.Sugumar said...

1992ல் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதுபற்றிய பதிவுதான் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா (வெட்கம்) என்கிற நாவல். வங்க மொழியை ஆட்சி மொழியாக்கப் போராடிய ஒரு டாக்டர், இந்த மண் என்னுடையது; நான் ஏன் வெளியேற வேண்டும் என்று உறுதியோடு இருக்கும் டாக்டர், தன் மகள் கடத்தப்பட்டு மீட்கப்படாத நிலையில், தன் உறுதிகுலைந்து, மகன், மனைவியுடன் இந்தியாவுக்குப் புறப்படுவதுதான் இந்த நாவலின் கரு. இந்த நாவல் மீதான தடை வங்கதேசத்தில் இன்றுவரை தொடருகிறது.

ஒரு நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்கும் வரை, சிறுபான்மையினருக்கு சட்டத்தின் பாதுகாப்பு முழுமையாகக் கிடைக்கும், அவர்கள் உடைமைக்கும் மதச் சடங்குகளுக்கும் பாதகம் ஏற்படாது என்பதற்கு இந்தியா மட்டுமே உதாரணமாகத் திகழ்கிறது. அங்குமிங்குமாக சில தவறுகள் நடந்தாலும், பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் நடத்தப்படுவது போல, இந்தியாவில் சிறுபான்மையினர் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதில்லை.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு சிறுபான்மையினருக்கு மேலதிகமான கவனமும் சலுகைகளும் தரப்பட்டன. மதச்சார்பற்ற இந்தியாவில் வழங்கப்படும் இத்தகைய சலுகைகளையும், மனித உரிமைகளையும், இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தானிடமும், வங்கதேசத்திடமும் நாம் எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. அந்த அரசுகள் அவ்வாறு இந்து சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க முயன்றாலும், தீவிரவாத அமைப்புகளின் கட்டளைக்குக் கீழ்படியும் அவல நிலையில்தான் அங்குள்ள அரசுகள் உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இது எனது மண் என்று அங்கேயே தங்கிய மூத்த தலைமுறை இன்றில்லை. அன்றிருந்த இணக்கமான சூழலும் இன்றில்லை. தற்போதைய இரண்டாவது, மூன்றாவது தலைமுறையால் அந்நாடுகளில் வாழ முடியாத சூழல் உள்ளது. இத்தகைய சிறுபான்மை இந்துக்கள் அந்நாடுகளிலிருந்து சட்டப்படி வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புக விரும்பினால் அவர்களை வரவேற்று அரவணைப்பது மட்டுமே இப்போதைய நிலையில் இந்தியா செய்யக்கூடியது.

இவ்வாறு வெளியேற விரும்பும் பாகிஸ்தான் வாழ் இந்துக்களின் சொத்துகள் வழக்கமாக அங்குள்ள மதவாதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதை விற்க முடியாமல் வெளியேறும் சூழ்நிலையும் இருப்பதால்தான் அவர்கள் இந்தியா வரும்போது பிச்சைக்காரர்களைப் போல, அரசின் தயவை எதிர்நோக்கி வரும் நிலைமை உள்ளது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்துக்களின் சொத்துகளுக்கு இன்றைய சந்தை மதிப்புக்கான ரொக்கத்தை பாகிஸ்தான் அரசு கொடுத்தாலும்கூட, இவர்கள் போற்றிப் பாடி வெளியேறுவார்கள். இதற்கான உதவிகளை இந்திய அரசு,பாகிஸ்தானிடம் பேசி, சொத்துக்கான தொகையைப் பெற்றுத்தர முடிந்தால், அதுவே இவர்களுக்கு அரசு செய்யும் பேருதவியாக இருக்கும்!

Dr.Anburaj said...

இறைவனை நிராகரிப்பவர்கள் (Athists or did not accept Mohamed as prophet )அல்லது இறை நிராகரிப்புடன்(Athists or did not accept Mohamed as prophet and idolators ) அவனுக்கு இணை வைப்பவர்கள் இறைவனின் பார்வையில் மிருகத்தை விடவும் தாழ்ந்தவர்கள்.

அவர்கள் நரகத்துக்கு சொந்தக்காரர்கள்.

அவர்களைப் பற்றி அல் குர் ஆனில் இப்படி ஒரு வசனம் இருக்கிறது.

"நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்துக்கேன்றே படைத்துள்ளோம்;அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆனால்,அவற்றைக் கொண்டு அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்;அவர்களுக்கு கண்கள் உண்டு;ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பார்க்க மாட்டார்கள்; அவர்களுக்கு காதுகள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் நட்போதனையைக் கேட்க மாட்டார்கள்;-இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள்.இல்லை !அவற்றை விடவும் வழிக்கேடர்கள் ;இவர்கள்தாம் நம் வசனங்களை அலட்சியம் செய்தவர்களாவார்கள்"
(அல் குர் ஆன்: 7 : 179 .So we Hinduswho are practicing Idolatry as a lower form of worship - are less worth than animals.Koran says so.You are in agreement with it. You have no good for Hindus.But hatred and killing and eating. So the pathetic condition of Minority Hindus in Pakistan and Bangaladesh

Dr.Anburaj said...

The Muslim community should address the problem of Minorities in Muslim religious states.To enlist support I wrote the Editorial -Dinamani dt,16.8.2012.Thank you very much ..very much ....... for publishing the Editorial and for registering your sympathy for the Hindus of Pakistan and Bangaladesh.

Dr.Anburaj said...

Did Muhammad feed the poor and the orphan? No! He raided, looted people and reduced thousands into poverty. He made thousands of children orphan. There is a famous story of a certain Oqba, a man he captured in the battle of Badr and decided to decapitate him because he had spat at him in Mecca, some years earlier. Oqba cried, “And who will take care of my children?” Muhammad responded, “Hell.”

Dr.Anburaj said...

இஸ்லாத்தில் இவ்வாறான அனுமதிகள் இல்லை என்றாலும், ஒரு முஸ்லிம் அடிமைப் பெண் இத்தகைய இக்கட்டில் சிக்கினால் அவளது நிலை என்ன?

So Muslim Women are alone worthy for your conisderation. Others ... are to be left to their fate.

Dr.Anburaj said...

Alsisina claims that he had more than 10 Kumus/Warcaptives/concubines apart from his legally married wifes. You do not refuse/refute it so far.Hence do you agree with Alisina ? Why there is profuse reference to" Virginity "in Koran in its description of Jannat ? If inmates of Jannat would be provided with copius supply of Virgin Girls what would the Women inmates of Jannat get ? So you have not touched this point. Are you going to refute it or avoid answering that ?

Dr.Anburaj said...

இந்த ஹதீஸ் அறிவிப்பையும், கோமாளி காலித் இப்னு வலீதையும் அவரைப் போன்ற தளபதிகளின் அக்கிரமங்களை முன்மாதிரியாகக் கொண்டு நமது இம்சை அரசர்களுக்கு சொந்தக்காரர்களான உமையா அப்பாசிய கலீபாக்கள் உட்பட இஸ்லாமியப் பெயரில் அரசாண்ட, உலகை கொள்ளையிட்ட, அப்பாவிப் பெண்களை கற்பழித்த சாத்தானிய மன்னர்கள் செய்த அக்கிரம செய்கைகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட செய்கைகள் அல்ல.அவ்வாறான அனைத்து செய்கைகளும் அல் குர் ஆனின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானவைகளாகும்.(நண்பர் அன்புராஜ்......இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்.) Koran is a Book of Arabians.so it reflects the cultural evolution and moral code in Arabia. Mohammed had kumus girls as concubines/Sex slaves besides his legally married wifes. your long explanation to save Koran does not hold water.I reject your explanation.

Dr.Anburaj said...

I just had a chance to view the you tube " innocent Muslims " .I invite you to see that also.May be visually acting or representing Mr.Mohammed is abominable in Arabian world. Except that, the film/trailor is a bonafide biography of Mr.Mohammed.
Especially the story of his affair with Christian captive Girl Maria in the house of Zainab is wonderfully acted / presented in the film.As a Hindu I see nothing objectionable in that film. But Muslims have every right to demand banning of visually presenting Mr.Mohammed.

Dr.Anburaj said...

It is always with Business man- if the customer had asked for Green Ginger,which was out of stock, the Business man would not say that Green Ginger is not available, But would answer that Dry Ginger is available.similarly you are talking. I ask if Koran permits sex with war captives,your answer should be yes/No/ Yes it is out of date/ .Allah did not reveal that verse. Mr.Mohammed,in keeping with Arabiabian Local custom ie Karimath, he liked to have sex with many women.So he falsely inserted that verse in the Arabian religious Book- Koran.This proves that Koran is no revelation from God/Allah.It is simply the product of Mr.Mohammed and his friends.
It is possible More ugly things from his biography is prevented from public knowledge.Alisina also claims that,

Dr.Anburaj said...

தம்பி, திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைப்பெண்களை கற்பழிக்க குர்-ஆன் அனுமதி அளிக்கிறது. தனக்கு கிடைத்த ஐந்தில் ஒரு பாகத்தில் வரும் பெண் அடிமையை தன் மருமகனே கற்பழித்தாலும் அதனை அங்கீகரித்த மாமனாராக உன் வழிகாட்டி இருக்கிறார். இதுமட்டுமல்ல, அடிமைப்பெண்களை கற்பழித்துவிட்டு, அதன் பிறகு அவர்களை விற்றுவிட்டு, காசு சம்பாதிக்கவும் உன் வழிகாட்டி வழிகாட்டுகிறார். இவைகளை நீயே தமிழ் மொழியில் உள்ள புகாரி ஹதீஸ்களில் படிக்கலாம். இதோ உனக்காக அந்த புகாரி ஹதீஸ்கள்:

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2229

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)

மேலும் இதே விஷயத்தைக் கூறும் புகாரி ஹதீஸ் எண்கள்:
பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2542
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4138
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5210
பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603

உன் வழிகாட்டி எப்படிப்பட்ட பதிலை கொடுத்தார் பார்த்தாயா? நீங்கள் பெண் அடிகைகளை கற்பழிக்கும் போது, உங்கள் விந்தை வெளியே விடவேண்டிய அவசியமில்லை, பிறக்கும் குழந்தை பிறக்காமல் இருக்காது, பிறக்காத குழந்தை பிறக்காது, என்று தத்துவங்கள் பேசுகிறார். ஆனால், அந்த பெண் அடிமைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவில்லை. தன் கணவனையும், பெற்றோர்களையும் போரில் பலி கொடுத்துவிட்டு, அனாதையாக நின்றுக்கொண்டு இருக்கும் பெண்களிடம் சென்று அவர்களிடம் உடலுறவு கொண்டால், அவர்கள் மகிழுவார்களா? அவர்களின் மனது சந்தோஷப்படுமா? சிந்தித்துப்பார் தம்பி. முஹம்மது அனுமதித்த இந்த செயலுக்கு நீ என்ன பெயர் கொடுப்பாய், இதை "கற்பழிப்பு" என்று தான் சொல்லமுடியும்.

4) பெண் அடிமைகளை கேவலப்படுத்தும் இஸ்லாம்:

இதுவரை ஒரு சில விவரங்களை உனக்கு நான் மேற்கோள் காட்டினேன், நீ உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மதுவிற்கு அடிமைப்பெண்கள் இருந்ததாக, இஸ்லாமிய சரித்திரம் கூறுகிறது. தேவைப்பட்டால் முஹம்மதுவின் வைப்பாட்டிகள் (அடிமைப்பெண்கள்) பற்றி இஸ்லாமிய சரித்திரம் என்ன சொல்கிறது என்று பிறகு பார்ப்போம்.

Dr.Anburaj said...

www.isakoran says:- Mr.Mohammed - Quintessence of virtue ?

முஹம்மது: ஒரு எடுத்துக்காட்டு (MOHAMMED: AN EXAMPLE)


இஸ்லாமிய‌ ந‌பி தான் ம‌க்காவில் த‌ன் புதிய‌ ம‌த‌த்தை பிர‌ச்சார‌ம் செய்யும் போது, கிறிஸ்தவ‌ர்க‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ளிட‌ம் ச‌ம‌ர‌ச‌த்தோடு ந‌ட‌ந்துக்கொண்டார். அவர் இவ்விதமாக கூறினார்: ….; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - …. (29:46). ஆனால், அவரின் இப்படிப்பட்ட மனப்பான்மை அவருக்கு வலிமை வந்தவுடன் மாறிவிட்டது. இப்போது அல்லா அவருக்கு இவ்விதமாக‌ச் சொல்கிறார்:


வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.( 9:29)



கிறிஸ்தவர்களை விட யூதர்களை முஹம்மது அதிகமாக வெறுத்தார் என்று தெரிகிறது. முஹம்மது தான் வாழ் நாட்களில் யூதர்களை அழித்துவிட வேண்டுமென்றே அதிக‌ முயற்சிகளை மேற்கொண்டார்.



முஹம்மது கூறுகிறார்: "யூதர்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள், இந்த பூமி அல்லாவிற்கும் அவரது தூதருக்கும் சொந்தமானது. இந்த நாட்டை விட்டு(அரேபியா) உங்களை துரத்தப்போகிறேன், ஆகையால், உங்களிடம் ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அவைகளை விற்றுவிடுங்கள்".


Dr.Anburaj said...

அவர்கள் அல்லாத ஏனைய மக்கள் அனைவரும் இறைவனின் பார்வையில் கால்நடைகளை விடவும் தாழ்ந்தவர்கள்.

இறைவனை நிராகரித்த காரணத்தால் அவர்கள் அனைவரும் நெருப்பினால் படைக்கப் பட்ட சைத்தானின் -நெருப்பின்- சொந்தக்காரர்களாகிரார்கள்.

அதனால் சைத்தானுடன் இணைநது நெருப்பினால் படைக்கப் பட்ட நரகத்துக்கு செல்கிறார்கள்.

சைத்தானும் அவனது கூட்டத்தினரும் நரக நெருப்பின் சுவையை சுவைக்க நரகம் சொல்வது சரி!
அவர்கள் அல்லாத ஏனைய மக்கள் அனைவரும் - Who are they ? Hindus,christians Buddhists -all other denominations ? Arab religion/Arabian Mohammed says Arabians or those who imitates Arabians are alone get admission into Heaven.Mr.Abdul Razak is not an Arabian.But -he in the disguise of Muslim - imitatating Arabians. Koran is a document of Arab culture.
Be an Arab else imitate Arabians else Hell is your lot.That is islam.

Dr.Anburaj said...

இராக்கில் இருந்தும், மத்திய கிழக்கில் இருந்தும் ,லிபியாவில் இருந்தும் எத்தனை எத்தனை இளம் பெண்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விபச்சாரத்துக்காக கடத்திக் கொண்டு போகப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?........இவர்கள் அனைவரும் sex slave என்று பெயரிடப் பட்டு விபச்சார அடிமைகளாக விற்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்று பொரிந்து தள்ளினார்.
If it happens inIndia ,Would it be all right ?

Dr.Anburaj said...

--------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா?

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான்.
It is always with Business man- if the customer had asked for Green Ginger,which was out of stock, the Business man would not say that Green Ginger is not available, But would answer that Dry Ginger is available.similarly you are talking. I ask if Koran permits sex with war captives,your answer should be yes/No/ Yes it is out of date/ .Allah did not reveal that verse. Mr.Mohammed,in keeping with Arabiabian Local custom ie Karimath, he liked to have sex with many women.So he falsely inserted that verse in the Arabian religious Book- Koran.Instead you are saying --------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா?

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான்.

C.Sugumar said...

இந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி!. வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், தேவையானவற்றை செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.

நிச்சயமாக ஈமான் நற்செயல்கள் செய்பவர்களை சொர்க்கங்களில் புகச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் தங்கத்தினாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் (ஆபரணங்கள்) அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்.…
(குர் ஆன் 22:23)

தங்கத்தினாலான தட்டுகளும், குவளைகளும் அவர்களிடம் சுற்றிக் கொண்டுவரப்படும்…
(குர் ஆன் 43:71)

தங்கம் இரும்பைப் போன்ற ஒரு உலோகமே. பூமியில், தங்கம் கிடைப்பது அரிதாக இருப்பதன் காரணமாகவே பெரிதாக மதிக்கப்படுகிறது. பொருள்களை பண்டமாற்றம் செய்து வந்த மக்கள், நாளடைவில் அரிதான உலோகமான தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றினர். ஆக, தங்கத்தின் மதிப்பு மனிதர்களின் பிற தேவைகளையே சார்ந்தது. உலக வாழ்வில் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களின் உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளுக்காகவும், மற்றவர்களை விட தன்னை உயர்ந்தவனாக கண்பிக்கும் மனோபாவாமே மனிதனை பொருளை (தங்கத்தை) தேடி ஓட வைத்தது. எவ்வித தேவைகளும், போட்டி, பொறாமைகளுமற்ற மறுமை வாழ்வில் தங்கத்திற்கு தனி மரியாதை தேவையில்லையே? மறுமை வாழ்வில் அல்லாஹ் தரும் தங்கத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

வீட்டுவாடகை, School fees, collage fees, Ration கடை, பருப்பு, பாமாயில், கரண்ட பில் என்ற எந்த கவலையும் சொர்கத்தில் உங்களுக்கு இருக்காது. பஸ்ஸை பிடிக்க வேண்டும், இரயிலைப் பிடிக்க வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும், காது குத்திற்குப் போக வேண்டும் Hospital போக வேண்டும் என்ற பிடுங்கல்களும் இருக்காது. அல்லாஹ்வை தொழ வேண்டும், முஹம்மதுவிற்கு பல்லக்கு தூக்க வேண்டும், என்ற எந்த வழிபாடுகளும் கிடையாது. பொறாமை,கோபம், விரோதம் போன்ற தீய எண்ணங்களும் சொர்க்கவாசிகளின் மனதைவிட்டு அகற்றி விடுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

பிறகு என்னதான் இருக்கிறது?

இவ்வளவையும் மனிதனைவிட்டு நீக்கிய அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex. மனிதனின் உடற்பசியை மட்டும் ஒரு காலத்திலும் அவனை விட்டு விலக விடுவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறான். சொர்கத்தில் மனிதனுக்கு இருக்கும் ஒரே பணி தனது பாலியல் தேவைகளை விதவிதமாக தேடித் தேடி நிறைவேற்றிக் கொள்வது மட்டுமே! சொர்க்கத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் Sex … Sex… முடிவில்லாத சல்லாபங்கள்.



விருந்தாக, கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி, மான்விழி ஹூர் எனும் பேரழகிகள். மறுமையின் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வெகுமதிகளாக 80,000 பணியாட்களும், உலகில் அவர்களுடன் வாழ்ந்து மறுமையிலும் வெற்றி பெற்ற அவர்களது மனைவியர்களுடன், எழுபதிற்கும் மேற்பட்ட ஹூருலீன்களும் வழங்கப்படுவார்கள்.

நீங்களும் உங்களுடைய மனைவியரும் மகிழ்ச்சிக்குரியவர்களாக இருக்கும் நிலையில் சொர்க்கத்தினுள் புகுங்கள்…
(குர் ஆன் 43.70)
அவற்றில் அழகுமிக்க நற்குணமுள்ள கன்னியர்கள் இருப்பர்
(குர் ஆன் 55.70)
இவ்வாறே; இன்னும் அவர்களுக்கு ஹூருல்ஈன் (என்னும் சுவர்கத்துக் கன்னியர்)களைத் துணைவியராக்கி வைப்போம்.
(குர்ஆன் 44: 54)
அவற்றில் பார்வை கீழ் நோக்கிய பெண்கள் இருக்கின்றனர் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் (சொர்க்வாசிகளாகிய) இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை.
(குர்ஆன் 55: 56)
அவர்களை கன்னியர்களாகவும் ஆக்கினோம்.
(குர்ஆன் 55: 36)
மார்பகங்கள் உயர்ந்த சம வயதுள்ள கன்னிப் பெண்களும்.
(குர்ஆன் 78: 33)


சரி, மனைவியர்கள் இருக்கையில், எதற்காக இவ்வளவு ஹூருலீன்கள் ? தங்களது கணவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளாத (கள்ளத்தொடர்பு) காரணத்தால் நரகத்தில் பெண்களே மிகுதியாக இருக்கக் கண்டதாக முஹம்மது நபி கூறுகிறார்.

புகாரி ஹதீஸ் எண் : 3241
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் (மிஅராஜ்- விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களை கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஹம்மது நபி, பெண்கள் என்றாலே பிற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு கொள்பவர்கள் என்று முடிவு செய்துவிட்டாதாகவே தோன்றுகிறது. அவரது தனிப்பட்ட அனுபவம் அப்படி இருந்திருக்கிறது என்றுதான் நாம் சொல்ல முடியும்! முஹம்மதை மிஃராஜ் பயணத்திற்கு அழைத்துச் சென்ற அல்லாஹ், குறிப்பாக சில காட்சிகளைக் காண்பித்திருக்கிறான் அதில் இதுவும் இடம்பெறுகிறது.

C.Sugumar said...

இவ்வளவையும் மனிதனைவிட்டு நீக்கிய அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex. மனிதனின் உடற்பசியை மட்டும் ஒரு காலத்திலும் அவனை விட்டு விலக விடுவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறான். சொர்கத்தில் மனிதனுக்கு இருக்கும் ஒரே பணி தனது பாலியல் தேவைகளை விதவிதமாக தேடித் தேடி நிறைவேற்றிக் கொள்வது மட்டுமே! சொர்க்கத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் Sex … Sex… முடிவில்லாத சல்லாபங்கள்...........நீங்களும் உங்களுடைய மனைவியரும் மகிழ்ச்சிக்குரியவர்களாக இருக்கும் நிலையில் சொர்க்கத்தினுள் புகுங்கள்…
(குர் ஆன் 43.70)
அவற்றில் அழகுமிக்க நற்குணமுள்ள கன்னியர்கள் இருப்பர்
(குர் ஆன் 55.70)
இவ்வாறே; இன்னும் அவர்களுக்கு ஹூருல்ஈன் (என்னும் சுவர்கத்துக் கன்னியர்)களைத் துணைவியராக்கி வைப்போம்.
(குர்ஆன் 44: 54)
அவற்றில் பார்வை கீழ் நோக்கிய பெண்கள் இருக்கின்றனர் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் (சொர்க்வாசிகளாகிய) இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை.
(குர்ஆன் 55: 56)
அவர்களை கன்னியர்களாகவும் ஆக்கினோம்.
(குர்ஆன் 55: 36)
மார்பகங்கள் உயர்ந்த சம வயதுள்ள கன்னிப் பெண்களும்.
(குர்ஆன் 78: 33)

புகாரி ஹதீஸ் எண் : 3241
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் (மிஅராஜ்- விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களை கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஹம்மது நபி, பெண்கள் என்றாலே பிற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு கொள்பவர்கள் என்று முடிவு செய்துவிட்டாதாகவே தோன்றுகிறது. அவரது தனிப்பட்ட அனுபவம் அப்படி இருந்திருக்கிறது என்றுதான் நாம் சொல்ல முடியும்! முஹம்மதை மிஃராஜ் பயணத்திற்கு அழைத்துச் சென்ற அல்லாஹ், குறிப்பாக சில காட்சிகளைக் காண்பித்திருக்கிறான் அதில் இதுவும் இடம்பெறுகிறது.

பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.
புகாரி ஹதீஸ்:3246 ,
அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது, எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வெருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வெருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளது பளிங்குமேனியின் பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களுடைய பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களுடைய தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களுடைய வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும்.

C.Sugumar said...

(ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் அவர்கள் (ஹூரூலீன்கள்) கன்னியர்களாகவே இருப்பார்கள்)
(மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு, ஹூரூலீன்கள் பரிசாக வழங்கப்படுவார்கள். உலகில் இருப்பதைப் போல அங்கு எவ்வித திருமண ஒப்பந்தங்களும் தேவையில்லை)

இத்தனை ஹூருலீன்களையும் வைத்துக் கொண்டு சராசரி பாலியல் பலம் கொண்ட மனிதன் தன் இச்சையை எப்படி தீர்க்கமுடியும்? என்ற உங்களது அச்சம் நியாயமானதே. இதற்கும் சரியான தீர்வு முஹம்மது நபி அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.

(ஹூருலீன்களுடன் இணைவதற்கும் முடிவில்லா சுகம் பெறுவதற்கும் நூறு பேருடைய ஆற்றல் சொர்க்வாசி ஆண்களுக்கு வழங்கப்படும். அறிவிப்பவர் அனஸ் (ரலி) திர்மிதீ.)


ஜிப்ரீல் முஹம்மது நபிக்கு ஆண்மைபலம் பெருக லேகியம் (பக்குவமாக சமைக்கப்பட்ட இறைச்சி) கொடுத்ததை முன்பே உங்களிடம் கூறியிருக்கிறேன். அதைவிட பல மடங்கு சக்த்திவாய்ந்த லேகியம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறதே பிறகு என்ன கவலை? ஆற்றல் குறைபாடு உள்ளவர்கள், அல்லஹ்விடம் முறையிடலாம். ஜிப்ரீலைத் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து சற்று கூடுதல் சக்தியுடைய லேகியம் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம். இதில் வயாக்ரா என்ற நவீன மருத்துவக் கண்டுபிடிப்பின் முன்னறிவிப்பை நாம் காணலாம். வயாக்ரா பற்றி முன்னறிப்பை எழுதுவதற்கு முஃமின்களுக்கு கூச்சமாக இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை , ஒருவரும் வாய்திறந்து பேசமாட்டேன் என்கின்றனர்!


ஒரு நாளைக்கு நூறுமுறை என்றால், மறுமை வெற்றியாளர்கள் சுமார் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை RECHARGE செய்யப்பட்டு ஹூருலீன்களை ‘வெற்றி கொள்ள களத்திற்கு’ அனுப்பப்படுவார்கள்.

சாதாரண ஆண்மை பலத்திற்கே முஃமின்களில் பலருக்கு பலதாரங்கள் தேவைப்படுகிறது. இதில் நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்பட்டால் மென்மையான ஹூருலீன்களின் நிலை என்னாவது? என்று கவலைப்பட வேண்டாம்.உங்களது அந்த கவலையையும் அல்லாஹ் கவனத்தில் கொண்டுள்ளான். அல்லாஹ்வைப்பற்றி நீங்கள் அத்தனை லேசாக எடைபோடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.


நிச்சயமாக நாம் (ஹூருல்ஈன்களான) அவர்களை பிரத்தியேகமாக உண்டாக்கினோம்.
(குர் ஆன் 55.35)

ஹூருலீன்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். எவ்வளவு முறை உறவு கொள்ளப்பட்டாலும் சலிப்படையவோ வேதனையடையவோ மாட்டார்கள். அவர்களுக்கு மாதவிலக்கு கிடையாது என்றுமே கன்னித்தன்மையுடையவர்களாக இருப்பார்கள். இவை பற்றிய ஹதீஸ்கள் கூறும் வர்ணணைகளின் சுருக்கமான தகவல்கள்.

எகிப்திய அறிஞரின் குர்ஆன் விரிவுரையிலிருந்து

Imam Al-Suyuti :
“Each time we sleep with a houri we find her virgin. Besides, the penis of the Ejected never softens. The erection is eternal; the sensation that you feel each time you make love is utterly delicious and out of this world and were you to experience it in this world you would faint. Each chosen one [ie Muslim] will marry seventy houris, besides the women he married on earth, and all will have appetizing vaginas.”

(ஹூரியுடன் உறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் அவளை கன்னியாகவே நாம் காண்போம். அன்றியும், ஆணுறுப்பு ஒருபொழுதும் தளர்ந்து விடாது. அதன் விறைப்புத்தன்மை நிலையானது; உங்கள் காதலால் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணரும் முழு இன்பம் உலகில் இல்லாதது. அதை(இன்பங்களை) இவ்வுலகில் நீங்கள் அனுபவித்தால் மயங்கி விடுவீர்கள். தேந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் 70 ஹூரூலீன்களை திருமணம் செய்வார்கள். அன்றியும், அவரது இவ்வுலக மனைவியர்கள் (இச்சையைத்) தூண்டும்படியான பெண்ணுறுப்புகளைப் பெற்றிருப்பார்கள்)

C.Sugumar said...

ஹூருலீன்களில் ஆண்களும் உண்டு என்றால்,
மறுமையில் வெற்றி பெற்றவர்கள் தம்பதிகளாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று முன்பே பார்த்தோம். பெண்களில் மிகப் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்களே. வெகு சிலரே திருமண வாழ்க்கையின்றி இருப்பவர்கள். இவர்களைத் தவிர மீதம் இருப்பவர்கள் கணவன் நரகத்திற்கு சென்று விட்டதால் தனிமையில் சொர்கத்திற்கு வரும் பெண்கள் இவர்களுக்கும் ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள். ஆக,சொர்க்கவாசியாகத் தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் 72 கட்டழகு கன்னியர்களும், காளையர்கள் இணையக் காத்திருக்கின்றனர் (ஒருவேளை இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். யார் கண்டது ?!)

ஒருவேளை, சொர்க்கவாசிகள் தங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஹூருலீன்கள் போதவில்லை என்று நினைத்தால், அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Al Hadis, Vol. 4, p. 172, No. 34
Ali reported that the Apostle of Allah said, "There is in Paradise a market wherein there will be no buying or selling, but will consist of men and women. When a man desires a beauty, he will have intercourse with them."
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் கூறினார், சொர்க்கத்தில் உள்ள கடைத்தெருவில் ஆண்களையும் பெண்களையும் தவிர வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றும் இருக்காது. ஒரு ஆண் விரும்பும் பொழுது (அங்குள்ள) அழகிய பெண்ணுடன் கலவியில் ஈடுபடலாம்.

Sunan al-Tirmidhi 1495
In paradise, there is a market of rich, beautiful and ever-young women; they will be pleased whoever buys them…
சொர்கத்தில் செல்வந்தர்களின் கடைத்தெரு உள்ளது, (அங்கு) மிக அழகான என்றும் இளமையாக உள்ள கன்னியர் (ஹூருலீன்கள்) உள்ளனர். யார் அவர்களை வாங்கினாலும் அவர்கள் (ஹூருலீன்கள்) அகமகிழ்வார்கள்.

உங்களது விருப்பம் போல பெற்றுக் கொள்ளலாம்.

முஹம்மது நபியால் வர்ணனை செய்து கூறப்பட்ட சொர்க வாழ்க்கையின் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். கேடுகெட்ட காட்சிகள்தான் கண்முன்னே தோன்றும்.

C.Sugumar said...

முஸ்லீம் ஹதீஸ் : 309, அத்தியாயம்: 1, பாடம்: 1.90
அறிவிப்பாளர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி).
"அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும் தங்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?" என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவரை நான் நரகத்தின் மையப் பகுதியில் கண்டேன். எனவே, அவரை(க் கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நெருப்பின் பகுதிக்கு அங்கிருந்து அப்புறப்படுத்தினேன்" என்று கூறினார்கள்.

(மண்ணறையிலிருந்து அபூதாலிப் எழுப்பப்பட்டு விட்டாரா? அவருக்கு மறுமை நாளின் விசாரணை முடிந்து, நரகத்திற்கும் சென்று விட்டாரா…!? அப்படியானால், ஏற்கெனவே ஒரு கூட்டம் விசாரணையை சந்தித்து விட்டது. முன் சென்றவர்கள் மண்ணறையில்தான் இருப்பார்கள் என்றும், இறுதித்தீர்ப்பு நாள் இதுவரை நிகழவில்லை என்றும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.)

மறுமை நாளின் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் முன்கூட்டியே அறிந்ததெப்படி? தன்னுடைய மனைவி ஆயிஷாவின் கற்பின் மீது அவதூறு கூறப்பட்ட பொழுது, உண்மையை அறிய முடியாமல் ஒரு மாத காலம் திணறியவர் மறுமையின் உரையாடல்களைக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad