அஹ்லுல்பைத் Headline Animator

Friday, April 26, 2013

முஸ்லிம் பெண்களின் எதிர்காலம்..........???


முஸ்லிம் பெண்களின் எதிர்காலம்..........???

ஆக்கம்: டாக்டர் அன்புராஜ்.

இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும். இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.





இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புகிறான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்கிறான்.


இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக் கொள்கிறார்கள் சிலர்.

தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்து விடுகிறார்கள்.


அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.


ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 14 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.
பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

நிச்சயமாக இஸ்லாம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. நல்ல ஒழுக்கத்தையும் கட்டுப்பாடையுமே அது வலியுறுத்துகிறது.

சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். அப்படியானால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.

படிப்பது வேலைக்குச் செல்வதற்காக மட்டுமே என்று நினைப்பதும் தவறான எண்ணம்தான். கல்வி என்பது சூரியனைப் போன்றது. அது வந்துவிட்டால் குடும்பம் பிரகாசம் ஆகிவிடும். ஒரு பெண் கல்வியில் மேலோங்கிவிட்டால் போதும், தந்தை மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்பது முதலில் மறைந்து இருவரும் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.



பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பது அவளுக்கும் தெளிவாகத் தெரியும். அவளின் மகளை அவள் எப்படி உருவாக்க வேண்டும் என்றும் தெரியும். ஆகவே பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று.

அவள் வேலைக்குச் செல்வதும் வேண்டாம் என்று நினைப்பதும் கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

இப்போதெ‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

இப்போதெ‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.

முஸ்லிம் பெண்களை முன்னேற்ற முதலில் முஸ்லிம் ஆண்கள் முன்னேறவேண்டும். அவர்களே இன்னும் படிப்பில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.

பெண்ணுக்கான முன்னேற்றப் படிகளை இன்னொரு பெண் அமைத்துத் தருவதை விட அந்த வீட்டு ஆண்கள் அமைத்துத் தந்தால் அதன் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.

முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு முஸ்லிம் ஆண்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் முனைப்பாய் இருக்க வேண்டும். சகோதரி, மனைவி, மகள், பேத்தி என்று எல்ல்லோரையும் கற்றவர்களாக ஆக்குவது முஸ்லிம் ஆண்களிடம்தான் பெரிதும் இருக்கிறது.

முஸ்லிம் குடும்பங்களில் அதிக அளவில் திருமணத்தின்போது பெண்ணுக்கு வீடும் நகையும் பணமும் சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் நிலைதான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது.

பெண்ணுக்கு அவளின் கல்வியே முதல் சீதனமாக அமைய வேண்டும். நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான். இன்று முஸ்லிம் ஆண்கள் அதிகளவில் படித்து முன்னேறி வருகிறார்கள் என்பதால் பெண் கல்விக்கு இந்த சீதனமும் ஒரு தடையாக ஆகாது.

ஆகவே ஒரு முஸ்லிம் பெண் படிப்பதற்கு எதுவுமே தடையில்லை.

முஸ்லிம்பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது.

வேற்று ஆணோடு ஒர் முஸ்லிம் பெண் பேசக்கூடாது என்ற நிலை மாறிவருகிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையே வளர்ந்து வருகிறது.

படிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்கள் தன்னைப்போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று பெண்கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.

மார்க்க அறிஞர்கள் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளில் பெண் கல்வியின் அவசியத்தைத் தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்போது முஸ்லிம் பெண்களின் கல்வி குறைவானதாக இருந்தாலும், அது முன்புபோல மிகக் குறைவானதாக இல்லை. எல்லாவற்றுக்கும் துவக்கம் என்று ஒன்று வேண்டுமல்லவா. துவங்கிவிட்டால் பின் வேகம் அதிகரிக்கும். இது வேகம் அதிகரிக்கும் காலகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. அதைப்போல முஸ்லிம் பெண்களின் கல்வியும் இனி மறையப்போவதும் இல்லை ஓயப்போவதும் இல்லை.

இன்னும் ஒரு பத்தாண்டுகளில் உலகில் முஸ்லிம் பெண்கள் தாண்டும் தூரம் மிக உயரமாகவே இருக்கும் என்று நம்புவோமாக.

18 comments:

Dr.Anburaj said...

மூதுரை------ஔவையார் என்ற பெண்புலவலரின் தொண்டை நினைப்போமே! புதிய சரி்த்தரம் படைப்போம்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர் 2

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளiல்லா மங்கைக் கழகு 3

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் 4

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா 5

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்று\ண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான் 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று 8

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்று\றல்
உண்ணீரும் ஆகி விடும்

Dr.Anburaj said...

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி 14

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம் 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு 17

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால் 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். 19

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு 20

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும் 21

Dr.Anburaj said...

உண்மையா!
அரபியாவில் இருக்கும் ஜாதிமுறையில் அரபுகள் செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்லும் ஜாதிவெறியாலும் தினந்தோறும் பாதிக்கப்படும் பெண்களை பற்றியும் ஜாதிவெறியால் நிகழும் இழிவுகளை பற்றியும் தொடர்ந்து பதிந்து வருகிறேன்.

They're considered untouchable. One Yemeni saying goes: “Clean your plate if it is touched by a dog, but break it if it’s touched by an Akhdam”.
நாய் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை கழுவு. ஆனால் அக்தம் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை உடைத்துபோடு என்பதுதான் அரபுகள் இவர்களை நடத்தும் விதம்.
ஏமனில் அல் அக்தம் என்று தீண்டத்தகாத மனிதர்களாக ஏமனின் மக்களே இழிவு செய்யப்பட்டு 500000க்கும் மேற்பட்ட மனிதர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானில் இந்து பெண்ணின் நிலை
Islamabad (AsiaNews) - "In Pakistan there is justice only for Muslims, justice is denied Hindus. Kill me here, now, in court. But do not send me back to the Darul-Aman [Koranic school] ... kill me". This is the desperate, heartbreaking outburst of Rinkel Kumari, a Hindu girl aged 19, who has entrusted her heartfelt appeal to the judges of the Supreme Court in Islamabad. Her story is similar to that of many other young women and girls belonging to religious minorities - Christians, Hindus, Sikhs, Ahmadis - kidnapped by extremist groups or individuals, most of the time lords or local mafia, which convert them by force and then marry them . And that is what the girl said on 26 March, before the judges of the capital's court.

The drama of Rinkel Kumari, a student of Mirpur Mathelo, a small village in the province of Sindh, began the evening of February 24: A handful of men seized her and delivered her a few hours later into the hands of a wealthy Muslim scholar, the man then called her parents, warning them that their daughter "wants to convert to Islam."

Nand Lal, the girl's father, a teacher of an elementary school, accused Naveed Shah, an influential Muslim, of kidnapping his daughter. The man has the "political cover" provided by Mian Mittho, an elected National Assembly Member, suspected of aiding and abetting. After identifying the perpetrators of the kidnapping of his daughter, he was forced to leave the area of origin to escape the threats of people affiliated with the local mafia. The father found refuge and welcome in Gurdwara in Lahore, in Punjab province, with the rest of his family.

As often happens in these cases, even the judiciary is complicit: a local judge ordered that the girl should be given to the Muslims, because her conversion is "the result of a spontaneous decision" and also stated the marriage was above board. A claim that was repeated on February 27, at the hearing before the court, after which the girl was "renamed" Faryal Shah.

However, the story of Rinkel is not an isolated case: every month between 25 and 30 young people suffer similar abuses, for a yearly total of about 300 conversions and forced marriages. Hindu girls - but also Christian - who are torn from their family and delivered into the hands of their husbands / torturers.

On March 26, she appeared before the judges of the Supreme Court in Islamabad, while the Hindu community waited with bated breath for the girl's statements in court. To avoid pressure, the presiding judge ordered the courtroom cleared and - later - the dramatic testimony was relayed: in Pakistan, "there is no" justice, "kill me here but do not send me back" to the kidnappers.

Speaking to AsiaNews Fr. Anwar Patras, the Diocese of Rawalpindi, condemned "with force" the kidnapping and forced conversion. "The Hindus in Sindh - adds the priest - live a hard life. The reality is getting harder for them, they are forced to migrate because the state is unable to protect them and their property.

Dr.Anburaj said...

கல்கத்தாவில் இருக்கும் யூதர்களது பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்க முஸ்லீம் பெற்றோர் விரும்புகிறார்கள்.

Attired in a modest salwar-kameez , hijab firmly in place, Shaista Fatima leaves her home in Kolkata's Rippon Street and heads for school. Friends
Farida and Shehnaz Jahan join her on the way and the three demurely make their way through the conservative Muslim neighbourhood.The idea of Muslim students in a Jewish school may be blasphemous anywhere else on the planet, but here in Kolkata, it's a reality. In fact, doors to the two Jewish schools in the city were opened to other communities, including Muslims, around the same time that Israel was carved out of Palestine six decades ago, triggering a bloody conflict that still rages today.

It's a study in contrast really. Palestinian mothers let their children join the uprising or intifada against Israeli occupation even as Muslim mothers in Kolkata send their wards to schools run by Jews. The former is about death - it's an honour if the child kills a Jew and brings martyrdom if he is killed in the attempt. The latter is about the hope of a better future.

For most middle-class Muslims in Kolkata, getting their children into a good English medium school is a dream. "Either the fees are too high or kids are refused admission because the parents aren't educated enough," says M H Iqbal, whose daughters Zeb and Uzma go to the Jewish Girls School. "The two Jewish schools, on the other hand, are affordable and encourage children from humble backgrounds. For people like me, it means a decent education for my daughters that will open up a world of opportunity."

That the school is run by Jews, sworn enemies of Muslims in other parts of the world, doesn't bother him or the other Muslim parents whose children study at the Jewish Girls School in Park Street or Elias Mayer Free School & Talmud Torah in Bowbazar. Together, they have around 2,000 students.

Given that the two schools are located in neighbourhoods with large Muslim populations , it is not unremarkable that two in every three students are from the community. Since most of Kolkata's Jews have emigrated to Israel , the UK, the US or Australia, the schools have had no Jewish students in 20 years.

The school, though, still retains some Jewish traditions. It is closed on all major Jewish holidays such as Passover and does not function on Saturdays, the day of Sabbath. Though teachings in Hebrew have stopped, students are taught traditional dances and Hebrew songs. "Many Israelis visit to discover their roots as their grandparents have studied here," says Aline M Cohen, vice-president of Jewish Girls School and committee member of Elias Meyer. "When they see Muslim boys and girls present programmes in Hebrew, they are amazed."

Shakil Ahmed, whose daughter Shaima is in class X, chose Jewish Girls over the Muslim Saifee Hall. "You try to give the best to your children . Why deny them good education on religious grounds?" reasons Ahmed, a devout Muslim who never goes out without his skull cap. The women in his household wear purdah but he has no problem with his daughter wearing shorts to the playground or singing Vande Mataram at assembly. "The school has its rules and parents respect them," he says.

The camaraderie between the communities flourishes beyond the school compound. "In the 26/11 Mumbai attack, six Jews, including a Rabbi , were killed by Islamic extremists. But Kolkata remained an oasis of peace,'' says Cohen. And the schools a beacon of inter-faith cooperation.

Dr.Anburaj said...

பிரா - அறிய வேண்டிய உண்மைகள்
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.

அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

- இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.

முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...



டி-சர்ட் பிரா

இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

புல் போர்ட் பிரா

வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

நாவல்டி பிரா

திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.



ஸ்போர்ட்ஸ் பிரா

விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.

மெட்டர்னிட்டி பிரா

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

நர்சிங் பிரா

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.

Dr.Anburaj said...

மெட்டர்னிட்டி பிரா

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

நர்சிங் பிரா

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.

கன்வர்டபுள் பிரா

பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.

இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.

அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவும் பிராக்கள்...



மினி மைஸர்

இவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.

பேடட் பிரா

அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா

சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

அண்டர் ஒயர் பிரா

இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.

Dr.Anburaj said...

கியூட் வெட்டிங் பிரா

மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.



மெசக்டமி பிரா

கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...
கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பதில்: உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

பதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?

பதில்: நிச்சயம் அணியக் கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.



கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?

பதில்: கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?

பதில்: இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.

கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?

பதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதை விட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.

Dr.Anburaj said...

குழந்தை குறையில்லாது பிறக்க திருமூலர் சொல்லும் தகவல்
“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6 ஆயிரம் முதல் கி.மு.100 வரையில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)

ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான் என்கிறார் திருமூலர். தாம்பத்திய உறவின் போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.

கணவனும், மனைவியும் கூடும் முறையால், எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு திருமூலர் தரும் விளக்கம்

மனைவியுடன் கணவன் உறவு கொள்ளும்போது அவனது சுவாசமானது சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை எதுவும் இருக்காது.

உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும். சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண் குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின் வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக இருக்கும்.



ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக இருக்கும்.

சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல் இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும்.

சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.

இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும் திருமூலர், ‘அந்த‘ உறவின்போது பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார்.

கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம் சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக இருக்கும்.

இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர் தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும் சரியான அளவில் தேங்கி இருக்குமானால் பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.

Dr.Anburaj said...

சரி... எந்த நிலையில் தான் நல்ல, ஆரோக்கியமான குழந்தை பெற முடியும் என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின் பதில்.

தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண் இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது, குழந்தையின் தோற்றத்திலும் தான் விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.



இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது பற்றியும் கூறியுள்ளார்.

உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும் தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி, அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.

ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும் இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும். அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக் கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை வெளியிட வேண்டும். இதில் வேகம் காட்டுவது வீண் கரு கலைதலுக்கு ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.

Dr.Anburaj said...

ADULTS ONLY
முதலிரவு ரகசியங்கள்

நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்து வர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள் சுண்டக் காய்ச்சிய பால் இருக்கிறது. நடக்கும் வேகத்தில் அது சிந்தாமல் இருக்க அதை ஒரே ஒரு டம்ளரால் தலைகீழாக கவிழ்த்து மூடி வைத்திருக்கிறாள்.

அந்த அறையை நெருங்கியதும், முழுமையாக அல்லாமல் ஓரளவே விலக்கப்படுகிறது கதவு. அதற்குள் வெட்கத்தில் மலர்ந்த இளம்பெண் மட்டுமே நுழைய தயாராகிறாள். உடன் வந்த தோழியர் அவளது காதில் ஏதேதோ கிசுகிசுக்க, அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக் கொண்டே அறைக்குள் செல்கிறாள். கதவை தாளிட்டுக் கொள்கிறாள்.

அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட அழகான படுக்கை. அங்கே, இரவில் பால் பாத்திரத்தை தேடும் பூனையின் கால்கள் போன்று மெதுவாக நகருகிறது அவளது சிவப்பு பாதங்கள். தனக்கு உரியவரை நெருங்கியதும், கையில் இருந்த பாலை அருகில் வைக்கிறாள். அடுத்ததாக, தனக்குரியவரது காலில் விழுந்து வணங்குகிறாள். அவரோ, அவளது சிலிர்த்த தோள்களை இரு கரங்களால் பற்றி தூக்குகிறார்.

படுக்கையில் இருவரும் அமர்கின்றனர். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டுமே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இடைவெளி காணாமல் போகிறது. நெருங்கி அமர்கிறார்கள். ஒருவரையருவர் அணைக்கிறார்கள். அங்கே புதிய உயிரின் தேடலை ஆரம்பிக்கிறார்கள்.

- இதுதான் நம் தமிழ் சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படும் முதலிரவு அறை காட்சிகள்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது? நிச்சயமாக சினிமாவைப் போன்று இல்லைதான்!

ஏற்கனவே பார்த்துப் பழகிக் காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டிருந்தால் முதலிரவில் பெரும்பாலும் பதற்றம் இருக்காது. ஆனால், முதன் முதலாக அதில் சந்தித்துக் கொள்பவர்கள் எப்படி படபடத்துப் போவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான ஆலோசனைகள்

முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது.

திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக் கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப் போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப் போடுவதில் தவறே இல்லை. அதே நேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக் கொள்ளலாம். அதில் தவறில்லை.

சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை உண்மை வாழ்க்கையில் புரட்டிப் பார்ப்பது தவறு. நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அது பற்றி துணையே கேட்டாலும் வாய் திறக்கக் கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை.

முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப் புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தைச் செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை, கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு உங்கள் ஆர்வத்தையும் அதிகரிக்கும்.



Dr.Anburaj said...


முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையைப் பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களைப் பார்த்து, துணையையும் அது போன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். "நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்பது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி தூர எறிந்து விடுங்கள். உண்மையைச் சொல்லப் போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையைக் காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.

குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த பத்தாவது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா... குவா.... சத்தம் கேட்கலாம்.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அது பற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப் போய்விடும்.

இப்போதெல்லாம், திருமணம் முடிவாகி விட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், "அய்யோ... நம்மால் முடியாதோ?" என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணி விட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும்.

மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மன நெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே?

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய உடலுறவு முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி ஆலோசனைகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.

Dr.Anburaj said...

சித்தர்கள் இராச்சியம்எப்படி தூங்குவது?


நவீன அறிவியலும் கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூங்குவதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வும், அமைதியும் கிடைக்கிறது.
அகத்தியரும் கூட தனது பாடல் ஒன்றில் உண்ணும் போதும், உறங்கும் போதும், உறவு கொள்ளும் போதும் மூச்சை விரயமாக்கலாகாது என்கிறார். சித்தர்கள் கூறிடும் இத்தகைய உறக்க நிலை மிக உயர்வான நிலையாகும். முயற்சியும் பயிற்சியும் உள்ள எவரும் இத்தகைய நிலையை அடைய முடியும்.

யோகப் பயிற்சியின் போதே தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்பும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. அதுவும் பகலில் தூங்கவே கூடாது என்று வலியுறுத்தப் படுகிறது. சரி, இரவில் எப்படி தூங்குவதாம்?, அதற்கும் ஒரு சூட்சும முறையை தேரையர் தனது “மருத்துவ காவியம்”என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா சிவயோகம் பண்ணும்பேர்க்கு
பரிவாக நித்திரைதான் வேண்டாமப்பா
நேரப்பா ராக்கால நித்திரைதான்பண்ண
நிலையாகச் சூட்சமொன்று நிகழ்த்துறேன்கேள்
வாரப்பா வரிசையாய்க் கால்தான்னீட்டி
வகையாக நித்திரைதான் பண்ணவேண்டாம்
ஓரப்பா ஒருபக்க மாகச்சாய்ந்து
உத்தமனே மேற்கையை மேற்கொள்வாயே.
கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.

பொதுவில் நாம் எல்லோரும் தூங்குவதைப் போல மட்ட மல்லாந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உறங்கக் கூடாதாம். ஒரு பக்கமாக சாய்ந்து கையை தலைக்கு கீழாக வைத்து அதன்மேல் தலையை வைத்து உறங்கவேண்டுமாம். அப்படி உறங்குவதால் வாசி கீழ் நோக்கி செல்லாமல் மேல்நோக்கி ஏறுமாம். இதனால் சிவ யோகம், வாசி யோகம், பிரணாயாமம், மவுன யோகம், கெவுன யோகம் அனைத்தும் இலகுவாக சித்திக்குமாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். இதன் சாத்திய அசாத்தியங்களை விவாதிப்பதை விட தூக்கம் பற்றி இப்படியான தகவல்கள் நம் முன்னோர்களினால் அருளப் பட்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்.

Dr.Anburaj said...

இந்துஸ்தானத்து சித்தர்கள் அமுத மொழிகள்


கோபமறு, குன்றாப் புகழுக்கு...


கோபம் எத்தனை பெரிய அறிவாளியையும் முட்டாளாக்கிவிடுகிறது. எவ்வளவோ சிறப்புள்ளவரையும் சீரழியச் செய்துவிடுகிறது, கோபம் கண்ணை மறைக்கும். கருத்தை மறைக்கும். தன்னையே மறக்கச் செய்துவிடும். கோபத்தால், மதியையும், மானத்தையும், நிம்மதியையும் இழக்க நேரிடும்.

கோபம் ஏற்படுத்தும் விளைவுகளை, பாதிப்புக்களை நாம் அறிய முற்படுவதில்லை. எது கோபத்தை தூண்டியது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதெல்லாம் பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை.

ஆனால், சித்தர்கள் கோபத்திற்கு மூலமான மாயையை அகற்றி விடுகிறார்கள், மாயை இல்லாத இடத்தில் , ஆசை, கோபம் இருப்பதில்லை, தங்கள் மனதை அடக்கியதால் தான் சித்தர்களுக்கு யோகம் சித்தியானது. முத்தி நிலை வாய்த்தது.

இதையே,

"மனமானது அடங்கியே போச்சு இந்த
மாயையை விட்டுக் கரையேறலாச்சு
சினமென்னும் கோபம் அறுந்தாச்சு யோகம்
சித்தியாகவே முத்தியும் ஆச்சு."

என்று பாடுகிறார் கல்லுளிச் சித்தர்.

Dr.Anburaj said...

மலாலா யூசஃப்ஸாய்.-வீர மங்கை
( கல்வி கற்பது எவ்வளவு கடினமான வேலையாக உள்ளதற்கு யார் காரணம்-1400 ஆண்டுகளுக்கு முந்தைய அரேபிய நாகரீக அடிமைத்தனமா ? புரிந்தால் செல்லுங்களேன் )

15 வயது இளம் சமூக ஆர்வலரான இவர் இப்போது இருப்பது லண்டனில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில். தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா. படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இஸ்லாமியச் சிறுமி. முதல் மாணவி. தனது பாக்கெட் மணியை அதிகமாக புத்தகங்கள் வாங்குவதில் செலவழிப்பார்.

இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என தாலிபான்கள் தடைவிதித்தனர். அவர்களின் இந்தத் தடைக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக இணையதளத்தில் ஓர் பிளாக்கைத் தொடங்கி "தாலிபான்களின் பிடியில் எனது பள்ளி வாழ்க்கை' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் பத்திரிகை ஆவணப்படமாக எடுத்தது. பெஷாவரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "எனது கல்வி உரிமையில் தலையிடுவதற்கு தாலிபான்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று பேட்டியளித்தார்.

தாலிபான்களுக்கு எதிராகவும், பெண் உரிமைக்காவும், பெண் கல்விக்காகவும் குரல் கொடுத்து வந்த இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டேயிருந்தன. சளைக்காமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார் மலாலா. பொதுக்கூட்டங்களில் பேசும்போது பாரம்பரிய பழக்கவழக்கங்களை உடைத்தெறிந்துவிட்டு, பெண் குழந்தைகளை படிக்க அனுப்பும்படி கூறுவார். சமூகத்திலும் மாற்றம் நிகழ்ந்தது. பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினர். பல பள்ளிகளுக்கு மலாலாவின் பெயர் மறுபெயராக சூட்டப்பட்டது.

இந்நிலையில் மலாலாவைக் கொல்லத் தீர்மானித்தனர் தாலிபான்கள். ""எங்கள் தலைவர் மலாலாவைக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார். இரண்டு பேரை அனுப்பி மலாலாவை கொலை செய்யச் சொன்னார். ஆனால் எங்களுக்கு கொலை செய்ய மனம் வரவில்லை. கொலை செய்தால், எங்களுக்கு அவப்பெயர் கிடைக்கும். ஆனால் எங்களுக்கு வேறு வழியும் இல்லை'' என்கிறார் தாலிபான் தீவிரவாதிகளின் மூத்த கமாண்டர்.

9 அக்டோபர் 2012. மலாலாவின் பள்ளிப் பேருந்து 14 மாணவிகளும் மூன்று ஆசிரியர்களுடன் சென்று கொண்டிருந்தது. அனைத்து மாணவிகளும் அன்றைய தினம் நடந்து முடிந்த தேர்வினைப் பற்றி தீவிரமாக பேசிக் கொண்டே வந்தனர். பேருந்தின் பின்பகுதி வாசலில் மலாலாவின் அருகில் அமர்ந்திருந்த சிறுமிதான் துப்பாக்கி ஏந்திய அந்த தீவிரவாதியை முதலில் பார்த்தாள்.

வண்டியை நிறுத்தி ""இதில் யார் மலாலா?'' என்றான் அவன். அனைவரும் அமைதியாயினர். ஆனால் எல்லாரின் பார்வையும் மலாலாவின் மீதே இருந்தது. அவ்வளவுதான் துப்பாக்கி குண்டு மலாலாவின் தலையைத் துளைத்தது; முன்னோக்கி சரிந்தார் மலாலா. துப்பாக்கி ஏந்தியவர்கள் தப்பியோடினர்.

மலாலாவின் தலையைத் துளைத்த துப்பாக்கி குண்டு அவரின் இடது கண்ணுக்குப் பின்னால் உள்ள தோலைத் துளைத்தது. அவரின் மண்டை ஓட்டையும், தாடை எலும்பையும் பதம் பார்த்தது. பாகிஸ்தான் டாக்டர்கள் அவரின் உடைந்த மண்டை ஓட்டுப் பாகங்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை அவரின் வயிற்றுப் பகுதியில் உள்ள சதையால் அடைத்தனர். உடைந்த மண்டைஓட்டுப் பகுதியை சரி செய்வதற்காக லண்டன் சென்றார் மலாலா.

மலாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் "ராணி எலிசபெத் மருத்துவமனை' பரிசுப் பொருள்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்தன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து நன்கொடைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்கள் குழு சுமார் 50 ஆயிரம் டாலர் அனுப்பி வைத்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், சமூக ஆர்வலர்கள் மூலமாகவும் பாகிஸ்தான் பெண்கள் கல்விக்கு உதவித்தொகைகளும் குவியத் தொடங்கின. பாகிஸ்தான் அதிபர் மலாலாவின் பெயரில் பெண்கள் கல்விக்கு 10 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து திரும்பினார் மலாலா.

மீண்டும் மலாலா அதே பள்ளியில் தனது படிப்பைத் தொடர்வாரா?என்பது தெரியவில்லை. ""எங்கள் வகுப்பில் 31 மாணவிகள் படிக்கிறோம். எனக்கருகில் உள்ள ஒரே ஒரு டெஸ்க் மட்டும் காலியாக இருக்கிறது. அது மலாலாவின் டெஸ்க். மலாலா வரும்வரை இந்த டெஸ்க் அவளுக்காக காத்துக்கொண்டிருக்கும்'' என்றார் அவர் வகுப்புத் தோழி மோனிபா.

அவர் வந்தாலும் வராவிட்டாலும் அதே பள்ளியில் 400 மலாலாக்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.

Dr.Anburaj said...

நான்மணிக்கடிகை

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்;

வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்;

கிளைஞரில் போழ்தில் சினம் குற்றம் - குற்றம்

தமரல்லார் கையகத்து ஊண்.

(பாடல்-91)

இளம் பருவத்தில் கல்வி கற்காதது குற்றம். செல்வ செழுப்பற்ற நிலையில் பிறருக்கு வாரி வழங்குவது குற்றம். சுற்றத்தார் அருகில் இல்லாதபோது அவர்மேல் கோபம் கொள்வது குற்றம். மெய்யன்பு (உள்ளன்பு) இல்லாதவர் இல்லத்தில் உணவு உண்ணுதல் குற்றம்.
....................................................................................

வன்கண் பெருகின் வலிபெருகும்; பால்மொழியார்

இன்கண் பெருகின் இனம்பெருகும் - சீர்சான்ற

மென்கண் பெருகின் அறம்பெருகும்; வன்கண்

கயம்பெருகின் பாவம் பெரிது.............(பாடல்-90)

வன்செயல்கள் பெருகினால் வன்முறைகள் பெருகும். பால்போன்ற மொழியுடைய பெண்களின் இனிய கண்ணோட்டம் பெருகினால் சுற்றம் பெரும். சிறப்பமைந்த மென்தன்மை பெருகினால் அறச்செயல்கள் பெருகும். வன்கண்மையுடைய கயவர் பெருகினால் பாவம் பெருகும்.
.........................................................................................
மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான்

பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய

நாணின்வரை நிற்பர்நம் பெண்டிர்; நட்டமைந்த

தூணின்கண் நிற்கும் களிறு.

(பாடல்-87)

கெட்டுப்போவோரிடத்தில் சோம்பல் குடிகொள்ளும். நல்லவர்களுக்குக் கொடுமை செய்பவரிடத்தில் துன்பம் குடிகொள்ளும். நல்ல பெண்களிடத்தில் நாணம் குடிகொள்ளும். யானை, தூணின் கட்டுக்குள் அடங்கி நிற்கும்.

Dr.Anburaj said...

திருக்குறள் போன்று அனைத்து மக்களையும் பொதுவாக கருதி வழிகாட்டுக் நூல்தான் உலகிற்கு வழிகாட்டும் நூலாக இருக்க முடியும். அரேபிய இலக்கியங்களில்குறள் போல் நூல் இருந்தால் அது குறித்து எழுத வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கூடா ஒழுக்கம்


வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின். -திருக்குறள்


வானுயர் புகழுடன் வாழ்ந்திடலாம்
ஞானியின் புறத்தோற்றம் அமைந்திடலாம்
மேனியில் பொலிவு தோன்றிடலாம்
மேலான எண்ணங்கள் இருந்திடுமா

மனத்தில் குற்றத்தை மறைத்துவைத்து
வெளியில் வேடமாய் வாழுவதை
உள்ளம் உணர்ந்து உறுத்திடும்
அந்த வாழ்வில் என்ன பயன்?


இன்னா செய்யாமை

கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
-திருக்குறள்
பொறாமை எண்ணம் கொண்டு
ஒருவன் துன்பம் செய்தாலும்
திருப்பித் துன்பம் செய்யாதே
தீயவனாக மாறாதே

யாருக்கும் துன்பம் செய்யாமல்
இருத்தல் ஒன்றே மாசற்றவர்
கொள்கையாகப் போற்றுவார்
கோடானகோடி நன்மையதே
தெரிந்து வினையாடல்


வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
-திருக்குறள்
வரவு வந்திடும் வழிகண்டு
வளத்தைப் பெருக்கும் வழிகண்டு
இன்னல் கண்டு நீக்குகின்ற
இயல்பு உடையவன் செயல்வீரன்

எப்படி வருமானம் அடையலாம்
எப்படி வளத்தைப் பெருக்கலாம்
எப்படித் தடைகள் நீக்கலாம்
என்றறிந்தவன் செயல்வீரன்.
கொல்லாமை


பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
-திருக்குறள்
பகுத்துக் கொடுத்து உண்பது
பல உயிர்களைக் காப்பது
நூல்கள் கூறும் அறங்களில்
முதன்மையான அறமதே

தலை சிறந்த அறத்தினை
எடுத்துச் சொன்னார் ஞானிகள்
பகுத்து உண்டு வாழ்வதே
பயனுள்ள வாழ்வு ஆகுமே!
தவம்

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலால் மேற்கொள் வது.
-திருக்குறள்
தவத்தைக் கடைப்பிடிப்பவர்
தவத்தின் கோலம் கொள்ளலாம்
நல்ல எண்ணம் உள்ளவரே
தவத்தின் வழி வாழலாம்

நல்ல சிந்தனை இல்லாமல்
தவத்தின் வேடம் தாங்குவது
இழிவு செய்யும் செயலன்றோ
பெருமையற்ற செயலன்றோ.


ஒப்புரவு அறிதல்

(அறத்துப்பால் - அதிகாரம் 22 - பாடல் 2)

தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு.

-திருக்குறள்

ஓய்வில்லாமல் பணிசெய்து

உயர்ந்த வழியில் பணிசெய்து

சேர்த்த பொருள் எல்லாமே

சிறந்த வழியில் செலவிடு

தளர்ந்திடாத முயற்சியில்

சேர்த்துக் கொண்ட செல்வத்தை

உடல் தளர்ந்த ஏழைக்கு

உதவி செய்து பயன்படு.




Dr.Anburaj said...

அனைவரும் சகோதரர்கள்!
By மு.அ. அபுல் அமீன(நன்றி தினமணி )
பல நாடுகளையும் படை பலத்தால் வென்ற தார்த்தாரிய அரசன், வழியில் கண்ட சுல்தான் பாயஜுதின் ஆட்சியில் செழிப்புடனிருந்த துருக்கியை முன்னறிவிப்பின்றி தாக்கினான். துருக்கியர்களால் தார்த்தாரியர்களை வெல்ல முடியவில்லை. கைதான துருக்கிய போர்க் கைதிகள் தைமூர் முன் நிறுத்தப்பட்டனர். அந்தக் கைதிகளில் ஓர் இளைஞன் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான். அவனின் அஞ்சாமையையும் போர்க்களத்தில் விஞ்சி நின்ற அவனின் வீரத்தையும் வியந்த தார்த்தாரிய வீரர்கள் வியப்பை வெளியிட முடியாமல் தவித்தனர்.

இடுப்பிலும் கால்களிலும் விலங்கிடப்பட்ட அந்த இளைஞன் வீரத்தோடு நிமிர்ந்து விவேகமாகப் பேசினான்."அரசரே! முரசறிவித்து முன்னேற்பாடு செய்யாது, முறையாக எச்சரிக்கை எதுவும் கொடுக்காது முரட்டுத்தனமாக பாயஜீதைத் தாக்கினீர். அல்லாஹ்வின் படைப்பில் உயர்ந்த மக்களை மடியச் செய்தீர். உலகை வென்றவன் என்று புகழ்ப் பெறும் உமது பேராசையால் ஏற்பட்டதே இந்தப் பேரழிவு''. "இன்னும் சிறிது நேரத்தில் நான் தூக்கிலிடப்படுவேன். நான் செல்லப் போகும் அந்த இடத்திற்கு நீரும் வர
வேண்டும். அங்கே அரசர்களுக்கு எல்லாம் பேரரசரான அல்லாஹ்வின் முன் உமது கொடுங்கொலைகளுக்கு என்ன காரணம் கூறுவீர்''.-பேசிய இளைஞன் தலையிலிருந்த இரும்புத் தொப்பியை எடுத்துக் கீழே போட்டான். நெளிந்த நீண்ட கூந்தல், அந்த இளைஞன் ஆணல்ல, அழகிய பெண் வீராங்கனை என்பதை விளம்பியது. தைமூர் திகைத்தான்.

அந்தப் பெண் பேச்சைத் தொடர்ந்தாள். "அண்ணல் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு போர்களில் கலந்து கூடாரங்களில் தங்கி வீரர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து காயமுற்ற வீரர்களைக் கவனித்து மருத்துவம் புரிந்த உம்முரதிய்யா(ரலி) அவர்களின் வழியில் நானும் போர் புரிந்தேன்''. "நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே. ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையே ஒழுங்கையும்சமாதானத்தையும் நிலை நிறுத்துங்கள். அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்திடுங்கள். அல்லாஹ்வின் அருளை அடைவீர்கள்'' என்ற குர்ஆனின் 49-10வது வசனத்தை நினைவுபடுத்தினாள். அந்த வீராங்கனை ஹமீதா பானு. தவறை உணர்ந்து வருந்திய தைமூர் கைதான வீரர்களை விடுதலை செய்தான். அந்த வீராங்கனையின் சம்மதம் பெற்று ஹமீதாபானுவை மணந்தான். அந்த மண மக்களின் பரம்பரையில் வந்த வாரிசுகளே இந்தியாவை ஆண்ட மொகலாயர்கள்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad