அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, December 27, 2012

முஸ்லிம் சமூகம் மீதான நேட்டோ உலகின் மனோவியல் யுத்த நகர்வுகள்................கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரமா...?????????


(ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூறாம் வருடம் என்னுடைய நண்பன் ஸைபுல் இஸ்லாம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும் அவளைத் திருமணம் செய்யப் போவதாகவும் என்னிடம் சொன்னான்.)

தொன்னூறுகளில் ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைனை அராபியரின் கதாநாயகனாக வடிவமைத்து குவைத் நாட்டை அவரைக் கொண்டு ஆக்கிரமிக்கச் செய்து அதன் மூலம் ஏனைய அராபிய நாடுகளை அச்சுறுத்தும்  நாடகம் நேட்டோ குழுவினரால் வடிவமைக்கப் படுகிறது.

நெறியாளர்களின் இலக்கை கணித்து அளவிடும் அறிவு அந்த அராபிய சிங்கத்துக்கு ??? இருக்கவில்லை.

விளைவு..........



நேட்டோ உளவாளிகளின்-புனித இஸ்லாத்தின் எதிரிகளின்  மனோவியல் யுத்தத்தின் இன்னுமொரு  அத்தியாயம் அழகாக அரங்கேறத் துவங்கியது.

நேட்டோ நாடுகள் எதிர்பார்த்த கனவின் பிரகாரம் நமது நாயகர் குவைத்தை ஆக்கிரமித்தார்.

ஒரே நாளில் அஜமி முஸ்லிம்களின் கதாநாயகனாக மாறி 'பன்ச்' வசனம் பேசினார்.

அதே நாளில் சக அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகி அவர்களின் 'வில்லனாக' புது அவதாரம் எடுத்தார்.

சொப்பனத்தில் சிம்மமா........?

கேட்டவுடனேயே அதிர்ந்துப் போன அரபு ஆட்சியாளர்களின் ஆடம்பரமான சொப்பனம் பயத்தால் கலைந்துப் போனது.

அதன் விளைவாக அந்த நாயகர்களின் உதவிக்கு நேட்டோ நாயகன் அமெரிக்கா  நேட்டோ துணையுடன் ஓடோடி வந்தது.(ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதை அரபுலகில் ஆரம்பமாகியது....)

சில முஸ்லிம்கள் நமது சதாம் அண்ணனுக்கு ஆதரவாகவும் இன்னும் சிலர் அண்ணனின் அறிவு கெட்ட நகர்வை எதிர்த்தும் வாத விவாதங்களில் மூழ்கினர்.

குவைத் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கும், சவூதியின் இறைமையைப் பாதுகாப்பதற்கும்..........இல்லை......இல்லை........அனைத்து அராபியரின் இறைமையைப் பாதுகாப்பதற்கும் அரபு மண்ணில் அமெரிக்காவுடன் நேட்டோ படையினர்  உறுதியுடன் அகலமாக கால் பதித்தனர்.

அந்த நகர்வின் முதல் நாளே அராபியரின் இறைமைக்கு வேட்டு வைக்கும் முதல் வேட்டு தீர்க்கப் பட்டதை அப்போதைய முஸ்லிம் சமூகம் புரிந்துக் கொள்ளத் தவறிப் போனது.
மரணப் பாதை என்றழைக்கப் பட்ட வான் தாக்குதல்- அராபிய ஈராக் படையினரும் அராபிய பொது மக்களும் நேட்டோ வான் தாக்குதலினால் நிர்மூலமாக்கப்  பட்டிருக்கும் விதம்-  

அரபியின் ஆட்சிக்கு சவாலாக இருந்த அடுத்த அராபியை தாக்கி அழிக்கும் கொடூரம் நாட்டு எல்லையைக் காப்பது என்ற பெயரில் வெடித்தது.(ஐரோப்பிய யூனியன் தத் தமது எல்லைகளை சுருக்கி ஒற்றுமையுடன் கூடிய நபிகளார் அறிமுகப் படுத்திய  எல்லைகளற்ற தாருல் இஸ்லாமிய வழி முறைக்கு  நகரத் துவங்கியதை நமது அறிஞர்கள் இந்  நிமிடம் வரை அவதானிக்காதது ஆச்சரியம்.)

தாருல் இஸ்லாமிய சுன்னா கோட்பாட்டுக்கு நேட்டோ நகர அண்ணல் நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மறைவுடன் அன்னாரது அருமைத் தோழர்களால் துவக்கி வைக்கப் பட்ட அராபிய இனம் அராபிய இனத்துடன்........முஸ்லிம்கள் முஸ்லிம்களுடன்  மோதும் ஜாஹிலியா அவலம் கொஞ்சம் பெயர் மாறி முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் நாடுகளுடன் மோதும் நிலையுடன் அப்படியே தொடர்ந்துக் கொண்டிருந்தது.

நேட்டோ நாடுகள் ஒன்றாக இணைந்து எண்ணெய் வளம் கொழிக்கும் குவைத் நாட்டைப் பாதுகாப்பது என்ற பெயரில் அந் நாட்டை நாட்டின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் ஆக்கிரமித்து அண்டை நாடான ஈராக்கை- அந்த நாட்டின் எண்ணெய் வயல்களைக் குறி வைத்த நிலையில் குவைத்-ஈராக் யுத்தம் ஆரம்பமானது.

பெயர்தான்  குவைத் - ஈராக் யுத்தம்.

அது நேட்டோ நாடுகளின் அராபிய ஆக்கிரமிப்பு அராஜகம் என்ற நிஜத்தை அராபிய முஸ்லிம் அறிஞர்களும் பொது மக்களும், அஜமி இஸ்லாமிய அறிஞர்களில் சிலரும்  புரிந்து கொள்ள வில்லை.

முஸ்லிம்களின் கதாநாயகனாக ஓரிரு நாள்கள் இருந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் சக அராபிய ஆட்சியாளர்களின் வில்லனாக மாறியதன் விளைவாக ஈராக் அராபிய முஸ்லிம் சமூகம் பொருளாதாரத் தடை என்ற பெயரில் நசுக்கப் படத் துவங்கியது.

சின்னஞ் சிறு மழலைகள் குடிக்கப் பால் மா இன்றி தவித்து கதறி அழுதழுது இறந்துப் போய்க் கொண்டிருந்தனர்.

அராபிய சிறுவர் சிறுமியருக்கு எதிரான ஐ.நா.வின் நிழல் யுத்தம்..........

முதியவர்கள் தலை வலியைப் போக்கும் தமக்குத் தேவையான மிகச் சாதாரண 'பென டோல் ' கூடப் பெற்றுக் கொள்ள வழியின்றித் தவித்துக்  கொண்டிருந்தனர்.

பெனடோல் கூட இல்லை என்றால் ஏனைய நோய்களினால் வருந்திக் கொண்டிருந்தவர்களின் பரிதாபகரமான நிலைமையை எங்களால் யூகித்துக் கொள்ள முடியும் தானே?

தன்னந் தனியாக ஈராக் அதிபர் துணையின்றி தனித்துப் போனார்.

அவருக்கு தனது தாய் நாட்டைக் கட்டிக் காப்பதா? அல்லது தன் நாட்டிலேயே தன்னிருப்பை ஸ்திரப் படுத்துவதா? என்கின்ற தடுமாற்றத்திலேயே காலங்கள் அகோரமாக நகர்ந்தன.

(ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் வருடம் மார்ச் மாதம் என்னுடைய நண்பன் ஸைபுல் இஸ்லாம் தான் காதலித்தப் பெண்ணையே மணந்துக் கொண்டான்

தொண்ணூற்றி ஏழாம் வருடம் நண்பனுக்கு ஒரு பெண் குழந்தைக் கிடைத்தது.

நண்பர் இப்பொழுது  தனியாக வியாபரம் ஒன்றை ஆரம்பித்தார்.

தொண்ணூற்று எட்டில்  நமது நண்பர் ஒரு வாகனத்துக்கும் சொந்தக் காரராகினார்.

இரண்டாயிராம் ஆண்டில் நண்பரும் அவரது மனைவியும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்குப் பயணமாகினர்.

அவர்களது அன்பு மகள் பாலர் பாடசாலை போகத் துவங்கினாள்.

இரண்டாயிரத்து ஒன்றில் நமது நண்பர் இன்னுமொரு அழகான பெண் குழந்தை ஒன்றிற்கு தகப்பானாகிறார்.

இரண்டுக் குழந்தைகளுடன் அவரது வாழ்க்கை அமைதியாக ஓடிக் கொண்டிருகின்ற நாள்களில் ஒரு நாள்............ )

நமது நண்பர் ஸைப் சந்தித்த சம்பவங்கள் நம் அனைவரின் தனிப்பட்ட வாழ்வில் நடந்துக் கொண்டிருந்த நிலையில் நாள்கள் வேக வேகமாக ஓடின.

இப்பொழுது, குவைத் ஆக்கிரமிக்கப் பட்டு அராபிய சிங்கம் சதாம் ஹுசைனின் படையினர் ஓடோட விரட்டப் பட்டு ஒரு தசாப்தம் - பத்து வருடம் ஒரு சத்தமும் இல்லாமல் பூர்த்தியாகி விட்டது.

இந்த பத்து வருட காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் அமெரிக்க நேட்டோ நாடுகள் தமது இராணுவத் தளங்களை அந்த நாடுகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் அமைத்து விட்டிருந்தன.

அவர்களது அந்தச் செய்கைக்கு பற்கள் பிடுங்கிய நிலையில் செத்த பாம்பாக இருந்த சதாம் அண்ணனை வாய்ப் பிளந்த முதலைப் பற்களுடன் பயங்கரமாக விரட்டி வரும் 'அனகோண்டாவாக'-அனகோண்டாவின் தமிழ் வடிவம் என்ன?-காட்டி அரபிகளைப் பயமுறுத்தினர்.

அதனைப் புரிந்துக் கொள்ள அராபியரின் சோம்பல் மூளை இடம் கொடுக்கவில்லை.

அந்த இராணுவத் தளங்களின் செலவினங்களுக்காக நேட்டோ நாடுகள் கோடிக் கணக்கில் அமெரிக்க, கனடிய டாலர்களையும்,ஐரோப்பிய யூரோக்களையும்  தண்ணீராக கடன் அடிப்படையில்  வாரியிறைத்தன.

அவர்கள் வாரியிறைத்த..........இறைத்துக் கொண்டிருக்கின்ற டாலர் நோட்டுகளை அவர்களின் நாடுகளிலேயே அச்சடித்துக் கொண்டிருப்பதையும்,வெறும் தாள்களுக்கு இல்லாத பெறுமதிகளை நாம் இருப்பதாக கற்பனை செய்து ஏமாந்துக் கொண்டிருப்பதையும்   நமது அராபிய........இஸ்லாமிய அறிஞர்களும் பொருளாதார விற்பன்னர்களும் இன்னமும் புரிந்துக் கொள்ளவில்லை.

நேட்டோ நாடுகள் ஏனைய நாடுகளுக்கு கடனாக பெரு மனத்துடன் வாரிக் கொட்டுகின்ற பண நோட்டுகளுக்கு வெறும் மையும் தாளும் மட்டுமே செலவாக  செல்கின்ற சத்திய நிஜம் பரம இரகசியமாக மிக நுணுக்கமாகப் பேணப் பட்டு வருகின்றதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அந்தக் கடனுக்குப் பிரதியீடாக எண்ணெய் வயல்களை ஒப்பந்த அடிப்படையில் ஆக்கிரமித்து விழுங்கி ........விழுங்கி ....நீங்கள் இந்த செய்தியை வாசிக்கின்ற இக் கணமும் விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

ஏழை நாடுகள் கடனாகப் பெறுகின்ற.....பெற்றுக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்ற அமெரிக்க ,கனடிய டாலர்களும்,ஐரோப்பிய யூரோக்களும் அந்தந்த நாடுகளில் அச்சடிக்கப் பட்ட வெறும் தாள்கள் என்ற உண்மையை .......நிஜத்தில் இல்லாத மதிப்பை இருக்கின்றதாக நமது உள்ளத்தில் உருவகிக்கப் பட்ட நம்பிக்கையில் அந்த தாள்களுக்கு நாம் அடிமையாகிப் போன உண்மையை தமிழர்களான நாமும் இன்னமும் புரிந்துக் கொள்ளத் தவறிப் போனோம்.

இனி,

ஈராக் அதிபர் ,நமது அண்ணன் சதாமுக்குப் பயந்த????!! அமெரிக்க உளவு நிறுவனங்கள் தமது நாட்டிலும் ஏனைய அமெரிக்க ஆதரவு நாடுகளிலும் மிக உறுதியான பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி இருந்தனர்.

அணுவொன்று அசைந்தாலும் கணத்தில் அறிந்துக் கொள்ளும் அனாயாசமான பாதுகாப்பு வியூகத்தை அமெரிக்காவின் பாதுகாப்புப் பிரிவு அமுல் நடாத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அசாதாரணமான புதியதொரு பாலர் வகுப்பு அம்புலி மாமா  கதையொன்று உலக மக்களுக்கு மீன்டும் சொல்லப் படுகிறது.
(அம்புலி மாமா கதை என்றவுடன் நண்பர் - டாக்டர் ருஸ்தியின் வசீகரமான சிரிப்புச் சத்தம் நமக்குக்கேட்கிறது........ஹலோ ருஸ்தி......நலமா?)

அதென்ன பாலர் வகுப்பு அம்புலி மாமா கதை?

திறமையான அராபிய இளைஞர்கள் சிலர் அபாரமாக திட்டமிட்டு துணிகரமாக  இரண்டு விமானங்களைக்  கடத்தினார்களாம்.(சில ஆடுகள் வங்காள தேச புலிகளின் கூட்டத்தினுள் நுழைந்து தலைமைப் புலியை வேட்டையாட திட்டம் தீட்டினவாம்.........ஆஹா........)

அமெரிக்காவின் உறுதியான மிகப் பிரமாண்டமான இரட்டைக் கோபுரம் அவர்களால் கடத்தப் பட்ட விமானங்களைக் கொண்டு மோதி தரை மட்டமாக்கப் பட்டதாம்.(அந்த ஆடுகள் புலிக் குகையினுள் நுழைந்து பெரிய புலிகள் சிலதைக் கடித்துக் குதறினவாம் .ஆஹா.......வந்துட்டான்யா.......வந்துட்டான்!!)

இந்த அநியாயமான செயலினால் அமெரிக்காவின்.......அமெரிக்கர்களின் பாது காப்பு கேள்விக் குறியாகி விட்டதாம்.

முஸ்லிம் இளைஞர்கள் ஒற்றுமையுடன் இணைந்து இயக்கிக் கொண்டிருக்கும் இயக்கங்களின் திட்டங்கள் CIA வகுக்கும் திட்டங்களை விடவும் அபாரமானதாம்.

இதிலிருந்து உலக மகா ஜனங்களுக்கு புரிந்துப் போன உண்மை என்னவென்றால்.........முஸ்லிம்கள் ஜிகாதிய பயங்கரவாதிகள்.........எதனையும் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள்..........அமெரிக்கர்களினதும் அவர்களின் நேசர்களினதும் எதிரிகள்........முழு உலகத்தையும் இஸ்லாம் மயப் படுத்தப் பாடு படுகின்றவர்கள்..........அவர்களின் ஆளுமையில் உலகம் வந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை சிரச் சேதம் செய்து விடக் கூடிய அடிப்படைவாதிகள்......

முஸ்லிம்களா???   உலகே கவனம்....!

இத்தகைய செயல்களினாலும்,செய்திகளினாலும்  அமெரிக்க அதிபர் தூக்கம் இழந்து துடி துடித்துப் போனாராம்.

துடி துடித்த அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் என்ன விலைக் கொடுத்தாவது எண்ணெய் வயல்களை அபகரிப்பாராம்............ஸாரி .....ஸாரி ........என்ன விலைக் கொடுத்தாவது அமெரிக்கர்களைப் பாதுகாப்பாராம்.

அமெரிக்க அதிபர் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் அதே நேரம் நமது புத்தி ஜீவிகள் இன்னுமொரு அதிசய (கராமத்து)ப்  புளுகை முஸ்லிம் மக்களிடையே அவிழ்த்து விட்டனர்.

இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு ....செய்திகளுக்கு களம் அமைத்துக் கொடுத்த கள நிலைப் பயங்கரவாதி உஸாமா பின் லேடன் என்றழைக்கப் படுகின்ற அமெரிக்க CIA -வினால் இயக்கப் பட்ட ஸ்லீப்பர் செல்.

அச்சமூட்டும் செய்திகளினால் முஸ்லிம்கள் அல்லாத மக்களின் இதயங்களில் முஸ்லிம்களைப் பற்றிய அச்சத்தை எழுப்பிமுஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் திசை திருப்பும் சாமர்த்தியம் இப்பொழுது இலக்கிடப் பட்டது.

அதே சமயம் அப்பாவி முஸ்லிம்களின் மனத்தில் இல்லாத இளைஞர்களின் கராமத்து திறமைகளில் கண்மூடித்தனமான நம்பிக்கைகளை உருவகித்து அவர்களை முஸ்லிம்களின் விடுதலை வீரர்களாக இனம் காட்டி அமெரிக்காவுக்கு எதிராக முஸ்லிம்களை கிளர்ந்தெழ செய்யும் நாடகமும் அமெரிக்க ஆதரவு முஸ்லிம்களால் மேடையேற்றப் பட்டது.

அபாபீல் பறவைகளைக் கொண்டு ஆப்ரகா மன்னனின் படைகளை அழித்த ஏகன் அல்லாஹ் சின்னஞ் சிறு விமானங்களைக் கொண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை தரை மட்டமாக்கி  அவனது ஆற்றலை வெளிக் காட்டி அமெரிக்கர்களை எச்சரித்திருக்கின்றானாம்.                      

அமெரிக்காவுக்கு இனி கெட்ட காலம்தான்.

உஸாமா  பின் லேடன் தலைமையில் அணி வகுத்திருக்கும் நமது இளம் முஜாஹிதுகள் என்றால் சும்மாவா?

அத்தகைய கனவுக் கதைகளுக்கு அடித்தளமிடப்பட்ட நாள்.............

செப்டம்பர் மாதம் பதினொன்றாம் திகதி இரண்டாயிரத்து ஒன்றாம் வருடம்.................


மூளை சலவை செய்யப் பட்ட ஸ்லீப்பர் செல்ஸ்களினால் கடத்தப் பட்ட இரு சின்னஞ் சிறு விமானங்களால் தாக்கி சிதறடிக்கப் பட்ட இரட்டைக் கோபுரம்.........இக் காட்சியை படம் பிடித்த ஊடகவியலாளர் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களின்றி சொல்கின்ற கூற்றைக் கவனியுங்கள்.....அவர் "இன்று அமெரிக்க மண்ணில் அதன் சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கப் பட்டு பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்குதல் ஒன்று நடந்து விட்டது.இதனை செய்தவர் உஸாமா பின் லேடன் என்று இஸ்ரவேலிய உளவுத் துறை சொல்கிறது...." என்கிறார். 

மக்கள் தத்தமது அலுவல்களில் மும்முரமாகி இருக்கின்ற நிலையில் என்றும் போலவே உதித்த அந்த அமைதியான நாள் முஸ்லிம் சமூகத்தின் அமைதிக்கு அபாய சங்கொலி எழுப்பியவாறு வெடிப்புடன் விடிந்தது.

கடத்தப் பட்ட இரண்டு விமானங்கள் மோதியதில் மிக உறுதியுடன் நிர்மாணிக்கப் பட்டிருந்த அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் சர ...சர ...சரவென நிலத்தில் கொட்டி துண்டுத் துண்டுகளாக சிதறிப் போயின.





அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் அமைந்திருந்த நிலப் பகுதி சுமார் பதினாறு ஏக்கராகும்.

பதினாறு ஏக்கருக்குப் பகரமாக மத்திய கிழக்கு நாடுகளை மொத்தமாக கபளீகரித்து விழுங்கி ஏப்பமிடத் திட்டமிடும் நேட்டோவினரின் மனோவியல் யுத்த தந்திரத்தை அறியாமல் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற கருத்தியலைப் போதிக்கும் மனோவியல் யுத்தம் முஸ்லிம்கள் மீது அனாயாசமாக ஊடகங்களைக் கொண்டு முடுக்கி விடப் பட்டது.


.....9/11 தாக்குதல் சம்பந்தமாக பொய் சொல்லி சிக்கிக் கொண்ட அமெரிக்க அதிபர்........

அதன் முதல் பகுதியாக  "WAR ON TERROR"-பயங்கரவாதத்துக்கு எதிரான  யுத்தம் என்ற பெயரிலான அமெரிக்காவின் முஸ்லிம்கள் மீதான யுத்தம் ஆரம்பிக்கப் பட்டது.

உசாமா பின் லேடன் என்ற தனி நபரை உயிருடன் பிடிப்பதற்காக அமெரிக்க தலைமையில் நேட்டோ அணி அணி திரண்டது.

யார் இந்த உஸாமா பின் லேடன்.?(மாத்தளை சாஹிராக் கல்லூரியில் எழுபதுகளில் ஒரு காவலாளி வேலை செய்து வந்தார்.
அவரின் பெயர் சுந்தரம்.)

அமெரிக்க வெள்ளை மாளிகையினுள் என்றுமே உபயோகிக்கப் படாத கைத் துப்பாகியுடன் உள்ளே சென்று அமெரிக்க அதிபரை நேரில் சந்திக்கும் உரிமைக் கொண்ட அமெரிக்காவின் செல்லப் பிள்ளை உஸாமா பின் லேடன் என்ற விடயம் நம்மில் அநேகருக்குத் தெரியாது.

அமெரிக்காவின் செல்லப் பிள்ளை உஸாமா மெலிந்தவர்.முகம் நிறைய நரை கலந்த தாடி இருக்கும்.நிலத்துக்குக் கூட நோகாதவண்ணம் மெது மெதுவாக அடியெடுத்து நடப்பார்.

அவர் ஒருவகை நுரையீரல் நோயினால் துன்பப் பட்டுக் கொண்டிருந்தார்.

அதன் காரணமாக எப்பொழுதும் அவரது முகத்தில்  சோகமான வேதனையான புன்னகை இருக்கும்.

நமது இஸ்லாமிய அறிஞர்களோ முஸ்லிம் சமூகம் மீதான அவரின் கவலைத்தான் அந்த சோகத்துக்குக் காரணம் என்று 'உல்டா' விடுவார்கள்.நாமும் அப்பாவித்தனமாக நம்பி விடுவோம்.

(கருப்பு நிறமான நமது சுந்தரம் திடகாத்திரமான பெரிய உடம்புக்கு சொந்தக்காரர்.அவர் முகத்தில் முறுக்கப் பட்ட பெரிய மீசை இருக்கும்.கோடரிக் கொண்டு மரங்களை அனாயசமாக வெட்டி சாய்ப்பார்.எப்பொழுதும் ஏதாவது செய்துக் கொண்டு சுறு  சுறுப்பாக உற்சாகமாகவே இருப்பார்.

சுந்தரத்தின் இறுகிய முகத்தில் புன்னகை இருக்காது. பாடசாலையினுள் நுழையும் மாடுகளை ஓட ஓட விரட்டியடிப்பார்.மாடுகள் அவரைக் கண்டால் வெருண்டு ஓடும்.மாடுகள் மட்டுமா?...........பாடசாலைக் குழந்தைகளுக்கும் சுந்தரம் என்றால் கொஞ்சம் நடுக்கம்தான்.)


அமெரிக்காவின் முதலாளித்துவ கனவை உலகில் நனவாக்க அமெரிக்காவின் நிழல் உதவியில் தங்கி சோவியத் யூனியனுடனான பனிப் போரில்  சகலதையும் இழந்து நொந்துப் போயிருந்த ஆப்கானிஸ்தானுடன்  அமெரிக்கா "WAR ON TERROR" இல் யாருமே எதிர்பார்க்காத நிலையில் மோதியது.

அமெரிக்காவுக்காக ரஷ்யாவுடன் மோத அமெரிக்காவை முழுதுமாக நம்பியிருந்த அப்பாவி முஜாஹிதுகள் அமெரிக்காவின் இந்த 'யூ டர்ன்'
திருப்பத்தை கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அடிப்படை வசதிகள் ஏதுமின்றி நலிந்துப் போயிருந்த ஆப்கான் பிரமாண்டமான நேட்டோ நாடுகளின் படையினரின் முன்னால் கணத்தில் மண்டியிட்டது.

ரஷ்யாவுடன் ஆப்கான் முஜாகிதுகள் போரிடும் பொழுது அவர்களுக்கு ஆதரவாக உற்சாகமாக குரல் எழுப்பிய நமது உலமாக்கள் (உதாரணமாக - கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி,அவரின் அச்சொட்டான அடிச்சுவட்டைப் பின் பற்றி அல்லது சுன்னாவைப் பின் பற்றி இலங்கையில் நம்மை இப்பொழுதும் வழி நடாத்திக் கொண்டிருக்கும் உஸ்தாத் மன்சூர் சேர் ,உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சேர் ,அஷ் செய்க் அகார் சேர் ஆகியோர் - அஷ் செய்க் சேர்மார் தயை கூர்ந்து  நம்மை மன்னிக்க வேண்டும் . ) சட்டென்று மௌனமாகி அமெரிக்காவின் செய்கையை அடக்கி வாசிக்கத் துவங்கினர்.

இந்நிலையில் நாள்கள் மீன்டும் வேக வேகமாக நகர நேட்டோ நாடுகளின் அடுத்த கட்ட நகர்வு இலக்கிடப் படுகிறது.

திடீரென ஊடகங்களில் அடிக்கடி சில செய்திகள்.

திடீர் ஹீரோவாகி அதே வேகத்தில் சீரோவாகிப் போன நமது அண்ணன் சதாமிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருக்கின்றதாம்.

அது உலகத்தின் அமைதிக்கு ஆபத்தாம்.

ஈராக் நாட்டில் அவ்வாறான ஆயுதங்கள் இருந்தால் அதனை பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக .....அமெரிக்காவுக்கு பாதகமாக உபயோகிக்க முடியுமாம்.

ஆதலால்,உலகத்தின் சமாதானத்துக்காக அண்ணன் .....மன்னிக்கவும் ,அராபியரின் சிங்கம் சதாம் அவர்களை பதவி இறக்கி ஈராக்கில் இருக்கின்ற ஈராக்கியர்களை சதாம் சர்வாதிகாரி சதாம் அண்ணனின் பிடியில் இருந்துக் காப்பாற்றி அந் நாட்டில் மக்களாட்சியை நிலை நிறுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு அமெரிக்காவுக்கும்,அவர்களின் நேச நாடுகளுக்கும் இருக்கின்றனாவாம் .

அந்த மனிதாபிமான எண்ணத்தின் காரணமாக ஈராக் மக்களை அழித்தொழிக்க ........மீண்டும் ஸாரி ......ஸாரி.... ஈராக்  அதிபர் சதாமை பதவி நீக்கம் செய்வதற்காக ஈராக்குடன் நேட்டோ நாடுகள் யுத்தம் செய்ய நிர்ப் பந்திக்கப் பட்டிருக்கின்றனராம் .

ஹ்ம் ...என்ன செய்ய?

அமெரிக்க அதிபர் மிகவும் உற்சாகத்துடன் "WAR WITH IRAQ" கைப் பிரகடனம் செய்கிறார்.

தனக்கும் அமெரிக்க அதிபருக்கும் இடையே இருந்த இரகசிய உறவுகளை பகிரங்கப் படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்த ஈராக் அதிபர் இலாவமாக முயற்சிப்பதையும் - வெள்ளை மாளிகை அந்த அபாயகரமான சூழலை சமாளித்த விதமும்.........

இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் தேவை இல்லாத குவைத்யுத்தத்தினாலும்,பொருளாதாரத் தடையினாலும் நொந்து நலிந்துப் போயிருந்த ஈராக் நகரங்களில் நேட்டோ படையினரின் அகோரமான தாக்குதல் ஆரம்பிக்கப் படுகிறது.

ஈராக் அதிபர் சதாம் ஹுசைனனை உயிருடன் விடுவது தன்னிருப்புக்கு அச்சுறுத்தல் என்பதை அறிந்தவுடன் அமெரிக்க அதிபரின் அடுத்த கட்ட அவசர....அவசர நகர்வு.......... 

(அமெரிக்கா நேச நாடுகளின் துணையுடன் ஈராக்குடன் கடுமையாக யுத்தம் செய்கின்ற காலப் பகுதியில் ஒரு நாள் நமது நண்பர் ஸைபுல் இஸ்லாமின் வீட்டுக்குப் போயிருந்தேன். 

வீட்டில் அவரது நான்கு வயதுக் குழந்தை சித்திரம் வரைந்துக் கொண்டிருந்தாள் . 

எட்டிப் பார்த்தேன்.

பொம்மைகளை வரைந்துக் கொண்டிருப்பாள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.

குண்டுகளைப் பொழியும் ஒரு விமானம்.

"இதென்ன விமானம்..?" என்றேன்.

"நான் பெரியவளாகினால் இவ்வாறான ஒரு விமானத்தை செய்து முஸ்லிம்களை அழித்தொழிக்கும் அமெரிக்காவைத் தாக்குவேன்" என்றாள் 

அதிர்ந்துப் போனேன். 

நண்பர் ஸைப் பெருமையுடன் முறுவலித்தார்)









நூற்றுக் கணக்கான யுத்த விமானங்கள் வினாடி நேரம் கூட அமைதி அடையாமல் ஈராக்கிய வானில் பறந்த வண்ணம் குண்டுமாரிப் பொழியத் துவங்கின.

யுத்தம் முடிந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் "CNN" தொலைக் காட்சியில் ஒரு விவரணச் சித்திரம் நேட்டோ படையினரின் திறமையை வெளிப் படுத்தும் விதமாக ஒளி - ஒலி பரப்பப் பட்டது.

அதில்,ஒரு நிமிடத்துக்கு  நாற்பத்து எட்டு விமானங்கள் என்ற விகிதத்தில் தொடராக மூன்று நாள்கள் ஈராக்கிய முக்கிய நகரங்கள் விமானத் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டதாக காண்பிக்கப் பட்டது.

அதாவது நிமிடத்துக்கு நாற்பத்து எட்டு தடவைகள் ஒரு மணி நேரத்துக்குள் இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பது தடவைகள் ஒரு நாளைக்கு 69,120 தடவைகள் மொத்தமாக மூன்று நாள்களுக்குள் சுமார் 207,360 தடவைகள் ஈராக்கிய நகரங்கள் குண்டு மழைகளினால் சின்னாப் பின்னப் பட்டிருக்கின்றன.

நான்காவது நாள் பக்தாத் முழங்காலிட்டு மடிந்து பணிந்துப் போனது.


பெரு மழை பொழிவது போல அந்த மண்ணில் குண்டு மழை பொழிவதை CNN இல் கண்டதும் அந்த பயங்கரத்தில் சிக்கியிருந்த அப்பாவி மக்களின் அவலமான நிலையை எண்ணிய நிமிடத்தில் நெஞ்சில் ஒரு மூலையில் மெலிதாக வலித்தது.

சீரோ சதாமின் சரித்திரம் முடிந்துப் போனது.

சின்னாபின்னப் பட்டு சிதைந்துப் போன ஈராக்கை புணருத்தாபனம் செய்ய அமெரிக்கா முன்வந்தது.

அமெரிக்கா செய்யும் புணருத்தாபன செயல்களின் செலவினங்களுக்கு ஈராக் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற நிபந்தனை நிர்ப்பந்தமாக நலிந்துப் போன ஈராக் அரசின் மீது திணிக்கப் பட்டது.

ஈராக் நாட்டின் அனைத்து கட்டிட நிர்மாண ஒப்பந்தம் ஏகமனதாக பெல்டெக் நிறுவனத்திடம் ஒப்புவிக்கப் பட்டது.

அப்போதைய நிலைமையில் பெல்டெக் நிறுவனம் சரியான நிதியியல் வசதியின்றி ....தன்னை சீரமைத்துக் கொள்ளக் கூடிய ஒப்பந்தங்கள் எதுவுமின்றி மூடுப் பட்டுப் போகும் அபாயகரமான நிலையில் இருந்த விடயம் நம்மில் பலருக்குத் தெரியாது.

அந்த நிறுவனத்துக்கு ஈராக் நாட்டைக் கட்டியெழுப்பும் சக்தி இருக்கவில்லை.

எனினும், அமெரிக்க அரசு எந்த விதமான டெண்டர் அழைப்பும் இன்றி பெல்டெக் நிறுவனத்தின் பொறுப்பில் ஈராக் நாட்டின் அனைத்துக் கட்டிட ஒப்பந்தங்களையும் வழங்கியது.

இதனைக் கேட்டவுடன் நமது நண்பர் முஹம்மத் அலி விழி பிதுங்குவது நமக்குப் புரிகிறது.( ஹலோ      முஹம்மத்........நலமா?)

அமெரிக்காவின் தன்னிச்சையான இந்த செய்கையின் பின்புலம் என்ன என்ற தேடலில் கிடைத்த விடை ஆச்சரியமானது.

பெல்டெக் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்.

சிதறிப் போக இருந்த பெல்டெக் நிறுவனத்தை ஈராக்கை சிதறி வெடித்துப் போக செய்து ஜோர்ஜ் புஷ் காப்பாற்றிய செய்தி அநேகமாக நம்மில் பலருக்குத் தெரியாது.



ஈராக் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.................

நேட்டோ படையினரால் ஈராக் கபளீகரம் செய்யப் பட்ட கதைகள் நாள்தோறும் மக்களை அச்சுறுத்திய வண்ணம் வெளிவந்தமிருந்தன.

அதற்கு இந்த விடியோ பதிவு ஒரு சாட்சி.



எனினும்,அமெரிக்க புத்தி ஜீவிகள் கணிக்கத் தவறிய நிலையில் ஈராக்கில் இன்னுமொரு புதிய சரித்திரம் ஈராக் மக்களின் விடுதலைக்காக மெலிதாக உருவாகத் துவங்கியது.

அஹ்ளுல்பைத் இமாம்களின் நெறிப் படுத்தலில் ஒன்றுப் பட்டிருந்த அஹ்லுல்பைத் ஆதரவாளர்களின் ஆட்சி அந்த மண்ணில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஸ்த்திரமாகியது.

எண்ணெய் வயல்களில் குறியாகவிருந்த அமெரிக்கா 'கும்' நகர் ஆன்மீக தலைவர்களின் இல்ஹாம் வலிமையை கணிக்கத் தவறிப் போனது.

தலைமைத் தொலைத்த சுன்னி முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி தமது இருப்பை நிலை நிறுத்தும் அமெரிக்காவின் திறமை அஹ்லுல்பைத் இமாம்களை பின் பற்றுகின்ற 'கும்' நகர் ஆன்மீக தலைவர்களின் முன்னால் வலுவிழந்துப் போனது.

விளைவு ?

உலக நலன்களில் ஆசை தொலைத்த ஆன்மீகத் தலைவர்களின் தலைமைத்துவ நெறிப்படுத்தலில் அமெரிக்க தீய சக்திகளுக்கு எதிராக ஈராக் மெல்ல......மெல்ல.....இஸ்லாமிய அடிப்படைகளை உள் வாங்கிய நாடாக மாறத் துவங்கியது.

ஈரான்இஸ்லாமிய அறிஞர்களினால் நெறிப் படுத்தப் படுகின்ற ஈராக்கின் இந்த மாற்றத்தை எப்படி தடுத்து நிறுத்துவது..........?

முடியும்......!

எப்படி.........?

ஈரானை நசுக்குவதன் மூலம் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும்.

ஈரானைத் தாக்குவதற்கு முன்னர் இஸ்ரவேலுக்கு தலையிடியாக இருக்கின்ற ஹிபுல்லாஹ்வுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்.

நேட்டோ நிபுணர்களினால் இலக்குகள் இலக்கிடப் படுகின்றன.

பிரதான இலக்கு ஈரான்.

முதலில்  ஹிபுல்லாஹ்.

அதன் பின்னர் சிரியா.

இறுதியாக பிரதான இலக்கான  ஈரான்.

இரண்டாயிரத்து ஆறாம் வருடம் முன்னறிவித்தல் எதுவுமின்றி சடுதியாக தென் லெபனான் இஸ்ரவேலின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த யுத்தம் இரண்டாவது லெபனான் யுத்தம் அல்லது ஜூலை யுத்தம் என்ற பெயரில் அழைக்கப் பட்டது.

மறைமுக சக்திகளின் நெறிப்படுத்தலில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகளும் இஸ்ரவேலும் அவர்களின் நட்பு அரபு நாடுகளும் ஒருபுறம் ஒன்றாக இணைந்திருந்தன.

கும் நகர கறுப்புத் தலைப்பாகை இஸ்லாமிய அறிஞர்களின் நெறிப் படுத்தலில் ஹிஸ்புல்லாஹ்வும் அவர்களின் ஆதரவாளர்களும் அல்லாஹ்வின் உதவியில் முழு நம்பிக்கை வைத்து இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்கொள்ள மறு புறம் ஒன்று பட்டிருந்தனர்.

திட்டமிடப் பட்ட திட்டத்தின் பிரகாரம் திடீரென யுத்தம் வெடித்தது.

மூன்று நாட்களில் முடித்து விட திட்டம் தீட்டப் பட்ட யுத்தம் முப்பத்து நான்கு நாட்கள் கடந்தும் முடிவுக்கு வரவில்லை.

கிணறு வெட்ட பூதம் வெளிவந்தக் கதையாக லெபனான் யுத்தத்தின் கதாநாயகனாக ஹிஸ்புல்லாக்களின்  தலைவர் ஹசன் நஸ்ருல்லாஹ் இஸ்ரேவேல் இராணுவத்தைப் படு தோல்வியடையச் செய்து உண்மை முஸ்லிம்களுக்கு நிம்மதிப் பெரு மூச்சு விட செய்தார்.

அனைத்து முஸ்லிம்களின் மனத்திலும் ஹசன் நஸ்ருல்லாஹ் சம்பந்தமான நம்பிக்கைகள் மெது மெதுவாக கொளுவேறத் துவங்கின.



ஈரானின் நெறிப்படுத்தலில் இஸ்ரவேலை எதிர் கொண்ட ஹிஸ்புல்லாஹ்... 


ஈரானின் நெறிப்படுத்தலில் இஸ்ரவேலை எதிர் கொண்ட ஹிஸ்புல்லாஹ்...

ஈரானின் நெறிப்படுத்தலில் இஸ்ரவேலை எதிர் கொண்ட ஹிஸ்புல்லாஹ்...


ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியைக் கொண்டாடும் லெபனான் மக்கள்..........

ஹிஸ்புல்லாக்களின் தீரத்தை.....ஹசன் நஸ்ருல்லாஹ்வின் வீரத்தை  மெச்சும் கதைகள் முஸ்லிம் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியதும் நேட்டோவின் ஊதுகுழல் அல் ஜெஸீரா புதியதொரு இராகம் இசைக்கத் துவங்கியது.

தொடர்ச்சியாக அல் ஜெசீராவில் நமது இரட்டைக் கோபுர வில்லனும் முஸ்லிம்களின் கதாநாயகனாக சித்தரிக்கப் பட்ட கதாநாயகன் உசாமா பின் லேடன் சம்பந்தமான வீர தீரக் கதைகள் ஒலி - ஒளிபரப்பப் பட்டன.

இரண்டாயிரம் ஆண்டுகளில் வில்லனாக சித்தரிக்கப் பட்ட பயங்கரவாதி இரண்டாயிரத்து ஆறாம் வருடம் கதாநாயகனாக ...விடுதலை வீரனாக மீண்டும் மாறி நின்றார்.

நமது ஹீரோ உசாமா டி 56 ரக துப்பாக்கியால் சுடுவதை அல் ஜெசீரா காட்டியது.

சுடும் பொழுது துப்பாக்கி அதிரும்.

ஆனால், அல் ஜெசீரா காட்டிய காட்சியில்  துப்பாக்கியால் சுடும் பொழுது பின் லேடன் அதன் அதிர்ச்சிக்கு பின்னால் தள்ளுப் படுவதை காண முடிந்தது.


T- 56 ரக துப்பாக்கியை சரியாகப் பிடிக்கக் கூடத் தெரியாத -அமெரிக்காவின் ஸ்லிபர் செல் உசாமா----(சேய்க் உஸாமா பின்த் லாதன் (ரஹ் ) என்று விளிக்கும் நண்பர் ரூமி நம்மை மன்னிக்க வேண்டும்; என்றாலும், அமெரிக்காவின் செல்லப் பிள்ளை உஸாமா பின் லாடனுக்கு துப்பாக்கியைப் பிடிக்கும் முறை கூடத் தெரியாது என்பதை இப்பொழுது நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.)

சாதாரண துப்பாக்கியின் அதிர்வுக்கு தாக்குப் பிடிக்கும் சக்தி கூட அவருக்கு இருக்கவில்லை என்ற இரகசியத்தை அந்தக் காட்சி காட்டி நின்றது.

(எழுபதுகளில் ஒரு நாள்....

நானும் நண்பர்கள் சிலரும் மாத்தளை சாஹிராக் கல்லூரியின் அதிபரின் வீட்டுக்கு ஒரு அலுவலாக போயிருந்தோம்.

'அம்மா......' என்றொரு கீச்சிட்ட குரல் வீட்டு வாசலில் கேட்டது.

எங்களை வீட்டினுள் அமர வைத்து உரையாடிக் கொண்டிருந்த அதிபர் என்னிடம்.....'வாசலில் யார் என்று பார்...' என்றார் 

வாசலுக்கு வந்த நான் அதிர்ந்துப் போனேன்.

வாசலில் காவலாளி சுந்தர்.

அவருக்குப் பின்னால் சுமார் ஏழு அல்லது எட்டு ஆடுகள் கயிற்றால் பிணைக்கப் பட்டிருந்தன.

எல்லாக் கயிறுகளையும் அவர் ஒன்றாக இணைத்துப் பிடித்திருந்தார்.

ஆடுகள் திமிறித் ....திமிறி அவரைப் பின்னால் இழுத்து திணறிக்  கொண்டிருந்தன.

ஆடுகள் இழுத்த இழுப்புக்கு அவர் அசைந்தப் பாடில்லை.

சர்வ சாதாரணமாக இருந்த சுந்தர் என்னிடம் மிகவும் பவ்வியமாக 'தம்பி.........ஸார் உள்ளே இருக்கிறாரா...?'என்று அவருக்கும் அவரது ஆகிருதிக்கும் பொருத்தமே இல்லாத கீச்சுக் குரலால் கேட்டார்.

சுந்தரத்தின் குரல் என்றால் கர்ணக் கடூரமாக ஒலிக்கும் சிங்க கர்ஜனையாக இருக்கும் என்ற எனது கணிப்பை அவரது கீச்சிட்ட குரல்  தவிடு பொடியாக்கி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தக் குரலின் நாயகனுக்கா நாம் பயந்துக் கொண்டிருந்தோம்.)

நாயகர் உசாமா பின் லேடனின் உரையாடலொன்றை அல் ஜெசீராவில் காட்டினார்கள்.

(அவரது குரல் காவலாளி சுந்தரத்தின் குரலைப் போல கீச்சிட்டு ஒலித்தது.)

ஈராக்கில் கும் நகர உலமாக்களின் தீர்க்கதரிசன இல்ஹாமிய அறிவுக்கு முன்னால் மண்டியிட்டு தோற்றுப் போய் ஹிஸ்புல்லாஹ்விடம் பாடம் படித்துக்  கொண்ட நேட்டோ நாடுகள் மீன்டும் ஒன்றிணைந்து மத்திய கிழக்கு ஆக்கிரமிப்புக்கு இன்னுமொரு வியூகத்தை கொஞ்சம் வித்தியாசமாக வரைந்தனர்.

அதனால்  உலக வரலாற்றில் ஈராக் கிளைமாக்ஸ் - லெபனான் யுத்தம் ஆகியன இடைவேளையாக மாறி நின்றன.

(நமது நநண்பர் ஸைபுல் இஸ்லாமின் மகள் இரண்டாயிரத்து ஒன்பதில் பூப்பெய்தினார்.

நமது நண்பர் முன்னை விடவும் தீவிரமாக உழைக்கத் துவங்கி இரண்டு நிறுவனங்களுக்கு அதிபராகி நின்றார்.

அவரின் தலை நரைக்கத் துவங்கியிருந்தது.

தலையில் வழுக்கையும் விழத் துவங்கி விட்டிருந்தது.)

பதினேழாம் திகதி டிசம்பர் மாதம் இரண்டாயிரத்து பத்தாம் வருடம்..........

பிரதான இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது.

மீன்டும் ஈரான்!

துணை இலக்குகள் இலக்கிடப்ப்டுகின்றன.

பலமான முஸ்லிம் இராணுவங்கள் அனைத்தும் பலவீனப் படுத்தப் பட வேண்டும்.

துணை இலக்குக்கு இலக்கின் பெயரும் இடப் பட்டுவிட்டது.

பசுமைப் புரட்சி........அராபிய புது வசந்தம்.......அராபிய பசுமைப் புரட்சி.

பொருத்தமான பெயர்....... அரபுலகின் அராபிய பசுமைப் புரட்சி.

இனி,

நாடகம் அரங்கேற்றப் படத் துவங்குகிறது.

அதன்படி,யாருமே அலட்டிக் கொள்ளாத ஒரு நாடு தேர்ந்தெடுக்கப் படுகிறது.

நாடு டுனிசியா!



யாருடைய கவனத்தையும் ஈர்க்காத ஒரு நடை பாதை வியாபார இளைஞன் திட்டத்துக்கு தயாராக்கப் படுகிறான்.

அப்பாவி இளைஞன் தாரீக் அல் தையீப் முஹம்மத் புவாஸிசி.

டுனிசியா நகர சபை நடை பாதை வியாபாரிகளுக்கு புதிய வரி விதிப்பொன்றை அமுல் நடாத்தத் துவங்கியது.

அந்த வரி விதிப்புக்கு எதிராக இருபத்து ஐந்து வயதான இளைஞன் தாரீக் அல் தையீப் முஹம்மத் புவாஸிசி நகர சபையில் முறைப்பாடொன்றை செய்திருக்கிறார்.

அவரின் முறைப்பாடு பெண் ஊழியர் ஒருவரால் நிராகரிக்கப் படுகிறது.

அதனால் கோபம் கொண்ட இளைஞன் தனக்குத் தானே எரியூட்டிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்கிறான்.

தனக்குத் தானே எரியூட்டிக் கொள்ளும் கலாச்சாரம் தமிழ் நாட்டுக்குரியது.

அதில் அநேகமாக இலக்கிடப் படுகின்ற அரசியல் எதிரிகள் எரியூட்டிக் கொல்லப் படுவார்கள்.

பின்னர்,அவர்கள் தமக்குத் தாமே தீயிட்டுக் கொண்டதாக கதையளக்கப் படும்.

இப்பொழுது அத்தகைய நாகரீகங்கள் குறைந்து விட்டன.

ஆச்சரியமாக தமிழ் நாட்டு அரசியல் கலாச்சார நகர்வொன்று அராபிய துனிசியாவில் நடைபெறுகிறது.

இதனை இயக்கியவர்கள் யார் என்ற விடயம் இதுவரைத் தெரிய வில்லை.

தவிர, தமக்குத் தாமே தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கதை அராபிய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கருதுகிறோம்..

ஒரு முஸ்லிம் ஒரு போதும் இத்தகைய தற்கொலைக்கு தன்னை ஆளாக்கிக் கொள்ளப் போவதில்லை.

எது எப்படிப் போனாலும் எரியூட்டப் பட்டு கொல்லப் பட்ட அந்த இளைஞனின் கதை உள்ளத்தை உருக்கும் விதமாக நேட்டோ ஊடகங்களால் மக்கள் மயப் படுத்தப் படுகிறது.

இன்னுமொரு தமிழ் நாட்டு அரசியல் சினிமாக் கதை படிக்காத அராபிய மக்களுக்கு நேட்டோ ஊடகங்களால் சொல்லி.......சொல்லி.......சொல்லி அவர்களை உருவேற்றப் படுகிறது.

புதியதொரு உளவியல் யுத்தம் ஊடகங்களால்முடுக்கிவிடப் படுகிறது.

ஊடகங்களின் போதனையினால் போதையூட்டப் பட்ட டுனிசியா மக்கள் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள்.

அரசு கண்டு கொள்ளவில்லை.

அந்த அமைதியில் கொஞ்சம் துணிச்சல் கொண்ட மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிக் காட்ட ஊர்வலம்  போகத் துவங்குகிறார்கள்

நகரசபை பெண் ஊழியருக்கு எதிராக அது நடக்கிறது.

அரசு அமைதியாக இருக்கிறது.

ஊர்வலம் புதிய பரிணாமம் கொண்டு ஊர்வலங்களாக விஸ்வரூப வடிவெடுக்கின்றன.

பொலிசும் பொதுமக்களுடன் சேர்ந்துக் கொண்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன.



ஆச்சரியமாக அரசின் இராணுவம் அமைதியாகவே இருக்கின்றது.

திடீரென ஒரு செய்தி.

நாட்டின் அதிபர் மக்கள் எழுச்சியைக் கண்டு நாட்டை விட்டும் இரவோடிரவாக புகலிடம் தேடி சவூதி நாட்டுக்கு ஓடிவிட்டாராம்.

செய்தியறிந்த நாட்டு மக்கள் வீரர்களாக எழுந்து நின்றார்கள்.

பாதையோர பிக்பாக்கட் திருடர்கள் விடுதலை வீரர்களாக மாறி நின்றார்கள்.

விளைவு?

அரச சொத்துக்கள் தீயிடப் பட்டன.

தனியார் சொத்துக்கள் சூறையாடப் பட்டன.

பலவீனமான எதிரிகள் பலி வாங்கப்பட்டார்கள்.

அரசுக்கு ஆதரவான குடும்பத்து அழகியப் பெண்கள் கனீமத் என்ற ஷரியா சட்டப் பிரகாரம் கற்பழிக்கப் பட்டார்கள்.

மொத்தத்தில் நாட்டு மக்களாலேயே நாடு துவம்சம் செய்யப் பட்டது.

ஆனால்,அமெரிக்க அரசு அந் நாட்டினுள் உத்தியோக பூர்வ அரசாக அமைதியாக இரகசியமாக அரசாலும் இரகசியம் இன்னும் கொஞ்ச நாள்களில் தெரிந்து விடும்.

எனினும்,உலக மக்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை.

அராபிய மக்களிடையே புதிதாக நாகரீகம் அறியாத ஒரு நாகரீகம்.

உலகம் காணாத புதிய நாகரீகம்.

நம்ரூதிய அடக்குமுறை அரசர்களுக்கு எதிராக இப்றாகீம் என்ற இறைத் தூதரின் பின்னால் அணி திரண்ட மக்கள் புதியதொரு ஏகத்துவ மார்க்கத்தை உலகில் அறிமுகப் படுத்திய கதை ஒரு வரலாறு.

ஏகத்துவ மார்க்கத்தின் மூல பிதா அவர் என்ற பரகசியம் உலகுக்குத் தெரியும்.

அது உலகம் கண்ட முதலாவது நாகரீகம்.

மூஸா என்ற இன்னொரு இறைத் தூதர் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை பிர் அவ்னிய சக்திகளில் இருந்து மீட்டெடுத்தவர்.

அவர் இறை வேதம் தவ்ராத்தின் நாயகன்

அது உலகறிந்த இன்னுமொரு நாகரீகம்.

உலகம் கண்ட இன்னுமொரு அடிமை விடுதலைக்கு களம் அமைத்தவர் தாவூத் என்ற பிறிதொரு இறைத் தூதர்.

கிரேக்கிய ஞான கருத்துக்களுக்கு அடித்தளமிட்ட ஷபூர் வேதத்தின் பிதா மகன் அவர் என்ற பரகசியம் உலகுக்குத் தெரியும்.

ஈஸா என்ற இன்னுமொரு இறைத் தூதர் அவர் காலத்து மக்களின் விடுதலைக்காக அன்னை மரியம் - ஸலாமுன் அலைஹா - வயிற்றில் அற்புதமாக பிறந்து வந்தார்.

அவர் கிறிஸ்துவ வேதத்தின் நாயகர்.

அது உலகம் கண்ட இன்னுமொரு நாகரீகம்.

நாளடைவில்,இந்த இறைத் தூதர்கள் உலகத்துக்கு அறிமுகப் படுத்திய நாகரீகங்கள் சாத்தானிய சக்திகளினால் சூழ் கொள்ளப் பட்ட மனித மனங்களினால் சூசகமான முறையில் சிதைத்து சீரழிக்கப் பட்டுப் போக அந்த வேதக் கருத்துக்களுக்கு .........அந்த வேதங்களை  நபி முஹம்மத் -சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் புணருத்தாபனம் செய்து இஸ்லாம் மார்க்கத்தை .......இஸ்லாமிய நாகரீகத்தை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

உலகம் கண்ட அனைத்து எழுச்சிகளுக்கும் பின்னால் ஒரு தனி நபர் இருக்கிறார்.

தனி நபர்!

அவரை நம்பி பின் பற்றும் கூட்டம்!

அந்தக் கூட்டம் கூடி உருவாக்கிய  நாடு!

அந் நாட்டைப் பின் துயரும் நாடுகள்.........நாடுகளின் கலாச்சாரம்........அந்தக் கலாச்சாரம் உருவாக்கும் நாகரீகம்.!!.

உலகம் கண்ட எழுச்சிமிக்க நாகரீகங்கள் இப்படித்தான் இருந்திருக்கின்றன.

மக்கள்!

அணி திரண்ட மக்கள்!!

அந்த மக்கள் தெரிவு செய்த தலைவன்!!!

இது உலகம் கண்ட அறிவு தொலைத்த கலாசாரம்......நாகரீகம் அறியாத நாகரீகம்..

எங்கள் காலத்தில் நமது ஊடகங்களால் நெறிப் படுத்தப் பட்ட இத்தகைய தலைமைத்துவ தெரிவுகளுக்குப் பின்னால் நேட்டோ நாடுகளின் மறைமுக சக்திகள் இருந்த கதை நமது அறிஞர்கள் நமக்கு சொல்ல மறந்த கதையாகும்.

ஏன் தெரியுமா?

அமெரிக்க முன்னாள்  CIA உளவாளி ஒருவரின் ஒப்புதல் வாக்கு மூலம் இது.......நுணுக்கமாக கவனியுங்கள்.......உண்மை புரிந்துப் போகும்.

நமது அறிஞர்களுக்குப் பின்னால் இந்த மறை முக சக்திகள் இருக்கும் கதை அவர்களுக்கே தெரியாத கதையாகும்.

அந்த அறிஞர்களை அறிஞர்களை கண்மூடிப் பின்பற்றுகின்ற நம் அனைவருக்கும் இறைவனே துணை.

9 comments:

irukkam said...

உலக அரசியலையும் இஸ்லாத்திற்கெதிரான அமெரிக்கக் கூட்டின் சதிகளையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் இப்பதிவு, உங்கள் பதிவுகளில் மிகச் சிறந்த ஒன்று என நான் நினைக்கிறேன். மிக கவனமாக இருந்து இதைப் படித்து முடித்த போது, உண்மையில் உள்ளம் முழுக்கக் கவலையே நிறைந்திருந்தது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க இமாம் மஹ்தி (அலை) அவர்கள் விரைவாக வர வேண்டும் என மனமுருகப் பிரார்த்திப்பதைத் தவிர வேறொரு வழியும் எனக்குத் தெரியவில்லை. இந்த வல்லாதிக்க சக்திகளின் சதிகளைப் புரிந்து கொள்ள முடியாமல் தமது அறியாமையில் பிடிவாதமாக இருக்கும் எம் சகோதரர்களுக்காகவும் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

அஹ்லுல்பைத் said...

நண்பர் ஷபீர் ஹபீசுக்கு எம்முடைய நெஞ்சு நிறைந்த நன்றிகள்.

பதிவை முழுதுமாக வாசித்தமைக்கு நன்றி.

இந்தப் பதிவை நான் நமது நிகழ்கால நண்பர்களுக்காக....பிஸியான அவர்களது நேரத்தைக் களவாடி அவர்களது பின்னூட்டங்களை எதிர்பார்த்து பதிவிடவில்லை.(நண்பர் அன்புராஜ் இதற்கு விதி விலக்கு.....)

ஆனால், அல்ஹம்துலில்லாஹ்.........நீங்கள் எங்களது எதிர்பார்ப்பை துகள் துகள்களாக சிதறடித்து எம்மை மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்.

நன்றி.

நமக்குப் பின்னர் பல நூறு வருடங்கள் கழிந்ததன் பின்னர் சத்தியங்களைத் தேடி தவித்துக் கொண்டிருக்கப் போகின்ற .......இன்னமும் பிறக்காத நமது சமூகத்தின் மழலைச் செல்வங்களைக் கருத்திட் கொண்டுதான் இதனை பதிவிளிட்டோம்.

இந்தப் பதிவை இன்னும் மெருகூட்டவேண்டிய தேவை இருப்பதாகவும் உணர்கிறோம்.

அடிக்கடி நம்மை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.

Muhammad Ali said...

சலாம் அலைக்கும். படித்து முடித்ததும் கண்களில் கண்ணீர் துளிகள். யா அல்லாஹ்!!! எங்கள் சமூகத்தை ஷய்தானிடம் இருந்து காபீராக. மிக தெளிவான விளக்கம். என்றைக்கு இந்த உண்மைகள் எம் முஸ்லீம் சமூகத்திற்கு புலப்படுமோ? இன்றும் ஈரானிய அய்யதுல்லஹ்களை புரிந்து கொள்ளாது வலைதளங்களில் அவர்களை வசைபாடும் எமது முஸ்லீம் சகோதரர்கள் இதை படித்தாவது புரிந்து கொள்ளட்டும். எம்மை நினைவில் வைத்திருபதற்கு நன்றி.... தொடரட்டும் உங்கள் பணி..

Dr.Anburaj said...

Sadam is a cruel ruler who wasted no second to kill his oponents.He used chemicals weapons against Kuthish Muslims.. Sadam is a kD.So the public did not love him. Arab imperialistic interest and Muslims interest are not synanymous. Tharul Islam ..... ?

Dr.Anburaj said...

தொன்னூறுகளில் ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைனை அராபியரின் கதாநாயகனாக வடிவமைத்து குவைத் நாட்டை அவரைக் கொண்டு ஆக்கிரமிக்கச் செய்து அதன் மூலம் ஏனைய அராபிய நாடுகளை அச்சுறுத்தும் நாடகம் நேட்டோ குழுவினரால் வடிவமைக்கப் படுகிறது.
நெறியாளர்களின் இலக்கை கணித்து அளவிடும் அறிவு அந்த அராபிய சிங்கத்துக்கு ??? இருக்கவில்லை.Iraq is ruled by autocratic rulers/Presidents.Sadam was one.He, by overnight military coup seized the Presidentship of Iraq, not by democratic means. He always cruel to his opponents. Once he visited a Jewellery.There he saw a beautiful women, who was wife of a Pilot of Iraq Air lines. On the next day morning he went to the House of the women. The family members were startled and received the President with fear and respect. After that Sadam told the husband that he wanted to marry his wife.To ease the way the husband divorced his wife and Sadam married her.This news got published in Dinamani-Tamil daily. Had the husband refused to divorce his wife,Saddam would have killed him - in tune with Islamic/Arabic/Koranic guidlines -KARIMATH.sADDAM had dreamt of creating a Single Arabstan with Himself as the Supreme Preisdent of united Arabstan.So he had indulged in all sorts of misadventures. Saddam was handed to death not by Americans,But by duly constituted Judicial Body of Iraq,after an extentive trial.Ahulbaithtamil has not yet learnt the true lesson from downfall of Saddam. But as a Indian, I have deep respect and gratitude for Mr.Saddam who had always been a true friend of India,my beloved country. Had he learned and believed in Goutha Buddha ,Ramayanam, Bhagavd Gita, Shivaji Maharaja and Swami Vivekananda he would not have committed such hernous crimes against his own citizens. Saddam"s fall was enacted by himself by his heinous crimes against his own citizens.Americans have nothing to do with him.
His foolish attempt to establish a Single Arabstan in Middle East by Iraq Military was foiled by his Arab fellow country men- with the help of U.S.A.That is the naked truth.

Dr.Anburaj said...

அரபியின் ஆட்சிக்கு சவாலாக இருந்த அடுத்த அராபியை தாக்கி அழிக்கும் கொடூரம் நாட்டு எல்லையைக் காப்பது என்ற பெயரில் வெடித்தது.
1.This problem is Arabic not Islamic.thank you for admitting the truth,I am always writing and telling you.
தமது எல்லைகளை சுருக்கி ஒற்றுமையுடன் கூடிய நபிகளார் அறிமுகப் படுத்திய எல்லைகளற்ற தாருல் இஸ்லாமிய வழி முறைக்கு நகரத் துவங்கியதை நமது அறிஞர்கள் இந் நிமிடம் வரை அவதானிக்காதது 2.Tharul islam is nothingBut an euphemism for Arab Imperialism . The entire world should embrace Arab Religion else the Arabians/followers of Arab pagon culture would wage war against them.We must think ways to establish world pace without religious conversion.There is no pace among muslims.So thrulislam is a waste and would not solve any problem.முஸ்லிம்களின் கதாநாயகனாக ஓரிரு நாள்கள் இருந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் .Saddam is too foolish to be a role model of Muslims tranceding national barriers.It is not in the interest of Muslims to hold such cruel Arab as Heros of Sri lankan and Indian Muslims.பலவீனமான எதிரிகள் பலி வாங்கப்பட்டார்கள்.அரசுக்கு ஆதரவான குடும்பத்து அழகியப் பெண்கள் கனீமத் என்ற ஷரியா சட்டப் பிரகாரம் கற்பழிக்கப் பட்டார்கள்.History repeats itself.They are voracious readers of Koran.That is What happed to Hindu women in Indiaand Bangaladesh.அந்த வேதங்களை நபி முஹம்மத் -சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் புணருத்தாபனம் செய்து இஸ்லாம் மார்க்கத்தை .......இஸ்லாமிய நாகரீகத்தை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
That along with karimath, child marriage.
Democracy in all level, is the only solution for all evils in Arab/Muslim world.Mohammed is a embodiment of Militaryism. Ahulbaith is good at describing the problem, But very poor in conclusion. AbuBakar captured the throne by might.Islam is the only religion - that is tyranical and might based,.Might rules the Arab world.Bloodshed would always follow.Swami Vivekananda article Universal religion is truly Thrulislam.

Dr.Anburaj said...

One thing I have to admit is - USA had used more military offence than needed.Bombardment of Iraq all over was heinous.The military offence must have pinpointed Sadam only. USA must have scaled down the level of offensive operations.When Pakistan military occupied " Kargil " the Government of India,headed by a pious Hindu Mr.Atal behari Vajpayee had waged a limited Zone /restricted war in Kargil only, instead of a full fledged war.Because he is born in a country -11.Where Gauthama Buddha - Love embodiment was born 2. where valour is " stare not the wife of thy neighbour " not karimath.As long as Koran is the guiding life philosophy of Arabs, Arabs would never improve from such grave situations.

Dr.Anburaj said...

எங்கள் சமூகத்தை ஷய்தானிடம் இருந்து காபீராக.
Whatand where is satan,? out of date life doctrines.

Dr.Anburaj said...

Is it Arabic?or Islamic ? or Monolithic ?
90 வயது முதியவருக்கும் சிறுமிக்கும் திருமணம்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்.By dn, துபை

First Published : 08 January 2013 01:08 AM IST
.துபையில் மிகப்பெரிய தொகையைப் பெண் வீட்டாருக்குக் கொடுத்து, 15 வயதுடைய சிறுமியை 90 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டதை அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

துபையைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் 16 வயதுடைய சிறுமியைத் திருமணம் செய்து கொண்டார். அவர் தமது வயதை மறைத்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் புகுந்த வீட்டில் அந்தச் சிறுமி குடியேறிய பிறகே, கணவர் முதியவர் என்று தெரிய வந்தது.

இதனால் பயந்து போன அவர், தனது அறைக்குள் நுழைந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு விட்டார். அதன் பிறகு, அந்தச் சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து அந்த முதியவர் கூறுகையில் ""எனது திருமணம் சட்டப்பூர்வமானது மட்டுமின்றி சரியானதும் கூட. அந்தச் சிறுமியைத் மணந்து கொள்ள அவரது குடும்பத்துக்கு நான் சுமார் ரூ.9.6 லட்சம் கொடுத்துள்ளேன். என் மனைவியைத் திருப்பி அனுப்புமாறும், அல்லது நான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்குமாறும் கோரி அவர்களது குடும்பத்தார் மீது வழக்கு தொடர உள்ளேன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மேஜராகாத பெண்ணை மணந்து கொண்டு, அந்தக் குடும்பத்தாருக்கு முதியவர் நெருக்கடி கொடுப்பதற்கு துபையில் உள்ள சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad