முதன்முறையாக இலங்கையில் நடைபெறுகின்ற மாபெரும் அஹ்லுல்பைத் மா நாடு:
இடம்: கெக்கிராவ- கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரி.
அன்னை பாத்திமா நாயகின் பிறந்த தினமான ஜுமதுல் ஆகிர் பிறை 20 ஆம் திகதி (இவ்வருட மே மாதம் முதலாம் திகதி) அஹ்லுல்பைத் நினைவு தினமாக கெக்கிராவ- கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரியில் கொண்டாடப் படுகிறது.
இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக் கணக்கான மார்க்க அறிஞர்கள் , உலமாக்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளர்களாக அஹ்ளுபைத் மாநாட்டை அலங்கரிக்க இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் விபரமும் அவர்கள் பேச இருக்கும் தலைப்புகளும் வருமாறு:
1.மௌலவி. A .L .முஹாஜிரீன் ஆலிம் நத்வி.- (அல் காதிரி வர் ரிபாயீ )- அதிபர் அந் நஜாஹ் அரபிக் கலாசாலை - மாத்தளை.
தலைப்பு: "பனூ ஹாசிம் கிளையினரும் மில்ளத்துள் ஹனிபா என்ற உண்மை வழியும்"
2.மௌலவி.M.H.M.முஹியித்தீன் ஆலிம் நத்வி.- முன்னாள் அதிபர் புஹாரி அரபுக் கலாசாலை- கிண்ணியா
தலைப்பு: "மகத்துவம் நிறைந்த அஹ்ளுல்பைத்துகள்."
3.மௌலவி H.M.முஸ்தபா-பாரி -செயலாளர்- ஜம்மியத்துல் உலமா சபை-அனுராதபுர மாவட்டம்
தலைப்பு: "அஹ்ளுல்பைத்துக்களை மறைப்பதும் பரிசுத்த சந்ததியை மறுப்பதும் ஏன்?"
4.மௌலவி A.H.L.அன்சாரி-பாரி.பிரதம கதீப் ஷாபிஈ ஜும்மாஹ் பள்ளிவாசல் கட்டுக்கெலியாவ -கெகிராவ
தலைப்பு"ஷியா வகுப்பினர் வழி தவறியதன் காரணம்"
5.மௌலவி U அப்துல் ஹலீம் -மன்பஈ BA -அதிபர் அந் நஹ்ஜதுள் இஸ்லாமியா அரபுக் கலாசாலை - ஏறாவூர்.
தலைப்பு:"சுந்தர நபியின் சுவனத்துப் பெற்றோர்."
6.மௌலவி N.M. நவாஸ் அத்ளி -முன்னாள் பேஷ் இமாம் ரவ்ளத்துள் அதுகியா பள்ளி வாசல் -தொட்டவத்த -பாணந்துறை.
தலைப்பு:"அஹ்ளுல்பைத்களை பின்பற்றாமல் மார்க்கம் இல்லை."
7.மௌலவி M.K.M.இக்ராம்.அல் முர்ஷி -பேராசிரியர் ஜிப்ரியா அரபுக் கலாசாலை- காலி,
தலைப்பு: "அஹ்ளுல்பைத்துக்களும் சஹாபா பெருமக்களது பேரன்பும்."
8.M.J.M.ரிழ்வான் -ஜலாலி-அதிபர் அன்நூருள் முகம்மதியா அரபுக் கலாசாலை கல்ஹின்ன - கண்டி.
தலைப்பு: "இந்த உம்மத்தின் மீது பாசம் நிறைந்தவர்கள் அஹ்ளுல்பைத்துக்கள்."
9.மௌலவி H.F.M.அர்சார்த் ஜலாலி.-பேஷ் இமாம் -மருதானை பெரிய பள்ளிவாசல்
தலைப்பு:"எம்பெருமான் சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களது ஈரக் கொளுந்தல்லவா அன்னை பாத்திமா நாயகி அவர்கள்."
10.மௌலவி M.M.முஹம்மத் அஸ்மில் -மிஸ்பாஹி அஸ் ஷூபி அல் காதிரி.- பணிப்பாளர் மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபுக் கல்லூரி -கட்டுக்கெலியாவ கெகிராவ
தலைப்பு:"அஹ்ளுல்பைத்துக்களும் நேர்வழியும்"
அஹ்ளுல்பைத்களை மட்டும் நினைவு படுத்தி கௌரவிக்கும் இத்தகைய மாநாடு இலங்கையில் நடைபெறுவது முதல் முறையாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இடம்: கெக்கிராவ- கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரி.
அன்னை பாத்திமா நாயகின் பிறந்த தினமான ஜுமதுல் ஆகிர் பிறை 20 ஆம் திகதி (இவ்வருட மே மாதம் முதலாம் திகதி) அஹ்லுல்பைத் நினைவு தினமாக கெக்கிராவ- கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரியில் கொண்டாடப் படுகிறது.
இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக் கணக்கான மார்க்க அறிஞர்கள் , உலமாக்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளர்களாக அஹ்ளுபைத் மாநாட்டை அலங்கரிக்க இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் விபரமும் அவர்கள் பேச இருக்கும் தலைப்புகளும் வருமாறு:
1.மௌலவி. A .L .முஹாஜிரீன் ஆலிம் நத்வி.- (அல் காதிரி வர் ரிபாயீ )- அதிபர் அந் நஜாஹ் அரபிக் கலாசாலை - மாத்தளை.
தலைப்பு: "பனூ ஹாசிம் கிளையினரும் மில்ளத்துள் ஹனிபா என்ற உண்மை வழியும்"
2.மௌலவி.M.H.M.முஹியித்தீன் ஆலிம் நத்வி.- முன்னாள் அதிபர் புஹாரி அரபுக் கலாசாலை- கிண்ணியா
தலைப்பு: "மகத்துவம் நிறைந்த அஹ்ளுல்பைத்துகள்."
3.மௌலவி H.M.முஸ்தபா-பாரி -செயலாளர்- ஜம்மியத்துல் உலமா சபை-அனுராதபுர மாவட்டம்
தலைப்பு: "அஹ்ளுல்பைத்துக்களை மறைப்பதும் பரிசுத்த சந்ததியை மறுப்பதும் ஏன்?"
4.மௌலவி A.H.L.அன்சாரி-பாரி.பிரதம கதீப் ஷாபிஈ ஜும்மாஹ் பள்ளிவாசல் கட்டுக்கெலியாவ -கெகிராவ
தலைப்பு"ஷியா வகுப்பினர் வழி தவறியதன் காரணம்"
5.மௌலவி U அப்துல் ஹலீம் -மன்பஈ BA -அதிபர் அந் நஹ்ஜதுள் இஸ்லாமியா அரபுக் கலாசாலை - ஏறாவூர்.
தலைப்பு:"சுந்தர நபியின் சுவனத்துப் பெற்றோர்."
6.மௌலவி N.M. நவாஸ் அத்ளி -முன்னாள் பேஷ் இமாம் ரவ்ளத்துள் அதுகியா பள்ளி வாசல் -தொட்டவத்த -பாணந்துறை.
தலைப்பு:"அஹ்ளுல்பைத்களை பின்பற்றாமல் மார்க்கம் இல்லை."
7.மௌலவி M.K.M.இக்ராம்.அல் முர்ஷி -பேராசிரியர் ஜிப்ரியா அரபுக் கலாசாலை- காலி,
தலைப்பு: "அஹ்ளுல்பைத்துக்களும் சஹாபா பெருமக்களது பேரன்பும்."
8.M.J.M.ரிழ்வான் -ஜலாலி-அதிபர் அன்நூருள் முகம்மதியா அரபுக் கலாசாலை கல்ஹின்ன - கண்டி.
தலைப்பு: "இந்த உம்மத்தின் மீது பாசம் நிறைந்தவர்கள் அஹ்ளுல்பைத்துக்கள்."
9.மௌலவி H.F.M.அர்சார்த் ஜலாலி.-பேஷ் இமாம் -மருதானை பெரிய பள்ளிவாசல்
தலைப்பு:"எம்பெருமான் சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களது ஈரக் கொளுந்தல்லவா அன்னை பாத்திமா நாயகி அவர்கள்."
10.மௌலவி M.M.முஹம்மத் அஸ்மில் -மிஸ்பாஹி அஸ் ஷூபி அல் காதிரி.- பணிப்பாளர் மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபுக் கல்லூரி -கட்டுக்கெலியாவ கெகிராவ
தலைப்பு:"அஹ்ளுல்பைத்துக்களும் நேர்வழியும்"
அஹ்ளுல்பைத்களை மட்டும் நினைவு படுத்தி கௌரவிக்கும் இத்தகைய மாநாடு இலங்கையில் நடைபெறுவது முதல் முறையாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
13 comments:
இஸ்லாம் குறித்து நிலுவையில் உள்ள எனது கேள்விகளுக்கு மாநாட்டிற்கு வரும் அரேபிய சமய கலாச்சார மேதைகளிடம் தாங்கள் ஆலோசித்து விடை சொல்லுங்களேன்.
ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே. இதற்காகக் குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.
கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். இது நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.Tamil - Kungumapoo English - Saffron
இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.
விந்துநட்டந் தாகமண்டலம் மேகசலஞ் சூலைகபம்
உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி - முந்துகண்ணில்
தங்குமப்பூ வோடுறுநோடய் சர்த்தியவை நீங்கவென்றால்
குங்குமப் பூ ஓரிதழைக் கொள் (அகத்தியர் குணபாடம்)
குங்குமப் பூவைக் கண்டால் கூறுகொண்ட பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம் - பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது (அகத்தியர் குணபாடம்)
இரத்தம் சுத்தமடையகுங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள். இரத்த சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.
குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.
மேலும் சில பயன்கள்
குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.
கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/-க்கு விற்பனையாகிறது. போலி குங்குமப்பூவும் சந்தையில் கிடைக்கிறது. . உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையலாம்.
இராமன்-சூர்ப்பணகை உரையாடல்-முன்பின் தெரியாத ஒரு பெண்ணை காட்டினில்காணும் ராமன் (சுர்ப்பனகை என்றப் பெண்ணைப் ) அவளைப் பார்த்துக் கேட்கிறான்
'தீது இல் வரவு ஆக, திரு! நின் வரவு; சேயோய்!
போத உளது, எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ?
ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு?' என்றான்,
வேத முதல்; பேதை அவள் தன் நிலை விரிப்பாள்:
பிரம்மச்சரியம் பேணும் ஒரு இளைஞன் ஏக பத்தினி விரதம் கொண்ட ஒரு மன்னன் -ஒரு பெண்ணை காட்டில் தனியே பார்த்த போதும் பண்புடன் கேட்கிறான் உன் வரவு குற்றம் ஏதுமில்லா நல்வரவாகட்டும். குழந்தாய் உன் கணவர் யார்? உன் பெயர் என்ன ? உன் உறவினர் யார் ?
இப்பண்பாடு அனைத்து ஆண்மக்கள் மனதில் இருந்தால் பெண்கள் முழுச்சுதந்தரம் பெற்று வாழ முடியும்.
பாக்கிஸ்தானில் ஏன் இந்துக்களைப் படைத்தீர்கள் அல்லாவே !ஈசனே ! பிதாவே! பராபரமே !
01. பழமைவாத இஸலாமிய அமைப்பு ஒன்று முகம்மதுவை விமர்சித்தால் மரணதண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் வங்க தேசத்தில் கலகத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டது. அல்லாவின் தூதருக்கு அப்படி ஒரு சட்டப்பாதுகாப்பு தேவையா ?
02.சட்டம்நிறைவேறினால் இந்துக்களை சுலபமாக அழிக்கப்பயன் படும்.
”லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்று மதசகிப்புத்தன்மையை இஸ்லாம் போதிப்பதாக முன்னாள் முஸ்லீம்களான எங்களிடமே முழம்போடுகிறார்கள்.
புகாரி ஹதீஸ் 4357
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
... வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லைஎன்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டி விடுவேன் என்று சொன்னேன். பிறகு நான் அதை (கோவில்) உடைத்து விட்டேன். அந்த மனிதரும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று சாட்சியம் கூறினார். ...
புகாரி ஹதீஸ் 4356
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது யமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் அஹ்மஸ்குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். அஹ்மஸ் குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு,அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர்,தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தை சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், (இறைவா!) அஹ்மஸ் குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக! என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.
குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படை குர்ஆன். எனவே இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்
(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …
(குர்ஆன் 2:213)
அல்லாஹ்வால் இறக்கப்பட்ட தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.
…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)
எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …
(குர்ஆன் 2:79)
எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.
நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)
இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி. தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.
…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.
(குர்ஆன் 6:34)
நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,
இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …
(குர்ஆன் 2: 4)
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(குர்ஆன் 3:84)
..... 2 பக்கம்
தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,
நிச்சயமாக நாம்தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …
(குர்ஆன் 5:44)
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; “நிச்சயமாக பூமியை (ஹாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
(குர்ஆன் 21:105)
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருந்தது.
(குர்ஆன் 5:46)
அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக பார்ப்போம் :
குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய வேதங்கள் ஆகும்
குர் ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக அல்லாஹ் தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர் ஆன் பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.
இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்
குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க உறுதிமேற் கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக தெரியவில்லையா?
குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், அல்லாஹ் பலவீனமானவன் அல்லது அவன் ஒரு அநீதிக்காரன். தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.
அல்லது
அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.
அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் சும்மா இருந்த அல்லாஹ், பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தை வேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.
அல்லாஹ் ஆற்றல் மிக்கவன், வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும்.
அல்லாஹ் ஆற்றல் மிக்கவன், வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?
முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால் சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?
அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?
குர்ஆனின் (6:34) வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம். இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.
ü அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய பொய்.
ü முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)
ü “அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.
ü அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)
மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,
ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.
மறதியாளன் என தன்னால் வர்ணணை செய்யப்பட்ட மனிதனின் இதயத்தில்(?) வைத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
(குர்ஆன் 2:106)
முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும் வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த “மூலப்பதிவேடு” என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?
எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது ‘சொதப்பலா’?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,
புகாரி ஹதீஸ்4095
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்கூறியதாவது :
பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா,ரிஅல், தக்வான்(பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள், ஆகவே இறைவன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன்வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னர் (இறைவனால் அந்தவசனம்) நீக்கப்பட்டுவிட்டது. (அந்த வசனம்,)
” நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். நங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் “.
நீக்கப்பட்ட இவ்வசனத்தின் தன்மையையும் கருத்தையும் கவனித்துப் பாருங்கள் சரியான உளறல் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.
முஹம்மதிற்கு மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். சஹாபாக்களுக்கு மறதி ஏற்பட்டால்? ஏனென்றால் நபியின் காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்படவில்லை.
புகாரி ஹதீஸ் : 4986
வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது
…எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அபுபக்ர் (ரலி) அவர்கள்., அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான் என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்து) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். …
நபியின் மரணத்திற்கு பிறகு அரசியல் குழப்பங்கள் எல்லை கடந்திருந்த நிலையில் பல குழப்பங்களுக்கிடையே சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய உரையாடல்களை தொகுக்கச் செய்கிறான். ஆவணங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான சாட்சிகளின் முறையையும் (குர்ஆன் 2:282) விவரிக்கவும், முஹம்மது அவர்கள், தன் எதிரிகளுக்கு எழுதிய (மிரட்டல்) கடிதங்களில் முத்திரை பதிக்க அறிவுறுத்திக் கூறியவனுக்கு, தன்னுடைய உரையாடல்களை மிகச்சரியான எழுத்து வடிவத்தில் தன் தூதரின் வாழ்நாளிலேயே முத்திரையிட்டு இறுதிவடிவம் கொடுக்கத் தெரியவில்லை. ஆயிஷாவின் பாதுகாப்பிலிருந்த குர்ஆனின் அத்தியாயங்களின் பிரதிகளை கோழி, ஆடு (வாத்து, மாடு, ஒட்டகம், பூனை, நாய், முயல்) மற்றும் நெருப்பிற்கும் இறையாக்கிவிட்டான்.
புகாரி ஹதீஸ் : 4987
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்தச் சமுதாயம் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம் என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆனை பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப் படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்கிடமிருந்த) அநதக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வான்றையும் ஒவ்வாரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
குர்ஆன் முஹம்மதின் காலத்திலேயே குழப்பமற்ற முறையில் இறுதி வடிவம் பெற்றுவிட்டதென்றால், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலீபா உஸ்மான், குர்ஆனை மீண்டும் தொகுக்க அவசியம் ஏன்? தனது தொகுப்புடன் முரண்படும் மற்ற பிரதிகளை நெருப்பிலிட்டது ஏன்? குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் முஹம்மது அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான். அவரும் ஒரு இறைத்தூதரோ? குர்ஆனை தொகுத்தவரைப்பற்றி முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷாவின் கருத்து
(ஒரு இஸ்லாமிய தளத்திலிருந்து,)
Ibn Atheer in ‘Al-Nahayah’, Volume 5 page 80 stated:
حديث “اقتلوا نعثلا قتل الله نعثلا” تعني عثمان . وهذا كان منها لما غاضبته وذهبت إل مكة
The hadith “kill Nathal, may Allah kill Nathal” refers to Uthman. That happened from her when she got angry and went to Makka.
Al-Razi records in Al-Mahsol, Volume 4 page 343:
فكانت عائشة رضي الله عنها تحرض عليه جهدها وطاقتها وتقول أيها الناس هذا قميص رسول الله صلى الله عليه وسلم لم يبل وقد بليت سنته اقتلوا نعثلا قتل الله نعثلا
Aisha (may Allah be pleased with her) did her best to incite people against Uthman, and she used to say: ‘Oh people! This is the cloth of the Messenger of Allah (pbuh) still not ragged, while his Sunnah is ragged, kill Nathal, may Allah kill Nathal.’
(ஆயிஷா, மக்களை உத்மானுக்கு எதிராக நன்றாக தூண்டிவிட்டார், அவர்(ஆயிஷா) கூறுவார், “மக்களே அல்லாஹ்வின் தூதருடைய இந்த துணி கிழியவில்லை. ஆனால் அவரது சுன்னத்துகள் கிழிந்து விட்டது, காஃபிரைக் கொல்லுங்கள் அல்லாஹ் (அந்த) காஃபிரைக் கொல்லட்டும்” என்பார்.)
ஆயிஷாவின் இந்த கருத்தின்படி குர்ஆனை தொகுத்த கலீஃபா உஸ்மான் ஒரு காஃபிர். இதே உஸ்மான் மரணத்திற்குப்பின் அப்பாவியானதும், புனிதரானதும் அவரது கொலைக்கு பழிவாங்க ஆயிஷா போர்க்கோலம் பூண்டதும் தனிக்கதை. குர்ஆனைத் தொகுத்தவரின் இறுதிகாலம் மிக கேவலமானது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் தீண்டுவாரின்றி குப்பைகூழத்துடன் மூன்று நாட்கள் கிடந்தது. இறுதியில் யூதர்களின் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் அடக்கம் செய்யபட்டது. இது தண்டனையா? இல்லை வெகுமதியா?
பல அனுபவங்களுக்கு பின் மிகுந்த பாதுகாப்புடன் வெளியிடப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இறுதி வேதத்தின் நிலையே இப்படியென்றால், முந்தின வேதங்களின் நிலையைப்பற்றி கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் முந்தின வேதங்கள் மற்றப்பட்டதாக புலம்புவதில் எவ்வித பொருளுமில்லை.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் மட்டுமே முந்தின வேதங்கள் மனிதர்களால் களங்கமடைந்து விட்டதாகவும் அவைகளைப் பின்பற்றக் கூடாது என்ற செய்தி உள்ளது. தவ்ராதிலும், ஜபூரிலும் மனிதர்களின் கைவரிசை இருப்பதாக இதற்கு அடுத்து இறக்கப்பட்ட இன்ஜீலில் அப்படி எந்த செய்தியும் காணவில்லையே. தவ்ராதிலும், ஜபூரிலும் திருத்தம் செய்து கொண்டதை இன்ஜீலின் காலத்தில் அல்லாஹ்வினால் அறிய முடியவில்லையா?
எந்த காலகட்டத்தில், எவ்வாறு, யாரால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுவதுதானே குற்றம் சாட்டும் முறை. மாற்றிவிட்டார்கள்…! மாற்றிவிட்டார்கள்…! மீண்டும் மீண்டும் ஒப்பரிவைப்பது ‘சின்னபுள்ளத்தனமா’ இருக்கிறது.
முன்னுக்குப்பின் முரணாக தெளிவின்றி பேசும் குர்ஆனின் குற்றச்சாட்டுகளை நம்புவது எப்படி?
சரி…
அல்லாஹ் தன்னுடைய வேதங்களின் மூலம் மனிதர்கள் நேர்வழி பெற ஏவுவது எதற்காக?
ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம்.
(குர்ஆன் 17: 16)
இவ்வசனம் அல்லாஹ்வின் மனநிலையை உணர்த்த போதுமானது. தன்னுடைய சொல்(விதி) எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு வாக்கு மூலம். சுகமாக வாழும் மனிதர்களைக் காண சகிக்காமல், அவர்களை வேரோடு அழிந்து நாசமாவதைக் காண்பதற்காக நேர்வழியை ஏவுபவன் இறைவனா? இதற்கு ஒரு வேதம் தேவையா?
நன்றி நான் நாத்திகன் என்ற வலைதளம்
என்னுடைய வயது 79. வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில், கண்பார்வை மிகவும் குறைவாக உள்ளது. ஆஸ்துமா சுமார் 15 வயது முதலே தொடர்ந்து இருக்கிறது. காற்றோட்டம் சற்றுக் குறைந்தாலும் மூச்சுவிடச் சிரமமாக இருக்கிறது. உடல் பலவீனம். இரவும் பகலும் சளி இருமல். சளி வெளியேறிவிட்டால் சுகமாக இருக்கிறது. இவற்றைக் குணப்படுத்த என்ன வழி?
எஸ்.எம்.கே.தனபாலன், மதுரை.
தலையிலும் மார்பிலும் பிராண - உதான வாயுக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதையே தங்களுடைய உடல் நிலை காட்டுகிறது. மருந்துகளின் தொடர் உபயோகத்தால் மூச்சுக் குழாயின் ரப்பர் போன்ற தன்மை குறைந்து இறுகிவிட்டால், மூச்சுவிடச் சிரமம் ஏற்படும். போதுமான அளவில் பிராண வாயுவின் வரத்து உட்புறக் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உடல் பலவீனம் ஏற்படுகிறது. கெட்டியான சளி மூச்சுக் குழாயில் படிந்திருப்பதால், அதை வெளியேற்ற முயற்சிக்கும் செயல்கள் அனைத்துமே உடல் சோர்வைத் தரும்.
பிராண - உதான வாயுக்களை நேர்ப்படுத்த சிறந்த வழி பிராணாயாமம் என்ற முறைதான். யோகப் பயிற்சிகளில் திறமையானவர்களை நீங்கள் நேரில் சந்தித்து அவர்கள் மூலம் ஆசன - பிராணாயாம முறைகளைக் கற்றுக் கொண்டால், உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
நாட்பட்ட சளியை நெஞ்சில் சுமந்து கொண்டு வாழ்வது சரியல்ல. கொள்ளு, கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, யவை எனும் பார்லி, பச்சைப் பயறு, பச்சரிசி ஆகியவற்றை வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்து, 1 1/2 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, 750 மி.லி. ஆனதும் வடிகட்டி, வெதுவெதுப்பாக, சிறிது இந்துப்பு கலந்து, காலை உணவாகப் பருகினால், சளியைக் கரைத்து வெளியேற்றும். சூடு ஆறிவிட்டால் 1/2 - 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுவதும் நல்லதே. மதிய உணவாக மிளகு ரஸம், கறிவேப்பிலைத் துவையல், சூடாக்கிய மோரில் மஞ்சள் தூள், நல்லெண்ணெய்யில் தாளித்த ஓமம் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இரவில் கோதுமை வகையைச் சார்ந்த உணவாக இருத்தல் நலம். இனிப்பு - புளிப்பு - உப்புச் சுவையைக் குறைக்க வேண்டும்.
கோரைக் கிழங்கு 10 கிராம், சுக்கு 5 கிராம், 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து 1/2 லிட்டராகக் குறுகியதும் வடிகட்டி, சிறிது சிறிதாகக் குடிக்கப் பயன்படுத்துவது சிறந்தது. ஏலக்காய், கிராம்பு, ஓமம், சீரகம், சோம்பு ஆகியவற்றை இரண்டு வெற்றிலையுடன் சுருட்டி, உணவுக்குப் பின் மென்று சாப்பிடுவதால் கபக்கட்டு நன்றாகக் கரைந்து விடும்.
ஒரு சில ஆயுர்வேதச் சிகிச்சை முறைகள் பயன் தரலாம். தேகராஜாதி தைலத்தையோ, கர்ப்பூராதி தைலத்தையோ நெஞ்சுப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் வெதுவெதுப்பாகப் பூசி அரை அல்லது முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, தவிடு அல்லது கொள்ளு ஒத்தடம் கொடுக்க, சளி கரைந்து மூச்சு எளிதாக விட வாய்ப்பிருக்கிறது. சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டி வரலாம். திரிபலா சூரணம், அதிமதுரம் சூரணம், திரி கடுகம் சூரணம் ஆகியவற்றைச் சேர்த்து, மொத்தம் 5 கிராமெடுத்து 10 மி.லி.தேனுடன் குழைத்து, காலை, இரவு உணவுக்குப் பிறகு நக்கிச் சாப்பிடலாம். கண்பார்வைக்கும், சளியைக் கரைப்பதற்கும் பயன்படும்.
வியாக்ரயாதி கஷாயம், தசமூல கடுத்ரயாதி கஷாயம் ஆகியவற்றை வகைக்கு 7.5 மி.லி. வீதம் கலந்து, 60 மி.லி. கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து அதை 1/2 - 1 ஸ்பூன் (5 மி.லி) தேனுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 41 -48 நாட்கள் சாப்பிடுவதால், மார்பு சளி, இருமல் குறைந்து, மூச்சுவிடச் சுலபமாக இருக்கும்.
தாளீசபத்ராதி சூரணத்தை 1/2 - 1 ஸ்பூன் அடிக்கடி சாப்பிட, உடல் பலவீனம் குறைந்து, தெம்பைத் தரும். இரவில் படுக்கும் முன், சூடு ஆறிய தண்ணீரில், சிறிது தேன் கலந்து சாப்பிட்டு படுத்துறங்குவதால், மார்பில் சளி சேர்வதை தடுக்க முடியும்.
இன்று அன்னையர் தினம்
குமரகுருபர சுவாமிகள்,
""பாலூண் குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்தைத் தாயுண் டாங்கு''
என்று பாடியுள்ளார். பட்டினத்தடிகளோ,
""முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாளளவும்
அந்திபக லாய்ச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்'' என்றும்,
""ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்'' என்றும்,
""வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்''
என்றெல்லாம் தாயின் பெருமையைப் பாடியுள்ளார்.
"" பெண்ணின் பெருந்தக்க யாவுள'' என்றும்,
""ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்''
என்றும் போற்றினார் வள்ளுவப் பெருந்தகை.
தாயின் பெருமையை வள்ளலார் சுவாமிகள் பின்வருமாறு எடுத்தோதுகிறார்:
""வன்மை யறப்பத்து மாதஞ் சுமந்துநமை
நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - மன்னுலகில்
மூளும் பெருங்குற்றம் முன்னிமேன் மேற்செயினும்
நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் -
காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்
ஞால மிசையளிக்கும் நற்றாய்காண்
வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யுந்துயரும்
நம்பிணியும் தீர்த்தருளும் நற்றாய்காண்
வாடியழு தாலெம் வருத்தந் தரியாது
நாடி எடுத்தணைக்கும் நற்றாய்காண்''
இத்தகைய தாயைப் போற்றுவதே நமது முதற் கடமையாகும். அன்றி, அவள் மனம் நோக வேதனைப்பட வைப்பது தகாத செயலாகும். அன்னை சிந்தும் கண்ணீருக்கு இறைவன் உடனுக்குடன் பதில் தந்துகொண்டிருக்கிறான் என்பார்கள் ஆன்றோர்கள்.
""பெண்மைக்குள்ள பெருமை யாது? பெண்மையின் மாட்டு உலக வளர்ச்சிக்குரியதும் தொண்டுக்குரியதுமாய் "தாய்மை'
ஹெரோடெட்டஸின் சாதனை!
பயணம் செய்வதற்கு எந்த வசதிகளும் இல்லாத அந்தக் காலத்தில் - பாதைகள் ஒழுங்காக அமையாத புராதன காலத்தில் - பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த "வரலாற்று சாஸ்திரத்தின் தந்தை' என்றழைக்கப்பட்ட ஹெரோடெட்டஸின் சாதனை பிரமிப்பு ஊட்டக்கூடியது. அவர் }
* ஏதென்ஸுக்கு தெற்கே எகிப்து நாட்டின் நைல் நதிக்கரை வரை பயணம் செய்தார்.
* ஆசியாவில் பாபிலோனியாவைத் தாண்டி பாரசீகம் வரை வந்தார்.
* கருங்கடலில் பயணம் செய்து டான்யூப் நதியின் சங்கமத்தை தரிசித்தார்.
* கிரிமியா தீபகற்பத்தில் உலவினார்.
* ஜார்ஜியா என்று இப்போது அழைக்கப்படும் பிரதேசத்துக்கு சென்றிருக்கிறார்.
* டயர் நதியில் பயணம் செய்து சிரியா நாட்டுக் கடற்கரைக்குச் சென்றிருக்கிறார்.
* லிவியா நாட்டு மண்ணிலும் அவர் பாதங்கள் பதிந்தன.
* கிரேக்கத்தைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்.
* வரலாற்றுச் சம்பவங்களைச் சேகரிக்க இவ்வளவு வித்ச்வாகப் பயணம் செய்த முதல் மனிதர் ஹெரோடெட்டஸ்தான்!
..................................................................................................
தாயாருடன்...
இலங்கையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்துக்குத் தனது மனைவி கஸ்தூரிபாவுடன் சென்றிருந்தார் காந்திஜி.
அப்போது பேச்சாளர் ஒருவர், ""மகாத்மா இந்தக் கூட்டத்துக்குத் தன்னுடைய தாயாரையும் அழைத்து வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது'' என்றார்.
இதற்குப் பிறகு பேசிய காந்திஜி, ""எனக்கு முன் பேசிய நண்பர், நான் தாயாருடன் வந்திருப்பதாகக் கூறினார். ஆனால் இவர் என்னுடைய மனைவி. உருவத்தைக் கண்டு தாயார் என நினைத்துச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் இது ஒரு வகையில் உண்மைதான். ஏனெனில், பல ஆண்டுகளாகவே என் மனைவி கஸ்தூரிபாவை, என் தாயாருக்கு இணையாக மதித்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில்
பிரம்மச்சரிய விரதம் ஏற்ற நாள்முதல்,
என் அன்னை புட்லிபாய்க்குச் சமமாக மனைவியைப் பாவித்து வருகிறேன்'' என்றார் மகாத்மா.
வைரம்!
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமனிடம், மாணவன் ஒருவன், ""ஐயா, வைரத்தின் தன்மை பற்றித் தெளிவாகக் கூறினீர்கள். ஆனால் வைரம் செய்வது எப்படி என்று தாங்கள் சொல்லவில்லையே?'' என்று கேட்டான்.
உடனே ராமன், ""அது மிகச் சுலபம். ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள். பூமியில் ஆயிரம் அடி ஆழத்தில் புதைத்து வைத்துவிட்டு, ஆயிரம் ஆண்டுகள் காத்திரு...'' என்றார்.
கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
நன்றி தினமணி
Post a Comment