அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, April 13, 2011

நடு நிசியில் ஒரு கொலை........


 நடு நிசியில் ஒரு கொலை........


"லிபியாவில் பெண்கள் இராணுவத்தினரால்  கற்பழிப்பு....??? "

இரவு அல் ஜெசீராவில் ஒரு செய்தி.

லிபியாவின் இராணுவத்தினர் தாம் கைப் பற்றிய பகுதியில்  இருந்த பெண்களை இழுத்துச் சென்று கதறக் கதற கற்பழித்து கொடூரம் புரிந்து இருக்கிறார்கள் எனபது தான் அந்த செய்தி.

இதன் மூலம் கலகக் காரர்களை எச்சரிப்பதும், பயமுறுத்துவதும் அவர்களது நோக்கமாக இருக்கலாம்.

இதே விதமான அபாக்கியமான சூழல் லிபியாவின் இராணுவத்தினர் பக்கம் இருக்கும் பெண்களுக்கும் நாளை இஸ்லாமிய விடுதலை வீரர்களினால் ஏற்படலாம்.

விடுதலை வீரர்கள் அந்தப் பகுதியை கைப் பற்றியவுடன் 'கனீமத்' என்கிற இஸ்லாமிய  சட்டப்  பிரிவில் இஸ்லாத்தின் பெயரில் பெண் வெறியாட்டம் ஆடும் கொடூரம் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட சட்டரீதியான செயலாக  ஏற்றுக்கொள்ளப் படும் அநியாயம் அரங்கேறும்.

பாவம் அபலைப் பெண்கள். பெண் குழந்தைகள்.

அவர்கள் தான்  எல்லா சூழ்நிலைகளிலும், ஒரு மனித சமூகம் பிறிதொரு மனித  சமூகத்தின் மீது தொடுக்கப் படும் ஆக்கிரமிப்புக்கும், அத்துமீறல்களுக்கும் பலி கடாவாக ஆளாக்கப் படும் அபலைகள்.

நாம் அறிந்த இஸ்லாத்தில் பெண்ணாசை   அனுமதிக்கப் பட்ட அழகிய அத்துமீறலாக எங்களது விடுதலை வீரர்களினால் இன்று வரை செயல் படுத்தப் பட்டு வந்துள்ளது.

சுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த எந்த மத குருமார்களும் அதனை தடுத்து இருப்பதாக தெரியவில்லை.

மத குருமார்கள் என்ன? கலீபாக்கள் கூட அந்த தவறை தமது தளபதிகளுக்கும், விடுதலை வீரர்களுக்கும் மௌனித்து அனுமதி வழங்கி இருப்பது எம்மை ஒரு கணம் துணுக்குற வைக்கும் நிஜங்களாகும்.



ஆனால், இஸ்லாமிய யுத்த தர்மத்தில் உலகாயுத அற்ப ஆசைகளுக்கு கிஞ்சித்தும் இடம் இல்லை.

படைத்த அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே இலக்காகக் கொண்ட நல்லறம் அல்லவா அது.

நல்லறமாக கருதப் படும் இஸ்லாமிய யுத்த தர்மத்தில் தனிப் பட்ட பகையைத் தீர்த்துக் கொள்ளுவதற்கு அணுவளவும் அனுமதி இல்லை.

இந்த நிலையில் இஸ்லாமிய யுத்தத்தில் எவ் வகையான சிறிய அத்து மீறல்களுக்கும் அங்கே அனுமதி இல்லை.

பெருந்தன்மையான மன்னிப்புக்கும், அளவு கடந்த தாராளத் தன்மைக்கும் கட்டியம் கூறுவதுதான் இஸ்லாமிய யுத்த தர்மங்கள்.

இறைவனின் உயர் திருப்தியை மட்டும் இலக்காகக் கொண்ட அந்த யுத்த தர்மத்தில் மனித உரிமை மீறல்களுக்கு அணு அளவும் இடம் இல்லை.

ஒரு யுத்த தளத்தில் வைத்து, யுத்தம் ஒன்று தொடங்கப் படுவதற்கு முன்னர், இஸ்லாமிய இராணுவத்தினருக்கு ஒரு இமாமினால் விடுக்கப் பட்ட யுத்த சட்டங்களைக் கவனியுங்கள்.

"1 ) புறமுதுகிட்டு ஓடுபவர்களை துரத்திச் செல்லக் கூடாது.

2 )காயமுற்ற்வர்களோடு  போரிடக் கூடாது.

3 )வெற்றி பெற்ற பின்னர் எதிரணியினர் வீடுகளில் நுழையக் கூடாது.

4 )எந்தப் பெண்ணினதும் பர்தாவை திறக்கக் கூடாது.

5 )எந்தப் பெண் மீதும் கை வைக்கக் கூடாது.

6 )உங்கள் பொறுப்பாளர்களையும், தலைவர்களையும் அவர்கள் என்னதான் திட்டினாலும் எதுவும் செய்யக் கூடாது."

(ஆதாரம்- அத தபரீ பாகம் மூன்று பக்கம் 506,510௦,542,544                                                                                                 
இப்னு ஆசிர் பாகம் மூன்று பக்கம் 122,131,132    
அல் பிதாயா பாகம் ஏழு பக்கம் 244 ,245
இப்னு கல்தூண் - தக்மிலா பாகம் இரண்டு பக்கம் 164,165 )

பெண்கள் , தங்களது கையாலாகாத தன்மையை அறிந்தவுடன் அவர்களது இயலாமையின் உச்ச கட்ட சில்லறைத்தனமான செயல் பாடுதான் எதிரியை சினமூட்டும் வகையில் திட்டித் தீர்ப்பது.

இது பெண்களது கடைசி ஆயுதம்.

பெண்களது இத்தகைய மெல்லிய உணர்வுக்கு கூட பெருந்தன்மையுடன்  அங்கீகாரம் அளித்து அவர்களது அந்தத் தவறை அலட்சியப் படுத்துமாறு இஸ்லாமிய யுத்த தர்மம் அதன் படையினரை கட்டுப் படுத்தும் அழகைக் கவனியுங்கள்.

இந்த சட்டங்களை சாதாரண நிலையில் உள்ள ஒருவர் பிறப்பிக்கவில்லை.

இவைகள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாமிய தலைமைத்துவத்துக்கு தகுதியானவராக இருந்த , இமாம் அலி அவர்கள் தனது படையினருக்கு கட்டளை பிறப்பித்த யுத்த சட்டங்கள்.

இஸ்லாமிய சட்டவாக்களில் இது ஒரு இமாமின் பத்வா.

உலக முடிவு நாள் வரை நிலைத்து நிற்கக் கூடிய இஸ்லாமிய யுத்த சட்டங்கள். யுத்த தர்மங்கள்.

ஆனால்,உண்மையில் நடந்தவைகள் என்ன?

இன்று நடப்பவைகள் என்ன?

இமாம் அலியுடைய  தலைமையை ஏற்றுக் கொள்ளாத நிலையில், ஹசரத் அபூபக்கரை ஹசரத் உமர் (ரலி)  இஸ்லாமிய உம்மாவின் முதல் கலீபாவாக தெரிவு செய்கிறார்.

முதலாவது கலிபா நபி (ஸல்) அவர்கள் நியமித்துவிட்டு சென்ற இஸ்லாமியஇராணுவத்தின் தளபதி உசாமாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக காலித் பின் வலீதை இஸ்லாமிய இராணுவத்தின் தளபதியாக நியமிக்கிறார்கள்.

காலித் பின் வலீதின் தலைமையில் இஸ்லாமிய கலீபாவுக்கும், இஸ்லாமிய அரசுக்கும் எதிராக செயல் படுபவர்களுக்கான , இஸ்லாமிய அரசினை பாதுகாக்கும் யுத்தங்களுக்கான திட்டங்கள் வகுக்கப் படுகின்றன.

பதினொரு துணை தளபதிகளுக்கு 'ரித்வா' யுத்தத்துக்கான வியூகம் நிர்ணயிக்கப் படுகிறது.

காலித் பின் வலீத், இக்ரிமா பின் அபு ஜஹ்ல்  ,அமர் இப்னு அல் ஆஸ், ஷுராஹ் பில் பின் ஹசனாஹ், காலித் பின் ஷஹீல், துரைபா பின் ஹாசிஸ், அலா பின் அல் ஹத்ராமி, ஹுதைபா பின் மிஹ்சான், அர்பாஜா பின் ஹர்சமா,முஹாஜிர் பின் அபி ஹுமைய்யாஹ், சுவைத் பின் முகர்ரன்.

இஸ்லாத்தின் எதிரிகளை, இஸ்லாமிய கலீபாவின் எதிரிகளை எதிர் கொள்ளும் விதத்தில் இந்த தளபதிகளுக்கு அவர்களுடைய யுத்த வியூகம் திட்டமிட்டு கொடுக்கப் படுகிறது.

இந்த தளபதிகளுக்கு முதலாம் கலீபாவினால் விடுக்கப் பட்ட யுத்த அறிவுரைகள்   கொஞ்சம் வித்தியாசமானவை.

1 ). உங்களுக்கு இலக்காக கொடுக்கப் பட்ட கோத்திரங்களை தேடி செல்லுங்கள்.

2 )அவர்களைக் கண்டவுடன், அல்லது அவர்களின் இடத்துக்கு சென்றவுடன் தொழுகைக்கு 'அதான்' சொல்லுங்கள்.

3 )அதானைக் கேட்டவுடன் அக் கோத்திரத்தினர் தொழுகைக்கு வந்தவுடன் தொழுகையை நிறைவேற்றுங்கள்.பின்னர், அவர்களிடம்  இஸ்லாத்துக்கு பூரணமாக கட்டுப் படுமாறு வேண்டுங்கள்.அதற்கு அவர்கள் உடன் பட்டவுடன் அவர்களுக்கு சகாத் வழங்குமாறு வேண்டுங்கள்.அதற்கும் அவர்கள் உடன் பட்டால் அவர்களை விட்டு விடுங்கள். எக்காரணம் கொண்டும் அவர்களை தாக்காதீர்கள்.

4 )இந்த உடன்படிக்கைகளுக்கு இணங்கியவர்களை தாக்காதீர்கள்.

5 )அதானுககு பதில் சொல்லாதவர்களுடனும், இந்த உடன்படிக்கைகளுக்கு கட்டுப் பட மறுப்பவர்களுடன் 'வாளைக்' கொண்டு பேசுங்கள்.

6 )இந்தக் குழுவினரில் யாராவது ஒரு குழுவினர் ஒரு முஸ்லிமை கொன்றால், அப்படிக் கொன்றவரைக் கொன்று விடுங்கள்.

முதலாவது கலீபாவின் இந்த சட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்தால் இந்த சட்டங்கள், இஸ்லாத்தை ஏற்று பின்னர் இணை வைப்பாளர்களாக  மாறிய 'முஸ்ரிகீனகளை'குறித்து சொல்லப் பட்டிருப்பது நன்கு புலனாகும்.

இதன் மூலம், இந்த பதினொரு துணை தளபதிகளுக்கு இலக்காக கொடுக்கப் பட்டவர்கள் முஸ்ரிகீன்களாக மாறிய கோத்திரத்தினர் எனபது தெளிவு.

இனி, இக்காலக் கட்டத்தில்  இஸ்லாத்தின் பெயரால் அநியாயமாக வஞ்சிக்கப் பட்ட ஒரு குடும்பத்தின் கதையை கவனியுங்கள்.

'பணி யார்பு'  கிளையினரின் தலைவர் மாலிக் பின் நுவைரா.

'பணி யார்பு' கிளையினர் மிகவும் பலம் வாய்ந்த 'பணி தமீம்' கோத்திரத்தின் கிளைக் கோத்திரத்தினராவர்.

ஹிஜாஸின் வட கிழக்குப் பகுதியில் அப்போதைய பாரசீகத்துக்கு அண்மையில் பஹ்ரைனை ஒட்டி இவர்கள் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.

மாலிக் அவரது தாராளதனத்தாலும், விருந்தோம்பலினாலும் மிகவும் பிரபலமான தலைவர்.

தினமும் இரவில் அவரது வீட்டின் முன்னாள் ஒரு விளக்கு எரிக்கப் படும்.

இரவில் பிரயாணம் செய்யும் மக்களுக்கு வழிக் காட்டியாகவும் உணவு கிடைக்கும் இடத்தை அறிந்துக் கொள்ளவும் இதன் மூலம் அறிந்து கொள்ள  முடிந்தது.

நடு இரவில் எழுந்து விளக்கை அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் வழக்கம் மாலிக்குக்கு இருந்தது.

ஆண் அழகனான மாலிக் வால் வீச்சில் வல்லவர்.

கவிதை இயற்றுவதிலும், வீரப் பண்பிலும்,  தலைமை தனத்திலும் சிறந்தவரான மாலிக் ஒரு அழகிய அராபிய பெண்ணை காதலித்து கரம் பற்றினார்.

அவரது மனைவி லைலா பின்த் மின்ஹால்.

அன்றைய அராபியாவில் அவரை விட அழகான ஒரு பெண் இருக்கவில்லை.

அந்த கவர்ச்சியான அழகினால் லைலா அவர் கணவர் மாலிக்கை விட அரேபியா 'ஜொள்ளு பார்ட்டிகளிடம்' பிரசித்தம்.

அழகிய பெண்கள் என்றாலே கொழுப்பு வைத்த  அரபிகளுக்கு கிளு கிளுப்புதானே?

நிறைய பேர் அந்த அழகியை மணந்து கொள்ள முயன்றார்கள்.

ஆனால், அழகி லைலாவை கவர்ந்தவர் மாலிக் பின் நுவைரா மட்டுமே.

அமைதியாக வாழ்ந்துக் கொண்டு இருந்த இந்த காதல் ஜோடியின் நிம்மதியான வாழ்வில் இஸ்லாத்தின் பெயரால் வந்தது வில்லங்கம்.

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சகாத் வசூலிக்கும் பொறுப்பை இளைஞர் மாலிக்கிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்து இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மறைந்த அடுத்த கணம், இஸ்லாமிய உம்மாவின் தலைவர் யார் என்கிற 'அசிங்கமான' போட்டி நபி (ஸல்) அவர்களின் பொன்னான உடலை நல் அடக்கம் செய்வதற்கு முன்னரேயே நாம் பேரு மதிப்பு வைத்து இருக்கும் சஹாபாக்களின் மத்தியில் அவர்களின் பெருமையை சிதைக்கும் வகையில் வெடித்தது.


நயவஞ்சகர்கள் இஸ்லாத்துக்கு எதிரான சூழ்ச்சியில் பகிரங்கமாக ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.

பொய் நபிகள் ஆளுக்கு ஒரு பக்கம் முளைக்கத் தொடங்கினார்கள்.

மதீனாவிலோ பெரும் குழப்ப நிலை.

'கதீர் கும்'மில் வைத்து நபி (ஸல்) அவர்கள் நியமித்த இஸ்லாமிய உம்மாவின் அடுத்த தலைவர் இமாம் அலி நீக்கப் பட்டு , சடுதியாக அபூபக்கர் தலைவராகிறார்.

நபி (ஸல்) அவர்கள் நியமித்த இஸ்லாமிய தளபதி ,அவரது வளர்ப்பு மகனின் மகன் உசாமா  பதவி நீக்கம் செய்யப் பட்டு அவருக்குப் பதிலாக காலித் பின் வலீத் இஸ்லாமிய உலகின் தளபதியாக நியமிக்கப் பட்டு இருக்கிறார்.

நபி (ஸல்) அவர்களின் மகளின் சொத்துக்கள் 'பதக் விளை நிலம்- புதிய அரசினால் உடனடியாக சுவீகரிக்கப் பட்டு அந்தக் குடும்பம் நட்ட நடுத் தெருவுக்கு கொண்டு வரப் பட்டு பொருளாதார தடைக்கு ஆளாக்கப் பட்டு விட்டது.

இந்த அநீதிக்கு எதிராக நீதி கேட்டு நபி மகளின் குடும்பத்துக்கு ஆதரவாக நபி மகளின் வீட்டில் மதீனத்து பெண்கள் திரண்டதை புதிய அரசு கடுமையாக கண்டித்து இரவில் ஊரடங்கு  பிறப்பித்தது.

அதனையும் மீறி நபி மகளின் வீட்டில் பெண்கள் நபி மகளின் தலைமையில் ஒன்று திரண்டதால், அதற்கு முடிவு கட்டும் வகையில் நபி மகளின் வீடு தீக்கு இரையாக்கப் பட்டது.


மதீனா அல்லோல கல்லோல பட்டது.


இப்பொழுது என்ன செய்வது?


மாலிக் பின் நுவைரா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்.

அவரிடம் , அவரது கோத்திரதாரிடம் இருந்து வசூலித்த சகாத் பணம் மதீனாவுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் இருந்தது.


உடனே மாலிக் பின் நுவைரா தான் வசூலித்த பணத்தை அதன் அதன் சொந்தக் காரர்களுக்கே திருப்பிக் கொடுத்து , "இதோ உங்கள் பணம். இதனை நீங்களே   வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு இன்மேல் நீங்கள் தான் பொறுப்பாளிகள்" என்று கூறி திருப்பிக் கொடுத்து விட்டார்.

'சகாத் பணத்தை' சேகரித்து அனுப்பாத செயலால் மாலிக் இஸ்லாமிய அரசுக்கு எதிரான குற்றவாளியாக கருதப் பட்டார்.

அவரது உண்மை நிலையை அறிய இஸ்லாமிய புதிய அரசு தீர்மானித்தது.

மாலிக் பின் நுவைராவை எதிர்கொள்ள காலித் பின் வலீதின் படையணி சுமார் நான்காயிரம் பேர்களுடன் 'நஜ்து' நோக்கி புறப்பட்டது.

செய்தி மாலிக்குக்கு கேள்விப் படுகிறது.

நான்காயிரம் படையினரை எதிர்கொள்ளும் நிலையில் அவரது கோத்திரம் இல்லை.

உடனே அவர் சகாத்தை தனது கோத்திரத்திடம் இருந்து மீண்டும் அவசர அவசரமாக வசூலிக்கிறார்.

அவருக்கு ,தானும் தனது கோத்திரத்தாரும் இஸ்லாமிய அரசுக்கு கட்டுப் பட்டவர்கள் என்கிற செய்தியை தெரிவிக்க  வேண்டிய அவசியம் இருந்தது.

உடனே,அந்தப் பணத்தை சில வீரர்களிடம் கொடுத்து, அதனை மதீனாவில் அரச பீடம் ஏறி இருக்கும் புதிய அரசிடம் ஒப்புவிக்கும் படி அனுப்பி வைத்தார்.

காலிதின் படையினரை எதிர் கொண்டால் அவர்களை எக்காரணம் கொண்டும் எதிர்க்க வேண்டாம் என்றும் வீட்டின் உள்ளேயே    இருக்குமாறும் தனது கோத்திரத்தினருக்கு அறிவுறுத்திய மாலிக், தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு உடனே பாலைவனத்தில் தலைமறைவாக ஓடிப் போனார்.

காலிதின் படையினர் அவரது பிரதேசத்துக்கு வந்த போது, எது வித எதிர்ப்பையும் காணாது திகைத்தது.

என்றாலும் வீரர் காலிதால் இதனை அனுமதிக்க முடிய வில்லை.

அவர் தனது படையினரை சுற்றிலும் தேடுதலுக்கு அனுப்பி வைத்தார்.

கலீபாவின் பரிசோதனை முறையை பரிசோதிக்க அதான் கூறப் பட்டது.

முதலாம் கலீபாவின் அறிவுக்கு ஒரு சபாஷ்.

அவரது அற்புதமான பரிசோதனை வெற்றி.

மக்கள் தொழுகைக்கு திரண்டார்கள்.எல்லோரும் முஸ்லிம்கள் தான்.

ஆனால், மாலிக் பின் நுவைரா வரவில்லை.

இதன் காரணமாக இஸ்லாத்தின் எதிரியாக அவர் காலித் பின் வலீதால் தீர்மானிக்கப் படுகிறார்.

இதே சமயம் தேடுதல் வேட்டைக்கு சென்ற அவரது படையினரின் ஒரு பிரிவினர் சகாத் பணத்துடன் சென்றுக் கொண்டிருந்த மாலிக்கின் வீரர்களை 'பத்தாஹ்' என்ற இடத்தில் கைது செய்து அழைத்து வந்தார்கள்.

இந்த செய்கையிலும் தளபதி காலித் பின் வலீத் திருப்தி காண வில்லை.

மாலிக் பின் நுவைராவின் குடும்பத்தினரை தேடும் வேட்டையை ஆரம்பிக்கிறார்.

வீரத்திலும், விருந்தோம்பலிலும், கவிதையிலும் ,தலமைத்தனத்திலும்   சிறந்து இருப்பது அப்போதைய அராபியாவின் தனித்தன்மைகளில் ஒன்று.

இந்த நான்கும் ஒருங்கே கொண்ட மாலிக் அவமே தன உயிரைப் பணயம் வைக்கப் போவது இல்லை.

அவரின் தலை மறைவை அவ்வளவு தூரம் பெரிது  படுத்த வேண்டும் என்கிற அவசியம் நிஜத்தில் அப்பொழுது அவசியப் படவில்லை.

ஆனாலும் காலித் பின் வலீத் அதில் தீவிர அக்கறை காட்டினார்.

அவரது அதீத அக்கறைக்கு காரணம் என்ன என்று மாலிக் கைது செய்யப் பட்டவுடன் புரிந்து போனது.

அவரது படையினரின் ஒரு பிரிவினர் மாலிக்கையும் அவரது குடும்பத்தவர்களையும் கைது செய்து காலித் பின் வலீத் முன்னிலையில் கொண்டு வந்தார்கள்.

மாலிக் பின் நுவைராவுடன் இருந்த சுமார் பதினேழு ஆண்கள் கைகள் பின்னால் கட்டப் பட்ட நிலையில் பள்ளி வாசலுக்குப் பக்கத்தில் பலத்த பாது காப்புடன் சிறை வைக்கப் பட்டார்கள்.


அன்று இரவு, குளிர்  நடு நிசியில் காலித் பின் வலீத் அந்த பதினேழு பேர்களையும் இஸ்லாத்தின் பெயரால் 'சிரச்சேதம்' செய்து படு கொலை செய்து விடுகிறார்.

அதன் பின்னர் 'கனீமத்' என்கிற இஸ்லாமிய அனுமதியில் மாலிக் பின் நுவைராவின் பேரழகு மனைவியை பலவந்தமாக 'அனுபவிக்கிறார்.'


பாவம் அந்த அபலைப் பெண்.

கணவனை இழந்த துக்கத்தை வெளியே வெளிக்காட்டக் கூட எந்த விதமான வழியும் தெரியாமல் அன்றைய இரவிலேயே பலாத்காரம் செய்யப் படுகிறார்.

காலித் பின் வலீதின் இந்த அசிங்கத்தை முடி மறைக்க நினைக்கும் நாம்,அவர் அந்த பெண்ணை அன்றிரவே திருமணம் முடித்தார் என்று நம்ப வைக்கப் படுகிறோம்.

இஸ்லாமிய சட்டவியலில், ஒரு பெண் கணவனை இழந்தால் நான்கு மாதங்கள் கட்டாயம் 'இத்தாவில்' இருக்க வேண்டும்.

இங்கே அந்த சட்டம் எல்லாம் இல்லை.

காலித் பின் வலீதின் இந்த கொடூரமான செய்கையினால் மதீனா ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டது.

ஒரு முஸ்லிமைக் கொலை செய்து அவரின் மனைவியை அபகரித்ததை அந்த முஸ்லிம்களினால் அனுமதிக்க முடிய வில்லை.

(ஏன்? உங்களால் ஜீரணிக்க முடிகிறதா??)

உமர் (ரலி) கோபத்தில் கொதித்து போனார்.

"அல்லாஹ்வின் எதிரியே?" காலித் பின் வலீதை கண்டதும் இவ்வாறு அலறிய   ஹசரத் உமர் (ரலி) "நீ ஒரு முஸ்லிமை அநியாயமாக  கொலை செய்து அவரது மனைவியை அபகரித்து இருக்கிறாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக ,உன்னை நான் கல்லால் அடித்து கொலை செய்வேன்" என்றார்.
(ஆதாரம்- தபாரி பாகம் இரண்டு பக்கம் 274)

அபூ கதாதா (ரலி)  காலிதின் இந்த இழி செயலை முதலாவது கலீபாவின்   கவனத்துக்கு கொண்டு வந்தார்.

முதலாம் கலீபா காலிதிடம் இதற்கு விளக்கம் கேட்டார்.

"எனது அனுமதி இல்லாமல் எனது படையினர் இந்த கொலைகளை செய்திருக்கிறார்கள். இதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது"  என்று இஸ்லாமிய சேனைகளின் தளபதி அப்பாவித்தனமாக விளக்கம் சொன்னார்.

முதலாவது கலீபா அபூபக்கர் காலிதின் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு காலிதின் செய்கைக்கு அனுமதி அளித்தார்.
(ஆதாரம் 'தா கிரேட் அராப் கொன்குவேஸ்ட்'. 1963    பக்கம் 112  )
(தபாரி பாகம் இரண்டு பக்கம் 5 )

இமாம் அலியின் தலைமைத்துவத்தை நிராகரித்து அபூபக்கரின் தலைமைத்துவத்தை முஸ்லிம் உம்மாவின் மேல் திணித்ததன் விளைவுகளில் இதுவும் ஒன்று.

அன்று மாலிக் பின் நுவைராவைக் கொலை செய்து அவரது மனைவியை அபகரித்து இஸ்லாமிய தளபதியினால் ஆரம்பித்து வைக்கப் பட்ட 'சுன்னா' இன்று மத்திய கிழக்கில் அச்சொட்டாக பின் பற்றப் படுகிறது.


இஸ்லாமிய தலைமைத்துவம் சரியான முறையில் இனம் காணும் வரையில் அல்லது புனருத்தாபனம்  செய்யப் படும் வரையில் சஹாபாக்களின் இந்த 'சுன்னாக்கள்' எங்களது முஸ்லிம் வீரர்களினால் பின்பற்றப் படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

சரியான இஸ்லாமிய தலைமைத்துவம் வரும் வரையில் எங்களது காலித் பின் வலீத்களின் காட்டில் 'பெண் மழைதான்'


5 comments:

irukkam said...

நெஞ்சு குமுறுகிறது நண்பர்களே! எத்தகைய இழிசெயல்கள், எத்தகைய கொடூரங்கள, அதுவும் இஸ்லாத்தின் பெயரால். இத்தனைக்குப் பிறகும், 'ஸஹாபாக்கள் வானில் மின்னும் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் வழிதவற மாட்டீர்கள்' என்ற ஹதீஸ், எம்மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலம்! உண்மைதான், இத்தகைய ஸஹாபாக்களின் சுன்னாக்களைப் பின்பற்றினால் அபூபக்கர், உமர், காலித் பின் வலீத் ஆகியோர் பெற்ற நேர்வழியிலிருந்து யாரும் பிறழ முடியாதுதான்.

வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ள இத்தகைய உண்மைகளை வெளிக்கொணர்ந்து வருகின்ற உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அபூபக்கர், உமர் வரிசையில் அடுத்ததாகத் தோன்றிய மகான் உஸ்மானுடைய 'நல்லாட்சி' பற்றிய உண்மைகளையும் தோலுரியுங்களேன்.

அஹ்லுல்பைத் said...

சகோதரர் ஹாபிசின் நெஞ்சின் வேதனை நன்கு புரிகிறது.

இஸ்லாத்தின் எதிரிகளை இஸ்லாத்தின் கதாநாயகர்களாகக் காட்டியதன் விளைவே எங்களது தடுமாற்றத்திற்குக் காரணம்.

இன்ஷா அல்லாஹ் - அஹ்ளுல்பைத்களின் எதிரிகள் அனைவர்களினதும் சுய ரூபத்தைக் கட்டம் கட்டமாக வெளிக் கொணர்ந்துக் கொண்டு இருக்கிறோம்.

உங்கள் மனத்தின் நெருடல் புரிகிறது.

அஹ்லுல் பைத் ஆதரவாளர்களை நிம்மதிப் பெரு மூச்சு வைக்க உதவும் ஆக்கங்களை வெகு விரைவில் - சரியான தருணத்தில் பதிவிளிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களது பின்னூட்டத்திற்கு எங்களது நன்றிகள்.

Dr.Anburaj said...

It is mohammed who is responsible for this savage behaviour. Mohammed marriage with sofia is equal to this incident. It is HE who taught " You have nothing to hide with your wife and war captive women. Mohammed is the Presidence for all the evils in the world.

Dr.Anburaj said...

The article could not be get printed.Please publish articles in facous popular fonts such as Bamini,Tharmini etc

Dr.Anburaj said...

இஸ்லாமிய தலைமைத்துவம் சரியான முறையில் இனம் காணும் வரையில் அல்லது புனருத்தாபனம் செய்யப் படும் வரையில் சஹாபாக்களின் இந்த 'சுன்னாக்கள்' எங்களது முஸ்லிம் வீரர்களினால் பின்பற்றப் படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

சரியான இஸ்லாமிய தலைமைத்துவம் வரும் வரையில் எங்களது காலித் பின் வலீத்களின் காட்டில் 'பெண் மழைதான்'
The same did happen to Bengali speaking Muslims and Hindus women. Bangaladesh Muslim and Hindu women were brutally raped as per Koranic and Arab History. Koran should be edited or declared out of date.Else nobody can put a halt to such inhuman treatment to our sisters.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad