அத்தியாயம் ஒன்று......1
அன்னை ஆயிஷா (ரலி) .......?????மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!
என்னுடைய இந்து நண்பர் ஒருவர் ஒரு முறை என்னிடம் இப்படிக் கேட்டார்."நீங்கள் உங்களது ஏழு வயதுக் குழந்தையை ஐம்பத்து மூன்று வயது நபருக்கு திருமணம் செய்துக் கொடுப்பீர்களா?"
இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக ஆழமாக ஆய்வு செய்யும் நண்பரின் அறிவுத்திறமையை அறிந்திருந்த நான் மௌனமாக இருந்தேன்.
அவர் தொடர்ந்தார் "நீங்கள் அப்படி செய்யப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும் .........இந்நிலையில் அப்பாவி ஏழு வயது குழந்தை ஆயிஷாவை உங்களது நபி திருமணம் செய்ததை எவ்வாறு அனுமதித்து ஏற்றுக் கொள்கிறீர்கள்?"
அதற்கு நான் அவரிடம் "உங்களது கேள்விக்கான பதில் இப்பொழுது என்னிடம் இல்லை." என்றேன்.
அவர் முறுவலித்தார்.
எங்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த எங்களது இன்னுமொரு முஸ்லிம் நண்பர் அவசர அவசரமாக "ஒரு சமூகம் தனது சமூக சட்டமாக கருதி அனுமதித்து இருக்கின்ற ஒரு சட்டத்தை நாம் விமர்சிக்கத் தேவை இல்லை.இந்தியாவில் திருமண வயதெல்லை பதினாறாக இருக்கும் அதே சமயம் இந்தோனேசியாவில் அந்த வயதெல்லை பதினெட்டாக இருக்கிறது.ஒரு நாட்டுக்கு சட்டமாக அனுமதிக்கப் படுகின்ற திருமண வயதெல்லை இன்னுமொரு நாட்டின் சட்ட விரோதமான செயலாக கணிக்கப் படுகிறது. சிறு பெண் குழந்தைகளைத் திருமணம் செய்வதை அராபியக் கலாசாரம் அனுமதித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.அதனால்தான் இப்பொழுதுகூட அநேக அராபிய நாடுகளில் சிறு பெண் குழந்தையைத் திருமணம் செய்கின்ற கலாச்சாரம் வழக்கில் இருக்கிறது.அது அந்நாட்டின் கலாசாரம்.அதனால்தான் இந்தத் திருமணத்திற்கு அராபிய மக்கள் எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை .." என்றார்.
எதையும் கண்மூடித்தனமாக விசுவாசித்து தம்மை தம்மையறியாமல் ஏமாற்றி மற்றவர்களை ஏமாற்ற நினைக்கின்ற சிலரது இத்தகைய கருத்துக்கள் இக்காலத்துக்கு ஒவ்வாதது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
முஸ்லிம் நண்பரது பதிலைக் கேட்ட என்னுடைய இந்து நண்பர் முகத்திலிருந்த முறுவல் மாறாது "அப்படியென்றால் உங்களது இஸ்லாம் மார்க்கம் அக்காலத்துக்கும் ,அராபிய கலாசாரங்களை அனுமதித்து ஏற்றுக் கொள்ளும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மக்களைக் கொண்டிருக்கும் தேசங்களுக்கு மட்டும் பொருத்தமானது என்று நாம் கருதும் கருத்தில் தவறில்லையே.......?" என்று சொல்லி விட்டு தொடர்ந்து "முஸ்லிம்கள் கூறுவது போல இஸ்லாம் மதம் உலகத்துக்குக்கான பொது மதம் என்ற கூற்று தவறானது என்ற கருத்தை உங்களது பதில் தருகிறது!...இல்லையா?" என்றார்.
நமது நண்பர் மௌனமானார்.
நமது இந்து நண்பர் தொடர்ந்து "சில தினங்களுக்கு முன்னர் உஸ்தாத் மன்சூர் அவர்களின் முக நூலில் நான் ஆயிஷாவின் திருமண விடயம் சம்பந்தமாக அவர் கூறியிருந்த விளக்கத்தை கவனித்தேன்.அதில் அவர் "ஆயிஷாவினதும் முஹம்மது நபியினதும் திருமணம் நடந்தேறும் பொழுது ஆயிஷாவின் வயது ஆறு முஹம்மது நபியின் வயது ஐம்பத்து மூன்று.இந்தத் திருமணக் கதை ஆதாரபூர்வமானது.அதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று கூறி விட்டு சிரிப்புடன் "அதன் பின்னர் அவர் குறிப்பிடும் கூற்றுக்கள் அவரது ஆதார பூர்வ உறுதிப்பாட்டை தகர்த்து விடுகிறது."என்றார்.
நண்பர் குறிப்பிட்ட உஸ்தாத் மன்சூர் இலங்கை ஜாமியா நளீமியாவின் முன்னாள் விரிவுரையாளர்.இலங்கையில் இருக்கும் பிரபலமான விரல் விட்டு எண்ணக் கூடிய இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர்.
உடனே நான் "அவர் அப்படி என்னதான் சொன்னார்?" என்றுக் கேட்டேன்.
நண்பர் தனது கையில் இருந்த சம்சுன் கலக்ஷி போனில் உஸ்தாத் மன்சூரின் முக நூலை திறந்தார். அதில் கேள்வி பதில் பகுதியில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண வயது சம்பந்தமான கூற்று கேள்வியாக கேட்கப் பட்டு அதற்கு உஸ்தாத் மன்சூர் சொன்ன விளக்கம் பதிலாக இப்படி பதிவேற்றப் பட்டிருந்தது.
//இறை தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) யை அவருக்கு 6 வயதாக இருக்கும் போது திருமணம் முடித்தார்கள் என்பது ஆதாரபூர்வமான ரிவாயத்தே.
எனினும்,இது பற்றி மேற்கத்திய ஆய்வாளர்கள் பெண்ணுரிமை மறுப்பு என குறை கூறுவர்.அப்பின்னணியில் இஸ்லாமிய ஆய்வாளர்கள் பல பதில்களைக் கூறுவர்.
அதற்கு நான் "இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இறைவனை நிராகரிப்பவர்கள்தான் காபிர்கள்......."என்று கூறி விட்டு முஸ்லிம்கள் விசுவாசிக்கின்ற இறைவனின் உள்ளமைகளை அவருக்கு விபரித்திருந்தேன்.
முஸ்லிம்கள் விசுவாசிக்கின்ற இறைவனை அராபியர்களின் இறைவனாக தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்ட அந்த இந்து நண்பர் என்னுடனான தன்னுடைய தொடர்பைத் துண்டித்துக் கொண்டு என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிலில் இப்படிக் குமுறிக் கொட்டினார்...........
ஏகனான அல்லாஹ்வை .......இறைவனை முழுமையாக நிராகரிப்பவனை இஸ்லாம் "காபிர்" என்று கூறுகிறது.
நாத்திகன்தான் காபீரா ? இல்லையென்கின்றது தங்கள் கட்டுரை.அரேபியன் வகுத்தபடி அரேபிய கடவுளை -அரேபிய போதனையை ஏற்காதவன் அனைவரும் காபீர்தான் என்பது தங்களின் முடிவு. அரேபிய அடிமைகள் பிறறை கலாச்சார மக்களை காபீர்கள் என்று இழிவு செய்யும் சாதித்தீமிர் தங்களையும் ஆட்டி வைக்கின்றது.
2. //இறைவனை அல்லது கடவுளை ஏற்றுக் கொண்டேன் என்று தன்னை அழைத்துக் கொள்கின்ற இணைய நண்பர் அன்புராஜ் போன்ற ஒருவர் அல் குர்ஆன் குறிப்பிடுகின்ற தன்மைகள் இருக்கின்ற அல்லாஹ்வை தனது கடவுளாக அல்லது இறைவனாக ஏற்றுக் கொண்டிருந்தால் அவர் முஸ்லிமாக,கிறிஸ்தவராகஅல்லது யூதராக இல்லாத நிலையிலும் இஸ்லாம் அவரை "காபிர்" என்று அழைப்பதில்லை.//
உங்களது இந்தப் பதிலின் மூலம் அன்புராஜ் தாங்களும் காபீர்தான் என்று ஏற்கனவே சொன்னதுபோல் தெளிவாகச் சொல்லிவிட்டிர்கள்.
அரேபிய மதம் எவ்வளவு பயங்கரமானது என்பதை தாங்கள் எடுத்துக்காட்டிவிட்டீர்கள். ஏற்கனவே தெரிந்ததுதான். பாக்கிஸ்தானில் பங்களாதேஷ்யில் இந்து காபீர்களுக்கு வரலாற்றில் குர்ஆன் படித்தவர்கள் செய்த கொடுமை-பெரும்பான்மை பெற்றதனால் ஏற்பட்ட பலம் - இந்தியாவில் தொடர விடமாட்டோம்.அதுதான் ஏற்கனவே நாங்கள் செய்துள்ள சங்கல்பம். இந்துக்களை காபீர் என்பவன்தான் காட்டுமிராண்டிகள்.காடையர்கள்.சோறுதின்று வளராத அடிமுட்டாள்கள். 6 வயது சிறுமியை திருமணம் செய்த 9 வயதில் அச்சிறுமியோடு ........ அரேபியனை வழிகாட்டியாக கொண்ட தங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். எனது வலைதளத்திற்கு தங்களது கட்டுரைகளை இனிமேல் அனுப்பவேண்டாம். பாம்புகள் என்றும் பாம்புகள்தாம்.//
அவரது உள்ளக் குமுறல் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மனிதர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துக் காட்டிய ஒரு மகான்.
அவரது அனைத்து செயல்களும் தூய்மையானவை.
அதன் காரணமாகவே முஸ்லிம்கள் அவரை அணு அணுவாக பின்பற்ற துடிக்கிறார்கள். பின் துயர்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால்,அவர் சம்பந்தமாக என்னுடைய இந்து நண்பரின் கணிப்பு எவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கிறது?
....... 6 வயது சிறுமியை திருமணம் செய்த 9 வயதில் அச்சிறுமியோடு ........ அரேபியனை வழிகாட்டியாக கொண்ட தங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
நானறிந்த அந்த மகான் உயிருடன் புதைக்கப் படும் பெண் சிசுக்களைப் புதை குழியின் விளிம்பில் இருந்து மீட்டு அந்த சிசுக்களின் மீட்சிக்கு களம் அமைத்த உன்னத புருஷர்.(1)
விதவைகள் துர்சகுனமாக கணிக்கப் பட்டு வாழ்வதற்கு எவ்விதமான தகுதிகளும் அற்றவர்கள் என்று கணிக்கப் பட்டு ஒதுக்கி வைக்கப் பட்ட அராபிய கலாசார வழக்கத்தை மாற்றியமைத்து விதவைகளுக்குரிய வாழ்வுரிமையைப் பெற்றுக் கொள்ளும் வரலாறு படைத்தவர்.
வெறும் பண்டங்களாக கருதப் பட்டு வாரிசுரிமை மறுக்கப் பட்ட பெண்களுக்கு வாரிசுரிமையை,சொத்துரிமையை பிரகடனப் படுத்திய புரட்சி வீரர்.(2)
எப்பொழுதும் மறுக்கப் பட்ட பெண்ணுரிமையை மானுடத்துக்கு நிர்ணயித்து பெண்களுக்கு புது வாழ்வை மீளளித்தவர்.(3)
ஆசை நாயகிகளாக சுகம் அனுபவிக்க மட்டும் உபயோகப் படுத்தப் பட்ட அடிமைப் பெண்களுக்கு மனைவி அந்தஸ்த்தை வழங்கும் சட்டம் வகுத்தவர்.(4)
இவ்வாறான புரட்சிகரமான செயல்களை ஒரு மதத்தின் சட்டமாக்கி வகுத்துத் தந்த அந்தத் தலைவரே என்னுடைய இந்து நண்பர்கள் குறிப்பிட்டது போல அல்லது உலகத்தில் அநேகர் நினைப்பது போல இந்த சட்டங்களை தவிடு பொடியாக்குகின்ற விளைவுகளுக்கு காரணமாக இருக்கின்ற செயல்களின் நாயகனாக எவ்விடத்தில் தடம் பிறழ்ந்து போனார்?
திருமணத்திற்கு முன்னர் அப் பெண்ணுடைய அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் செயப் படும் திருமணம் இஸ்லாமிய சரி ஆ சட்டத்திற்கு முரணானது (5) என்று தீர்ப்பளித்த நாயகரே அந்தத் தீர்ப்பை அலட்சியப் படுத்தி ஒரு குழந்தையை கட்டாயத் திருமணம் செய்யும் கொடுமையை செயலில் காட்டிப் போனாரா?
எனது மதிப்பிக்குரிய விமோசகர் பெண்ணுரிமையை பறிக்கின்ற வில்லனாக மறு அவதாரம் எடுத்ததாக கூறப் படுகின்ற கதைகள் எந்தளவு நிஜமானது?
கோடிக் கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் மகோன்னதமான இடத்தைப் பெற்று கௌரவத்துடன் மதிக்கப் படுகின்ற இந்த புரட்சிகர நாயகரினால் ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாழ்வு சீரழிக்கப் பட்டதா?
அகிலங்களின் இரட்சகன் அல்லாஹுதாலாவினால் அல் குர் ஆனின் முதல் வஹி "படிப்பீராக....!"என்ற அறிவுரையுடன் அருளப்படுகிறது.(6)
"அறிவு ஒவ்வொரு ஆணினதும்,பெண்ணினதும் தவறிப் போன சொத்தாகும்.அதனை அவர்கள் கண்ட இடத்தில் பெற்றுக் கொள்ளவும்............சீனா தேசம் சென்றாகிலும் அறிவைத் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள்......என்றெல்லாம் அறிவின் முக்கியத்துவத்தை நமக்குப் போதித்த என்னுடைய நாயகர் கல்வி கற்கவேண்டிய ஒரு சிறு மழலையின் மழலைப் பருவத்தை சீரழித்து துரோகம் செய்து விட்டாரா?
என்னால் நம்ப முடிய வில்லை.
எதனை?
என்னுடைய இலட்சிய நாயகரின் செயல்களையா?
இல்லை...இல்லை...அவர் சம்பந்தமாக அவருக்கு எதிராக கூறப் படுகின்ற கதைகளை என்னால் நம்ப முடியவில்லை.
ஏன் தெரியுமா?
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் எகிப்தில் 1923 ஆம் ஆண்டுகளில் வகுக்கப் பட்டு அரசாண்டுக் கொண்டிருந்த எகிப்திய திருமண சட்டம் வகுத்திருக்கும் நியதிகளில் மணமகளின் வயதெல்லை பதினாறு என்றும் மணமகனின் வயதெல்லை பதினெட்டு என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
அதன் பின்னர் 1931 ஆம் ஆண்டில் அதாவது எட்டு வருடத்துக்குப் பிறகு எகிப்தின் இஸ்லாமிய சரிஆ சட்ட செயலாக்கள் நிறுவனம் அந்த சட்ட நிர்ணயத்தை மீள் பரிசீலனை செய்து மணமகளின் வயது பதினாறுக்கு குறைவாகவும் மணமகனின் வயது பதினெட்டுக்குக் குறைவாகவும் இருப்பின் அவர்களது விவாகரத்து விடயத்தை விசாரணைக்கு எடுக்கக் கூடாதென்று அரச நீதித்துறைக்கு பரிந்துரை செய்தது.
ஆனால்,உஸ்தாத் மன்சூர் குறிப்பிட்டஅறிஞர்களின் ஆளுமையில் இருந்து இரானுவ சதி மூலம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட இப்போதைய இக்வானுல் முஸ்லிமீன்களின் செல்வாக்கில் இருந்த எகிப்தின் நிலைமை துரதிஷ்டவசமானது.
அப்பொழுது எகிப்தை அரசாண்ட இஹ்வானிய இஸ்லாமிய அரசு திருமணத்திற்கான பெண்களின் வயதெல்லையை பதின்மூன்றாக குறைத்தது.
அரசின் இந்த முடிவும் இஹ்வானிய இஸ்லாமிய அரசின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துப் போனது வரலாறு.
இஹ்வானிய அரசின் இந்த முடிவு எகிப்து பெண்களை வீதிக்கு இறக்குவதற்கு காரணமாக அமைந்துப் போனது.
எனினும்,பெண்களுக்கான திருமண வயதெல்லை பதின்ஆறு என்ற எகிப்தின் பழைய சட்டத்தை அறிந்தவுடன் என் மனத்தில் எந்த விதமான இஸ்லாமிய அடிப்படை ஆதாரத் துணைகளின் தேவைகளின்றி ஏழு வயதுக் குழந்தை ஆயிஷா (ரலி) அவர்களினதும் ஐம்பது வயது முஹம்மத் சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களினதும் பால்யத் திருமணக் கதை சம்பந்தமான நம்பிக்கை பிசு பிசுத்துப் போனது.
என்னுடைய நபி உத்தமர்.அவர் அப்பாவி ஏழு வயது சிறு குழந்தையை ஒரு போதும் திருமணம் செய்யும் செய்கையை செய்யவில்லை.
அவர் சம்பந்தமாக அறிவிக்கப் படுகின்ற இவ்வாறான அனைத்து ஹதீஸ்களும் ஆதாரங்கள் அற்றவையாக இருக்க வேண்டும்.
என்னுடைய இந்து நண்பர்களைப் போன்று பலர் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சம்பந்தமாக சொல்லப் பட்டுக் கொண்டிருக்கின்ற இத்தகைய தவறான செய்திகளினால் கொஞ்சம் குழம்பிப் போயிருப்பார்கள்.
என்னுடைய முஸ்லிம் சகோதரர்கள் இவ்வாறான தவறான செய்திகளின் நம்பகத் தன்மையை துகிலுரிக்கும் விதத்தை அறியாமல் மௌனித்து போவார்கள்.
இதற்கு என்ன தீர்வு?
முஸ்லிம்கள் அனைவரும் புனித அல் குர்ஆனை தமது வாழ்வியல் வழிக்காட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, நாம் முதலில் புனித அல் குர்ஆனின் போதனையின் பிரகாரம் இந்த கதையின் வலுவிழக்கும் பரிதாபத் தளங்களைத் தேடத் துவங்கினேன்.
அந்தத் தேடல்கள் தேடித் தந்த உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமாக அல்லது சிறுவர்களின் உரிமைக்கு சாவு மணியடிக்கின்ற சிறுவர் துஷ் பிரயோகம் சம்பந்தமாக இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?
முதலில் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றிணைந்து ஏற்று கொண்டிருக்கின்ற சிறுவர்களுக்கான உரிமைகள் என்றால் என்னவென்ற ஆய்வில் பளீரிட்ட விடயங்களைக் கவனிப்போம்.
*ஒரு சிறுவர் தனது பருவ வயதை அடையும் வரை அவரது பாதுகாவலரினால் கட்டாயமாக கனிவான முறையில் நடாத்தப் படவேண்டும்.
*அவருடைய பாதுகாவலர்கள் அவருடன் கனிவான முறையில் பேச வேண்டும்.
*அவரின் பொருப்புதாரிகளினால் அவருக்குரிய உணவுகள் சரியான வேளைகளில் வழங்கப் பட வேண்டும்.
*அவருக்குரிய உடைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை அவருக்கு வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
*அவரது பாதுகாவலர்கள் கல்வி கற்கின்ற உரிமையை அவருக்கு கொடுக்க வேண்டும்.
*அவருக்கு உறங்குவதற்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுக்கப் படல் வேண்டும்.
*அவர் சுகவீனமுற்றால் அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்துக் கொடுக்கப் பட வேண்டும்.
*சிறுவர்கள் கண்ணியமான முறையில் நடாத்தப் பட வேண்டும்.
*தப்பு செய்ததற்காக அவர்களை கடுமையாக தண்டிக்கவோ,கண்டிக்கவோ முடியாது.அத்தகைய தப்புகளுக்கான காரணத்தை கண்டு பிடித்து தீர்வை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
*சிறுவர்களைப் பாலியல் வல்லுறவுகளுக்கு எக்காரணம் கொண்டும் உபயோகிக்க முடியாது.
நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று அந்த சிறுவருக்கு அல்லது சிறுமிக்கு மறுக்கப் பட்டால் மறுக்கப் படுகின்ற அந்த செய்கை சிறுவர் துஸ்பிரயோக சட்டத்துக்குள் தண்டனையை வேண்டி நிற்கும் தவறாக அமைந்துப் போகும்.
சிறுவர்களினதும் பெண்களினதும் வயோதிகர்களினதும் பாதுகாப்புக்கான உத்திரவாதம் இஸ்லாத்தில் இருக்கிறது என்பது முஸ்லிம்களின் வாதம்.
அந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ,சிறுவர்களின் உரிமை சம்பந்தமாக அல் குர்ஆன் என்ன சொல்கிறது?
பின்வரும் அல் குர் ஆன் வசனங்களைக் உங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
"(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்;. ஆடையும் அளியுங்கள்;. இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்." -(அல் குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 5)
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.(அல் குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 6)
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.(அல் குர்ஆன் அத்தியாயம் 6: வசனம்152)
புனித அல் குர்ஆனின் இத் திரு வசனங்கள் அநாதைகளின் உரிமைகள் சம்பந்தமாகப் பேசுகிறது.
அநாதை என்ற வார்த்தைப் பிரயோகம் இஸ்லாமிய கருத்தியலில் ஆழமான பல உட்கருத்துக்களைக் கொண்டிருக்கிறது.
தாய் தந்தையரை இழந்தக் குழந்தை ஒரு அநாதை.
தாய் தந்தையர் இருந்தும் அவர்களது அன்புக் கிடைக்காத குழந்தை பெற்றோரின் அன்பு இல்லாத விடயத்தில் அநாதை.
பெற்றோர் இருந்தும் அவர்களது அன்பு கிடைத்தும் அவர்களை நேசிக்காத உறவினர்கள் இருந்தால் அந்தக் குழந்தையும் அதன் பெற்றோரும் அன்பில்லாத அவர்களது உறவினர் விடயத்தில் அநாதை.
அந்தக் குழந்தைக்கு அன்பான பெற்றோர்,உறவினர்கள் இருக்கிறார்கள்.ஆனால்,சமூகம் அந்த குடும்பத்தை அரவணைத்து ஏற்றுக் கொள்ளாத நிலைமை என்றிருந்தால் சமூகம் என்ற பாதுகாப்பு அரண் இல்லாத அநாதைகளாக அந்தக் குடும்பம் இருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால்,ஒரு குழந்தையின் அல்லது மனிதனின் தேவைகளில் எந்தெந்தத் தேவைகள் அக் குழந்தையின் வளர்ச்சியின் பொழுது அல்லது அந்த மனிதனின் தேவைகளின் பொழுது மறுக்கப் பட்டிருக்கின்றதோ அத்தகையத் தேவைகள் நிவர்த்தி செய்யப் படும் வரையில் அந்தத் தேவைகளில் அக் குழந்தை அல்லது அந்த மனிதன் ஒரு அநாதையின் நிலையில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கணிக்கப் படும் சூழல் உருவாகிறது.
இஸ்லாத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு மேய்ப்பாளனாக கருதப் படுகின்றான்.
அவனது பொறுப்பில் இருக்கின்ற அனைவரும் அந்த பொறுப்பு சார்ந்த விடயம் தொடர்பில் அநாதைகள்தான்.
அவன் அவனது பொறுப்பில் விடப் பட்டிருக்கின்ற அனைத்துக் காரியங்களுக்கும்,அவனது பொறுப்பில் இருக்கின்ற அனைவரினதும் உரிமைகளுக்கு அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
இனி,ஒரு பரம ஏழை சிறுவர் ஒருவர் துரதிர்ஷ்ட வசமாக தனது தேவைகளில் ஒரு அநாதையின் நிலையில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இஸ்லாத்தில்அவரின் நிலை என்ன?
இஸ்லாத்தின் அடிப்படை ஆதார நூலான அல் குர்ஆன் போதனையின் பிரகாரம் அந்த அநாதைச்சிறுவருக்கு அதன் பாதுகாவலர் உணவளிக்க வேண்டும்.
நல்ல ஆடையும் அணிவித்துக் காக்க வேண்டும்.
அவர்களுடன் கனிவான வார்த்தைகளைப் பேசவும் வேண்டும்.
அவர்களது திருமண வயதுவரை அவர்களைப் பேணிப் பாதுகாக்கவும் வேண்டும்.
அவர்கள் அறிவை பெற்றுக் கொள்ளும் விதத்தில் அறிவூட்டவும் வேண்டும்.
அந்த ஏழை அநாதை சிறுவரின் பாதுகாவலர் தனது கடமையை செய்யத் தவறும் நிலையில் அக் குழந்தை இழக்கின்ற கடமைகள் யாருடையப் பொறுப்பில் விடப்பட்டிருக்கின்றது என்ற ஆய்வில் அப் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாக பரிணாமம் பெறுகிறது.
ஆகவே,அந்த அநாதையின் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாக கடமையாகிறது.
ஒரு குழந்தை ஆறு அல்லது ஏழு வயதினுள் இவ்வுலகில் தனது வாழ்வை சுதந்திரமாக தீர்மானிக்கும் முழுமையான அறிவைப் பெற்றுக் கொள்வது எவ்விதத்திலும் சாத்தியம் இல்லை.
அந்த நிலையில் யாரைப் பாதுகாவலராகக் கொண்டிருந்தாலும் அறிவு சம்பந்தமான விடயத்தில் அக் குழந்தை ஒரு அநாதை.
ஆகவே,உலகத்தில் பிறக்கின்ற அனைத்துக் குழந்தைகளும் அறிவைப் பெற்றுக் கொள்கின்ற விடயத்தில் பிறக்கும் பொழுதே அநாதைகளாக பிறக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களுக்குரிய அறிவை பெற்றுக் கொள்கின்ற வசதியை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அந்தக் குழந்தையின் பாதுகாவலரின் பொறுப்பாகிறது.
அவர் அதனை செய்யத் தவறுகின்ற நிலையில் அந்தப் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாக மாறி விடுகிறது.
ஆறு வயது அல்லது ஏழு வயது நிரம்பிய ஒரு குழந்தை பருவ வயதை அடைந்த ஒருவர் பெற்றிருக்கும் அறிவை,விவேகத்தை ,நுணுக்கத்தை பெற இயலாது.
இந் நிலையில் ஒருவர் பருவமடையாத -நன்மைத் தீமைகளைப் பிரித்துணரும் பக்குவம் புரியாத ஒரு குழந்தையைத் திருமணம் புரிவது அல்லது அதற்குத் துணை நிற்பது-நமது பாஷையில் சொன்னால் மாமா வேலை செய்வது இஸ்லாத்தின் பார்வையிலும்,அல் குர்ஆனின் போதனைக்கும் முரணானது.
தவிர, பருவமடையாக் குழந்தைகளை திருமணம் செய்வதற்கு புனித அல் குர்ஆனில் கிஞ்சித்தும் அனுமதி இல்லை.
திருமணம் முடிப்பதென்ன? அவர்களுக்கு சில வேளைகளில் சுதந்திரமாக தங்களது பெற்றோர், பாதுகாவலர் முன்னிலையில் வருவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
வயதுக்கு மூத்தவர்கள் சுதந்திரமாக ஓய்வு கொள்ளும் தருணங்களில் அவர்கள் சொந்த பெற்றோர்களாக இருந்தாலும் அவர்களது அனுமதியைப் பெறுமாறு ......அவ்வாறு அவர்களை பழக்குமாறு அற்புதமான ஒழுக்க விழுமியத்தை அல் குர் ஆன் நமக்குப் போதிக்கிறது.
இந்தப் புனித அல் குர் ஆனின் வசனத்தைக் கவனியுங்கள்...
"ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை )களும், உங்களிலுள்ள பருவமடையாச் சிறுவர்களும்,(உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதிக் கோர வேண்டும்.பஜ்ரு தொழுகைக்கு முன்னரும்,நீங்கள் மேல் மிச்சமான உங்கள் மேலாடைகளைக் கலைந்திருக்கும் லுஹர் நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும் - ஆக இம் மூன்று நேரங்களும் உங்களுக்காக அமையப் பெற்றுள்ள மூன்று அந்தரங்க வேளைகளாகும்.............." 24 : 58
அல் குர் ஆன் பருவமடையாச் சிறுவர்களை...வீட்டினுள் சுதந்திரமாக சுற்றி வருகின்ற அடிமைகளை அவர்களது சுதந்திரத்துக்கு கடிவாளமிட்டு கட்டுப் படுத்தும் இந்தத் தருணங்கள் மனிதர்கள் அந்தரங்கமாக......சுதந்திரமாக இருக்கும் தருணங்கள்என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.
மனிதர்களது அந்தரங்கத் தருணங்களில் அவர்களிடையே சுதந்திரமாக வருவதற்கே பருவமடையாச் சிறுவர்களுக்கு,வீட்டினுள் இருக்கும் அடிமைகளுக்கு தடை விதிக்கும் போதனையைப் போதிக்கின்ற புனித மார்க்கத்தில் அத்தகைய தடைக்கு தகுதியான சிறுவர்களை மணந்துக் கொள்ளும் அனுமதியை யார் கொடுத்தார்கள்?
இனி புனித அல் குர்ஆனின் அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்...
"இன்னும் உங்களுடையக் குழந்தை பிராயம் அடைந்து விட்டால் அவர்களும் தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதிக் கேட்பது போலவே அனுமதிக் கேட்க வேண்டும்.இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்;அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன்:ஞானம் மிக்கவன்." 24 : 59
அன்னை ஆயிஷா (ரலி) .......?????மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.......!!!
என்னுடைய இந்து நண்பர் ஒருவர் ஒரு முறை என்னிடம் இப்படிக் கேட்டார்."நீங்கள் உங்களது ஏழு வயதுக் குழந்தையை ஐம்பத்து மூன்று வயது நபருக்கு திருமணம் செய்துக் கொடுப்பீர்களா?"
இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக ஆழமாக ஆய்வு செய்யும் நண்பரின் அறிவுத்திறமையை அறிந்திருந்த நான் மௌனமாக இருந்தேன்.
அவர் தொடர்ந்தார் "நீங்கள் அப்படி செய்யப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும் .........இந்நிலையில் அப்பாவி ஏழு வயது குழந்தை ஆயிஷாவை உங்களது நபி திருமணம் செய்ததை எவ்வாறு அனுமதித்து ஏற்றுக் கொள்கிறீர்கள்?"
அதற்கு நான் அவரிடம் "உங்களது கேள்விக்கான பதில் இப்பொழுது என்னிடம் இல்லை." என்றேன்.
அவர் முறுவலித்தார்.
எங்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த எங்களது இன்னுமொரு முஸ்லிம் நண்பர் அவசர அவசரமாக "ஒரு சமூகம் தனது சமூக சட்டமாக கருதி அனுமதித்து இருக்கின்ற ஒரு சட்டத்தை நாம் விமர்சிக்கத் தேவை இல்லை.இந்தியாவில் திருமண வயதெல்லை பதினாறாக இருக்கும் அதே சமயம் இந்தோனேசியாவில் அந்த வயதெல்லை பதினெட்டாக இருக்கிறது.ஒரு நாட்டுக்கு சட்டமாக அனுமதிக்கப் படுகின்ற திருமண வயதெல்லை இன்னுமொரு நாட்டின் சட்ட விரோதமான செயலாக கணிக்கப் படுகிறது. சிறு பெண் குழந்தைகளைத் திருமணம் செய்வதை அராபியக் கலாசாரம் அனுமதித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.அதனால்தான் இப்பொழுதுகூட அநேக அராபிய நாடுகளில் சிறு பெண் குழந்தையைத் திருமணம் செய்கின்ற கலாச்சாரம் வழக்கில் இருக்கிறது.அது அந்நாட்டின் கலாசாரம்.அதனால்தான் இந்தத் திருமணத்திற்கு அராபிய மக்கள் எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை .." என்றார்.
எதையும் கண்மூடித்தனமாக விசுவாசித்து தம்மை தம்மையறியாமல் ஏமாற்றி மற்றவர்களை ஏமாற்ற நினைக்கின்ற சிலரது இத்தகைய கருத்துக்கள் இக்காலத்துக்கு ஒவ்வாதது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
முஸ்லிம் நண்பரது பதிலைக் கேட்ட என்னுடைய இந்து நண்பர் முகத்திலிருந்த முறுவல் மாறாது "அப்படியென்றால் உங்களது இஸ்லாம் மார்க்கம் அக்காலத்துக்கும் ,அராபிய கலாசாரங்களை அனுமதித்து ஏற்றுக் கொள்ளும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மக்களைக் கொண்டிருக்கும் தேசங்களுக்கு மட்டும் பொருத்தமானது என்று நாம் கருதும் கருத்தில் தவறில்லையே.......?" என்று சொல்லி விட்டு தொடர்ந்து "முஸ்லிம்கள் கூறுவது போல இஸ்லாம் மதம் உலகத்துக்குக்கான பொது மதம் என்ற கூற்று தவறானது என்ற கருத்தை உங்களது பதில் தருகிறது!...இல்லையா?" என்றார்.
நமது நண்பர் மௌனமானார்.
நமது இந்து நண்பர் தொடர்ந்து "சில தினங்களுக்கு முன்னர் உஸ்தாத் மன்சூர் அவர்களின் முக நூலில் நான் ஆயிஷாவின் திருமண விடயம் சம்பந்தமாக அவர் கூறியிருந்த விளக்கத்தை கவனித்தேன்.அதில் அவர் "ஆயிஷாவினதும் முஹம்மது நபியினதும் திருமணம் நடந்தேறும் பொழுது ஆயிஷாவின் வயது ஆறு முஹம்மது நபியின் வயது ஐம்பத்து மூன்று.இந்தத் திருமணக் கதை ஆதாரபூர்வமானது.அதில் எந்த சந்தேகமும் இல்லை." என்று கூறி விட்டு சிரிப்புடன் "அதன் பின்னர் அவர் குறிப்பிடும் கூற்றுக்கள் அவரது ஆதார பூர்வ உறுதிப்பாட்டை தகர்த்து விடுகிறது."என்றார்.
நண்பர் குறிப்பிட்ட உஸ்தாத் மன்சூர் இலங்கை ஜாமியா நளீமியாவின் முன்னாள் விரிவுரையாளர்.இலங்கையில் இருக்கும் பிரபலமான விரல் விட்டு எண்ணக் கூடிய இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர்.
உடனே நான் "அவர் அப்படி என்னதான் சொன்னார்?" என்றுக் கேட்டேன்.
நண்பர் தனது கையில் இருந்த சம்சுன் கலக்ஷி போனில் உஸ்தாத் மன்சூரின் முக நூலை திறந்தார். அதில் கேள்வி பதில் பகுதியில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண வயது சம்பந்தமான கூற்று கேள்வியாக கேட்கப் பட்டு அதற்கு உஸ்தாத் மன்சூர் சொன்ன விளக்கம் பதிலாக இப்படி பதிவேற்றப் பட்டிருந்தது.
//இறை தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) யை அவருக்கு 6 வயதாக இருக்கும் போது திருமணம் முடித்தார்கள் என்பது ஆதாரபூர்வமான ரிவாயத்தே.
எனினும்,இது பற்றி மேற்கத்திய ஆய்வாளர்கள் பெண்ணுரிமை மறுப்பு என குறை கூறுவர்.அப்பின்னணியில் இஸ்லாமிய ஆய்வாளர்கள் பல பதில்களைக் கூறுவர்.
(1) அக்காலப் பிரிவில் வயது விடயங்களில் நுணுக்கமான பதிவுகள் எதுவும் இருக்கவில்லை.ஏறத்தாழ கூறும் அமைப்பே,காணப் பட்ட அமைப்பே இருந்தது.எனவே, 6 வயது என வரையறுத்து விவாதத்திற்கு வருதல் பிழையானது.
(2) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே முத்இம் இப்னு அதீ என்பவருக்கு திருமணம் பேசப்பட்டிருந்தது.அல்லது வாக்குறுதி அளிக்கப் பட்டிருந்தது.எனவேதான் இறை தூதர் (ஸல்) அவர்கள் பேசியதும் முத் இம் இப்னு அதி யிடம் சென்று பேசியதன் பிறகு இறை தூதர் (ஸல்) அவர்களுக்கு அபூபக்கர் (ரலி) திருமணம் முடித்து வைத்தார்கள்.இது ஆயிஷா (ரலி) திருமணம் பேசும் வயதை அடைந்திருந்தார்கள் எனக் காட்டுகிறது.
(3) ஒவ்வொரு கால சமூகம்,மக்கள் நிலை, அவர்களது உடலமைப்பு என்பவை பொறுத்தே விடயங்களை நோக்க வேண்டும். நவீன கால சமூக நிலைகளை பழைய கால சமூக நிலைகள் மீது திணித்து நோக்கக் கூடாது. இப்பின்னணியில்தான் சிறிய தனியார் சட்டத்தை வகுத்த பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் சிறு வயதுத் திருமணத்தை தடை செய்யும் வகையில் சட்டம் வகுத்துள்ளனர்.
ஸூரா நிஸா 6ஆம் வசனம் ""திருமண வயதை அடைதல். முதிர்ச்சி அடைதல்"
என்ற இரு பிரயோகங்களையும் கவனத்திட் கொண்டே அச் சட்டம் வகுக்கப் பட்டது.
(4) இறைத் தூதர் (ஸல்) அவர்களது வாழ்வை நேர்மையாக ஆராயும் யாரும் மனோ இச்சைக்கும் அவர்களுக்கும் வெகு தூரம் என்பதை ஏற்பர்.
அவர்கள் இளம் வயதில் 25 முதல் 50 வரை ஒரேயொரு மனைவியோடு அதுவும் விதவையான ஒரு பெண்ணோடு வாழ்ந்தமை மிகத் தெளிவு.
அறிவு, ஆய்வு, நேர்மையற்றவர்கள் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவை இல்லை.
பதில் அளித்தவர் உஸ்தாத் மன்சூர்.//
நான் வாசித்து முடித்து விட்டு நண்பரைப் பார்த்தேன்.
அவர் "குழந்தை ஆயிஷாவின் திருமணக் கதையை ஆதார பூர்வமானது என்று முதலில் வாதிடும் மன்சூர் உஸ்தாத் அடுத்த பத்தியில் உடனே " அக்காலப் பிரிவில் வயது விடயங்களில் நுணுக்கமான பதிவுகள் எதுவும் இருக்கவில்லை.ஏறத்தாழ கூறும் அமைப்பே,காணப் பட்ட அமைப்பே இருந்தது.எனவே, 6 வயது என வரையறுத்து விவாதத்திற்கு வருதல் பிழையானது." என்று கூறும் வாதம் பிழையானது என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வில்லையே?"என்றார்.
நான் 'உண்மைதான்" என்றேன்.
நண்பர் தொடர்ந்தார் "உஸ்தாத் மன்சூரின் இன்னுமொரு வாதம் இஸ்லாம் நவீன உலகத்துக்கு பொருத்தமான மார்க்கம் இல்லை என்ற நமது வாதத்துக்கு வலு சேர்க்கிறது" என்றார்.
நான் ஆச்சரியத்துடன் "அதெப்படி?" என்றேன்.
அதற்கு அந்த இந்து நண்பர் "உஸ்தாத் மன்சூர் தமது பதிலில் -ஒவ்வொரு கால சமூகம்,மக்கள் நிலை, அவர்களது உடலமைப்பு என்பவை பொறுத்தே விடயங்களை நோக்க வேண்டும். நவீன கால சமூக நிலைகளை பழைய கால சமூக நிலைகள் மீது திணித்து நோக்கக் கூடாது.இப்படியான பின்னணியில்தான் சிறிய தனியார் சட்டத்தை வகுத்த பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் சிறு வயதுத் திருமணத்தை தடை செய்யும் வகையில் சட்டம் வகுத்துள்ளனர்.
ஸூரா நிஸா 6ஆம் வசனம் "திருமண வயதை அடைதல். முதிர்ச்சி அடைதல்"
என்ற இரு பிரயோகங்களையும் கவனத்திட் கொண்டே அச் சட்டம் வகுக்கப் பட்டது.' - என்கிறார்." என்றவர் தொடர்ந்து "அப்படியென்றால் நபிக்குப் பின்னர் வந்த இஸ்லாமிய அறிஞர்கள் ஸூரா நிஸாவின் உள்ளார்ந்த விளக்கத்தை நபியை விடவும் அறிந்து சட்டம் வகுத்திருக்கிறார்கள்.இந்த நவீன கால இஸ்லாமிய அறிஞர்கள் உங்களது நபியை விடவும் சிறந்த அறிஞர்களாக இருக்கிறார்கள்.அதனால்தான் அந்த அறிஞர்கள் இஸ்லாமிய சட்ட விதிகளை இக்காலத்துக்கு பொருத்தமான முறையில் வகுத்து தந்திருக்கிறார்கள் என்று உஸ்தாத் மன்சூர் சொல்லாமல் சொல்கிறார் அல்லவா?" என்றார்.
நான் மௌனமானேன்.
"அதனால்தானோ என்னவோ உஸ்தாத் மன்சூர் இறுதியாக -அறிவு, ஆய்வு, நேர்மையற்றவர்கள் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவை இல்லை.- என்று கூறி ஆய்வு செய்ய முன்வருகின்ற முஸ்லிம் மாணவர்களின் ஆய்வுக்கு ஆப்பு வைக்கிறார்" என்று சிரிப்புடன் முடித்தார் எனது இந்து நண்பர்.
இதே போன்று சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருக்கும் என்னுடைய இன்னுமொரு இந்து நண்பர் " முஸ்லிம்கள் குறிப்பிடும் காபிர் என்ற சொல்லாடல் யாரைக் குறிக்கிறது.....நாத்திகனையா? அல்லது முஸ்லிம் அல்லாத ஏனைய மக்களையா?"என்று மின்னஞ்சல் மூலம் என்னிடம் கேட்டார்.
அதற்கு நான் "இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இறைவனை நிராகரிப்பவர்கள்தான் காபிர்கள்......."என்று கூறி விட்டு முஸ்லிம்கள் விசுவாசிக்கின்ற இறைவனின் உள்ளமைகளை அவருக்கு விபரித்திருந்தேன்.
முஸ்லிம்கள் விசுவாசிக்கின்ற இறைவனை அராபியர்களின் இறைவனாக தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்ட அந்த இந்து நண்பர் என்னுடனான தன்னுடைய தொடர்பைத் துண்டித்துக் கொண்டு என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிலில் இப்படிக் குமுறிக் கொட்டினார்...........
ஏகனான அல்லாஹ்வை .......இறைவனை முழுமையாக நிராகரிப்பவனை இஸ்லாம் "காபிர்" என்று கூறுகிறது.
நாத்திகன்தான் காபீரா ? இல்லையென்கின்றது தங்கள் கட்டுரை.அரேபியன் வகுத்தபடி அரேபிய கடவுளை -அரேபிய போதனையை ஏற்காதவன் அனைவரும் காபீர்தான் என்பது தங்களின் முடிவு. அரேபிய அடிமைகள் பிறறை கலாச்சார மக்களை காபீர்கள் என்று இழிவு செய்யும் சாதித்தீமிர் தங்களையும் ஆட்டி வைக்கின்றது.
2. //இறைவனை அல்லது கடவுளை ஏற்றுக் கொண்டேன் என்று தன்னை அழைத்துக் கொள்கின்ற இணைய நண்பர் அன்புராஜ் போன்ற ஒருவர் அல் குர்ஆன் குறிப்பிடுகின்ற தன்மைகள் இருக்கின்ற அல்லாஹ்வை தனது கடவுளாக அல்லது இறைவனாக ஏற்றுக் கொண்டிருந்தால் அவர் முஸ்லிமாக,கிறிஸ்தவராகஅல்லது யூதராக இல்லாத நிலையிலும் இஸ்லாம் அவரை "காபிர்" என்று அழைப்பதில்லை.//
உங்களது இந்தப் பதிலின் மூலம் அன்புராஜ் தாங்களும் காபீர்தான் என்று ஏற்கனவே சொன்னதுபோல் தெளிவாகச் சொல்லிவிட்டிர்கள்.
அரேபிய மதம் எவ்வளவு பயங்கரமானது என்பதை தாங்கள் எடுத்துக்காட்டிவிட்டீர்கள். ஏற்கனவே தெரிந்ததுதான். பாக்கிஸ்தானில் பங்களாதேஷ்யில் இந்து காபீர்களுக்கு வரலாற்றில் குர்ஆன் படித்தவர்கள் செய்த கொடுமை-பெரும்பான்மை பெற்றதனால் ஏற்பட்ட பலம் - இந்தியாவில் தொடர விடமாட்டோம்.அதுதான் ஏற்கனவே நாங்கள் செய்துள்ள சங்கல்பம். இந்துக்களை காபீர் என்பவன்தான் காட்டுமிராண்டிகள்.காடையர்கள்.சோறுதின்று வளராத அடிமுட்டாள்கள். 6 வயது சிறுமியை திருமணம் செய்த 9 வயதில் அச்சிறுமியோடு ........ அரேபியனை வழிகாட்டியாக கொண்ட தங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். எனது வலைதளத்திற்கு தங்களது கட்டுரைகளை இனிமேல் அனுப்பவேண்டாம். பாம்புகள் என்றும் பாம்புகள்தாம்.//
அவரது உள்ளக் குமுறல் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மனிதர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துக் காட்டிய ஒரு மகான்.
அவரது அனைத்து செயல்களும் தூய்மையானவை.
அதன் காரணமாகவே முஸ்லிம்கள் அவரை அணு அணுவாக பின்பற்ற துடிக்கிறார்கள். பின் துயர்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால்,அவர் சம்பந்தமாக என்னுடைய இந்து நண்பரின் கணிப்பு எவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கிறது?
....... 6 வயது சிறுமியை திருமணம் செய்த 9 வயதில் அச்சிறுமியோடு ........ அரேபியனை வழிகாட்டியாக கொண்ட தங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
நானறிந்த அந்த மகான் உயிருடன் புதைக்கப் படும் பெண் சிசுக்களைப் புதை குழியின் விளிம்பில் இருந்து மீட்டு அந்த சிசுக்களின் மீட்சிக்கு களம் அமைத்த உன்னத புருஷர்.(1)
விதவைகள் துர்சகுனமாக கணிக்கப் பட்டு வாழ்வதற்கு எவ்விதமான தகுதிகளும் அற்றவர்கள் என்று கணிக்கப் பட்டு ஒதுக்கி வைக்கப் பட்ட அராபிய கலாசார வழக்கத்தை மாற்றியமைத்து விதவைகளுக்குரிய வாழ்வுரிமையைப் பெற்றுக் கொள்ளும் வரலாறு படைத்தவர்.
வெறும் பண்டங்களாக கருதப் பட்டு வாரிசுரிமை மறுக்கப் பட்ட பெண்களுக்கு வாரிசுரிமையை,சொத்துரிமையை பிரகடனப் படுத்திய புரட்சி வீரர்.(2)
எப்பொழுதும் மறுக்கப் பட்ட பெண்ணுரிமையை மானுடத்துக்கு நிர்ணயித்து பெண்களுக்கு புது வாழ்வை மீளளித்தவர்.(3)
ஆசை நாயகிகளாக சுகம் அனுபவிக்க மட்டும் உபயோகப் படுத்தப் பட்ட அடிமைப் பெண்களுக்கு மனைவி அந்தஸ்த்தை வழங்கும் சட்டம் வகுத்தவர்.(4)
இவ்வாறான புரட்சிகரமான செயல்களை ஒரு மதத்தின் சட்டமாக்கி வகுத்துத் தந்த அந்தத் தலைவரே என்னுடைய இந்து நண்பர்கள் குறிப்பிட்டது போல அல்லது உலகத்தில் அநேகர் நினைப்பது போல இந்த சட்டங்களை தவிடு பொடியாக்குகின்ற விளைவுகளுக்கு காரணமாக இருக்கின்ற செயல்களின் நாயகனாக எவ்விடத்தில் தடம் பிறழ்ந்து போனார்?
திருமணத்திற்கு முன்னர் அப் பெண்ணுடைய அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் செயப் படும் திருமணம் இஸ்லாமிய சரி ஆ சட்டத்திற்கு முரணானது (5) என்று தீர்ப்பளித்த நாயகரே அந்தத் தீர்ப்பை அலட்சியப் படுத்தி ஒரு குழந்தையை கட்டாயத் திருமணம் செய்யும் கொடுமையை செயலில் காட்டிப் போனாரா?
எனது மதிப்பிக்குரிய விமோசகர் பெண்ணுரிமையை பறிக்கின்ற வில்லனாக மறு அவதாரம் எடுத்ததாக கூறப் படுகின்ற கதைகள் எந்தளவு நிஜமானது?
கோடிக் கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் மகோன்னதமான இடத்தைப் பெற்று கௌரவத்துடன் மதிக்கப் படுகின்ற இந்த புரட்சிகர நாயகரினால் ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாழ்வு சீரழிக்கப் பட்டதா?
அகிலங்களின் இரட்சகன் அல்லாஹுதாலாவினால் அல் குர் ஆனின் முதல் வஹி "படிப்பீராக....!"என்ற அறிவுரையுடன் அருளப்படுகிறது.(6)
"அறிவு ஒவ்வொரு ஆணினதும்,பெண்ணினதும் தவறிப் போன சொத்தாகும்.அதனை அவர்கள் கண்ட இடத்தில் பெற்றுக் கொள்ளவும்............சீனா தேசம் சென்றாகிலும் அறிவைத் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள்......என்றெல்லாம் அறிவின் முக்கியத்துவத்தை நமக்குப் போதித்த என்னுடைய நாயகர் கல்வி கற்கவேண்டிய ஒரு சிறு மழலையின் மழலைப் பருவத்தை சீரழித்து துரோகம் செய்து விட்டாரா?
என்னால் நம்ப முடிய வில்லை.
எதனை?
என்னுடைய இலட்சிய நாயகரின் செயல்களையா?
இல்லை...இல்லை...அவர் சம்பந்தமாக அவருக்கு எதிராக கூறப் படுகின்ற கதைகளை என்னால் நம்ப முடியவில்லை.
ஏன் தெரியுமா?
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் எகிப்தில் 1923 ஆம் ஆண்டுகளில் வகுக்கப் பட்டு அரசாண்டுக் கொண்டிருந்த எகிப்திய திருமண சட்டம் வகுத்திருக்கும் நியதிகளில் மணமகளின் வயதெல்லை பதினாறு என்றும் மணமகனின் வயதெல்லை பதினெட்டு என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
அதன் பின்னர் 1931 ஆம் ஆண்டில் அதாவது எட்டு வருடத்துக்குப் பிறகு எகிப்தின் இஸ்லாமிய சரிஆ சட்ட செயலாக்கள் நிறுவனம் அந்த சட்ட நிர்ணயத்தை மீள் பரிசீலனை செய்து மணமகளின் வயது பதினாறுக்கு குறைவாகவும் மணமகனின் வயது பதினெட்டுக்குக் குறைவாகவும் இருப்பின் அவர்களது விவாகரத்து விடயத்தை விசாரணைக்கு எடுக்கக் கூடாதென்று அரச நீதித்துறைக்கு பரிந்துரை செய்தது.
ஆனால்,உஸ்தாத் மன்சூர் குறிப்பிட்டஅறிஞர்களின் ஆளுமையில் இருந்து இரானுவ சதி மூலம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட இப்போதைய இக்வானுல் முஸ்லிமீன்களின் செல்வாக்கில் இருந்த எகிப்தின் நிலைமை துரதிஷ்டவசமானது.
அப்பொழுது எகிப்தை அரசாண்ட இஹ்வானிய இஸ்லாமிய அரசு திருமணத்திற்கான பெண்களின் வயதெல்லையை பதின்மூன்றாக குறைத்தது.
அரசின் இந்த முடிவும் இஹ்வானிய இஸ்லாமிய அரசின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துப் போனது வரலாறு.
இஹ்வானிய அரசின் இந்த முடிவு எகிப்து பெண்களை வீதிக்கு இறக்குவதற்கு காரணமாக அமைந்துப் போனது.
எனினும்,பெண்களுக்கான திருமண வயதெல்லை பதின்ஆறு என்ற எகிப்தின் பழைய சட்டத்தை அறிந்தவுடன் என் மனத்தில் எந்த விதமான இஸ்லாமிய அடிப்படை ஆதாரத் துணைகளின் தேவைகளின்றி ஏழு வயதுக் குழந்தை ஆயிஷா (ரலி) அவர்களினதும் ஐம்பது வயது முஹம்மத் சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களினதும் பால்யத் திருமணக் கதை சம்பந்தமான நம்பிக்கை பிசு பிசுத்துப் போனது.
என்னுடைய நபி உத்தமர்.அவர் அப்பாவி ஏழு வயது சிறு குழந்தையை ஒரு போதும் திருமணம் செய்யும் செய்கையை செய்யவில்லை.
அவர் சம்பந்தமாக அறிவிக்கப் படுகின்ற இவ்வாறான அனைத்து ஹதீஸ்களும் ஆதாரங்கள் அற்றவையாக இருக்க வேண்டும்.
என்னுடைய இந்து நண்பர்களைப் போன்று பலர் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சம்பந்தமாக சொல்லப் பட்டுக் கொண்டிருக்கின்ற இத்தகைய தவறான செய்திகளினால் கொஞ்சம் குழம்பிப் போயிருப்பார்கள்.
என்னுடைய முஸ்லிம் சகோதரர்கள் இவ்வாறான தவறான செய்திகளின் நம்பகத் தன்மையை துகிலுரிக்கும் விதத்தை அறியாமல் மௌனித்து போவார்கள்.
இதற்கு என்ன தீர்வு?
முஸ்லிம்கள் அனைவரும் புனித அல் குர்ஆனை தமது வாழ்வியல் வழிக்காட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, நாம் முதலில் புனித அல் குர்ஆனின் போதனையின் பிரகாரம் இந்த கதையின் வலுவிழக்கும் பரிதாபத் தளங்களைத் தேடத் துவங்கினேன்.
அந்தத் தேடல்கள் தேடித் தந்த உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமாக அல்லது சிறுவர்களின் உரிமைக்கு சாவு மணியடிக்கின்ற சிறுவர் துஷ் பிரயோகம் சம்பந்தமாக இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?
முதலில் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றிணைந்து ஏற்று கொண்டிருக்கின்ற சிறுவர்களுக்கான உரிமைகள் என்றால் என்னவென்ற ஆய்வில் பளீரிட்ட விடயங்களைக் கவனிப்போம்.
*ஒரு சிறுவர் தனது பருவ வயதை அடையும் வரை அவரது பாதுகாவலரினால் கட்டாயமாக கனிவான முறையில் நடாத்தப் படவேண்டும்.
*அவருடைய பாதுகாவலர்கள் அவருடன் கனிவான முறையில் பேச வேண்டும்.
*அவரின் பொருப்புதாரிகளினால் அவருக்குரிய உணவுகள் சரியான வேளைகளில் வழங்கப் பட வேண்டும்.
*அவருக்குரிய உடைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை அவருக்கு வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
*அவரது பாதுகாவலர்கள் கல்வி கற்கின்ற உரிமையை அவருக்கு கொடுக்க வேண்டும்.
*அவருக்கு உறங்குவதற்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுக்கப் படல் வேண்டும்.
*அவர் சுகவீனமுற்றால் அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்துக் கொடுக்கப் பட வேண்டும்.
*சிறுவர்கள் கண்ணியமான முறையில் நடாத்தப் பட வேண்டும்.
*தப்பு செய்ததற்காக அவர்களை கடுமையாக தண்டிக்கவோ,கண்டிக்கவோ முடியாது.அத்தகைய தப்புகளுக்கான காரணத்தை கண்டு பிடித்து தீர்வை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
*சிறுவர்களைப் பாலியல் வல்லுறவுகளுக்கு எக்காரணம் கொண்டும் உபயோகிக்க முடியாது.
நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று அந்த சிறுவருக்கு அல்லது சிறுமிக்கு மறுக்கப் பட்டால் மறுக்கப் படுகின்ற அந்த செய்கை சிறுவர் துஸ்பிரயோக சட்டத்துக்குள் தண்டனையை வேண்டி நிற்கும் தவறாக அமைந்துப் போகும்.
சிறுவர்களினதும் பெண்களினதும் வயோதிகர்களினதும் பாதுகாப்புக்கான உத்திரவாதம் இஸ்லாத்தில் இருக்கிறது என்பது முஸ்லிம்களின் வாதம்.
அந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ,சிறுவர்களின் உரிமை சம்பந்தமாக அல் குர்ஆன் என்ன சொல்கிறது?
பின்வரும் அல் குர் ஆன் வசனங்களைக் உங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
"(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்;. ஆடையும் அளியுங்கள்;. இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்." -(அல் குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 5)
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.(அல் குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 6)
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.(அல் குர்ஆன் அத்தியாயம் 6: வசனம்152)
அநாதை என்ற வார்த்தைப் பிரயோகம் இஸ்லாமிய கருத்தியலில் ஆழமான பல உட்கருத்துக்களைக் கொண்டிருக்கிறது.
தாய் தந்தையரை இழந்தக் குழந்தை ஒரு அநாதை.
தாய் தந்தையர் இருந்தும் அவர்களது அன்புக் கிடைக்காத குழந்தை பெற்றோரின் அன்பு இல்லாத விடயத்தில் அநாதை.
பெற்றோர் இருந்தும் அவர்களது அன்பு கிடைத்தும் அவர்களை நேசிக்காத உறவினர்கள் இருந்தால் அந்தக் குழந்தையும் அதன் பெற்றோரும் அன்பில்லாத அவர்களது உறவினர் விடயத்தில் அநாதை.
அந்தக் குழந்தைக்கு அன்பான பெற்றோர்,உறவினர்கள் இருக்கிறார்கள்.ஆனால்,சமூகம் அந்த குடும்பத்தை அரவணைத்து ஏற்றுக் கொள்ளாத நிலைமை என்றிருந்தால் சமூகம் என்ற பாதுகாப்பு அரண் இல்லாத அநாதைகளாக அந்தக் குடும்பம் இருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால்,ஒரு குழந்தையின் அல்லது மனிதனின் தேவைகளில் எந்தெந்தத் தேவைகள் அக் குழந்தையின் வளர்ச்சியின் பொழுது அல்லது அந்த மனிதனின் தேவைகளின் பொழுது மறுக்கப் பட்டிருக்கின்றதோ அத்தகையத் தேவைகள் நிவர்த்தி செய்யப் படும் வரையில் அந்தத் தேவைகளில் அக் குழந்தை அல்லது அந்த மனிதன் ஒரு அநாதையின் நிலையில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கணிக்கப் படும் சூழல் உருவாகிறது.
இஸ்லாத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு மேய்ப்பாளனாக கருதப் படுகின்றான்.
அவனது பொறுப்பில் இருக்கின்ற அனைவரும் அந்த பொறுப்பு சார்ந்த விடயம் தொடர்பில் அநாதைகள்தான்.
அவன் அவனது பொறுப்பில் விடப் பட்டிருக்கின்ற அனைத்துக் காரியங்களுக்கும்,அவனது பொறுப்பில் இருக்கின்ற அனைவரினதும் உரிமைகளுக்கு அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
இனி,ஒரு பரம ஏழை சிறுவர் ஒருவர் துரதிர்ஷ்ட வசமாக தனது தேவைகளில் ஒரு அநாதையின் நிலையில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இஸ்லாத்தில்அவரின் நிலை என்ன?
இஸ்லாத்தின் அடிப்படை ஆதார நூலான அல் குர்ஆன் போதனையின் பிரகாரம் அந்த அநாதைச்சிறுவருக்கு அதன் பாதுகாவலர் உணவளிக்க வேண்டும்.
நல்ல ஆடையும் அணிவித்துக் காக்க வேண்டும்.
அவர்களுடன் கனிவான வார்த்தைகளைப் பேசவும் வேண்டும்.
அவர்களது திருமண வயதுவரை அவர்களைப் பேணிப் பாதுகாக்கவும் வேண்டும்.
அவர்கள் அறிவை பெற்றுக் கொள்ளும் விதத்தில் அறிவூட்டவும் வேண்டும்.
அந்த ஏழை அநாதை சிறுவரின் பாதுகாவலர் தனது கடமையை செய்யத் தவறும் நிலையில் அக் குழந்தை இழக்கின்ற கடமைகள் யாருடையப் பொறுப்பில் விடப்பட்டிருக்கின்றது என்ற ஆய்வில் அப் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாக பரிணாமம் பெறுகிறது.
ஆகவே,அந்த அநாதையின் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாக கடமையாகிறது.
ஒரு குழந்தை ஆறு அல்லது ஏழு வயதினுள் இவ்வுலகில் தனது வாழ்வை சுதந்திரமாக தீர்மானிக்கும் முழுமையான அறிவைப் பெற்றுக் கொள்வது எவ்விதத்திலும் சாத்தியம் இல்லை.
அந்த நிலையில் யாரைப் பாதுகாவலராகக் கொண்டிருந்தாலும் அறிவு சம்பந்தமான விடயத்தில் அக் குழந்தை ஒரு அநாதை.
ஆகவே,உலகத்தில் பிறக்கின்ற அனைத்துக் குழந்தைகளும் அறிவைப் பெற்றுக் கொள்கின்ற விடயத்தில் பிறக்கும் பொழுதே அநாதைகளாக பிறக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களுக்குரிய அறிவை பெற்றுக் கொள்கின்ற வசதியை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அந்தக் குழந்தையின் பாதுகாவலரின் பொறுப்பாகிறது.
அவர் அதனை செய்யத் தவறுகின்ற நிலையில் அந்தப் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாக மாறி விடுகிறது.
ஆறு வயது அல்லது ஏழு வயது நிரம்பிய ஒரு குழந்தை பருவ வயதை அடைந்த ஒருவர் பெற்றிருக்கும் அறிவை,விவேகத்தை ,நுணுக்கத்தை பெற இயலாது.
இந் நிலையில் ஒருவர் பருவமடையாத -நன்மைத் தீமைகளைப் பிரித்துணரும் பக்குவம் புரியாத ஒரு குழந்தையைத் திருமணம் புரிவது அல்லது அதற்குத் துணை நிற்பது-நமது பாஷையில் சொன்னால் மாமா வேலை செய்வது இஸ்லாத்தின் பார்வையிலும்,அல் குர்ஆனின் போதனைக்கும் முரணானது.
தவிர, பருவமடையாக் குழந்தைகளை திருமணம் செய்வதற்கு புனித அல் குர்ஆனில் கிஞ்சித்தும் அனுமதி இல்லை.
திருமணம் முடிப்பதென்ன? அவர்களுக்கு சில வேளைகளில் சுதந்திரமாக தங்களது பெற்றோர், பாதுகாவலர் முன்னிலையில் வருவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
வயதுக்கு மூத்தவர்கள் சுதந்திரமாக ஓய்வு கொள்ளும் தருணங்களில் அவர்கள் சொந்த பெற்றோர்களாக இருந்தாலும் அவர்களது அனுமதியைப் பெறுமாறு ......அவ்வாறு அவர்களை பழக்குமாறு அற்புதமான ஒழுக்க விழுமியத்தை அல் குர் ஆன் நமக்குப் போதிக்கிறது.
இந்தப் புனித அல் குர் ஆனின் வசனத்தைக் கவனியுங்கள்...
"ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை )களும், உங்களிலுள்ள பருவமடையாச் சிறுவர்களும்,(உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதிக் கோர வேண்டும்.பஜ்ரு தொழுகைக்கு முன்னரும்,நீங்கள் மேல் மிச்சமான உங்கள் மேலாடைகளைக் கலைந்திருக்கும் லுஹர் நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும் - ஆக இம் மூன்று நேரங்களும் உங்களுக்காக அமையப் பெற்றுள்ள மூன்று அந்தரங்க வேளைகளாகும்.............." 24 : 58
அல் குர் ஆன் பருவமடையாச் சிறுவர்களை...வீட்டினுள் சுதந்திரமாக சுற்றி வருகின்ற அடிமைகளை அவர்களது சுதந்திரத்துக்கு கடிவாளமிட்டு கட்டுப் படுத்தும் இந்தத் தருணங்கள் மனிதர்கள் அந்தரங்கமாக......சுதந்திரமாக இருக்கும் தருணங்கள்என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.
மனிதர்களது அந்தரங்கத் தருணங்களில் அவர்களிடையே சுதந்திரமாக வருவதற்கே பருவமடையாச் சிறுவர்களுக்கு,வீட்டினுள் இருக்கும் அடிமைகளுக்கு தடை விதிக்கும் போதனையைப் போதிக்கின்ற புனித மார்க்கத்தில் அத்தகைய தடைக்கு தகுதியான சிறுவர்களை மணந்துக் கொள்ளும் அனுமதியை யார் கொடுத்தார்கள்?
இனி புனித அல் குர்ஆனின் அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்...
"இன்னும் உங்களுடையக் குழந்தை பிராயம் அடைந்து விட்டால் அவர்களும் தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதிக் கேட்பது போலவே அனுமதிக் கேட்க வேண்டும்.இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்;அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன்:ஞானம் மிக்கவன்." 24 : 59
நன்மைத் தீமைகளைப் பிரித்தறியும் அறிவைப் பெற்றுக் கொண்ட நிலையைத்தான் இஸ்லாம் பிராயம் அடைந்த நிலை என்று சொல்கிறது.
ஆனால்,நம்மில் சிலர் பிராயம் அடைந்த வயது என்ற வயதெல்லையை பெண் குழந்தைகள் பூப்பெய்திய நிலையைக் கொண்டு கணிக்கிறார்கள்.
ஒரு குழந்தை பூப்பெய்வதற்கும் நன்மைத் தீமைகளைப் பிரித்தறியும் அறிவைப் பெறுவதற்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இது வேறு! அது வேறு!
இமாம் இப்னு ஹன்பலின் கிரந்தமான முஸ்னத் அஹ்மத் ஆறாம் பாகத்தில் ஒன்பது வயது ஆயிஷா (ரலி) நபிகளாரின் மனைவியாக தனது கடமைகளை பொறுப்பேற்பதை விடவும் பொம்மைக் குதிரைகளுடன் விளையாடுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஹதீஸின் பிரகாரம் ஹசரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அல் குர் ஆன் போதனைக்கு முரணாக விளையாடுவதில் நாட்டம் கொண்டிருந்த உலகம் அறியா தனது மகளை ஐம்பத்து மூன்று வயது நிரம்பிய முஹம்மத் நபியவர்களுக்கு மனைவியாக கொடுப்பதற்கு எங்ஙனம் சம்மதித்தார்?
புனித அல் குர்ஆன் போதனையின் பிரகாரம் குழந்தைகளின் பாதுகாவலர்கள் அவர்களுக்கு நன்மைத் தீமைகளைப் பிரித்தறியும் அறிவைக் கற்றுக் கொடுக்குமாறு கட்டளையிட்டிருக்க ஹசரத் அபூபக்ர் (ரலி) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஏழு வயது நிரம்புவதற்குள் போதுமான அறிவைப் புகட்டியிருப்பார்களா?
ஹசரத் அபூபக்ர் (ரலி) நம்மை விடவும் நீதித் தவறாத சிறந்த அறிவாளி என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.இந்நிலையில்,புனித அல் குர் ஆனின் போதனைக்கு முரணாக அவர் நடக்கப் போவதுமில்லை! யாரையும் அவ்வாறு செய்வதற்கு அனுமதிக்கப் போவதுமில்லை.
கடுமையான ஒழுக்க விழுமியத்தை போதித்து மனிதர்களது ஆன்மீக வழிக்காட்டியாக இருந்த அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இப்படியான ஒழுக்கம் சிதைக்கும் அத்துமீறலை செய்திருப்பார்களா?
மனத்தில் நெருடுகின்ற இவ்வினாவுக்கான விடை மிக இலகுவானது.
ஆறு வயது,ஏழு வயது அல்லது ஒன்பது வயதெல்லைகள் அல் குர் ஆன் வரையறுத்திருக்கின்ற பருவ வயதெல்லைக்குள் உள்வாங்கப் படவில்லை.
அதனால், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினது குழந்தை வயதுத் திருமணக் கதை அல் குர்ஆனின் போதனைக்கு முற்று முழுதாக முரண்படுகின்றது.
திருமணம் என்பது ஒரு சமூகத்தின் ஒழுக்க விழுமியத்தைக் கட்டிக் காக்கின்ற பெறுமதியான கலாச்சாரமாகும்.
அதனால்,திருமணம் புரியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரஸ்பரம் விரும்புவது இஸ்லாமியத் திருமணத்தின் அடிப்படைகளில் பிரதானமான சரத்துக்களில் ஒன்றாக இருக்கின்றது.
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.[4:19]
அல் குர் ஆனின் இந்தத் திரு வசனம் இஸ்லாமியத் திருமணத்திற்கு பெண்ணின் அனுமதி கட்டாயம் தேவை என்று வலியுறுத்துகிறது.(5)
எனவே, இஸ்லாம் திருமண ஒப்பந்தத்தை அறிவு பூர்வமான முடிவு எடுக்கும் திறனைக் கொண்ட இருவருக்கிடையே ஏற்படுத்துகின்ற உளவியல் ஒப்பந்தமாக கணிக்கிறது.
பின்வரும் அல் குர் ஆன் ஆயத்துக்கள் அதற்கு சான்றாக இருக்கின்றன.
"நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?"[4:20]
"அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான (ஒப்பந்தம்) வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!"[4:21]
திருமண முறிவில் நடந்துக் கொள்ள வேண்டிய ஒழுக்கத்தை விவரிக்கும் திருமறை வசனம் இது.
இதில்,விவாகரத்து செய்யப் படப் போகின்ற பெண்ணுக்கு கொடுக்கப் பட்ட 'மஹரை ' -திருமண நன்கொடையை எக்காரணம் கொண்டும் திருப்பி எடுக்கக் கூடாதென்று மணமகனுக்கு அல் குர்ஆன் கட்டளை பிறப்பிக்கிறது.
ஏனெனில்,திருமணத்துக்கு முன்னர் இருவரும் தமக்கிடையில் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இது கூடாது என்று காரணம் சொல்லப் படுகிறது.
இஸ்லாமிய சட்டவியலில் ஒப்பந்தம் என்பது அறிவு முதிர்ந்த இருவருக்கிடையில் நடக்க வேண்டிய நிகழ்வாக நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது.
அதனால்தான் குழந்தைகளுடன் வியாபாரம் செய்வதை இஸ்லாம் தடுத்திருக்கிறது.
வியாபாரம் செய்வதற்கே வயது நிர்ணயம் செய்திருக்கும் இஸ்லாம் திருமணம் செய்வதற்கு சிறுமிகளை அனுமதிக்கும் கொடுமையை அங்கீகரிக்கும் அநியாயத்தை அனுமதிக்கும் என்று புத்தியுள்ள யாராவது ஏற்றுக் கொள்வார்களா?
தவிர, இதன் காரணமாகத்தான் ஒருவர் மற்றவரை மணம் புரிந்துக் கொள்ள விரும்பாத நிலையில் அத் திருமணம் அல் குர் ஆனின் போதனையின் பிரகாரம் இஸ்லாமிய 'சரிஆ 'வுக்கு முரணானது என்று இஸ்லாம் கருதுகிறது.
சரி......
அப்படியென்றால், ஹசரத் அபூபக்ர் (ரலி) போன்ற கண்ணியத்துக்குரிய புத்திசாலித்தனமான ஒரு பெரியார் பொம்மைகளுடன் விளையாடுவதில் நாட்டம் கொண்டுள்ள ஏழு வயதுக் குழந்தையிடம் அக் குழந்தையின் திருமணத்திற்கான அனுமதியை வேண்டி நின்றதை அல்லது கேட்டிருப்பதை புத்தியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்வானா?
அதே போன்று ஒரு மதத்தின் ஸ்தாபகரும் போதகரும் அராபிய நாட்டை உருவாக்கிய தலைவருமான ஒரு மா மனிதர் பருவமடையாத ஏழு வயதுக் குழந்தையிடம் எவ்வாறு திருமணத்திற்கான அனுமதியைப் பெற்றிருப்பார்?
திருமணம் சம்பந்தமாக இஸ்லாம் கடுமையான கட்டுப் பாடுகளைக் கொண்டிருக்கும் நிலையில் அல் குர் ஆனின் போதனைகளுக்கு முரணான முறையில் பருவமடையாத ஐந்து, ஆறு,ஏழு அல்லது ஒன்பது வயது சிறுமியைத் திருமணம் செய்து அல் குர் ஆனின் போதகர் முஹம்மத் சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நடந்துக் கொள்வார்களா? என்று கேட்க விரும்புகிறோம்.
நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடைய அலுவலகத்தினுள் ஸலாம் கூறியபடி நுழைந்தார்.
"என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றுக் கேட்டார்.
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினதும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களினதும் திருமண கதைகளில் இருக்கின்ற நம்பகத் தன்மைகளின் வயதில் இருக்கும் நம்பகம் இல்லாத் தன்மையின் ஆய்வை சொன்னேன்.
அவர் உடனே தனது செல்போனை எடுத்து கொழும்பில் இருக்கும் ஒரு பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு போன் எடுத்து நான் ஆய்வு செய்யும் விடயம் தொடர்பான அவரது கருத்தைக் கேட்டார்.
அந்த மார்க்க அறிஞர் சொன்ன விடயங்கள் கொஞ்சம் வித்தியாசமானது.
"அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சிறு வயதிலே திருமணம் செய்ததில் ஒரு பெரிய இரகசியம் அடங்கியுள்ளது.ஒரு கணவன் தனது மனைவியுடன் நடந்துக் கொள்ளும் முறைகள் சம்பந்தமான அறிவை நடைமுறை செயல் முறை மூலம் அண்ணலார் அன்னையவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.அது மட்டுமன்றி,அண்ணலார் சம்பந்தமான அநேக ஹதீஸ் அறிவிப்புக்களை அன்னையார் நடைமுறை சம்பவங்களின் துணைக் கொண்டே அறிவித்ததற்கு அவர்களின் சிறு வயதுத் திருமணமே காரணம்."
இதனை எனக்கு சொன்ன நண்பர் "இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.
இன்னுமொரு ஆழமான ஆய்வை வேண்டி நிற்கும் அந்தக் கேள்விக்கான எனது பதில் அடுத்த பதிவில் தொடரும்............
முதலாம் அத்தியாயத்தின் ஆதாரத் துணை இணைப்புகளின் விபரம்:
1.உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-[81:8]
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-[81:9]
2.நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது, இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.[65:1]
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.[2:240]
மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.[2:241]
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.[2:232]
3. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.[4:7]
4."(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான். (இறைவனை விசுவாசிக்காத -நிராகரிப்போராகிய ) இவர்கள் உங்களை நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.ஆனால், அல்லாஹ்வோ தன கட்டளையைக் கொண்டு சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன வசனங்களை அவன் விளக்குகிறான்."
..........ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.[23:6]
இங்கே வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்ற வாக்கியம் அடிமைப் பெண்களுடன் அல்லது ஆசை நாயகிகளுடன் சுதந்திரமாக வைத்துக் கொள்ளும் உறவைக் குறிப்பதாக சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆனால்,இவ்வசனம் சொல்லும் கருத்தானது தனது அதிகாரத்தில் இருக்கும் அடிமைப் பெண்களில் தான் விரும்பிய பெண்ணை முறையாக மணந்து அதன் பின்னரே அவளுடன் வீடு கூட முடியும் என்ற கட்டளையை இவ்வாக்கியம் வலியுறுத்துகிறது.அத்துடன் சுதந்திரமான பெண்ணை மணக்கும் நிலையில் இல்லாத சுதந்திரமான ஆண்கள் இத்தகைய அடிமைப் பெண்களின் எஜமானர்களின் அனுமதியுடன் அந்த அடிமைப் பெண்களை முறைப் படி திருமணம் செய்துக் கொள்ளுமாறு இஸ்லாம் பரிந்துரை செய்து அதன் மூலம் ஒரு அடிமைப் பெண் உரிமை விடுதலையாகும் வாய்ப்பை உருவாக்குகிறது.
புஹாரி ஹதீஸ் கிரந்தம் ஏழாம் பாகம் 35 வது பாடத்தில் வரும் இந்த ஹதீஸைக் கவனியுங்கள்:
"உங்களில் யாருக்கு இறை நம்பிக்கையுள்ள சுதந்திரமான பெண்களை மண முடித்துக் கொள்ள சக்தி இல்லையோ , அவர்கள் இறை நம்பிக்கையுள்ள அடிமைப் பெண்களில் தமக்கு உடமையானவர்களை (மணமுடித்துக் கொள்ளலாம்.)அல்லாஹ் உங்களது இறை நம்பிக்கையை நன்கறிவான்.உங்களில் சிலர் மற்றச் சிலரிலிருந்து வந்தவர்கள்தான்.ஆகவே,அவர்களை அவர்களது உரிமையாளர்களின் அனுமதியின் பெயரில் மணந்துக் கொள்ளுங்கள்.அவர்களுக்குரிய மணக் கொடையை முறைப்படி கொடுத்து விடுங்கள்..............." புஹாரி ஏழாம் பாகம் 35 வது பாடம் 6836-6837 ஹதீஸ்களுக்கு இடையே இருக்கும் ஹதீஸ்.
5.நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.[4:19]
6. யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு படிப்பீராக.[96:1
7.நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.[4:4]
(ஆசிரியர் குறிப்பு: திருமணம் செய்கின்ற இருவருக்கிடையில் நடைபெறுகின்ற ஒப்பந்தத்தின் பிரகாரம்தான் திருமணக் கொடைகளை யார் வசம் வைத்துக் கொள்வதென்று தீர்மானிக்க முடியும்.ஏழு வயதுக் குழந்தைக்கு அல்லது ஒன்பது வயதுக் குழந்தைக்கு தனது திருமணக் கொடை சம்பந்தமாக எவ்விதமான தீர்மானத்திற்கும் வர முடியாதென்பது நாமறிந்த உண்மை.)
............நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது -.................... [2:229]
ஆனால்,நம்மில் சிலர் பிராயம் அடைந்த வயது என்ற வயதெல்லையை பெண் குழந்தைகள் பூப்பெய்திய நிலையைக் கொண்டு கணிக்கிறார்கள்.
ஒரு குழந்தை பூப்பெய்வதற்கும் நன்மைத் தீமைகளைப் பிரித்தறியும் அறிவைப் பெறுவதற்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இது வேறு! அது வேறு!
இமாம் இப்னு ஹன்பலின் கிரந்தமான முஸ்னத் அஹ்மத் ஆறாம் பாகத்தில் ஒன்பது வயது ஆயிஷா (ரலி) நபிகளாரின் மனைவியாக தனது கடமைகளை பொறுப்பேற்பதை விடவும் பொம்மைக் குதிரைகளுடன் விளையாடுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஹதீஸின் பிரகாரம் ஹசரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அல் குர் ஆன் போதனைக்கு முரணாக விளையாடுவதில் நாட்டம் கொண்டிருந்த உலகம் அறியா தனது மகளை ஐம்பத்து மூன்று வயது நிரம்பிய முஹம்மத் நபியவர்களுக்கு மனைவியாக கொடுப்பதற்கு எங்ஙனம் சம்மதித்தார்?
புனித அல் குர்ஆன் போதனையின் பிரகாரம் குழந்தைகளின் பாதுகாவலர்கள் அவர்களுக்கு நன்மைத் தீமைகளைப் பிரித்தறியும் அறிவைக் கற்றுக் கொடுக்குமாறு கட்டளையிட்டிருக்க ஹசரத் அபூபக்ர் (ரலி) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஏழு வயது நிரம்புவதற்குள் போதுமான அறிவைப் புகட்டியிருப்பார்களா?
ஹசரத் அபூபக்ர் (ரலி) நம்மை விடவும் நீதித் தவறாத சிறந்த அறிவாளி என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.இந்நிலையில்,புனித அல் குர் ஆனின் போதனைக்கு முரணாக அவர் நடக்கப் போவதுமில்லை! யாரையும் அவ்வாறு செய்வதற்கு அனுமதிக்கப் போவதுமில்லை.
கடுமையான ஒழுக்க விழுமியத்தை போதித்து மனிதர்களது ஆன்மீக வழிக்காட்டியாக இருந்த அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இப்படியான ஒழுக்கம் சிதைக்கும் அத்துமீறலை செய்திருப்பார்களா?
மனத்தில் நெருடுகின்ற இவ்வினாவுக்கான விடை மிக இலகுவானது.
ஆறு வயது,ஏழு வயது அல்லது ஒன்பது வயதெல்லைகள் அல் குர் ஆன் வரையறுத்திருக்கின்ற பருவ வயதெல்லைக்குள் உள்வாங்கப் படவில்லை.
அதனால், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினது குழந்தை வயதுத் திருமணக் கதை அல் குர்ஆனின் போதனைக்கு முற்று முழுதாக முரண்படுகின்றது.
திருமணம் என்பது ஒரு சமூகத்தின் ஒழுக்க விழுமியத்தைக் கட்டிக் காக்கின்ற பெறுமதியான கலாச்சாரமாகும்.
அதனால்,திருமணம் புரியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரஸ்பரம் விரும்புவது இஸ்லாமியத் திருமணத்தின் அடிப்படைகளில் பிரதானமான சரத்துக்களில் ஒன்றாக இருக்கின்றது.
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.[4:19]
அல் குர் ஆனின் இந்தத் திரு வசனம் இஸ்லாமியத் திருமணத்திற்கு பெண்ணின் அனுமதி கட்டாயம் தேவை என்று வலியுறுத்துகிறது.(5)
எனவே, இஸ்லாம் திருமண ஒப்பந்தத்தை அறிவு பூர்வமான முடிவு எடுக்கும் திறனைக் கொண்ட இருவருக்கிடையே ஏற்படுத்துகின்ற உளவியல் ஒப்பந்தமாக கணிக்கிறது.
பின்வரும் அல் குர் ஆன் ஆயத்துக்கள் அதற்கு சான்றாக இருக்கின்றன.
"நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?"[4:20]
திருமண முறிவில் நடந்துக் கொள்ள வேண்டிய ஒழுக்கத்தை விவரிக்கும் திருமறை வசனம் இது.
இதில்,விவாகரத்து செய்யப் படப் போகின்ற பெண்ணுக்கு கொடுக்கப் பட்ட 'மஹரை ' -திருமண நன்கொடையை எக்காரணம் கொண்டும் திருப்பி எடுக்கக் கூடாதென்று மணமகனுக்கு அல் குர்ஆன் கட்டளை பிறப்பிக்கிறது.
ஏனெனில்,திருமணத்துக்கு முன்னர் இருவரும் தமக்கிடையில் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இது கூடாது என்று காரணம் சொல்லப் படுகிறது.
இஸ்லாமிய சட்டவியலில் ஒப்பந்தம் என்பது அறிவு முதிர்ந்த இருவருக்கிடையில் நடக்க வேண்டிய நிகழ்வாக நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது.
அதனால்தான் குழந்தைகளுடன் வியாபாரம் செய்வதை இஸ்லாம் தடுத்திருக்கிறது.
வியாபாரம் செய்வதற்கே வயது நிர்ணயம் செய்திருக்கும் இஸ்லாம் திருமணம் செய்வதற்கு சிறுமிகளை அனுமதிக்கும் கொடுமையை அங்கீகரிக்கும் அநியாயத்தை அனுமதிக்கும் என்று புத்தியுள்ள யாராவது ஏற்றுக் கொள்வார்களா?
தவிர, இதன் காரணமாகத்தான் ஒருவர் மற்றவரை மணம் புரிந்துக் கொள்ள விரும்பாத நிலையில் அத் திருமணம் அல் குர் ஆனின் போதனையின் பிரகாரம் இஸ்லாமிய 'சரிஆ 'வுக்கு முரணானது என்று இஸ்லாம் கருதுகிறது.
சரி......
அப்படியென்றால், ஹசரத் அபூபக்ர் (ரலி) போன்ற கண்ணியத்துக்குரிய புத்திசாலித்தனமான ஒரு பெரியார் பொம்மைகளுடன் விளையாடுவதில் நாட்டம் கொண்டுள்ள ஏழு வயதுக் குழந்தையிடம் அக் குழந்தையின் திருமணத்திற்கான அனுமதியை வேண்டி நின்றதை அல்லது கேட்டிருப்பதை புத்தியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்வானா?
அதே போன்று ஒரு மதத்தின் ஸ்தாபகரும் போதகரும் அராபிய நாட்டை உருவாக்கிய தலைவருமான ஒரு மா மனிதர் பருவமடையாத ஏழு வயதுக் குழந்தையிடம் எவ்வாறு திருமணத்திற்கான அனுமதியைப் பெற்றிருப்பார்?
திருமணம் சம்பந்தமாக இஸ்லாம் கடுமையான கட்டுப் பாடுகளைக் கொண்டிருக்கும் நிலையில் அல் குர் ஆனின் போதனைகளுக்கு முரணான முறையில் பருவமடையாத ஐந்து, ஆறு,ஏழு அல்லது ஒன்பது வயது சிறுமியைத் திருமணம் செய்து அல் குர் ஆனின் போதகர் முஹம்மத் சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நடந்துக் கொள்வார்களா? என்று கேட்க விரும்புகிறோம்.
நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடைய அலுவலகத்தினுள் ஸலாம் கூறியபடி நுழைந்தார்.
"என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றுக் கேட்டார்.
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களினதும் அண்ணல் நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களினதும் திருமண கதைகளில் இருக்கின்ற நம்பகத் தன்மைகளின் வயதில் இருக்கும் நம்பகம் இல்லாத் தன்மையின் ஆய்வை சொன்னேன்.
அவர் உடனே தனது செல்போனை எடுத்து கொழும்பில் இருக்கும் ஒரு பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு போன் எடுத்து நான் ஆய்வு செய்யும் விடயம் தொடர்பான அவரது கருத்தைக் கேட்டார்.
அந்த மார்க்க அறிஞர் சொன்ன விடயங்கள் கொஞ்சம் வித்தியாசமானது.
"அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சிறு வயதிலே திருமணம் செய்ததில் ஒரு பெரிய இரகசியம் அடங்கியுள்ளது.ஒரு கணவன் தனது மனைவியுடன் நடந்துக் கொள்ளும் முறைகள் சம்பந்தமான அறிவை நடைமுறை செயல் முறை மூலம் அண்ணலார் அன்னையவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.அது மட்டுமன்றி,அண்ணலார் சம்பந்தமான அநேக ஹதீஸ் அறிவிப்புக்களை அன்னையார் நடைமுறை சம்பவங்களின் துணைக் கொண்டே அறிவித்ததற்கு அவர்களின் சிறு வயதுத் திருமணமே காரணம்."
இதனை எனக்கு சொன்ன நண்பர் "இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.
இன்னுமொரு ஆழமான ஆய்வை வேண்டி நிற்கும் அந்தக் கேள்விக்கான எனது பதில் அடுத்த பதிவில் தொடரும்............
முதலாம் அத்தியாயத்தின் ஆதாரத் துணை இணைப்புகளின் விபரம்:
1.உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-[81:8]
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-[81:9]
2.நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது, இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.[65:1]
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.[2:240]
மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.[2:241]
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.[2:232]
(அல் குர் ஆன் 2 : 221)
..........ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.[23:6]
இங்கே வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்ற வாக்கியம் அடிமைப் பெண்களுடன் அல்லது ஆசை நாயகிகளுடன் சுதந்திரமாக வைத்துக் கொள்ளும் உறவைக் குறிப்பதாக சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆனால்,இவ்வசனம் சொல்லும் கருத்தானது தனது அதிகாரத்தில் இருக்கும் அடிமைப் பெண்களில் தான் விரும்பிய பெண்ணை முறையாக மணந்து அதன் பின்னரே அவளுடன் வீடு கூட முடியும் என்ற கட்டளையை இவ்வாக்கியம் வலியுறுத்துகிறது.அத்துடன் சுதந்திரமான பெண்ணை மணக்கும் நிலையில் இல்லாத சுதந்திரமான ஆண்கள் இத்தகைய அடிமைப் பெண்களின் எஜமானர்களின் அனுமதியுடன் அந்த அடிமைப் பெண்களை முறைப் படி திருமணம் செய்துக் கொள்ளுமாறு இஸ்லாம் பரிந்துரை செய்து அதன் மூலம் ஒரு அடிமைப் பெண் உரிமை விடுதலையாகும் வாய்ப்பை உருவாக்குகிறது.
புஹாரி ஹதீஸ் கிரந்தம் ஏழாம் பாகம் 35 வது பாடத்தில் வரும் இந்த ஹதீஸைக் கவனியுங்கள்:
"உங்களில் யாருக்கு இறை நம்பிக்கையுள்ள சுதந்திரமான பெண்களை மண முடித்துக் கொள்ள சக்தி இல்லையோ , அவர்கள் இறை நம்பிக்கையுள்ள அடிமைப் பெண்களில் தமக்கு உடமையானவர்களை (மணமுடித்துக் கொள்ளலாம்.)அல்லாஹ் உங்களது இறை நம்பிக்கையை நன்கறிவான்.உங்களில் சிலர் மற்றச் சிலரிலிருந்து வந்தவர்கள்தான்.ஆகவே,அவர்களை அவர்களது உரிமையாளர்களின் அனுமதியின் பெயரில் மணந்துக் கொள்ளுங்கள்.அவர்களுக்குரிய மணக் கொடையை முறைப்படி கொடுத்து விடுங்கள்..............." புஹாரி ஏழாம் பாகம் 35 வது பாடம் 6836-6837 ஹதீஸ்களுக்கு இடையே இருக்கும் ஹதீஸ்.
5.நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.[4:19]
6. யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு படிப்பீராக.[96:1
7.நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.[4:4]
(ஆசிரியர் குறிப்பு: திருமணம் செய்கின்ற இருவருக்கிடையில் நடைபெறுகின்ற ஒப்பந்தத்தின் பிரகாரம்தான் திருமணக் கொடைகளை யார் வசம் வைத்துக் கொள்வதென்று தீர்மானிக்க முடியும்.ஏழு வயதுக் குழந்தைக்கு அல்லது ஒன்பது வயதுக் குழந்தைக்கு தனது திருமணக் கொடை சம்பந்தமாக எவ்விதமான தீர்மானத்திற்கும் வர முடியாதென்பது நாமறிந்த உண்மை.)
............நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது -.................... [2:229]
18 comments:
இந்துக்களை கேவலம் நாகரீகம் தெரியாக காட்டுமராண்டிகள் ,இஸ்லாம் மதத்தின் எதிரிகள் இறைவனின் எதிரிகள் என்று மிகக் கேவலமான கண்ணியமற்ற பல பொருள் கொடுக்கும் ” காபீர் ” என்று அரேபிய மொழியில் இழித்துப் பேசும் அரேபிய சாதித்தீமிர் கொண்ட தாங்கள் பௌத்தம் மற்றும் இந்து சமூகத்தின் தகுதி குறித்து மிக் கேடு கெட்ட தரம் குறைந்தத முட்டாள்தனமான மனிதத்தன்மை அற்ற கருத்தைக்கொண்டிருக்கின்றீர்கள். பிறமதத்தவர்கள் காபீர் கள் என்ற கருத்து மிகவும் கொடுமையானது. பாக்கிஸ்தானில் அகமதியா முஸ்லீம்கள் சகல உரிமைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் தீடீரென்று நடந்த சில மாற்றங்களால் ” அகமதிய முஸ்லீம்கள் இஸ்லாம் அல்லாத பிற மக்கள் -அதாவது காபீர்கள் - என்று அறிவிக்கப்பட்டார்கள். பின்னர் அகமதியா முஸ்லீம்களுக்கு எதிராக குரான் படித்த பாக்கிஸ்தான் காடையர்கள் நடத்திய கலவரம் குறித்த முனீர் கமிஷன் அறிக்கை new age isalm என்ற வலைதளத்தில் Munir commission report என்ற கட்டுரை வடிவில் உள்ளது. இது குறித்து நான் தங்களுக்கு எழுதியிருக்கின்றேன். அதை தாங்கள் பொருட்படுத்தவில்லை. மிகவும் பரந்த மனப்பான்மை கொண்ட இந்தோனேசியாவில் கூட அமகதிய முஸ்லீம்கள் பெரும் சமூகக் கொடுமைக்கு ஆளாகி அகதிகள் முகாமில் வாழ்ந்து வருவதாக அகமதிய நண்பர்கள் தகவல் தருகின்றார்கள். இஸ்லாமிய அரேபிய இலக்கியங்களில் காபீர் என்று எவரைக் குறிப்பிட்டாலும் அவன் மனிதனாக வாழ அனுமதி கிடையாது. அவனைக் கொல்லலாம் கற்பழிக்கலாம் எதும் செய்யலாம். வேறும் வேறடி மண்ணோடு அவர்களை அழிப்பது அல்லாவக்கு பிடித்தமான செயல் ஆகும். பின் ஏன் அகமதிய முஸ்லீம்களுக்கு இந்த கதி ஏற்படுகிறது. ஆனவேதான் ” காபீர் ” என்ற வார்ததை குறித்து எனக்குள்ள தன்பயத்தை” தங்களுக்கு தெரியப்படுத்தினேன். ஆனால் தாங்க்ள அரேபிய ஆணவம் அகங்காரம் மமகாரம் திமீர் தொனிக்க ” இந்தக்கள் அனைவரும் ” காபீர் ” நாகரீகம் தெரியாக காடடுமிராண்டிகள் ,இருண்டகால மடையர்கள் என்று தெளிவாக கிஞசித்தும் கூச்சம் யின்றி பண்பாடின்றி அறிவித்து விட்டு மனதை நோவியிறுந்தால் மன்னித்து வீடுங்கள் என்றும் எழுதிவிட்டீர்கள். நயவஞசகத்தை மிகநுண்ணியமாக கற்றுள்ள தாங்கள் தங்களுடைய தவறை மறைத்து பெரியவர் முகமது குறித்து இந்து நண்பரின் கணிப்பு எவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கிறது?(....... 6 வயது சிறுமியை திருமணம் செய்த 9 வயதில் அச்சிறுமியோடு ........ அரேபியனை வழிகாட்டியாக கொண்ட தங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ) என்று குற்றப்பத்திரிகை படித்திருப்பது தங்களின் மமதைக்கு ஒருசான்று. நான் கேட்ட கேள்விகள் அனைத்தும் இன்னும் வலைதளத்தில் உள்ளது. எதறகாவது தாங்கள் நேரிடையாக பதில் அளித்ததுண்டா ? சொர்க்கத்தில் ஆண்களுக்கு 72 கோரீஸ் பெண்களை அல்லா காமசுகம் அனுபவிக்க கொடுப்பான் என்றால் பெண்களுக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு தஙகளின் பதில் எனன? தங்கள் மனைவியிடம் நான் கேட்கச் சொல்லவில்லையே ?முகம்மதுவுக்கு 20 க்கு மேல்குமுஸ் வைப்பாட்டிகளை வைத்திருந்தார் மனைவி( 13) (9+20) என்று அலிசேனா என்ற முன்னாள் முஸ்லீம் கூறுகின்றாரே? தங்களின் பதில் என்ன என்று கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் அளிக்கவில்லையே ? முகம்துதான் உலகிற்கு ஏகபத்தினிவிரதம் என்ற அற்புதமான கருத்த வெளிப்படுத்தினார் என்று விரைவில்கண்டுபிடித்து எழுதுங்களேன் ! எனது கடிதங்களை நன்கு படியுங்கள். அத்தைனையும் அலிசேனா போன்ற முன்னாள் முஸ்லீம்கள். முஸ்லீம்களாக வாழ்ந்து பின் அந்த மதம் ஒரு அசிங்கமாக மதம் எனத் தெளிந்து விலகிப்போனவர்களின் கருத்து. Mohammed is a pedofile எனறு அலிசேனா ஒங்கி ஓங்கி அறிவிக்கின்றார் . ஞாபகசக்தி மன்னன் டாக்டர ஜாகீர்நாயக்கூட 6 வயதில் திருமணம் 9 வயதில் ......தாம்பத்தியம் என்று ஒங்கி உரைக்கின்றாரே. பின் நான் கேட்டதில் என்ன குறை கண்டீர். தரம் தாழ்நத செயல்கள் முகம்மதுவின் வாழ்வில் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ? பிணத்திற்கு வாசனை திரவியங்கள் எத்தனை நாளுக்கு பலன் தரும்.முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம்.மற்றவர்களுக்கு மனம் போனபோக்கில்”காபீர் ” பட்டம் பினமனம் போன போக்கில் என்னமும் செய்யலாம் என்ற கருத்தை குரான் முகம்துவும் போதிக்கின்றனர். குரானும் முகம்மதுவும் மக்களின் மனதில் இருக்கும் வரை இவ்வுலகம் இரத்தக்களறியில்தான் நீந்தும்.
நான் அறிந்த வரையில் உலகத்தில் பயங்கரவாத இயக்கங்களை கடவுளின் பேரால் அதிக அளவில் நடத்துபவர்கள் மு்ஸ்லீம்களே. பிறரை வெறுக்க பயங்கரவாதிகள் பயன்படுத்தும் சொல் ” காபீர்கள் ”. தங்களின் கொன்றொளிக்கும் செயலை நியாயப்படுத்த பயன்படுத்தும் ஒரே சொல் கொல்லப்பட்ட மக்கள் - கொல்லப்பட வேண்டிய மக்கள் காபீர்கள் என்ற முத்திரை. பிறகு ஒரு ஜாமாத் அடுத்த ஜமாத்தை காபீர்என்று முத்திரை குத்தும். பள்ளிவாசலில் குண்டு வெடிக்கும். தொழுமையின் போது வெடிகுண்டு தாக்குதல் செய்திகள் பாக்கிஸ்தானில்ஈரானில ஈராக்கில் சர்வசாதாரணமாக நடக்கின்றதே ஏன் ? அங்கு செத்தவன் எப்படி காபீரானான் . சொல்லுங்கள் அறிவு திலகமே ? ஆவண பெருமலையே !அரபு இலக்கியங்களில் காபீர் என்று பட்டம் பெற்றவர்கள் முகம்மதாலும் முகமமதுவைபின்பற்றுவதாக சொல்லும் கூட்டத்தினரலும் கொடூரமாக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் மலைமலையாக குவிந்து கிடக்கின்றது.இன்றைய உலக நடப்பும் அதுதானே? காபீர் என்ற பட்டம் பெற்று நானும் சாக வேண்டும் என்று தாங்கள் நினைக்கின்றீர்களா ? நீர் அளிக்கும் பட்டத்தை நாங்கள் ஏற்க வேண்டுமா ?
ஆமாம் ஆயிசாவுக்கு 18 வயது என்றாலும் இத்திருமணம் பொருத்தமானதா ? 53 வயதான முகம்மதுவிற்கு சௌதா என்ற அழகில்லாத மனைவி இருக்கின்றார். சௌதாவே பொறுப்புள்ள ஒரு தாயாக முகமமதுவிற்கும் கதிஜாவிற்கும் பிறந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியவர் அதாவது அஹ்கலுபைத்துக்களின் முதல் நேசர். இந்நிலையில் 2வது அடுத்த திருமணம் ஏன் ? ஆயிசா தயாரித்த தகவல்கள் ஏன் எரிந்து போனது ? குரானை காக்கும் பொறுப்பை ஏற்ற அரேபிய கடவுள் அல்லாவு ஏன் அதை அணைத்து காப்பாற்றவில்லை. Battle of camel என்ற களத்தில் கலிபா பதவிக்காக முஸ்லீம்களையும் முஸ்லீம்களையும் யுத்தக்களத்தில் சந்திக்க வைத்தப் புண்ணியவதி இந்த அம்மாதானனே ? சிறுபிள்ளைபுத்திதானே!அது. இவருக் குள்ள தகுதி இதுதானே! இதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டீர்களே? காலம் முழுவதும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார் என்று ஒரு தகவலும் யுத்தத்திற்கு பிறகு கொல்லப்பட்டார என்று இரு தகவல்கள் ஆயிசாவைப்பற்றி வருகின்றதே. 5000 -10000 முஸலீம்கள் சாக காரணமாக ஆயிசா ஒரு ”காபீர் ”. பாத்திமாவை கர்ப்பிணியான நிலையில் கிழே தள்ளிய அபுபக்கர் ஒரு காபீர் . உமர் ஒரு காபீர். பல பெண்களை திருமணம் செய்யாமல வைப்பாட்டியாக குமுஸ் பெண்களாக வைத்திருந்த வரலாற்று நாயகம் முகம்மதுதான் இரத்த வெறிபிடித்த ஒரு காபீர். இந்துக்கள் அல்ல.
இனி முஸ்லீம்கள் தங்களது 18-20 வயது பெண்களை 53 வயது ஆண்களுக்கு மணம் முடித்து கொடுப்பார்களாக. உலக நாயகன் அரேபிய வள்ளல் பாலைவனம் தந்த கற்பு திலகம் - முகம்மது-உலக உதாரண புருஷன் செய்த இத்திருமணம்தான் முன்னுதாரணம். உமக்கு ஒரு மகள் இருந்தால் அவளை விட 35 வயது மூத்தவருக்கு திருமணம் முடித்துக் கொடுங்கள் ஐயா. இதுதான் சுன்னா. இதுதான் ஹலால். 18verses 53 இதுதான் திருமணம விதி. பின்பற்றி விடுவார்கள் உலக முஸ்லீம்கள்.
Mecca majid chennai என்ற வலைதளத்தை மெளாலானா சமசுதீன் காஸ்மி என்ற பேரறிஞர் நடத்தி வருகின்றார் அவரது சொற்பொழிவு தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை தங்களுக்கு தகவல் அளித்தேன். முகமமது என்ற அரேபியன் சல் தனது மனைவியர்களில் இருவரை தங்களின் நண்பர்கள் முன்னிருத்தி இப்பெண்களில் யார் உங்களுக்கு வேண்டும் என்று சொல்லுங்கள் நான் தலாக் செய்து வீடுகிறேன் என்று சொன்தாக சமசுதீன் கூறுகிறார். தன் மனவியை உனக்கு வேண்டுமா என்று கேட்பவனே ஒரு காபீர்.மன நோயாளி. அதற்கு தாங்கள் இதுவரை பதில்ஏதும் அளிக்கவில்லையே.ஏன். பதிவையும் நீக்கிவிட்டிர்கள் என்று நினைக்கின்றேன். அலிசேனா சொன்னால் உளறுகின்றான் என்று தள்ளி விடலாம். மௌலானா சம்சுதீன் அல்லவா சொல்கிறான். என்ன செய்வது. அவரை நம்புகினறென். இத்தகையவர்களை கேடுகெட்டவன் என்பேன் நான்.
கலிபா உதுமானை காபீர் என்றவர் ஆயிசா அதையும் வசதியாக மறைத்து விட்டீர்களே நண்பரே!
www.mecca masjit chennai என்ற வலைதளத்தில் அண்ணல்நபி என்ற சொற் பொழிவு இருந்தால் கேட்டுப் பாருங்கள்.
தர்மம் தலைகாக்கும். புண்ணியம் உன்தைத் தொடரும். இதுதான் உண்மை. அரேபிய கலாச்சாரத்தில் நல்ல கருத்துக்களும் காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களும் மகம்மது காலத்திலும் பின்னர் தோன்றிய புத்தகங்களிலும் காணக்கிடைக்கின்றன. இவற்றை சல்லடை செய்ய உரிமை வேண்டும். முட்டாள்தனமாக அவைகளை நியாயப்படுத்துவதுதான் சமய பற்று என்றால் உலகம் சிரியாவாக, லெபனான் போல் எகிப்பதுபால் நைஜிரியா .......... குரான் உள்ள இடங்களின் லட்சணம்.. . இப்படி உலகை மாற்ற வல்லது குரான் -காபீர் தத்துவம். பாக்கிஸ்தான் பிரிவினைக்கு காரணம் கூட காபீர் தத்துவம்தான். 1கோடி க்கு மேல் இந்துக்கள் காபீர் என்ற தத்துவத்திற்கு பலியாகி உள்ளனர். பங்களா தேஷயில் காபீர் ஒழிப்பு இயக்கத்தை மதரஸாவில் படித்த தறுதலைகள் அரேபிய காடையர்கள் நடத்தி வருகின்றனர் தற்போதைய அரசு இந்து சிறுபான்மை மக்களை காப்பேன் என்று வெளிப்படையாக கூறுகின்றது கேடபதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. திருவாளர் முஜிபுர் ரகுமானின் மகள் அல்லவா ? சாத்வீக புத்தி உள்ளது.இலங்கை முஸ்லீம் பெண்கள் நகை அணிகின்றனர். விதவிதமான அலங்காரங்கள் செய்கின்றனர்.ஆனால் நெற்றியில் திலகம் வைத்தால் காபீர்தனமா? தங்கள் மனைவிக்கு நெற்றியில் திலகம் வைக்க வேண்டும் என்று உத்தரவிட தாங்கள் தயாரா ?
இந்துக்களை காபீர் என்று பட்டியலிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை தாங்கள் உணர வைக்கவே இக்கடிதங்களை எழுதினேன். இந்தியாவில் 10-12 கோடி முஸலீம்கள் உள்ளனர்.தங்களைச் சுற்றி வாழும் மக்களை காபீர் என்று பட்டம் கட்டி விட்டு பகை வெறுப்பு இல்லாது வாழ முடியுமா ? முடியாது. குரான் படித்தவன் இந்தியாவை வெறுக்கின்றான்.அவன் அரேபியனாக வாழ்கின்றான். 1000 ஆண்டுகள் நிறைவு செய்த தஞ்சை பெரிய கோவில் இந்து(திய) கட்டட கலைக்கு இந்து(திய) நாகரீகத்திற்கு மேன்மைக்கு உன்னதத்திற்கு ஒரு சான்று.ஒவ்வொரு தமிழனும் அதைப் பார்த்து வியந்து போற்றும் காட்சியை அங்கே காணலாம். ஆனால் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அதை காபீர்களின் அடித்து நொறுக்க வேண்டிய ஒரு கோட்டை சாத்தானின் இருப்பிடம் ஹராம் என்றுதான் கருதி வாழந்து வருகின்றனர். இந்திய மண்ணோடு எந்த விதத்திலும் வரலாறு, சமய அனுஷ்டானம், இலக்கியம் , விழாக்கள் என்று எந்த விதத்திலும் தொடர்பற்று பகை உணரவோடு வாழ்கின்றனர். ஆனால் அரேபியாவில் திலகம் வைக்கும் பழக்கம் கிடையாது என்ற கருத்தின் அடிப்படையில் அரேபிய மதத்தைப்பின்பற்றம் ஒரு இந்து திலகம் வைப்பதில்லை. காபீர்களின் பழக்க வழக்கங்களைக் பின்பற்றக் கூடாது என்பதும் சிலரின் கருத்தாக உள்ளது. இந்து சமூக்தோடு ஒரு தொடர்பு உறவு இருப்பது போல் காட்டிக் கொள்ள உதவும் என்ற கருத்தின் அடிப்படையில் இக்ககேள்வியை எழுப்புயுள்ளேன்.
இந்திய ஃ இலங்கை முஸ்லீம் பெண்கள் நகை
அணிகின்றனர். சேலை அணிகின்றனர்.
விதவிதமான அலங்காரங்கள்
செய்கின்றனர்.
ஆனால் நெற்றியில் திலகம் வைத்தால்
காபீர்தனமா?
தங்கள் மனைவிக்கு நெற்றியில் திலகம் வைக்க
வேண்டும் என்று உத்தரவிட தாங்கள் தயாரா ?
முஸ்லீம் பெண்கள் திலகம் வைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்க தாங்கள் தயாரா ?
1கோடி க்கு மேல் அப்பாவி இந்துக்கள் காபீர் என்ற தத்துவத்திற்கு பலியாகி உள்ளனர். பங்களா தேஷயில் காபீர்- இந்துக்கள் ஒழிப்பு இயக்கத்தை மதரஸாவில் படித்த தறுதலைகள் அரேபிய காடையர்கள் நடத்தி வருகின்றனர்.
எனக்கும் இந்த கதி ஏற்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவது ஏன் ? மீதம் இருக்கும் இந்துக்களையும் கொன்று விட வேண்டும் என்று இரத்த வெறி தங்கள் மனதில் உள்ளதே? ஏன் . ஒவ்வொரு நாட்டிலும் அங்கு உருவாக பண்பாடு கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் மேல் கட்டடங்களை உருவாக்க முயலும்.உலகை அரேபியா வாக்க முயன்றதன் விளைவு எங்கு பார்த்தாலும் இரத்த ஆறு.அபுபக்கரும் உமரும் தொடர்ந்து போர் செய்தார்களே அரேபிய வல்லாதிக்கமா? அன்பின் பிரச்சாரமா ? கௌதமன் தனது மகளை இலங்கைக்கு சமய கலாச்சார தொணடாற்ற அனுப்பினான் .அதுவும் இதுவும் ஒன்றா ? முகம்மதுவிற்க 900 ஆண்டுகளுக்கு மூத்தவர் கௌதமர். அன்பினால் சீனா ஜப்பான் மற்றும் பல நாடுகளில் பல கோடி மக்களின் மனதில் வாழ்கின்றார். எனது சகோதரா் 15 வருடம் Mechanical Engineer ஆக ஜப்பானில் பணியாற்றினார்.
இந்தியாவில் வாழ்வது போல்தான் இருந்தது..ஆனால் குழந்தைகள் மொழி மற்றும் திருமண பிரச்சனை முன்னிட்டு தமிழ்நாடு திரும்பி விட்டார். இயேசு சிலுவையில் தன்னை அறைந்து துன்பப்படுத்திய மக்களைப் பார்த்து ” பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது என்னவென்று அறியாதவர்களாக உள்ளார்கள்”.தேம்பாவணியில் இக்கருத்து மிக அருமையான தமிழில் சொல்லப்பட்டள்ளது.இதற்கு இணையான கருத்து குரானில் உள்ளதா ? எடுத்துக் காட்டுங்களேன? பிறமனை நோக்கா பேராண்மை வேண்டும் என்கிறது குறள். இந்து என்றோ முஸ்லீம் என்றோ திராவிடன் என்றோ ஆரியர் என்றோ எந்த விதமான பிரிவினை பேதப்படுத்தும் கருத்து யின்றி மனிதனுக்கு குறள் கூறும் கருத்து அது. அனால் மக்களை முஸ்லீம்கள் என்றும் காபீர்கள் என்று பிரித்து பேதப்படுத்தி குரான் முஸ்லீம்களுக்கு ஆணையிடகின்றது வலக்கரம் கைபற்றிய காபீர் பெண்களை வைப்பாட்டியாக அடிமைப் பெண்களாக வைத்துக் கொள்ளுங்கள் என்று. என்ன அற்புதம்.இது ஒரு வேதமா, உலகிற்கு வழிகாட்டியா? அரெபிய ”கரிமத்” குரானுக்குள் எப்படி புகுத்தப்பட்டது ?என்படி புகுந்தது.பாலைவத்தில் கொள்ளையடித்தவன் முகம்மது.கொள்ளைக்காரன் எப்படி” நபி” ஆக முடியும். கொள்ளையடிப்பவன்தான் காபீர்.
இன்று தினமணி என்ற தமிழ்நாளிதளின் கூட கதிர் என்று சிறு புத்தகம் வெளியிடப்பட்டள்ளது. எகிப்து நாட்டின் சிறப்பு குறித்து அதில் நிறைய தகவல்கள் உள்ளது. எகிப்பதிய மக்களின் அனைத்து சாதனைகளும் அம்மக்கள் எகிப்தியர்களாக இருந்தபோது நிகழ்த்தியவைகள். சிலை வணக்கம் செய்யும் மக்களாக இருந்தபோது பிரமீடு போன்ற பிரமாண்டங்களை உருவாக்கக் கூடிய தொழில் நுட்ப அறிவை பெற்றிருந்தார்கள். பிணத்தை அழுகாமல் காக்கும் அறிவியல் மேன்மையைப் பெற்றிருந்தார்கள். அரேபிய காடையன் உமரும் மற்றவர்களும் எகிப்பதின் மீது படைஎடுத்து பெருநாசம் செய்து அவர்கள் அரேபயிர்களாக -முஸ்லீம்களாக மாற்றிய பிறகு அவர்கள் விஞ்ஞானம் கட்டடக் கலை மருத்துவம் போன்ற எந்த துறையிலும் எந்த விதமான சாதனைகளைச் செய்யவில்லை. சமய சண்டைதான் விஞ்சி நிற்கின்றது. அமெரிக்காவிற்கு இணையான விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருக்க வேண்டிய எகிப்து முகம்மது என்ற கைநாட்டுக்காரனால் குரான் பொய் மூட்டையால் பாழாகிப்போனது.
எனது கடிதம் உண்மை என தாங்களே ஒப்புக்
கொண்டிருக்கின்றீர்கள்.
“சிஆ பிரிவினர் ‘காபிர்’கள். அவர்கள் அனைவரும் கொல்லப் படவேண்டியவர்கள். சிஆக்களை கொலை செய்வது பாவமான செயல் அல்ல.அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் விருப்பமான செயலாகும்.”.......இவ்வாறான கருத்தியலில் வளர்த்தெடுக்கப் பட்ட சுன்னிப் பிரிவு முஸ்லிம் இளைஞன் ஒருவன் சிஆ பிரிவு முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யத் துணிவான்.
இந்தக் கருத்தை தமிழ் மொழி பேசும் முஸ்லிம் அறிஞர்களும் நம்பிக் கொண்டிருப்பதும், இதே போன்ற கருத்தியலில் தமது சிஷ்யர்களை வளர்த்தெடுப்பதும் அவதானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
இதே போன்றுதான் சிஆ பிரிவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் “சுன்னி முஸ்லிம்கள் அனைவரும் நபிக் குடும்பத்துக்கு எதிரானவர்கள்.ஆகவே, நபிக் குடும்பத்துக்கு எதிரானவர்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இவ்வாறு எதிராக இருக்கும் எதிரிகளை கொலை செய்வது பாபமான காரியம் இல்லை.அவர்கள் அனைவரும் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள்.” என்ற கருத்தியலில் அவர்களின் இளைஞர்கள் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறான நச்சுக் கருத்தியலின் பிறந்தகம் எது என்று நம்மால் சரிவரக் கூற முடியாதுள்ளது.
ஆனால்,இந்தக் கருத்தியலின் பயங்கரமான செயல் விளைவுகளை இன்று சிரியாவில் காண முடிகிறது.
எனது கடிதம் உண்மை என தாங்களே ஒப்புக்
கொண்டிருக்கின்றீர்கள்.
தங்களின் வலைதளத்தை படிக்க ஆளில்லையோ? எனது கடிதத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ யாரும் கருத்து தெரிவிக்கவில்லையே? ஏன் என்று புரியவில்லை.
எனது கருத்துக்களை ஒப்புக் கொண்டதற்கு நனறி
“சிஆ பிரிவினர் ‘காபிர்’கள். அவர்கள் அனைவரும் கொல்லப் படவேண்டியவர்கள். சிஆக்களை கொலை செய்வது பாவமான செயல் அல்ல.அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் விருப்பமான செயலாகும்.”.......இவ்வாறான கருத்தியலில் வளர்த்தெடுக்கப் பட்ட சுன்னிப் பிரிவு முஸ்லிம் இளைஞன் ஒருவன் சிஆ பிரிவு முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யத் துணிவான்.
இந்தக் கருத்தை தமிழ் மொழி பேசும் முஸ்லிம் அறிஞர்களும் நம்பிக் கொண்டிருப்பதும், இதே போன்ற கருத்தியலில் தமது சிஷ்யர்களை வளர்த்தெடுப்பதும் அவதானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
இதே போன்றுதான் சிஆ பிரிவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் “சுன்னி முஸ்லிம்கள் அனைவரும் நபிக் குடும்பத்துக்கு எதிரானவர்கள்.ஆகவே, நபிக் குடும்பத்துக்கு எதிரானவர்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இவ்வாறு எதிராக இருக்கும் எதிரிகளை கொலை செய்வது பாபமான காரியம் இல்லை.அவர்கள் அனைவரும் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள்.” என்ற கருத்தியலில் அவர்களின் இளைஞர்கள் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறான நச்சுக் கருத்தியலின் பிறந்தகம் எது என்று நம்மால் சரிவரக் கூற முடியாதுள்ளது.
ஆனால்,இந்தக் கருத்தியலின் பயங்கரமான செயல் விளைவுகளை இந்தியாவில் 1000 ஆண்டுகளாய் காண லாம்.
இன்று ஈராக்கில் நடக்கும் உள்நாட்டுச்சண்டைக்கு யார காரணம்.
வன்முறையை நீக்கி அன்பினால் சமூகமாற்றங்களைச் செய்யலாம் என்ற நம்பிக்கை ஏன் சன்னி முஸ்லீம்களுக்கும் சியா முஸ்லீம்களுக்கும் ஏன் இல்லாது ஒழிந்து போனது.மனித உாிமையை எப்போது மனிதன் மதிப்பான் ? பேதமற்று நேசிக்கும்போதுதான் மனித உரிமைகள் மதிக்கப்படும். இந்தியாவில் லட்சக்கணக்கான கலாச்சார மொழி வட்டார ....... வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு அன்போடு வாழ்ந்து வருகின்றார்களே ? சியா சுன்னி குர்தீஷ் என்ற 3 வேறுபாடுகளைக் கூட சகித்துக் கொள்ள இயலாத வல்லாதிக்க உணா்வு கொண்டவர்களாக 3 பிரிவினருமே இருப்பதால்தான் இந்த பிரச்சனை. முகம்மதுவையும் குரானையும் இவர்கள் மறந்து இந்துவாக மாறிவிட்டார்கள் என்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மானுட வசந்தம் இம்மக்கள் மனதில் வீசத்தொடங்கும். ஈராக் அமைதிப் புங்காவாக மாறும். அல்லது அமெரிக்காவின் வலிமையான போர்வீமானங்களின் இலக்கிற்கு ஆளாகி மனித உயிர்கள் வீணாகப்போகின்றது.
Hey, Stop. Stop. Why are you committing suicide?
Let me die. Nobody loves me.
God loves you. Are you a believer?
Yes.
Are you a Muslim? Or?
Alhamdulillah, I am a Muslim.
I, too, am a Muslim.
You are a Shia or a Sunni?
------- Sunni
I am also a Sunni. And what is your religion?
Hanfi
Me too. You are a Deobandi or a Bareillvi?
Bareillvi.
Me too. Tanzeehi or Tafgeeri?
Tanzeehi.
I am also a Tanzeehi. Tanzeehi Azmati or Tanzeehi Farhati?
Tanzeehi Farhati
I also belong to Tanzeehi Farhati. Tanzeehi Farhati Jamaat ul Uloom, Ajmer or Tanzeehi Farhati Jamaat ul Noor Mewat?
Tanzeehi Farhati Jamaat ul Noor Mewat.
You Kafir…. You must die.
URL: http://www.newageislam.com/multimedia/youtube-video/a-bitter-truth-–-kafir,-kafir/d/13246
1)முகம்மதுவையும் குரானையும் இவர்கள் மறந்து இந்துவாக மாறிவிட்டார்கள் என்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மானுட வசந்தம் இம்மக்கள் மனதில் வீசத்தொடங்கும். ஈராக் அமைதிப் புங்காவாக மாறும்.
2)அல்லது அமெரிக்காவின் வலிமையான போர்வீமானங்களின் இலக்கிற்கு ஆளாகி மனித உயிர்கள் வீணாகப்போகின்றது.
எனது கருத்து உண்மையாகிவிட்டது.ஈராக்கை அமொிக்க போா்விமானங்கள் வறுத்துக் கொண்டு இருக்கின்றன.அப்பாவி மக்கள் பலியாக வாய்ப்புகள் நிறையவே உண்டு.
எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
ஓர் உதாரணம் இங்கே குறிப்பிடுகிறேன்.
நான்கு கண்பார்வை இல்லாதவர்கள் ஓர் யானையை அதன் நான்கு வெவ்வேறு இடங்களில் தொட்டு விட்டு பிறகு யானை என்றால் எப்படி இருக்கும் தெரியுமா என்று நான்குவிதமாக சொன்னால் அவர்கள் எதை உணர்ந்தார்களோ அதைத்தான் மக்களிடம் சொல்லமுடியும்.
நான் ஒரு விஷயத்தைப்பற்றி கருத்து சொல்வதென்றால் அதைப்பற்றி முழுமையாக உண்மையாக எனக்குத்தெரிந்திருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவருடைய பிறப்பு, அந்த ஊரின் நிலை, மக்களின் கலாசச்சாரம், இப்படி எல்லாவற்றையும் வைத்து தான் நான் கருத்துக்ககளை சொல்ல வேண்டும். யாரிடம் சொல்கிறேனோ அவரும் அந்த உண்மையான சூழலைவைத்து தான் அந்த விஷயங்களை விளங்க வேண்டும். அப்படி விளங்கினால்தான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் போகும்.
ஆகவே நபி(ஸல்) அவர்களையும் அவர்கள் தோழர்களையும் பற்றி இறைச்செய்தி வருவதற்கு முன்னால் எப்படி வாழ்ந்தார்கள் என முழுமையாக தெரிந்துகொண்டு அதன்பிறகு எப்படிவாழ்ந்தார்கள் எனவும் புரிந்து பிறகு கருத்துகளை பகிரவும்
Post a Comment