அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, February 3, 2013

படம் பார்க்காதவர்கள் படம் பார்த்து படம் பார்ப்பவர்களுக்கு பார்க்கக் கூடாத படம் என்று சொன்ன படம் .......விஸ்வரூபம்......



விஸ்வரூபம் வெளி வருவதற்கு முன்னரேயே விஸ்வரூபம் எடுத்த பிரச்சினை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் படம் விஸ்வரூபம் என்பதாகும்.

நாமறிந்த நமது ஊடகவியல் நண்பர்கள் சிலருக்கு விஸ்வரூபம் படத்தைப் போட்டுக் காண்பித்தார்கள் இலங்கை தணிக்கை சபையினர்.

அந்த நண்பர்களில் அநேகர் சினிமா தியேட்டருக்குச் சென்று சினிமா பார்க்காதவர்கள்.

இன்னும் சிலர் சினிமா கூடாது என்ற கருத்தில் இருப்பவர்கள்.

ஆக்ரோசமாக விஸ்வரூபம் எடுத்து விஸ்வரூபத்தை எதிர்க்கும் வஹ்ஹாபிய நிதியியல் பொறியில் சிக்கி தமது எஜமானர்களின் திருப்திக்கு ஜால்ரா அடிக்கும் திரு பி.ஜெய்னுலாப்தீன் அண்ணனின் தம்பிமாரோ இசையைக் கேட்பதுகூட 'ஹராம்' தவறு என்று வாதிடுபவர்கள்.

அவர்களின் இத்தகையப் போக்கு சாராய கடையில் சாராயம் குடிக்கும் ஒருவன் 'சுவையூட்டிக்கு' வைக்கப் பட்ட பன்றி இறைச்சியை 'ஹராம்'என்று சொன்னவனின் நிலையில் இருக்கின்றது என்று நண்பர் ரூமி சொல்வது நமக்குக் கேட்கிறது..

விஸ்வரூபம் திரைப் படத்தை இலவசமாக இலவச கேக் கூல் ட்ரிங்க்ஸ் களுடன் ரசித்துப் பார்த்த இவர்கள் இஸ்லாமிய முறைப்படி நமக்கு நாம் அந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கும் தகுதியை இழந்து நிற்கின்றார்கள்.



ஏனெனில்,தாம் செய்த ஒரு கருமத்தை பிறர் செய்யக் கூடாது என்று இஸ்லாத்தில் சொல்லுவதற்கு உரிமை இல்லை.

அந்தத் திரைப் படத்தைப் பார்த்த அடுத்த வினாடி அந்த சினிமாவின் கதையை விமர்சிக்கும் கருத்தை சொல்லும் உரிமைக்கு அவர்கள் தகுதி பெற்றாலும் ஏனைய மக்களுக்கு அதனைப் பார்க்கக் கூடாது என்று சொல்லுகின்ற எச்சரிக்கும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.

திரு.பி.ஜெய்னுலாப்தீன் விஸ்வரூபம் திரைப் படத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கவனித்தால் அவர் இஸ்லாத்துக்கு முரணான வகையில் கமல் ஹாசன் என்ற தனி நபரின்  தனிப்பட்ட வாழ்க்கையை தாறுமாறாக விமர்சிக்கிறார்.

கமல் ஹாசன் என்ற தனி நபர் தனது வாழ்க்கை சம்பந்தமான தீர்மானங்களை முடிவு செய்த நிலையில் அது எந்த சமூகத்தையும் பாதித்ததில்லை.

சில சமயம் அவரது தீர்மானங்கள் அவரை சுற்றி இருக்கும் உறவுகளைப் பாதித்து இருக்கும்.

அது அவரையும் அவர் சார்ந்த உறவுகளினதும் தனிப்பட்ட பிரச்சினை.

அதில் மூக்கை நுழைக்க முஸ்லிம் குடி மகனுக்கு உரிமையில்லை.

இன்னுமொரு முஸ்லிம் தலைவர் திரைப்படம் என்றால் பாடல் இருக்க வேண்டும்,காதல் இருக்க வேண்டும்,காமெடி இருக்க வேண்டும் என்று சொல்லி திரைப் படம் என்றால் என்ன என்று தமக்கிருக்கும் அறிவை வெளியே சொல்லி பெரிய காமெடியனாக தன்னை இனம் காட்டிக் கொள்கிறார்.

அந்தக் கூட்டத்தார்களில் சினிமாவை கலை நயத்துடன் ரசிப்பவர்களும் இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் கூட்டம் குறைவு.

இலங்கையில் விஸ்வரூபம் திரைப் படத்தைப் பார்த்த ஒரு பிரசித்தமான கலைஞனிடம் நாம் விஸ்வரூபம் சம்பந்தமான அவரது கருத்தைக் கேட்டோம்.

அற்புதமான திரைக்காவியம் என்றார்.

கமலின் நடிப்பு அபாரம் என்றார்.

ஹலிவூட் திரைப் படத்துக்கு நிகராக தமிழில் எடுக்கப் பட்டிருக்கும் ஒரேயொரு திரைப் படம் என்றார்.

இசையும் காட்சியமைப்பும் உயர்ந்த தரத்தில் இருக்கிறது என்றார்.

"அதில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருக்கிறதாமே?" என்றோம்.

"அப்படி ஒன்றும் தெரியவில்லை."என்றார்.

"அல் குர் ஆன் வசனங்கள் தவறான கட்டங்களில் சொல்லப் படுகின்றதாமே?" என்றோம்.

"இல்லையே" என்ற அவர் தொடர்ந்து "ஒரு கட்டத்தில் கமல் ரப்பனா ஆத்தினா பித் துன்யா என்று சொல்லியவாறு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி இருக்கிறது.ஆனால்,அந்தக் காட்சி அமைப்பும் எடுக்கப் பட்டிருக்கின்ற தோரணையும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கின்றதே தவிர எதிராக இல்லை." என்றார்.

"கலிமாவை சொல்லியபடி கழுத்தை அறுக்கும் காட்சி இருக்கிறதாமே?" என்றோம்.

"அமெரிக்க ஆதரவு அல் கைதா-தாலிபான் போராளிகள் அதனை விடவும் மோசமான செயல்களை செய்வதை நீங்கள் யூ டியூபில் பார்த்ததில்லையா?"என்று நம்மிடம் திருப்பிக் கேட்டார்.

"அப்படியென்றால் கமல் ஹாசன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்கிறீர்களா?" என்று கேட்டோம்.

"இல்லை" என்ற அவர் தொடர்ந்து "ஆப்கானிஸ்தானின் இன்றைய பயங்கரமான நிலைக்கு அமெரிக்க உளவு நிறுவனங்கள்தான் காரணம்.அந்த உளவு நிறுவனங்கள் அல் கைதா-தாலிபான் அமைப்புக்களை உருவாக்கி அவர்களைக் கொண்டு தமது இலக்குகளை அடைவதுடன் அத்தகைய இஸ்லாமிய அமைப்புக்களின் இருப்பு உலகத்துக்கு அச்சுறுத்தலானது என்ற செய்தியை வெளியே சொல்வதற்கு கமல் ஹாசனை ஒரு ஊடகமாக உபயோகித்து இருக்கக் கூடும்"என்றார்.

"அப்படி என்றால் P .J .விவரூபத்துக்கு எதிராக களம் இறங்கியிருப்பது சரிதானா?" என்று கேட்டோம்.

"இல்லை......அது கமல் என்ற தனி நபரைக் குறி வைத்த அரசியல்........நமது P .J .கூட்டணியின் பின்னால் அம்மாவின் செல்வாக்கு இருக்கிறது.அவர் அம்மா சொல்வது போல செய்வார்.அம்மாவுக்கோ கமலைப் பிடிக்காது."என்றார்.

"சரி......அப்படியென்றால் நீங்கள் இன்று நம்மிடம் சொல்லிய இந்தக் கருத்தை அன்று திரைப் படத்தைப் பார்த்தவுடன் அங்கே சொன்னீர்களா"என்று கேட்டோம்.

"ஆம்..."என்ற அவர் தொடர்ந்து "விஸ்வரூபம் திரைப் படத்தில் கமல் தனது பிராமண மனைவியை விபச்சாரிப் போலக் காட்டி இருக்கிறார்.இது பிராமண சமூகத்தை அவமதிக்கும் செய்கையை செய்கிறது.இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்ப்பாட்டங்களினால் இந்த செய்தி நசுங்கி விட்டது.அதே போல இந்திய "ரோ"அமைப்பினால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு பயிற்ச்சி அளிப்பது போல அல்லது "ரோ"வின் செய்கையினால் ஆப்கானிஸ்தானில் பாதிப்பு ஏற்படுவது போல காட்சி அமைப்புக்கள் இருக்கின்றன.இது இந்திய அரசுக்கும் நல்லதல்ல.அடுத்தது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் இங்கே இருக்கும் பெரும்பான்மை மக்களினால் முன்னெடுக்கப் படுகின்ற இத்தருணத்தில் இந்தத் திரைப் படம் இங்கு திரையிடப் படாமல் இருப்பதே நல்லது என்று சொன்னேன்" என்றார்.

"படம் பார்க்காதவர்கள் படம் பார்த்து படம் பார்ப்பவர்களுக்கு படம் பார்க்க வேண்டாம் என்று சொன்ன திரைப் படம்  -விஸ்வரூபம்...இல்லையா?"என்றோம்.

அவர் சத்தமாக சிரித்தார்.

"நான் அந்த ரகம் இல்லை"என்றார்.

நமது இந்தப் பதிவை ஐரோப்பாவில் விஸ்வரூபம் சினிமாவைப் பார்த்த ரசிகர்களின் ஆய்வுக்கு விட்டு விடுகிறோம்.

"ஹலோ...இம்ரான்    பிரான்சில் விஸ்வரூபம் பார்த்தாகி விட்டதா?"


10 comments:

Dr.Anburaj said...

இந்தியாவில் விரைவில் வரயிருக்கும் பாராளுமன்றத் தோ்தலுக்கு ஒரு முன்னேட்டம் பலம்காட்டும் முயற்சி.தமிழகத்து முஸ்லீம்களின் தனித் தலைவனாக தனக்கு அங்கிகாரம் கிடைக்க சிலரின் ஆசைத் திட்டத்திற்கு பிரச்சார, பலம் காட்ட சமூக பக்தியைக் காட்ட கிடைத்தவாய்ப்பு ” விஸ்வரூபம்” திரைப்படம்.மத கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத ”அம்மாவும்” வழக்கத்துக்கு மாறாக ஜவருல்லாவின் தாளத்திற்கு நடனம் ஆடுவதுபோல் உள்ளது ஆச்சரியமே!. பாராளுமன்றத்தேர்தலில் விஸ்வரூபம் பிரச்சனையில் வெற்றி பெற்று தன்னை முஸ்லீம் சமூக மதிப்புமிக்க தலைவராக காட்டுவதில் வெற்றி பெற்ற ஜவகருல்லா - அதிக சீட்டுகளைக் கேட்பார். அப்போது அடுத்த ”கூத்து ” தமிழ்நாட்டில் அரங்கேறும். பொறுத்துப் பாருங்கள் வேடிக்கையை.

Dr.Anburaj said...

ஒரு விசயத்தில் நீங்களும் தவ்கீத் ஜமாத் பிரச்சாரப்பிரங்கி ஜைனுலாப்தீனும் ஒத்தக் கருத்தை உடையவர்கள் தாம். அவரும் தாங்களைப் போல் இந்துக்ளை ” அரேபிய மொழியில் ” காபீர்கள்” என்று இக்ழ்ந்துதான் பேசுவார்.காபீர்கள் என்று அழைக்கப்படும் காதீயானி அகமதிய முஸ்லீம்கள் தமிழநாட்டில் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்பது எனக்கு நன்கு தெரியும்.காபீர் என்றச் சொல் அரபு இலக்கியங்களில் குரான் - கதீஸ- பெரிய அண்ணன் முகம்மதுவின் சுன்னா? வில் எங்காவது கண்ணியமான,மதிப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா ?இக்கேள்விக்கு
யாரிடமிருந்தும் பதில் இல்லையே இதுவரை !!!!

ahmad said...

dear Anburaj,
Meaning of kaafir is non believer,,a person who does not believe in ONE GOD.

Dr.Anburaj said...

ஐயா அகமது அவர்களுக்கு,தங்களின் கடிதத்திற்கு நன்றி.காதியானிகள்காபீர்கள்,1. பெண் மாப்பிள்ளை கொடுக்காதே 2.அவன் கடையில் சாமான் வாங்காதே3.அவர்கள் இறைச்சிக் கடை இறைச்சியை
வாங்காதீர்கள்-அது கராம் 4.பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிக்கக் கூடாது 5. அடக்கம் செய்ய ஊர் கல்லறை தோட்டத்தில் அனுமதிக்கக் கூடாது....தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியவை-தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. நான் பார்த்தேன்.முகம்மதுவை ரசுலாக ஏற்காத அனைவரும்-யுதர்கள்,புத்தமதத்தினர், சீக்கியர்கள், இந்துக்கள்,...
அரேபிய மேலாதிக்ககோட்பாடுபடி ” இழிவானவர்கள்-காபீர்கள் - கராம் ஆனவர்கள்-ஷெர்க் ... இப்படி பல வார்த்தைகள். அரேபிய முகமதிய நூல்கள் படி ஒரு காபீர் மனிதன் ஆக மாட்டான்.இந்துக்கள் காபீர்கள் என்றால் அவர்களுக்கும் ” மேற்படி நடவடிக்கைதான் என்பதுதானே பொருள்.காபிர் என்ற பட்டம் சுமத்தி யுதர்களையும், கிறிஸ்தவர்களையும் அரேபிய மண்ணில் இருந்து அகதியாக விரட்டிஅடித்தார் கருணை வள்ளல் முகமது.ஆப்கானிஸதானம் - இந்துக்கள் மட்டும் வாழ்ந்த நாடு. இன்று அங்கி இந்துக்கள் யாரும் இல்லை. கௌதம புத்தர் போல் அன்வை மட்டும் முதலீடாக வைத்து சமய பிரசாரம் செய்ய விலலை. காபிர் பட்டம் அளித்து, வறுத்துஅழித்து விட்டார்கள். பாக்கிஸ்தானிலும் இந்து காபிர்களைக் காணவிலலை. கிழக்கு பாக்கிஸ்தானிலும் இந்துக்களைக் காணர்மல் போய்க் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ளதுபோல் சிறுபான்மை கல்வி உதவித்தொகை,சிறப்பு உதவித் தொகை, அரசுபணிகளில் இடஒதுக்கீடு,சிறுபான்மைமக்கள் பொருளாதார கழகம் போன்றவை இந்துகாபிர்களுக்கு கிடையாது.காபீர் என்றால் பழைய விளக்குமாறுதான் கிடைக்கும்.முஸ்லீம்கள் நடத்தும் பயங்கரவாத காரியங்களுக்கு தத்துவ ஆதாரம் ” காபீர்களை ” அழிக்கலாம் என்பதே.இந்த பட்டத்தை இந்துவாகிய நான் விரும்பவேண்டுமா ?
சொல்லுங்கள் அகமது அவர்களே ?

Dr.Anburaj said...

NHM writer என்ற மென்பொருள் வலைதளத்தில் உள்ளது.அதை பதிவிரக்கம் செய்து கொண்டால் கணினியின் வலது பக்கம கீழ்பகுதியில் ”மணி” வடிவில் ஒரு ஐகான் காணப்படும். அதைச் சொடுக்கினால் Bamini Unicode தோன்றும். அதைச் சொடுக்கி வலைதளத்தில் தமிழில் எழுதலாம். ஆங்கிலத்தில எழுத வேண்டும் எனில் Keyman off என்பதைச் சொடுக்க வேண்டும்.

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானில் அரசால் காபீர் என்று முத்தரைகுத்தப்பட்ட காதியானிகளுக்கு எதிராக பிற முஸ்லீம்கள் செய்த கலவரம் குறித்த அறிக்கை -முனீர் கமிஷன் அறிக்கை -www.newageislam என்ற
தளத்தில் உள்ளது. படித்துப் பாருங்கள்.உலகில் உள்ள முஸ்லீம்களால் நடத்தபபடும் நூற்றுக்கணக்கான பயங்கரவாத இயக்கங்களின் ( Al quida,Al-umma ,Laxur Toiba etc ) சித்தாந்தம் ” காபீர்களை அழிப்பது சுன்னா ” அல்லாவுக்கு பிரியமானகாரியம் என்பதுதான்.பாக்கிஸதானில் பிறந்து இந்திய பாக் பிரிவனையின்போது 3 இந்துக்களை கொலை செய்த அன்வர் சேக் என்பவா் பிற்காலத்தில் அரேபிய போரினவாதமே இஸ்லாம் என்று தெரிந்து இஸ்லாத்தின் பல கருத்துக்களை விமர்சனம் செய்த போது நாடடை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.அவா பின்னர் தானாகவே இந்துவாக மதம் மாறிவிட்டார். அவரின் வலைதளம் www.anwarsheik .படித்துப் பாருங்கள். ஆன்மீகம் வேறு. இயக்கம் வேறு.முகம்மது தனது தாய் மண்ணின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களை அல்லாவின் கட்டளை என்று தவறுதலாக போதித்து உலகில் மிகக் கொடுரமான இரத்தக் களறிக்கு காரணமாக இருக்கின்றார்.ஒவ்வொரு நாட்டிற்கும் தனிமொழி, பண்பாடு, இலக்கியங்கள்,பாரம்பரிங்கள்,என்று உலகே ஒரு அற்புத மலர் தோட்டம். இதை அரேபியாவாக மாற்ற முயலும் இயக்கமே இஸ்லாம் என்பது.- இந்தியாவில் சைவம்-வைணவம் இயக்கமாக மாறிய பேர்து வன்முறை நிறைய நடந்தது. சமணம்- சைவமும் இயக்கமாகியபோது வன்முறை நடந்தது.இறைவனை அடைய பல வழிகள் உண்டு என்பதை பெரும்பாலான மக்கள் உணர்ந்திருந்ததால் இயக்கங்கள் அழிந்துபோய் வன்முறை நடவடிக்கைகள் ஆதரவற்று போய் வாடி விட்டது இஸ்லாம் கிறிஸ்தவம் என்பது கூட்டததைச் சோ்- ஜமாத்-சபையை உருவாக்கு.ஆதிக்கபோர் நடத்து என்பதுதான்.தம்மை சிலுவையில் அடித்துச் சித்திரவதை செய்த மக்களுக்காக ” பிதாவே இவர்களை மன்னியும்.தாங்கள் செய்வது என்னவென்று அறிகிலார்” என்று பிரார்த்தனை செய்த இயேசு ஆன்மிகவாதி. இயக்கவாதி அல்ல.இந்தியாவில் பிறந்த சமய நூல்களில் ” இந்து ” எனற் வார்த்தையில்லை.இந்துத்துவம் என்து இந்திய கலாச்சார மேலாதிக்கம் அல்ல. அது பண்பாடு தர்மம்.மனித நேயம்.தனிமனித ஒழுக்கம்.மனித வளம் பெருக்கம் நடவடிக்கை.

habeeb said...

Dear Mr.Anburaj, I support your grievances about the Muslims attitude towards the Non-Muslims. Though I beg to emphasize that these attitudes have nothing to do with Islam as taught by the great prophet of Islam.This is the attitude of the establishment Islam of the corrupt UN-Islamic, Omayyad Dynasty, the usurpers of the Islam of the Prophet Mohammed (SAW).

Dr.Anburaj said...

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சிறுவர்களுக்கான ”அந்தர்யோகம் ” நடைபெற்றது. 1217 போ்கள் கலந்து கொண்டதில் 403 போ்கள் அமெரிக்கர்களின் குழந்தைகள்.( 21 வது நாள்)நிறைவு நாளில் அமேரிக்க குழந்தைகள் ” பக்த பிரகலாதன்” என்ற நாடகத்தை நடித்தார்கள். இந்து சமய சார்பான ஒரு மடம் நடத்திய ஆன்மீகப்பயிற்சியில் தங்கள் குழந்தைகள் கலந்து கொண்டது குறித்து அமெரிக்க பெற்றோர்களிடம் கேடடபோது ” எனது குழந்தைகள் மதம் மாறவில்லை. அவர்களின் ஆன்மீக கலாச்சார உணாவு பலப்படுத்தப்படுகிறது. என்வே ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு எனது குழந்தைகள் சென்று வருவதில் எந்த தடைவிதிக்க நியாயம் இல்லை. அமெரிக்க பண்பாட்டு தளத்தை
வளப்படுத்தும் பணியில் ஸ்ரீமடம் ஈடுபட்டு வருகிறது.அதுதான் சமய, ஆன்மீகப்பணி.

Dr.Anburaj said...

Sharia Law and it's rule that a mother or father gets no punishment for killing children?

So, in the Sharia Law Manual, Umdat 'al Salik, under section o1.2, it says that a person is not to be punished for killing thir children or their children's children. In the case of murder, the punishment is either a) retaliation wherein a family member can kill the murderer, or b) they can accept blood money (in certain situations).

O1.2

The following are not subject to retaliation:

-1- a child or insane person, under any circumstances (O: whether Muslim or non-Muslim.

-2- a Muslim for killing a non-Muslim;

-3- a Jewish or Christian subject of the Islamic state for killing an apostate from Islam (O: because a subject of the state is under its protection, while killing an apostate from Islam is without consequences);

-4- a father or mother (or their fathers or mothers) for killing their offspring, or offspring's offspring;

-5- nor is retaliation permissible to a descendant for (A: his ancestor's) killing someone whose death would otherwise entitle the descendant to retaliate, such as when his father kills his mother. [back to top]

Blood money would not be applicable either in the case of a parent killing their child, correct? So in essence, per Sharia, there is no punishment for a parent killing their child except possibly the need to offer expiation to Allah

Dr.Anburaj said...

அரேபியாவின் அசிங்கமான,கோரமுகத்தை காணுங்கள் அகமது மற்றும் கபீப்
அவர்களே! ஒரு தந்தை தன் மகளை,ஒரு கணவன் தன் மனைவியை, ஒரு முஸ்லீம் முஸ்லீம் அல்லாதவரை-காபீரைக் - கொன்றாலும் அது கடுமையானக் குற்றம் அல்ல என்கிறது முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் உள்ளச் சட்டம்.இந்துக்களை காபீர்கள் என்ற நிலையில் ஒரு முஸ்லீம் இந்துவைக் கொன்றால் அது கடுமையானக் குற்றம் அல்ல. ஒரு இந்து ஒரு முஸ்லீமைக் கொன்றால் அது கடுமையான மரணதண்டனை விதிக்கக் கூடிய குற்றம்.எனனே மனிதத்தன்மை.காட்டுமிராண்டித்தனத்தை சட்டமாக்கிவைத்திருக்கும் ஒரு சமுதாயத்தின் சட்டம், சமபிராதய்ங்கள் -இஸ்லாம் என்ற பெயரில் உலக்துக்கு உதாரணம்.உலகம் உருப்படுமா ? இந்துக்கள் காபிர் என்ற வார்த்தைக்கு எவ்வளவு கொடுமையான அரத்தம் உள்ளதுஎன்பதை தற்சயம் உங்களுக்கு புரிந்து இருக்கும். அதை அறிந்துதான் நான் பதைபதைக்கின்றேன். என்னை ”இந்து” என்று கண்ணியமாக,மதிப்புமிக்கவனாக என்னை நடத்தும்
ஒரு கருத்தை இஸ்லாமிய சமூகத்தில் தேடுகின்றேன். அகலுவைத் இணையதளத்தை படிக்க பங்கேற்றது அதற்குதான்.அகலுவைத் தளத்தை நடத்தும் திரு.அப்துல் ரசாக் அவர்களும்
அரேபிய காட்டுமிராண்டித்தனத்தை அடியொன்றி இந்துக்களை காபீர் என்றுதான் கருத்து தொிவித்துள்ளார்.இக்கருத்து உலகில வாழும் பெருவாரியான - 98% இந்துக்களுக்கு தெரியாது.அரேபியாவின் ” காட்டுமிராண்டிக்தனத்தை” மேலும் அறிந்து கொள்ளத்தான் நான் அகலுபைத் தளத்தைப்படித்து வருகின்றேன். அரேபிய அடிமைகள் வேறு எதைப்பற்றி சிந்திப்பார்கள்.எழுதுவார்கள்.ஒரு தமிழ்பேசும் முஸலீம் என்ற நிலையில் திருக்குறளைப் பற்றியோ தமிழ் இலக்கியம் பற்றியோ ஒரு குறிப்பையும் அகலுபைத் இதுவரை எழுதியதில்லை.அவரை விதைத்தால் ஆப்பிளா விளையும். இந்துக்களை மலினப்படுத்துவதில் இலங்கை தமிழ்பேசும் முஸ்லீம்கள் அரேபியர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad