அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, February 13, 2013

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மௌனம் காப்பது ஏன்?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மௌனம் காப்பது ஏன்?


http://youtu.be/JH13_zrZWf8

தவறான தீர்ப்பு கொள்வதற்கு காரணமான உலமாக்கள்.......

7 comments:

Dr.Anburaj said...

அரேபியாவை சற்று மறந்து தமிழை நினைப்போமே ஐயா
தினமணி -First Published : 10 February 2013 04:25 AM IST
நான்மணிக்கடிகை

கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்

உயிர் இடையிட்ட விடுக்க; எடுப்பின்

கிளையுள் அழிந்தார் எடுக்க; கெடுப்பின்

வெகுளி கெடுத்து விடல்!

(பாடல்-79)

கொடுக்க விரும்பினால், உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஒன்றை விட (விடுக்க) விரும்பினால், உயிர்கள் மேல் உள்ள பற்றை விட வேண்டும். ஒருவரை உயர்த்தி நிறுத்த வேண்டும் என்றால், ஏழை உறவினரைத் தூக்கி (எடுத்து) நிறுத்துக. ஒன்றைக் கெடுக்க வேண்டும் என்றால், உன்னிடம் உள்ள சினத்தைக் கெடுத்துவிடுக.

Dr.Anburaj said...

அரேபியாவை மறந்து தமிழ் கொள்வோம மனதிடை கொன்றை வேந்தன் வெண்பா.
"வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை

கண்பார்க்கக் கையால் எழுதானை - பெண்பாவி

பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளென்று

எற்றோமற் றெற்றோமற் றெற்று''

என்பது ஒளவையார் பாடிய வெண்பா.



""எற்றோமற் றென்றே இயம்பும் பழமொழிபார்

குற்றமகல் சாத்தந்தை கோத்திரனே - வெற்றி

சிவத்தார் வெள்ளோடைச் சிவமலைபூ பாவொத்

தவிடத்தில் நித்திரை கொள்''

என்பது கொன்றை வேந்தன் வெண்பா.

நன்றி -தினமணி

Dr.Anburaj said...

அரேபியாவை சற்று மறந்து தமிழ் உலகம் கொள்வோம்.
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்

By முனைவர் அ. சிவபெருமான்

First Published : 27 January 2013 02:27 AM IST

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் எட்டு நூல்களை அருளிச் செய்துள்ளார். அவற்றில் ஒன்று சிவப்பிரகாசம். இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 பாடல்களை உடையது. அப்பாடல்களுள் ஒன்று சமய இலக்கியத்தைக் கற்பவர்கள் மூன்று வகையினராக விளங்குவர் என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

முதல் வகையினர்

பழைய இலக்கியம் என்பவை முற்றிலும் நன்றாகா; இன்று புதிதாகத் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் தீதாகா. ஒன்றை பல நிலையில் வைத்து எண்ணிச் சிந்தித்து அவற்றுள் இது நல்லது, இது கெட்டது என்று துணியும் நல்லியல்புடையவர்கள் சிறந்த மாணிக்க மணியை அழுக்குப் புடவையிலே முடிந்திருந்தாலும் புடவையின் குற்றம் நோக்காமல் மாணிக்கத்தினுடைய நலத்தையே கொள்வர். அஃதாவது, புற இயல்பைத் தள்ளி உள்ளியல்பாகிய உண்மையையே நாடுவர்; இவரெல்லாம் முதல் வகையினராவர்.

நடுவகையினர்

கிடைத்த மாணிக்கமணி தொன்று தொட்டே களங்கம் இல்லாமல் அழகாயிருக்கிறதா என்பதை மட்டும் ஆராய்வர். அவ்வாறு ஆராய்ந்து அம்மணி தொன்று தொட்டே அழகுடையதாயின் அதனை அணிந்து கொள்வர்.

கடையாயவர்

பொருளின்கண் சார்ந்த குற்றத்தையும் குணத்தையும் ஆராய்ந்து எண்ணித் துணியும் அறிவில்லாதவர் மூன்றாம் வகையினராகிய கடையராவர். இவர்கள், சிறந்த மாணிக்கமணியை ஒருவர் உயர்த்திக் கூறினால் இவரும் உயர்த்திக் கூறுவர்; தாழ்த்திக் கூறினால் இவரும் தாழ்த்திக் கூறுவர்; அஃதாவது, இவருடைய இயல்பு எத்தகையது எனில், தாமாக ஆராய்தலும் துணிதலும் இல்லாதவர் என்க. மேற்செய்தியை உமாபதி சிவாசாரியார் பின்வரும் பாடலொன்றில் எடுத்தோதியுள்ளார்.

மேற்பாடல் சமய இலக்கியத்தைக் கற்கும் மக்களை மூவகையினராக வகைப்படுத்திக் கூறியதாகக் கொண்டாலும், பாடலின் உள்ளார்ந்த கருத்து வருமாறு:

÷சமய இலக்கியத்தைக் கற்கும் முதல் வகையினர், நூலின் உண்மையை ஆராய்ந்து உவப்பர்; இரண்டாம் வகையினர் நூலின் செம்மையை நோக்கி உவப்பர்; மூன்றாம் வகையினர் புகழ்ந்தால் புகழ்வர், இகழ்ந்தால் இகழ்வர். இருப்பினும் பெரியோர்கள் இந்நூலில் (சிவப்பிரகாசம்) குற்றம் நோக்காது உவப்பர் என்பது ஆசிரியர் கருத்தாம். அத்துடன், இப்பாட்டு பாயிரத்துள் அவையடக்கத்தின் பாற்பட்டதாகும்.



தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா; இன்று

தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா; துணிந்த

நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்

நவையாகா எனஉண்மை நயந்திடுவர்; நடுவாம்

தன்மையினார் பழமைஅழகு ஆராய்ந்து தரிப்பர்;

தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்

இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்

இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!
நன்றி தினமணி

Dr.Anburaj said...

விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை

First Published : 20 January 2013 12:15 AM IST

சாவாத தில்லை பிறந்த உயிரெல்லாம்;

தாவாத தில்லை வலிகளும்; மூவா

இளமை இயைந்தாரு மில்லை வளமையில்

கேடின்றிச் சென்றாரும் இல்.

(பாடல்-76)

பிறந்த உயிர்களில் இறவாதது இல்லை. பிறரை வருத்தும் வலிமை, கெடாமல் இருப்பதில்லை.

இளமை, முதுமை அடையாது இருப்பதில்லை. வளமான செல்வம் பின்னொரு காலத்தில் கெட்டழியாது இருப்பதில்லை.
நன்றி தினமணி

Dr.Anburaj said...

விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை

By dn

First Published : 03 February 2013 02:11 AM IST

நாவன்றோ நட்பறுக்கும்; தேற்றமில் பேதை

விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின்; அவாஅப்

படுமன்றோ பல்நூல் வலையில்; அடுமன்றோ

மாறுவுள் நிறுக்கும் துணிபு!

(பாடல்-78)

நல்ல நட்பை நலமற்ற உரையாடல் நாசப்படுத்திவிடும். கடுமையான கண்டிப்பும், தண்டிப்பும் முட்டாளின் பிடிவாதத்தைப் போக்கிவிடும். நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றல் வேண்டாதவற்றின் மேல் உள்ள வேட்கையை அழித்துவிடும். ஒவ்வொன்றிற்கும் மாறுபட்டு மறுத்துரைக்கும் துணிச்சல் ஒருவரது வாழ்வைக் கெடுத்துவிடும்.

2.காவடிச்சிந்து' அண்ணாமலை ரெட்டியார் தனது இளவயதில் ஒருமுறை ராமநாதபுரம் மன்னரைக் காணச் சென்றார். அப்போது அங்கு மாம்பழக் கவிச்சிங்கக் கவிராயர் இருந்தார். அண்ணாமலை ரெட்டியாரும், கவிராயரும் மட்டுமே இருந்தனர். ஒருவரை மற்றவர் அறிந்திருக்கவில்லை. ரெட்டியார் கவிராயரை நோக்கி,

""தாங்கள் யார்?'' என வினவினார்.

""உலகெல்லாம் புகழ்ந்தோதுதற்கரிய மாம்பழம்'' எனக் கவிராயர் விடை பகர்ந்தார். அதைக் கேட்ட ரெட்டியார்,

""வண்டிருக்கும் பழமா? வண்டில்லாத பழமா?'' என எதிர் வினாத் தொடுத்தார். எதிர்பாராத இவ்வினாவைக் கேட்ட கவிராயர், பதில் சொல்வது எவ்வாறு எனத் திகைத்தார். வண்டிருக்கும் பழம் எனில், அது இறைவனுக்குப் படைக்கவும், மன்னருக்கு அளிப்பதற்கும் ஆகாது. வண்டில்லாத பழமெனில் அதில் சுவையிருக்காது என்பதை அறிந்திருந்த கவிராயர் விடை கூறாமல், ""தாங்கள் யார்?'' என ரெட்டியாரை நோக்கிக் கேட்டார்.

ரெட்டியார் நகைச்சுவை தோன்றத் தனது பெயரை நேரடியாகக் கூறாமல், ""தமைய பர்வதம்'' (தமையன்-அண்ணா, பர்வதம் - மலை) என விடையளித்தார்.

உடனே கவிராயர், ""நீர் பிஞ்சிலே பழுத்த நல்ல பழம்'' எனப் பெருமையுடன் ரெட்டியாரை வாழ்த்தி, அவர் பாடிய காவடிச்சிந்தில் உள்ள சில பாடல்களைக் கேட்டு மகிழ்வுற்றாராம்.
3.விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை

By dn

First Published : 16 December 2012 01:03 AM IST

ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்

நாழிகையானே நடந்தன; தாழீயா,

தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்

வெஞ்சொலால் இன்புறு வார்.

(பாடல்-71)

ஊழிகள் ஆண்டுகளால் கணக்கிடப்பட்டுக் கழியும். யாமம் நாழிகைகளாகக் கணக்கிடப்பட்டுக் கழியும்.

சான்றோர்கள் தம்மினும் மிக்கோரிடம் ஐயங்களைக் கேட்டுக் காலத்தைச் செலவழிப்பர். அறிவிலார்

பிறரைக் கடும் சொல்லால் திட்டித் திட்டியே காலத்தைக் கழிப்பர்.
4.நான்மணிக்கடிகை

By dn

First Published : 02 December 2012 12:24 AM IST

பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்

மதிநன்று மாசறக் கற்பின் நுதிமருப்பின்

ஏற்றான் வீறெய்தும் இனநிரை தான்கொடுக்கும்

சோற்றான் வீறெய்தும் குடி.



(பாடல்-69)

மக்கள் பலரும் கூடிவாழ்ந்தால் ஊருக்கு நல்லது. ஒருவன் ஐயம் திரிபறக் கற்றால் அவன் அறிவுக்கு நல்லது. கூர்மையான கொம்புகளை உடைய காளைகள் உடனிருந்தால் பசுக் கூட்டத்திற்கு நல்லது. வறியவர் வாழும் இடத்தில் வள்ளல்கள் உணவு அளித்தால் நல்லது.


Dr.Anburaj said...

முஹம்மதின் படையினர் எண்ணிக்கை 313 அல்ல! 313+3000 = 3313 பேர் (எண்ணிக்கையில்) அடுத்தது எழும் மிக சாதாரணமான கேள்வி, ஒரு வானவர் எத்தனை மனிதர்களுக்கு சமம்? வானவர்களின் உதவி எத்தகையதாயிருந்தது? இதற்கு விடையாக சில ஹதீஸ்களை காண்போம்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
பத்ரு போரின்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை பிடித்துக்கொண்டிருக்கிறார்’ என்று அரிவித்தார்.
(புகாரி 3995)
ஜிப்ரீல், மாற்றுமுள்ள வானவர்களுக்கு போர்க்களத்திற்கு வரும் பொழுதுமட்டும் குதிரை தேவைப்படுகிறது. மற்ற நேரங்களில் அப்படியே பறந்து வருவாராம். குதிரை, கழுதை, ஒட்டகம் தவிர ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு காட்டரபியின் அறிவிற்கு வேறென்ன தோன்றும்? அவரது உளறல்களை நம்பி மற்றவர்களின் உயிரை எடுப்பதற்கு இன்றும் ஒரு பெரும் கூட்டம்!
இந்தத் தாக்குதலில் ஜிப்ரீல் மட்டுமல்ல, அல்லாஹ்வின் முக்கிய மலக்குகள் அனைவருமே களத்தில் இறக்கப்பட்டனர். மரணத்தின் மலக்கு இஸ்ராயீல், இடியின் மலக்கு மீக்காயீல், இறுதிநாளில் சூர் என்ற கொம்பை ஊதக்கூடிய இஸ்ராஃபீல் போன்றவர்களும் களத்தில் இறங்கி வாட்களைச் சுழற்றினர். ஜிப்ரீலின் உருவ அமைப்பை அறிவீர்கள் இருப்பினும் அந்த ஹதீஸையும் காண்போம்
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
...அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்...
(முஸ்லீம்)
அல்லாஹ், இத்தகைய பிரம்மாண்ட தோற்றம் கொண்ட வானவர்கள்(!) 3000 பேர்களை, சாதாரண மனிதர்களின் கண்களுக்குத் தென்படாத (மாயஉருவில்?) முறையில் குறைஷிகளை எதிர்த்து களமிறக்கினான். இத்தகைய பிரம்மாண்ட உருவங்களில் ஒன்று நிற்பதற்குக்கூட பத்ருகளம் போதாது, இதில் 3000 உருவங்கள் எப்படி செயலாற்றினவோ? அவர்கள் அமர்ந்து பயணம் செய்த, போர்செய்த குதிரைகளின் உருவம் எத்தகையதாயிருந்ததோ? (எல்லாம் அல்லாஹ்வே அறிவான்(!) அவர்களின் செயல்திறனை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
...இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூம்! முன்னேறிச் செல்'' என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்...
(முஸ்லீம்)
"நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!'' என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!
(குர் ஆன் 8:12)
முஹம்மதின் சார்பாக 3000 வானவர்கள், அத்துடன் மாயஜாலவித்தைகள் களமிறங்கியும் குறைஷிகள் தரப்பில் 70 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். தாக்குதலின் முடிவில் 70 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர் மீதமுள்ள சுமார் 860-க்கும் மேற்பட்டவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்பது வேடிக்கையானது. அத்துடன் ”அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்” என்று அல்லாஹ் கூப்பாடு போட்டுக் கொண்யிருந்ததை ஒருவரும் இங்கு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை! இது அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால் ஆலீம்களோ மாபெரும் அற்புதமென்று கூறி தங்களையும், அப்பாவி முஸ்லீம்களையும் புல்லரித்து கொண்டிருக்கின்றனர்.
முஹம்மதின் பத்ரு வெற்றிக்கு, ஹதீஸ்களின் மற்றொரு பகுதி வேறு காரணங்களைக் கூறுகிறது.
…வெற்றியின் நற்செய்தியை அறிந்தவுடன் முஸ்லீம்களும் அவர்களது தலைவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டனர். இவர்களின் சந்திப்பு ‘ரவ்ஹா’ என்ற இட்த்தில் நபி (ஸல்) அவர்களுடன் நிகழ்ந்தது. அப்பொழுது அவர்களிடம் மதீனாவைச் சேர்ந்த ஸலமா இப்னு ஸலமா (ரழி) “நீங்கள் எங்களுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறீர்கள்? கட்டப்பட்ட ஒட்டகத்தைப் போன்றிருந்த சொட்டைத் தலை கிழவர்களைத்தான் நாங்கள் போரில் எதிர்கொண்டோம். எனவே அவர்களது கழுத்துகளை அறுத்தோம்” என்று கூறினார். நபி (ஸல்) புன்முறுவல் பூத்து “எனது சகோதரன் மகனே! நீ யாரை அப்படி கூறுகிறாயோ அவர்கள்தான் (குறைஷிகளின்) தலைவர்கள்” என்றார்.
(அர்ரஹீக்குல் மக்தூம்)
…இந்த சொட்டைத்தலை கிழவர்களைக் கொன்றதைத்தான் மாபெரும் அற்புதம், உலகம் காணத அதிசயம் என்று பீற்றிக் கொள்கிறார்கள்.

Dr.Anburaj said...

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?'' என்று கேட்டான். அப்போது "ஆம்' என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்'' என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்'' என்று சொன்னான்.
(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
இங்கு, முஹம்மதைத் தாக்கும் நோக்கில், அபூஜஹ்லால், நெருங்கக்கூட முடியவில்லை, மீறி நெருங்கியிருந்தால் அவனது உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்களாம். இதே அபூஜஹ்லும் அவரது நண்பர்களும் ஒட்டகத்தின் கருப்பை சவ்வுகளை முஹம்மதின் தோள்மீது இட்டபொழுதும், உக்பா பின் அபீமுஐத் போர்வையால் மூச்சு திணறுமளவிற்கு முஹம்மதின் கழுத்தை நெரித்த பொழுதும் எதுவும் நிகழவில்லை. பாதுகாப்பிற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட மலக்கு எங்கே போனது? அவர்களது உடல் உறுப்புகள் பிய்த்தெடுக்கப்படவில்லையே ஏன்? இதற்கான பதிலை இஸ்லாமியர்கள்தான் கூறவேண்டும். (அல்லாஹ்வின் நாட்டம் அல்லது திட்டப்படியே முஹம்மது யஸ்ரிப்(மதீனா) சென்றார் என்பதுதான் அவர்களது பதில்!)
சரி..! இப்படியொரு படுபயங்கரமான(!?) வானவர்களின் பாதுகாப்பு இருக்கையில், மக்காவை விட்டு எதற்காக ஓடவேண்டும்? மதீனாவாசிகளிடன் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்? அல்லது இதே வானவர்கள் மதீனாவிற்கு வந்து பாதுகாக்கமாட்டாரா? ஹிஜ்ரத்தின் அவசியம்தான் என்ன? தனது ஏற்பாடுகளின் மீது அல்லாஹ்விற்கே நம்பிக்கையில்லையா?, அல்லது மலக்குகள் மனிதர்களைவிட மிகபலவீனமானவர்களா?.
ஹிஜ்ரத்திற்கு காரணம் என்னவென்று இப்படி மண்டை பிய்த்துக் கொள்ளவேண்டியதில்லை. மதீனாவில் தனக்கு ஆதரவு பெருகியிருப்பதாக முஹம்மது கருதினார் அதனால் மதீனா சென்றுவிட்டார் அவ்வளவுதான்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad