அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, February 9, 2013

இஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்?...எதற்கு?...எப்படி?.


இஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கில் இஸ்லாமிய ஷரியா சட்டம்........ஏன்?...எதற்கு?...எப்படி?

ஆக்கம்: ஜே .எஸ்.அப்துல் ரசாக்

செய்தி ஒன்று: திகதி-------09ஆம் திகதி புதன்கிழமை  ஜனவரி 2013.

தனது பாதுகாப்பில் இருந்த குழந்தைக்கு பால் பருக்கும் பொழுது புரையேறி மரணித்த குழந்தையின் மரணம் கொலை எனத் தீர்மானிக்கப் பட்டு சவூதி அரேபியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் மரண தண்டனை விதிக்கப் பட்டு இலங்கை மூதூரைச் சேர்ந்த பதினேழு வயது நிரம்பிய ரிசானா நபீக் சிரச்சேதம் செய்து கொலை செய்யப் பட்டார்.

இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் இத் தண்டனை  சரியென்று ஒரு குழுவினரும் இல்லை என்று இன்னொரு குழுவினரும் வாதிடுகிறார்கள்.

இதில் எது சரி?

செய்தி இரண்டு:02 ஆம் திகதி சனிக்கிழமை பெப்ரவரி 2013.

தனது ஐந்து வயதுக் குழந்தையை பாலியல் வல்லுறவுக்குற்படுத்தி  சித்திரவதை செய்துக் கொலை செய்த தந்தைக்கு குழந்தையின் தாய்க்கு 'குருதிப் பணம் 'செலுத்துமாறு பணித்து சவூதி அரசு விடுதலை செய்திருக்கிறது.

இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் சவூதி அரசு செய்த இச் செயல் சரியானது என்று ஒரு சாராரும் ...இல்லை......இல்லை.....இது தவறான தீர்ப்பு என்று ஒரு சாராரும் வாதிடுகிறார்கள்.

இதில் எது சரி?

இந்த இரண்டு குற்றங்களுக்கு விதித்த வித்தியாசமானத் தீர்ப்பில் இஸ்லாமிய ஷரியா நீதியை கேள்விக்குரிய  நிலையில் நடுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் துரோகத்தை சவூதியின் நீதிமன்றங்கள்  தீர்ப்பளித்த தீர்ப்புக்கள் செய்திருக்கின்றன.

சவூதி அரசின் அநீதமான நீதிக்கு ஆதரவாக  நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய அறிஞர்களின் செயல்களினால் இஸ்லாமிய ஷரியா இன்னும் களங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறான தவறான கருத்தியலைப் போதித்துக் கொண்டிருக்கின்ற அறிஞர்களின் கருத்துக்களால் கவரப் பட்ட புத்தி ஜீவிகளின் உயரிய ஆய்வுக்காக இந்தப் பதிவு பதிவேற்றம் செய்யப் படுகின்றது என்பதை தயை கூர்ந்து கருத்திற்கொள்ளவும் 


இஸ்லாம் மார்க்கத்தை இறைவனே மனித குலத்துக்கு அருளியிருக்கின்ற நிலையில் பிரபஞ்ச யதார்த்தத்துக்கு முரணான முறையில் அது மனித குலத்திடம் கடமைகளைத் திணிப்பதில்லை.சட்டங்களை வகுப்பதில்லை.

இஸ்லாமிய அறிஞர்களைப் பொருத்தவரை அவர்கள் இரண்டு விதங்களில் இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறைகளை தங்களது அளவீட்டில் கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

சில இஸ்லாமிய அறிஞர்கள் தாம் கற்ற கல்வியின் அறிவு கொடுத்த நம்பிக்கையின் பிரகாரம் இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறையை மார்க்கச் சட்டத்தின் சில சட்ட விதிகளின் அடிப்படையில் வகுத்து தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

அவர்களைப் பொருத்தவரை இஸ்லாமிய ஷரியா சட்டங்கள்தான் இஸ்லாம்.

இன்னும் சிலர் இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறையை ஆன்மீக ரீதியில் கணித்து ஷரியா சட்டங்களுக்கு அப்பால் அல்லது இஸ்லாம் வகுத்திருக்கிற ஷரியா சட்டங்கள் தம்மை சாராது என்கிற ரீதியில் தமது வாழ்வியலை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பொருத்தவரை இஸ்லாமிய ஷரியா என்பது இஸ்லாம் எதிர்பார்க்கும் ஆன்மீக விழுமியங்கள் நிறைந்த வாழ்வியல் முறையாகும்.

இதன் காரணமாக இஸ்லாமிய மார்க்கம் ஷரியா சட்டரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பிரிந்து நோக்கப் படுகின்றது.

சிலர் இஸ்லாமிய ஷரியா சட்டம் வகுத்த நீதி இஸ்லாம் என்கிறார்கள்.

சிலர் ஆன்மிகம் வகுத்த வழிமுறை இஸ்லாம் என்கிறார்கள்.

இதன் நிஜமான சாரத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய ஷரியா சட்ட நீதிகளும் இஸ்லாம் வகுத்த ஆன்மீக வழிமுறையும் பிரித்து கணிக்கத் தகுந்த இரு விதமான செயல்களல்ல.

இஸ்லாமிய ஷரியா நீதியின் ஆணி வேறாக அல்லது மத்திய புள்ளியாக இஸ்லாம் எதிர்பார்க்கின்ற ஆன்மிகம் இருக்கின்றது.

இஸ்லாமிய ஆன்மீகத்தில் இருந்துதான் இஸ்லாமிய ஷரியா நீதிகளும் அது விதிக்கும் தீர்ப்புக்களும் வரவேண்டும்.

நீதி,நேர்மை,உண்மை ஆகிய நல்லறங்களை மனித குலத்திடமிருந்து வெளிக்கொணருகின்ற செயல் விளைவுகளைத்தான் இஸ்லாமிய ஷரியா நீதி தான் விதிக்கும் தீர்ப்புக்களினால் எதிர்பார்க்கின்றது.

அது தனி மனித மாறுதலை எதிர்பார்க்கிறது.

ஆகவே,இஸ்லாமிய ஷரியா சட்டம் மனித உள்ளங்களில் விளையாடி உள்ளங்களின் மாறுதலில் ஒரு சமூகத்தின் மாறுதலை எதிர்பார்க்கிறது.

ஆகவே,ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் ஷரியா முதலில் தனது வேலையை ஆரம்பிக்கிறது.

இஸ்லாமிய ஷரியா சட்டம் இதன் மூலம் இஸ்லாத்தின் சாரம்சத்தைக் காக்கும் பணியை செய்கிறது.


இஸ்லாமிய ஷரியா சட்டம்  வகுத்திருக்கின்ற வரையறைகள் அல்லது சட்டம்  விதிக்கின்ற தீர்ப்புக்கள் தனி மனித சுதந்திரத்தை,தனி மனித உரிமையை,ஒரு சமூகத்தின் பாதுகாப்பை,ஒரு நாட்டின் இறைமையை கடுமையான ஒழுக்க விழுமியங்களுடன் கட்டுப் படுத்திக் காக்கிறது.


இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறையை  மனமொன்றி தனது வாழ்வியல் வழியாக ஏற்காத நிலையில் ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருக்க முடியாது.

ஏனெனில்,ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை இஸ்லாமும் இஸ்லாம் சொல்லுகின்ற ஷரியாவும் பிரிந்து நிற்கும் இரண்டல்ல.

ஒரு விடயத்தை விளக்குகின்ற இரண்டு சொல்லாடல்கள்.

இந்த இரண்டு சொல்லாடல்களும் வேண்டி நிற்கும் இயக்கமும் இலக்கும்  ஒன்றுதான்.

இஸ்லாம் என்றால் ஷரியா.

ஷரியா என்றால் இஸ்லாம்.

இதில் ஒன்றை ஏற்று இன்னொன்றை விட்டு விடு என்ற வேண்டுதலில் வேண்டப் படுகின்ற செயல் விளைவில்  இரண்டுமே இல்லாமல் போகின்ற அபாயமான சூழல் உருவாகிறது.

அதே சமயம் இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறை என்றவுடன் முஸ்லிமல்லாத அனைவரும் கொஞ்சம் அதிர்ந்து அச்சத்துடன் நோக்கும் தன்மையும் இன்று உலகத்தில் பரவலாக காணப்படுகின்றது.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறையை  தமக்கிருக்கும் நேரடியான அச்சுறுத்தலாக கவனத்தில் கொண்டிருக்கின்றார்கள்.

அதனால் அவர்கள் இஸ்லாத்துக்கு எதிரான தமது செயற்பாடுகளை சூசகமாக இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறை  ஐரோப்பாவின் மக்களுக்கோ, அமெரிக்க மக்களுக்கோ அல்லது உலகத்தில் இருக்கின்ற யாருக்குமே எதிரானதல்ல என்ற உண்மையை சிலர் இன்னும் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை.

ஆனால்,இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறை  அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் அநீதமான சுரண்டல் பொருளாதார கொள்கைகளுக்கும் அக்கொள்கைகளில் நியாயம் காணும் அரசியல் முறைகளுக்கும் அது போன்ற நிலையில் இருக்கின்ற அனைத்து ஆளுமை முறைகளுக்கும் எதிரானது.

இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறையானது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என்ற செய்தி உங்களைக் கொஞ்சம் விழி உயர்த்த வைக்கும்.

நிஜம் அதுதான்.

இஸ்லாத்துக்கு முந்திய வேதங்களான தவ்ராத் ,சபூர்,இன்ஜீல் ஆகிய வேதங்களிலும் இதே ஷரியா வாழ்வியல் முறைதான்  இறைவனால் மனிதர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவினது சட்டவாக்கம் யூதர்களிடமிருந்தும்,முஸ்லிம்களிடமிருந்தும் பெறப் பட்டிருப்பதை வரலாற்று ஆய்வுகள் நமக்கு தெளிவு படுத்தி நிற்கின்றன.

ஐரோப்பா அமெரிக்காவுக்கு அவர்களது சட்ட விதிகளுக்கு உதவியிருக்கிறது.

அமெரிக்கா சில விதிகளில் ஐரோப்பிய மக்களுக்கு அவர்களது சட்ட விதிகளில் உதவியிருக்கிறது.

அமெரிக்காவினதும்,ஐரோப்பாவினதும் சட்ட விதிகளை அடியொட்டி உலகில் நிலை நிறுத்தப் பட்டிருக்கின்ற சட்ட விதிகளில் மக்களுக்கு நன்மை செய்கின்ற அனைத்து அம்சங்களினதும் அடிப்படை விதிகளின் பிறப்பிடம் எது என்ற ஆய்வில் அதனை அவர்கள் தவ்ராத்தில் இருந்து,அல்லது சபூரில் இருந்து அல்லது இஞ்சீலில்  இருந்து அல்லது இஸ்லாத்தில் இருந்து எடுத்திருப்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

ஆகவே உலகத்தில் தற்பொழுது அமுலில் இருக்கின்ற உலக சட்டங்களில் மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற அனைத்து சட்ட விதிகளின் மூலமாக இஸ்லாமிய ஷரியா சட்டம் இருந்திருக்கிறது.

ஆகவே,ஒரு முஸ்லிம் இஸ்லாமிய ஷரியா சட்டம் என்று மாற்று மத சகோதரர்களுக்கு அறிமுகப் படுத்த நினைக்கிற ஷரியா சட்ட நீதிகளில் சில  ஏற்கனவே இஸ்லாத்தை மறுக்கின்ற மக்களுக்கிடையில் அவர்களை அறியாமலேயே நாட்டு சட்டம் அல்லது அந்த இனத்தினது கலாச்சாரம் என்கின்ற பெயரில் அமுலில் இருப்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அதனை இன்னுமொரு வார்த்தையில் சொன்னால்,இஸ்லாத்தை மறுக்கின்ற மக்கள் முஸ்லிம்களிடம் ஏற்று நடக்குமாறு வலியுறுத்துகின்ற சில சட்ட விதிகள் ஓரிறைவனை ஏற்றுக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் நடை முறை சட்டம் என்கின்ற பெயரில் ஏற்கனவே நடைமுறையில் இருந்திருக்கின்றது.

இன்று உலக நாடுகளில் மக்களிடையே இருக்கின்ற  சட்டங்களில் வேற்றுமைகளை முன்னிறுத்திய உயர்வு தாழ்வுகள் களையப் பட்டிருக்கின்றன.

மனிதர்களிடையே கறுப்பர் வெள்ளையர்,ஐரோப்பியர் ஆசிய நாட்டவர்,உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமைகள் இல்லை.

இக்கொள்கையை  எம்முடைய இஸ்லாமிய ஷரியா சட்டம் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரேயே மனித நீதியாக வகுத்து விட்டது.

நல்லது என்று மனித சமூகம் ஒன்று பட்டு தீர்மானித்திருக்கின்ற அனைத்து நல்ல விடயங்களும் நல்லவைதான்.

அத்தகைய நல்லவைகளின் பிறப்பிடம் நிச்சயமாக இஸ்லாமிய ஷரியா சட்டமாக இருக்கும்.

யாராவதொருவர் ஒரு முஸ்லிமைப் பார்த்து நீங்கள் எங்களது சட்டத்துக்கு கட்டுப் பட்டு நடக்கவேண்டும் என்று சொன்னால் அப்படி சொல்கிறவர் சொல்கின்ற சட்டத்தின் நன்மையான  விதிகள் அனைத்தும்  இஸ்லாமிய ஷரியா  சட்டம் சொல்கின்ற விதிகள் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக இலங்கை அல்லது இந்திய முஸ்லிம்களை நாம் கருத்திட் கொண்டால் இலங்கை அல்லது இந்திய நாட்டு அரசியல் விஞ்ஞாபனம் ஆச்சரியமாக பல விடயங்களில் இஸ்லாமிய ஷரியா சட்டத்துடன் இணைந்துப் போவதை எங்களால் அவதானிக்க முடியும்.

அவற்றை ஏற்று நடப்பதைத்தான் இஸ்லாமிய சரியா சட்டம் முஸ்லிம்களிடம் வேண்டி நிற்கின்றது.

திருடக் கூடாது,போதை வஸ்துக்களை விற்கவோ வாங்கவோ கூடாது,விபச்சாரம் செய்யக் கூடாது.பொய் சொல்லக் கூடாது, நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது,உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக் கூடாது,கற்புள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது,மாற்றான் மனை விரும்பக் கூடாது,நேர்மைத் தவறி நடக்கக் கூடாது,மற்றவர்களின் உணர்வுகளை தாக்கக் கூடாது,வட்டி வாங்கக் கூடாது,,கொலை செய்யக் கூடாது,அநீதத்துக்கு துணை போகக் கூடாது  ,,,,,,,,,,,இப்படி அடுக்கிக் கொண்டு போகின்ற பல கூடாத செய்கைகளை இஸ்லாமிய ஷரியா சட்டமும் மனித குலத்துக்கு கூடாத செயல்களாகவே கணித்து வைத்திருக்கிறது.

உண்மை பேச வேண்டும்,நேர்மையாக நடக்க வேண்டும்,நீதமாக இருக்க வேண்டும்...........இப்படியே எத்தனையோ வேண்டும் என்று விரும்பப் படுகின்ற பல செய்கைகளை இஸ்லாமிய ஷரியா சட்டம் சமூகத்தில் வேண்டும் என்று வேண்டி நிற்கிறது.

இவை இஸ்லாமிய ஷரியா சட்டம் சட்டம் போட்டு வகுத்திருக்கும் இஸ்லாமிய சட்டங்களாகும்.

இவற்றை பேணி நடக்கும் ஒருவரை எந்த நாட்டு சட்டம் தவறென்று சொல்லும்?

 ஒரு நாட்டின் குடிமகன் அந் நாட்டு சட்டத்துக்கு கட்டுப் பட்டு நடக்கவேண்டும் என்று அந்த நாட்டு சட்டம் அதன் நாட்டு மக்களைக் கட்டுப் படுத்துகிறது.

ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறை  இங்கும் தன்னைப் பின் பற்றி வாழுகின்ற முஸ்லிமுக்கு அற்புதமாக உதவுகிறது.

அதெப்படி?

ஒருவருடன் செய்யும் உடன்படிக்கைக்கு மாறு செய்வது தவறு என்று இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறை சட்டம் போதிக்கின்றது.

அதன் பிரகாரம் ஒரு நாட்டின் முஸ்லிம் குடிமகன் அந் நாட்டு சட்டத்துக்கு கட்டுப் படுவேன் என்று தான் வாழும் நாட்டுடன் செய்திருக்கும் ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது என்ற விதியில் அந்த முஸ்லிமின் வாழ்வியல் விதியுடன் இஸ்லாமிய ஷரியா  சட்டம் நெகிழ்ந்து உதவுகிற அழகைக் கவனியுங்கள்.

புனித அல் குர்ஆனின் பின்வரும் வசனம் நாம் சொன்ன கருத்துக்களுக்கு  சான்று பகர்கின்றது.

(நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.42:3

ஷரியா என்றால் என்ன?

ஷரியா என்றால் வழி அல்லது விளக்கம்அல்லது தெளிவு என்று நேரடியான பொருள்களில் அதன் அர்த்தம் தமிழ் வடிவம் பெறுகிறது.

ஷரியா என்ற பதத்துக்கு சட்டரீதியான விளக்கமானது அல்லாஹ் அடியார்களுக்கு அருளிய வாழ்வியல் வழிக்காட்டல் என்ற விஸ்தாரமான  வரைவிலக்கணத்தில் எல்லைகளின்றி விரிந்து வியாபித்து நிற்கின்றது.

இதனை சரியாகப் புரிந்துக் கொள்ளாத சிலர் இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறையை அதன் ஒரு கிளைப்  பிரிவில் அடங்குகின்ற ஷரியா சட்டம் என்ற  குற்றவியல் சட்ட வரையறையினுள் மட்டுமே பரிதாபமாக முடக்கி விடுகின்றனர்.

ஒரு முஸ்லிம் தினமும் ஷரியா வாழ்வியல் முறையிலேயே தனது வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்களையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாய கடமை நிலையில் இருக்கின்றான்.

இன்று உலகத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஜனநாயக அரசியல் அமைப்பில் பல்வேறு சட்ட ஒழுங்குகள் பின்பற்றப் படுகின்றமையை நம்மால் அவதானிக்க முடியும்.

சில நாடுகள் பிரான்சின் சட்ட ஒழுங்குகளையும்,இன்னும் சில நாடுகள் பிரித்தானியாவின் சட்ட விதிகளையும்,இன்னும் சில நாடுகள் அமெரிக்காவின் சட்ட விதிகளைத் தழுவிய நிலையில் தமது நாட்டு சட்ட அமைப்புகளை அமைத்திருக்கின்றன.

இந்த அனைத்து சட்ட அமைப்புகளிலும் பிரதானமான இரண்டு விதிகள் எந்த விதமான கருத்து வேற்றுமைகளின்றி அனைவரினாலும் உடன் பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் அதில் முதலாவது விதியாக அமைந்துள்ளது.

தனி மனித வணக்க வழிபாட்டு சுதந்திரம் அதில் அடுத்த விதியாக இருந்துக் கொண்டிருக்கின்றது.

இதன் மூலம் ஒரு நாடும் அந் நாட்டை ஆளும் நாட்டு சட்டமும் தனி மனித உரிமையைப் பேணும் கௌரவமான நிலையில் தலை நிமிர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

அந்த மகத்தான மனித உரிமையின் மூலம் அது ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவனது மதம் சார்ந்த தெரிவு சுதந்திரத்துக்கு வழியமைத்துக் காக்கிறது.

இத்தகைய தெரிவு சுதந்திரம் அற்புதமான சமூக கட்டமைப்புக்கு உறுதுணையாக உதவி  செய்வதனால் தனி மனிதர்கள் குடும்ப ரீதியாகவும்,குடும்பங்கள் ஒன்றிணைந்த நிலையில் ஒரு சமூகமாகவும் தமது மத ரீதியான செயல் பாடுகளை முன்னெடுக்க துணை நிற்கின்றன.

ஆகவே,உலகம் ஒன்றிணைந்து அனுமதித்திருக்கும் இத்தகைய மனித உரிமையானது மறைமுகமாக ஷரியா சட்ட வரையறையினுள் தனது வாழ்வியலை அமைத்துக் கொள்ள நினைக்கும் மக்களுக்கு பேருதவி புரிகிறது.

இது நிகழ்கால உலகில் அல்லாஹ் மக்களுக்கு அருளியிருக்கும் மகத்தான பேரருளாகும்.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் அவர்களுக்கிருக்கும் இந்த உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள அந் நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் தெரிந்துக் கொள்ளவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களுக்கிடையில் இருக்கின்ற கருத்து வேற்றுமைகள்  இதற்கு தடையாக இருப்பதை நாம் உணர்ந்துக்  கொள்ளவேண்டும்.

முஸ்லிம் அமைப்புக்களுக்கிடையே இருக்கின்ற கருத்து வேற்றுமைகளை இனம் காணும் இஸ்லாத்துக்கு எதிரான அரசியல் அமைப்புகள் இராஜதந்திர ரீதியில் இந்த சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் நுணுக்கமாக அணுகும் முறையினை நாம் கவனத்தில்   கொள்ளவும், அதற்கெதிரான  நமது நகர்வுகளை விவேகமாக முன்னெடுக்கவும்  கடமைப் பட்டிருக்கிறோம்.

இஸ்லாத்துக்கு எதிரான அமைப்புக்களின் இவ்வாறான செய்கையினால் முஸ்லிம் அல்லாத மக்களிடையே இஸ்லாம் சம்பந்தமாக ஒரு விதமான அச்சம் உருவகிக்கப் பட்டிருக்கின்றது.

அந்த மக்களால் இஸ்லாத்தைப் புரிந்துக் கொள்ளத் தவறிப் போனமையும்,எங்களால் இஸ்லாத்தை சரியான முறையில் அவர்களுக்கு  அறிமுகப் படுத்த தவறிய செய்கையுமே  இதற்கான பிரதான காரணியாகும்.

இன்று இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறை ஒட்டு மொத்த உலக மக்களின் கேள்விக்குரியதாக சவூதி அரசாங்கத்தின்  நீதி தவறிய அவர்களின் கோத்திரம்  வகுத்த அரசு காக்கும் ஷரியா நீதியினால் விளைந்த செயல் விளைவுகளினால் ஆகி விட்டது.

சவூதி அறேபியாவில் அரசாலும் நீதி இஸ்லாம் போதித்த இஸ்லாமிய ஷரியா நீதி அல்ல.

அது ஷரியா என்று பெயர் சூட்டப் பட்ட மன்னராட்சியின் சுரண்டல்களுக்கு மக்களைப் பயமுறுத்தி கட்டுப் படுத்தும் கோத்திரங்களின் நலன் காக்கும் அநீதமான சட்ட அநீதங்களாகும்.

அந்த அநீதத்தின் காரணமாக உலக மக்களிடையே இஸ்லாமிய வாழ்வியல் முறை வகுத்துத் தந்த ஷரியா சட்டம் சம்பந்தான பல கேள்விகள் பல்வேறு இலக்குகளை இலக்கிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது எறியப் படுகின்றன.

இதன் உச்ச கட்ட கொடுமையாக இஸ்லாமிய ஷரியா சட்டம் தற்காலத்துக்கு பொருந்தாது என்கின்ற தோரணையில் மேற்குலகின் ஆதரவாள சில முஸ்லிம் அறிஞர்கள் பேசவும் எழுதவும் துவங்கி விட்டார்கள்.

புனித இஸ்லாத்துக்கு இவர்கள் ஆபத்தானவர்கள்.

இவர்களைவிடவும் ஆபத்தான இன்னுமொரு இஸ்லாமிய அறிஞர் குலாம் ஒன்று சவூதி அரசின் நீதி தவறிய நீதிக்கு இஸ்லாமிய ஷரியா என்று பெயர் சூட்டி சவூதி நாட்டின் அராஜக நடவடிக்கைகளுக்கு துணை நின்று ஒத்தூதுகிறார்கள்.

இந்த இரண்டு கூட்டத்தார்களும் அவர்களின் தவறான செயல் விளைவுகளின் காரணமாக இஸ்லாமிய ஷரியா வாழ்வியலின்  தன்னிருப்பைக் கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பும் அதுதான்.

துரதிர்ஷ்ட வசமாக இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையில்  பரஸ்பரம் புரிந்துணர்வு இல்லாமையும், ஒரியக்கத்தின் மீது மற்றைய இயக்கம் வைக்க வேண்டிய நம்பிக்கை தவறும் நம்பிக்கையின்மையின் காரணமாகவும் முஸ்லிம்கள் பிரிந்து பிளவு பட்டு வலிமையிழந்து நிற்கின்றார்கள்.

இந் நிலையில் முஸ்லிம் சமூகம் தான் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை ஓரணியில் நின்று சாதுர்யமாகத் தீர்த்துக் கொள்ளத் தெரியாமல் திணறிக்       கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாக முதலில் எதிர்கொண்டு தீர்க்கவேண்டிய பிரச்சினை எது என்று தெரியாமல் முஸ்லிம்கள் தடுமாறி நிற்கின்றார்கள்.

மாற்று மத சகோதரர்களின் அவநம்பிக்கையையும் நமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளையும் ஆக்ரோசமான பிரச்சாரங்களின் மூலமாகத் தீர்க்க முடியும் என்ற அடிப்படைவாத கருத்தியல் பிழையானது என்று நாம் கருதுகிறோம்.

உண்மைக்குத் துணை நின்று தினமும் நேர்மையாக விசுவாசமாக நாம் தொடர்பு கொள்கின்ற ஒவ்வொருவருடனும் நடந்துக் கொள்ளும் அழகான பண்பியல் நிறைந்த நமது நடவடிக்கைகள் நாளடைவில் எம்மைப் பற்றிய தவறான கருத்துக்களுக்கான சரியான சாட்சிகளாக நின்று நமக்கு சார்பான  விடைகளை நம்மை சுற்றி பறைசாற்றி நிற்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

இத்தகைய நேர்மையான செயல்பாடுகள் பல்லின சமூகத்தினரிடையில் நம்மிருப்பின் சாரமாக மாறி நிற்கும்.

அல் குர்ஆனின் போதனையின் பிரகாரம் இறைவன் எந்த சமூகத்தையும் அந்த சமூகத்தை நேர்வழிப் படுத்துகின்ற தூதரின் வழிக்காட்டல் இல்லாமல் தட்டழிய விட்டதில்லை.

இறுதித் தூதர் நபி சல்லலாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையே பரிபூரணப் படுத்தினார்கள்.

அதனால், இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு நபிமார்கள் தொடர்பு பட்ட வரலாறு இருக்கின்றது.

ஆகவே, இஸ்லாமிய ஷரியா வாழ்வியல் முறை வகுத்த இஸ்லாமிய ஷரியா சட்டம் என்பது மனித சமூகத்துக்கு புதியதொன்றல்ல.

இஸ்லாமிய ஷரியா சட்டம் இறைவனால் நாகரீகம் தொலைத்திருந்த மாக்களை மக்களாகவும் ,மக்களை நாகரீகம் தெரிந்த மனிதர்களாகவும்,நாகரீகம் தெரிந்த மனிதர்களைப் புனிதர்களாக்கவும் அருளப் பட்ட விதி முறைகளாகும்.

அது மட்டுமன்றி இஸ்லாமிய ஷரியா சட்டத்தைப் பின்பற்றுகின்ற ஒரு முஸ்லிம் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மனமுவந்து ஏற்று பின் பற்றுவதில் விளையும் செயல் விளைவானது ஒருங்கிணைந்த நிலையில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை ஏற்றிருக்கின்ற ஒரு சமூகத்தை உருவாக்குகிறது.

பெரும்பானமையான சமூகம் இருக்கின்ற ஒரு நாட்டில் அந்த சமூகம் இஸ்லாமிய ஷரியா  சட்டத்தை பின் பற்றுவதில் ஒரு நாட்டின் சட்டமாக இஸ்லாமிய ஷரியா சட்டம் மாறி நிற்கின்றது.

இஸ்லாமிய ஆட்சி அமையப் பெற்ற ஆட்சியில் ஷரியா சட்டம் இஸ்லாத்தைப் பாதுகாக்க துணை நிற்கின்றது.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத நிலையில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை ஏற்று வாழுகின்ற சமூகத்தின் செயல் விளைவுகள் இஸ்லாமிய ஆட்சியின் மலர்ச்சிக்கு துணை நிற்கின்றது.

தனது தூதுவர்களின் மூலம் அல்லாஹ் விதித்தருளிய சட்ட வரையறைகள் இவ்விதமாக மக்கள் மயப் படுத்தப் பட்டு பின்பற்றுகின்ற அழகிய சூழல் இவ்வாறு உருவாக வேண்டுமென்று இஸ்லாமிய ஷரியா சட்டம் சட்டம் வகுத்திருக்கிறது.

இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு மறுமை வெற்றி என்றொரு நிதர்சனமான இலக்கு இருக்கிறது.

இறுதி நபிக்கு அருளப்பட்ட இறுதி சட்டம் இறுதியான விதிமுறைகளினால் ஆனதல்ல.

இந்த சட்டம் மனிதனின் மறுமை வெற்றி என்ற இறுதி இலக்கை இலக்கிடப் பட்டு முதல் மனிதன் ஹசரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களில் இருந்து தொடராக நமக்கு கிடைத்திருக்கிறது.

மறுமை வெற்றி என்கின்ற இறுதி இலக்கை அடைவதற்கு உதவி செய்கின்ற ஒரு சட்டத்தை பின்பற்றுகின்றோம் என்ற பெருமிதமான சத்திய உண்மையின் சொந்தக்காரர்கள் நாம் என்கின்ற நிஜத்தை நாம் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை.

இதன் மூலம் தன்னை வெற்றிகரமான இறுதி இலக்கில் இருந்து பிறந்த சட்டமாக இஸ்லாமிய ஷரியா சட்டம் பெருமிதமாக தன்னை நிலை நிறுத்துகிறது.

இஸ்லாமிய ஷரியா  சட்டம் அதனை ஏற்றுக் கொண்ட மக்களிடையே கடுமையான கட்டுப் பாடுகளை, ஒழுக்க விழுமியங்களை விதித்து அதன் மூலம் தனி மனித பாதுகாப்பை, சமூகத்தின் பாதுகாப்பை,ஒரு நாட்டின் பாதுகாப்பை , உலக மக்களின் பாதுகாப்பை தன்னுடைய செயல் விளைவுகளில் தொக்கி வைத்திருக்கிறது.

உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தனி மனிதனுக்கும்,ஒரு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகப் பிரதானமான ஒரு கடமை இருப்பதாக இஸ்லாமிய ஷரியா  சட்டம் நிர்ணயம் செய்திருக்கிறது.

அதென்ன நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிற கடமை?

ஒவ்வொரு மனிதனும் மறுமை வெற்றியை தனது இறுதி வெற்றியாக இலக்கிட்டுக் கொள்ள வேண்டும் என்கின்ற கட்டளையை இஸ்லாமிய ஷரியா சட்டம் நிர்ணயித்திருக்கிறது.

மறுமை வெற்றியை தனது இறுதி வெற்றி இலக்காக கொண்டு வாழ்கின்ற மனித உள்ளத்தில் அநீதத்துக்கு இடம் இருக்காது.

நீதம் நிறைந்த உள்ளத்தின் செயல் விளைவுகளில் மனிதர்களுக்கோ ஏனைய ஜீவராசிகளுக்கோ எந்தத் தீமையும் விளையாது.

இத்தகைய மனிதனால்,அந்த மனிதன் சார்ந்த குடும்பத்தால்,அத்தகைய குடும்பங்கள் இணைந்திருக்கின்ற சமூகத்தால் உலகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இஸ்லாமிய ஷரியா  சட்டம் இத்தகைய அமைதியை உலகுக்கு வழங்குகின்ற உள்ளத்தை தன்னில் நிலை நிறுத்தியிருக்கின்ற முஸ்லிம் சமூகத்தைதான்  முஸ்லிம்களிடம் வேண்டி நிற்கின்றது.

பௌத்த  அல்லது ஹிந்து சம்பிரதாய நம்பிக்கையில் தனது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் உயிர்களிடத்தில் கருணை கொள்வதுதான் வாழ்க்கை என்று சொன்னால் - இஸ்லாமிய ஷரியா சட்டம் சொல்லும் விதிகளின் ஒரு கிளை விதியிலிருந்துதான் அந்தக் கருத்து  பிறந்திருக்கின்றது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிறிஸ்த்தவ நண்பர் இயேசுவை நீ நேசி இயேசு உன்னை நேசிக்கிறார் என்று நம்மிடம் சொன்னால் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனை நேசித்து வாழ வழி சொன்ன இஸ்லாமிய ஷரியா  சட்ட விதிகளின் ஒரு கிளை விதி  அதுவென்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதனை மனிதன் நேசிக்கும் மனித நேயத்தை இஸ்லாமிய ஷரியா  சட்டம் மனிதர்களிடையே வேண்டி நிற்கின்றது.

உளப்பூர்வமான இந்த நேசத்தின் செயல் விளைவுகள் அற்புதமானவை.

மனித நேய செயல் விளைவுகளை இஸ்லாமிய ஷரியா சட்டம் நம்மில் வேண்டி நிற்க -இறைவனை தொழுது விட்டு வெளியே வரும் பொழுது தம்மிடம்  கையேந்துகின்ற ஏழைகளுக்கு எதுவுமே கொடுக்காது முகத்தைத் திருப்பிக் கொள்ளுகின்ற உள்ளத்தைப் பெற்றிருக்கின்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய  ஷரியா சட்டம் வேண்டி நிற்கின்ற மானுட தர்மத்தை இழந்தல்லவா நிற்கிறார்கள்.

நிஜத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விட்டும் நாம் எங்கோ நாம் அறியாத இடத்துக்கு நகர்த்தப் பட்டு நம்மை அறியாமல் நகர்ந்துப் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் உணரத் தவறி விட்டோம்.

மறுமை வெற்றிக்கு,சமூக ஒழுங்கமைப்புக்கு அல்லாஹ் அருளிய இஸ்லாமிய  ஷரியா  சட்டத்தில் இருக்கின்ற அடிப்படை அம்சங்களில் மாற்றங்கள் இருக்கப் போவதில்லை.

இந்த உறுதியான நம்பிக்கையை நாம் நம்மில் உருவாக்கிக் கொள்ளுதல் அவசியம்.அத்தகைய உறுதியான நம்பிக்கையை இஸ்லாமிய ஷரியா சட்டம் முஸ்லிம்களிடம் வேண்டி நிற்கின்றது.

இஸ்லாமிய ஷரியா சட்ட விதியின் அடிப்படை அம்சமாக - முஸ்லிமாக மாற விரும்புகின்ற ஒருவர் "அல்லாஹ் ஏகன்.அவன் தனித்தவன்.அவனுக்கு இணையாக யாருமில்லை.அவனுக்கு துணை என்று எதுவுமில்லை.அந்த ஏகன் யாரையும் பெறவுமில்லை.அவன் யாரினாலும் பெறப் படவுமில்லை.
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஆலி ஹி வசல்லம் அவர்கள் அந்த ஏகனின் அடிமையாகவும் தூதராகவும் இருக்கின்றார்." என்று உறுதியாக நம்பி அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டமியற்றியிருக்கிறது.

அதன் பின்னர் வானவர்கள்,வேதங்கள்,மறுமை நாள் என்று அந்த முஸ்லிம் நம்ப வேண்டிய நம்பிக்கைகள் விரிவடைகின்றன.

இத்தகைய நம்பிக்கைகளின் பிறகு அடிப்படையான சில கடமைகளை இஸ்லாமிய ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கு கடமையாக்கி நிற்கிறது.

அடிப்படையான அக்கடமைகள் தொழுகை , நோன்பு,சக்காத்,ஹஜ் என்று சில செயல்களை முஸ்லிம்களிடம் அடையாளப் படுத்தி மற்றைய சமூகத்தாரை விட்டும் இஸ்லாமியரை வித்தியாசப் படுத்தி காட்டி நிற்கிறது.

உண்மை,நேர்மை,விசுவாசம்,நம்பிக்கை  ஆகிய ஒழுக்க விழுமியங்களை  எக்காரணம் கொண்டும் தவற விடக் கூடாது என்று இஸ்லாமிய ஷரியா  சட்டம் மிகக் கடுமையான உத்தரவை ஒவ்வொரு முஸ்லிம் மீதும்  சுமத்துகிறது.

முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் யாராக இருந்தாலும் அவர்களுடன் நேர்மையாக நடந்துக் கொள்ளுமாறு மிகக் கடுமையான சட்ட விதியொன்றை இஸ்லாமிய ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கு விதித்திருக்கின்றது.

இஸ்லாமிய ஷரியா சட்ட விதிகளின் பிரகாரம் அடிப்படையான இந்த அம்சங்களில் எத்தகைய மாறுதல்களையும் யாராலும் செய்ய முடியாது.

உலகத்தில் இருக்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய ஷரியா சட்டம் எதிர்பார்க்கின்ற முறையில் தமது வாழ்வியலை மாற்றி அமைத்தால் வெகு விரைவில் அமைதியான ஒரு சமூக கட்டமைப்பு இந்த உலகத்தில் உருவாகும்.

அடிப்படை அம்சமல்லாத இஸ்லாமிய வாழ்வியல் முறை தவிர்ந்த ஏனைய சட்ட விதிகளில் இஸ்லாமிய ஷரியா  சட்டம் நெகிழ்வுப் போக்கை கொண்டிருக்கின்றது.

அது மட்டுமன்றி ஏனைய சமூகங்களில் காணப் படுகின்ற அனைத்து நல்ல விடயங்களும் இஸ்லாமிய ஷரியா சட்டம் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அனுமதித்த சட்டங்களாக இருப்பதை நம்மால் அவதானிக்க முடியும்.

அதனால், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாட்டில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் பிரகாரம் வாழ முடியாது என்றொரு நிலையில்லை.

'எது எப்படி இருந்தாலும்நீதியும்,நியாயமும்,நேர்மையும் அடிப்படை அம்சமாக அரசாள வேண்டிய முஸ்லிம் நாடுகளில் அநியாயம் நிறைந்து நியாயம் தொலைத்த நிலை தெரிகின்றதே?' என்றொரு நியாயமான கேள்வி உங்கள் நெஞ்சில் நெருடுவது நமக்குப் புரிகின்றது.

உண்மைதான்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் நாடுகளில் மிகவும் மோசமான நிலைமைகள் நிலவுகின்றன.மனித உயிர்களுக்கு அங்கே எதுவிதப் பெறுமதியும் இல்லை.மனித உரிமைகள் அங்கே மதிக்கப் படுவதில்லை.மக்களின் பொருளாதார வளங்கள்  குறிப்பிட்ட ஒரு குழுவினரால் திட்டமிடப்பட்ட நிலையில் சுரண்டப் படுகின்றன.

முஸ்லிம் நாடுகளில் தனி மனித மத தெரிவு சுதந்திரத்துக்கு அனுமதி இல்லை.


இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல் செய்வதாகக் கூறும் ஆப்கானிஸ்தானின் தலிபான் போராளிகள் கையடக்க செல் பேசியை பாடசாலைக்கு கொண்டு சென்ற குற்றத்துக்காக 90 கசையடிகளை பதின் மூன்று வயது சிறுமிக்கு வழங்கி துன்புறுத்துவதைக் காட்டுகின்ற இணைப்பு........நமது சிறுமிகள் நோட் பேடுடனும்  வீட்டில் நமது லப் டாப்புடனும் சுதந்திரமாக இருக்கும் நிலையை ஒரு கணம் நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.............இந்த பதிவை அமெரிக்காவின் மறைமுக சக்திகளின் நிறுவனம் ஒன்று வெளியிட்டு இஸ்லாமிய ஷரியா சட்டத்தை கேலிக்கும்,கேள்விக்கும் உட்படுத்தி இருக்கின்ற விதத்தை அவர்களது அடையாளச் சின்னம் புலப் படுத்தி நிற்பதை நுணுக்கமாக அவதானித்தால் புரிந்துப் போகும்.





இஸ்லாமிய ஷரியாவின் பெயரால் இஸ்லாமிய ஷரியா கண்டிக்கின்ற செய்கைகள்.........அப்பாவிப் பெண்ணை பகிரங்கமாக அடித்து துன்புறுத்தும் ஆப்கான்  பொது மகன்.

மறைமுக சக்திகளுக்கு உதவுகின்ற ஒரு நாயகரின் தயவில் தனது  PEACE TV யைக் கொண்டு சலபி -வஹ்ஹாபிய  இஸ்லாத்தை உலகத்துக்கு நியாயப் படுத்துகின்ற சாகிர் நாயிக் கின் நியாயப் படுத்தல்...............அவரின் நண்பியான பெண் வைத்தியர் ஒருவர் ஆப்கானிஸ்தான் ஆண்களின் தலைப் பாகை அணியும் விதத்தை அனுமானித்து இது பொய்யான விடியோ என்று சொன்னாகளாம்.........


சாகீர் நாயிக் சொல்லுகின்ற நியாயப் படுத்தலில் இருக்கின்ற நியாயம் தொலைத்த விடயங்களில் உங்களது கவனத்தைக் கொண்டு செல்கிறோம்.......

ஒன்று.........அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வருகின்ற நபர்  சைக்கிளில் வருகின்றார்........அந்தக் காட்சி அவரை அவ்வளவு பாதித்ததாக இல்லை....ஏனெனில் ஆப்கானிஸ்தானில் இது தினமும் நடக்கின்ற ஒரு செயல்.

இரண்டு..........இடையில் ஓடி வருகின்ற சிறுமியைக் கவனியுங்கள்.......அவளது முகத்தில் திடீரென படருகின்ற கலவரத்தைக் கவனியுங்கள்.......அந்தக் குழந்தை சாட்சாத் ஆப்கானிஸ்தானின் குழந்தை........ஆப்கான் குழந்தைகளுக்கு அவ்வளவு அற்புதமாக நடிக்க வராது......

மூன்று......பின்னால் சாதாரணமாக நடந்து வருகின்ற  குழந்தைகளைக் கவனியுங்கள்....திடீரென அக் குழந்தைகளின் பார்வை  அடிவாங்குகின்ற பெண்களின் பக்கம் திரும்புகின்றது......அவர்களின் முகத்திலும் கணப் பொழுதில் கலவரம் நிறைகிறது...........

நான்கு.........வந்தக் குழந்தைகளில் ஒன்று  அச்சத்தால் திரும்பி ஓடுகிறாள்.........பச்சை நிற  சல்வார் உடையில் இன்னுமொரு குழந்தை எட்டிப் பார்க்கிறாள்....... .........சைக்கிள் மனிதரின் முகத்தில்  சட்டென்று ஒரு மாறுதல்.....முறுவலுடன் தெரிந்த முகம் சட்டென்று மாறுகிறது............பெண்ணை அடிக்கும் ஆணின் தலைப்பாகை சாட்சாத் ஆப்கானிஸ்தானின் ஆண்கள் அணியும் முறையிலேயே அமைந்திருக்கிறது.......அவர்கள் இடது புறமும் வலது புறமும் மாறி மாறி தலைப்பாகை அணிவார்கள்.......

இந்த விடியோ பதிவை ஹாலிவூட்டில் எடுத்திருக்க முடியுமென்று நமது நாயகன் சாகிர் நாய்க் அனுமானித்து வாதிடுகிறார்.......சபாஷ்!
இந்தக் காட்சியை விடியோவில் மட்டுமே மக்கள் கண்டிருப்பார்கள் என்றும் மார் தட்டுகிறார்.இன்னொரு சபாஷ்!
ஆனால்,இதற்கு எதிராக தான் சொல்லுகின்ற கருத்துக்கு நாம் அறியாத ஒரு பெண் வைத்தியரை அவர் மேற்கோள் காட்டுகிறார்(அடி....செருப்பாலே ...என்று நமது  நண்பர் ஹசன் சொல்லுவது உங்களுக்குக் கேட்டிருக்குமே?).   சாகீர் நாய்க்  சொல்லும் கதைக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை........ஆனால்,நாம் சொல்லும் கதைக்கோ விடியோ ஆதாரம் இக் கணமும் பதிவில் பதிவேற்றப் பட்டு இருக்கிறது!


சாகிர் நாயக்கின் வாதத் திறமைக்கு ..அவரது அபாரமான நினைவாற்றலுக்கு முன்னால் நாம் எம் மை மண்டியிட்டு விடுகிறோம்........ஆனால்,அவருக்கு அவ்வாறான திறமை எதுவுமில்லை என்பதுதான் நிஜம்.
அதனை நிரூபித்த இலங்கை இளம் அறிஞர்கள்...........சாகிர் நாய்க் இலங்கையின் இளம் அறிஞர்கள் கேட்ட  கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை............



இஸ்லாமிய ஷரியாவின் பெயரால் இஸ்லாமிய ஷரியா கடுமையாக கண்டிக்கின்ற செய்கைகள்.........தனது மனைவியை பகிரங்கமாக அடித்து துன்புறுத்தும் ஆப்கானி........... 




ஒரு வயதுப் பெண் குழந்தையையும் மணக்க முடியும் என்று 'பத்வா'கொடுத்து இஸ்லாமிய ஷரியா மிகக் கடுமையாக எதிர்க்கும் சிறுவர் துஷ் பிரயோகத்துக்கு அனுமதி வழங்குகின்ற சலபி ,வஹ்ஹாபிய இஸ்லாமிய முப்தி ஒருவர்..................அதாவது ஒருவர் ஒரு வயதுக் குழந்தையை மணந்து பின்னர் அக்குழந்தை பூப்பெய்தும் வரை வளர்த்து அதன் பின் உடல் உறவு கொள்ளும் கலாசாரம்..........நினைக்கவே மனம் கூசுகிறது.........

(இந்தக் கதையை உங்களின் அருகே இருக்கின்ற ஒரு மூதாட்டியிடம் சொல்லிப் பாருங்கள்......"பைத்தியக் கார எருமை மாடு...அவனுகளை உயிரோடு வைக்கக் கூடாது......" என்று சொல்வார்.....ஏனெனில் இப்படி நாம் ஒரு மூதாட்டியிடம் சொன்னவுடன் அவர் கொஞ்சம் அதிர்ந்து வாயடைத்துப் போய்  சில கணங்களில் தன்னை சுதாகரித்துக் கொண்ட நிலையில் சொன்ன சொற்கள் அவை....).

இவ்வாறு வாதிடும் இஸ்லாமிய அறிஞர்களின் தலையைக் கொய்து விடுவதற்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் அனுமதி இருக்கிறது!

இஸ்லாத்தை இவ்வாறு கொச்சைப் படுத்துகிறவர்களை இஸ்லாம் 'முஸ்ரிகீன்' கள் என்று வகைப் பிரிக்கிறது.

அவ்வாறான முஸ்ரிகீன்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு  அறிவுறுத்துகிறது. ஏனெனில் அவ்வாறான துரோகிகள் மனித சமூகத்தின் விடுதலைக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று அது கருதுகிறது.

அல் குர் ஆனின் அந்தக் கட்டளை புனித அல் குர்ஆனில் இப்படி ஒலிக்கிறது. "  (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் -............"  என்று கடுமையாக எச்சரிக்கையும் கட்டளையும் பிறப்பித்திருக்கிறது.

அதன் பின்னர் மனித பலவீனத்தைக் கருத்திற்கொண்டு " ..........ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.[9:5]........என்று கட்டளையிடுகிறது.

ஆனால், கடலுக்கு உப்பு விற்கும் சாமர்த்தியம் கொண்ட நமது முப்தி அறிஞர்களோ இந்த அல் குர் ஆன் ஆயத்தானது இஸ்லாத்தை ஏற்காத மக்களை விளித்து அருளப் பட்டதாக சொல்லி தமது தலையைக் காத்துக் கொண்டார்கள்.


48 வயது சவூதி அரேபியாவை சேர்ந்த அரபி ஒருவர்  தனக்கு சேர வேண்டிய கடன் தொகைக்கு ஈடாக அந்தக் கடனாளியின் எட்டு வயதுக் குழந்தை ஒன்றை பலவந்தமாக திருமணம் செய்த விடயமும்........அதற்கு சவூதி முப்தி அனுமதி வழங்கிய விடயம் சம்பந்தமான இணைப்பு........இஸ்லாமிய ஷரியா சட்டம் இவ்வாறான பலவந்தமான-திருமணப் பெண்ணின் அனுமதி பெறாத திருமணத்தை தடை செய்துள்ளதை உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

இஸ்லாமிய ஷரியா சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் அனுமதித்து இருக்கிறது.

கல்வியைத் தேடி கற்கும் உரிமை அவளுக்கு இருக்கிறது.

அவளது அனுமதி இன்றி அவளை யாரும் திருமணம் செய்ய முடியாது.

அவளுக்கு சொத்தில் பங்கிருக்கிறது.

அவளுக்கு சுயமாக தொழில் செய்யும் உரிமை இருக்கிறது.

நாம் இப்படி அடுக்கிக் கொண்டு போக ....இவற்றைக் கேட்டவுடன் உங்கள் நெஞ்சில் நெருடுகின்ற கேள்வி நியாயமானது.

நீங்கள் நினைப்பது சரி.

முஸ்லிம் நாடுகள் என்று சொல்லப் படுகின்ற மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கு எதுவித உரிமையும் இல்லை.




"சவூதி அரேபியாவில் பிறந்த பெண்களை அல்லாஹ் நரகத்துக்கு அனுப்பப் போவதில்லை........ஏனெனில்,ஒருவரை இரண்டு முறை நரகத்தில் அல்லாஹ் தண்டிப்பதில்லை " 
சொன்னவர் : ஹம்ஸா அலி...
 சவூதியில் அடக்குமுறைக்கு ஆளாகி இருக்கின்ற பெண்கள் சம்பந்தமாக கவிதை எழுதிய இளம் ஊடகவியலாளர் ஹம்ஸா அலி  அவர் அப்படி சொன்னமைக்காக சிரச்சேத தண்டனையை எதிர்நோக்கி இருக்கின்றார்.........அவர் சம்பந்தமாகவும் அவரைப் போல தண்டனையை எதிர் கொண்டிருக்கும் இன்னும் சில ஊடக வியலாளர்கள் சம்பந்தமாகவும் பேசுகின்ற இணைப்பு.......

தனது கருத்தை சுதந்திரமாக முன்வைத்த காரணத்தை இஸ்லாத்துக்கு எதிரான கருத்து என்று கணித்து இஸ்லாமிய ஷரியா மனித குலத்துக்கு மட்டுமே வழங்கியிருக்கின்ற கருத்து சுதந்திரத்துக்கு எதிரான கோஷத்தை இஸ்லாமிய ஷரியா சட்டம்   என்ற பெயரில் நசுக்குகின்ற சவூதி அரசின் முப்தி.......இந்தப் இணைப்பில் அவர் சவூதி அரசுக்கு ஹம்ஸா அலிக்கு மரணதண்டனை வழங்குமாறு பரிந்துரை செய்கிறார்........
அவர் அழுது நடிக்கும் அழகைப் பாருங்கள்......நமது சிவாஜி கணேசனின் நடிப்பையும் விஞ்சிவிடும் அற்புதமான நடிப்பு.........


ஹம்ஸா அலிக்கு சிரச்சேதம் விதிப்பதற்கு பரிந்துரை செய்த ஷேய்க் நாசரின் யூ டியூப் பதிவை நீக்குமாறு சவூதி அரசு யூ டியூப் நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல் விடுத்து நெருக்குதல் கொடுககத்  துவங்கியதன் காரணமாக சில இணைப்புகள் யு டியூபில் இருந்து அகற்றப் பட்டிருக்கின்றதாம்..........அல்லாஹ்தான் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.......


மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பொது மக்களின் கருத்து சுதந்திரம் முழுமையாக பறிக்கப் பட்டு நசுக்கப் பட்டுள்ளது.

நிஜத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டம் இக்கொள்கைகளுக்கு கடும் விரோதமான நிலையில் தன்னை முன்னிறுத்தி இவ்வாறு அநியாயத்திற்கு ஆளாகி இருக்கின்ற மக்களைக் காக்க துணிகிறது.

மனிதர்களின் மனித உரிமைக்கு வேட்டு வைக்கின்ற மத்திய கிழக்கின் கோத்திர சட்ட முறைகளும்,ஐரோப்பாவினதும் அமெரிக்காவினதும் பல் நாட்டு கம்பனிகளின் உலகை சூறையாடும் சுரண்டல் பொருளாதாரத்துக்கும் இஸ்லாமிய ஷரியா சட்டம் கடும் எதிரானது.

இவ்வாறான அபாக்கிய சூழ்நிலையில் அடக்கு முறைக்கு ஆளான மக்களை அந்த அநீதமான நிலைமையில் இருந்து மீட்டெடுக்க இஸ்லாமிய ஷரியா சட்டம்  'ஜிஹாதை' முன்னிறுத்துகிறது.

இத்தகைய அநீதங்களுக்கு எதிராக போராடுமாறு இஸ்லாமிய ஷரியா சட்டம் 'ஜிஹாதை' இஸ்லாமிய ஷரியா சட்டத்தை தமது வாழ்வியலில் கொண்டு நடக்கும் மக்களிடையே கடமையாக்குகிறது.

இஸ்லாமிய ஷரியா சட்டம் வேண்டி நிற்கின்ற இஸ்லாமிய ஜிஹாத் முதலில் ஒரு முஸ்லிமை தன்னில் மாறுதலைக் கொணருமாறு பனிக்கிறது.

அதன் பின்னர் உலகத்தின் தீமைக்கு காரணமான சக்திகளுடன் போராடுமாறு வேண்டுகிறது.

மிகச் சாதாரணமாக தோன்றுகின்ற இந்த எழுச்சி அடக்கு முறையின் சொந்தக்காரகளுக்கு பயங்கரமான விளைவுகளை கொண்டு வருகின்ற விளைவுகளின் செயல்களாக இருக்கின்றன.

இந்தக் கட்டத்திலேதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது.

முஸ்லிம்களின் வளமான வாழ்வுக்கு ஆதாரமாக அமைந்திருக்கின்ற மத்திய கிழக்கு எண்ணெய் வயல்களை.....எண்ணெய் வளத்தை  சவூதி அரச குடும்பத்தை முன்னிறுத்தி முஸ்லிம் சமூகத்தின்  பொருளாதாரத்தை சூறையாடிக் கொண்டிருக்கின்ற......உலக அரசியலை தமது கைகளில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்ற  பன்னாட்டுக் கம்பனிகளுக்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் வகுத்திருக்கும் 'ஜிஹாதிய' எழுச்சி சிம்ம சொப்பனமாக மாறுகின்ற அபாயம் இருக்கின்றது.

அதனைப் புரிந்துக் கொண்ட உலக அநீதத்தின் சொந்தக்காரர்கள் அல்லது அத்தகைய அமைப்புகளின்  பாதுகாப்பு நிர்வாகிகள் இஸ்லாமிய ஷரியா சட்டம் முஸ்லிம்களிடம் வேண்டின் நிற்கின்ற ஜிஹாதிய எழுச்சியை முடக்குவதற்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு எதிரான உளவியல் யுத்தமொன்றை மிகவும் சூசகமாக முன்னெடுக்கத் துவங்கினார்கள்.

அதற்கு பலமான அஸ்திவாரத்தை வஹ்ஹாபிய,சலபி கருத்துக்களால் கவரப் பட்ட அல்லது விலைக்கு வாங்கப் பட்ட உலமாக்களை முன்னிறுத்தி உலக முஸ்லிம்களின் ஜிஹாதிய அமைப்புக்களை அவர்களே உருவாக்கினார்கள்.

அந்த மறைமுக சக்திகள் உருவாக்கிய சதி வலையமைப்புக்களை இனி உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

ஆப்கானிஸ்தான்!

மலைகள் நிறைந்த காய்ந்த பூமி.

என்றாலும் கனிமங்கள் நிறைந்த பெறுமதியான வளங்களை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் பூமி.

சோவியத் யூனியன் தனது ஆதிக்கத்தில் இந்த மண்ணை கொண்டுவருவதற்காக தனது இராணுவத்தை அனுப்புகிறது.

உடனே சோவியத் யூனியனுக்கு எதிரான போராட்டம் இஸ்லாமிய ஜிஹாத் என்ற போர்வையில் நெறிப் படுத்தப் படுகிறது.

அமெரிக்காவும் பாகிஸ்தானும் ஆப்கான் போராளிகளுக்குப் பின்னணியில் இருக்கிறார்கள்.

அவர்களின் பாஷையில் அவர்களின் நயவஞ்சக செயலுக்கு ஒரு பெயரும் வைத்துக் கொள்கிறார்கள்.

பனிப்போர்.

அமெரிக்கா இஸ்லாமிய ஜிஹாதை கம்யூனிசத்துக்கு எதிரான ஜிஹாதாக முன்னிறுத்துகிறது.

அமெரிக்கா மோசமான நாடாக இருந்தாலும் அவர்கள் இறைவனை ஏற்றிருக்கிறார்கள்.ஆனால்,கம்யூனிசவாதிகளோ இறைவனே இல்லை என்று மறுப்பவர்கள்.

ஆகவே,நாத்திக கொள்கையை உலகில் பரப்புவதற்கு முன்னிட்கின்ற சோவியத் யூனியனுக்கு அல்லது ரஷ்யாவுக்கு எதிராகப் போராடுவது 'ஜிஹாத்' என்ற பிரச்சாரம் உலகில் சவூதி நிதி நிரலில் தங்கி இருக்கின்ற உலமாக்கள் அல்லது அக்கொள்கையின் ஆதரவாள உலமாக்களால் முன் வைக்கப் பட்டு அவர்களின் மூலம் இளம் போராளிகள் 'ஜிஹாதுக்கு'தயார் செய்யப் படுகிறார்கள்.

ஜிஹாதுக்கு தேவையான பிரச்சார செயல்பாடுகளை பாகிஸ்தான் ஜமாத்தே இஸ்லாமி முடுக்கி விடுகிறது.

ஏனைய நாடுகளில் இருக்கின்ற ஜமாத்தே இஸ்லாத்தின் அலுவலகங்கள் இதற்கு துணை  நின்றன.

இலங்கையில் சகோதரர் அகார் நலீமி,சகோதரர் அனீஸ்,டாக்தர் மஹீஸ் ,பேராசிரியர் எம்.எம்.மன்சூர்,உஸ்தாத் மன்சூர் ,உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்,மௌலவி வை.எள்.எம்.இப்ராஹிம் ஆகியோர் இந்த பிரசாரத்தின் பிரதான பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள்.

இவர்கள் இன்னமும் அதே பாணியில் கொஞ்சம் விவேகமாக தமது காரியங்களை இப்பொழுதும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை வாசிக்கின்ற ஒருவரினால் நாம் மேலே குறிப்பிட்ட ஒரு முக்கியஸ்தரை அணுகி நமது வாதத்தில் உள்ள சத்தியங்களை அறிந்துக் கொள்ள முடியும்.

இந்த இயக்கங்கள் விரித்த வலையில் விழுந்து ஆப்கான் மண்ணுக்கு சென்றால் அங்கே வேறு விதமான பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

இஸ்லாம் என்றால் ஜிஹாத்.

அல்லது இஸ்லாத்தின் இறுதி இலக்கு ஜிஹாத்.

ஆகவே,ஜிஹாதுக்கு வந்த ஒருவர் மீண்டும் இஸ்லாத்தை படிக்கத் தேவை இல்லை.

அந்தப் போராளி தனக்கு சொல்லப் படுகின்ற கட்டளையை நிறைவு செய்தால் அல்லது கடமையை செய்தால் அதுவே அவரது இறுதி வெற்றிக்கு ஆதாரமாக அமைந்து விடும்.

ஆப்கானிஸ்தானின் விடுதலைக்கு முன்னின்ற முஜாஹிதுகளின் பின்னால் பாகிஸ்தான் ISI யை நிறுத்திய இவர்கள் ISI யின் பின்னால் மறைந்து நின்றார்கள்.(ஆப்கானிஸ்தான் முஜாஹிதுகளால் உலகுக்கு என்ன நன்மை கிடைத்தது?...........உலகத்தை விட்டு விடுவோம்.....ஆப்கானிஸ்தானுக்கு என்ன நன்மை கிடைத்தது?

அந்த மறைமுக சக்திகளின் சூழ்ச்சிக்கு பலியான தேசங்களில் நிகழ்கால சாட்சியாக ஆப்கானிஸ்தான் இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து நலிந்து போயிருக்கின்றது.



http://youtu.be/Zo17biJzRtc
http://youtu.be/uqZ-ToXjCz0

ஆடு நனையுது என்று ஓநாய் அழுகிறது...........ஆப்கானிஸ்தானின் கோத்திரத் தலைவர்களை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரேகன்.......

நாளடைவில் அவர்களே அல் காய்தாவை உருவாக்கினார்கள்.(அல் கைதா அமைப்பினால் முஸ்லிம்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது.........முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற பெயர் கிடைத்திருக்கிறது.....இல்லையா?)

அவர்களே தலிபான்களை உருவாக்கினார்கள்.(தாலிபான்களின் செய்கையினால் முஸ்லிம்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது?)



http://youtu.be/xYYBlPWYb7Y

http://youtu.be/SDJSMtFiu5Q


http://youtu.be/6zllH-GobZA

http://youtu.be/nxZUccdc57c

http://youtu.be/hCHuinnro-4
http://youtu.be/5OLTPy7s1xE


http://youtu.be/Ner05rto8O8

சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்களாக இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாதுகாத்து வந்த ஆப்கானிஸ்தானின் 'பாமியங்"-(கடவுளின் வெளி) 'சமவெளியில்  பிரமாண்டமாக நிறுவப் பட்டிருந்த வரலாற்று ஆவணமான  புத்தர் சிலையின் அநியாயமான அழிவின் பின்னாலும் இவர்களே இருக்கிறார்கள்.

இந்த மறைமுக சக்திகளின் நெறியாள்கையின் கீழே இருக்கின்ற இஸ்லாமிய தலைவர்களைக் கொண்ட அமைப்புக்களின்  ஆதரவில் உலகம் முழுவதும் இஸ்லாமிய ஜிஹாதிய கருத்துக் கொண்ட இஸ்லாமிய இயக்கங்களை உருவாக்கினார்கள்

இஸ்லாமிய 'கிலாபாவை' பேசுகின்ற இயக்கங்களை இயக்குகின்ற தலைவர்களின் தலைவர்களும் இவர்களாகவே இருக்கிறார்கள்.

உலகில் இஸ்லாமிய கிலாபாவை நிலை நிறுத்த பாடுபடுகின்ற அனைத்து இயக்கங்களும்,அக்கொள்கை சார்ந்த இஸ்லாமிய கல்விக் கூடங்களும் அல்லாஹ்வின் சட்டத்தை உலகத்தில் நிலை நிறுத்துவதற்காக ஏனைய நாட்டு சட்டங்களுக்கு  அடிபணியமாட்டோம் என்ற தவறான கருத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டம் வேண்டி நிற்கின்ற மனித நேய விழுமியங்களுக்கு மாறு செய்கின்ற செயல் விளைவின் செயலின் பின்னாலும் இவர்களே இருக்கிறார்கள்.


http://youtu.be/4SjA1IAbf-o

இவர்களின் திட்டங்களின் பிரகாரமே இஸ்லாமிய ஷரியா சட்டம் வேண்டி நிற்கும் பர்தாவுக்கான எதிர்ப்பு உருவானது.


http://youtu.be/9F5yeW6XFZk

மறைமுக சக்திகளின் திட்டங்களின் ஓரம்சமாகவே தாலிபான் அமைப்பு இஸ்லாமிய ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி  பெண்களின் கல்விக்கு தடை விதித்தது. ஆனால்,இஸ்லாமிய ஷரியா ஆண் பெண் பேதமின்றி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.அல் குர் ஆனின் முதல் வசனம் -வாசிப்பீராக.......என்றே அருளப்பட்டிருக்கிறது.அது மட்டுமன்றி பெண்களை சந்தைக்கு வருவதையும் தடுத்தார்கள்.

இவர்களின் சூழ்ச்சிகளின் ஓரம்சமாகவே பாகிஸ்தானில் 'யூஸுப் மலாலா ' என்ற சிறுமி முஸ்லிம் பெண்களின் கல்விக்காக குரல் கொடுக்கத் துவங்கினார்.


http://youtu.be/0vErE9jJ8Ss
அதன் பின்னர் இவர்களின் திட்டப் பிரகாரமே அந்த சிறுமி தாலிபான் போராளிகளே அறியாத தாலிபான் போராளிகளால் சுடப் பட்டு -எப்பொழுதும் ஆண் ,பெண் பேதமின்றி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இஸ்லாமிய ஷரியா சட்டம் பெண் கல்விக்கு எதிரானது.......காட்டு மிராண்டித் தனமானது என்ற பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது.




 http://youtu.be/5UvWzzOhugU


http://youtu.be/2vQlPjDxfIM
இன்னும் சில நாள்கள் செல்ல இஸ்லாமிய ஷரியா சட்டம் முஸ்லிம்களிடம் வேண்டி நின்ற ஹலால் - ஹராம் சம்பந்தமான வேண்டப் படாத சர்வதேச அரசியல் பிரச்சினைகளின் பின்னாலும் இந்த மறைமுக சக்திகள் இருக்கிறார்கள்.


http://youtu.be/Lfpg2jqy0Ow

ஏழை நாடுகளில் பள்ளி வாசல் கட்டுவதற்கு பணம் கொடுக்கும் அதே சமயம் அதனை உடைப்பதற்கு அதற்கு எதிரான இன்னுமொரு  குழுவினரை இவர்களே உருவாக்குகிறார்கள்.


http://youtu.be/vaCDZq5KS48

http://youtu.be/zrh9Ijbi7w4

மக்காவில் குர்பான் கொடுக்க வருகின்ற யாத்திரிகர்களிடம் குர்பானுக்குத் தேவையான பணத்தை தம்மிடம் தருமாறு வேண்டி அந்தப் பணத்தை ஏழை நாடுகளுக்கு மாடுகளை அறுப்பதற்கு வழங்கி அந்த நாடுகளில் முஸ்லிம்களின் தன்னிருப்புக்கு அச்சுறுத்தலான செய்கைகளின் பின்னாலும் இவர்களே இருக்கிறார்கள்.


இப்பொழுது ரிசானா நபீக்கை படு கொலை செய்து உலகத்துக்கு நீதி கற்றுக் கொடுத்த இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் நீதியையே கேள்விக்குறியாக்கி நிற்கும் செய்கையின் பின்னாலும் இவர்கள் இருக்கிறார்கள்.

அதனைத் தெளிவு படுத்துவதற்கு முன்னர் அந்தத் தெளிவை தெளிவாக்குகின்ற சில விடயங்களை உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

முதலில் இந்த மறைமுக சக்திகளின் நுணுக்கமான ஓர் அணுகுமுறையை உங்களது கவனத்துக்குக் கொண்டு தருகிறோம்.

சோமாலியாவைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கடும் பஞ்சத்தின் காரணமாக சரியான அரசியல் தலைமை இன்றி நலிந்துப் போன ஒரு நாடுதான் சோமாலியா..

கேர்னல் கடாபியின் கனவின் பிரகாரம் ஒன்றிணைந்த ஆபிரிக்க நாடுகள் திட்டம் ஆபிரிக்க நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

அவ்வாறு ஆபிரிக்க நாடுகள் ஒரு குடையின் கீழ் வருவது அமெரிக்காவின் மறைமுக சக்திகளினதும்,பன்னாட்டு கம்பனிகளினதும் சுரண்டல் பொருளாதாரத்துக்கு தடையாக அமைந்து விடுகின்ற அபாயம் இருக்கின்றது.

ஆகவே,சவூதி அறேபியாவின் சலபி இஸ்லாத்தை உபயோகித்து AU அமைப்புக்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா முன்னெடுக்கிறது.

இதன் பிரகாரம் கவனிப்பாரற்று நலிந்துப் போயிருந்த சோமாலியாவை இந்த மறைமுக சக்திகள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

சலபி ,வஹ்ஹாபிய இஸ்லாம் சவூதி அறேபியாவின்  அரச குடும்பத்தைக் காக்க துணை நிற்கும்.

சவூதி அரேபியாவின் அரச குடும்பம் அமெரிக்காவின் மத்திய கிழக்கு சுரண்டல்களுக்கு துணை இருக்கும்.

அதன் பிரகாரம் சோமாலியாவில் அல் ஷபாப் இராணுவ அமைப்பு 2006ஆம்  வருடம் தோற்றம் பெறுகிறது.

இஸ்லாமிய தௌஹீத் கொள்கையை முன்னிறுத்தி சோமாலியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருவதுதான் தமது இறுதி இலக்கு என்று அந்த அமைப்பு அறிவித்தது.

அத்துடன் நில்லாமல் சோமாலியாவில் பல்லாண்டுகளாக 'பழமையான சியாரங்களை தன்னுள்ளே கொண்டிருந்த பல மஸ்ஜிதுகளில் இருந்த சியாரங்களை அல் ஷபாப் போராளிகள் இஸ்லாத்தின் பெயரால் நொறுக்கித் தள்ளினர்.

விளைவு?

அல் ஷபாப் அமைப்புக்கு எதிராக பூர்வீக முஸ்லிம்கள் கொதித்து எழுந்தார்கள்.
http://youtu.be/kTeqM7FVMOA

'அஹ்லுஸ் ஸுன்னா ' அமைப்பினர் என்று தம்மை அறிமுகப் படுத்திக் கொண்ட அந்த அமைப்பினர 'அல் ஷபாப்' அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்கிறார்கள்.
(இவர்கள் தங்களது முகத்தை மறைத்து தம்மை இனம் காட்டிக் கொள்ளத் தயங்கவில்லை.......ஆனால்,தாலிபான்கள்,அல் கைதா போராளிகள் ,அல்சபாப் தீவிர வாதிகள் தங்களது முகத்தை முழுவதும் மூடியே காட்சி தருகிறார்கள்...)



http://youtu.be/7ejbTCytxZQ
..
அவர்களுடன் ஆபிரிக்காவின் சில நாடுகளை சேர்ந்த AU -ஆபிரிக்க யூனியன் கூட்டு இராணுவம் இணைந்துக் கொள்கிறது.

http://youtu.be/ctSoBjsTBLY
அஹ்லுஸ் ஸுன்னா ஜமாஅத் போராளிகளுடனும்,ஆபிரிக்க யூனியனுடனும் போர் பிரகடனம் செய்யும் அல் ஷபாப் -இராணுவ பேச்சாளர்.ஆகஸ்ட் 31-2010



http://youtu.be/fAQmwoJQcbQ
சேனல் 4வுக்கு தமது நிலைப் பாட்டை விளக்குகின்ற அல் சபாப் பேச்சாளர்.......... 


http://youtu.be/Y2r01XWNIWE
சோமாலியாவின் முகாதிஸ் பிராந்தியத்தை வெற்றி கொண்டதன் பின்னர் பெரு நாள் தொழுகையில் ஈடு பட்டிருக்கும் அல் ஷபாப் முஜாஹிதுகள்.ஆகஸ்ட் 31 2011


http://youtu.be/mXFw6Ed0xC0

பெப்ரவரி 11,2012- மறைமுக சக்திகளின் தொலைக்காட்சிகளில் ஒன்றான CNN  தொலைக் காட்சி அல் ஷபாப் அமைப்பின் வெற்றிகரமான நகர்வுகளுக்கு உதவுகின்ற விதம்.......


இனி இந்த விடயங்களைக் கவனியுங்கள்.

அல் ஷபாப் அமைப்பு 2006 ஆம் வருடம் உருவாகிறது.

இரண்டு மூன்று வருடங்கள் பூர்த்தியாகுவதட்கு முன்னரேயே அவர்கள் ஆச்சரியமாக அசுர வளர்ச்சி காண்கிறார்கள்.

அவர்களுக்கென்று வைத்தியசாலைகள்.

அவர்களுக்கென்று நவீன அலுவலகங்கள்.

அவசியமான வாகனங்கள்.

வாகனங்களுக்குத் தேவையான எரி பொருள்கள்.

AU  கூட்டுப் படைகளையே எதிர் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு நிகரான அவர்களின் தனியான படையணி.

படையணிகளுக்கான செலவினங்கள்.

கனரக ஆயுதங்கள்.

பஞ்சத்தில் நலிந்து ஒடிந்துப் போன சோமாலியாவில் இத்தகைய அசுர வளர்ச்சியை சாதாரணமான எந்த இயக்கத்தினாலும் அடைந்துக் கொள்ள முடியாது.

ஆனால்,ஆச்சரியமாக அல் ஷபாப் அதனை செய்தது.

இது எப்படி சாத்தியம் என்ற ஆய்வில் அல் ஷபாப் என்ற சிலீபெர் செல் அமைப்பை அமெரிக்காவின் மறைமுக சக்திகளும்,அந்த மறை முக சக்திகளின் பங்காளியான சவூதி அரசின் உளவு நிறுவனமும் நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்ற இரகசியம் யாருக்குமே தெரிந்துக் கொள்ள முடியாத இரகசியமாக இன்னும் இருந்துக் கொண்டிருக்கின்றது.

ஆகவே,அல் ஷபாப் முஜாஹிதுகளின் இந்த அபரிதமான வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பின்னால் தோன்றாத் துணையாக அமெரிக்காவின் பன்னாட்டுக் கம்பனிகளும் , மறைமுக சக்திகளும் சவூதி சலபி ஆதரவு ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள்.

என்றாலும் அல் சபாப் தீவிரவாதிகளின் ஆளுமையில் இருந்த முகாத்திஸ் பிரதேசத்தை AU கூட்டுப் படையினர் மீட்டெடுத்தார்கள்.

உடனே சோமாலியாவை ஆக்கிரமிக்கும் அடுத்த நகர்வு இலாவமாக முன்னெடுக்கப் படுகின்றது.

இஸ்லாமிய முதலாளித்துவம் அதன் பின்னால் இருக்கின்றது.

ISNA (வட அமெரிக்க இஸ்லாமிய கழகம் )என்றொரு அமைப்பு இஸ்லாமிய ஷரியா வங்கி முறையினதும்,ஹலால் தரச் சான்றிதல் அமைப்புக்களினதும் தலைமையகத்தை தன்னுள் கொண்டிருக்கிறது.

அந்த அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் சவூதி உளவு நிறுவனங்கள் கூட்டாக நெறிப்படுத்துகின்றன.

சலபி - வஹ்ஹாபிய இஸ்லாத்தின் நெறிப்படுத்தலில் இருக்கின்ற அந்த அமைப்பு சோமாலியாவில் தனது அரச சார்பற்ற சமூக சேவைகளை நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்க துவங்கியுள்ளது.

 சோமாலியாவின் பிரதம மந்திரி ஹசன் செய்க் முஹம்மதுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடலொன்றை நடாத்துகின்ற ISNA வின் தலைவர் இமாம் முஹம்மத் மகீத் துடன் அவரது ஆலோசகர்கள்.

இது தவிர,அண்மையில் சிரியாவில் நடந்த கிளர்ச்சியில் பரிதாபகரமாக சோமாலிய அல் ஷபாப் போராளிகள் ஆயிரக் கணக்கில் மரணித்துப் போனார்கள்.- அல் ஷபாப் முஜாஹிதுகளின் பாஷையில் 'ஷஹீதாகினார்கள்.

இது மட்டுமன்றி சவூதி அரேபியாவில் வாழ்கின்ற ஏழை அரபியரின் http://youtu.be/3ha94Xz59dgவறுமையை தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளும் இந்த அமைப்புகள் புதிய அனுகுமுறையொன்றை கையாள்கின்றார்கள்.

அதன்படி

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் பிரபலமான உணவு விடுதி ஒன்றில் மிகப் பெரிய ஏல விட்பனையோன்று தனது மகனை தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு தயார் செய்வதற்காக அல் ஷபாப் அமைப்புக்கு ஒரு தந்தை ஏலத்தில் விடுகிறார்.

அந்த மகனின் உயிரின் விலையாக ஒன்னரை மில்லியன் சவூதி ரியால்கள் ஏலத்தின் மூலம் அந்தத் தந்தைக்குக் கிடைக்கிறது.

இத்தகைய அநீதமான செயல்களுக்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் அனுமதி அளித்தது கிடையாது.

http://youtu.be/3ha94Xz59dg

சவூதி சலபிய வஹ்ஹாபிய இஸ்லாம் ஏழை மக்களின் பொருளாதார வறுமையுடன் விளையாடுகின்ற அழகைக் கவனியுங்கள்.


http://youtu.be/Av0gz7PzRMc

ரஷ்யா தொலைக் காட்சியில் சவூதியில் நடைபெறுகின்ற தற்கொலை குண்டுதாரிகளின் ஏலம் நடைபெறும் காட்சி காண்பிக்கப் படுகிறது.

ரிசானா நபீக்கின் படு கொலையின் பின்னால் இந்த மறைமுக சக்திகளா?

அதெப்படி சாத்தியம் என்று நீங்கள் விழி உயர்த்துவது தெரிகிறது.

நமது அடுத்த பதிவில் அதனை கவனிப்போம்.......இன்ஷா அல்லாஹ்.

24 comments:

Dr.Anburaj said...

இஸ்லாமிய ஷரியா சட்டநகல் படிக்க வேண்டும். இரத்தப்பணம் என்றால் என்ன ? விளக்கலாமே ? குரானும்,அரேபிய இலக்கிங்களும் உலகிற்கு கலகத்தையே கொண்டுவரும்.உங்களது கட்டுரை அதைக் தெளிவாகக் காடடுகிறது.ஆன்மீகத்திற்கு சமூக வாழவிற்கு அல்லாவிற்கு பிடித்தது அரேபிய கலாச்சாரம் என்று பேசும் முகம்மது . நியாயத்தீர்ப்புநாள் ”அரேபிய கலாச்சாரப்படிதான்”நடக்கும் என்ற தவறான போதனை.
1.இறைவனின் நபியான இயேசு ஏன் 1.காபாவை நோக்கி பிரார்த்தனை செய்யச் சொல்லவில்லை 2. பிறை பார்க்கச் சொல்லவில்லை 3.ரம்சான் கொண்டாடச் சொல்லவில்லை 4.ரம்சான் நோன்பு இருக்கச் சொல்லவில்லை 5. அரேபியர்கள் போல்தான் நடிக்க வேண்டும் எனச் சொல்லவில்லை 5.சாத்தானை கல் ஏறியச் சொல்லவில்லை 6.குமுஸ் பெண்களை வைப்பாட்டிகளாக வைக்கச் சொல்லவில்லை 7.விவாகரத்தை சுலபமாக அனுமதிக்கவில்லை 8.அரேபிய கலாச்சார வாழ்வின் அடிப்படையில்தான் அவரும் வாழவில்லை.நியாயத் தீர்ப்பு நாளும் அரேபிய கலாச்சாரவாழ்வின் அடிப்படையில் நடக்கும் என்று போதிக்கவில்லை 9. நானும் என்பிதாவும் ஒன்றாய் இருக்கின்றோம். என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்று போதித்துள்ளார் - (இது இந்துமதம் போதிக்கும் அத்வைதம்- சித்தத்துக்குள்ளே சிவலிங்கம் காட்டி என்றும் தன்னில் சிவத்தை காணல் என்றெல்லாம் கருத்துக்கள் உள்ளன)முகம்மது அப்படி யெல்லாம் கூறவில்லை.10.விபச்சாரம் செய்த பெண்ணுக்கு கல்அடி மரணம் விதிக்கக் கோரிய மக்களிடம் உங்களில் யோக்கியன் -கற்பு நெறி தவறாதவன்- பிரம்மச்சரியம் பேணியவன் - முதல் கல்லை ஏறியக் கடவன் என்றார் .ஆச்சிரியம் கூட்டத்தைக் காணவில்லை. 11.முகம்மது தனது காலத்தில் கொலை பல செய்ய தீரப்பு வழங்கியவர்.
12.நியாயத்தீர்ப்பு நாள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என பல கடிதங்களில் மேலும் பல கருத்துக்கள் தெரிவித்துள்ளேன். அதற்கு எந்த விளக்கமும் தாங்கள் தரவில்லை.

Jaffna Muslims Base said...

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434 ஹி
(ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்? என்ற செய்தியை ஆணிதரமாக ஷீயாக்களுடைய கிதாபுகளிலிருந்தும் அவர்களுடைய இமாம்களின் கிதாபுகளிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கி வைக்கின்றார் ஆசிரியர். ஆதாரங்களின் அரபு மூலத்தின் பிரதி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)
நாள்: 15-11-2012 (01-01-1434-ஹி)
ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர் குழுமம்
வீடியோ எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக்

Dr.Anburaj said...

குரான் 2: 178 இறைநம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்கள் விஷயத்தில் பழிவாங்குதல் உங்கள்மீது விதியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவனும், அடிமைக்குப் பதிலாக அடிமையும், பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் (பழிவாங்கப்படும்) எனினும் (கொலைசெய்யப்பட்ட) அவனுடைய சகோதர ர் மூலம் (கொலை செய்த) இவனுக்கு ஏதேனும் மன்னிப்பளிக்கப்பட்டால் அப்போது (கொலையாளி) நல்ல வழக்கமுறையைப் பின்பற்றி (அதற்கான ஈட்டுத்தொகை முதியவற்றை) நன்றியறிதலுடன் (கொலை செய்யப்பட்ட) அவ(னுடைய பாத்தியஸதரி)ன் பால் நிறைவேற்றுதல் வேண்டும். இது உங்களுடைய இறைவனிடமிருந்து (உங்களுக்கு கிடைத்து)ள்ள சலுகையும் கிருபையைமாகும். ஆகவே இதற்குப் பிறகு எவரேனும் வரம்புமீறினால் அப்பொழுது அவருக்கு நோவினை அளிக்கும் வேதனை உண்டு.
குரான் 2:179 நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழிதீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. நீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம்.
குரான் 5:45 மேலும் அ(வ்வேதத்)தில் நிச்சயமாக உயிருக்குப் பகரமாக உயிரையும், கண்ணுக்குப் பகரமாக கண்ணையும், மூக்குக்குப் பகரமாக மூக்கையும், காதுக்குப் பகரமாக காதையும், பல்லுக்குப்பகரமாக பல்லையும் (பழிக்கப் பழிவாங்க வேண்டுமென்றும்) காயங்களுக்குப் பழிக்குப்பழி உண்டு என்றும் அவர்கள் மீது நாம் விதித்திருந்தோம். எனினும் எவரேனும் இதனை தர்ம மாக விட்டுவிட்டால் அது அவரு(டைய பாவத்துக்கு) பகரமாகிவிடுர். எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் அவர்கள்தாம் அநியாயக்கார ர்கள்.இச்சட்டம் ஒரு ஆடவனை நோக்கி கூறுகிறது. சுதந்திரமான உன்னை ஒருவன் கொன்றுவிட்டால் கொலைகாரனை உன் உறவினர்கள் கொலை செய்யலாம். உன்னுடைய அடிமையை ஒருவன் (சுதந்திரமானவன்) கொலை செய்துவிட்டால் அவனுடைய அடிமையை நீ கொலை செய்துக் கொள்ளலாம். உன் (சுதந்திரமானவன்) வீட்டுப் பெண்ணை ஒருவன் கொலை செய்துவிட்டால் கொலை செய்தவனுடைய வீட்டுப் பெண்ணை நீ கொலை செய்யலாம் என்று கூறுகிறது. பாதிக்கப்பட்டவன் (சுதந்திரமானவன்) விரும்பினால் இழப்பீடுகள் (இரத்தப பணம்) பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னிக்கலாம். மன்னிக்க விருப்பம் இல்லை என்றால் பழிக்குப்பழியே விதியாகிவிடும்.
சுதந்திரமானவாக உள்ள ஒருவன் அதாவது அடிமையாக இல்லாத எஜமான் இன்னொரு சுதந்திரமானவனின் சொத்துக்களான அவன் வீட்டுப்பெண்களையோ அல்லது அடிமைகளையோ கொன்றுவிடுவதனால் ஏற்படும் இழப்பிற்கு, இழப்பை ஏற்படுத்தியவனின் வீட்டுப் பெண்களையோ அடிமைகளையோ இழந்தவன் கொலை செய்து இழப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது மட்டுமே இச்சட்டத்தின் குறிக்கோள். கொலை செய்தவனை கொல் என்று இச்சட்டம் கூறவில்லை
மனித உயிர்களின் மதிப்பை வெளிப்படுத்துவதான மனிதாபிமானச் சட்டம் அல்ல இது. அதனாலேயே இழப்பை இரத்தப்பணம் என்கிறது. பெண்கள்கூட ஒரு சொத்து என்பதையும் கூடுதலாக இச்சட்டம் நமக்கு புரியவைக்கிறது.இச்சட்டம் சரிதானா என்று சிந்தித்துப்பாருங்கள். கொலை செய்தவன் ஒரு சுதந்திரமானவனாக அதாவது இன்றையக் காலத்தில் முதலாளியாக இருந்தால் அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த ஒருவரை கொலை செய்தால் அவன் வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச் சொல்லுகிறது. எஜமானர்களுக்கு சேவை செய்யும் சட்டம். இது ஒரு சீரிய சட்டம் என்றும், காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்.

Dr.Anburaj said...

ஒரு முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்யப்பட்டால் அதற்காக ஒரு முஸ்லீமைக் கொல்லக்கூடாது என்று இசுலாமிய பெருமக்கள் கருதுவதாகவும் இப்னு கஸிர் கூறுவதையும் கவனியுங்கள்.
இச்சட்டப்படி...
1. சாட்சிகள் தேவையில்லை.
2. கொலைக்கான காரணம் தேவையில்லை. சாட்சியும், காரணமும் தேவை என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. முதலாளி முறையிட்டாலே போதும்.
3. இச்சட்டத்திற்கு வயது வேறுபாடு கிடையாது.
முகம்மதின் காலத்திற்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹமுராபி காலத்துச் சட்டம் இந்த பழிக்குப்பழி என்றச் சட்டம். யூதர்களும் இதனையே தங்களின் சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்தச் சட்டம் ஒரு எஜமானனின் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. இச்சட்டப்படி ரிசானா நபீக் தண்டிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆராயப்படவில்லை. சாட்சிகள் இல்லை. சாட்சிகள் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வுகள், தடவியல் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. எஜமானியம்மாளின் முறையீடை மட்டுமே எடுத்துக்கொண்டு சரியத் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கிறோம் என்று தலையை சீவித்தள்ள உத்திரவிட்ட இந்த நீதிபதிகள் நீதிபதிகளா?மதவெறியர்களா? ஒரு முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்யப்பட்டால் அதற்காக ஒரு முஸ்லீமைக் கொல்லக்கூடாது என்று இசுலாமிய பெருமக்கள் கருதுவதாகவும் இப்னு கஸிர் கூறுவதையும் கவனியுங்கள்.
இச்சட்டப்படி...
1. சாட்சிகள் தேவையில்லை.
2. கொலைக்கான காரணம் தேவையில்லை. சாட்சியும், காரணமும் தேவை என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. முதலாளி முறையிட்டாலே போதும்.
3. இச்சட்டத்திற்கு வயது வேறுபாடு கிடையாது.
முகம்மதின் காலத்திற்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹமுராபி காலத்துச் சட்டம் இந்த பழிக்குப்பழி என்றச் சட்டம். யூதர்களும் இதனையே தங்களின் சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்தச் சட்டம் ஒரு எஜமானனின் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. இச்சட்டப்படி ரிசானா நபீக் தண்டிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆராயப்படவில்லை. சாட்சிகள் இல்லை. சாட்சிகள் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வுகள், தடவியல் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. எஜமானியம்மாளின் முறையீடை மட்டுமே எடுத்துக்கொண்டு சரியத் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கிறோம் என்று தலையை சீவித்தள்ள உத்திரவிட்ட இந்த நீதிபதிகள் நீதிபதிகளா?மதவெறியர்களா? ஒரு முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்யப்பட்டால் அதற்காக ஒரு முஸ்லீமைக் கொல்லக்கூடாது என்று இசுலாமிய பெருமக்கள் கருதுவதாகவும் இப்னு கஸிர் கூறுவதையும் கவனியுங்கள்.
இச்சட்டப்படி...
1. சாட்சிகள் தேவையில்லை.
2. கொலைக்கான காரணம் தேவையில்லை. சாட்சியும், காரணமும் தேவை என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. முதலாளி முறையிட்டாலே போதும்.
3. இச்சட்டத்திற்கு வயது வேறுபாடு கிடையாது.
முகம்மதின் காலத்திற்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹமுராபி காலத்துச் சட்டம் இந்த பழிக்குப்பழி என்றச் சட்டம். யூதர்களும் இதனையே தங்களின் சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்தச் சட்டம் ஒரு எஜமானனின் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. இச்சட்டப்படி ரிசானா நபீக் தண்டிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆராயப்படவில்லை. சாட்சிகள் இல்லை. சாட்சிகள் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வுகள், தடவியல் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. எஜமானியம்மாளின் முறையீடை மட்டுமே எடுத்துக்கொண்டு சரியத் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கிறோம் என்று தலையை சீவித்தள்ள உத்திரவிட்ட இந்த நீதிபதிகள் நீதிபதிகளா?மதவெறியர்களா?

Dr.Anburaj said...

1. சரியத்சட்டப்படி குழந்தைகள் தந்தைக்கு உடமையானவர்கள். அப்படியானால் இரத்தப்பணம் கற்பழித்த அந்த காமுகனுக்குத்தான் அதாவது தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் குழந்தையின் அம்மாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சரியத்து எங்கே போனது?

2. இந்த காமக்கொடூரனுக்கு இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதேன்? குழந்தையின் அம்மா மன்னித்ததால் இரத்தப்பணம் கொடுக்கப்பட்டது என்று அறிவுகெட்டத்தனமாக உளரவேண்டாம். காரணம் குழந்தைக்கு பாத்தியப்பட்டவன் அந்த தகப்பனே. அது மட்டுமில்லாது தனது கணவன் என்ற நிலையில் அந்த அம்மா அவனுக்கு மன்னிப்பு வழங்குவது இயல்பானது. இதை அனுமதித்தால் இரத்தப்பணம் கொடுக்கக் கூடிய பணக்காரன் எவனும் தனது மகள்களை கற்பழிக்கலாம் என்பதை சரியத் சட்டம் கூறுகிறது என்று பொருளாகும். சௌதிகாரனுக்கென்றால் சரியத் பல்டி அடிக்குமோ?
கடுமையாக தண்டித்தால்தான் குற்றங்கள் நடக்காது என்று ரிசானாவின் படுகொலைக்கு கூக்குரலிட்ட பிஜே வகையரா மதவெறியர்களே, இதற்கு மௌனம் காப்பது ஏன்?
ஆனால் பல நாடுகளும், நாட்டின் மக்களும், மனித உரிமை அமைப்புகளும், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் போன்ற சில காட்டுமிராண்டி அமைப்புகள் தவிர பிற இசுலாமியர்களும் 7 வருடங்களாக போராடியும், வேண்டிக்கொண்டபோதும் மயிரளவுக்குக்கூட செவி சாய்க்காமல் ரிசானாவின் தலை சீவப்பட்டுவிட்டது. சௌதி சிறைச்சாலைகளில் இன்னும் 'புத்தர் சிலையை வைத்திருந்தார், பைபிள் வைத்திருந்தார், மந்திரம்ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு கட்டியிருந்தார்' என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரதண்டனை வழங்கப்பட்டு தலைசீவப்பட காத்திருக்கிறார்களர். சௌதி, துபாய் போன்ற நாடுகளில் தொழிலாளர்களாக சென்றுள்ளவர்கள் தங்கள் தங்குமிடங்களில் தங்கள் தெய்வங்களை வணங்குவதைக்க தடுக்கும் அரசின் நடவடிக்கை குறித்து "அங்கேயும் போய் அநாச்சாரங்களை புகுத்த நினைத்தால் அரசாங்கம் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கையா பார்க்கும்" என்று இசுலாமியர்கள் தங்கள் மதவெறியைக் கக்குகின்றனர். ஆனால் பிற நாடுகளில் தங்களுக்கு மதவழிபாட்டு உரிமை வேண்டும் என்று கேட்கின்றனர். ஜனநாயகம் பேசுகின்றனர்.
ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினத்தன்று சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.மக்கதூம் ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் சிலவரிகள் பின்வருமாறு:
'இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும் உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வது" என்று கேட்டார்' என்றும், "என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் நானா" என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டது" என்றும் எழுதியுள்ளார். இந்த இரண்டு வரிகளை என்னால் தட்டச்சு செய்ய முடியாமல் பல மணிநேரம் கழிந்தது
போதுமான மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள் ஏற்படுத்தித் தராததால், கடைசி நிமிடங்கள் வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால் மன்னிப்பு கிடைத்துவிடும் என்று அல்லாவின் கருணைமீது நம்பிக்கையுடன் 7 வருட காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச் சிறுமி. ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள. இந்த 7 வருட சிறைதண்டனையே இதற்கு அதிகம். ஆனால் மரணதண்டனை…….
எனது காதில் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வது" என்ற ரிசானா நபீக்கின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதா? கேட்டால் இந்த காட்டுமிராண்டிகால சரியத் சட்டத்தையும், மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக வாழுங்கள்.
ஒன்றை மறந்துவிடாதீர்கள்! ரிசானா நபீக்கின் சீவப்பட்ட தலை புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அரபு தேசங்களின் தொழிலாளர்கள் இதற்கு பழிவாங்குவார்கள்.

Dr.Anburaj said...

தமிழ்நாட்டில் ஆடு அறுப்பது கூடு மறைமுகமான இடத்தில் தான் நடத்த வேண்டும். ஊர் பார்க்க ஆட்டைக்கூட அறுக்க கூடாது என்பது பண்பாடு.
அரேபியாவில் உள்ளது கற்காலம்.காட்டுமிராண்டிகள் காலம். உலகை அரேபியா - இஸ்லாம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது உலகை காட்டுமிராண்டியாக்கும் செயலாகும். அரேபிய கலாச்சாரத்தை அதன் இலக்கிங்களை கடலீல் போடுங்கள். உருப்படுவோம் வாருங்கள்.

Dr.Anburaj said...

அல் குர் ஆனின் அந்தக் கட்டளை புனித அல் குர்ஆனில் இப்படி ஒலிக்கிறது. " (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் -............" என்று கடுமையாக எச்சரிக்கையும் கட்டளையும் பிறப்பித்திருக்கிறது.

அதன் பின்னர் மனித பலவீனத்தைக் கருத்திற்கொண்டு " ..........ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.[9:5]........என்று கட்டளையிடுகிறது.
காபீர்கள் -இந்துக்களுக்கு - அரேபிய முகம்மதை ரசுலாக ஏற்காத மக்களை நடத்தும் முறை பற்றி மிக அழகாக தெளிவாக உலகப்பொது மறை அரேபிய பேரினவாத ஆவணம் -குரான் போதிக்கின்றது.
இந்துவாக இருந்தால் கொலலுங்கள். மதம்மாறினால் எல்லாம் சரி.

Dr.Anburaj said...

இஸ்லாமிகய ஷரியத் சட்டத்தின் கோரத்தாண்டவம்
புஹாரி 6789 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் (பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 6799 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைத் திருடுகிறான்; அதற்காக அவனது கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Dr.Anburaj said...

என்ன நீங்கள் இஸ்லாமிய அறிவு இல்லாமல் பேசுகிறீர்கள்.
ஒரு முஸ்லீமல்லாத காபிரிடம் திருவது ஹலால்.
இது நான் சொன்னதல்ல நம்ம கண்ணுமணி பொன்னுமணிஉலகத்துக்கு அருட்கொடைமணி முஹம்மது சொன்னது.

கீழே உள்ள ஸஹிஹ் புகாரி ஹதீஸை படிங்கோ .......!!!
Bukhari (44:668) - "We were in the company of the Prophet at Dhul-Hulaifa. The people felt hungry and captured some camels and sheep (as booty)..." Muhammad said that Allah would always provide sustenance for those who believe in him. Stealing from non-Muslims was a legitimate means of fulfilling Allah's promise.

Dr.Anburaj said...

முஹம்மது எப்பொழுதுமே மற்றவர்களைவிட தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருந்தார். அது அவரது செயல்களில் வெளிப்பட்டது என்பதுதான் உண்மை.

…உம்முடைய ரப்பு உம்மை புகழுக்குரிய இடத்தில் நிலைப்படுத்த போதுமானவன்
(குர்ஆன் 17:79)
அபுஹூரைரா (ரலி) அறிவிப்பதாவது:
"என்னைப் பற்றிக் கூறப்படும் போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையே அவன் நாசமாகட்டும்" என்று நபி (ஸல்) கூறியுள்ளார்
(திர்மிதீ)
ஸலவாத் என்பது பிரார்த்தனை அல்லது வாழ்த்துப்பாடல் எனலாம். மற்றவர்கள் தன்மீது அளவற்ற அன்பைப் பொழிய வேண்டுமென்பதில் குறியாக இருந்தார் அதை கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).
"ஒருவருக்குத் தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மனிதர்கள் அனைவைரையும்விட நான் அன்புக்குரியவனாக ஆகாதவரை 'எந்த அடியாரும்' அல்லது 'எந்த மனிதரும்' இறைநம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லீம்)
(நபியே) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான்
(குர்ஆன் 3:31)
வேறொன்றுமில்லை, அன்பில் துவங்கி அடிபணிதலில் முடித்துவிட்டார் அவ்வளவுதான். வெறும் அதிகாரத்தின் மூலம் பெறப்படும் அடிபணிதல் என்பது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது என்பதை முஹம்மது நன்றாகவே அறிந்திருந்தார்.

எவர் (அல்லாஹ்வின்) ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார்.
(குர்ஆன் 4:80)
இவைகள் முஹம்மது, தன்னைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொண்ட அவரது அரசியல் தந்திரங்கள் என்று விட்டுவிடலாம். மரணத்தருவாயில் அவர் எழுதித்தர நினைத்த கட்டளைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டதை நாம் அறிவோம் இவைகளின் முடிவு இப்படித்தான் இருக்கும். நாம் எடுத்துக்கொண்டுள்ள தலைப்பிற்கு இது சற்றும் பொருந்தவில்லை என்று நீங்கள் கோபப்படுவது தெரிகிறது. சற்று பொறுங்கள். தொடர்பில்லாமல் இல்லை. நாம் அற்புதங்களில் தொடர்ந்து பார்க்கலாம். அவர் தன்னை ஒரு புனிதப்பிறவியாக எண்ணிக்கொண்டு செயல்பட்டதை இந்த மதவாதிகள் வெளிப்படையாக பேசுவதில்லை. ஏனெனில் இவர்கள் முஹம்மதின் மீது சுமத்துகின்ற பிம்பங்களுக்கு அவைகள் எதிரானாவை என்பதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

Dr.Anburaj said...

நமது ஊரில் அப்பாவாக இருந்தும் ’அம்மா’ என்றழைக்கப்படும் ஒரு சாமியாரின் காலைக் கழுவி பாதபூஜை செய்வதற்காக பணத்தையும் கொடுத்துவிட்டு வரிசையில் காத்து நிற்கும் மடையர்களை நாம் அறிவோம். இங்கு அதுவே வேறுமுறையில் உங்களில் எவருக்கும் அப்பாவாக இல்லாதவர் ஆனால் உங்களின் அம்மாவின் கணவர்....
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்து வருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக்கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக்கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க்கொண்டார். ..
(முஸ்லீம்)
தனது தோழர்களின் மடத்தனமான இந்த செயலை முஹம்மது தடுக்கவில்லையே ஏன்?
அபூ மூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
...இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும், நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள். பிறகு (எங்களிடம்), இதிலிருந்து சிறிது அருந்தி விட்டு, உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்; நற் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, (இறை நம்பிக்கையாளர் களான) உங்களின் அன்னை(யான என)க்காக வும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.
(புகாரி)
இது சற்று நீளமான ஹதீஸ் எனவே நமக்கு தேவையான பகுதியை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் ஹகம் ஆகிய இருவரும் - ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு - கூறியதாவது:
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடை பெற்ற காலகட்டத்தில்...அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார்...
(புகாரி)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா'வில் கற்களை எறிந்து, தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப் பக்கத்தைக் காட்டி "மழி' என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!'' என்றார்கள்.

Dr.Anburaj said...

முஹம்மது, சிரைக்கப்பட்ட தனது முடியும் புனிதமானது என்று அவர் கொண்டிருந்த எண்ணத்தையே இது காட்டுகிறது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
… உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்தி ருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக் கிட்டு விழித்து, "உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
முஹம்மது தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டவரல்ல, மிக எளிமையானவர் என்ற வார்த்தைகள் பொருளற்றவைகளாகத் தோன்றவில்லையா?
இத்தனை மடத்தனங்களையும் முஹம்மது தடுக்கவில்லை மாறாக முன்னின்று வழிநடத்திச் செல்கிறார். முஹம்மதுவே ஒரு அற்புதம்தான் என்பது முஸ்லீம்களின் நம்ம்பிக்கை. அவரது உடல் வெளியேற்றும் கழிவுகள்கூட அற்புதம்தான்.
மேலும் தொடர்கிறேன்

Dr.Anburaj said...

பனூ குறைழா யூதர்கள் போர் புரிய அஞ்சி கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். பனூ குறைழா முற்றுகை இருபத்திஐந்து நாட்கள் நீடித்தது. பெரிதாக போர் எதுவும் நிகழவில்லை. வேறு வழியின்றி பனூ குறைழா யூதர்கள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சரணடைவதற்கு முன்னால், முஹம்மது நபி என்ன தீர்ப்பு வழங்குவார்கள் எனபதைத் தெரிந்து கொள்ள தங்களிடம் நட்பாக இருக்கும் முஸ்லீம் அபூலுபாபாவை தூது அனுப்ப நபி (ஸல்)அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களிடம் சென்ற பொழுது அங்கிருந்த யூத பெண்களும் குழந்தைகளும் அழுவதைக் கண்டு மனம் இளகிவிட்டார். தங்களுக்கு எந்தவகையான தீர்ப்பு வழங்கப்படும் என்று கேட்டனர் அதற்கு தலையை சீவுவது போல சைகை காட்டினார். நபியவர்களின் ரகசிய தீர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம், நபி(ஸல்) அவர்களுக்க துரோகம் செய்துவிட்டதாக அபூலுபாபா மிகவும் வருந்தினார். தீர்ப்பு தெளிவாக தெரிந்த பின்னரும் தங்களின் கோட்டைகளிலிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் எவ்வித நிபந்தனைகளுமின்றி சரணடைந்தனர்.
முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஆண்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். பனூ குறைழா யூதஆண்கள் அனைவருக்கும் கைவிலங்கிடப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் தனியே நிற்க வைக்கப்பட்டனர். அவ்ஸ் என்ற யூத குழுவினர், நபி (ஸல்)அவர்களிடம் பனூ குறைழா யூதர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள கோரிக்கை வைகின்றனர். அதற்கு “உங்கள் இனத்தைச் சேர்ந்தவர் இவர்கள் விஷயத்தில் தீப்பு செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” என வினவ அவர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே தீர்ப்பை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய ஸாத் பின் முஅத்திடம் ஒப்படைக்கப்பட்டது.சஅத் (ரலி), இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும், இவர்களுடைய பெண்களையும், குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திடவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றார்கள். நபி கூறினார்; அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் …அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் என்று சொன்னார்கள்.சஅத் பின் முஅத் அவர்களின் தீர்ப்பை நிறைவேற்ற, போரிடும் வலிமையுள்ள ஆண்களைக் கண்டறிவதற்காக, ஆண்களில் பருவ வயதடைந்தவர்களை கண்டறிய அவர்களது ஆடைகள் கழற்றப்பட்டு அவர்களது உறுப்புகள் பரிசோதனை செய்யப்பட்டது அங்கு வெளிப்படையாக முடி முளைக்கப் பெற்றவர்களை பருவவயதடைந்தவர்களாக (ஆயுதம் ஏந்தி போரிடும் வலிமையுள்ளவர்களாக) கருதப் பெற்று கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
Sunan Abu-Dawud Book 38, Number 4390:
Narrated Atiyyah al-Qurazi:
I was among the captives of Banu Qurayzah. They (the Companions) examined us, and those who had begun to grow hair (pubes) were killed, and those who had not were not killed. I was among those who had not grown hair.
(அவ்வாறான சோதனையில் தன்னுடைய மறைவிடங்களில் முடிமுளைக்கப் பெறாத காரணத்தால் தான் கொல்லப்படவில்லை என்பதை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய அதிய்யா அல் குரஸி என்ற ஸஹாபி அறிவிக்கிறார்)

Dr.Anburaj said...

முஹம்மது நபி மதீனா சென்று அங்குள்ள கடைத் தெருவில் ஒரு பெரிய பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்தார். அப்பணியில் கைது செய்யப்பட்டவர்களும் ஸஹாபாக்களும் ஈடுபட்டனர். இந்த வண்ணமயமான நிகழ்ச்சியைகான மதீனாவாசிகள் அனைவரும் திரண்டுவந்தனர். கைதிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக கொலைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டனர். கைதிகளின் தலை தலையை வெட்டும் பணியில் முக்கிய தலைவர்கள் அபூபக்கர், உமர் போன்றவர்கள் ஈடுபட்டனர். சுமார் 800 - 900 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
பனூ குறைழா யூதர்களின் தலைவர், காப் பின் அஸதின் தலையை, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அக்பர் என தக்பீர் முழக்கததுடன் வெட்டி வீழ்த்தி தலையை வெட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மற்ற கைதிகளின் தலைகளும் துண்டிக்கப்பட்டது அவர்கள் அணிந்திருந்த உடைகளை ஸஹாபாக்கள் தங்களின் தேவைகளுக்காக எடுத்துக் கொண்டனர்.
பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் (ஷஃபியாவின் தகப்பனார்), பனூ குறைழாவினருக்கு உதவி செய்ய வந்தவர் அவரும் கைது செய்யப்பட்டிருந்தார். எப்பொழுதும் ஆடம்பரமாக ஆடையணிபவர். தன்னை கொலை செய்த பின்னர் தன்னுடைய உடையை யாரும் எடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உடைமுழுவதும் சிறிய துளைகளாக கிழித்துக் கொணடார். எனவே அவர் அணிந்திருந்த ஆடையை முஸ்லீம்களால் கைப்பற்ற முடியவில்லை!
பனூ குறைழாவினரின் செல்வம், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் போரில் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு வீரர்களுக்கு ஒரு பங்கும், அவர்களது குதிரைகளுக்கு இரண்டு பங்குகள் என்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உரியது என நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்.
போரில் கொள்ளையடிக்கப்பட்ட உடைமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதிற்கு அல்லாஹ்வின் சட்ட விளக்கம்.(முஃமின்களே) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் (போரில்) கனீமத்தாகப் பெற்ற பொருளிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் (அவன்) ரஸூலுக்கும் (அவருடைய) உறவிர்களுக்கும் ஐந்திலொன்று உரியதாகும்…
(குர்ஆன் 2:256)
(தன்னுடைய பங்கிலிருந்த அடிமைப் பெண்களை மருமகன்களுக்கு வழங்கினார். ரைத்தாஹ் பின்த் ஹிலால் என்ற பெண்ணை அலிக்கும், ஜைனப் பின்த் ஹையன் என்ற பெண்ணை உஸ்மானுக்கும் மேலும் தன்னுடைய மாமனார் உமருக்கும் ஒரு பெண்ணை வழங்கினார். உமர் அப்பெண்ணை தன்னுடைய மகன் அப்துல்லாவிற்கு பரிசாக கொடுத்துவிடடார்.)
)
(ரைஹானா என்ற பதினைந்து வயது அழகிய பெண்ணை நபி (ஸல்) தனக்காக தேர்ந்தெடுத்தார். நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே கடைசிவரை ரைஹானா இருந்தார். ரைஹானாவை திருமணம் செய்ய நபி (ஸல்) விரும்பினார் ஆனால், நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே அடிமையாக இருப்பதே தனக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சுலபமானது எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் இஸ்லாமின் மீது கடும் வெறுப்பை காண்பித்து, இறுதி வரையிலும் யூத நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்)
(குதிரைகளையும், ஆயுதங்களையும் பண்டமாற்று முறையில் வாங்க நஜ்த்திற்கு, ஸாத் பின் ஜைத் என்பவரை சில பனூ குறைழா அடிமைகளுடன் நபி (ஸல்) அனுப்பிவைத்தார்)
பனூகுறைழா நிகழ்ச்சியை குர்ஆனின் 33: 26,27 குறிப்பிடுகிறது,
27. வேதக்காரர்களிலிருந்து அவர்களுக்கு (பகைவர்களுக்கு) உதவி செய்தார்களோ அவர்களை அவர்களுடைய கோட்டைகளிலிருந்து அவன் இறக்கிவைத்து, அவர்களுடைய உள்ளங்களில் திடுக்கத்தையும் போட்டான்; (அவர்களிலிருந்து) ஒரு பிரிவினரை நீங்கள் வெட்டினீர்கள்; மற்றொரு பிரிவினரை நீங்கள் சிறைப்பிடித்தீர்கள்.
28. அவர்களுடைய பூமி, அவர்களுடைய வீடுகள், அவர்களுடைய பொருட்கள் இன்னும (இதுவரை) எதனை நீங்கள் மிதிக்கவில்லையோ அத்தகைய (இதர பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினானான்.-அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவனாக இருக்கிறான்.
அல்லாஹ்விற்கு, தன் அடியார்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு, கல்வி, அறிவு, தொழில் நுட்பங்களின் மூலமாக அருளை ஏன் வழங்கத் தெரியவில்லை? இனப்படுகொலை, கொள்ளையடித்தல் என மூன்றாம் தர கொள்ளைக்காரான மாறியது ஏன்?

Dr.Anburaj said...

புஹாரி ஹதீஸ் : 6802
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.
புஹாரி ஹதீஸ் : 6803
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
உரைனா குலத்தாரின் கை கால்களை நபி (ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கும் வரை அவர்களின் காயங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.
கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதற்கு இவ்வளவு வன்முறை தேவையா? இதில் முஸ்லீம்களின் பொதுச் சொத்து எவ்வாறு உருவாக்கப்பட்டது நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும். முஹம்மது நபியால் உருவாக்கப்பட்ட முஸ்லீம்களின் பொதுச் சொத்து மக்களின் வரிப் பணத்தினாலோ, செல்வந்தர்களின் தான, தர்மங்களினாலோ உருவாக்கப்படவில்லை. அது, அப்பாவி மக்களிடம் போரில் கொள்ளையிட்ட பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது.
உண்மையைச் சொல்வதென்றால், முஸ்லீம்களின் பொதுச் சொத்திற்கு ஒட்டகங்களின் சாணம் கூட உரிமை கிடையாது. உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலரால் திருடிச் செல்லப்பட்ட ஒட்டகங்கள், பனூ குறைழா, பனூ நளீர் பனூ முஸ்தலிக் போன்றவர்களிடமிருந்து முஹம்மது நபியால் கொள்ளையடிக்கப்பட்டவைகளே. கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் ஈடுபட்ட முஹம்மது நபியையும் அவரது கூட்டத்தினரையும் தண்டிப்பது யார்?

Dr.Anburaj said...

உண்மையா ?
பொய்யாகிப்போன முகம்மதுவின் போதனைகள்

//muslim/Book 041, Number 7050:அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

Book 041, Number 7051:
அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”//

Dr.Anburaj said...

முகமது சித்தப்பா அபுலக்ப்புக்கும் முகமதுக்கும் பிரச்சினை என்றால் எகாலத்துக்கும் பொருந்து வேதத்தில் எதுக்கு அவன் கை விளங்காது.படியுங்கள்.இது சாபமா இல்லையா!!!

111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

இது ஒரு அத்தியாயம்.அபுலகப்புக்காக மட்டும்.ஹி ஹி

Dr.Anburaj said...

1.குரானில் 5 வேளை தொழுகை,சுன்னத் வலியுறுத்தல்,வெள்ளிக் கிழமை தொழுகை,ஜக்காத் அள்வு ,மெக்கா என்னும் பெயர்,கிடையாது!.ஹி ஹி
சரி ஹதிது இல்லமல் குரான் பயன்பாஅது என்பதை அண்ணன் பிஜே கூறிவிட்ட பிற அப்பீல் கிடையாது.ஆகவெ குரான்+(பிஜேவால் ஏற்கப்ப்ட்ட )ஹதித் மட்டுமே இறைவேதம் என விவாத தலைப்பை மாற்றுங்கள்.

2.குரானில் அல்லாஹ் ஏன் கண்டது மேலும் சத்தியம் செய்கிறார்?.

1)15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக,
2)36:2. ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
3)37:1. அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
4)37:2. பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
5) 37:3. (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
6) 37:56. (அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
7)38:1. ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
8)38:82. அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
9) 43:2. விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
10) 44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
11) 50:1. காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
12) 51:1. (புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
13) 51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
14) 51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
15) 52:1. தூர் (மலை) மீது சத்தியமாக!
16) 52:2. எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
17) 52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
18) 52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
19) 52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
20) 53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
21) 68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
22) 70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
23) 74:32. (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
24) 74:33. இரவின் மீதும் சத்தியமாக – அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
25) 74:34. விடியற் காலையின் மீது சத்தியமாக – அது வெளிச்சமாகும் பொழுது,
26) 77:1. தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
27) 77:2. வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
28) 77:3. (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
29) 77:4. (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
30) 77:5. (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
31) 79:1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
32) 79:2. (நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
33) 79:3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
34) 79:4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

Dr.Anburaj said...

35) 79:5. ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
36) 81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
37) 81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
38) 85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
39) 85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
40) 85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
41) 86:1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
42) 86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
43) 86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
44) 89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
45) 89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
46) 89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
47) 89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
48) 90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
49) 91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
50) 91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
51) 91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
52) 91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
53) 91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
54) 91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
55) 91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
56) 92:1. (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
57) 92:2. பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
58) 92:3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
59) 93:1. முற்பகல் மீது சத்தியமாக-
60) 93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
61) 95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
62) 95:2. “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
63) 95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
64) 100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
65) 100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
66) 103:1. காலத்தின் மீது சத்தியமாக.

சத்தியம் ஏன் செய்ய வேண்டும் ???????

Dr.Anburaj said...

,இயேசு என்ற நபி விவாகரத்துக்கு காரணம் விபசாரம் மட்டும்தான் என்கிறார். முகம்மது .....
நபிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு ?

35) "And he saith unto them, Whosoever shall put away his wife, and marry another, committeth adultery against her" (Mark 10:11 & Luke 6:18), versus "And I say unto you, Whosoever shall put away his wife, except it be for fornication, and shall marry another, committeth adultery" (Matthew 19:9). In the book of Matthew, Jesus said a man could put away his wife if one factor-- fornication--is involved. In Mark and Luke he allowed no exceptions.

Dr.Anburaj said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

அரேபிய அறிவு என்னே அற்புதமானது

Narrated AbuSa’id al-Khudri:

I heard that the people asked the Prophet of Allah (peace_be_upon_him): Water is brought for you from the well of Buda’ah. It is a well in which dead dogs, menstrual clothes and excrement of people are thrown. The Messenger of Allah (peace_be_upon_him) replied: Verily water is pure and is not defiled by anything.

ஒன்றல்ல ரெண்டு ஹதீஸ். செத்த நாயும், மென்ஸஸ் துணிகளும், மலமும் கிடந்த தண்ணீரை உபயோகப்படுத்தலாமா என்று மக்கள் வினவுகிறார்கள். நம்ம கண்ணுமணி தாராளமா குடிக்கலாம். தண்ணீர் எப்போதுமே தூய்மையானது. அது எதனாலும் அசுத்தமாவதில்லை என்று அள்ளிவிடுகிறார்.

(கொள்ளைக்கூட்ட தலைவன் கிட்ட போய் அறிவுரை கேக்குற கூமுட்டைகள் என்று திட்டும் நஜஸ் காபிர்கள் விலகவும்)

Dr.Anburaj said...

ISLAMMIC SHERIA-UNWISE UMAR

(இப்ன் அப்பாஸ் கூறினார்: மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் விபச்சாரக் குற்றம் புரிந்ததாகக் கூறி உமரிடம் கொண்டுவரப்பட்டார். அவர் மக்களுடன் கலந்தாலோசித்த பிறகு கல்லெறிந்து கொல்லுமாறு உத்தரவிட்டார். அவ்வழியாக கடந்து சென்ற அலீ பின் அபூதாலிப், (இப்பெண்ணின்) விஷயம் என்ன? என்று கேட்டார்
அவர்கள் கூறினார்கள், மனநிலை பாதிக்கப்பட்ட இந்தப் பெண் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். இவள் விபச்சாரம் புரிந்துள்ளாள். இவள் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று உமர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினர்.
(தண்டனையிலிருந்து) அவளை அழைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் (அலீ) கூறினார். பிறகு அவரிடம் வந்தார் நம்பிக்கையாளர்களின் தலைவரே, மனநிலை பாதிக்கப்பட்டவர் மீண்டு வரும்வரை, உறக்கத்திலிருப்பவன் எழுந்திருக்கும் வரை, சிறுவன் பருவவயதை அடையும் வரை இந்த மூவர்களது செயல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதைப்பற்றி அறிவீர்களா? என்றார். அவர் (உமர்) ஆமாம் என்றார். இந்தப் பெண் எதற்காக கல்லெறிந்து தண்டிக்கப்பட வேண்டும்? என்றார். (அப்படி தண்டிக்க) இதில் ஒன்றுமில்லை என்றார். அவளை போக அனுமதியுங்கள் என்றார் (அலீ). பிறகு, அவள் போகலாம் என்று கூறிய உமர் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறத் துவங்கினார்.

Dr.Anburaj said...

இஸ்லாமிய ஷரியா என்பது அரபு கோத்திர சட்டங்களின் தொகுப்புதான். தொகுத்தவர் திரு.முகமக்மது அவர்கள்.மற்றபடி இறைவன் அளித்தது என்பது வடிகட்டிய மூடநம்பிக்கையாகும்

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad