அருளப்பட்ட ஆயத் ஒன்றுக்கு பல சம்பவங்கள் விளக்கவுரைகளாக அமைவதில்லை. அருளப்பட்ட ஆயத்துக்குரிய ஒரே சம்பவம் பல வழிகளில் ஒரேவிதமாக அறிவிக்கப்பட்டிருக்கும். அதனை முதவாத்திரான ஹதீஸ் பிரிவில் இஸ்லாமிய
அறிஞர்கள் சேர்ப்பார்கள். மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள்.
அஹ்ளுல்பைத்தினர் ஐவர் என்ற விளக்கத்துக்குத் தேவை ஒரு ஆயத் ஒரு சம்பவம்.
33:33 என்ற ஆயத் பரிசுத்தவான்களான நபிகளாரின் குடும்பத்தினர்கள் சம்பந்தமாக அருளப்படுகிறது. அவர்கள் யார் யாரென்று விளக்க ஒரு சம்பவமும் கூடவே நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சம்பந்தமான பல ஹதீஸ் அறிவிப்புக்கள் நபிகளாரின் மனைவியர் உட்பட பலரினால் ஒரேவிதமாக பல இடங்களில் சொல்லப்பட்டதாக ஹதீஸ் அறிவிப்புக்களில் பதிவாகியிருக்கின்றன.
அந்தப்பதிவுகள் அனைத்தும் அல்லாஹ்வினால் பரிசுத்தமாக்கப்பட்ட நபிகளாரின் குடும்ப அங்கத்தவர்கள் ஐவர் என்று ஏகமனதாக சொல்கின்றன. அவர்கள் முறையே நபிகளார், அவரது மகள் அன்னை பாத்திமா ஸலாமுன் அலைஹா, இமாம் அலி, இமாம் ஹசன், இமாம் ஹுசைன் என்று அறியப்படுகிறார்கள்.
இந்த அல் குர் ஆன் ஆயத்தையும், அதற்கு ஆதாரமான ஹதீஸ்களையும் மறுத்துரைக்க இஸ்லாமிய அறிஞர்கள் என்று அறியப்படுகின்ற சிலர் பகீரதபிரயத்தனம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய மனிதர்கள் நபிகளார்மீதும், அவரது குடும்பத்தவர்கள் மீதும் கொண்டிருக்கும் பொறாமையின் காரணமாக முட்டையில் மயிர் பிடுங்கும் காரியத்தை மும்முரமாக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை வாசிக்கின்ற நீங்களும் அவர்களில் ஒருவரா?......உடனே அந்தப்பாவத்திலிருந்து ஒதுங்கி விடுங்கள். அல்லாஹ்வின் அருள் உங்களுக்குக் கிடைக்கும். முடியாது என்று மறுக்கிறீர்களா?
ஆட்சேபனையில்லை. ஆளை விடுங்கள்.
என்னையும், எனது நண்பர்களையும் உண்மையை உணர்ந்து நேர்வழியில் செல்லத் துணை நின்ற அல்லாஹ்வுக்கே நன்றி. அவனுக்கே புகழனைத்தும் உண்டாவதாக! அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment