அஹ்லுல்பைத் Headline Animator

Friday, May 6, 2011

மெய் சிலிர்க்கும் சத்தியங்கள்.


மெய் சிலிர்க்கும் சத்தியங்கள். 

இப்பொழுது எல்லா ஜும்மா மஸ்ஜிதுகளிலும் சொல்லி வைத்த மாதிரி ஸுன்னத் வல் ஜமாத்தின் அகீதாவில், சஹாபாக்களின் முக்கியத்துவங்களை எடுத்து சொல்லும் ஜும்மா பிரசங்கங்கள்.

'நாம் ஸுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள்.ஸுன்னத் வல் ஜமாத்தினரின் கருத்துப் படி, அமீர் முஆவியாவும் இமாம் அலி அவர்களும் ஒரே தராதரத்தில் இருக்கும் சஹாபாக்கள்.'

'இவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற கருத்து மோதல்களை நாம் பொருட் படுத்தக் கூடாது.அது மிகவும் சாதாரணமானது.'

'அக் கருத்து மோதல்களை விமர்சிப்பதன் காரணமாக நாம் பெரும் பாவம் செய்யத் துவங்குகிறோம் ', என்பது போன்ற கருத்துக்களின் தோரணையில் இந்த ஜும்மா பிரசங்கங்கள் அமைந்து இருக்கின்றன'.

சில நாள்களுக்கு முன்னர் வானொலியில் இலங்கையில் பிரபலமான மௌலவி அகார் (நளீமி)  அவர்கள் "நாம் ஸுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்தவர்கள்.எம்மை பொறுத்தவரை எல்லா சஹாபாக்களும் சரி சமனானவர்கள்.அவர்கள் அனைவரும் ஒரே தராதரத்தில் உள்ளவர்கள் என்கிற அகீதாவை நாம் பின் பற்றுகின்றோம்........." என்று உரையாற்றினார்.

B.M.I.C.H இல் நடைபெற்ற ஒரு வைபவத்தில் அபூதாலிப் அவர்களின் இஸ்லாம் சம்பந்தமான கேள்வி ஒன்று எழுந்தது.

விடை சொல்லவேண்டிய கட்டாயத்தில் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஸ் சேய்க் ரிஸ்வி முப்தி இருந்தார்.

உடனே அவர், தனக்குப் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளர்   டாக்டர் சுக்ரி அவர்களுடன் கலந்து உரையாடிவிட்டு "நாம் ஸுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்தவர்கள்.எங்களது அகீதவின் படியும், ஸுன்னத் வல் ஜமாஅத் முடிவின் படியும் அபூதாலிப் இஸ்லாத்தை நிராகரித்த காபீர். அவர் நரகத்தில் வேதனை செய்யப் படுகிறார்....."என்று தீர்ப்பு சொன்னார்.

இன்று குப்பியாவத்தைப் பள்ளியில் ஜும்மா பிரசங்கம் நிகழ்த்திய உலமாவும் "நாம் ஸுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்தவர்கள். எங்களது அகீதாவின் படி சஹாபாக்கள் அனைவரும் சுவனம் செல்லக் கூடியவர்கள்..."என்று அடுக்கிக் கொண்டு போனார்.

நாம் சுன்னத் வல் ஜமாஅத்.........நாம் சுன்னத் வல் ஜமாஅத்..என்று அடிக்கடி மிடுக்காகப் பேசும் இந்த மார்க்க அறிஞர்களிடம் சின்னதாக ஒரு கேள்வி?

"நாம் பெருமையாக பேசும் ஸுன்னத் வல் ஜமாஅத் என்கிற பெயரை எமக்கு சூட்டியவர்கள் யார்?"

" நமது நபி (ஸல்) அவர்களா? அல்லது முதல் நான்கு கலீபாக்களா? அல்லது மத்கபுகளுடைய இமாம்களா?"

இவர்களில் யாருமே நமக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்கிற பெயரை சூட்ட வில்லை.

அப்படியானால், நாம் பெருமையாக பேசி மனத் திருப்தி கொள்கின்ற சுன்னத் வல் ஜமாஅத் என்கிற பெயரை எங்களுக்கு சூட்டியவர்கள் யார்?







நிஜத்தில் இந்தப் பெயருக்கு சொந்தக்காரர்கள் பனு உமையாக்கள்.

பெயரை நமக்கு  சூட்டியவர் அஹ்லுல் பைத்களின் கடுமையான எதிர்ப்பாளரும், அமீர் முஆவியாவின் ஆதரவாளருமான அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் 'ஸுன்னத் வல் ஜமாஅத் ' என்கிற பெயர் அமீர் முஆவியாவின் ஆதரவாளர்களின் ஜமாத்தை பின் பற்றும் மக்களைக் குறித்தே உபயோகிக்கப் பட்டு வந்து இருக்கிறது.

அதிர்ச்சியாகவும் , பயமாகவும் இருக்கிறதா?

ஆனால், அதுதான் உண்மை.

யாராவது ஒருவர் நெஞ்சை நிமிர்த்தி, "நான் ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்தவன்" என்று மிடுக்குடன் சொன்னால், அதன் நிஜமான அர்த்தம்.."நான் அமீர் முஆவியாவின் ஆதரவாளன்" என்றுதான் பொருள் படும்.

இஸ்லாமிய வரலாற்றை மிகக் கவனமாக ஆராயும் ஒருவருக்கு, 'ஸுன்னத் வல் ஜமாஅத் ' என்கிற பெயர் முஸ்லிம்களுக்கு எப்பொழுது வழங்கப்பட்டது என்று கவனித்தால் , அது ஹிஜ்ரி நாற்பத்து ஒன்றில் இமாம் ஹசன் அவர்களின் மறைவுடன் முஸ்லிம்களுக்கு சூட்டப் பட்டது என்பது புலனாகும்.

ஹிஜ்ரி நாற்பத்து ஒன்று வரை ஸுன்னத் வல் ஜமாஅத் என்று ஒரு ஜமாத் பிரிவு  இருக்கவில்லை.

ஹசரத் உதுமான் (ரலி)     அவர்களின் படு கொலையின் பின்னர் முஸ்லிம்கள் இரு பிரிவினரில் பிளவு பட்டு போய் இருந்தார்கள்.

அப்போதைய முஸ்லிம்கள் நபி குடும்பத்தினருக்க ஆதரவாக ஷியாவே அலியாக ஒரு பிரிவில் அல்லது ஷியாவே முஆவியாவாக நபி குடும்பத்தினருக்கு  எதிரான பிரிவில் இருந்தார்கள்.

ஹிஜ்ரி நாற்பதில் இமாம் அலி அவர்கள் கொலை செய்யப் படுகிறார்கள்.

அதன் பின்னர், அமீர் முஆவியாவின் திட்டமிடப் பட்ட நெருக்குதல்களின் காரணமாக இமாம் ஹசன் அவர்களினால், இஸ்லாமிய தலைமைத்துவத்தை அவரில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

மிகவும் நயவஞ்சகமாகவும், தந்திரமாகவும் இமாமிடம் இருந்து தலைமைப் பதவியை அமீர் முஆவியா தனக்கு சுவீகரித்துக் கொண்டார்.

ஹிஜ்ரி நாற்பத்து ஒன்றில் இமாம் ஹசன் அவர்கள் அமீர் முஆவியாவுடன் ஒரு உடன் படிக்கைக்கு வந்து தனது தலைமைத்துவத்தை  அமீர் முஆவியாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

அமீர் முஆவியா உடைய கட்டுப் பாட்டில் முழு இஸ்லாமிய உலகும் வந்த   அந்த ஆண்டை அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் "யவ்முல் ஜமாஹ்" என்று பெயரிட்டார்.

"மக்களின் ஆண்டு" என்று அதற்கு பெயர்.

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் "இதற்குப் பின்னர் முஸ்லிம் உலகை 'ஜமாத்தினரின் சுன்னாதான்' ஆளும் " என்று பிரகடனப் படுத்தினார்கள்.

அப்துல்லா இப்னு உமர் (ரலி ) உடைய பெயர் இங்கே குறிப்பிடப் பட்டாலும், இதன் பின்னணியில் மர்வான் இப்னு ஹகமின் செல்வாக்கு இருந்திருக்கும் எனபது பின்னைய சரித்திர நிகழ்வுகளில் புரிந்து போனது.

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜமாத்தினர் என்று சொன்னது பனு உமையாக்களை.

அதன்படி 'ஸுன்னத் வல் ஜமாஅத் ' என்பது -"முஆவியாவின் (பனு உமையாக்களின்) சுன்னாக்களை (நடைமுறைகளைப்) பின்பற்றும் கூட்டம்" என்று அழைக்கப் படும்.

ஆனால், நாம் தவறாக சுன்னத் வல் ஜமாஅத் என்றால் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை பின் பற்றும் கூட்டம் என்று தப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறோம்.

வரலாற்று நிஜங்களை சரியாக அறியாத    எங்களது அப்பாவி உலமாக்களால்  அப்படி விளங்க வைக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இமாம் ஹசனுடைய மரணத்தின் பின்னர் அமீர் முஆவியாவின் ஆதரவாளர்கள் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பிரிவில் ஒன்று பட்டு ஓரணியில் இருந்தார்கள்.

அவர்கள் பகிரங்கமாக அஹ்லுல் பைத்களின்  எதிரிகளாக இருந்தார்கள்.

நபி (ஸல்)௦ அவர்களது சுன்னாவுக்கு முற்று முழுதாக முரணான முறையிலேயே நடந்தும் கொண்டார்கள்.


அதே சமயம் நபி (ஸல்) சுன்னாவை மிகக் கவனமாக அவரது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்களும்,  அவர்களது ஆதரவாளர்களும் மாத்திரம் பின்பற்றத் தொடங்கினார்கள். 

அழிந்து போகின்ற நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை பாதுகாக்க வேண்டிய கடமைப் பாடு அவர்களுக்கு இருந்தது.

இந்த சூழ் நிலையில், நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை அவர்களது குடும்பத்தவர்களான அஹ்லுல் பைகளை விடவும் அதிகமாக அறிந்தவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது.

இதன் காரணமாக நபி (ஸல்) அவர்களின் சரியான சுன்னாவை நமக்கு தொடராக கொண்டு வந்து சேர்த்தவர்கள் என்கிற பெருமை அஹ்லுல் பைத்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்குமே சாரும்.

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் இறுதிவரை அமீர் முஆவியாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதே போல , அமீர் முஆவியாவும், பனு உமையாக்களும் அஹ்ளுல்பைத்களின் சுன்னாவை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதன் காரணமாக , நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை மிகக் கவனமாக பின் பற்றிய அஹ்லுல் பைத்கள் ஸுன்னத் வல் ஜமாத்தில் உள் வாங்கப் படவில்லை.

இதன் காரணமாகத்தான் ஹிஜ்ரி இருநூற்றி முப்பது வரை குலபாயே ராஷிதீன்கள் என்று முதல் மூன்று கலீபாக்களை மாத்திரம் முஸ்லிம் உம்மா ஏற்றுக் கொண்டிருந்தது.

முஸ்லிம் உம்மா ஏற்றுக் கொண்டார்கள் என்பதைவிடவும், ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

முதல் மூன்று கலீபாக்களும், அதன் பின்னர் இஸ்லாமிய ஆட்சிக்கு சொந்தக்காரர்களான  உமையா அப்பாசிய மன்னர்களும், கலீபாக்களும், அமீர்களும்  இமாம் அலியினுடைய தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்களில் சிலர் இமாம் அலியையும்,  அஹ்ளுல்பைத்களையும் ஜும்மா மேடைகளிலும், ஏனைய பகிரங்க பிரச்சாரங்களிலும் தூற்றவும் செய்தார்கள்.

ஆனால், உமைய்யாக்களின் கலீபா உமர் இப்னு அப்துல் அசீஸ் (ரலி)) அவர்களுடைய காலத்தில் அவர் ஜும்மா மேடையிலும், பகிரங்கமாகவும் இமாம் அலியையும் அஹ்லுல் பைத்களையும் திட்டும் செய்கையை தடை செய்து இருந்தார். 

ஆனாலும் அவருடைய அக்காலத்தில் கூட குலபாயே ராஷிதீன்களில் ஒருவராக இமாம் அலி ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் தொடராக சுமார் என்பது வருடங்களாக இமாம் அலி அவர்களும் ,அஹ்ளுல்பைத்களும் (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும்)  ஜும்மா மேடைகளில் தொடர்ச்சியாக எங்களது உலமாக்களால் நிந்திக்கப் பட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.    

இமாம் அலி அவர்களுக்கும் அஹ்ளுல்பைத்களுக்கும் எதிரான இந்தப் போக்கு  அப்பாசிய கலீபா முஹமத் இப்னு அல் ரஷீத் அல் முஹ்தாசிம்  உடைய காலம் வரை தொடர்ந்தது.

இந்த தூரதிஷ்ட நிலைக்கு இமாம்அஹமத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் தான் முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

இமாம் அஹமத் இப்னு ஹன்பல் (ரஹ்)  அவர்கள் , சுன்னத் வல் ஜமாதினருக்கு மத்தியில் அஹ்லுல் பைத்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதன் முதல் குரல் கொடுத்தவர் என்கிற பெருமைக்கு உரியவர்.

தபகாத் அல் ஹனாபிலா  என்பது சுன்னத் வல் ஜமாத்தினரின் மிகவும் பிரபலமான , ஆதார பூர்வமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு கிரந்தங்களில் ஒன்று.

'ஹன்பலி'    மத்ஹபை சார்ந்தவர்கள் தமது ஆதாரத்துக்கான தொகுப்புகளை இந்த கிரந்தத்தில் இருந்துதான் எடுப்பார்கள்.

இந்தக் கிரந்தத்தில் 'இப்னு யால 'என்பவரின் மேற்கோளில் , வாதிசாஹ் அல் ஹிம்ஸ் அறிவிப்பதாக பின்வரும் சம்பவம் பதியப் பட்டிருக்கிறது.

"அலி (ரலி)  அவர்களை குலபாயே ராஷிதீன்களில் ஒருவராக தீர்மானிக்கப் பட்டதன் பின்னர் நான் அஹமத் இப்னு ஹன்பல் அவர்களை சந்தித்தேன்.

"அபூ அப்துல்லாவே" நான் இப்னு ஹன்பல் அவர்களிடம் கேட்டேன்."உங்களது செய்கை சஹாபாக்களில் தல்ஹாவையும் சுபைரையும் அவமதிக்கின்ற மாதிரி இருக்கிறதே?"

அவர் சொன்னார் "எதற்காக இப்படி மோசமாக பேசுகிறீர்கள்?" என்ற அவர் தொடர்ந்தார்." முரண் பட்ட நிலையில் பேசுகிற மக்களைப் பற்றி எம்மால் என்னதான் சொல்ல முடியும்?"

நான் பதிலுருத்தேன்." அல்லாஹ் உங்களை திருத்துவானாக! நாம் இப்படி சொல்வதற்கு காரணம் , நீங்கள் அலி (ரலி) அவர்களை குலபாயே ராசிதீன்களில் அதாவது அவரை நான்காவது கலீபாவாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.அப்படி என்றால் அவருக்கு முந்திய மூன்று கலீபாக்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்.இவர் நேரியவர்  என்றால் அவர்கள் வழி தவறியவர்கள் ஆகிறார்களே?" என்றேன்.

அதற்கு அவர்கள் என்னிடம் "அலி அவர்களை நான்காம் கலீபாவாக ஏற்றுக் கொள்வதை தடுப்பதற்கு உறுதியான காரணங்கள் எதுவும் எனக்குத் தென்படவில்லை." என்றார்கள்.

நான் இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீதை எடுத்து சொன்னேன்.

இதை கேட்ட இமாம் இப்னு ஹன்பல் "உமர் (ரலி) அவர்கள் அவரது மகனை விடவும் உயர்வானவர்." என்ற இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் தொடர்ந்தார்கள்."  உமர் (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர் அலியை அறுவர் கொண்ட தெரிவுக் குழுவில் இணைத்து இருக்க மாட்டார். அது மட்டுமின்றி அலி அவர்களே தம்மை 'அமீருல் மூமினீன்' என்று பிரஸ்தாபித்து இருக்கிறார்.அவர் தன்னை; தான் மூமின்களின் தலைவர் இல்லையா என சஹாபாக்களிடம் கேட்டு இருக்கிறார்." என்று அவர் கூறினார்.
(ஆதாரம்;தபகாத் அல் ஹனாபிலா பாகம்: 1  பக்கம்: 292)

உங்களது கவனத்துக்கு இப்னு உமரின் அஹ்லுல் பைத்களுக்கு எதிரான ஹதீதை தருகிறோம்.
(இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"நாங்கள் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம்.அதில் முதலாவது சிறப்புக் குரியவராக அபூபக்கர் (ரலி) அவர்களை மதிப்பிட்டோம். 
பிறகு உமர் இப்னு கத்தாப் (ரலி)அவர்களையும் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்"
அதன் பின்னர் , சஹாபாக்களில் அவர்களை விடவும் சிறந்தவர்கள் யாரும் இருக்கவில்லை.)
(ஆதாரம்: புஹாரி பாகம் ; 4     ஹதீத் ;  3655 )        

இது மாதிரியான ஹதீதுகளைஆதாரமாகக் கொண்டுதான் இமாம் அலிக்கும்,         அஹ்ளுல்பைத்களுக்குமான நெருக்குதல்கள் பனு உமைய்யாக்களினால் சிறந்த முறையில் முடுக்கி விடப்பட்டன.


இந்த குறிப்பில் இருந்து சுன்னத் வல் ஜமாஅத் இமாம் அலியுடைய தலைமைத்துவத்தை அல்லது அவரை நான்காம் கலீபாவாக நீண்ட காலத்துக்கு ஏற்று இருக்க வில்லை என்பது எமக்கு புலனாகின்றது.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களுடைய துணிகர முயற்சியின் விளைவாக தான் குலபாயே ராஷிதீன்கள் நால்வர் என்ற முடிவுக்கு ஹிஜ்ரி இரு நூற்று முப்பதில் முஸ்லிம் உம்மா வந்தது.

அது வரை இமாம் அலியும் அவரது ஆதரவாளர்களும் இஸ்லாத்தை விட்டும் விலகியவர்களாகவே அப்போதைய முஸ்லிம்களாலும், உலமாக்களினாலும் கணிக்கப் பட்டார்கள்.அதாவது, இமாம் அலியின்  ஆதரவாளர்கள் காபிர்கள் என்று பகிரங்கமாக அழைக்கப் பட்டார்கள்.  

இப்பொழுது , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்பது அமீர் முஆவியாவின் சுன்னத்தை பின் பற்றுகின்ற  ஜமாத்தினர் எனபது விளங்கி இருக்கும்.

அதுதான் நிஜம்.

ஏனெனில், அமீர் முஆவியாவின் ஆதரவாளக் கூட்டத்தினரின் கருத்துப் படி, இமாம் அலியின் கூட்டத்தினரான ஷியாவே அலி அனைவரும் வழி தவறியவர்கள்.ஆகையினால், இவர்கள் அனைவரும் காபிர்கள்.

அதே சமயம், ஷியாவே முஆவியா அனைவரும் நேர் வழி நின்ற சஹாபாக்களின் சுன்னாவை பின் பற்றுகின்ற முஸ்லிம்கள்.

அவர்களுடைய தலைவர் அமீர் முஆவியா.

அவர் ஒரு முஸ்லிம்.

அவரிடம் இருக்கின்ற சின்ன சின்ன தவறுகள் கருத்தில் கொள்ளப் படத் தேவை  இல்லை.ஏனெனில் அவர் ஒரு முஸ்லிம்.

அது மட்டுமன்றி, அவர்கள் அனைவரும் சுன்னத் வல் ஜமாஅத்தாக மாறிய முஸ்லிம்கள்.

இப்பொழுது நாம், ஸுன்னத் வல் ஜமாஅத் என்றால் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை பின் பற்றிய கூட்டம் என்று தப்பாக அர்த்தம் சொல்லித் தரப் பட்டு எம்மை அறியாமல் அமீர் முஆவியாவின் சுன்னத்தைப் பின் பற்றுகின்ற ஜமாத்தில் சேர்ந்திருக்க நிர்ப்பந்திக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் மாத்திரம் துணிகரமாக இமாம் அலி அவர்களையும் அஹ்லுல் பைத்களையும் எங்களுக்கு சரியான முறையில் நெறிப் படுத்திக் கட்டாது இருந்திருப்பின் எங்களது நிலைமை என்னவாகி இருக்கும்?

நாம் எம்மை அறியாமல், அமீர் முஆவியாவின் ஆதரவாளர்களாக சுன்னத் வல் ஜமாத்தில் இருந்துக் கொண்டு அஹ்லுல் பைத்களுக்கு எதிரான நிலைப் பாட்டில் இருந்து வழி தவறி போய் இருப்போம்.

அல்லாஹ் எங்களை அந்த அநியாய செய்கையை விட்டும் பாதுகாத்தான்.

இப்பொழுதும் யாரெல்லாம் சுன்னத் வல் ஜமாத்தில் இருந்துக் கொண்டு அஹ்லுல் பைத்களுக்கு எதிராக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் பனு உமைய்யாக்களின் ஆதரவாளர்கள் என்று தெரிந்துக் கொள்ளட்டும்.

இன்னும் கொஞ்சம் இலகு வார்த்தையில் சொன்னால்,  அமீர் முஆவியாவின் ஆதரவாளர்கள். இமாம் ஹுசைனை கொலை செய்த யசீதின் ஆதரவாளர்கள்.

பத்ரு சஹாபாக்களினதும், இமாம் அலியினதும் அஹ்லுல் பைத்களினதும் எதிரிகள்.

சவூதி நிதி நிகழ்ச்சி நிரல்களில் சிக்கி சவூதியின் அமெரிக்க இஸ்லாத்தை நியாயப் படுத்தும் தலைமைத்துவ உலமாக்கள் இந்த நிஜங்களை ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.

ஆனால், சவூதி நிதிகளில் தங்கி இருக்காத எங்களது உலமாக்கள் இந்த உண்மையை அறிந்ததும் தங்களது நிலைப் பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்ப முடியும்.

மெய் சிலிர்க்கும் இந்த சத்தியத்துக்குப் பதில் சொல்லுங்கள்.

நீங்கள் உங்களை அமீர் முஆவியாவின் ஸுன்னத் வல் ஜமாத் என்ற பிரிவில் அழைக்க விரும்புகிறீர்களா??

சரி, அப்படி என்றால் நீங்கள் யார் பக்கம்?

அமீர் முஆவியா??

இமாம் அலி??



1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களையும் பௌத்தர்களையும் காபீர்கள் என்று கூறும் பொல்லாத பாவத்திலிருந்துஅல்லா அரேபிய மதவாதிகளைக் காப்பானாக! அரேபிய மதவாதிகளின் வாள்களில் இருந்து இந்துக்களையும் பௌத்தர்களையும் காப்பானாக!

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad